Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி, தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது, கொரோனாவால் பாதிப்பு, வைத்தியசாலையில் அனுமதி. தேவையான பணம் இல்லாததால் உதவி கோரல். 

  • Replies 3k
  • Views 276.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் ஊட‌க‌த்தில் சொல்லுகிறார் தான் கூலிக்கு மார் அடிப்ப‌வ‌ர் இல்லையாம் , ஆனால் க‌ட்சி பொதுகூட்ட‌ங்க‌ளுக்கு அழைத்தால் 10000ஆயிரம் ரூபாய் குடுக்க‌னுமாம் என்று க‌ட்சி வ‌ட்டார‌ம் தொட்டு என‌து ந‌ண்ப‌னும் சொல்லுகிறான் , எப்ப‌டி இப்ப‌டி ப‌ச்சையாய் க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தால் பொய் சொல்ல‌ முடியுது , 

இப்ப‌ கொஞ்ச‌ நாளாக‌ என‌து ம‌ன‌சுக்குள் ஓடி கொண்டு இருப்ப‌து எங்க‌ளுக்கு த‌லைவ‌ரின் த‌லைமையில் த‌மிழீழ‌ம் எப்ப‌வோ அமைந்து இருந்தால் நாம் ஏன் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பின் தொட‌ர‌ போகிறோம் , எங்க‌ட‌ நாட்டை அபிவிரித்தி செய்வ‌தில் தான் எங்க‌ளின் க‌வ‌ண‌ம் இருந்து இருக்கும் 🤞🙏💪

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பையன்26 said:

க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் ஊட‌க‌த்தில் சொல்லுகிறார் தான் கூலிக்கு மார் அடிப்ப‌வ‌ர் இல்லையாம் , ஆனால் க‌ட்சி பொதுகூட்ட‌ங்க‌ளுக்கு அழைத்தால் 10000ஆயிரம் ரூபாய் குடுக்க‌னுமாம் என்று க‌ட்சி வ‌ட்டார‌ம் தொட்டு என‌து ந‌ண்ப‌னும் சொல்லுகிறான் , எப்ப‌டி இப்ப‌டி ப‌ச்சையாய் க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தால் பொய் சொல்ல‌ முடியுது , 

இப்ப‌ கொஞ்ச‌ நாளாக‌ என‌து ம‌ன‌சுக்குள் ஓடி கொண்டு இருப்ப‌து எங்க‌ளுக்கு த‌லைவ‌ரின் த‌லைமையில் த‌மிழீழ‌ம் எப்ப‌வோ அமைந்து இருந்தால் நாம் ஏன் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பின் தொட‌ர‌ போகிறோம் , எங்க‌ட‌ நாட்டை அபிவிரித்தி செய்வ‌தில் தான் எங்க‌ளின் க‌வ‌ண‌ம் இருந்து இருக்கும் 🤞🙏💪

பையா, கெட்டிக்காரன் புழுகு எட்டு நாளைக்கு.

இவர் நிணைத்தது சரியாக இருந்திருந்தால், குறைந்தது, கோவை மாவட்ட கட்சிகாரர்களாவது, அவருடன் விலகி இருகக வேண்டும்.

எம்ஜியார், வைக்கோ போகும் போதே, ஒரு படையே விலகி சென்றது.

எம்ஜியாரை எதிர்த்து விலகி, எஸ் டீ சோமசுந்தரம் தனிக்கட்சி தொடங்கி, நொந்தது போய், எம்ஜியார் இடமே போனார்.

வைக்கோ இப்ப எங்க?

இன்னும் ஒருவாரத்தில் இவர் ஓய்வு நிலைக்கு போவார். சீண்டுவார் இல்லாமல், புண்ணை சொறிவார். இறுதியில் வேறு கட்சிக்கு தாவுவார்.

இவர் வாய் பேச்சுக்காரர். ஒரு கட்சி நடத்தும் ஆளுமை இல்லாதவர்.

