Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'நான் அரசியலுக்கு வந்தால் இவர்களை நெருங்கவிட மாட்டேன்...' ரஜினிகாந்த் பரபர பேச்சு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, இசைக்கலைஞன் said:

 

என்ன தல,

காணல்ல அங்க என்று பார்த்தா, இங்க உலாவுறியள்? (நான் சொல்லுறது, இசையரை.... நாம் தமிழர் திரிப்பக்கம் காணவில்ல கொஞ்சநாளா)

  • Replies 66
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

என்ன தல,

காணல்ல அங்க என்று பார்த்தா, இங்க உலாவுறியள்? (நான் சொல்லுறது, இசையரை.... நாம் தமிழர் திரிப்பக்கம் காணவில்ல கொஞ்சநாளா)

அப்பப்ப வர்றதுதானே.. tw_blush: அவங்கள் கொஞ்சம் பிசி போலை.. ஏதும் புதுசா வரக்காணேல்ல. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லேலாது tw_angry:தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு ராமன் ஆண்டால் என்னtw_dissapointed:,இராவணன் ஆண்டால் என்ன?...யார் கூடக் காசுக் குடுக்கினமோ அவையளுக்கு வோட் போடுவினம்tw_dissapointed:

  • தொடங்கியவர்

'இந்த சிஸ்டம் கெட்டுக்கிடக்கு..!' எதைச் சொல்கிறார் ரஜினி?

 

ரஜினி

"ன்னை வாழ வைக்கும் தெய்வங்கள் நீங்கள் ..வாழவைத்த தெய்வங்கள் நல்லா இருக்கணும் நெனைக்கிறதுல என்ன தப்பு ..அதில் தப்பு இருக்கிறதா எனக்கு எதுவும் தெரியல ..நீ என்ன கரெக்ட் செய்வது.அதை சரி செய்ய மத்தவங்க இருக்காங்க." என்று ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசியது, அரசியல் களத்தில் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அதுமட்டுமன்றி "தளபதி ஸ்டாலின் என் நெருங்கிய நண்பர். நல்ல திறமையான நிர்வாகி. சோ சொல்வார், அவரை சுதந்திரமா செயல்பட விட்டா நல்லா செயல்படுவார்னு, அன்பு மணி ராமதாஸ் நல்லா படித்தவர். உலகமெல்லாம் சுற்றுகிறவர். நல்லகருத்துகளை வச்சிருக்கார். மாடர்னா சிந்திக்கிறார். திருமாவளவன் தலித்துகளுக்கு ஆதரவாக் குரல் கொடுத்து உழைச்சிக்கிட்டு இருக்கிறார். சீமான் போராளி அவருடைய கருத்துகளைக் கேட்டு பிரமிச்சி போயிருக்கேன்.தேசிய கட்சிகள் எல்லாம் இருக்காங்க. ஆனா இந்த சிஸ்டம் கெட்டுப் போயிருக்கே " என்பதுதான் ரஜினி பேச்சின் ஹாட் டாப்பிக் "அவருடைய இந்தப் பேச்சில் சற்று வெளிப்படைத் தன்மை இருப்பதாகவே தோன்றுகிறது. ஆனால் அவருடைய பேச்சில் சில திட்டங்களும் மறைத்துள்ளது" என்று சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

"கெட்டுப்போயுள்ள இந்த சிஸ்டத்தை இப்போது இருப்பவர்களால் சரி செய்ய முடியவில்லை. அதனை சரிப்படுத்த வேண்டிய கடமை நமக்கு ஏற்பட்டுள்ளது" என்பதைதான் ரஜினி சொல்லியிருக்கிறார்.மேலும் அரசியலுக்கு வரும் முடிவை எடுத்து விட்டேன் என்றும் அதற்கு நீங்களும் தாயராக இருக்கவேண்டும் என்றும் ரசிகர்களுக்கு மறைமுகமாக கூறியுள்ளார் என்கிறார்கள். 

அதுமட்டுமன்றி யார் விமர்சனம் செய்து பேசினாலும் அதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் அடுத்த கட்டத்துக்குச் செல்வதே நமது இலக்கு. அதற்கான பக்குவமான மனிதனாக நான் இருக்கிறேன் என்பதையும் அவருடைய பேச்சில் காண முடிந்ததாகக் கூறுகின்றனர். ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ்,திருமாவளவன் ,சீமான் ஆகியோர் ரஜினியை விமர்சித்து பேசியுள்ளனர்.இந்நிலையில் அவர்களைப் பாராட்டிப் பேசியிருப்பது என்பது தமக்கு அரசியல் பக்குவம் வந்துகொண்டிருக்கிறது என்பதை ரஜினி உணர்த்துகிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதுமட்டுமன்றி உடனடியாக அரசியல் பற்றி பேசினால் அது சரியாக இருக்காது. எனவே அரசியலும் சமூகமும் வேறு வேறு அல்ல.சமூகச் சித்தாந்ததைக் கையில் எடுத்தால்தான் அரசியலுக்குள் நுழைவதை உறுதிபடுத்தபடுத்த முடியும் என்ற நோக்கத்திலும் அவர் அவ்வாறு பேசியிருக்காலம் என்கின்றனர்.. 

மோடி வெற்றிகரமாக்கியதைதான் ரஜினி பேசுகிறார்...

தமிழிசைசவுந்திரராஜன்ரஜினி, ரசிகர்களைச் சந்திக்கப் போகிறார் என்று அறிவிப்பு வந்தவுடன் அவர் பி.ஜே.பி-யில் இணையப்போகிறார். அதற்கு தன் ரசிகர்களை ஒன்று திரட்டவே இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்று பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர். இன்று அவருடைய பேச்சு குறித்து பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழசை சவுந்திராஜனிடம் பேசியபோது , 

"சிஸ்டம் கெட்டுப்போய் உள்ளது என்று ரஜினி சொல்லியிருப்பது சரியான கருத்துதான். மத்தியில் கெட்டுப்போன சிஸ்டத்தை கையில் எடுத்து பிரதமர் மோடி சரி செய்துள்ளார். மோடியின் அந்தத் திட்டத்தைத் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தவே நாங்களும் முயற்சித்து வருகிறோம்.சிலரைப் பற்றி குறிப்பிட்டு ரஜினி பேசியுள்ளார். அவர்கள்ஆட்சியில் இருந்தவர்கள். 

ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தவர். அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தவர். திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர்கள் எல்லாரும் இந்த சிஸ்டத்துகுள் இருந்தவர்கள் தானே அப்படி இருக்கும்போதே இவர்கள் சரியில்லாத சிஸ்டத்தை சரி செய்யவில்லையே என்ற கேள்வி எழுகிறது."

"இந்த அரசியல் தலைவர்கள் யாரும் இந்த சிஸ்டத்தைச் சரிபடுத்தவில்லை என்று சொல்கிறாரா ?" என்று கேள்வி எழுப்பிய போது, " ரஜினி அப்படிச் சொல்லவில்லை. ஆனால், இவர்கள் அனைவரும். இந்த சிஸ்டத்தில்இருந்தவர்கள்தான் என்ற கருத்தை அவர் வைப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. இந்த சிஸ்டம் சரியில்லை என்பதால், மத்தியில் அதைச் சரி செய்யும் பணிகளைத் தொடங்கி விட்டோம். ரஜினியின் எண்ணத்தை நாங்கள் ஏற்கனவே செயல்படுத்தத் தொடங்கி விட்டோம். மத்தியில் அது வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. தமிழகத்திலும்அந்த நடவடிக்கை தொடங்கி விட்டது" என்றார் ..

பி.ஜே.பியில் இணையவே இவ்வாறு பேசியுள்ளார்.. 

மோடி வெற்றிகரமாக்கிய திட்டத்தைதான் தற்போது ரஜினி பேசியிருக்கிறார் என்று தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில், ரஜினி பாலுபி.ஜே.பி-யில் இணையப் போகிறார் என்பதையே இன்றைய அவருடைய பேச்சு காட்டுவதாக கூறுகிறார் அரசியல் விமர்சகர் பாலு,

 "அரசியல் ஆர்வம் ரஜினிக்கு வந்துவிட்டது.நேரடியாக பி.ஜே.பி-யில் சேர்கிறேன் என்றால் விமர்சனங்கள் எழும் என்பதால் இவ்வாறு பேசியுள்ளார். அதன் காரணமாக சிஸ்டம் சரியில்லை என்று கூறுகிறார். சிஸ்டம் என்றால் என்ன என்பது ரஜினிக்குத் தெரியுமா?அவருடைய இந்தப் பேச்சு பி.ஜே.பி-யில் இணைவதற்கு தயாராகி வருகிறார் என்பதையே காட்டுகிறது. அதனை இப்போது தெரிவிக்க முடியாது என்பதால் சிஸ்டம் சரியில்லை என்று கொளுத்திப் போட்டுள்ளார். சிஸ்டம் சரியில்லை என்று சொல்வது வெறும் டிரெய்லர்தான்.

இன்னும் அவரிடமிருந்து வரவேண்டிய மெயின் பிக்சர்ஸ் நிறைய இருக்கிறது. பி.ஜே.பி சொல்கிற ஊழல்,கறுப்புபணம் ஆகியவற்றைதான் தற்போது ரஜினி சிஸ்டம் சரியில்லை என்று சொல்லியிருக்கிறார்.மோடியும் ரஜினியின் கருத்தைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதிகாரிகள் நல்லவர்கள்தான் அவர்களைச் செயல்பட விடாமல் அரசியல்வாதிகள் தடுக்கிறார்கள் என்று மோடி கூறும் கருத்தைதான் ரஜினி சிஸ்டம் என்று கூறுகிறார்.நேரடியாக அரசியலுக்கு வரமுடியாது என்பதால் இவ்வாறான கருத்துகளை உருவாக்கி வருகிறார்.இதற்குப் பெயர் " Mind Making " (மைண்ட்மேக்கிங் ) என்று பெயர். ரஜினி அரசியலுக்கு வருவார் என்று பேச வைக்கவேண்டும். அவர் பி.ஜே.பி-க்குச் சென்று விடுவார் என்று பேசவைக்க வேண்டும்.

 

ரஜினியின் ரசிகர்கள் என்பவர்கள் பல்வேறு கட்சிகளில் இருக்கிறார்கள். அவர்களிடம் உடனடியாக அரசியல் முடிவு குறித்து அறிவித்தால் அவர்கள் ஏற்பார்களா ? என்பதையெல்லாம் அறியவே இவ்வாறு பேசி வருகிறார். அவர் திசையைத் தீர்மானித்து விட்டார். அந்தத் திசைகளை நோக்கி அனைவரையும் அழைத்துச் செல்லவே இதுபோன்று சிஸ்டம் சரியில்லை என்று பேசியுள்ளார்"என்றார். 

http://www.vikatan.com/news/politics/89807-why-did-rajini-speak-about-this-system-in-the-fans-meet.html

  • தொடங்கியவர்

கவர்ச்சியும் ஈர்ப்பும் மட்டுமே அரசியல் வெற்றியை தராது'

 

 
 
 
ரஜினி | படம்: எல்.சீனிவாசன்
ரஜினி | படம்: எல்.சீனிவாசன்
 
 

ரஜினிகாந்த் என்ற நடிகர் மீதுள்ள ஈர்ப்பு, கோடிக்கணக்கான ரசிகர்களை அவர் கவர்ந்து வைத்துள்ளதும் மட்டுமே அரசியலில் அவருக்கு வெற்றியைப் பெற்றுத்தந்துவிடாது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மே 15-ம் தேதி ரஜினிகாந்த தனது ரசிகர்களுடனான ஐந்து நாள் சந்திப்பைத் தொடங்கினார். 12 வருடங்களுக்குப் பிறகு ரசிகர்களை சந்திப்பதால் ஏற்பட்டிருந்த எதிர்பார்ப்பும் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் வெற்றிடம் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பும் ரஜினி என்ன சொல்வார் என்று அனைவரையும் எதிர்நோக்க வைத்திருந்தது.

