Jump to content

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 90
 
முகநூலும் நேரடி ஒளிபரப்பும்
 
தொழில் சம்பந்தமாக ஒருவருடன் ஒப்பந்தம் ஒன்று போடணும்.
இடைத்தரகர் ஒருவரை நியமித்து ஒப்பந்தம் எழுத முயன்றபோது
யாருக்கும் போகும் தரகுப்பணம் எம்மவருக்கு போகட்டுமே என எம்மவரை அமர்த்தியிருந்தேன்.
ஓம் என்றுவிட்டு போனவர் தான் பல வாரமாக இழுக்க ஆரம்பித்தார்.
தொலைபேசியிலும் பதிலில்லை.
நானெல்லாம் தண்ணீர் மாதிரி. 3 தரம் தான் பொறுமை.
 
இனி இவரை விடுத்து நேரடியாக ஒப்பந்தத்தை போடலாம் என்றாலும் இவர் சொந்தக்காரர்.
உறவில் விரிசல் வரக்கூடாது.
எனவே ஒப்பந்தம் போட நான் போகும் போது
இவர் அந்த இடத்தில் இல்லாமலிருக்கணும் என்ன செய்யலாம் என யோசித்தபடி இருக்கின்றேன்.
அதேநேரம்
அவர் அவ்விடத்திலிருந்து 100 கிலோ மீற்றருக்குப்பாலிருந்து முகநூலில் நேரடி ஒளிபரப்பு போட்டபடி இருந்தார்.
 
அந்த நேரம் எனக்கு போதுமே...
 
மாத்தி யோசி
இனி யாராவது நேரடி ஒளிபரப்பு போடுவீங்க...????
Link to comment
Share on other sites

  • Replies 339
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 91

இன்று எனது அம்மாவின் 92வது பிறந்தநாள்.

இந்த உலகில் எம்மை முழுமையாக அறிந்தவர் புரிந்தவர் எவராக இருக்கும் என பார்த்தால்

நிச்சயமாக அது பெற்ற தாய்க்கே முதலிடம்.

எனது தாயார் எனது தம்பியின் வீட்டில் இருக்கிறார். அடிக்கடி பார்க்கப்போவதுண்டு.

அப்பொழுதெல்லாம் அங்கு சாப்பிடாமல் வருவதில்லை. அதை எனது உரிமை என நினைப்பவன் நான்.

அவ்வாறு நான் சாப்பிடும் போது தம்பியின் மனைவி மற்றும் பிள்ளைகளின் கண்கள் எனது கோப்பையில் தான் இருக்கும்.

மறுபடியும் பரிமாறுவதற்காக.

ஆனால் அவற்றையெல்லாம் மீறி அம்மா தான் இதுவரை முந்திவிடுகிறார்.

என்ன கோப்பை வெறுமையாக இருக்கு (ஆனால் கோப்பையில் அரைவாசி சாப்பாடு இருக்கும்)

கறி காணாமல் இருக்கு (கறி கனக்க இருக்கும்) என்பார்.

அவரும் என்னுடன் சாப்பிட்டால்

அவரது கோப்பையிலிருந்து விசேசமான சாப்பாடுகள் எனது கோப்பைக்கு மாறிவிடும்.

நாங்க அவருக்கு வடிவாக கொடுப்பம் தானே நீங்க சாப்பிடுங்கள் என்றாலும் கேட்கமாட்டார்.

போட்டுக்கொண்டே இருப்பார்.

தம்பியின் மனைவி சொன்னார் அத்தனை மக்களும் பேரப்பிள்ளைகளும் வந்து போகிறார்கள்

ஆனால் உங்களைக்கண்டால் தான் இப்படி என.

கதிர்காமத்தில் தவமிருந்து 5 பெண்களுக்கு பிறகு பிறந்தவனுக்கு ஊட்டி வளர்த்த 
தொட்டில் பழக்கம் அவருக்கு.