வீடியோ இலட்சுமி போல, பயணியோட காலம் போகும்.

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

large_NTK.jpg.3c0c199bd6b68f20ec4f176880f9c825.jpg

24.56 + 27.63 = 52.19%

பாதிப்பு இல்லை என்கிறார்கள்.

இது எந்த‌ ஊட‌க‌த்தில் ந‌ட‌த்தின‌ வாக்கெடுப்பு ,


பாதிப்பு இல்லை அதை என்னால் சொல்ல‌ முடியும் ஆனால் தேவை இல்லா பிர‌ச்ச‌னைக‌ளை ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் உருவாக்க‌ பார்க்கிறார் , 

தேர்த‌ல் ப‌ணிக‌ள் இப்ப‌வே தொட‌ங்கியாச்சு , க‌ட்சியில் இருப்ப‌வ‌ர்க‌ள் அதி வேக‌மாய் க‌ட்சி வேலைக‌ள் செய்வ‌து  தெரியுது , 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

இது எந்த‌ ஊட‌க‌த்தில் ந‌ட‌த்தின‌ வாக்கெடுப்பு ,


பாதிப்பு இல்லை அதை என்னால் சொல்ல‌ முடியும் ஆனால் தேவை இல்லா பிர‌ச்ச‌னைக‌ளை ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் உருவாக்க‌ பார்க்கிறார் , 

தேர்த‌ல் ப‌ணிக‌ள் இப்ப‌வே தொட‌ங்கியாச்சு , க‌ட்சியில் இருப்ப‌வ‌ர்க‌ள் அதி வேக‌மாய் க‌ட்சி வேலைக‌ள் செய்வ‌து  தெரியுது , 

thatstamil.com

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

thatstamil.com

தான் எதிர் பார்த்தது நடக்காததால், குட்டி, குட்டி சனலுக்கெல்லாம் பேட்டி குடுக்கிறார்.

 

ஆனால் இவர் யாராலோ இயக்கப்படுகிறார் என சந்தேகம் உறுதியாகிறது.

 

அதேவேளை ராஜிவ் காந்தி அமைதியாக இருக்கிறார்.

 

மீண்டும் கட்சியினுள் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

பையா, கெட்டிக்காரன் புழுகு எட்டு நாளைக்கு.

இவர் நிணைத்தது சரியாக இருந்திருந்தால், குறைந்தது, கோவை மாவட்ட கட்சிகாரர்களாவது, அவருடன் விலகி இருகக வேண்டும்.

எம்ஜியார், வைக்கோ போகும் போதே, ஒரு படையே விலகி சென்றது.

எம்ஜியாரை எதிர்த்து விலகி, எஸ் டீ சோமசுந்தரம் தனிக்கட்சி தொடங்கி, நொந்தது போய், எம்ஜியார் இடமே போனார்.

வைக்கோ இப்ப எங்க?

இன்னும் ஒருவாரத்தில் இவர் ஓய்வு நிலைக்கு போவார். சீண்டுவார் இல்லாமல், புண்ணை சொறிவார். இறுதியில் வேறு கட்சிக்கு தாவுவார்.

இவர் வாய் பேச்சுக்காரர். ஒரு கட்சி நடத்தும் ஆளுமை இல்லாதவர்.

வீடியோ இலட்சுமி போல, பயணியோட காலம் போகும்.

 

இவ‌ர் ப‌ய‌ந்தான் பீச்சாங் கோழி நாதா ,

இவ‌ரின் முத‌லாவ‌து பொய் சிறு வ‌ய‌தில் தேர்த‌லில் ஓட்டு போட்ட‌து /

இர‌ண்டாவ‌து பொய் , தான் சுந்த‌ர‌வ‌ள்ளியை இதுவ‌ரை நேரில் பார்த‌து இல்லையாம் ஆனால் சுந்த‌ர‌வ‌ள்ளி சொல்லுது க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் த‌ன்னை க‌ண்டால் கை எடுத்து கும்பிடுவாராம் ,