முதல் நாள் சந்திப்பில் வழக்கம்போல் "ஆண்டவன் நினைத்தால் அரசியலுக்கு வருவேன். அப்படி வரும்போது பணம் சம்பாதிக்க நினைக்கும் ஆட்களை எல்லாம் அருகில் சேர்க்க மாட்டேன்" என்றார். என அவர் கூறிச்செல்ல அது ஒரு விவாத கருப்பொருள் ஆனது.

கடைசி நாளான மே.19-ல் அவர் பேசிய பேச்சு அவரது அரசியல் பிரவேச முடிவை கிட்டத்தட்ட உறுதி செய்வதாகவே அமைந்தது. "ஜனநாயக அமைப்பு முறையில் மாற்றம் வேண்டும். மக்கள் மனநிலையை மாற்ற வேண்டும். அப்போதுதான் இந்த நாடு உருப்படும். போர் வரும்போது பார்த்துக் கொள்வோம்" என அவர் கூறியிருந்தார்.

இது தொடரொஆக 'தி இந்து' குழும தலைவர் என்.ராம் கூறும்போது, "நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு அவர் அரசியலுக்கு வருவார் என்பதை சூசகமாக அதேவேளையில் அதை மிகவும் உறுதியாகவே எடுத்துரைத்துள்ளது. அதுவும் ஆளும் அதிமுக ஒழுங்கற்ற நிலையில் இருக்கும்போது ரஜினிகாந்தின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்தது.

இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக வருவாரோ என்று யோசிக்க வைத்தவர் நடிகராக இருந்து அரசியலில் ஈடுபட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த். ஆனால் அவர் இப்போது வாக்குவங்கியில் பின்தங்கியிருக்கிறார்.

இதையே ஒரு சான்றாக எடுத்துக்கொண்டால் ரஜினி தீவிர அரசியலில் ஈடுபடுவது என்பது அவருக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும். சினிமா கவர்ச்சியும், ஈர்ப்பும் மட்டுமே அரசியல் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துவிடாது.

அரசியலில் வெற்றி பெற, அரசியல் சார்ந்த சாதுர்யம், பிரச்சினைகளை சீர்தூக்கிப் பார்க்க அனுபவ ரீதியான அணுகுமுறை, சில நேரங்களில் சலிப்பூட்டும் வேலை எனத் தெரிந்தும்கூட கடுமையான உடல் உழைப்பைத் தருவது, தொண்டர்கள் எளிதாக அணுகக்கூடியவராக அவர்களுடன் நட்பு பாராட்டக்கூடியவராக இருப்பது என பல பண்புகள் தேவைப்படுகின்றன" என்றார்.

என்.ராம் மேலும் கூறும்போது, "ரஜினிகாந்த் எளிமையானவர், விளம்பரங்களை விரும்பாதவர் என்றாலும் முழுக்க முழுக்க ரசிகர்களை மட்டுமே மையப்படுத்தி உருவாக்கப்படும் ஒரு கட்சி சாய்க்கப்படும் என்பதே அரசியல் சமன்பாடு. அவருக்காக அவருடைய ரசிகர்கள் வருவார்கள். ஆனால், அவர்களுக்கு அரசியல் தெரியாது. அரசியலில் அவர்கள் வளர்த்தெடுக்கப்படவில்லை என்பதே பலவீனம்தான். சூப்பர்ஸ்டாரும் அவரது ரசிகர்களும் மட்டும்தான் கட்சி என்றால் அதில் எவ்வித சமத்துவமும் இருக்காது" என்றார்.

1991-96 ஆட்சி முடியும் தருவாயில் அதிமுகவை மீண்டும் தேர்வு செய்தால் ஆண்டவனால்கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியது என கூறியநாள் முதல் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து எல்லோரையும் ஒருவித எதிர்பார்ப்பிலேயே வைத்திருக்கிறார். ஆனால், ஆணித்தரமான முடிவு ஏதும் இதுவரை அவர் எடுக்கவில்லை. அரசியலில் இருக்கும் பெருஞ்சவாலைப் பார்த்து அவர் அடுத்தக்கட்டத்துக்கு நகராமலேயே காத்திருந்தார். ஒருகட்டத்தில் ஜெயலலிதாவுடன் சமரசம் செய்துகொண்டு தனது தொழிலில் கவனம் செலுத்தத் துவங்கினார் என்பது கவனிக்கத்தக்கது.

'உகந்த சூழல்'

மீடியா டெவலப்மென்ட் பவுண்டேஷனின் நிர்வாக இயக்குநர் சசிகுமார் கூறும்போது, "ரஜினிகாந்த் ஒருவேளை தேர்தலில் போட்டியிட்டால் அவர் மற்ற கட்சிகளுக்கு நல்ல போட்டியாளராக இருப்பார். அவருடைய நடிப்புத் தொழில் ஒரு சமநிலையை அடைந்துவிட்டது. கம்ப்யூட்டர் கிராபிக்ஸும், மென்பொருள் சாகசங்களும் அவருடைய நடிப்புக்கு பலம் சேர்க்கத் தேவைப்படுகின்றன. எந்திரனும், கபாலியுமே அதற்குச் சாட்சி. இத்தகைய சூழலைத்தான் ரஜினி அரசியலில் தான் நுழைவதற்கு சாதகமாகக் கருதியிருக்கிறார்" எனக் கூறியுள்ளார்.

ஆளும் அதிமுக ஸ்திரமற்ற நிலையில் இருக்கும்போது மேம்போக்காக பார்க்கும்போது ரஜினிக்கு இது சாதகமான சூழலே. ஆனால், வாக்குவங்கி சாதி சார்ந்து அமைந்துள்ள தமிழகம் போன்ற ஒரு மாநிலத்தில் ரஜினிகாந்த தனக்கென ஒரு வாக்குவங்கியை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.

பாஜக ஆதரிக்கிறதா?

"ரஜினியை பாஜக தன் பக்கம் இழுக்கப்பார்க்கிறது என்ற பேச்சு கடந்த மக்களவைத் தேர்தலின்போது மோடி - ரஜினியை சந்தித்தநாள் முதலே பேசப்படுகிறது. இந்தமாதிரியான சூழலில்தான் ரஜினிகாந்த் போர் பற்றி பேசியிருக்கிறார். இப்போது எனக்கு கிரேக்க வரலாற்றின் ட்ரோஜன் குதிரை நினைவுக்கு வருகிறது. பாஜக கையில் இரு ட்ரோஜன் குதிரையாக ரஜினிகாந்த் ஆகிவிடக்கூடாது" எனக் கூறினார் சசிகுமார்.

என்.ராம் கூறும்போது, "ரஜினிகாந்தை வைத்து தமிழகத்தில் மூன்றாம் நிலை 'சி' லீக் எனக்கூறும் அளவில் இருக்கும் பாஜகவை முதல் வரிசைக்கு 'ஏ' லீகுக்கு கொண்டுவர பாஜக முயற்சிக்கப்படுகிறது என்றால் அது நிச்சயமாக நல்ல முயற்சி இல்லை" என்றார்.

இதேபோல் பிரபல சிமினா விமர்சகர் வி.எம்.எஸ். சுபகுணராஜன் கூறும்போது, "நாம் அனைவரும் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நாம் இன்று பார்க்கும் ரஜினிகாந்துக்கும் இதற்கு முந்தைய காலகட்டங்களில் பார்த்த ரஜினிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. எந்திரன், கபாலி போன்ற படங்களில்கூட அவரது அடையாளத்தை சில முன்மாதிரிகளைக் கொண்டு பிம்பப்படுத்துகின்றனர். ரஜினி என்பவர் ஒரு பிம்பமாகவே அதிகம் அறியப்படுகிறார்" என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/கவர்ச்சியும்-ஈர்ப்பும்-மட்டுமே-அரசியல்-வெற்றியை-தராது/article9708414.ece?homepage=true

  • தொடங்கியவர்

அதிருமா...

 

''நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் எப்போ வரு வேன்னு தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் சரியா வருவேன்...'' என்ற வார்த்தையை நம்பி 20 வருடங்களுக்கு மேலாக தலைவா வா... தலைமை ஏற்க வா, உங்களை தான் நம்புது இந்த பூமி.. எங்களுக்கு இனி நல்ல வழி காமி என காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு இப்போது வார்த்தைகளில் சொல்ல முடியாத மகிழ்ச்சி...ஆம் 9 வருடங்களுக்கு பின்னர் தற்போது தனது ரசிகர்களை சந்தித்து வருகின்ற ரஜினியின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள்... அவரது ரசிகர்களை மட்டுமல்ல .. ஒட்டுமொத்த தமிழர்களையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக அரசியலை பொறுத்தவரையில் சினிமா என்பது பிரிக்க முடியாத ஒன்று. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மற்றும் கலைஞர் கருணாநிதி முதல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வரை சினிமாவை ஆண்டவர்களே தமிழகத்தையும் ஆண்டனர். அதுமட்டும் அல்ல, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், சீமான், நெப்போலியன், ராதாரவி, சரத்குமார், ஆனந்தராஜ், செந்தில், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ் உள்ளிட்ட பலரும் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களே.. இவர்கள் எத்தனை பேர் இருந்தாலும் தமிழகம் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்து கிடப்பது ரஜினி என்ற ஒருவருக்காகவே.

ரஜினிகாந்த்...அப்படி இவரிடம் என்ன இருக்கிறது? உண்மையிலேயே இந்த பெயரே காந்தம் தான்.. அவரது திரைப்படங்கள் வெளியாகையில் வயது வித்தியாசமின்றி ரசிகர்கள் கொண்டாடும் போது உன்பேருக்குள்ள காந்தம் உண்டு உண்மைதானடா.. என்ற பாட்ஷா பட வரிகள் மெய்யானதே எனத் தோன்றும். சாதாரண பஸ் நடத்துநராக இருந்த சிவாஜிராவ் தனது உழைப்பால் மட்டுமே இன்று உலகம் கொண்டாடும் அளவு உயர்ந்திருக்கிறார். இளைஞர்களை பொறுத்தவரையில் எந்த கடினமான வாழ்க்கை சூழ்நிலையாக இருந்தாலும் நம்மை இறைவனை நம்பி உழைத்தால் வாழ்வில் முன்னேறலாம் என்ற தன்னம்பிக்கைக்கு உதாரணமாக உள்ளவர். ரஜினி ஒரு மந்திரச்சொல். நிறம், தோற்றம் என அனைத்தும் கடந்து திரையுலகில் தன் திறமையால் தனக்கென ஒரு பாணியை அமைத்துக்கொண்டவர். இந்திய சினிமாவே இன்றுவரை வியக்கும் அளவுக்கு உலக ரசிகர்களை ஈர்த்து சூப்பர் ஸ்டார் சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருப்பவர் ரஜினி. உப்பிட்ட தமிழ்மண்ணை நான் மறக்க மட்டேன்... நான் உயிர் வாழ்வதிங்கேதான், ஓடிவிடமாட்டேன் என்றும், என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுண் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா... என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா... என்றும் திரையில் அவ்வப்போது தன் தமிழ்ப் பாசத்தை வெளிப்படுத்தியவர். இதை விசிலடித்து வரவேற்ற ரசிகர்கள்... தலைவா அரசியலுக்கு வா... என அழைக்கும்போதெல்லாம், அது ஆண்டவன் கையில தான் இருக்கு என்று மேலே கையைக் காட்டுவார் ரஜினி. இவ்வளவு மக்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கிறதே? அதை வீணாக்கலாமா என்ற ரசிகர்களின் கேள்விக்கு... கண்டிப்பாக அதை வீணாக்க மாட்டேன் என்றும் பதில் சொல்வார் அவர். இருக்கு ஆனா இல்ல என்ற பாணியில் தன் அரசியல் விருப்பங்களைத் தேவையான நேரத்தில் வெளிப்படுத்தியே வருவார்.