நூறுக்கு இன்னும் சில வருடங்கள் தான். வாழணும் தாயே. வாழ்த்தணும் எம்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட அம்மாவுக்கு என்ட வாழ்த்தையும் சொல்லி விடுங்கள் அண்ணா...அம்மாவின் 100 வயசு பிறந்த நாளை யாழ் உறவுகளையும் கூப்பிட்டு சிறப்பிக்க வேண்டும்...அம்மா 100 வயது வரை வாழ ஆண்டவன் அருள் பாலிக்க வேண்டும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

நூறுக்கு இன்னும் சில வருடங்கள் தான். வாழணும் தாயே.

தாயை வாழ்த்த வயது  எனக்கில்லை.

கடவுளின் கிருபை அவருக்கு என்றும்  இருக்க வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... அம்மா.
தேக ஆரோக்கியத்துடன், பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 92
 
உப்பிட்டவரை...???
 
உலக கோப்பை காற்பந்தாட்டம் நடைபெற்றுவருகிறது.
 
லண்டனில் இருந்தபடி I Love England என்று படம் போட்டு முழக்கம் செய்பவர்களை பார்க்கும் போது
தமிழினம் நன்றி மறந்து நடக்கும் அளவுக்கு வந்துவிட்டதா என தோன்றுகிறது.
அத்தனை பேரும் பிரான்சிலிருந்து அல்லது ஐரோப்பிய நாடுகளிலிருந்து லண்டன் சென்றவர்கள்.
 
முகமோ அல்லது உறவோ தெரியாமல்
அகதியாக ஓடி வந்தவரை அரணைத்தது
சாப்பாடு போட்டது
அகதிப்பணம் கொடுத்தது
முதல் சம்பளம் கொடுத்தது
எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதித்து விசா மற்றும் கடவுச்சீட்டு கொடுத்து கௌரவித்தது
 
இது அனைத்தையும் மறந்து
ஆங்கிலம் பேசுவது அறிவை அளக்கும் கருவி என
ஒல்லாந்தர் காலத்து அறிவியலை நம்பி
பாய்ந்து சென்றோரை நினைக்க....
 
சாபம் வேண்டாம் பிழைத்துப்போகட்டும்...
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 92
 
உப்பிட்டவரை...???
 
உலக கோப்பை காற்பந்தாட்டம் நடைபெற்றுவருகிறது.
 
லண்டனில் இருந்தபடி I Love England என்று படம் போட்டு முழக்கம் செய்பவர்களை பார்க்கும் போது
தமிழினம் நன்றி மறந்து நடக்கும் அளவுக்கு வந்துவிட்டதா என தோன்றுகிறது.
அத்தனை பேரும் பிரான்சிலிருந்து அல்லது ஐரோப்பிய நாடுகளிலிருந்து லண்டன் சென்றவர்கள்.
 
முகமோ அல்லது உறவோ தெரியாமல்
அகதியாக ஓடி வந்தவரை அரணைத்தது
சாப்பாடு போட்டது
அகதிப்பணம் கொடுத்தது
முதல் சம்பளம் கொடுத்தது
எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதித்து விசா மற்றும் கடவுச்சீட்டு கொடுத்து கௌரவித்தது
 
இது அனைத்தையும் மறந்து
ஆங்கிலம் பேசுவது அறிவை அளக்கும் கருவி என
ஒல்லாந்தர் காலத்து அறிவியலை நம்பி
பாய்ந்து சென்றோரை நினைக்க....
 
சாபம் வேண்டாம் பிழைத்துப்போகட்டும்...
 

அதே...அதேதான் இஞ்சையும்.....சிற்றிசன் எடுத்துப்போட்டு இஞ்சையிருந்து என்ன நாக்கூத்தையே வழிக்கிறது எண்டு நக்கலடிச்சுப்போட்டு லண்டனுக்கு ஓடினவையள்.....