மூன்றாவ‌து பொய் நாதா , இவ‌ர் கூலிக்கு மார் அடிப்ப‌வ‌ர் கிடையாதான் ஆனால் க‌ட்சி பொது கூட்ட‌ங்க‌ளில் பேசுவில் 10000ஆயிர‌ம் ரூபாய் குடுக்க‌னும் என்று என‌து ந‌ண்ப‌ன் தொட்டு ப‌ல‌ரும் சொல்லின‌ம் , 


நான்காவ‌து பொய் ஊட‌க‌ங்க‌ளில் தான் நேர்மையான‌வ‌ன் போல் காட்டி கொள்ளுகிறார் , ஆனால் இவ‌ர் ஓட‌ ப‌ய‌ணித்த‌வ‌ர்க‌ள் இவ‌ர் வைத்து ந‌ட‌த்தும் ப‌யணி யூடுப் ச‌ண‌லில் என் கூட‌ விவாதிக்கிற‌துக்கு க‌ல்யாண‌சுந்த‌ர‌த்துக்கு துணிவு இருக்கா என்று க‌ட்சி தொண்ட‌ர் கேக்கிறார் அத‌ற்கு ப‌தில் அளிக்காம‌ மூடிட்டு இருக்கிறார் ,

இவ‌ரின் பேச்சை பார்க்க‌ புது க‌ட்சி ஆர‌ம்பிப்பார் போல் தான் தெரியுது , 

இவ‌ரும் குள்ள‌ ந‌ரி என்ப‌த‌ நிருபித்து கொண்டு இருக்கிறார் , 

கால‌ப் போக்கில் இவ‌ர் காணாம‌ல் போவ‌து உறுதி இவ‌ரிட‌ம் போராடும் குன‌ம் துப்ப‌ர‌வாய் இல்லை , 

சில்ல‌ரைக‌ளில் இவ‌ரும் ஒருத‌ர் 😁

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

தான் எதிர் பார்த்தது நடக்காததால், குட்டி, குட்டி சனலுக்கெல்லாம் பேட்டி குடுக்கிறார்.

 

ஆனால் இவர் யாராலோ இயக்கப்படுகிறார் என சந்தேகம் உறுதியாகிறது.

 

அதேவேளை ராஜிவ் காந்தி அமைதியாக இருக்கிறார்.

 

மீண்டும் கட்சியினுள் வரலாம்.

இவ‌ரை பின்னுக்கு இருந்து ஒருசில‌ காங் இவ‌ர‌ இய‌க்கின‌ம் ,  

இவ‌ர் தொட‌ர்ந்து ஊட‌க‌ங்க‌ளுக்கு பேட்டி குடுக்க‌ தான் ப‌ல‌ருக்கு இவ‌ர் மேல் ச‌ந்தேக‌ம் வ‌ர‌ தொட‌ங்கின‌து /

இவ‌ரின் 11வ‌ருட‌ இள‌மைக் கால‌ம் போச்சு என்று முட்டை க‌ண்ணீர் வ‌டிக்குது , ஈழ‌த்தில் 20000ஆயிர‌த்துக்கு மேல் ப‌ட்ட‌ மாவீர‌ர்க‌ள் த‌ங்க‌ளின் உயிரையே தியாக‌ம் செய்த‌வ‌ர்க‌ள் ,  

இன‌ அழிப்பில் உருவான‌ க‌ட்சி மாவீர‌ர்க‌ள் மீது உறுதிமொழி எடுத்து விட்டு தான் பொதுக் கூட்ட‌ங்க‌ளில் க‌ட்சியில் இருப்ப‌வ‌ர்க‌ள் பேசுவார்க‌ள் , அப்ப‌டி ப‌ட்ட‌ க‌ட்சியில் இருந்து கொஞ்ச‌ம் பிர‌ம‌ப‌ல‌ம் ஆகி விட்டு த‌ன‌து 11வ‌ருட‌ இள‌மைக் கால‌ம் போச்சுதாம் , இத‌ சொல்ல‌ இவ‌ருனுக்கு நாக்கு கூச‌லையா ,
 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Nathamuni said:

thatstamil.com

இந்த‌ ஊட‌க‌த்துக்கை போய் ப‌ல‌ரும் க‌ல் எறிந்து போட்டு வ‌ருவாங்க‌ள் நாதா , இதை நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் க‌ல்யாண‌சுந்த‌ர‌த்துக்கு ஆத‌ர‌வு கொடுப்ப‌வ‌ர்க‌ள் ம‌ற்ற‌ க‌ட்சியை சேர்ந்த‌வ‌ர்க‌ள் கூடுத‌லா , ச‌ரி இதில் போய் இன்னும் கூட‌ குழ‌ப்ப‌த்தை உண்டு ப‌ண்ணி விடுவோம் என்று பாதிப்பு வ‌ட்டின‌ கிளிக் செய்து விட்டு வ‌ருவாங்க‌ள் ,  இப்ப‌ கொஞ்ச‌ நாளாக‌ திராவிட‌ க‌ட்சியை சேர்ந்த‌வ‌ர்க‌ள் தான் க‌ல்யாண‌சுந்த‌ர‌த்துக்கு முட்டுகொடுக்கின‌ம் , 
நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கும் சில‌ர் புரித‌ல் இல்லாம‌ க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் சொல்லுவ‌து உண்மையா இருக்குமோ என்று குழ‌ம்பி போய் இருக்கின‌ம் , 

ஜீவ‌ன் மாதிரி என்னால் முக‌ம் காட்டி யூடுப்பில் பேச‌ முடியாது , ஜீவ‌ன் க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தின் உண்மை முக‌த்தை ப‌ல‌ருக்கு வெளி கொண்டு வ‌ந்து விட்டார் ஆனாலும் அண்ண‌ன் சீமானின் பேச்சுக்கு ம‌திப் அளித்து கொஞ்ச‌ம் பொறுமையை க‌டை பிடிக்கிறார் ,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, பையன்26 said:

க‌ல்யாண‌சுந்த‌ர‌த்துக்கு ஆத‌ர‌வு கொடுப்ப‌வ‌ர்க‌ள் ம‌ற்ற‌ க‌ட்சியை சேர்ந்த‌வ‌ர்க‌ள்

அப்பன் ஏன் கன தூரம் போவான். இஞ்சை யாழ்களத்திலையே நாம் தமிழர் கட்சி எண்டால் ஒவ்வாமை மாதிரி திரிஞ்ச மகான்களெல்லாம் கல்யாண சுந்தரத்துக்கும் ராஜீவுக்கும் ஆதரவு குடுக்கினம் எண்டால் எப்பிடிப்பட்ட ஆக்களெண்டு ஒருக்கால் யோசிச்சு பாருங்கோவன்.

நாங்களெல்லாம் நாம் தமிழர் கொள்கைகளுக்கு ஆதரவழிக்கின்றோமே தவிர கட்சியில் இருக்கும் முகங்களை அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

அப்பன் ஏன் கன தூரம் போவான். இஞ்சை யாழ்களத்திலையே நாம் தமிழர் கட்சி எண்டால் ஒவ்வாமை மாதிரி திரிஞ்ச மகான்களெல்லாம் கல்யாண சுந்தரத்துக்கும் ராஜீவுக்கும் ஆதரவு குடுக்கினம் எண்டால் எப்பிடிப்பட்ட ஆக்களெண்டு ஒருக்கால் யோசிச்சு பாருங்கோவன்.

நாங்களெல்லாம் நாம் தமிழர் கொள்கைகளுக்கு ஆதரவழிக்கின்றோமே தவிர கட்சியில் இருக்கும் முகங்களை அல்ல.

