Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தந்தையுமானவன்.....!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையுமானவன்.....!

அன்று நல்ல முகூர்த்தநாளாக இருக்க வேண்டும். சந்நதி முருகன் ஆலயத்தில் வள்ளி அம்மன் ஆலய முன்றலில் அன்று இருபது திருமணங்கள் வரை நடந்தன.எதிர்பாராமல் அவசரம் அவசரமாக இருபத்தியொராவது திருமணமாக கதிர்வேலுக்கும் வசந்திக்கும் திருமணம் நடக்கின்றது. விதி மிகவும் விசித்திரமானது.

அன்று காலை சுன்னாகத்தில் ஒரு பனங்கூடலுக்குள் மென்பந்தில் நண்பர்களுடன் கிரிக்கட் விளையாடும் போதோ அல்லது மத்தியானம் அம்மா திட்டிக் கொண்டு சாப்பாடு போடும்போதோ ( இது அம்மாவின் டெக்னிக்,தான் திட்டாது விட்டால்,அப்பா ஆரம்பித்து அவன் சாப்பிடாமல் வெளியே போய்விடுவான்). அதனால் அம்மா முந்திக் கொண்டு அவனைப் பேசிக்கொண்டு தாராளமாய் சாப்பாடு போடுவாள். அவர்களுக்கு தெரியாது அன்று அங்கு கதிர்வேலுக்கு கல்யாணம் நடக்குமென்று.

அப்போது சயிக்கிளில் ஓடியபடியே படலையை திறந்து கொண்டு கார்த்திக் வந்து இறங்குகின்றான். கையில் ஒரு போத்தலில் காய்ச்சலுக்கு கட்டயடி ஆஸ்பத்திரியில் வாங்கிய கலர் மருந்து இருக்குது.அம்மா கேட்க்கிறாள், என்னடா வடிவாய் சொல்லி மருந்து மாத்திரை வாங்கினியா. ஓமனை, யூரின் டெஸ்ட் பண்ண வேணும் என்று சொன்னவை. நாளைக்கு காலைமை வாறன் என்று சொல்லிட்டு வந்தனான். கிடாய்க்கு புண்ணாக்கு தீத்திக் கொண்டிருந்த அப்பா, அதென்னடி பிள்ளை யூரினாம் என்று பக்கத்தில் குலை கட்டிக் கொண்டிருந்த மூத்தவள் தேன்மொழியிடம் கேட்க அவளும் அது ஐயா சோதிக்கிறதுக்காக மூத்திரம் கேட்டிருக்கினம். உடனே மகனிடம் குறுக்கிட்டு... ஏண்டா அத அங்கன பேஞ்சு குடுத்திட்டு வாரத விட்டிட்டு இஞ்சை என்ன அலுமாரிக்கை கிடக்கெண்டு எடுத்துக் கொண்டு போக வந்தனியே...! அவனுக்கு முகம் உர் என்று வருகுது. அம்மா உடனே ஏன்டா அவர் கேட்கிறதில என்ன தப்பு. எனை நீயும் சேர்ந்து விசர்க்கத கதையாதையனை. அதுக்கு விடிய வெறும் வயித்தோடதான் போய்க் குடுக்க வேண்டும். அதுதானே பார்த்தேன் நீ விடிய காய்சசாலோட பழஞ்சோறையும் சாப்பிடேக்கை நினைச்சனான். தங்கை சௌம்யா மெதுவாய் சிரிக்கிறாள். உரத்து சிரித்தால் குட்டு விழும் என்று அவளுக்கு தெரியும்.

வருவார்.....!    

  • Replies 68
  • Views 12k
  • Created
  • Last Reply
On 14.7.2017 at 9:14 PM, suvy said:

தந்தையுமானவன்.....!

 

வருவார்.....!    

எப்ப இனி..:unsure: தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நவீனன் said:

எப்ப இனி..:unsure: தொடருங்கள்

பொறுத்தருள்வீர்கள் வாசகர்காள்....! கடந்த நான்கு நாட்களாக ஒரு பூ புனிதநீராட்டுவிழா, ஒரு பிறந்தநாள் விழா, ஒரு 31ம் நாள் விழா, போன்ற விழாக்களில் நாங்கள் வீழ்ந்து கிடந்தது விழாமல் எழுந்து வந்ததால் இன்று ஆடிப்பிறப்பில் ஆடிக் கொண்டிருக்கிறோம்.(மூன்றுநாள் வீட்டில் குசினி குளோஸ்). அடுத்த தொடர்சிக்கான குறிப்புகள் தயார் நிலையில் இருப்பதால் அவர் கெதியாய் வருவார்......!  tw_blush:

Edited by suvy
எழுத்து பிழை...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதிர்வேலு "விளையும் பயிரை முளையிலே தெரியும்" என்பதற்கேற்ப சிறுவயது முதலே துறு துறு என்று இருப்பான். குரும்பையில் தேர் கட்டி இழுத்து, பாம்பனில் இருந்து பிரான்தன் வரை பட்டங்கள் நுணுக்கமாய் கட்டி,சயிக்கிளில் சாகசம் செய்து, மோட்டாரில் வித்தைகள் செய்தெ வளர்ந்தான்.சமீபகாலத்தில் தொழில்நுட்பக் கல்லூரிக் கண்காட்சியில் அவன் தனியாகவும், குழுவாகவும் செய்த சில உபகரணங்கள் ஆசிரியர்களாலும், பார்வையாளர்களாலும் வெகுவாகப் பாராட்டி பரிசில்களும் கொடுக்கப் பட்டன. அங்கு வருகை தந்திருந்த ஒரு பெரிய கம்பெனியின் உயரதிகாரி ஒருவர் தனது சக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அவனுக்கு தங்களது கம்பெனியில் வேலை போட்டுத் தருவதாக கூறியிருந்தார். அதன்படி சிலநாட்களுக்கு முன்பு கணனி வீடியோ மூலம் அவனுக்கு இண்டர்வியூ நடாத்தியிருந்தார்கள். இன்று அவனது மெயிலில் ஒரு நல்ல சம்பளத்துடன் வேலை தருவதாகவும் வரும் திங்கட் கிழமை காலை 09:00 மணிக்கு அலுவலகம் வந்து பொறுப்பேற்க வேண்டும் என்றும் தகவல் வந்திருந்தது. 

இந்த நல்ல செய்தியை கதிர் வீட்டில் சொன்னதும் எல்லோருமே மிகவும் சந்தோசப் பட்டார்கள்.கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு தம்மையுமறியாமல் மரியாதை தரத் தொடங்கியிருந்தார்கள். மதியம் சாப்பிட்டு எல்லோரும் ஓய்வாக முற்றத்தில் இருந்து கதைக்கும் பொழுது தமக்கை தேன்மொழி தாயிடம் அம்மா, தம்பிக்கு தொடக்க சம்பளமே என்பதினாயிரம் ருபாய்யம்மா.அவள் முருகனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்று நேர்ந்து கொள்கிறாள். அதுமட்டுமல்ல பலவிதமான அலவன்ஸ், தங்குவதற்கு குவாட்டர்ஸ் எல்லாம் குடுக்கினமாம்.அப்பா ராஜசேகரம் ஏதோ வேலை செய்வதுபோல் இருந்தாலும் இவர்களின் பேச்சுகளை காது கொடுத்து கேட்டுக் கொண்டிருந்தார்.சௌம்யாவும் கார்த்தியும் நிலத்தில் கோடு கீறி  பசுவும் புலியும் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.சௌம்யா அளாப்பி அளாப்பி அவனைத் தோற்கடித்துக் கொண்டிருக்கிறாள்.