பெட்டி படுக்கை சோபா அலுமாரி எண்டு எல்லாத்தையும் கட்டிக்கொண்டு போகேக்கை ஜேர்மன்காரனுக்கு நாசியள் எண்டு பட்டத்தையும் குடுத்துட்டு ஓடினவையள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 93

சீமானின் தமிழக அரசியலும் எம்மவர் அரசியலும்

சீமான் புலிகள் பற்றியும் அவர்களது செயல்முறைகள் பற்றியும் அதிகம் முரணாக பேசுகிறார்.

புலிகள் மீது வேறு விதமான சாயலை தூவுகிறார்

அதை தமிழகம் எங்கும் பரப்பகிறார்

இதனால் புலிகள் மீதான பார்வை மாறுகிறது

எனவே அவர் இவ்வாறு பேசுவதை நிறுத்தணும் என எம்மவர்கள் எழுதியும் அதை காவியும் வருகின்றனர்.

உண்மையில் இன்று சீமான் புலிகள் பற்றி பேசியதை தேடும் போது

சில விரும்பத்தகாத வார்த்தைகள் அதிகம் காணப்படுவதை

காவி மெருகூட்டியவர்கள்

இதே எம்மவர்கள்தான் என்பது தான் உண்மையும் எம்முன்னே நடப்பதுமாகும்.

அப்படிப்பார்த்தால் சீமானின் பேச்சை

சீமானை ஏன் நாம் தமிழரைவிட

அதிகமாக காவி அவற்றை பகிரங்கப்படுத்தி வலுச்சேர்த்த பெருமை எம்மவரையே சாரும்.

அப்படிப்பார்த்தால் சீமான் மீதான இவர்களின் குற்றச்சாட்டு இவர் மீதே வலுவாக பதிகிறது.

ஈழத்தமிழினத்தின் மீது அதிகம் பற்றுக்கொண்ட சில தம்பியிடம்

சீமானின் சில முரணான கருத்துக்கள் பற்றி எழுதி விளக்கம் கேட்டேன்.

பதில்: சீமான் செய்வது தமிழகத்துக்கான அரசியல்.

அது (எமக்கு) ஈழத்தவருக்கு புரியாதது.

புரிந்து கொள்ளவும் முடியாதது.


ஒரு கலைஞர் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு

எமது மண்ணில் உள்ளுராட்சி தேர்தலில் கூட வெல்லமுடியாது.

ஆனால் தமிழகத்தில் அவர்கள் தான் முதலமைச்சர்கள் என்றார்.

எனவே சீமானின் எமக்குத்தேவையற்ற

பொருந்தாத கருத்துக்களை

எம்மவர்கள் எம்மவர்களுக்குள் விதைப்பதை நிறுத்தினாலே போதுமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 94
 
கதாநாயகர்களின் ஆட்டம்
 
ஒரு கதாநாயகனை நம்பி எடுக்கப்படும்
படமாக இருந்தாலும் விளையாட்டாக இருந்தாலும்
அது மிக மிக ஆபத்தானதும்
கரணம் தப்பினால் மரணம் என்றவகையில் பொருத்தமற்றதாகவுமே இருக்கும்.
 
இன்று Messi ஆ?
France ஆ?
இன்னும் சில மணித்துணிகளில் தெரிந்து விடும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

Messiஉம் Ronaldo வும் தங்கள் தங்கள் வீட்டுக்குள் போகிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 95
 
கதாநாயகர்களின் ஆட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது
 
போன கிழமை கதாநாயகர்களின் கதை முடிவுக்கு வந்திருக்கிறது. Brésil யை தவிர.
எமக்கெல்லாம் இது விளையாட்டு.
ஆனால் Brésil போன்றவர்களுக்கு அது தான் வாழ்க்கை.
 
France க்கு சவால் விடக்கூடியவர்கள் அநேகமாக அகன்றுவிட்டுள்ள நிலையில்
நம்பிக்கை மேலும் வலுவாகிறது.
 
 
இன்னொரு சந்தோசமும் உண்டு.
 