கலியாணசுந்தரம் இன்னும் ஒரு கிழமைக்கு பிறகு தூங்கு நிலைக்கு சென்று விடுவார். இவர் அநேகமாக வாயை வாடகைக்கு விட்டு பிழைக்கும் நபராகவே இருப்பார்

  • கருத்துக்கள உறவுகள்

திடீர்னு இவர்கள் ஏன் விலகணும்.. "அவங்க"தான் காரணமோ.. விலகலால் பலவீனமாகுமா நாம் தமிழர்?

தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் 2 முக்கிய புள்ளிகள் நாம் தமிழர் கட்சியில் இருந்து தடாலடியாக விலகி இருக்கிறார்கள் என்றால் என்ன காரணம்? ஒருவேளை அவங்கதான் காரணமா? இவர்கள் விலகலால் கட்சிக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? என்ற சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் கல்யாண சுந்தரம்... இவர் கொஞ்ச நாளாகவே கட்சிக்கு எதிரான கருத்துக்களை சொல்லி வந்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.. ஆனால் தன் மீதான புகாருக்கு கல்யாணம் சுந்தரம் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த சமயத்தில்தான், சீமான் ஒரு பேட்டியில் கல்யாணம் சுந்தரம் குறித்த தனது ஆதங்கத்தையும் மிக வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.. "கட்சிக்கு வேலை செய்யாமல், கட்சிக்குள் தனக்கென வேலை செய்கிறார்.. சொந்த பிள்ளைகள் போன்று வளர்த்தவர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருந்ததில்லை... எனக்கும் விசுவாசமாக இருந்ததில்லை.. யாராலும் கட்சியை உடைக்க முடியாது என் சாவை தான் அவங்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் " என்றார்.

அறிவிப்பு

இதையடுத்துதான், கட்சியில் இருந்து விலகுவதாக கல்யாண சுந்தரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.. சீமானுக்கு லெட்டரும் எழுதினார். சீமான் பேசியதும், கல்யாண சுந்தரம் விலகியதும் மிகப்பெரிய சலசலப்பை அரசியல் களத்தில் ஏற்படுத்தி விட்டது.. அதேபோல, ராஜீவ் காந்தியும் விலகி உள்ளார்.. கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் ராஜீவ் காந்தி... இப்போது 2 பெரும் புள்ளிகளின் விலகல் அக்கட்சிக்கு பாதிப்பை தருமா என்பதுதான் நம்முடைய சந்தேகம்.

வாசகர்கள்

அதனால் இதுகுறித்து ஒரு கருத்து கணிப்பினை வாசகர்களிடம் நடத்தினோம்.. "கல்யாண சுந்தரம், ராஜீவ் காந்தி விலகலால் நாம் தமிழர் கட்சிக்கு பாதிப்பு வருமா?" என்று கேள்வி கேட்கப்பட்டது. "வாய்ப்பில்லை ராஜா" 24.29 சதவீதமும், "நிச்சயம் வரும்" என்று 37.03 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். "யார் அவங்க?" என்ற ஆப்ஷனுக்கு 28.27 சதவீதம் பேரும், "பொறுத்திருந்து பார்ப்போம்" என்ற ஆப்ஷனுக்கு 19.41 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

பேட்டிகள்

இந்த வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை "நிச்சயம் பாதிப்பு வரும்" என்று 37.03 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.. இதற்கு காரணம், பெரும்பாலும் இந்த கட்சி குறித்து எந்த மைனஸ் சமாச்சாரமும் வெளியே வந்ததில்லை.. நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என்று யாரும் சர்ச்சைகளில், குண்டக்க மண்டக்க பேட்டிகளில் சிக்கியது இல்லை.. சோஷியல் மீடியாவில் சுத்தி சுத்தி சீமானையே விமர்சிப்பார்களே தவிர, கட்சி நபர்கள் பற்றின செய்திகள், வதந்திகள் வெளிவந்தது இல்லை.