ரஜினியை பொறுத்தவரையில் சினிமாவை தாண்டி தமிழக அரசியலில் ரஜினி என்ற மந்திரச் சொல் 1996 ஆம் ஆண்டு ஒலிக்க ஆரம்பித்தது. 20 வருடங்களுக்கு முன்னர் அவர் உதிர்ந்த ஒரு வார்த்தை தமிழக அரசியலை மாற்றிப்போட்டது.. அந்த காலப்பகுதியில் ரஜினி என்ன சொல்கிறாரோ அந்த வார்த்தையை கேட்பதற்கு முழு தமிழகமே தயாராக இருந்தது. 1996-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது அதிரடியாக ஒலித்தது ரஜினியின் குரல். இந்த ஆட்சி மீண்டும் வந்தால், தமிழகத்தை ஆண்டவனாலகூட காப்பாத்த முடியாது என்று ஜெ.ஆட்சியை எதிர்த்து பேட்டியளித்தார் ரஜினி. அந்தத் தேர்தலில் தி.மு.க. –- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது, படுதோல்வியைச் சந்தித்தார் ஜெயலலிதா. மீண்டும் அரசியல் சூழல்கள் மாற... 2001-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதா ஆட்சி அமைத்தார். 2004-ஆம் ஆண்டு நடிகர் சங்கம் நடத்திய “கலைத்தாய்க்கு கலையுலகின் பாராட்டு விழா”வில் ரஜினியின் பேச்சு ஜெ.வுக்கு புகழ் மாலையாக அமைந்தது.

2011-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிரடியாக ஒரு வெடியைக் கொளுத்திப்போட்டார் ரஜினி. ஆம்.. கேமராக்கள் புடைசூழ ஊடக வெளிச்சத்தில் இலைக்கு வாக்களித்தார். ரஜினி வாக்களித்தது பட்டாசாக வெடித்துக்கொண்டிருக்க, அன்று மாலை கலைஞருடன் பொன்னர் சங்கர் திரைப்பட சிறப்புக்காட்சியில் கலந்துகொண்டார். கலைஞரும் ரஜினியும் பொன்னர் சங்கர் படத்தைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டனர்.

ரஜினி அரசியலைவிட அதிகம் விரும்புவது ஆன்மிகத்தைத்தான் என்பது அனைவரும் அறிந்தது. தனிமனித வாழ்வில் ஆன்மிகம் அவருக்கு தன்னிறைவைக் கொடுத்திருந்தாலும் சினிமாவிலும் அரசியலிலும் அது உதவாமலே போனது. ரஜினி நடித்த ஸ்ரீ ராகவேந்திரா, பாபா ஆகிய படங்களின் படுதோல்வியே அதற்கு உதாரணம். ரஜினியின் ஆன்மிக பலத்தை எப்படியாவது வாக்குகளாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இன்று வரை துடித்துக்கொண்டே இருக்கிறது பா.ஜ.க. இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் ஆர்.கே.நகர் பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன் வரை தேர்தல் நேரங்களில் ரஜினியைச் சந்தித்து வாழ்த்து பெறுவதும் இதற்காகத்தான். ஆனால் இன்றுவரை என்ன தான் பா.ஜ.க.-வினர் கைகொடுத்தும், கட்டியணைத்தும் ரஜினியுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தாலும், கடவுள் ஆன்மிகத்தை விட திராவிட முற்போக்கு கருத்துக்கள் நிறைந்த தமிழகத்தில் ரஜினியின் ஆன்மிக செல்வாக்கை பா.ஜ.க.வினரால் வாக்காக மாற்ற முடியவில்லை. ஆயினும் ரஜினி ஆதரவு தெரிவித்தால் தாங்கள் வெற்றிபெற்று விடலாம் என்ற கருத்து தமிழகத்தில் பரவலாக சில அரசியல் தலைமைகளிடம் நிலவுகின்ற நம்பிக்கை. இதற்காகதான் அடிக்கடி ரஜினி வீட்டுக்கு சென்று அவருடன் புகைப்படம் எடுத்து அதனை வைரலாக்கி வருகின்றனர்.

ரஜினி தமிழனாக வாழ்ந்தாலும் அவர் மனைவி தமிழராகவும் அவரது பிள்ளைகள் தமிழர்களை மணம்முடித்து வாழ்ந்தாலும் இன்னும் அவரை சிலர் மராட்டியன், கன்னடன் என்றே ஒதுக்கி தமிழகத்தில் இருந்து பிரித்து வைக்கவே முயல்கின்றனர். காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழர், - கன்னடர் இடையேயான பிரச்சினையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழர்களுக்கு ஆதரவுக்குரல் கொடுக்கத் தமிழ்த் திரையுலகம் நெய்வேலியில் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் பிரமாண்ட கண்டனக் கூட்டத்தை நடத்தியது. அதில் கலந்துகொள்ளாமல் அடுத்த நாள் சென்னையில் தனியாக உண்ணாவிரதப் போராட்டம் என்று அறிவித்து அமர்ந்தார் ரஜினி. முதல்நாள் நெய்வேலிக்குப்போன சினிமா நட்சத்திரங்கள் முதல், அரசியல் தலைவர்கள் வரை பலரும் ரஜினியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தின்போது நதிகள் இணைப்பை வலியுறுத்தினார் ரஜினி. பணம் இல்லை என்று இனியும் காலம் தாழ்த்த வேண்டாம்... முதல் ஆளாக நானே ஒரு கோடி ரூபா தருகிறேன் என்று அறிவித்தார். தென்னிந்தியாவின் முக்கிய நடிகர்களை ஒன்றுதிரட்டி நதிகளை இணைப்பது பற்றி முழுவேகத்தில் செயற்படப்போகிறார் ரஜினி என்று அப்போது பேசப்பட்டது. ஆனால்... காவிரி நதிநீர்ப் பிரச்சினை இன்றும் தீயாக கனன்று கொண்டுதான் இருக்கிறது.

2008- ஆம் ஆண்டு கலைஞர் கொண்டுவந்த ஒகேனக்கல்- கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு கர்நாடக மாநில அமைப்புகள் கண்டனம் தெரிவிக்க, அங்கிருக்கும் தமிழர்களும் தாக்கப்பட்டனர். இதைக் கண்டிக்கும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்கம் ஒரு கண்டனக் கூட்டத்தை நடத்தியது. அந்த மேடையில் தமிழர் உணர்வு அனல் பறக்க, ரஜினி என்ன பேசப்போகிறார் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. தமிழ்நாடு... கர்நாடகா... எதுவா வேண்ணா இருக்கட்டும், சத்தியம் பேசுங்க, உண்மையப் பேசுங்க, நம்ம இடத்துல தண்ணீர் எடுப்பதை அவங்க தடுக்குறாங்கன்னா... அவங்கள ஒதைக்க வேணாமா... என்று பரபரப்பாக பேசினார்.

2008- ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலைகளைக் கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது . அதில் கலந்துகொண்ட ரஜினி, இலங்கை அரசை வன்மையாக கண்டித்துப் பேசினார். எந்த நாடாக இருந்தாலும், பாமர மக்களின் வேதனையின் காற்றுப்பட்டாலே அந்த நாடு உருப்படாது... என்று உணர்வுபூர்வமாக இருந்தது அவரது பேச்சு. அண்மையில் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கையளிக்கும் நிகழ்வுக்கு ரஜினி வருவதாக இருந்தது. ஆனால் மத்தியில் பா.ஜ.க. அரசு ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நல்லுறவு இருப்பது போல காட்டி, உலக நாடுகளை ஏமாற்றவே ரஜினியை பா.ஜ.க. அரசு பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது என்று ரஜினியின் இலங்கைப் பயணத்திற்கு தமிழகத்தின் சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்ப, அதை ஏற்று அந்த நிகழ்வில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருந்தார் ரஜினி. ஆனால் அப்போதும் தான் ஒரு கலைஞன். தன்னை அரசியலாக்க வேண்டாம் என்று ரஜினி கூறியிருந்தார். இதற்கு முன்னர் 2012-ஆம் ஆண்டு ரஜினி உடல்நலனில் பிரச்சினை வந்தபோதும் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர் பூரண நலம் பெற்று 12.12.12 பிறந்த நாளன்று ரசிகர்களை நேரில் சந்தித்தார். அந்த ரசிகர்கள் வெள்ளத்தில் உருக்கமாகப் பேசிய ரஜினி நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். நான் மருத்துவமனையில் இருந்தபோது ரசிகர்களின் பிரார்த்தனைகளை அறிந்தேன். நான் நலம்பெற அதுவே காரணம். இதற்கு நன்றி என்று சொல்ல முடியாது. ஏதாவது செய்யவேண்டும். ஆனால், அது என் கையில் இல்லை என்றார்.

இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்று பல வருடங்களாக புகைந்து கொண்டிருந்த நெருப்பு, நான் அரசியலுக்கு வந்தால்... என்று தற்போது தன் ரசிகர்கள் சந்திப்பில் ரஜினி பேசியதுமே தீயாக பற்றிவிட்டது. அவருக்கு எதிரான கருத்துக்களும் விமர்சனங்களும் பரவலாக வரதொடங்கிவிட்டன. மிகவும் மோசமான விமர்சனங்கள் இந்திய ஊடகங்களில் கூட முன்வைக்கப்படுகின்றன. அவர்களுக்கு ரஜினியின் நேற்றைய பேச்சு சாட்டையாக அமைந்திருக்கும். ரஜினி பேசியது இதுதான்.

நான் பிறந்தது கர்நாடகாவாக இருந்தாலும், 44 ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்வதால் நான் ஒரு பச்சைத் தமிழன். 23 ஆண்டுகள் மட்டுமே தான் கர்நாடகாவில் வாழ்ந்தேன். மீதியுள்ள 44 ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்து வருகிறேன். எனது மூதாதையர்களும் எங்க அப்பாவும் கிருஷ்ணகிரியில் பிறந்தவர்கள் என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். கர்நாடகத்தில் இருந்து மராட்டியராக வந்திருந்தாலும் பேரும் புகழும் அள்ளிக்கொடுத்து என்னை தமிழனாக்கி விட்டீர்கள், அதனால் நான் பச்சைத் தமிழன்.