இந்நேரத்தில் வாசலில் புழுதிமண் பறக்க ஒரு கார் வந்து நிக்கிறது. அதிலிருந்து நான்கு ஆண்களும் மூன்று பெண்களுமாக ஏழு பேர் இறங்கி பாடலை திறந்து கொண்டு பதற்றமாக வருகின்றனர். வந்தவர்களில் ராஜசேகரத்துக்கு நன்றாகத் தெரிந்தவர்களும் நண்பர்களுமான இருவர் அவரைத் தனியாக கூட்டிக்கொண்டு போய் தனியாகக் கதைக்கின்றனர்.சற்று நேரத்தில் வந்த மற்றவர்களும் சேர அம்மா பார்வதியையும் அழைத்து கதைக்கின்றனர்.பின்னால் இன்னுமொரு காரும் வந்து நிக்க , அம்மாவும் அப்பாவும் அங்கு போய் காரினுள் பார்க்கிறார்கள். பின் இருக்கையில் ஒரு பெண் மணப்பெண் கோலத்தில் கண்ணீரும் கம்பலையுமாய்  உட்க்கார்ந்திருக்க பக்கத்தில் இரண்டு பெண்கள் அவர்களும் சோகமாய் இருக்கினம். சிறிது நேரத்தில் அம்மா வந்து கதிரைப் பார்த்து இஞ்சை ஒருக்கால் வா தம்பி என்று அவனைக் வீட்டுக்குள் கூட்டிக் கொண்டுபோய் அவனிடம், தம்பி கேட்க்கிறேன் என்று குறை நினைக்காதையனை நீ யாரையாவது விரும்பிறியோடா ..., என்ன கதையம்மா கதைக்கிறாய்.அப்படி ஒன்றும் இல்லையனை. எனக்கு இப்பதான் வேலை கிடைத்திருக்கு, நான் வேலைக்கு போகணும், அப்பாவும் பாவம் எவ்வளவு நாள்தான் கஸ்டப் படுவார். முதல்ல அக்காவுக்கு கலியாணம் கட்டி வைக்கவேணும்.என்று சொல்கிறான்.(மனதுக்குள் நானா லவ் பண்ண மாட்டன் என்கிறன், ஒன்றும் சரியா செட் ஆகேல்ல. பார்த்த ஒன்றிரண்டும் பாட்டாவை தூக்கி காட்டிட்டு போகுதுகள்). பார்வதிக்கு அவன் சொல்வதை கேட்க வலு சந்தோசமாய் இருக்கு. என்ரை வளர்ப்பு சோடை போகேல்ல பிள்ளை எவ்வளவு பொறுப்பாய் கதைக்கிறான்.

இல்லடா கதிர் ஒரு நல்ல சம்பந்தம் வந்திருக்கு.அவையும் எங்கட உறவுகள்தான்.பக்கத்தில மல்லாகத்து ஆட்கள். அப்பா வழி சொந்தம்.அதிகம் புழக்கமில்லாததால விட்டுப் போச்சு. அவர்களின் பெண்ணுக்கு இன்று கலியாணம் நடக்க வேண்டியது , ஏனோ குழம்பிப் போச்சு. பின்புதான் யார் யாரிடமோ விசாரிச்சு எங்களைத் தேடி வந்திருக்கினம். அதுக்கில்லை அம்மா, அக்கா இன்னும் கட்டாமல் இருக்கிறா. அதோட நான் வாறகிழமை வேலைக்கு போறன் என்ட  உடனே அவைக்கு கண் தெரிஞ்ச்சுட்டுதாக்கும். உதை நான் சொல்லாமல் விடுவேனோடா, ஆனால் உனக்கு வேலை கிடைச்சது ஒண்டும் இன்னும் அவைக்குத் தெரியாது. இப்ப தங்கட மானத்தைக் காப்பாத்தினால் போதும் ஏன்டா நிலையில இருக்கினம். அக்காவின்ர கலியாணத்துக்கும் தங்கள் உதவி செய்யிறம் என்று வேறை சொல்லினம். அதோட பெட்டைக்கு ஒரு தங்கைதான், வேற பிள்ளையளும் இல்லை. நிறைய சொத்து பத்தும் இருக்கு. தானா வரேக்க செய்யலாம்தானே என்று கொப்பரும் நினைக்கிறார். அப்போது அங்கு ராஜசேகரமும் வருகிறார். என்னப்பா கதைத்தனியே, உவர் என்ன சொல்லுறார். அவனப்பா ஒருத்தரையும் விரும்பேல்ல. என்ற பிள்ளையெல்லோ. தமக்கையைப் பற்றித்தான் யோசிக்கிறான்....!

வருவார் .....!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவும், பின்ன சரி எல்லோரும் கெதியாய் வெளிக்கிட்டு வாங்கோ, சுன்னாகத்தில் என்ற சிநேகிதன்ர கடையில ஒரு கூறைச்சேலையும் தாலியும் எடுத்துக் கொண்டு போவம்.பிறகு கொடிக்கு மாத்தலாம் என்று சொல்லிய படி ராஜசேகரமும் வேலியால விடுப்பு பார்த்துக் கொண்டிருந்த அயலவர்களையும் அவனது நண்பர்களையும் அழைத்து விஷயத்தை சுருக்கமாகச் சொல்லிவிட்டு, நாங்கள் சந்நிதிக்கு போயிட்டு வாறம் நீங்களும் முடிந்தளவு வீட்டை கொஞ்சம் அழகு படுத்தி விடுங்கோ. ஞ<யிற்று கிழமை எல்லாருக்கும் சொல்லி விருந்து வைக்கிறன் என்று சொல்லி விட்டு பொம்பிளை வீட்டுக்காரர்  இரண்டு காரிலும் இவர்கள் ஒரு காரிலுமாக சுன்னாகத்துக்கு செல்கின்றார்கள்.

ராஜசேகரத்தின் நண்பன் இரத்தினத்தின் கடைக்கு முன்னாள் கார்கள் வந்து நிக்கின்றன. வரும்போதே போனில் தகவல் சொல்லியதால் இரத்தினமும் கடையில் வந்து நின்று எதிர்கொண்டு வரவேற்று உள்ளே அழைத்து போகின்றார். மணப்பெண் வசந்தி காரிலேயே இருந்து கொள்கிறாள். கூறை எடுக்கும்போது மணமகள் வருவது வழக்கமல்ல. அரக்கு கலரில் கூறையும் அதற்கேற்ற ரெடிமேட் பிளவ்ஸும் எடுக்கின்றார்கள்.மாப்பிள்ளைக்கும் வேட்டி சட்டை ,மற்றவர்களுக்கும் ஆடைகள் எல்லாம் எடுக்கின்றார்கள்.

கடை இரத்தினம்: உங்களுக்கு என்ன தாலி வேணும் ராஜு . இரண்டு கொம்பு, மூன்று கொம்பு, பிள்ளையார் தாலி, அம்மன்தாலி எல்லாம் உண்டு.

ராஜசேகர்: இது எதிர்பாராமல் நடக்கும் திருமணம். சாதகப் பொருத்தம் ஒன்றும் பார்க்கேல்ல என்று சொல்ல,பார்வதியும் அதனால அந்த துர்க்கை அம்மனை நினைத்து ஒரு அம்மன் தாலி தாங்கோ என்கிறாள்.