கம்யூனிஸ்ட் கல்யாண சுந்தரம்தான் பிரகாசமாக தெரிந்த முதல் நபர்.. அடிப்படையில் இவர் ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்தவர்.. பிறகுதான் நாம் தமிழர் கட்சியின் மிக முக்கியமானவர்.. கிட்டத்தட்ட 11 வருடம் சீமானுடன் பயணித்து வந்துள்ளார்.. இவரது பல பேச்சுக்களும், பேட்டிகளும் இணையவாசிகளை பெரிதும் கவர்ந்து வருபவை.. அதேபோல, டிவி விவாதங்களில் கட்சியின் பிரதிநிதியாக கலந்து கொண்டு லெப்ட் & ரைட் வாங்குவது ராஜீவ்காந்திதான்.

திமுக

எந்த தேர்தலாக இருந்தாலும் இவர்களின் பங்களிப்பு பெரிதாகவே இருக்கும்.. வரப்போகிற தேர்தலிலும் பலம்பொருந்திய அதிமுக, திமுகவை வீழ்த்த அல்லது வாக்குகளை சிதறடிக்க இவர்களின் பேச்சுக்களே பிரதான மூலதனமாக இருக்கும் என்று நினைத்திருந்த நேரத்தில் மூவருக்குள் ஏற்பட்ட உரசலால் 2 பேரும் விலகியுள்ளனர்.

யார் காரணம்?

தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் இவர்களைப் போன்ற சிறந்த பேச்சாளர்கள், செயல்பாட்டாளர்கள் இருந்து விலகுவது கட்சிக்கு மைனஸ் என்பதைதான் இந்த வாக்கு சதவீதம் பிரதிபலிக்கிறது.. இதற்கு அடுத்தாற்போல், "வாய்ப்பில்லை ராஜா" என்ற ஆப்ஷனுக்கு 24.29 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.. இவர்கள் முழுக்க முழுக்க சீமானை மட்டுமே நம்புவர்கள் போல தெரிகிறது.. "நாங்கள் சீமானின் தம்பிகள்" என்று மார்தட்டி சொல்வது போலவும் நம்பிக்கையுடன் வாக்கை பதிவு செய்துள்ளனர்.

கோட்டை

இந்த நிலையில்தான் இந்த இருவரின் விலகல் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இருப்பினும் நாம் தமிழர் கட்சி சீமான் என்ற பலமான அஸ்திவாரத்தின் மீது எழும்பி நிற்கும் கட்டடம் என்பதால் அந்தக் கோட்டையைக் கலகலக்க வைப்பது சாமானியமானதல்ல என்பதையும் மறுப்பதற்கில்லை.

கோட்டை

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/will-naam-tamilar-katchi-weaken-by-the-resigning-of-2-key-persons/articlecontent-pf486714-397554.html?utm_source=vuukle&utm_medium=talk_of_town

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குணமும், போராட்ட உணர்வும் மரபியல் குணங்களாக வாய்க்கப்பெற்ற தமிழ்ப்பிள்ளைகள் இச்சூழலையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள முன்வர வேண்டும்! – நாம் தமிழர் மாணவர் பாசறை அறிக்கை

போர்க்குணமும், போராட்ட உணர்வும் மரபியல் குணங்களாக வாய்க்கப்பெற்ற தமிழ்ப்பிள்ளைகள் இச்சூழலையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள முன்வர வேண்டும்! – நாம் தமிழர் மாணவர் பாசறை அறிக்கை

