Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணம்.//மட்டக்களப்பில் காந்தி ஜெயந்தி தினம் கடைப்பிடிப்பு

Featured Replies



மட்டக்களப்பில் காந்தி ஜெயந்தி தினம் கடைப்பிடிப்பு





 



 




மட்டக்களப்பில் காந்தி ஜெயந்தி தினம் கடைப்பிடிப்பு




 Share


  •  


  •  


  •  


  •  


  •  





மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் காந்தியின் 148வது ஜெயந்திதினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.



மட்டக்களப்பு நகரில் காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலையருகே இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்கத்தின் தலைவர் ஏ.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



unnamed-1-3.jpg


unnamed-2-3.jpg


unnamed-3-3.jpg


unnamed-4-3.jpg


unnamed-5-2.jpg


unnamed-6-2.jpg


unnamed-7-2.jpg


unnamed-16.jpg




http://newuthayan.com/story/33946.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது இவர்களிடம் இதை மட்டுமே எதிர்பார்க்கலாம் காந்தி வேண்டாம் டா இங்க சொன்னால் கேட்கிறாங்களா நேதாஜி போல் ஆட்களுக்கு சிலை வைங்கடா  ச்ல்யூடாவது அடிச்சிட்டு வேலைக்கு போகலாம் 

என்னை பொறுத்தவரைக்கும் காந்தியை எனக்கு பிடிக்காது  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

 

என்னை பொறுத்தவரைக்கும் காந்தியை எனக்கு பிடிக்காது  

Why ,why ,?நேதாஜி ஜீ பயங்கரவாதி:10_wink:

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்தில் காந்தி ஜெயந்தி தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

Why ,why ,?நேதாஜி ஜீ பயங்கரவாதி:10_wink:

பலருக்கு பயங்கரவாதியாக தெரிபவன் சிலருக்கு நல்லவாக தெரிவான் 

நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் images?q=tbn:ANd9GcQ-McQxYKLuhxjTWfR2TuFசந் திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்ட த் தலைவராவார். ‘இந்தியா உடனடியாக சுதந்திரமடை ய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!’ என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த ஆங்கிலே யரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலை க்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக

 

போராடிய மாவீரன் நேதாஜி 

  • தொடங்கியவர்
‘ஆயுதத்தைக் கைவிட்டாலும் அஹிம்சையைக் கைவிடவில்லை’
 

image_724e605278.jpgவா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான்

“தமிழ் மக்கள், ஆயுதத்தைக் கைவிட்டுள்ளபோதிலும், அஹிம்சையைக் கைவிடவில்லை” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இந்திய, இலங்கை அரசாங்கங்கள், அஹிம்சைப் போராட்டங்களுக்கு மதிப்பளிக்கும் தன்மை குறைவடைந்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, காந்தி பூங்காவில் இன்று (02) நடைபெற்ற காந்தி ஜெயந்தி தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“மகாத்மா காந்தி மேற்கொண்ட அஹிம்சைப் போராட்டம் காரணமாகவே, இந்தியாவும் இலங்கையும் சுதந்திரமடைந்தன. தந்தை செல்வா, காந்தியின் வழியையே பின்பற்றியிருந்தார். அஹிம்சை வழியிலேயே போராட்டங்களை நடத்தினார்.

“1956ஆம் ஆண்டு, தமிழரசுக்கட்சியின் தலைவரான தந்தை செல்வா மேற்கொண்ட சத்தியாக்கிரகம் மூலமே, இந்த நாட்டில் தமிழ் மொழிக்கு அங்கிகாரம் கிடைத்தது.

“அஹிம்சைப் போராட்டங்கள் மூலம் பல விடயங்கள் நடத்தப்பட்டுள்ளன. காணாமல்போன உறவுகள் கூட, 100 நாட்களையும் தாண்டி அஹிம்சை ரீதியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

“அந்தவகையிலேயே, சம்பந்தர் ஐயாவும் அஹிம்சையைக் கையில் ஏந்தி, யாருக்கும் எந்தத் தீங்கும் ஏற்படாத வகையில், அரசாங்கத்துடன் கூட நிதானமாக பேசிக்கொண்டு, தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றார்” என்றார்.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/ஆயுதத்தைக்-கைவிட்டாலும்-அஹிம்சையைக்-கைவிடவில்லை/73-204855

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

பலருக்கு பயங்கரவாதியாக தெரிபவன் சிலருக்கு நல்லவாக தெரிவான் 

 

போராடிய மாவீரன் நேதாஜி 

உண்மை, ஆனால் அந்த பலர் விடுதலைக்கு எதிரானவர்கள் என்பதையும் கணக்கிலெடுக்க வேண்டும்..