இரத்தினம்: மெத்தச் சரியாய் சொல்லிட்டீங்கள், கொடி எத்தனை பவுனில என்ன மாதிரி கொடி  வேணும்.

ராஜசேகர்: என்னென்ன கொடிகள் இருக்கு.

இரத்தினம்: மின்னல் கொடி, வயிரக்கொடி எல்லாம் இருக்கு.

பார்வதி: வயிரக்கொடி சோர்ந்து வர கனகாலம் செல்லும், மின்னல் கொடி என்றால் இப்பத்தைய பிள்ளைகளுக்கு பரவாயில்ல, சங்கிலி மாதிரிக் கழுத்தில கிடைக்கும்.

இரத்தினம்: முடிச்சுக்குத்தி எப்படி வேணும். இரண்டு கைகள் பிடிக்கிற மாதிரியும் இருக்கு. அதுதான் இப்ப அதிகம் வாங்கிக் கொண்டு போகினம்.

பார்வதி: அது வேண்டாம் அண்ணை, வேதக்காரர் போடுறது. எங்களுக்கு தண்டில பூவும், கொடியும்  சிகப்பு கல்லும் வைத்து சுரை பூட்டுறதாய் தாங்கோ.

இரத்தினம் : நீங்கள் நல்ல விவரமாய்தான் இருக்கிறியள். 

ராஜசேகர்: எல்லாமா தாலியுடன் சேர்த்து ஒரு பதினைந்து பவுன் போதும். பிறகு காசுகள் வளையம் என்று சேர எப்படியும் ஒரு இருபத்தியொரு பவுன் வரும்.

சில நிமிடத்தில் எல்லாவற்றையும் அழகிய பெட்டியில் வைத்து கொண்டுவந்து தருகின்றார் இரத்தினம்.

ராஜசேகரும் இந்தா இரத்தினம் இதில ஐம்பதாயிரம் ரூவா இருக்கு, வார கிழமை வாங்கி திறந்ததும் கணக்கு முடிக்கிறன் என்று சொல்ல சம்பந்தி முத்துலிங்கம் தோற்பையில் இருந்து பணம் எடுத்து இந்தாங்கோ சம்பந்தி இப்ப இதை வைத்து கணக்கை முடியுங்கோ என்று முன்வர ராஜு தடுத்து அது முறையல்ல முத்து இது என் நண்பன்ர கடைதான்,அது மட்டுமல்ல தாலி கூறை எல்லாம் மாப்பிள்ளைதான் எடுக்க வேண்டும். பணம்  இருக்கட்டும் என்று சொல்லி மறுத்து விடுகின்றார்.

ராஜு தந்த பணத்தில் இரத்தினம் ஒரு நூறு ரூபாயை மாட்டும்  எடுத்துக் கொண்டு ராஜு நீ உனது அலுவல்கள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு வசதியான நேரம் வந்து குடுத்தால் போதும் என்று சொல்கின்றார்.

ரொம்ப நன்றிடா ரத்தினம் என்று ராஜு சொல்கிறார்.

முத்துலிங்கமும் பக்கத்தில் இருந்த வீடியோ கடைக்காரரிடம் கதைக்க அவர்களும் ஒரு மோட்டார் சைக்கிளில் கமராக்கள் சகிதம் இவர்களுடன் புறப்பட தயாராகி விட்டனர்.

எல்லோருமாக கார்களிலும் மோட்டார்  சயிக்கிளிலும் சந்நிதி நோக்கி விரைகின்றனர்....!

வருவார் ......!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

:11_blush:  கெதியா  முடித்து வைங்க நல்ல நேரம் முடியப்போதில்லை தம்பி தாலி கட்டியவுடன் :11_blush:

Edited by தனி ஒருவன்

1 hour ago, தனி ஒருவன் said:

:11_blush:  கெதியா  முடித்து வைங்க நல்ல நேரம் முடியப்போதில்லை தம்பி தாலி கட்டியவுடன் :11_blush:

யோவ் அவசரக்குடுக்கை கொஞ்சம் அமத்தி வாசியப்பா :grin:

சுவியர் இப்பதான் பிரான்சுக்கு போயிட்டு வந்திருக்காரு 

பூனைக்குட்டி வெளியில வராமலா போகும் // வெயிட் அப்பா வெயிட் :grin::grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்று கோவிலில் நிறைய சனம் கூடியிருக்கு. சுற்றிவர இருக்கும் அன்னதான மடங்களில் எல்லாம் ஜே...ஜே என்று ஒரே கூட்டமாய் இருக்கு. எல்லோரும் முன்னாலே விநாயகரையும் முருகனையும் வணங்கிவிட்டு வள்ளியம்மன் சந்நிதிக்கு வருகின்றனர். அருகே சிலர் உரு வந்து ஆடிக் கொண்டிருக்கின்றனர். அங்கு இவர்கள் தங்களது முறை வந்ததும் போய் நிக்கின்றனர். கோவில் மேளம் கெட்டிமேளமாய் முழங்க,வீடியோவும் கேமராக்களும் ஒளிர பூசாரியார் அம்மன் பாதத்தில் தாலியை வைத்து பூசை செய்து எடுத்துக் கொடுக்க ராஜசேகர் பார்வதி தம்பதிகளின் சிரேஷ்ட்ட புத்திரன் கதிர்வேலுவுக்கும் முத்துவேலு சிவகாமி தம்பதிகளின் புத்திரி வசந்திக்கும் திருமணம் ஜாம் ஜாம் என்று நடந்தேறுகின்றது.முத்துவேலரும் சிவகாமியும் அம்மன் சந்நிதியில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து குலுங்கி குலுங்கி அழுகின்றனர்.வசந்திக்கு கண்ணீரே வரவில்லை. எல்லாம் வேறு யாருக்கோ நடப்பதுபோல சிலைபோல் பார்த்துக் கொண்டிருக்கிறாள். பார்வதி மட்டும் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அனைத்து எழுப்புகின்றாள். அக்கா இந்த நன்றியை எங்கள் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டம் என்று பார்வதியின் தோளில் சாய்ந்து அழுகின்றாள்.

பின்பு எல்லோரும் ஒருவாறு மனம் சமாதானமடைந்து முருகன் கோயிலை மூன்றுதரமும், அம்மன் கோயிலை அஞ்சு தரமும் சுற்றிக் கும்பிட்டு விட்டு மடத்துக்கு போய் வயிறார சாப்பிடுகின்றார்கள்.வசந்தியும் கதிரும் ஏதோ பெயருக்கு சாப்பிட்டுவிட்டு வருகினம்.வெளியே முத்துவேலரின் சோமசெட் கார் சரங்களாலும் பூக்களாலும் அலங்கரித்தபடி நிக்கின்றது. அதில் மாப்பிள்ளை மணப்பெண்ணுடன் இன்னுமிருவர்தேன்மொழியும் ,சுகந்தியும் பின்னால் ஏறி இருக்க முன்னால் மகேசு( போலீஸ் உத்தியோகத்தில் இருப்பவர், உறவினர்)கார் ஓட்ட அருகே கார்த்திக் இருக்கிறான்.  மற்ற கார்களிலும் எல்லோரும் பங்கிட்டு ஏறியதும் முத்துவேலர் வந்து மகேஷிடம் தம்பி எங்கட கார் முன்னுக்கு போகட்டும், நீ இரண்டாவதாய் வா. பொம்பிளை மாப்பிளைக்கார் முன்னுக்கு போக வேண்டாம் என்று சொல்ல சரி சித்தப்பா நாங்கள் பின்னாலேயே வருகிறோம் என்று சொல்கின்றான். எல்லோரும் சுன்னாகத்துக்கு மாப்பிள்ளை வீட்டுக்கு செல்கின்றார்கள்.