 என்னை எங்கேயாவது போ என்று வெளியே தூக்கிப் போட்டால் இமயமலையில்தான் வீழ்வேனே தவிர வேறு மாநிலத்திற்கு போக மாட்டேன். உயிரோடு இருந்தால் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும். இல்லாவிடில் சிவன் இருக்கும் இமயமலைக்கு செல்ல வேண்டும். என்னை வாழ வைத்து அழகு பார்த்த உங்களை விட்டு நான் ஏன் செல்ல வேண்டும்? அரசியல் குறித்து நான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. எதிர்ப்பு இருந்தால் மட்டுமே நாம் வளர முடியும் என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் அரசியல் முறைமை நன்றாக இல்லை. போர் வரும்போது நாம் பார்த்துக்கொள்வோம். அதுவரை பொறுமை காப்போம் என்றார். ரஜினியின் இந்த பேச்சு அவர் நிச்சயமாக அரசியலுக்கு விரைவில் வருவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் ஜெயலலிதா இருக்கும் வரை அரசியல் ஒரு இரும்பு கோட்டையாகவே இருந்தது. அவரது கண்ணசைவு இல்லாமல் எதுவும் இல்லை. அவரது கடைசி காலகட்ட தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளை சிதறி ஓடவிட்டன. தி.மு.க. கூட தன் எதிர்க்கட்சி அந்தஸ்தை தொலைத்தது. அத்தனை ஆளுமை மிக்க ஜெயலலிதா என்று மறைந்தாரோ அன்றே தமிழக நிர்வாகம் ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது. பன்னீர் செல்வம், சசிகலா, எடப்பாடி, தினகரன், தீபா, தீபா கணவர் என்று ஆளுக்கொரு பக்கம் அ.தி.மு.க.வை சுக்குநூறாக்கி விட்டனர். இன்று சிதறிக்கிடக்கும் அ.தி.மு.க.வினால் தமிழக அரச நிர்வாகம் பூகம்பத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் கட்டடம் போல உள்ளது. இந்த அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றக் கூடிய ஆளுமை தி.மு.க. வுக்கு உள்ளபோதிலும் கருணாநிதி இருந்தும் இல்லாமல் இருப்பதனால் அதனை அக்கட்சியில் சரியாக பயன்படுத்த தெரியவில்லை. அரசியல் சாணக்கியரான கருணாநிதியின் மகன் ஸ்டாலின் தி.மு.க. செயல்தலைவராக பதவியை கையேற்றுள்ள போதிலும் ராஜதந்திரம் இல்லாத ராஜா மகனாகவே உள்ளார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பொது இடங்களில் தனது முன்கோபத்தினால் அரசியல் செல்வாக்கை இழந்துவிட்டார். அவரது கூட்டில் உருவான மக்கள் நலக் கூட்டணி உருவாகிய வேகத்தில் உதிர்ந்து போய்விட்டது. சீமான் கொள்கைகள் வகுத்திருந்தாலும் அரசியலில் ஆட்சிக்குள் இன்னும் அவர் சாதிக்கவில்லை. என்னதான் சூழ்ச்சிகள் செய்தாலும் தலைகீழாக நின்றாலும் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளால் என்றுமே தமிழக ஆட்சிக்குள் தனித்து உருவெடுக்க முடியாது. இவ்வாறான நிலையில் ஆட்சியில் உள்ள எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வோ செயற்திறன் இல்லாத அரசாகவும் அதன் அமைச்சர்கள் தினமும் ஊழலினால் வருமான வரி சோதனையில் சிக்கி விழிபிதுங்குவதும்... சிறையில் உள்ள தினகரனையும் சசிகலாவையும் சந்தித்து நாட்களை கடத்தி தமது ஆட்சியை தக்கவைக்கவே முயற்சித்துக் கொண்டிருப்பதுமாகவே உள்ளனர். இதனால் தினமும் ஒரு போராட்டம் தமிழகத்தில் நடப்பதோடு வரட்சி தலைவிரித்தாடுகிறது. மீனவர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை என்று எதற்கும் தீர்வுகள் பெறப்படவில்லை. வைகை அணையை ரெஜிபோமால் மூடி நீர் ஆவியாவதை தடுக்கலாம் என்ற அளவிலேயே அமைச்சர்களின் அறிவு உள்ளது. இதனால் தமிழகம் செயற்தின் அற்றுப்போயுள்ளது. இங்கு வரவேண்டிய முதலீடுகள் ஆந்திரா போன்ற அண்டைய மாநிலங்களுக்கு செல்கின்றது. பல கம்பனிகள் தமிழகத்தை விட்டு வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில் தமிழகத்தை மீட்டெடுக்க ஒரு திறனுள்ள அரசியல் தலைமையின் தேவைப்பாடு அத்தியாவசியமானதாக உள்ளது. ஜெயலலிதா, கருணாநிதியால் அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப ஆளுமைமிக்க தலைமை தேவைப்படுகின்றது. அந்த வெற்றிடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வி சாமானியனையும் விட்டுவைக்கவில்லை. இந்நிலையில் திரையில் பார்த்த தமது கதாநாயகன் நேரில் வரவேண்டும்.மக்கள் குறைகளை திரைப்படத்தில் போல நேரிலும் தீர்க்கவேண்டும் என்ற ஆசையில்.ரஜினி உதிர்த்துள்ள வார்த்தைகள் இன்று நெருப்பாக பற்றி எரிகின்றது. தமிழகத்தில் பிறக்காவிட்டாலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் தான் தமிழகத்தில் தாம் இறக்கும் வரை அரச சிம்மாசனத்தை அலங்கரித்து எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர்.

சினிமாவை போன்று தமிழகத்தை ஆண்ட எம்.ஜி. ஆரை போல இன்று ரஜினி அரசியலுக்கு வந்து அவரால் வெற்றிபெற முடியுமா? அது எந்தளவு சாத்தியமானது என்று கூறமுடியாது. ஆனால் ரஜினி அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிப்பவர்களை நெருங்கவிடமாட்டேன். இப்போதே ஒதுங்கி விடுங்கள்.. என்று கூறியுள்ளமை ...சிவாஜி பட வசனம் போல .. சும்மா.. அதிருதுல்ல ... என்று அவர் அரசியலுக்கு வந்துவிடுவாரா என்று பலரை அதிரவைத்துள்ளது.... பொறுத்திருந்து பார்ப்போம்... ரஜினி வருவாரா... அரசியலை அதிரவிடுவாரா என்று...

குமார் சுகுணா

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-05-20#page-9

  • தொடங்கியவர்

இயக்கங்களுக்கு என்ன மரியாதை?- ரஜினியின் அரசியல் பிரவேசமும் பின்னுள்ள பெரிய கைகளும்

 

 
 
Rajinikanth_3166564f.jpg
 
 
 

சமீபத்திய அரசியல் நிகழ்வுகளைப் பார்க்கும்போது தமிழகம் பாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதான பிம்பம் உருவாகி வருகிறது. ஊழல் அரசியலில், இயற்கைவள சுரண்டல்களில், வழிபாட்டு அரசியலில் தமிழகம் படுகுழி பாதாளத்தை நோக்கிய படுவேகமான வீழ்ச்சி ஏற்பட்டது என்பது இன்று நேற்றல்ல.

எழுதப்படாத அந்த வரலாற்றின் நாயகர்கள் சகல மரியாதைகளுடன்தான் நம்ஊடகங்களில், மேடைகளில், அரசு அதிகாரங்களில் பவனி வந்துகொண்டிருக்கிறார்கள். அதிகாரத்தோடும் அதிகாரம் இல்லாமலும் எதிராளியைத் தாக்கத் தொடுக்கும் அவர்களது அம்புகளிலிருந்து புறப்படும் கணைகள் திரும்பிவந்து அவர்களையே பதம் பார்த்துக்கொண்டிருக்கிறன.

காங்கிரஸ் பேரியக்கம்

உண்மையிலேயே காங்கிரஸ் பேரியக்கக்கத்தின் வீழ்ச்சி இந்தியாவின் வீழ்ச்சியாகவும் மாறிப்போனதை இன்றுள்ள இந்திய அரசியல் எடுத்துக்காட்டி வருகிறது. வரலாறுகளைக் கண்ட காங்கிரஸ் தொடர்ந்து சுத்திகரிக்கப்படாத நிலையில் கரடுதட்டிப்போய் தனது கோரமுகத்தைக் காட்டத் தொடங்கியது. அப்போதுதான் பாஜக தனக்கான ஒளிமயமான பாதைக்கு மோடி எனும் துடிப்பான நாயகனைத் தேர்ந்தெடுத்தது. புத்துணர்ச்சிமிக்க பாதையில் கட்சி மட்டுமல்ல நாடே மாறும் என்று அவர்கள் இனிக்க இனிக்க பேசத் தொடங்க மக்களும் பெரும் நம்பிக்கையில் திளைத்தார்கள்.

ஆனால் கடந்த மூன்றாண்டுகால பாஜக ஆட்சியில் நடந்ததெல்லாம், பிற்காலத்தில் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட காங்கிரஸ் ஆட்சியில்கூட காண முடியாதது. கடந்த ஆண்டு நவம்பர் 8-ல் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கம் 'கறுப்புப் பணத்தையும் ஊழலையும் ஒழிக்கவே' என்று சொல்லப்பட்ட ஒன்றே போதும், பாஜக அரங்கேற்றிய அவல நகைச்சுவை நாடகக் காட்சிகளுக்கான ஓர் எளிய உதாரணம்.

பணமதிப்பு நீக்கம்

பணமதிப்பு நீக்கம் அமலுக்கு வந்த அடுத்த வாரத்தில் (நவம்.16,2016) கர்நாடக முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம் ரூ.650 கோடி செலவில் நடந்ததற்கான வாய்ப்பு எப்படி என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சில நூறுகோடிகளுக்கு புதிய நோட்டுகள் கைமாற்றித் தந்ததாக சிலர் கைது செய்யப்பட்டார்கள். விட்டாலாச்சாரியா படங்களிலோ ராஜமௌலி படங்களிலோ காணக் கிடைக்காத மாயாஜால அதிசயங்கள் இவை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, டெல்லியில் ஆளும் கேஜ்ரிவாலின் மக்களாட்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கியது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, பாண்டிச்சேரியில் ஆளும் நாராயணசாமி ஆட்சியை சுதந்திரமாக செயல்படவிடாமல் (அரசியல் அமைப்புச் சட்டப்படி முதல்வரைவிட குறைவான அதிகாரம் பெற்றிருந்தும்) துணைநிலை ஆளுநரை தலைமீது தொங்கும் மிரட்டும் கத்தியென இறக்கியதும், ஐந்து மாநில தேர்தலில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் வாய்ப்பிருந்தும் (பஞ்சாபில் தனிப்பெரும்பான்மையுடன் வந்ததை ஒன்றும் செய்ய முடியாத நிலையில்) கொல்லைப்புற வழியாக ஆட்சி பிடிக்கப்பட்ட கோவா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் தங்களை நிலைநிறுத்திக்கொண்ட எல்லாமே பாஜகவின் மகோன்னத ஜனநாயக விரோதத்துக்கு அரிய சான்றுகள்.

காங்கிரஸ் இல்லாத இந்தியா?

இத்தகைய பாதையில்தான் 2019-ல் 'காங்கிரஸ் இல்லாத இந்தியா' எனும் முழக்கத்தோடு களம் இறங்கியிருக்கிறது பாஜக. ஒற்றைக் கட்சி, ஒற்றை அதிகாரம் ஒரு நாட்டுக்கு நல்லதுதானா? அது பன்முகம் என்ற நிகழ்தகவுகளின் பல்வேறு சாத்தியங்களை அழிக்கும் பாசிஸத்தின் பாதை. இதே லட்சியத்தோடு மண்டல கட்சிகளையும் கபளீகரம் செய்ய பாஜக தயங்குவதாகத் தெரியவில்லை.

கடந்த ஆறேழு மாதங்களாக தமிழகத்தை உண்டு இல்லை என ஆக்கிக்கொண்டிருப்பதில் ஆகிக்கொண்டிருப்பதில் அதிமுகவிலிருந்து கிளைத்தெழுந்து இருவேறு புதிய கட்சிகளாக இருப்பதற்கு தலைவர் முன்னாள் முதல்வர் இல்லாதது மட்டுமல்ல காரணம். கடந்த ஆறேழு மாதங்களின் தொடக்கத்திலிருந்தே நடைபெற்றுவந்த பல்வேறு முரணான நிகழ்வுகளுக்கும், அவற்றின் செயல்களுக்கும் பின்னால் டெல்லியின் மிகப்பெரிய பெரிய கைகள் இருக்கின்றன என்கிறார்கள். ''என்கிறார்கள்'' என்பதைக்கூட யார் என உறுதியாக சொல்ல முடியாத இனம்புரியாத அச்சம் பலரையும் பிடித்து வாட்டிவருகிறது.

பல ஆண்டுகளாக உறுமீன் வரும்வரை காத்திருந்து வாடிநின்ற 'சைவ கொக்கு' ரஜினி தற்போது நடத்திய ரசிகர்கள் சந்திப்பு நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. அது மார்க்கண்டேய கட்ஜூவரை பேச வைத்திருக்கிறது.

ரஜினியின் வார்த்தைகள்

தமிழக தடாலடி அரசியல் மாற்றங்களின் தொடர்ச்சியாக ஜனநாயகம் பற்றி ரஜினி நேற்று பேசியதை பார்க்க வேண்டியதில்லைதான். ஆனால் அவர் பேசியது அவருக்கே புரிந்ததா என்றுதான் கேட்க வேண்டியிருக்கிறது. அல்லது புரிந்தவர்கள் யாராவது சொன்னால் விளங்கிக்கொள்ளலாம். தமிழகத்தின் இன்றைய முக்கிய தலைவர்களான மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், சீமான் ஆகியோரின் தனித்தன்மைகளை திறம்பட பாராட்டிப் பேசினார். மேலும் ரஜினி, இதேமாதிரி தேசியக் கட்சிகளிலும் சில தலைவர்கள் இருக்கிறார்கள் என்று அதில் இன்னும் சிலரையும் இணைத்துக்கொண்டார்.

