Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரறிவாளன் பரோலில் செல்ல அனுமதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பேரறிவாளனை பரோலில் செல்ல அனுமதிப்பதற்கு தமிழக அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி பேரறிவாளனின் தாயாரின் கோரிக்கையை ஏற்று இவரை ஒரு மாதம் பரோலில் செல்ல தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதற்கான அரசாணை தற்போது வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தனது மகனுக்கு பரோல் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பேரறிவாளனின் தாயார் தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்து வந்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்தன.

அந்த வகையில் தற்போது பேரறிவாளனுக்கு 26 வருடங்களுக்குப் பிறகு ஒருமாத காலம் பரோல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு மாதகாலம் அவர் பொலிஸ் பாதுகாப்பில் இருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

தாயகத்தில் வைத்தியர்கள், தாதிகள், நோயாளர்கள்,மாணவ மாணவிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்த இந்திய படைகளை அனுப்பியவரான ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் பற்றரி வித்தமைக்காக தண்டனை பெற்று 26 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்து வரும் 7 பேர்களில் ஒருவரான பேரரிவாளனுக்கு ஒரு மாத பரோல் கிடைத்து இருப்பது சந்தோசம். .


இந்த தற்காலிக விடுவிப்பு நிரந்தர விடுதலையாக மாற வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

வல்லாதிக்க சக்திகளிடமிருந்து நீதியைப்பெறுதலென்பது முயற்க்கொம்பே. தொடர் போராட்டமூடே கிடைத்த விடுமுறை நிரந்தர விடுதலையானால் மகிழ்ச்சி.

பேரறிவாளன் 26 ஆண்டுகளுக்குப் பிறகு பரோலில் விடுவிப்பு!

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன்  26 ஆண்டுகளுக்குப் பிறகு பரோலில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். 

பேரறிவாளன்

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு  வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பேரறிவாளன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையைக் காண பரோல் கோரியிருந்தார்.

26 ஆண்டுகளாக சிறையில் இருந்து பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான அரசாணையை பிறப்பித்தும், வேலூர் சிறைச்சாலைக்கு அனுப்பியது . இதனைத் தொடர்ந்து பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  அவரை காவல்துறை வேனில் போலீசார் திருப்பத்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

 

திருப்பத்தூரில் உள்ள அவருடைய வீட்டில்தான் தங்கியிருக்க வேண்டும். பத்திரிகை, டிவிகளுக்கு பேட்டி கொடுக்க கூடாது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

http://www.vikatan.com/news/tamilnadu/100269-perarivalan-release-by-parole.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னும் கற்காலத்தில் வசிக்கும் கிந்தியர்களுக்கு ஞாயதர்மம் புரியாது ..... பேரறிவாளனின் வாழ்க்கையை அழித்துவிட்டார்கள் கொடிய அரக்கர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

 

26 வருடங்கள் இழந்த சிரிப்பு மீண்டும் இந்த அம்மாவில். இது நிரந்தரமாக வேண்டும்.

Image may contain: 1 person, smiling, eyeglasses and closeup

'பேட்டி கொடுக்கக் கூடாது' - வீட்டுக்குச் சென்று பேரறிவாளனிடம் கையெழுத்து வாங்கியது போலீஸ்

 

perarivalan_5_11381.jpg

தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுக்கக் கூடாது என்று பேரறிவாளனுக்குக் காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது. ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளன் வீட்டுக்கு இன்று சென்ற காவல்துறையினர் அவரிடம் கையெழுத்து வாங்கிச் சென்றனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
26 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பேரறிவாளன், தன்னை பரோலில் விடுவிக்கக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினார். இதை தமிழக அரசு பரிசீலனை செய்துவந்தது. சுமார் ஒரு மாதத்துக்கு மேல் கோரிக்கை நிலுவையிலிருந்த நிலையியில் நேற்றிரவு பேரறிவாளனை தமிழக அரசு ஒரு மாதம் பரோலில் விடுவித்தது. தமிழக உள்துறை செயலாளர், வேலூர் சிறைத்துறை டி.ஜ.ஜி-க்கு இது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்தார்.