காரினுள் கதிரின் மடியில் இருக்காத குறையாய் வசந்தி ஒருக்களித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாள்.கதிர் கூச்சத்தில் அவளின் பக்கமே திரும்பவில்லை.மற்றப்பக்கம் வெளியே பார்த்தபடி இருக்க கழுத்தும் வலிக்கத் தொடங்கிட்டுது. சூல்கொண்ட கருமேகத்திலிருந்து நிலம் நோக்கி முதலாவது மழைத்துளி விழுவதுபோல் வசந்தியின் கண்களில் இருந்து ஒவ்வொரு துளி கன்னத்தில் உருண்டு மடியில் மறைகின்றது. கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கு. நான் என்ன தவறு செய்தேன், எங்கே தவறு செய்தேன் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது முருகா. நானா கலியாணம் கேட்டேன்.என்வாழ்வில் சதி செய்து போட்டாயே  என்று மனதினுள் குமுறுகிறாள்.

வசந்தி ஒரு பல்கலைக்கழக பட்டதாரி. மருத்துவபீட மாணவி. சமீபத்தில்தான் அவள் பட்டமளிப்பு  விழாவில் பங்கேற்று பதக்கமும் சான்றிதழ்களும் பெற்றிருந்தாள். இனி கொழும்பில் பயிற்சியுடன் நல்ல வேலை தேடவேண்டும். அதற்காக பல கிளினிக்குகள் ஆஸ்பத்திரிகளுக்கு விண்ணப்பம் செய்திருக்கின்றாள். அதுவரை பெற்றோருடன் இருப்பதற்காக மல்லாகத்துக்கு வந்திருக்கிறாள். மிகவும் தைரியமான பெண். எதிலும் துணிந்து முன்னாள் இறங்கி விடுவாள். பின்விளைவுகள் பற்றி அலட்டிக் கொள்ள மாட்டாள்.சென்ற வாரம்தான் சிவகாமி வானம்பாடிபோல் திரிந்த வசந்தியிடம் வந்து, பிள்ளை உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையோடு சம்பந்தம் வந்திருக்கு. அவர் வெளிநாட்டில்தான் வேலை செய்கின்றார். கலியாணம் கட்டியபின் இரண்டொரு மாதத்தில் உன்னையும் தன்னோடு அழைத்துக் கொண்டு போவாராம்.என்று சொல்கிறாள்.....!

வருவார்....!

4 minutes ago, suvy said:

கலியாணம் கட்டியபின் இரண்டொரு மாதத்தில் உன்னையும் தன்னோடு அழைத்துக் கொண்டு போவாராம்.என்று சொல்கிறாள்.....!

வருவார்....!

வருவார் ..........................:grin:

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டொரு மாதத்தில் உன்னையும் தன்னோடு அழைத்துக் கொண்டு ....

 

 என்று தீரும் இந்த வெளிநாட்டு மோகம் ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

பிள்ளை உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையோடு சம்பந்தம் வந்திருக்கு. அவர் வெளிநாட்டில்தான் வேலை செய்கின்றார். கலியாணம் கட்டியபின் இரண்டொரு மாதத்தில் உன்னையும் தன்னோடு அழைத்துக் கொண்டு போவாராம்.என்று சொல்கிறாள்....

ஓ அப்ப இதுவும் வெளிநாட்டு பார்சலாக இருந்திருக்கிறது  ஆப்பை கொடுத்திருக்கிறான் போல   ஹாஹாஹா தொடரட்டும்  சுவியர்  கொஞ்சமா கழுவி ஊத்துங்க  வெளிநாட்டைப்பற்றி:11_blush: 

 

3 hours ago, ஜீவன் சிவா said:

யோவ் அவசரக்குடுக்கை கொஞ்சம் அமத்தி வாசியப்பா :grin:

சுவியர் இப்பதான் பிரான்சுக்கு போயிட்டு வந்திருக்காரு 

பூனைக்குட்டி வெளியில வராமலா போகும் // வெயிட் அப்பா வெயிட் :grin::grin:

அதெல்லாம் முடியாது  ஒட்டு மொத்த கதையும் வந்தாகணும்:104_point_left: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மா நான் படிச்ச படிப்புக்கு கொஞ்ச காலம் வேலை செய்ய வேணும் அம்மா. வெளிநாடு என்று போய் விட்டால் நீங்கள் இவ்வளவு நாளும் பட்ட கஷ்டமும் என்ற படிப்பு பட்டம் எல்லாமே வீணாய் போய்விடும் என்று எவ்வளவோ சொல்லியும் முத்துவேலு சிவகாமியின் வெளிநாட்டு மோகம் அவளைத் திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தது. பின்பு மாப்பிள்ளை முகுந்தனும் அங்கு அடிக்கடி வரத் தொடங்கினான்.அவனை எல்லோருக்கும் பிடித்திருந்தது.முகுந் அடிப்படையில் மிகவும் நல்லவனாகவும் பெரியவர்களுக்கு மரியாதை தருபவனாகவும் இருந்தான். அவளது வீட்டுக் காரில் சாரதியோடு மேலும் ஓரிருவர் கூட வர அவர்கள் கடற்கரை சினிமா நண்பர்கள் வீடு என சுற்றித் திரிந்தார்கள். அப்படித்தான் ஒருநாள் கே.கே.எஸ் ஜெற்றியோடு அண்டிய கடற்கரையில் அவர்கள் காலாற நடந்து கொண்டிருக்கையில் இரு சிறு நண்டுகள் ஒன்றையொன்று இழுத்துக் கொண்டு ஓடி விளையாடுவதை ரசித்துக் கொண்டிருக்கையில்,முகுந்தும் தான் முன்பு ஒரு பெண்ணை காதலித்ததும், பின் அது பெயிலியராகி வேறு ஒரு பெண்ணை விரும்பியதையும் அதுவும் தவறிப் போய் விட்டது என்றும் பகிடியாகவும் சீரியஸாகவும் சொல்லிக் கொண்டு வந்தான். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி அதை வசந்தி சீரியசாக எடுக்கவில்லை. இப்ப இதெல்லாம் சாதாரணமான ஒன்று என்பதுபோல் மெல்லிய சிரிப்புடன் நிறுத்திக் கொண்டாள். 