மேற்படி தலைவர்களைப் பேசிய கையோடு அதையே புரட்டிப் போட்டுவிட்டதாக நினைத்துக்கொண்டு அதைத் தொடர்ந்து அவர் உதிர்த்த சில வார்த்தைகள்தான் உச்சபட்ச நகைச்சுவை.

''இவர்கள் அனைவரும் இருந்தாலும் ஜனநாயகம் கெட்டுப்போயிருக்கிறதே. அரசியல் பற்றி, ஜனநாயகம் பற்றி மக்களின் மன ஓட்டமே மாறி இருக்கிறதே. முதலில் ஜனநாயகத்தை மாற்ற வேண்டும். மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும்.'' -- என்ன பேச்சு இது?

இத்தனை திறமையான தலைவர்கள் இருந்தும் ஜனநாயகம் கெட்டுப்போயிருக்கிறது என்று சொல்லவருகிறார். அதாவது இவர்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் ஜனநாயகம் கெட்டுப்போயிருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளார். ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறார். சரி, ஜனநாயகத்தின் பிடி யார் கையில் இருக்கிறது என்று நினைக்கிறார். சட்டமும் ஒழுங்கும் நிர்வாகமும் யார் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதில்கூட தெளிவான புரிதல் இல்லை. மக்களை ஜனநாயகமாக வாழவிட வேண்டியது அரசாங்கம்தான். ஜனநாயகப் பாதையில் அரசு செயல்படுகிறது என்பதை உறுதிசெய்ய வேண்டியது ஆள்வோர்தான். எதிர்க்கட்சிகளோ, பிற மக்கள் இயக்கத்தவர்களோ அல்ல.

அரசியல் பிரவேசம்

மற்றபடி ரஜினி பேசிய ஒவ்வொரு சொல்லுக்கும் அர்த்தம் காணத் தேவையில்லை. அது ரசிகர்களை உற்சாகப்படுத்தவும், தன்னைத்தானே உரசிப் பார்த்துக்கொள்ளவுமான சொற்கள்தான். அதற்கு பெரிய தேவையில்லாத அர்த்தங்கள், கற்பனைகள், பிம்பங்கள் எதையும் நாம் உருவாக்கிக்கொள்ளத் தேவையில்லை.

ஆனால் கடந்த 20 ஆண்டுகாலமாக வேறு வேறு காலங்களில் வராத திடீர் எழுச்சி தோன்றியது எப்படி? உண்மையிலேயே தமிழகத்தில் வெற்றிடம் உருவாகியிருக்கிறதா, தொடர்ந்து அரசியலில் இயங்கிவரும் தலைவர்கள் யாருமே அந்த இடத்திற்குத் தகுதியான ஆட்கள் இல்லையா என்றெல்லாம் தொடர்ந்து எழும் பல கேள்விகளைத் தடுக்க முடியவில்லை.

போட்டோ செஷன் வார்த்தைகள்

ரசிகர்களை அழைத்து போட்டோ செஷன் நடத்தியிருப்பதற்கு பின்னால் இருப்பது அவரது தனிப்பட்ட உற்சாகம் மட்டும்தானா? அல்லது பின்னிருந்து இயக்கும் பெரிய கைகளா? இக்கேள்விகளை அவ்வளவு நேர்மையாக ஏற்றுக்கொண்டு உடனடியாக யாரும் பதில்சொல்லிவிடப் போவதில்லை. எது எப்படியிருந்தாலும் ரஜினி தனியே கட்சி ஆரம்பித்தாலும் சரி, தமிழ் மாநில பாஜகவின் புதிய எழுச்சிமிக்க தலைமை ஏற்றாலும் சரி, ரஜினி அரசியலுக்கு வருவது சற்றேறக்குறைய உறுதி செய்யப்பட்டுவருகிறது.

ரஜினி என்கிற தனிமனிதர் பற்றி ஆளாளுக்கு ஒரு ஒரு அபிப்ராயம் இருக்கலாம். அவை அனைத்தும் சாதகமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அல்லது பாதகமாகத்தான் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமுமில்லை. ஆனால் ஊடகங்களும் சில தலைவர்களும் அவர்களது நடவடிக்கைகளை வரவேற்று அவரது படிமத்தை ஊதிப்பெருக்கத் தொடங்கியிருப்பதென்னவோ ஒரு புதிய அலை வரப்போவதற்கான அறிகுறியைப் போல பரவசப்படுகிறார்கள்.

அதற்கான முகாந்திரங்களை யோசிக்கும்போது, ''தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது'' என்று 96-ல் ரஜினி சொன்ன வாசகமேதான் காதுகளில் ஒலிக்கிறது. காரணம் ரஜினியின் வருகையால் தமிழகத்தில் புதியதாக என்ன மறுமலர்ச்சி உருவாகிவிடும் என்று இந்த நிமிடம் வரை சொல்ல ஆளில்லை.

90களிலிருந்தே அவரை நம்பி கட்அவுட் பாலாபிஷகேமுமாக அலைந்து திரிந்த லட்சக்கணக்கான ரசிகர்களை நினைத்தால் ஒருபக்கம் பாவமாயிருக்கிறது. அவர்களையும் ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதும், அப்பாவியான தமிழக இளைஞர் சமுதாயத்தை யார் வேண்டுமானாலும் சினிமா என்ற மாயைக்குள் இழுத்துக்கொள்ளமுடியும் என்பது தனியே ஆராயவேண்டிய மிகப் பெரிய சோக வரலாறு.

அரசியலில் சம்பாதிக்க நினைப்பவர்கள்

போட்டோசெஷனின் முதல்நாளான கடந்த மே 15-ம் தேதி ரசிகர்களை சந்திக்கும்போது ரஜினி சொன்னது ''அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை சேர்க்க மாட்டேன்'' என்று சொன்ன வார்த்தைகள் மூன்று நாட்களாக கடைவீதிகளின் நாளிதழ் வார இதழ் போஸ்டர்களில் தொங்கியதுதான் மிச்சம்.

ஊழலை ஒழிப்பதும் பணத்தாசை இல்லாமல் ஆட்சியதிகாரம் என்பதும் இன்று யார் அரசியலுக்கு புதிதாக வந்தாலும் சொல்லியே ஆக வேண்டிய ஒருவகை சம்பிரதாய வார்த்தைகளே அவை. ஆனால் அரசியலில் சம்பாதிக்க நினைப்பவர்கள் இவரிடம் சொல்லிவிட்டா செய்யப் போகிறார்கள். அல்லது இவரே கூட நாளைக்கு இதை ஞாபகம் வைத்துக்கொண்டிருக்கப் போகிறாரா?

ரசிகர்களின் இன்றைய நிலை

இந்த வார்த்தைகளைக் கேட்டு ஏற்கெனவே வாழ்க்கையைத் தொலைத்துவிட்ட ரசிகர்கள் வெருட்டு ஓடினாலும் ஓடக் கூடும். காத்திருந்து காத்திருந்து களைத்துப்போன ரசிகர்களுக்கு எந்த ஆறுதல் வார்த்தைகளையும் அவர் சொன்னதில்லை. ஆர்வக்கோளாறில் சொந்த செல்வங்களை இழந்த ரசிகர்களுக்கு இவர் தரப்பிலிருந்து உதவிகள் ஏதும் செய்ததாக தெரியவில்லை.

தமிழகத்தின் உணர்வுபூர்வமான விஷயங்களில் தலையிட்டு அதற்கான தீர்வை அல்ல ஆறுதலைக் கூட இதுநாள்வரை வழங்காத ரஜினியின் இத்தகைய பசப்பு வார்த்தைகளும் பஞ்ச் டயலாக்குகளும் காற்றில் பஞ்சுபஞ்சாய்ப் பறந்து போய்விடும் என்பதுதான் உண்மை.

உண்மையான நாட்டுப்பற்றாளர்களின் ஆர்வம் வேறு. அவர்கள் மனம்குளிர ஈசான மூளையில் அவ்வப்போது மின்னல் அடிக்கவும் செய்கிறது. சகாயம், ஆர்.நல்லகண்ணு போன்ற நேர்மையான வழிகாட்டிகளை தமிழக ஜனநாயகம் தேடிக்கொண்டிருக்கிறது.

சமூக வலைதள விழிப்பு

அதற்கு தமிழகத்தைப் பொறுத்தவரை முக்கிய காரணம், இன்று சமூக வலைதளங்களில் மக்களின் பிரச்சினைகளை உணர்வுபூர்வமாக உள்வாங்கி நவீன அணுகுமுறையோடு இயங்கிவரும் இளைஞர்களின் மாபெரும் விழிப்புணர்வின் தாக்கம். அவ்வளவு எளிதாக அவற்றைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

இதையெல்லாம் கருத்தில்கொள்ளாமல் அரசியல் பிரவேசம் முன்னிட்டு ரஜினி நிகழ்த்திய தடாலடி ரசிகர் சந்திப்புகள், அவர் மறதிமிக்க தமிழக மக்கள்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்... எவ்வளவு குறைத்து மதிப்பிட்டுள்ளார் என்பதையே காட்டுகிறது. இந்த நம்பிக்கையும் குறைத்து மதிப்பிடலும் அவரது சுயசிந்தனையிலிருந்து உருவானதாகத் தெரியவில்லை.

96களின் ரஜினி அல்ல இவர்

96களில் அவருக்கிருந்த குறைந்தபட்ச சுயசிந்தனையும் இப்போது அவருக்கில்லை. அதைத் தொடர்ந்து அவர் விடுத்த வாய்ஸே எடுபடாத நிலை ஒரு தேர்தலில் ஏற்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட எந்த ஆட்சி அலங்கோலங்களையும் விமர்சிக்கும் துணிச்சலும் அவருக்கு ஏற்பட்டது இல்லை. சுயலாபங்களுக்காக மத்திய அரசையும், மாநில அரசையும் பகைத்துக்கொள்ளமுடியாத நிலை அவருடையது.

இதனால் எல்லாம் ரஜினி எனும் தனி மனிதரின் பண்புநலன்களைக் களங்கப்படுத்திவிடமுடியாது. ஆனால் பொதுவாழ்க்கைக்குத் தேவை நல்ல மனிதர் என்ற அடையாளம் அல்ல. அதற்கும்மேலான மாநில வாழ்வின் பிரச்சினைகளின்மீதான பரந்துபட்ட துணிச்சலான பார்வை.

அடிக்கடி புத்தர் கதைகளை உதாரணம் காட்டும் ரஜினியின் சம்பளம் கோடிகளில் விலைபேசப்படுவது என்பது மட்டுமல்ல சென்ற ஆண்டு, ரஜினி நடித்து ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்பட வெளியீட்டின்போது அதன் டிக்கெட் வரலாறு காணாத விலைக்குச் சென்றதற்கு அவர் எந்தவித மறுப்பும் தெரிவிக்காத புகழின் போதையில் திளைப்பவர்தான் என்பதைக் காட்டிக்கொடுத்துவிட்டது. மலிவான விலையில்கூட வேண்டாம், அரசு நிர்ணயித்துள்ள விலைக்கே தனது சினிமாவை அவர் காட்டியிருந்தாரேயானால் அல்லது அதற்கு துணை நின்றிருந்தால் அவரை நாம் கையெடுத்துக் கும்பிட்டிருக்கலாம்.