இதையடுத்து, பேரறிவாளன் நேற்றிரவு பலத்த பாதுகாப்புடன் வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அவரைத் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்கக் கட்டியணைத்து வரவேற்றார். இதனிடையே, பேரறிவாளனுக்கு தமிழக காவல்துறை சில நிபந்தனைகளை விதித்துள்ளது. முக்கியமாகத் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளிக்கக் கூடாது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், டி.எஸ்.பி பாலசுப்பிரமணியம் தலைமையில் காவல்துறையினர் இன்று காலை ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளன் வீட்டுக்குச் சென்றனர். அப்போது, பேரறிவாளனிடம் காவல்துறையினர் கையெழுத்து வாங்கிச் சென்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/100291-police-banned-perarivalan-to-appear-before-media.html

பேரறிவாளனுக்கு திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன்..! தாயார் அற்புதம்மாள் உருக்கம்

பேரறிவாளன் பரோலுக்கு பாடுபட்ட ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி என்று அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். 

ARPUTHAMMAL_09300.jpg


முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் சுமார் 26 ஆண்டுகளாக சிறையிலிருந்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை எழுந்துவருகிறது. இந்தநிலையில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை பார்ப்பதற்கு ஒரு மாதகாலம் பரோலில் விடுதலை செய்யவேண்டும் என்று பேரறிவாளன் தமிழக அரசுக்கு கோரிக்கைவைத்திருந்தார். நீண்ட காலத்துக்கு பின்னர் பேரறிவாளனை நேற்று ஒரு மாத கால பரோலில் தமிழக அரசு விடுவித்தது.

இந்த நிலையில் பேரறிவாளன் பரோலில் விடுதலையானதில் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் அவரது தாய் அற்புதத்தம்மாள் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து கூறிய அவர், 'பேரறிவாளனின் பரோல் தற்காலிக மகிழ்ச்சியைத் தருகிறது. பேரறிவாளனை நிரந்தரமாக விடுதலை செய்யவேண்டும்.  பேரறிவாளன் விடுதலைக்கு காரணமாக இருந்த ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றி. பேரறிவாளனுக்கு திருமணம் செய்துவைக்க ஆசைப்படுகிறேன்' என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவருக்கு பெண் பார்க்கும் பணியில் அவரது தாயார் அற்புதம்மாள் ஈடுபட்டுள்ளார். 

http://www.vikatan.com/news/tamilnadu/100285-perarivalans-mother-arputhammal-thanks-media-and-political-leaders-who-all-are-the-reason-of-perarivalans-parol.html

  • கருத்துக்கள உறவுகள்

குவாண்டனாமாவில் இருந்த விடுதலையானவனுக்கே...பேட்டி கொடுக்கவோ....புத்தகம் எழுதவோ..தடையேதும் இல்லை!

ஆனால்...பேரறிவாளனுக்கோ..தடை..!

ஏனெனில்... இந்திய அரசின் மடியில் அவ்வளவு.....கனம்!

அற்புதம் அம்மாவுக்கு  வாழ்த்துக்கள்!

இவ்வளவு தூரம்...வந்ததே.. ஒரு அற்புதம் தான்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அப்பாவிகளின் விடுதலை நிரந்தரமாவதோடு.. ராஜீவ் காந்தி என்ற தமிழினப் படுகொலையாளன்.. போர்க்குற்றவாளிக்கு உடந்தையாக இருந்த அத்தனை பேரும்.. சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டு... முழுமையாக விசாரிக்கப்பட்டு.. தண்டிக்கப்படுவதோடு.. பாதிக்கப்பட்ட தமிழீழ மக்களுக்கும் மண்ணுக்கும்.. ஹிந்திய பிராந்திய வல்லாதிக்கம் நட்ட ஈடு வழங்க வேண்டும்.  நீதி கிடைக்கப் பெற வேண்டும். 

இவரின் விடுதலையை எப்போதும் வலியுறுத்தி வந்த.. நாம் தமிழர் கட்சிக்கும்.. அண்ணன் சீமானுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட வேண்டும். இவர்களின் விடுதலையை நிரந்தரமாக்க தொடர்ந்து அவர்கள் குரல் தர வேண்டும். 

அண்மையில்.. கூட இவருக்கு பரோ வழங்க முடியாது என்று சொன்ன போது.. தான் ஆட்சிக்கு வந்தால்.. முதல் வேலை இவர்களை விடுதலை செய்வது தான் என்று பகிரங்கமாகவே சீமான் செய்தியாளர்களிடம் சொன்னதோடு.. பரோ வழங்க முடியாது என்ற அறிவிப்பை கடுமையாகச் சாடி இருந்தார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீடு திரும்பினார் பேரறிவாளன்! வரவேற்ற மக்கள் கூட்டம்! பொலிஸார் குவிப்பு! நிபந்தனைகள் விதிப்பு

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 26 வருடமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் இன்று பரோலில் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

ஜோலார்ப்பேட்டையில் பேரறிவாளன் வீடு உள்ளது. வேலூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் பலத்த பாதுகாப்புடன் ஜோலார்ப்பேட்டை அழைத்து வரப்பட்டார்.