அப்படியே வசந்தியிடமும் நீரும் யாரையாவது விரும்பியிருந்தனீரா என்று கேட்க அவளது மௌனத்தைப் பார்த்து பரவாயில்லை சொல்லும் நான் ஒன்றும் நினைக்க மாட்டன் என்கிறான். வசந்தியும் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்கிறாள். என்ன நீர் இதெல்லாம் சகஜம்தானே அத்துடன் நீர் நல்ல அழகாய் இருக்கின்றீர் காதலிக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம் என்று கூற அவளும் நிறைய யோசித்து நான் யாழ்ப்பாணத்தில் ஏ.எல் படித்துக் கொண்டிருந்த பொழுது இன்னொரு கல்லூரி மாணவனை விரும்பினேன். அப்போது நாங்கள் படத்துக்கும், பார்க்குக்கும், கடைவிதிகளுக்கும் போய் வருவோம். அப்போ நீங்கள் டேட்டிங் போனதில்லையா, நான் ஒருத்தியுடன் மட்டும் போய் இருந்தேன். செம ஜாலியாய் இருந்தது. அவள் குறுக்கிட்டு நோ  நோ அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இந்த ஒரு வாரமாக உங்களோடு எப்படி பழகித் திரிகின்றேனோ அப்படித்தான். ஆனால் இப்ப நினைத்தால் சிரிப்பாக இருக்கின்றது. அவனும் ஒரு விடலைப்பையன் நானும்கூட ... நண்பர்களுக்கு கெத்து காட்டத்தான் அப்படி நடந்துகொண்டோம் போல் தோன்றுகின்றது. அப்ப பின்பு நீங்கள் சந்திக்கவில்லையா.... இல்லை, ஆண்டு இறுதி விடுமுறை வந்து விட்டது. நான் பேராதனைக்குப் போய் விட்டேன். அங்கு ஒரு சிநேகிதமும் இல்லையா. இல்லை நான் மிகவும் தெளிவாய் இருந்தேன். அதனால் மாலைவேளைகளில் பல மாணவிகள் டான்ஸ் வகுப்புகளுக்கு செல்லும்போது நாங்கள் ஒரு சிலர் மட்டும் கராத்தே வகுப்புகளுக்கு போனோம். அதில் நான் முதலாவது கறுப்புப் பட்டியும் எடுத்திருக்கின்றேன். இன்னும் வீட்டுக்கு தெரியாது. தங்கச்சி சுகந்திக்கு மட்டும் தெரியும் என்றுசொல்லும்போது மற்றவர்களும் வர சம்பாஷணை அத்துடன் முடிவடைந்து எல்லோரும் காரில் வீட்டுக்கு திரும்புகின்றனர். 

இன்னும் இருநாட்களில் கலியாணம். வீட்டின் முன்னால் பந்தல் எல்லாம் போட்டு அமர்க்களமாய் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. காலைநேரம் முகுந்தின் பெற்றோர்களும் நண்பர்களுமாக கார்களிலும் மோட்டார் சயிக்கிளிலும் வந்து இறங்குகின்றனர். பெற்றோர்கள் உள்ளே செல்ல முகுந்தும் நண்பர்களுடன்சேர்ந்து கொள்கின்றான். மச்சான் அசல் இடமடா இது. வரேக்கை பார்த்தோம் பனைகள் எல்லாம் பால் சுமந்து நிக்குதடா.ஓமடா என்று சொல்லி எல்லோரும் வெளியே போகின்றார்கள். முத்துவேலுவும் அவர்கள் தங்குவதற்கு மேல்மாடியை ஒதுக்கி விடுகின்றார். அது அவர்களுக்கு எல்லாத்துக்கும் வசதியாய் இருக்கும்.போனவர்கள் இரவு சாமம்போல் நிறை போதையுடன் வீட்டுக்கு வருகிறார்கள். முகுந்தன் மட்டும் நிதானத்துடன் இருக்கிறான். அவனும் வசந்தியும் சேர்ந்து அவர்களை ஒருவாறு மாடியில் படுக்க வைக்கின்றார்கள். சொறி வசந்தி. தப்பா நினைக்காதே அவர்கள் சந்தோசத்தில்..... பரவாயில்லை முகுந்... இட்ஸ் ஓ கே. நீங்களும் இப்ப கீழே வரவேண்டாம். என்று சொல்லி விட்டு இறங்கிப் போய்விடுகிறாள்.

அடுத்தநாள் காலையிலேயே வீட்டின் பின் முற்றத்தில் வாங்கும் மேசைகளும் போட்டு நண்பர்கள் ஜாலியாக கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது காரில் இருந்து சில பாரின் குடிவகைகளை கொண்டுவந்து மேசைமேல் வைத்து கொஞ்சம் கொஞ்சமாய் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். முகுந்தின் தாய் வந்து எட பிள்ளையள், கனக்க குடிக்காதையுங்கோ. நீங்கள் நேற்று குடிச்சதே இன்னும் முறியேல்ல. இந்தக் கலியாணம் நல்லபடியாய் நடக்க வேணும் போதும் எழும்புங்கோ என்று மெதுவாய் சொல்லிவிட்டு போகிறாள். அவர்களின் டேஸ்ட்டுக்காக விசேஷமாய் செய்த கறியையும் பொரியலையும் வசந்தி கொண்டுவந்து மேசையில் வைத்து விட்டு போகும்போது அவர்களில் ஒருத்தன் கண்னைச் சிமிட்டிக் கொண்டு என்ன சிஸ்டர் நீங்கள் பெரிய ஆள், டேட்டிங் எல்லாம் போய் இருக்கிறீங்களாமே, செமையா இருந்ததா என்கிறான்.  அவள் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டாள். நீங்கள் என்ன சொல்லுறிங்கள். எங்களுக்கு எல்லாம் தெரியும். முகுந் எல்லாம் சொல்லிப் போட்டான். நேற்று முழுதும் எங்கட ஹிரோயினே நீங்கள்தான். மற்றவன் .... எண்டாலும் முகுந்தனுக்கு பெரிய மனசுடா... சிலர் ஆமா...ஆமா என்கின்றனர்.

வசந்தி: ப்ளீஸ் இப்படியெல்லாம் கதைக்காதையுங்கோ சரியில்லை என்கிறாள்.

நண்பர்: உள்ளதைத்தானே சொல்கிறோம். சும்மா சிலிர்ப்புக் காட்டுறியள்.

முகுந்தன்: டேய் தயவுசெய்து பேசாமல் இருங்கோடா. வசந்தி நீ முதல்ல இங்கிருந்து போ என்கிறான். அவள் கிளம்ப....!

ஒரு நண்பன்: உதட்டை கோணலாக நெளித்தபடி டேட்டிங் ஒருத்தனோடு மட்டுந்தானா கல்லூரிக்கு ஒண்டு யுனிக்கு ஒண்டா என்கிறான்.

வசந்தி: முகுந் இவர்களை பேசாமல் இருக்கச் சொல்லு. மாடிக்கு கூட்டிக் கொண்டு போ. ஆட்கள் பார்க்கினம்.

அவர்களும் ஏதேதோ உளற முகுந்தாலும் அவர்களை சமாளிக்க முடியவில்லை. நிலைமை விபரீதமாய் போவதை உணர்ந்த இரு நண்பர்கள் முகுந்தனுடன் சேர்ந்து மற்றவர்களை அடக்க முயன்றபோதும் முடியவில்லை.

சத்தம் கேட்டு முத்துவேலரும் முகுந்தின் பெற்றோரும் வந்து விட்ட னர். 

முத்துவேலர் முகுந்தனிடம் மாப்பிள்ளை முதல்ல இவர்களை இங்கிருந்து போகச் சொல்லுங்கள். நாளைக்கு கலியாணத்துக்கு வந்தால் போதும் என்று சொல்ல முகுந்தனும் அது எப்படி மாமா... அவர்கள் எனது நண்பர்கள். அப்படி நீங்கள் நினைப்பதுபோல் அவர்களும் நினைக்க வேண்டாமா....! மாறி மாறி கதைவளிப்பட அங்கு வந்த சிவகாமி வேண்டாம், நானும் நேற்றில் இருந்து பார்க்கிறன் எங்க கண் முன்னாலேயே என்ர பிள்ளையை இவ்வளவு வேதனைப் படுத்துகிறீர்களே நாளைக்கு கண்காணாத தேசத்திலே என்ர பிள்ளை தனது கஸ்டத்தை சொல்லி ஆறத்தன்னும் யார் பக்கத்தில் இருக்கப் போகினம்.... செய்த செலவு எங்களோடையே போகட்டும், நீங்கள் எல்லோரும் போகலாம் என்கிறாள். அதுக்கு மேல் அங்கு யாரும் நிக்கவில்லை. முகுந்தனின் தாய் மட்டும் உதுக்குத்தான் உவங்களை கூட்டி வராதே என்று அப்பவே சொன்னனான். காலமை கூட சொல்லிட்டுப் போனன்,கேட்டாங்களா என்று புறுபுறுத்துக் கொண்டு போகிறாள்.