சமீபத்தில் ஒரு சிறு நிகழ்வு, இசைக்குயில் எம்எஸ் சுப்புலட்சுமி போன்ற எவ்வளவோ பெரிய கலைஞர்கள் சென்று சாதனை படைத்த ஐநா சபையில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் நடனம். முக்கியமான நடன நிபுணர்கள் உள்ளிட்ட பொதுத் தளத்தில் இயங்கும் பலரின் பலமான விமர்சனத்திற்கு ஆளான நிகழ்வு அது. எத்தனையோ சிறந்த பரதநாட்டியக் கலைஞர்கள் சென்னையைத் தாண்டமுடியாத நிலையில் இருக்க, தன் மகளின் ஐநா சபை நடன நிகழ்வுக்காக ஏற்படுத்தப்பட்ட செயற்கையான வாய்ப்பையாவது அவர் தடுத்து நிறுத்தியிருக்கலாம். இதனால் அவரது நல்லவர் பிம்பம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் ஆசை யாரை விட்டது?

இத்தகைய சூழ்நிலையில்தான் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வெற்றிடத்தின் மீது நகர்த்தப்படும் ஒரு பகடைக் காயாக ரஜினிகாந்த் இருப்பதை புரிந்துகொள்ளமுடிகிறது. டெல்லியின் ஆசீர்வாதத்தால் வெவ்வேறு மாநிலங்களின் காட்சிகள் மாறிவருவதன் தொடர்ச்சியாகவே தமிழகத்திலும் அவர்களது விளையாட்டுகள் தொடர்கின்றன.

ஆக்டோபஸ் கரங்கள்

தமிழக முன்னாள் முதல்வர் மரணம் குறித்த திறந்த விசாரணை இன்று வரை இல்லை, அதற்கான எத்தகைய மத்திய அரசின் வழிகாட்டுதல் நடைமுறைகளும் அறிவிக்கப்பட்டதான எந்தவித தகவலும் இல்லை. இந்திய மாநிலங்கள் எங்கும் பாஜக தனது கொடியை நாட்டி வருகிறது. தங்களது ஆக்டோபஸ் கரங்களை விரிவுபடுத்துவதில் இருக்கும் ஆர்வம் ஜனநாயகத்தைப் பற்றி கவலைப்படுவதாக இல்லை.

அதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் கொடிநாட்டும் வேகம் கிளம்பியிருக்கிறது. தமிழக பாஜக தமிழக தலைவர்கள் பேசும்பேச்சிலேயே அதன்வேகம் தொடர்ந்து வெளிப்பட்டுவருகிறது. அதிலும் மாநிலத்தில் தமிழ்நாட்டில் இதுவரை ''பலமுறை ஆண்ட கட்சிகள் காணாமல் போகும்'' என பாஜகவினர் கூறுவதில் தமிழகத்தின் நலன் அல்லது அவர்களது தன்னம்பிக்கை என்பவற்றையெல்லாம் விட அவர்களது மதிநுட்ப வியூகம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுவருகிறது.

பாஜகவின் உற்சாக நண்பரான ரஜினிகாந்த் ஜனநாயகம் கெட்டுப்போயிருக்கிறது என்கிறார். அது யாரால் கெட்டு வருகிறது என்பதுகூடத் தெரியாமல் போனதில் ஆச்சரியமில்லை. ஆனால் அவரை வரவேற்பவர்களுக்குத் தெரியாமல் போனதுதான் ஆச்சரியம்.

ஆட்சிக்கட்டிலில் ரஜினி

எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்கிற இன்றைய இந்திய நிலையில் தமிழகம் ஒரு பொம்மலாட்ட பொம்மையாக ஒரு கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஜினி அதிகாரத்திற்கு வருவதற்கான சகல அறிகுறிகளும் தென்படுகின்றன.

மக்கள் வாழ்வில் தன் சொந்தங்களைவிட ஊடகங்களில் தென்படும் நிழல்மனிதர்களின் மீதான கரிசனம் பெருகியுள்ள காலம் இது. இத்தகைய ஒரு காலத்தில் ஊடகங்களால் உருவாக்கப்படும் பொதுக் கருத்துகள் நேர்மையானவைதானா? எத்தகைய நம்பகத்தன்மைமிக்கவை? - அல்லது ஆராயத்தக்கவை என்பதை யோசிக்கும் பக்குவமும் பொறுமையும் அவர்களுக்கு இல்லை. மக்கள் ரஜினிக்கு ஏகோபித்த வரவேற்பை தந்து ஆட்சிக் கட்டிலில் அமரவைத்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

ஆனால் இதுநாள் வரை மீனவர்கள் பிரச்சினைக்காகவும், ஈழத் தமிழர் நலனுக்காகவும், தமிழக வாழ்வாதாரப் பிரச்சினையைத் தீர்க்கத் தேவையான காவிரி நீர் பங்கீடு பிரச்சினைக்காகவும், நீட் தேர்வு ரத்துக்காவும், மது ஒழிப்புக்காகவும், ஆற்று மணல் கொள்ளையைத் தடுப்பதற்காகவும், தமிழர்களின் பண்பாட்டின் தொன்மையை பறைசாற்றும் புதிய கண்டுபிடிப்பான மதுரை அருகேயுள்ள கீழடி ஆராய்ச்சிக்காக மத்திய அரசின் தடங்கலற்ற அங்கீகாரத்திற்காகவும், ஜல்லிக்கட்டுக்காகவும், நீர்நிலைகளை மீட்பதற்காகவும் எத்தனையோ இன்னல்கள்பட்டு தமிழக மக்கள் பிரச்சினைகளின் வாழ்வாதாரப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களின் உண்மையான தவ வாழ்க்கைகக்கு ஒரு மரியாதையும் இல்லாமல்போய்விடும்.

அதைப் பற்றி ஒரு வார்த்தையும் உளப்பூர்வமாக உணர்வுபூர்வமாக தெரியாமல் கூட பேசத் தயங்குபவர்களுக்கு ஆட்சிக் கட்டிலில் அமரும்போது தமிழகம் வேதனையான பாதையில் தனது புதிய வீழ்ச்சியையே சந்திக்கும். ஆனால் அதன்பிறகு மீண்டும் புதிய போராளிகள் உருவாவார்கள். மீண்டும் அயர்ந்துபோவார்கள்... மறைவார்கள்... வழிபாட்டுக் கலாச்சாரத்தை மீள்பார்வைக்கு உட்படுத்தாமல் அதில் பலியாகிக்கொண்டிருக்கும் தமிழகமோ அடுத்த சில பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு ரஜினியைத் தேடக் கூடும்.

http://tamil.thehindu.com/opinion/columns/இயக்கங்களுக்கு-என்ன-மரியாதை-ரஜினியின்-அரசியல்-பிரவேசமும்-பின்னுள்ள-பெரிய-கைகளும்/article9708548.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

raju.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நான் பச்சை தமிழன் - ரஜினி இந்த விஷயம் வாட்டாள் நாகராஜுக்கு தெரியுமா தலைவரே ..@ரஜினி

DARpzYlXkAENijk.jpg
  • கருத்துக்கள உறவுகள்

வேற்று மானிலத்தவனோ அல்லது ஒரு சினிமாக்காறனோ வந்து தழனை அல்லது தமிழகத்தை ஆழுவது தவறாக கருதாலாம்.பிரச்சனை என்ன என்டால் யார் வந்தாலும் மக்கள் தான் ஓட்டு போட வேண்டும்.அப்ப மக்களை விழிப்:புனாவு செய்வது தான் முறை..(எனது தனிப்பட்ட கருத்து ரஜினி அரசியலுக்கு வரக் குடாது என்பது தான்)

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் இந்த  அரசியல் சூடு இயந்திரன் இரண்டை நல்ல விலைக்கு வித்திடுவார் வித்து முடிந்ததும் ஆள் சொல்லாமல் கொள்ளாமல் இமயமலைக்கு போய் ஒளிச்சுடுவார் ஒரு துளி வியர்வையில் உழைத்த காசு முழுக்க கர்நாடகவுக்கு கொண்டு போயிடுவார்.

  • தொடங்கியவர்

அரசியல் களத்தில் தாக்குப் பிடிப்பாரா ரஜினிகாந்த்?

 
ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை புகைப்படம் எடுப்பதற்காக சந்தித்தபோது, மேடைகளில் கூறிய கருத்துகள் அவருக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறதோ என்ற நீண்ட நாள் சந்தேகத்தை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறது. ஆனால், ரஜினிக்கு இருப்பதாகச் சொல்லப்படும் அரசியல் அபிலாஷைகள் எத்தகையவை? அவரால் அரசியல் களத்தில் வெற்றிபெற முடியுமா?

உண்மையிலேயே ரஜினிக்கு அரசியல் தொடர்பான ஆசைகளும் திட்டங்களும் இருக்கின்றனவா என்ற கேள்விக்குப் பதில் குழப்பமானதுதான்.

கடந்த 1990களின் துவக்கம். தளபதி படம் வெளியான சமயத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் ரஜினியை வருங்கால முதல்வராகக் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. சில இதழ்களில் இது தொடர்பாக கவர் ஸ்டோரிகளும் வெளியாயின.

சில மாதங்கள் கழித்து, போயஸ் கார்டனில் ரஜினியின் கார் முதல்வரின் வருகைக்காக தடுத்து நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாயின. இதற்குப் பிறகு 1992ல் வெளிவந்த அண்ணாமலை திரைப்படத்தில் "என் பாட்டுக்கு என் வேலைய செஞ்சிக்கிட்டு ஒரு வழில நான் போய்க்கிட்டிருக்கேன். என்னை வம்புக்கிழுக்காதீங்க. வம்புக்கிழுத்தா நான் சொன்னதையும் செய்வேன்.. சொல்லாததையும் செய்வேன்" என்ற வசனம் இடம்பெற்றது.

ஜெயலலிதாவுக்குப் பதிலடியாகவே இந்த வசனம் இடம்பெற்றதாக ஊடகங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. ஆனால், ரஜினி இதைப் பற்றி வெளிப்படையாக எதையும் பேசவில்லை. இப்படித்தான், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த ஊகங்களும் பேச்சுக்களும் துவங்கின.

இதற்குப் பிறகு அதே ஆண்டு வெளியான உழைப்பாளி படத்தில், "நேற்றுக் கூலி, இன்னைக்கு நடிகன், நாளை.." என்று ஒரு வசனம். அதற்குப் பிறகு வெளியான முத்து படத்தில், முத்துவில் "நான் எப்போ வருவேன் எப்டி வருவேன்னு தெரியாது... ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்.." என்று குறிப்பிட்டார். இந்த வசனத்தை அவர் அரசியல் குறித்து பேசினார் என்று வைத்துக்கொண்டால், இதுவரை சரியான தருணம் அவருக்கு வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ரஜினிகாந்த்

ஆனால், இப்போதுதான் காலம் கனிந்திருக்கிறது என்கிறார் ரஜினிகாந்த் குறித்து சப்தமா, சகாப்தமா புத்தகத்தை எழுதிய அவரது தீவிர ரசிகர்களில் ஒருவரான ரஜினி ராம்கி.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்துப் பேசும் பலரும், அவர் 1996ஆம் ஆண்டிலேயே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என்றுதான் கூறுவார்கள். அது சரியான கருத்தல்ல என்கிறார் ராம்கி.

"அப்போது கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் களத்தில் இருந்தார்கள். ரஜினி மூன்றாவது ஆளாகத்தான் போட்டியில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால், இப்போது பெரிய வெற்றிடம் இருக்கிறது. மு.க. ஸ்டாலினைத் தவிர பெரிய தலைவர்களே களத்தில் இல்லை. 96ஐவிட இதுவே நல்ல தருணம்" என்கிறார் ராம்கி.

2000களின் மத்தியில் ரஜினிக்கு 46,500 ரசிகர் மன்றங்கள் இருந்தன. ஒவ்வொரு மன்றத்திலும் குறைந்தது 10-15 பேர் இருந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. சராசரி ரஜினி ரசிகர்களின் வயது 40-45ஐ எட்டிவிட்டது. இந்த நிலையில் தன் ரசிகர்களை மட்டுமே நம்பி அவர் அரசியலில் இறங்கி அவரால் வெற்றிபெற முடியுமா?