சனிக்கிழமை போடப்பட்ட கோல்கள் 10
அதில் PSG (Paris saint Germain) வீரர்களால் போடப்பட்ட கோல்கள் 5.
 
இனி Brésil போடப்போவதும் Uruguay போடப்போவதும் நம்ம கணக்கில தானே...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 96
 
இன்று கரும்புலிகள் நாள்
 
காலையில் எழும்பும் போதே ஒருவித சோர்வு ஒட்டிக்கொள்ளும் இவர்களின் தியாகங்களுக்கும் ஏதுமற்று போனதே என.
 
ஒவ்வொரு கரும்புலியும் இறுதியாகச்சொன்ன வார்த்தை தலைவர் கவனம்
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்
 
உலகில் வரலாறுகளில் இப்படியானவர்கள் இருந்தார்கள் என்று சொன்னால் நம்பமுடிவதில்லை
 
இவர்கள் எம் கண் முன்னே
திகதி குறித்து
இலக்கை தேடிச்சென்று மாண்டவர்கள்
எமக்கு தடையாக இருந்தவற்றை அகற்றிச்சென்றவர்கள்
 
உலக வரலாற்றில் இவை அதிசயம்
தமிழருக்கு இவர்கள் பொக்கிசங்கள்
 
 
தமிழ் உள்ளவரை
உங்கள் நினைவு இருக்கும் மாவீரரே.
 
ஒவ்வொரு கரும்புலியும் இறுதியாகச்சொன்ன வார்த்தை தலைவர் கவனம்
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்
 
அதை காக்க பாதுகாக்க ஒன்றாகணும் தமிழர்கள்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 97
 
சுமை அதிகமானாலும் சுகமே....
 
France அரை இறுதிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
France மிகவும் நிதானமாகவும் நாணயமாகவும் விளையாடி இந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள்.
 
 
தொடர்ந்து France அணி விளையாடிக்கொண்டிருந்தால் தொழில்கள் படுத்துவிடும்.
மக்கள் வெளியில் வரமாட்டார்கள்.
வீடுகளுக்குள் தஞ்மடைந்து கொள்வார்கள்.
வருமானம் என்று பார்த்தால் இது தனி நபர்களுக்கு சுமையை அதிகரிக்கச்செய்வது தான்.
 
ஆனாலும் பிரெஞ்சு மக்களின் நல்லது கெட்டதில் பங்கெடுக்கணும்.
அகதியாக ஓடிவந்த எம்மை தாங்கிய மண்ணல்லவா.
 
ஒரு நாட்டின் மகிமை அதை இழந்தவனுக்குத்தான் அதிகம் தெரியும்.
 
ALLEZ LES BLEUS !!!
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 98

பெற்றோரின் கனவுகள்

பிள்ளைகளின் படிப்பு சார்ந்து

ஒரு பெற்றோரின் கனவு ஆகக்கூடுதலாக போனால்

வைத்தியராக்குதல் அல்லது பொறியியலாளர் ஆக்குதல் தானே.

அதே நேரம் பெற்றோர்கள்

தமது பிள்ளைகளின் கல்வியை தீர்மானிப்பதை தற்போதைய உலகம் அனுமதிப்பதில்லை.

எனக்கும் இதில் உடன்பாடில்லை.

ஆனால் எதற்கும் தயாராக்குதல் பெற்றோரது கடமை.

முயற்ச்சியே இல்லாத வாழ்வை பிள்ளைகளுக்கு நாம் முன் மொழிய முடியாதல்லவா.

அவ்வாறே எனது கடைசி மகள்

பிறந்ததிலிருந்தே வாசிப்பு வாசிப்பு வாசிப்பு.

புத்தகங்கள் வேண்டுமானால் அக்கா அண்ணன்மார் உட்பட உடனடியாகக்கிடைக்கும் அவளுக்கு.

புத்தகங்கள் மற்றும் வாசிப்பு மீது அலாதி பிரியம் அவளுக்கு.