வருவார்.....!

 

  

  • கருத்துக்கள உறவுகள்

 நல்ல  கதை     நன்றி.  மேலும் தொடர்க 

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு மாப்பிள்ளைமாரை கொஞ்சம் உசத்தியா எழுதுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

வெளிநாட்டு மாப்பிள்ளைமாரை கொஞ்சம் உசத்தியா எழுதுங்கோ

ம்கும் எப்படி எழுதுவது ??:10_wink:

7 hours ago, putthan said:

வெளிநாட்டு மாப்பிள்ளைமாரை கொஞ்சம் உசத்தியா எழுதுங்கோ

யோவ் எவ்வளவு உசத்தியா வெள்ள மனசுடையவர் என்றும் எழுதுறார் - இது போதாதா 

நண்பர்களுடன் எல்லாத்தையுமே பகிரும் வெள்ளை மனசுக்காரர்.

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர் எனக்கு பிடிக்காத வார்த்தை தொடரும் என்பது.அதை எந்த வடிவத்தில் எழுதினாலும்:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திருமணத்துக்காக முத்துவேலர் நிறைய செலவு செய்திருந்த போதிலும் அவர் அதை பற்றிச் சிறிதும் கவலைப்பட வில்லை.மகள் எதோ ஒரு பெரும் இக்கட்டில் இருந்து தப்பினதே போதும் என்றிருந்தது. ஆனாலும் இந்த முகூர்த்தத்துக்கு மகளுக்கு எப்படியாவது ஒரு வரன் பார்த்து கலியாணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் சிறு விதையாக மனதில் தோன்றி ஆலமரமாய் வளர்ந்து நிக்குது.தனது நண்பர்கள் தரகர்கள் எல்லோரிடமும் மாப்பிள்ளை தேடச் சொல்லி விட்டார். ஆனாலும் மனம் சமாதானமடையவில்லை. முருகனிடம் உளமார பிரார்த்தித்துக் கொள்கிறார். ஒரு நல்ல பிள்ளையை எனக்கு மருமகனாய்க் கொடு, உன்னுடைய சந்நிதியிலேயே இந்தத் திருமணத்தை நடத்துகிறேன் என்று வேண்டிக் கொள்கின்றார்.நம்பிக்கை இழந்த நேரத்தில் ஒரு உறவினர் மூலமாக சுன்னாகத்தில் தமது உறவுக்குள்ளேயே இப்படி ஒரு பையன் இருக்கிறான் என்பதை அறிந்து வந்து கதைத்து இந்தத் திருமணம் சந்நிதி ஆலயத்தில் நடந்தேறியது.யோசித்த வசந்திக்கு தலைசுற்ற கண்களில் இருந்து தாரை தாரையாக கண்களில் இருந்து கண்ணீர் வடிகின்றது. எப்போதும் தமக்கை கூடவே இருக்கும் சுகந்திக்கு அவளை பார்க்க பாவமாக இருக்கின்றது.ஆதரவாக அவள் கைகளைப் பற்றிக் கொள்கிறாள்.

மாப்பிள்ளையின் வீட்டில் அவசரத்துக்கு ஏற்றாற் போல் கூட்டி மெழுகி கோலம் போடப்பட்டிருக்கு. வீட்டில் அயலவர்களும் அவனது நண்பர்களும் கூடியிருக்கின்றனர்.இவர்கள் காரில் இருந்து இறங்கி வந்ததும் வாசலிலேயே நிறுத்தி வைத்து ஆரத்தி எடுத்து வீதியில் கொட்டிவிட்டு அவர்களை வீட்டுக்குள்ளே அழைத்து செல்கின்றனர். அங்கு எல்லோருக்கும் சுடச்சுட பால்தேத்தண்ணியும், வடையும் பரிமாறப் பட்டது. பின் எல்லோரும் கலைந்து போக வசந்தியின் தாயார் சிவகாமியும் தங்கச்சி சுகந்தியும் மாப்பிள்ளை வீட்டில் நிற்பது என்று முடிவெடுத்து தங்குகிறார்கள்.மற்றவர்கள் முத்துவேலருடன் மல்லாகத்துக்கு கிளம்பி விட்டனர். 

ஓர் அறை சாந்தி முகூர்த்தத்துக்கு தயாராகி விட்டிருந்தது. கட்டிலில் புது விரிப்புகள், புதுத் தலையணைகளும் போடப்பட்டிருந்தன. அதன்மேல் உதிர்த்த மல்லிகை, ரோஜா இதழ்களும்  தூவப்பட்டிருந்தன.அருகே மேசையில் பால், திராட்சை, தோடை, வாழைப்பழங்களும் கடலை உளுந்து வடைகள் மற்றும் செம்பில் தண்ணீரும் வைக்கப் பட்டிருக்கு.  கதிரின் தாயார் பார்வதி அவனிடம் வந்து அவ எங்களுடன் அறிமுகமில்லாத புதுப் பொண்ணு, கொஞ்சம் பதமாய் நடந்துகொள் என்று சொல்லி அவனை அறைக்குள் தள்ளாத குறையாக அனுப்பிவிட்டு கதவை சாத்திக் கொண்டு வருகிறாள். பெண்ணின் தாயார் சிவகாமி மகளை தனியாக கூட்டிக் கொண்டு போய் ஒரு நூல் புடவையும் சட்டையும் குடுத்து நீ அறைக்குள் போனதும் இதை மாத்திக் கட்டிக்கொள்.நீ படிச்சனி உனக்கு நான் அதிகம் சொல்லத் தேவையில்லை.பார்த்து இதமா நடந்துகொள். நாங்கள் வெளியிலதான் இருப்பம். ஏதாவது தேவையென்றால் கூப்புடு என்று சொல்லி அவளையும் அறைக்குள் கொண்டுபோய் விட்டிட்டு வெளியே கதவை சாத்தி விட்டார்கள்.

கதிர் கட்டிலின் ஒரு ஓரத்தில் குழப்பமான சிந்தனையில் அமர்ந்திருக்கின்றான்.உள்ளே வந்த வசந்தியிடம் இதுவரை அடங்கியிருந்த கோபமும்,தனது கையாலாகாத்தனமும் கழிவிரக்கமும் ஒருங்கேசேர தனது நெற்றிச்சுட்டி,ஒட்டியாணம், சடைநாகம் எல்லாவற்றையும் இழுத்து அறுக்காத குறையாய் கழட்டி மேசைமேல் எறிகிறாள்.சடைநாகம் கழட்டிய வேகத்தில் கூந்தல் அவன் முகத்தில் அடிக்க அவன் அதை கண்டுகொள்ளவில்லை. எவனோ ஒரு காட்டான் அங்கிருக்கிறான். முந்தாநாள் எவனோ ஒருத்தனோட கடற்கரையில் கைகோர்த்து நடக்கிறன், இப்ப இவனோட கட்டிலில் இருக்கவேணும். இவன் பெயர் கூடத் தெரியாது. இவனோடு முதலிரவாம். என்ன கொடுமை இது. இந்த அப்பா அம்மாவுக்கு விவஸ்தையே கிடையாதா. என்னைப்  பற்றி என் மனசைப் பற்றி சிறிதும் புரிந்து கொள்ளவில்லையே. மவனே...! கிட்டவந்து பார், இந்த பழம் நறுக்கும் கத்தியால குத்தி கொன்னு போட்டுருவன். நினைக்க நினைக்க ஆவேசம் வருகுது....!