எஸ்.பி. முத்துராமனுடன் Image captionஇயக்குநர் எஸ்.பி. முத்துராமனுடன் ரஜினிகாந்த்

"ரஜினியைப் பொறுத்தவரை அவர் தனிக்கட்சியை ஆரம்பித்து காங்கிரஸ், பா.ஜ.க., திருமாவளவன் போன்றோருடன் இணைந்து செயல்படக்கூடும். ஆனால், எல்லோரும் நினைப்பதைப் போல அவர் தன் ரசிகர்களை மட்டும் நம்பி களத்தில் இறங்கப்போவதில்லை. மத்தியதரவர்க்கத்தினரே அவரது இலக்காக இருப்பார்கள்" என்கிறார் ரஜினி ராம்கி.

ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து ஆண்டவன்தான் முடிவெடுக்க வேண்டும் என்ற ரீதியில் பேசியிருக்கிறார். ஆனால், அரசியலில் இறங்குவது தொடர்பான முடிவை ஆண்டவன் எடுக்க வேண்டுமென ரஜினி பேசுவது இது முதல் முறையில்லை.

1992ல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழகத் திரைத் துறையின் சார்பில் ஒரு பாராட்டுவிழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் பேசிய ரஜினி, "நேற்று பஸ் கண்டக்டர், இன்று சூப்பர் ஸ்டார், நாளை என்னவோ.. அதே நேரத்தில் ஆண்டவா எந்த சூழ்நிலையிலும் என்னை அரசியலில் விட்டுடாதேன்னு வேண்டிக்கிறேன். ஏன்னா அரசியலுக்கு வந்தா நிம்மதி போய்டும்" என்று சொன்னார்.

சினிமா வசனங்களிலும் மேடைகளில் அரசியல் குறித்துப் பேசும்போதும், தன் அரசியல் பிரவேசம் குறித்து ஆண்டவன் முடிவுசெய்வான் என்பதே ரஜினியின் முடிவாக இருக்கிறது. தான் எடுக்க வேண்டிய முடிவுகுறித்து தெளிவாக இல்லாத ஒருவர், அரசியலில் ஈடுபட்டு எப்படி சரியான முடிவுகளை எடுக்க முடியும் என்பது கேள்விக்குறிதான்.

இதற்கு முன்பாக, ரஜினி நேரடியாக அரசியலில் தலையிட்ட சில தருணங்கள் இருக்கின்றன. 1996ல் முதல் முறையாக தமிழக அரசியல் குறித்து வெளிப்படையாகப் பேசினார் ரஜினி. ஜெயலலிதா அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த ரஜினி, "ஜெயலலிதா திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று சொன்னேன். ஆனால், இனிமே ஆண்டவனே நினைச்சாலும் ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாது" என்றார். இந்தத் தேர்தலில் ரஜினிகாந்த் ஆதரித்த தி.மு.க. - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றது. இது ரஜினியால் கிடைத்த வெற்றியாக அவருடைய ரசிகர்கள் கருதினார்கள்.

ரஜினிகாந்த்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆனால், அதற்குப் பிறகு, ரஜினியின் "வாய்ஸ்"க்கு வெற்றி கிடைத்ததாகச் சொல்ல முடியாது. 1998 மக்களவைத் தேர்தலில் அதே கூட்டணிக்கு ரஜினி ஆதரவளித்தும், வெற்றிகிடைக்கவில்லை. அதற்குப் பிறகு 2004ல் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் அந்தக் கட்சிக்கு வாக்களிக்கக்கூடாது என்று கூறினார். இதை மீறி ராமதாஸ் ஜெயித்தால் அவர் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் என்று கூறினார். பிற தொகுதிகளைப் பற்றி ஏதும் கூறவில்லை. இந்த ஐந்து தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றிபெற்றது.

2002ல் ரஜினியின் பாபா திரைப்படம் வெளிவந்தபோது, பாட்டாளி மக்கள் கட்சியினர் காட்டிய எதிர்ப்பின் அடிப்படையிலேயே 2004ல் அக்கட்சியை எதிர்க்க முடிவுசெய்தார் என்பது வெளிப்படை. ஆனால், 90களில் அவர் காட்டிய ஜெயலலிதா எதிர்ப்பிலும் உறுதியாக இல்லை. 2001ல் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்குவந்த பிறகு, அவரை சந்தித்து பூச்செண்டு கொடுத்து வாழ்த்தினார். ஒரு கட்டத்தில் தைரியலட்சுமி என்றும் ஜெயலலிதாவைக் குறிப்பிட்டார். தன்னுடைய மனமாற்றத்திற்கான காரணங்கள் எதையும் அவர் குறிப்பிடவில்லை.

"எப்போதுமே ரஜினியிடம் பொதுப் பிரச்சனைகள் குறித்து தெளிவு இருப்பதாகத் தெரிந்ததில்லை. அவருடைய கருத்துகளிலும் ஒரு தொடர்ச்சியும் இருந்ததில்லை. போர் வந்தால் ரசிகர்கள் வர வேண்டும் என்கிறார். யாரோடு போர் வரும்? ஏற்கனவே இந்த நாட்டில் மதச்சார்பின்மைக்கு எதிரான போர் நடந்துகொண்டிருக்கிறது. மாநில உரிமைகள் தொடர்ந்து அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதைப்பற்றியெல்லாம் ரஜினி ஒரு போதும் பேசியது கிடையாது" என்று சுட்டிக்காட்டுகிறார் மூத்த பத்திரிகையாளரும் ஃப்ரண்ட்லைன் பத்திரிகையின் ஆசிரியருமான விஜயஷங்கர்.

ரஜினிகாந்த்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் ஆகியோர் தங்கள் திரைப்படங்களில் பொது நன்மைக்காக ஒரு எதிரியிடம் மோதுவதுபோல காட்சிகள் பெரும்பாலன படங்களில் வரும். ஆனால், ரஜினியின் திரைப்படங்கள் தனிநபர்களை எதிரிகளாகக் கொண்டவை. அவருடைய அரசியலும் அப்படிப்பட்டதுதான். தன்னுடைய சாதக, பாதகங்களை வைத்தே தன் நிலைப்பாட்டை அவர் முடிவுசெய்கிறார் என்று சுட்டிக்காட்டுகிறார் விஜயஷங்கர்.

1950ல் பிறந்த ரஜினிகாந்திற்கு தற்போது வயது 67. இப்போதே அரசியலுக்கு வந்தாலும் முதல் தேர்தலாக, நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும்போது வயது 69ஆகியிருக்கும். முதல் சட்டமன்றத் தேர்தலின்போது 71 வயதாகியிருக்கும். உடல்நலம் பாதிக்கப்பட்டவரான ரஜினியால், இம்மாதிரியான மிகப்பெரிய தேர்தல்களை சந்திக்க முடியுமா?

RAJINIKANTHபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ரஜினியின் வயது, உடல்நிலை ஆகியவை அவருக்கு ஒரு தடையாக இருக்காதா என்ற கேள்வி தேவையற்றது என்கிறார் ராம்கி. "தேர்தல் பிரசாரத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பாக செய்ததைப் போலவே இப்போதும் செய்ய வேண்டியதில்லை. 96லேயே ஒரே ஒரு தொலைக்காட்சி மூலமாக மட்டும்தான் அவர் பேசினார். அதற்குப் பலன் இருந்தது. இப்போதும் அதே போன்ற பாணியே கைகொடுக்கும்" என்கிறார் அவர்.

அப்படியே ரஜினி அரசியலுக்கு வந்தாலும், அவர் தனிக்கட்சி ஆரம்பித்து பா.ஜ.கவோடு இணைந்து தேர்தலைச் சந்திக்கலாம். அல்லது, பா.ஜ.கவிலேயே சேரலாம் என்பதுதான் பொதுவான புரிதல். ஆனால், தமிழகத்தின் அரசியல் சூழலை தெளிவாகப் புரிந்துகொண்டவர்கள் இந்த முயற்சிகளில் வெற்றிகிடைக்காது என்பதை அறிவார்கள் என்கிறார் ஆய்வாளரான ராஜன்குறை.

"கட்சி என்றால் கீழ்மட்டம்வரை ஒரு அமைப்பு வேண்டும். எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் ஆகியோர் அப்படி ஒன்றை துடிப்புடன் வைத்திருந்தார்கள். ஆனால், ரஜினியிடம் அப்படி ஒன்றும் இல்லை. தமிழகத்தில் தற்போது, தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளிடம் மட்டுமே அப்படி ஒரு அமைப்பு இருக்கிறது. பா.ஜ.கவில் சேர்ந்தால்கூட அவருக்கு வெற்றி கிடைக்காது" என்கிறார் ராஜன் குறை.

மலேசியப் பிரதமருடன் ரஜினி மற்றும் குடும்பத்தினர் Image captionமலேசியப் பிரதமருடன் ரஜினி மற்றும் குடும்பத்தினர்

காவிரி விவகாரம் தவிர, மாநிலம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ரஜினி கருத்துத் தெரிவித்ததே கிடையாது. "பெரிய பெரிய அரசியல் தலைவர்களே பல பிரச்சனைகளில் கருத்துசொல்வதற்குத் தயங்குகிறார்கள். அம்மாதிரியான சூழலில், ரஜினியைப் போல அரசியலில் நுழையாத ஒருவர் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுமென்பதில்லை" என்கிறார் ராம்கி.

ரஜினியின் தற்போதைய பேச்சு, அவருடைய இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கானது. அதற்குமேல் அதில் எதையும் ஆராய வேண்டியதில்லை என்கிறார் விஜயஷங்கர். 1996ஆம் வருட தேர்தலை மனதில் வைத்து, ரஜினி வெற்றிபெறுவார் என்று கணித்தால் அது தவறாக முடியும் என்கிறார் அவர். "அப்போது ஒட்டுமொத்த தமிழகமும் ஜெயலலிதாவுக்கு எதிராக இருந்தது. ரஜினி குரல் கொடுக்காவிட்டாலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றிருக்கும்" என்கிறார் விஜயசங்கர்.

ரஜினி ரசிகர்கள் மத்தியிலான தன்னுடைய பேச்சில், மு.க. ஸ்டாலின், திருமாவளவன், அன்புமணி ராமதாஸ், சீமான் ஆகியோர் குறித்து நேர்மறையாகக் குறிப்பிட்டார். திறமையானவர்கள் என்றார். ஆனால், அன்புமணி போன்றவர்கள் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஏற்பதாக இல்லை. ஆனால், ரஜினி அரசியலில் ஈடுபட்ட பிறகுதான் அவரைப் பற்றி முடிவுசெய்ய வேண்டும் என்கிறார்கள் சில தலைவர்கள்.

ரஜினிகாந்த்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"ரசிகர்களைச் சந்தித்தபோது ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்களைக் கவனித்தால் அவர் அரசியலுக்கு வர விரும்புகிறார் என்றுதான் படுகிறது. அதற்கான உரிமையும் அவருக்கு உண்டு. அவர் அப்படி அரசியலுக்கு வந்த பிறகு அவருடைய நிலைப்பாடுகள் சார்ந்து விமர்சிக்கலாம். இப்போதே அவருடைய நிலைப்பாடு குறித்து ஏதும் சொல்ல முடியாது" என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான ஜி. ராமகிருஷ்ணன்.

ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து தொடர்ந்து தெரிவித்துவரும் கருத்துகள் அவருக்கு, அதைப் பற்றி தெளிவான கருத்தோ, திட்டமோ இல்லை என்பதையே காட்டுகிறது. ஆனால், ஆண்டவன்தான் முடிவெடுப்பான் என்ற பதில் அரசியல் களத்தில், தமிழக அரசியல் களத்தில் எடுபடுவதில்லை.

http://www.bbc.com/tamil/india-39988518

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: ரஜினியின் அரசியல் பிரவேசமும், தமிழகத்தில் பாஜக ஆட்சியும்!