அதன்படி நேற்று வந்த உயர்தர சித்தியில்

விஞ்ஞான பாடத்தில் (SVT) 19/20 எடுத்து வைத்தியப்படிப்புக்கு செல்கிறார்.

பிரான்சைப்பொறுத்தவரை வைத்தியப்படிப்பில்

முதலாவது வருடத்தில் தெரிவாகி வருவதென்பது மிகமிக கடினம்.

அதை தாண்டிவிட்டால் தான் உறுதிப்படுத்தமுடியும்.

வந்தால் மலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்கிறேன்  வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், மலையே வரட்டும்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு... உங்கள் மகள்  நிச்சயம்  தனது, இலட்சியத்தில் வெற்றி பெறுவார். வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 99
 
செயல்
 
ஒரு செயலை லட்சம் எழுத்துக்கள் அல்லது பேச்சுக்கள் கூட சமனாக்கிவிட முடியாது.
 
அந்தவகையில்
என்னுடைய உறவுகள் நண்பர்கள் மற்றும் என்னுடன் தொடர்பிலுள்ளவர்கள் எவராயினும்
நான் அடிக்கடி சொல்லும் விடயம் ஏதாவது ஒரு அமைப்பில் செயற்படுங்கள் என்பது தான்.
புலிகளது காலத்தில் கூட நான் புலிகள் சார்ந்து இயங்கினாலும்
புலிகளுடன் சேர்ந்து இயங்குங்கள் என்று சொன்னதில்லை.
ஏதாவது ஒரு அமைப்பில் செயலில் இருக்கணும்.
 
அந்த செயல் என்பது
தாயகத்தின் விடுதலை அல்லது அபிவிருத்தி சார்ந்து இருந்தால் போதுமானது.
எமக்குள் வெவ்வேறான மாற்றுக்கருத்துக்கள் இருந்தபோதும்.
எனது ஊர் சார்ந்தும் அங்குள்ள அமைப்புக்கள் சார்ந்தும் எனது கருத்தும் வேண்டுகோளும் அது தான்
யார் குற்றியும் அரிசியானால் சரி என்பதே எனது எதிர்பார்ப்பு.
 
எனவே தாயகத்திலோ ஊரிலோ புலத்திலோ
ஏதாவது ஒரு அமைப்பில் அங்கத்தவராகி செயல்ப்பாட்டாளராக மாறுங்கள் என்பதே எனது வேண்டுகோள்.
அவ்வாறு மட்டுமே உங்களால்
உங்களது செயற்திறனை காட்டுவதுடன் மட்டுமன்றி
உங்களது கருத்துக்களுக்கும் உங்களது ஆலோசனைகளுக்கும்
அந்த அமைப்பை செவி சாய்க்க செய்யமுடியும். சீரமைக்க முடியும் (தவறுகள் இருந்தால்)
 
மற்றும்படி எந்த அமைப்பிலும் இல்லாது
வெறும் முகநூல் லைக் விரும்பிகளாக
மேடைப்பேச்சாளர்களாக வலம் வருவோர்
அல்லது உள்ள அமைப்புக்களுக்குள் வெளியிலிருந்து குற்றம் பிடிப்போர்
என்னைப்பொறுத்தவரை கையாலாகாதோர்.
 
எதையாவது செய்து மக்களுக்கு சோறு போட முயலும் போது
அதை தட்டிவிடும் எவரும் மனிதர்களாக இருக்கமுடியாது.
மன்னிக்க முடியாதவர்கள் அவர்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 100

தொடர்ந்து சீரியசாக மட்டும் பேசப்படாது.

எங்கள் ஐனாதிபதிக்கு

வாரிசில்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் இன்றுடன் தொலைந்தது எனக்கு.

நன்றி உலகக்கோப்பை அமைப்பினருக்கு.