வருவார்....!

1 hour ago, suvy said:

வருவார்....!

பாவம் கதிர் ....

  • கருத்துக்கள உறவுகள்
On 14.7.2017 at 9:14 PM, suvy said:

தந்தையுமானவன்.....!

அன்று நல்ல முகூர்த்தநாளாக இருக்க வேண்டும். சந்நதி முருகன் ஆலயத்தில் வள்ளி அம்மன் ஆலய முன்றலில் அன்று இருபது திருமணங்கள் வரை நடந்தன.எதிர்பாராமல் அவசரம் அவசரமாக இருபத்தியொராவது திருமணமாக கதிர்வேலுக்கும் வசந்திக்கும் திருமணம் நடக்கின்றது. விதி மிகவும் விசித்திரமானது.

அன்று காலை சுன்னாகத்தில் ஒரு பனங்கூடலுக்குள் மென்பந்தில் நண்பர்களுடன் கிரிக்கட் விளையாடும் போதோ அல்லது மத்தியானம் அம்மா திட்டிக் கொண்டு சாப்பாடு போடும்போதோ ( இது அம்மாவின் டெக்னிக்,தான் திட்டாது விட்டால்,அப்பா ஆரம்பித்து அவன் சாப்பிடாமல் வெளியே போய்விடுவான்). அதனால் அம்மா முந்திக் கொண்டு அவனைப் பேசிக்கொண்டு தாராளமாய் சாப்பாடு போடுவாள். அவர்களுக்கு தெரியாது அன்று அங்கு கதிர்வேலுக்கு கல்யாணம் நடக்குமென்று.

அப்போது சயிக்கிளில் ஓடியபடியே படலையை திறந்து கொண்டு கார்த்திக் வந்து இறங்குகின்றான். கையில் ஒரு போத்தலில் காய்ச்சலுக்கு கட்டயடி ஆஸ்பத்திரியில் வாங்கிய கலர் மருந்து இருக்குது.அம்மா கேட்க்கிறாள், என்னடா வடிவாய் சொல்லி மருந்து மாத்திரை வாங்கினியா. ஓமனை, யூரின் டெஸ்ட் பண்ண வேணும் என்று சொன்னவை. நாளைக்கு காலைமை வாறன் என்று சொல்லிட்டு வந்தனான். கிடாய்க்கு புண்ணாக்கு தீத்திக் கொண்டிருந்த அப்பா, அதென்னடி பிள்ளை யூரினாம் என்று பக்கத்தில் குலை கட்டிக் கொண்டிருந்த மூத்தவள் தேன்மொழியிடம் கேட்க அவளும் அது ஐயா சோதிக்கிறதுக்காக மூத்திரம் கேட்டிருக்கினம். உடனே மகனிடம் குறுக்கிட்டு... ஏண்டா அத அங்கன பேஞ்சு குடுத்திட்டு வாரத விட்டிட்டு இஞ்சை என்ன அலுமாரிக்கை கிடக்கெண்டு எடுத்துக் கொண்டு போக வந்தனியே...! அவனுக்கு முகம் உர் என்று வருகுது. அம்மா உடனே ஏன்டா அவர் கேட்கிறதில என்ன தப்பு. எனை நீயும் சேர்ந்து விசர்க்கத கதையாதையனை. அதுக்கு விடிய வெறும் வயித்தோடதான் போய்க் குடுக்க வேண்டும். அதுதானே பார்த்தேன் நீ விடிய காய்சசாலோட பழஞ்சோறையும் சாப்பிடேக்கை நினைச்சனான். தங்கை சௌம்யா மெதுவாய் சிரிக்கிறாள். உரத்து சிரித்தால் குட்டு விழும் என்று அவளுக்கு தெரியும்.

வருவார்.....!    

மிகவும்  ரசிக்கும்...  மறந்து போன,  யாழ்ப்பாண  எழுத்து நடை. சுவி. :110_writing_hand:
மெய்.. மறந்து, கடந்த காலத்துக்கு... போய்  விட்ட, 
முன்னோர்களின்... சொற் பிரயோகங்கள். :grin:
அவர்களை... மீண்டும். கண் முன்னே... கொண்டு நிறுத்திய உங்களுக்கு,  நன்றிகள்...   சுவி.  :) 

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர் எனக்கு ஒரு சின்ன குழப்பம்.கதையின் படி பாத்தால் மணப்பந்தலில் தான் கலியானம் கனைசி நேரத்தில் குளம்மபின மாதிரி எல்லோ இருக்குது.ஆனால் இறுதியாக வந்த பதிவைப்பாக்கும் போது அப்படி தெரியவில்லையே.மற்றும் ஏன் மணப்பெண் கோலத்தில் வந்தா:rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையை வாசித்து வரும் அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்.....!   tw_blush:

28 minutes ago, சுவைப்பிரியன் said:

சுவியர் எனக்கு ஒரு சின்ன குழப்பம்.கதையின் படி பாத்தால் மணப்பந்தலில் தான் கலியானம் கனைசி நேரத்தில் குளம்மபின மாதிரி எல்லோ இருக்குது.ஆனால் இறுதியாக வந்த பதிவைப்பாக்கும் போது அப்படி தெரியவில்லையே.மற்றும் ஏன் மணப்பெண் கோலத்தில் வந்தா:rolleyes:

இதில் குழப்பமில்லை சுவை...., கலியாணம் வெள்ளிக் கிழமை.வீட்டில் செய்யத்தான் பந்தல் எல்லாம் போட்டிருக்கின்றார்கள். ஆனால் வியாழன் பகலே நண்பர்களுடன் பிரசினைப்பட்டு குழம்பி விடுகிறது. அதன்பின் தந்தை மும்மரமாக வரன் தேடுகின்றார்.கடைசிவரை யாரும் கிடைக்காத சமயத்தில்தான் முருகனைப் பிரார்த்தித்து உன் கோயிலில் செய்கிறேன் என்று சரணாகதி அடைகிறார்.வெள்ளி மதியம்போல்தான் மாப்பிள்ளை அமைகின்றது. மல்லாகமும் சுன்னாகமும் 2/3 கி.மீ துரம்தானே.அதுதான் அவர் முன்பே போய் ஒழுங்கு பண்ணியதும் பெண் வெளிக்கிடடபடி காரில் வருகிறாள்.அதன்பின் கடைக்குப்போய் எல்லாம் வாங்கிக்கொண்டு போகின்றனர்.....!