‘நீட்’ தேர்வின் மூலம் விளைந்த மனநெருக்கடியினால் அடுத்தடுத்து மாணவப் பிள்ளைகள் தற்கொலை செய்துகொள்கிற செய்தி நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரே நாளில் மூன்று இளந்தளிர்கள் தங்களுயிரை மாய்த்துக்கொண்டு சாகிற அளவுக்கு ‘நீட்’ தேர்வு மாணவர்களின் மருத்துவக் கனவைக் கருக்கி, உயிரைக் குடிக்கும் கொலைக்கருவியாக மாறியிருப்பதைக் கண்கூடாக உணர்ந்தும் அலட்சியப்போக்கோடு அரசுகள் நடந்துகொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஏழைகளுக்கு எட்டாக்கனியாக மருத்துவப்படிப்பை மாற்றி, மருத்துவத்தை சேவைக் கண்கொண்டு பார்க்கிற மனநிலையைத் தகர்த்து வணிகமாக்கி, இலாபமீட்ட முயலும் ஆளும் வர்க்கத்தின் சதிச்செயலே ‘நீட்’ தேர்வு என்பதைத் தெளிவுபட உணர்ந்து, அதற்கெதிராக மாணவர்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தி, அத்தேர்வு முறையை அகற்றக்கோரி இன்றளவிலும் போராடி வரும் நிலையிலும் மத்திய, மாநில அரசுகள் ஆழ்ந்த அமைதி கொள்வது மிகப்பெரும் அரசப்பயங்கரவாதமாகும்.

கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கும்போதும் அதனைத் தனதாக்கிக் கொண்டு, அதில் ஆதிக்கம் செலுத்துவதும், மாநிலங்களின் கல்வியுரிமையைப் பறிப்பதும், ஒற்றைமயப்படுத்தித் தேர்வு முறைகளைப் புகுத்துவதுமான மத்தியில் ஆளும் பாஜக அரசின் தொடர் மக்கள் விரோதச் செயல்பாடுகள் யாவும் சனநாயகத்தைச் சிதைக்கும் எதேச்சதிகாரப்போக்காகும். தமிழக மக்கள் ‘நீட்’ தேர்வுக்கெதிராக ஒருமித்துக் குரலெழுப்பிய நிலையில் விளைந்த அரசியல் நெருக்கடி காரணமாக, ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து மூன்று ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் தர மறுத்து வருவது தமிழர்களுக்கு இழைக்கப்படும் பச்சைத்துரோகமாகும்.

கல்வி என்பது மாணவர்களுக்குள் பொதிந்துக் கிடக்கும் தனித்திறனை வெளிக்காட்டி, அதனை மேம்படுத்தி வளர்த்து வார்த்தெடுத்து, வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான முதிர்ச்சியையும், மனவுறுதியையும், தன்னம்பிக்கையையும் ஊட்டுவதாக அமைய வேண்டும். கல்விக்கூடங்கள் என்பவை மாணவர்களுக்கு உற்சாகமும், உத்வேகமும் அளிக்கக்கூடிய உளவியல் பயிற்சிக்கூடங்களாக அமைய வேண்டும். தேர்வு முறைகள் என்பவை மாணவர்கள் தாங்கள் கற்றவற்றை, தாங்களே அளவிடுவதற்கான கருவியாக அமைய வேண்டும். ஆனால், இன்றைய கல்வி முறையும், கல்விக்கூடங்களும், தேர்வு முறைகளும் முழுக்க முழுக்க வணிகமயமாக்கப்பட்டு, பணம் ஈட்டுவதையே நோக்கமாகக் கொண்டு மாணவர்களின் உளவியலைச் சிதைத்து, மனநெருக்கடிக்குள் தள்ளி அவர்களைச் சாகடித்து வருவது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.

ஒரே நாளில் ஜோதிஸ்ரீ துர்கா, ஆதித்யா, மோதிலால் என மூவர் நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்டிருப்பது தமிழ்ப் பேரினத்திற்கே ஏற்பட்ட கொடும் இழப்பாகும். ‘நீட்’ தேர்வினால் ஏற்பட்டுள்ள இந்நெருக்கடியான காலக்கட்டத்தில் மாணவச் செல்வங்கள் தன்னம்பிக்கையோடும், மனவுறுதியோடும் இருக்க வேண்டும். எச்சூழலிலும் நம்பிக்கையை இழக்காது அயர்ச்சிக்கும், தற்சோர்வுக்கும் ஆட்படாது போராடி வெற்றிபெறும் உத்வேகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். போர்க்குணமும், போராட்ட உணர்வும், வீரவுணர்ச்சியும், விவேகத்தோடு இயங்கும் ஆற்றலும் மரபியல் குணங்களாக வாய்க்கப்பெற்ற தமிழ்ப்பிள்ளைகள் மனம்தளராது இச்சூழலையும் எதிர்த்துப் போராட முன்வர வேண்டும். நாளைய உலகைப் படைக்கக் காத்திருக்கும் நவயுகச் சிற்பிகளான மாணவத் தம்பி, தங்கைகள் தன்னம்பிக்கையோடு இத்தருணத்தை எதிர்கொள்ள வேண்டும் என அன்புரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