4 minutes ago, நவீனன் said:

“மகாத்மா காந்தி மேற்கொண்ட அஹிம்சைப் போராட்டம் காரணமாகவே, இந்தியாவும் இலங்கையும் சுதந்திரமடைந்தன. தந்தை செல்வா, காந்தியின் வழியையே பின்பற்றியிருந்தார். அஹிம்சை வழியிலேயே போராட்டங்களை நடத்தினார்.

காந்தி தான் சிறிலன்காவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்திருக்கிறார் என்று இவையள் பாடம் எடுக்கினம் ,ஆனால் சிங்களவன் காந்தியை கண்டுகொள்ளவே இல்லை

யாரப்பா இந்த காந்தி?

அந்தாளுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்?

இப்பிடி ஒருத்தர்ட்டகேட்க, அவர் சொன்னது - அவர் தான் இந்தியாவின் சம்பந்தன் என்று!

  • தொடங்கியவர்

யாழில் மகாத்மா காந்தியின் 148 ஆவது ஜெயந்தி தினம்

0222222-1.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மகாத்மா காந்தியின் 148 ஆவது ஜெயந்தி தினம் மற்றும் சர்வதேச அஹிம்சை தின நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் யாழ்.போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள காந்தி சிலைக்கு முன்பாக இடம்பெற்றது.

அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.சிவகரன் தலைமையில் ஆரம்பமாகிய நிகழ்வில் இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து இந்து, கிறிஸ்தவ, பௌத்த மத தலைவர்கள் உள்ளிட்டவர்களும் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த பேச்சாளர் ஞானசம்பந்தன் ஆகியோரும் மலர்மாலை அணிவித்ததுடன் மலரஞ்சலியும் செலுத்தினார்கள்.

அத்துடன் மகாத்மா காந்தி கீதம் வேம்படி மகளீர் கல்லூரி, யாழ்.இந்துக் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களால் இசைக்கப்பட்டது. பின்னர் அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் உறுப்பினர்களும் மலர் மாலை அணிவித்ததுடன், யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சண்முகநாதன் மற்றும் காந்தியவாதிகளும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் இந்நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

0222222-2.jpg0222222-3.jpg0222222-4.jpg0222222-5.jpg0222222-6.jpg0222222-7.jpg0222222-8.jpg0222222-9.jpg0222222-10.jpg

http://globaltamilnews.net/archives/43596

  • கருத்துக்கள உறவுகள்

காந்திக்கும் தமிழீழத்தக்கும் என்ன சம்பந்தம். ஒருவேளை அறவிக்கப்படாத கிந்தியாவின் மாநிலமாக்கப்பட்டுவிட்டதா தமிழீழம்.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, nochchi said:

காந்திக்கும் தமிழீழத்தக்கும் என்ன சம்பந்தம். ஒருவேளை அறவிக்கப்படாத கிந்தியாவின் மாநிலமாக்கப்பட்டுவிட்டதா தமிழீழம்.

ஐயா, இந்தமாதிரி இடக்கு மடக்கு கேள்விகளை வடக்கில் ஈழத்தமிழர்கள் கனவிலும் நினைக்ககூடாதென்றுதான் இணை தூதரகமும், அதற்கான எடுபிடிகளையும் யாழ்ப்பாணத்தில் நிறுவியுள்ளார்களே?  man.gif

9 hours ago, நவீனன் said:

யாழில் மகாத்மா காந்தியின் 148 ஆவது ஜெயந்தி தினம்

0222222-1.jpg

0222222-2.jpg0222222-3.jpg0222222-4.jpg0222222-5.jpg0222222-6.jpg0222222-7.jpg0222222-8.jpg0222222-9.jpg0222222-10.jpg

http://globaltamilnews.net/archives/43596

ஹிந்தியை பயங்கரவாதிகள் காந்திக்கு மாலை சூடி, மரக்கன்றுகள் வழங்கி செய்த படுகொலைகளை, எல்லை தாண்டும் பயங்கரவாதங்களை மறைத்துவிட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர் கொஞ்சம் கொஞ்சமாய் சுயத்தை இழந்து வருகிறார்கள். இழக்க வைக்கப் படுகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.