 

 
 
 
ரஜினி | படம்: எல்.சீனிவாசன்
ரஜினி | படம்: எல்.சீனிவாசன்
 
 

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15-ம் தேதி முதல் சென்னையில் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். ரசிகர்களுடனான 5 நாட்கள் சந்திப்பு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது. முதல்நாள் சந்திப்பின்போது 'ஆண்டவன் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்' என அவர் கூறியிருந்தது பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்களை எழுப்பியது.

இதுதொடர்பான கருத்துகளின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Vincent Raj

ரஜினிக்குள் இரண்டு ரஜினி இருக்கிறார். சினிமா ரஜினி, ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி. நிஜ ரஜினி, நூறு தடவை சொன்னாலும் ஒரே தடவை சொன்னதுதான். ஆக அவர் சரியாகத்தான் இருக்கிறார்.

அரசியலுக்காக சினிமாவை பயன்படுத்தியவர் எம்ஜிஆர். சினிமாவுக்காக அரசியலை பயன்படுத்துபவர் ரஜினி.

ஜான்ஸ் டேவிட் அன்டோ

ரைட் இன்டிகேட்டரை போட்டு, லெப்ட்ல கையை காட்டி ஸ்ட்ரெய்ட்டா போய்ட்டே இருப்போம் மொமண்ட். ஸ்டாலின் சிறந்த நிர்வாகி- ரஜினி.

Thiruppathi Kannan

ரஜினி அரசியலுக்கு வரட்டும் வராமல் போட்டும், ஆனா வரக்கூடாதுனு எதிர்க்கும் போதுதான் யோசிக்கத் தோணுது. தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

Shaik Sulaiman

அனைவரும் அவரவர் கடமையைச் செய்யுங்கள் போர் வரும்பொழுது பார்க்கலாம்: நடிகர் ரஜினி.

போங்க சார் பேசாம உங்க ரசிகர்கள், அவங்க புள்ளைங்க எல்லாம் டென்த் ரிசல்டு பார்த்துட்டு இருக்காங்க. இப்பவும் அதே காமெடி பண்ணிக்கிட்டு!

Trichy K Shiva

அரசியலில் குதிக்கிறார் ரஜினி- செய்தி.

பார்த்து குதிங்க ஜி. இது மாறி நிறைய பேர் குதிச்சி கை, கால் உடைஞ்சி கிடக்கிறாங்க..!

Pollachi Srinivasa Kumar

ரஜினி : நான் அரசியலுக்கு வருவது குறித்து ஆண்டவன் தான் முடிவெடுக்கணும்!

#கடவுள் : - காவிரி பிரச்சினைல வாயை திறந்தீங்களா ?

#ரஜினி : - இல்லை!

#கடவுள் : - விவசாயிகளுக்கு ஆதரவு!

#ரஜினி : - இல்லை!

#கடவுள் : - ஜல்லிக்கட்டு!

#ரஜினி : - இல்லை!

#கடவுள் : - ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு!

#ரஜினி : - இல்லை!

#கடவுள் : - மீத்தேன் எதிர்ப்பு!

#ரஜினி : - இல்லை!

#கடவுள் : - மணல் கொள்ளை தடுப்பு!

#ரஜினி : - இல்லை!

#கடவுள் : - நீட் தேர்வு எதிர்ப்பு!

#ரஜினி : - இல்லை!

#கடவுள் : - கட்டாய இந்தி எதிர்ப்பு!

#ரஜினி : - இல்லை!

#கடவுள் : - அப்புறம் எதுக்கு நான் முடிவெடுக்கனும்...!

c_3166117a.jpg

Gana Pathi

ரஜினி மக்களுக்கு என்ன செய்தார், அவர் அரசியலுக்கு என்ன தகுதி இருகிறது என்று கேட்பவர்களுக்கான பதிவு..

* கபாலி படத்துல அனாதை குழந்தைங்களுக்குஸ்கூல் ஆரம்பிச்சி இருக்காரு..

* எந்திரன் படத்துல இந்திய ராணுவத்துகாக ரோபோ செஞ்சி இருக்காரு..

* சிவாஜி படத்துல கள்ள நோட்டை ஒழிச்சி ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி குடுத்து, வேலையில்லாதவர்களுக்கு வேலை குடுத்து இருக்காரு..

* முத்து படத்துல தன் சொத்தை எல்லாம் ஏழைகளுக்கு எழுதி வைத்திருக்காரு..

* வீரா படத்துல திருட்டு விசிடிய ஒழிச்சி இருக்காரு.

Aranga Gunasekaran

நீங்களும் நானும் பிரிந்து நிற்கும்வரை ரஜினி மட்டுமல்ல அமிதாப் பச்சனே தமிழ்நாட்டு அரசியலுக்கு வருவார்.

Kala

ஒரு நல்ல தலைவன் துணிச்சலோடு செயல்பட வேண்டும். சிக்கலான வேளையில் தீர்க்கமான முடிவு தேவை. குழப்பம் கூடவே கூடாது. பயம் என்பது கடுகளவும் ஆகாது.

அரசியலுக்கு வரலாமா வேண்டாமானு இத்தனை வருடங்களாய்க் குழம்பிக் கொண்டிருக்கும் ரஜினி வந்து மட்டும் என்ன சாதித்து விடப் போகிறார்? வருகிறேன் அல்லது வரவில்லை என இரண்டில் ஒன்றைத் தெளிவாகச் சொல்லி விடலாமே.. ரசிகர்களும் ஏமாற மாட்டார்கள். எதிர்பார்க்கவும் மாட்டார்கள்.

நிஜத்தில் ஹீரோ ஆவது சாதாரணமல்லவே..!

வெ. பூபதி

ரஜினி அரசியலுக்கு வர்றாரோ இல்லியோ, அரசியல் ரஜினி பக்கத்துல வந்து காத்துகிட்டு இருக்கு!

உளவாளி (@withkaran)

ரஜினி கண்டிப்பா அரசியலுக்கு வரணும்..

சம்பாதிச்ச பணத்த கொஞ்சம் செலவு பண்ணி தேர்தல்ல தோற்று தன் மக்கள் செல்வாக்க புரிஞ்சுக்கவாவது..

Yuvan Swang

நான் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு இடமில்லை. - ரஜினி.

நல்ல விஷயம்தான். ஆனால் ரஜினி 25 நிகழ்ச்சியில் பத்து ரூபா கோகோகோலாவை முப்பது ரூபாய்க்கு வித்ததை நினைக்கும் போது கொஞ்சம் இடிக்குது.

Dhana Vijayan Devamsam

ரஜினி அரசியலுக்கு வருவதில் என்ன தவறு உள்ளது எனத் தெரியவில்லை... வெற்றி தோல்வியை மக்கள் முடிவு செய்யட்டும். இனம், மொழி, ஜாதி, பிறப்பு, தொழில் கொண்டு ஒருவரைத் தரம்பிரிக்க நாம் யார்?

Kamaraj Azariah

ரஜினி அரசியலுக்கு வருவேன்னு சொல்றதும், பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்போம்னு சொல்றதும் ஒண்ணுதான்...

இரண்டும் கனவுல கூட நடக்காது.

Shanmugam Rajavel

எந்த பொறுப்பு கொடுத்தாலும் சிறப்பாக செயல்படுவேன் - ரஜினி.

கர்நாடகாவில் இருந்து காவிரி தண்ணியைக் கொண்டு வரணும், முடியுமா பாஸ்?

Thirunavukkarasu Thiruneelakantan

தன் தலைவர்களின் ஊழலை, செயலற்ற தன்மையை, தீச்செயலை கண்டிக்க மனமில்லாதவர்கள், ரஜினி மீது போலி அறச்சீற்றம் காட்டி தங்கள் வெறியை தீர்த்துக் கொள்கிறார்கள்.

Vaa Manikandan

ரஜினிக்கு தமிழகத்தின் பிரச்சினைகள் பற்றி என்ன தெரியும்? தமிழனின் முக்கியமான பிரச்சினைகளில் அவரது நிலைப்பாடுகள் என்ன? என்றெல்லாம் கேட்கிறார்கள். அவருக்கே தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால் அதைக் காரணமாக வைத்துக் கொண்டு ‘நீ அரசியலுக்கு வரக் கூடாது’ என்று சொல்ல வேண்டியதில்லை. இன்றைக்கு இருக்கிற அரசியல்வாதிகளில் யார் கொள்கைகளின் அடிப்படையில் அரசியல் நடத்துகிறார்கள்?

முக்கால்வாசி ஆட்கள் சொத்து சம்பாதிக்க அரசியல் நடத்துகிறார்கள். மீதமிருக்கிறவர்கள் இருக்கிற சொத்தைக் காப்பாற்றிக் கொள்ள அரசியல் நடத்துகிறார்கள்.

Boopathi A

ரஜினி அரசியலுக்கு வந்தால் நம்மாளுங்க விஜயகாந்தை டிஸ்சார்ஜ் பண்ணிட்டு ரஜினிய மீம்ஸ்க்கு அட்மிட் பண்ணிடுவாங்க. அவ்ளோ தான்!

Aravind‏ @aravindjothi1

எல்லாரிடமும் ஒரு திறமை இருக்கும். ஆனால் உலகம் அவர்களை பிழைகள் கொண்டே அடையாளம் காணும். தன்னை வெறுக்கும் நபரையும் அன்பாய் நினைக்கும் தலைவர் ரஜினி.

ElavarasanThangasamy‏ @elasan89

அரசியலுக்கு வந்து சம்பாதிச்சவங்க நிறைய பேர்..

ஆனால் அரசியலுக்கு வருவேன்னு சொல்லியே சம்பாதிச்சவர் ரஜினி மட்டுமே போல!

கார்த்தி‏ @idumbaikarthi

7 வயது சிறுவன் மதுவுக்கு எதிராக தன்னந்தனியாக போராடிக் கொண்டிருக்கும் வேளையில், 67 வயது ரஜினி தனது செயல்களுக்கு கடவுளைத் துணைக்கு அழைக்கிறார்.

http://tamil.thehindu.com/opinion/blogs/நெட்டிசன்-நோட்ஸ்-ரஜினியின்-அரசியல்-பிரவேசமும்-தமிழகத்தில்-பாஜக-ஆட்சியும்/article9707649.ece

  • கருத்துக்கள உறவுகள்

18582644_1919643304981574_74764816845012

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் தங்கள் படங்களை விற்பதுக்கு பல்வேறு முயசிகள் எடுப்பார்கள், இவர் இப்படி அன்று தொட்டு முயலுகிறார். வருமா... வராதா....

பி+கு : நிச்சயம் தமிழன் முதல்வனாக வர தமிழனே விட மாட்டான், பிடித்து இழுத்து விழுத்தி விடுவம் இல்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, பெருமாள் said:

இவரின் இந்த  அரசியல் சூடு இயந்திரன் இரண்டை நல்ல விலைக்கு வித்திடுவார் வித்து முடிந்ததும் ஆள் சொல்லாமல் கொள்ளாமல் இமயமலைக்கு போய் ஒளிச்சுடுவார் ஒரு துளி வியர்வையில் உழைத்த காசு முழுக்க கர்நாடகவுக்கு கொண்டு போயிடுவார்.

இல்லை.....இந்தமுறை ஒரு முடிவோடைதான் இருக்கிறார் போலை கிடக்கு...:cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DAR4HZlWAAEfafR.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

DAWJaPKW0AAEz1F.jpg

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்,வீரலட்சுமியை கண்டித்து ரஜினி ரசிகர்கள் போராட்டம்!  ரஜினிகாந்திற்கு எதிராக யார் பேசினாலும் போராட்டம் வெடிக்கும் என ரசிகர்கள் எச்சரிக்கை!

rajini.jpg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

முடமோ, குருடோ அப்பன் அப்பன் தான்!

நல்லாருக்கான்னு பக்கத்து வீட்டுக்காரன அப்பான்னா கூப்பிட முடியும்?!

 

DAhuqGaXkAEJluU.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DAfUVzuXgAAqaIM.jpg

சிஸ்டம் சரியில்ல.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.