இதனையடுத்து இரவு 9 மணியளவில் பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அவர் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டார்.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

ஜோலார் பேட்டை எல்லையில் மக்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். 26 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது சொந்த ஊரான ஜோலார் பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார் பேரறிவாளன்.

பரோலில் வெளிவந்துள்ள பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள், தந்தை குயில்தாசன், சகோதரி உறவினர்களும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

26 ஆண்டுகாலம் சிறையில் கழித்த மகன் முதன் முறையாக பரோலில் வந்ததை அடுத்து உணர்ச்சி பெருக்கோடு காணப்பட்டார் அற்புதம்மாள்.

பேரறிவாளனுக்கு உறவினர்கள் ஆரத்தி எடுத்து உச்சி மோர்ந்து வரவேற்றனார்.

பேரறிவாளன் வருகையைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்

தந்தை உடல்நலம் கவனித்துக் கொள்ள பேரறிவாளனுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஒரு மாத காலம் பரோல் அளிக்கப்பட்டுள்ளது.

ஜோலார் பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் பேரறிவாளன் தினசரியும் கையெழுத்து போட வேண்டும்.

வேலூர் சிறையில் அளித்துள்ள முகவரியில்தான் பேரறிவாளன் தங்க வேண்டும்.

மேலும் வீட்டை விட்டு வெளியே செல்ல தடையுள்ளது.

இந்த 30 நாட்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது.

மேலும் பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு பேட்டி தரக்கூடாது எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் பேரறிவாளனை தலைவர்கள் சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

20 வயதில் சிறைக்கு சென்ற பேரறிவாளன் 26 ஆண்டுகள் கழித்து 46 வயதில் வெளியே அதுவும் பரோலில் வந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

திட்டமிட்டு போலியாக புனையப்பட்ட வழக்கில் பலிக்கடா ஆகிய பேரறிவாளனுக்கு கிடைத்தது அற்ப நிவாரணம் மட்டுமே!
தர்மம் இன்னமும் விழித்துக்கொள்ளவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

  அதிமுகவிற்கு ஆதரவா?

பேரறிவாளனின் தாயார்,  மறைந்த  முதல்வர்  ஜெயலலிதாவை இரண்டு,  மூன்று  முறை   சந்தித்து,
தனது மகனை... விடுவிக்கும் படி, கும்பிட்டு கேட்டார்.  
மறைந்த.... முதல்வர் முயற்சி செய்தாரா... இல்லையா என்று தெரியவில்லை.

ஆனால்.... கட்டுமரம் கருணாநிதி, அன்னை சோனியாவுடன்... "லாலி பாப்"  தின்ற   நேரத்தில், 
இலகுவாக முடிந்திருக்க வேண்டிய விடயம். கட்டு மரத்துக்கு... செய்ய மனமில்லை.

இப்போ... நடந்திருப்பது, பேரறிவாளனின்  தாயார்   அற்புதம்மாளுக்கு கிடைத்த சந்தோசம், 
அந்த மகிழ்ச்சியில்..உலகத்  தமிழர் மகிழ்ச்சி அடைகின்றோம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தற்காலிக பரீட்சார்த்த நடவடிக்கை மூலம் கிந்தி மோடி அரசு தமிழகத்தை நாடிபிடித்து பார்க்கின்றது. தனக்கு தலையாட்டும் தற்போதைய அதிமுக ஆட்சியை அளவுகோல் பார்க்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்


26 வருடங்கள்.

என்ன ஒரு கேவலமான‌ உலகம் நாடு இது.

எத்தனையே பெரிய குற்றவாளிகள் வெளியே இருக்க ஓர் அப்பாவி இப்படி  சந்தர்ப்பவசத்தால் குற்றவாளியாக்கப்பட்டு கயவர்கள் கைகளினால் உபாதிக்கப்ப்டுகின்றார். 

கூடிய சீக்கிரம் வெளிவர பிரார்த்திகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.