L’image contient peut-être : une personne ou plus
L’image contient peut-être : 2 personnes, personnes souriantes, personnes debout
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 101
 
பிரான்சும் இங்கிலாந்தும் - மொழிப்போர்
 
இரு நாடுகளுக்குமிடையிலான மொழிப்போர் என்பது
நீண்ட வரலாற்றைக்கொண்டது.
ஒருமுறை ஐரோப்பிய பயணம் வந்திருந்த
தமிழக பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன் அவர்கள் எழுதியிருந்தார்
இரு நாட்டுக்குமிடையே 1 மணித்தியால விமான பயணம் தான்.
ஆனால் ஒரு சொல் கூட ஆங்கிலத்தில் பிரெஞ்சு மக்கள் பேச மாட்டார்கள். தெரியாது என்று.
சிறு வயதில் வாசித்த இதை நான் பிரான்சுக்கு வந்தபோது கண்டேன்.
 
ஆனால் காலங்களும் உலக மாற்றங்களும்
இன்று மாறுதல்களை ஊட்டிச்செல்கின்றன.
அதையும் பார்க்கின்றோம்.
 
இந்த இரு நாட்டவர்களும் மாறிவிட்டாலும்
இந்த இடையில் புகுந்தவர்கள்
அதிலும் எம்மவர்கள்
இதை தற்பொழுதும் அதி தீவிரத்தோடு காவித்திரிவதை
கடந்த உலகக்கோப்பை உதைபந்தாட்டத்தில் காண முடிந்தது.
 
எனக்கு இங்கிலாந்தின் மீது தீராத கோபமும் அடங்காத பகையுமுண்டு.
அது எனது இனத்தை அடிமைகளாக விற்றுச்சென்றது சார்ந்தது.
அதற்கு பரிகாரம் தேடாது மேலும் மேலும் சிங்களத்துக்கு உதவிகளும் காப்பாற்றுதல்களை செய்வதும் சார்ந்தது.
ஆனால் இவர்களுக்கு பிரெஞ்சின் மீது என்ன காட்டம் என்று புரியவில்லை.
எவர் வென்றாலும் பரவாயில்லை
ஆனால் பிரெஞ்சு தோற்கணும் என்பதே இங்கிலாந்திலுள்ள பலரின் நினைப்பாக இருந்தது.
அதில் ஒருத்தர் எழுதியிருந்தார் பிரெஞ்சுக்காரர்கள் வென்றாலும் ஆங்கிலத்தில் தான் அங்கு பேசவேண்டும் என்று.
இது மொழி வெறியன்று வேறேது.
தன்னையே அறியாதவர்கள்
 
இவர்களை பார்த்து பரிதாபப்படுவதை தவிர வேறென்ன செய்யமுடியும்????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 102
 
தமிழகத்தில் இனி...?
 
சுப்பர் சிங்கரில் நாட்டுப்புறக்கலைஞர் செந்தில் வெற்றி பெற்றிருக்கின்றார்.
 
உண்மையில் குரல் வளம் மற்றும் இசைத்திறமை சார்ந்து பலர் இவரைவிட முன்னணியில் இருந்தபோதும் செந்திலே மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
 
இது தமிழகத்தின் இன்றைய மற்றும் அடுத்த கட்டநிலையை தெளிவாக சொல்லிநிற்கிறது.
 
தமிழகத்தில் தமிழனைத்தவிர எவரும் இனி வரமுடியாது என்பதே அது.
 
இந்தநிலையை இளைஞர்களே ஏற்படுத்தி வருகின்றனர் . சென்ற தலைமுறை முடிவுடன் தமிழக இளைஞர்கள் தேர்தல்களிலும் இதை வலுப்படுத்தி தமிழகத்தை தமிழன் ஆளும் நிலையை கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை வருகிறது.
 
இதற்கு நாம் சீமானுக்குத்தான் அதிகம் நன்றி சொல்லணும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 103
 
ஒரு மக்கள் அமைப்பு எவ்வாறு உருவாகணும் செயலாற்றணும்
 
தாயகத்திலோ ஊரிலோ புலத்திலோ
ஒரு மக்கள் சார்பான அமைப்பை உருவாக்கும் போது
அடித்தளத்தை எவ்வாறு உருவாக்குதல் என்பது மிக மிக முக்கியம்.
 