பி.கு அநேகமாய் கையில் சிறு குறிப்புகள் வைத்துக் கொண்டுதான் எழுதுகிறேன். சிலசமயம் தவறுகளும் வரலாம். சுட்டிக்காட்டுவதை வரவேற்கிறேன்.சுவை...! இடைக்கிடை விமர்சனம் வந்தால்தான் கதையில் மசாலா கலந்த பிரியாணி, இல்லாட்டில் வெண்பொங்கள்தான். இது தனிக்கும் ஜீவனுக்கும்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஜீவன் சிவா said:

யோவ் எவ்வளவு உசத்தியா வெள்ள மனசுடையவர் என்றும் எழுதுறார் - இது போதாதா 

நண்பர்களுடன் எல்லாத்தையுமே பகிரும் வெள்ளை மனசுக்காரர்.

அப்படியா சொல்லுறார்..அதுதானே பார்த்தேன்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டிலின் ஒரு ஓரத்தில் குத்துக்காலிட்டு முழங்காலுக்குள் முகத்தைப் புதைத்து மௌனமாய் விசும்பி விசும்பி அழுகிறாள். மேனி குலுங்குகிறது. எதிர் ஓரத்தில் இருந்த கதிர் தனக்குள் இப்ப இவள் என்னத்துக்கு அழுகிறாள்.உண்மையில் நானெல்லோ அழவேனும் என்று நினைத்தவன், ம்....ம்.... அவளுக்கும் என்ன என்ன பிரச்சினைகளோ தெரியேல்ல, கொஞ்சம் அழட்டும் பிறகு கதைப்பம் என்று விடுகிறான். வசந்தியும் அலுத்து விம்மல் தணிந்ததும்  இந்தா பொண்ணு உனக்கு என்னென்ன பிரச்சினைகளோ எனக்கு தெரியாது. அப்படித்தான் எனக்கும், உன் பேர் கூட எனக்கு இன்னும் தெரியாது.காலையில் விளையாடிட்டு இருந்தஎன்னை இழுத்து வந்து கலியாணம் பண்ணிவைத்து இப்ப கட்டில்ல வந்து நிக்குது.

வசந்தி: நான் பொம்பிளை எதையும் எதிர்த்து சொல்ல முடியவில்லை. நீ ஆம்பிளைதானே இந்தக் கலியாணம் வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம்தானே.

கதிர்: இஞ்சபார் இவவின்ர கதையை, நான் என் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.நாங்களா உன் விடு தேடி வந்தனாங்கள்.

வசந்தி: சரி எங்களிலதான் பிழை, கொஞ்சம் பேசாமல் இருக்கிறியா....!

கதிர்: இந்த சும்மா கோபப்படாமல் யோசித்துப் பார், இப்ப நான் இல்லை என்றாலும் இன்னொருத்தனுக்கு நீ கழுத்தை நீட்டத்தான் போற. நானா இருக்கப்போய் என்ர கற்பையும் காப்பாத்தி உன்னையும் காப்பாத்திக் கொண்டு இருக்கிறன்.

அவன் சொல்வதிலும் உண்மை இருக்குதுதான்....!

இந்த இடத்தில ரகு மட்டும் இருக்க வேணும் .....!

வசந்தி: அது யார் ரகு .....!

கதிர்: முழுப்பெயர் ரகுவரன்....! அவள் பகிடியை ரசிக்கவில்லை. சரி இந்தா நீ காலையில் இருந்து வடிவாய் சாப்பிட்டு இருக்க மாடடாய், கோயிலிலும் சரியா சாப்பிடேல்லை. என்று சொல்லி பலகாரத் தட்டை அவளுக்கு அருகே நகர்த்தி விட்டு தோடம்பழத்தை எடுத்து கத்தியால் தோல் சீவுகிறான். அவள் எனக்கு ஒண்டும் வேண்டாம் என்று தட்டத்தை அவனிடம் தள்ளிவிட கத்தி அவள் விரலில் பட்டு ரத்தம் கொட்டுது. உடனே மறுகையால்  விரலைப் பொத்திப் பிடிக்க கதிர் கலவரமாகி பதற்றத்துடன் அருகில் கிடந்த துணியால் சுத்திப் பிடிக்க சிறிது நேரத்தில் ரத்தம் கட்டுப்பட்டு விட்டது. சொறி தெரியாமல் பட்டு விட்டது. என்று சொல்லிவிட்டு பிளாஸ்கில் இருந்த பாலை ஊற்றி இதையாவது குடித்துவிட்டு படு என்கிறான். இம்முறை அவள் மறுக்காமல் வாங்கிக் குடித்துவிட்டு மறுபுறம் திரும்பி ஒருக்களித்துப் படுத்துக்க கொள்கிறாள். அவனும் சிறிது பால் அருந்திவிட்டு ஓரமாய் படுக்கிறான்.

எப்ப தூங்கிப் போனார்கள் என்றே தெரியாது.வெளியே பேச்சுக் குரல்கள் கேட்க வசந்தி எழுந்து நேரத்தைப் பார்க்கிறாள். ஒன்பது மணி. அவள் எழுந்த அசுமாத்தத்தில் கதிரும் எழுந்து வேட்டியை சரிசெய்து கொள்கிறான். அவன் கதவைத் தட்ட தாய் பார்வதி வந்து கதவைத் திறக்கிறாள்.அவன் வெளியே போனவுடன் பார்வதியும் சிவகாமியும் உள்ளே வருகிறார்கள். வெளியேறப்  போன மருமோளைத் தடுத்து அலுமாரியில் இருந்து தேன்மொழியின் சடடை ஒன்றை எடுத்து மாத்திக்க சொல்லி குடுத்துவிட்டு, கலைந்திருந்த தலைமுடியை வழித்து கையால் சுற்றி ஒரு கோடாலி கொண்டை போட்டுவிட்டு கலைந்திருந்த திலகத்தையும் விரலால் சரிப்பண்ணி அவள் உச்சியில் முத்தமிட்டுவிட்டு போய் குளிச்சுட்டு வானை என்று சொல்லி அனுப்பிவிடுகிறாள்.வெளியேறிய வசந்திக்கு எல்லோரும் தன்னையே புன்சிரிப்புடன் பார்ப்பதுபோல் இருக்கு. 

பார்வதியும் சிவகாமியும் அங்கு கட்டில் விரிப்பிலும் பூக்களிலும் ஆங்காங்கே கறைகள் படிந்திருப்பதைக் கண்டு கண்களால் பேசிக் கொள்ளினம். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் இப்பத்தைய பொடி பொட்டைகள் விவரமாய்தான் இருக்கினம் என்று சிவகாமி சொல்ல பார்வதி தலையசைத்து ஆமோதிக்கிறாள். 

கிணத்தடிக்கு வந்த சிவகாமி இருவரையும் பார்த்து கிடாரத்தில சுடுதண்ணி பதமான சூட்டில விளாவி விட்டிருக்கிறன், கெதியாய் தோய்ஞ்ச்சுட்டு வாங்கோ என்று சொல்லிப் போட்டுவர அவன் பம்செட்டிலும் அவள் சுடுதண்ணிரிலும் தோய்ஞ்சிட்டு வருகினம்.வீட்டுக்குள் வந்தவர்களிடம் பார்வதி இரண்டு கிண்ணத்தில் முட்டை கோப்பி வார்த்துக் குடுக்க இருவரும் ஒன்றும் பேசாமல் வாங்கிக் குடிக்கிறார்கள்......!

வருவார்....!  

 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, suvy said:

முட்டை கோப்பி வார்த்துக் குடுக்க இருவரும் ஒன்றும் பேசாமல் வாங்கிக் குடிக்கிறார்கள்......!

முட்டைகோப்பிதான் அந்த காலத்து பூஸ்ட்,கொர்லிக்ஸ் விட்டமின் எல்லாம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.