‘நீட்’ தேர்வு எனும் மாணவர்களின் கனவைப் பொசுக்கும் சமூக அநீதிக்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் தலையாயக் கடமையாகும். ஆகவே, நமது மாணவப் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக, நலவாழ்வுக்காக, கல்வியுரிமைக்காக அநீதிக்கெதிராகக் கருத்தியல் பரப்புரையும், களப்போராட்டமும் செய்து சனநாயகப்போர் புரிய வேண்டுமென அறைகூவல் விடுக்கிறோம்.

 

இடும்பாவனம் கார்த்திக்

மாணவர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர்

 

naam-tamilar-students-wing-idumbavanam-karthick-statement-against-neet.jpg

naam-tamilar-students-wing-idumbavanam-karthick-statement-against-neet-2020.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி பல்வேறு மாவட்டங்களில் களத்தில் தம்பிகள் தங்கைகள் களப்பணி

 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது தாக்குதல்

 

களத்தில் நிற்பவனே உண்மையான போராளி / என்றும் மக்கள் களத்தில் சீமான் 

 

  • கருத்துக்கள உறவுகள்

எவன் போனாலும் போடா நான் இருக்கேன் டா சீமான் கூட முழங்கிய பாரதிராஜா

 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி | பனை விதை நடும் விழா | திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி | சிவகங்கை மாவட்டம்

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனிசம் - சீமானிசம் இரண்டும் யாதெனில் ? | முனைவர். செந்தில்நாதன் | Tamizham

பிரபாகரன் என்ற பெருந்தலைவர் அந்த நிலத்தில் வாழ்ந்த மக்களை சிங்கள இனவெறி தொடுத்த தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றிய இறைவனாக எங்கள் தலைவர் பிரபாகரனின் மக்கள் காப்பு அணுகுமுறை பிரபாகரனிசம்.

அந்த மாபெரும் தலைவனை பின்தொடர்ந்து தமிழ் நிலத்தில் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கான அரசியல் போரை தொடுத்து வரும் நாம்தமிழர் கட்சியை உருவாக்கி கொள்கையை வகுத்து வரும் அண்ணன் சீமான் அவர்களின் கொள்கை சீமானிசம்.

பிரபாகரனிசம் என்பது ஆலமரம் சீமனிசம் என்பது அதன் விழுது 

பிரபாகரனிசம் என்பது சூரியன் சீமனிசம் என்பது சூரியனில் இருந்து ஒளிபெறும் நிலவு.

 

  • கருத்துக்கள உறவுகள்

சூர்யாவை புகழ்ந்து தள்ளிய சீமான்

 

 

திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் நாயகன் தான் தம்பி சூர்யா | சீமான்

 

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் சீமான் 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் நாயகன் தான் தம்பி சூர்யா | சீமான்

வெகுவிரைவில் சூரியாவை தேர்தல்களில் காணலாம்.
எந்தக்கட்சியில் இணைகிறாரோ?

யார் தமிழர் என்று எப்படி கண்டு பிடிப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சொல்லும் போது சிரிச்சான் இப்போ நடக்குது

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வித பின்னடைவும் கட்சிக்கு கிடையாது!யார் வெளியேறினாலும் சரி!-திருச்சி வினோத்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.