அதன்படி அதன் முதற்படியாக
1)அங்கத்தவரை சேர்த்தல்
2)பொதுக்கூட்டத்தை கூட்டி
நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்தல்
3)அந்த நிர்வாக்குழுவினால் அமைப்பு சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டு வங்கி திறக்கப்படுதல்
4)அங்கத்தவர்களை சந்தாதாரர்களாக மாற்றுதல்
5)அதனைத்தொடர்ந்து
வணிகர்களை செல்வந்தர்களை உத்தியோகத்தவர்களை நிலையான மாத வருமானம் பெறும் ஊழியர்களை அணுகி
அவர்களது பங்களிப்புக்களை உறுதி செய்தல்
6)திட்டங்களை தயாரித்து மக்கள் முன் வைத்தல்
 
பொது வாழ்வில் என் அனுபவப்படி
இவையே ஒரு அமைப்பை உருவாக்கும் அடிப்படை நடவடிக்கைகள்.
இப்படி ஆரம்பிக்கப்படும் அமைப்புக்கள் தான்
மக்களது நம்பிக்கையையும் ஏனைய அமைப்புக்களின் அனுசரணையையும் பெறமுடியும்.
 
அந்தவகையில் தற்பொழுது எமது ஊரில்
புங்குடுதீவு பசுமைப்புரட்சி குழுமம் என்ற அமைப்பு
இந்த அடிப்படையில் தொடங்கி சரியாக பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
 
இதன் அடுத்த கட்டமாக
தம்மால் சேர்க்கப்படும் பணத்துக்கும் மேலாக
அவர்களது செயற்த்திட்டம் இருந்தால்
ஏனைய சகோதர அமைப்புக்களிடம் திட்டத்தை சமர்ப்பித்து
தேவையான மிகுதி பண உதவியை நாடலாம்.
நாடணும்.
அதுவே மண்ணை நேசிப்பவர்களின் அவாவும் செயலுமாகும்.
காத்திருக்கின்றோம். செயலால் ஒன்றிணைவோம்.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 104
 
கனவுகள் மெய்ப்படும் ஆனால்...??
 
 
ஒருவருடைய கனவு அல்லது இலட்சியம் நிறைவேற
சில தலைமுறைகள் காத்திருக்கணும் என்பர்.
அந்தவகையில் சில கனவுகள் அடுத்த அடுத்த தலைமுறையில்
நனவாகியதை கண்டிருக்கின்றோம்
சில கனவுகள் நிறைவேறிய போது அது யாருடைய கனவு என்பதை அறியாமலிருப்போம்.
நான் அறிந்த கனவை அவன் இல்லாதபோதும் நினைவூட்டுவதற்காக இந்தப்பதிவு.
நமக்கு எழுதமுடியும் போது அல்லது உயிரோடிருக்கும் போது சிலவற்றை பதியணும் என்பதற்காகவே எழுதவந்தேன் நான்.
 
 
என்னோடு புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் படித்தவன் Krishnakumar.
அவனுக்கு பட்டப்பெயர் DMO என்பது.
தான் ஒரு நாள் வைத்தியராவேன் என அவன் கூறியதால் அப்பட்டப்பெயர் அவனுக்கு வந்தது.
சிலர் இதை வைத்து அவனை கேலி செய்தபோதும் அவன் அது பற்றி அலட்டிக்கொண்டதில்லை.
 
நேற்று ஒரு பதிவு பார்த்தேன்.
அதில் அவனது மருமகள் வைத்தியராகிய செய்தி வந்திருந்தது.
மாமாவின் கனவை மருமகள் அறிந்திருந்தாரா என்பது தெரியவில்லை.
ஆனால் அவனது கனவு மருமகளால் அடையப்பெற்றுள்ளது. நன்றி தாயே.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
    • கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா காலம்: நான்காம் ஈழப்போர்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.