Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெலுங்கன் திருமுருகன் காந்தியின் அரசியல்!!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெலுங்கன் திருமுருகன் காந்தியின் அரசியல்!

 

  • கருத்துக்கள உறவுகள்

இதை நானும் பார்த்தேன். tw_blush: மனதுக்கு ஒவ்வாத விடயங்களை சொல்லும்போது கண்மடல்கள் மூடித்திறக்கும். இந்தக் காணொளியில் 21:33 நேரக்கணக்கில் இவர் பேசுவதைக் கவனித்தால் ஒன்று புலப்படும். தமிழ், தமிழர் என்று பேசும்போது கண்களைமூடித் திறக்கிறார். tw_love:

ஒரு விதத்தில் இக் காணொளி ஏமாற்றம் தான் இருந்தாலும் சிந்திக்கவேண்டிய விசயம். திருமுருகன் காந்தி தமிழர் நலன் விரும்பி என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தது போலவே எனக்கும் இருந்தது. சிறையில் இருந்து வெளிவந்தது மிக மகிழ்ச்சியையும் தந்தது. சீமானும் இவரும் ஒரே பாதையில் செல்வார்கள் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். அதுதான் இக் காலத்தின் தேவையாகவும் இருந்தது. தேர்தலில் பங்கு பெறாத இயக்க அரசியல் தான் சரி என்று இவர் முன்வைத்த கருத்து சீமானுக்கு எதிரானது. ஏனெனில் சீமான் பேசிய கொள்கைகளையே இவரும் சமகாலத்தில் பேசி வாக்கு அரசியல் சரிவராது இயக்க அரசியல் தான் சரி என்கின்றார். இவரின் இக்கருத்தின் விழைவு மீண்டும் கருணாநிதி குடும்பமே தமிழகத்தை ஆழும் நிலைக்கு இட்டுச் செல்கின்றது. 

திராவிட இயக்கம் என்ற மாபெரும் எழுச்சியை திமுக அதிமுக என்பன எப்படி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி தக்கவைக்க பாவித்ததோ அவ்வாறே தமிழ்த்தேசீயம் என்ற எழுச்சியையும் ஏதோ ஒரு வகையில் மறைமுகமாக கைப்பற்றுதலுக்கான சூழ்ச்சிகள் தொடரத்தான் செய்யும். இதைக் கடந்து செல்லுதல் என்பது மிகப் பெரிய சவாலாகவே தமிழகத் தமிழர்களுக்கு இருக்கும். 

Edited by சண்டமாருதன்

  • கருத்துக்கள உறவுகள்

நான்,   மிகவும் நம்பிய ஒரு மனிதர். கடைசியில்...   அவரும் கவிழ்த்து விட்டார்.
எந்தப்  புற்றுக்குள்... எந்தப் பாம்பு இருக்கும் என்று கணிக்க முடியாது என்பதை  நிரூபித்து  விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இசைக்கலைஞன் said:

இதை நானும் பார்த்தேன். tw_blush: மனதுக்கு ஒவ்வாத விடயங்களை சொல்லும்போது கண்மடல்கள் மூடித்திறக்கும். இந்தக் காணொளியில் 21:33 நேரக்கணக்கில் இவர் பேசுவதைக் கவனித்தால் ஒன்று புலப்படும். தமிழ், தமிழர் என்று பேசும்போது கண்களைமூடித் திறக்கிறார். tw_love:

21:33 அல்ல இவர் தொடக்கத்தில் இருந்தே கண்ணை  மூடித்திறக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

6:05 நேரக்கணக்கில்.. திருமுருகன் காந்தி வலப்புறமாக பின்னால் நிற்பவரின் பெயர் மல்லை சத்யா. இவர் மதிமுக செயலாளர்களுள் ஒருவர். வைகோவின் தீவிர விசுவாசி. :D:

  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கடா........... எல்லாமே குழப்பமாயிருக்கு, என்னும் என்ன எல்லாம் நடக்க இருக்கின்றதோ ..... எதுவாயினும் நல்லது ''தமிழர்களுக்கு '' நடக்கட்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, இசைக்கலைஞன் said:

6:05 நேரக்கணக்கில்.. திருமுருகன் காந்தி வலப்புறமாக பின்னால் நிற்பவரின் பெயர் மல்லை சத்யா. இவர் மதிமுக செயலாளர்களுள் ஒருவர். வைகோவின் தீவிர விசுவாசி. :D:

DMQIbKKWkAAdRtO.jpg

ஜெனிவாவிற்கு போனேன் ஈழ இனப்படுகொலை எதிராக பேசினேன் திரும்பி வந்தேன் கொலை செய்த கூட்டணியோடு கூட்டணி போட்டேன்!
இதுதான் வைகோவின் அரசியல்.....

 

சீமானுக்கு எதிராக வளர்ந்து விடுவாரோ எனும் அச்சத்தில் நாம் தமிழர் கட்சியினரால் திருமுருகன் காந்திக்கு எதிராகத் ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பரவவிடப்பட்டுள்ளதாக சொன்னார்கள் அதுவாக இருக்க கூடும் நான் பார்க்கவில்லை இன்னும், ஈழத்தமிழராகிய எங்களுக்கு இவர்கள் மூவரும் தேவை.அவர்கள் உள்ளூர் அரசியலில் அடிபடுகிறார்கள் எனில் நாம் யார் மீதும் அவதூறு பரப்பாமல் விலகி இருப்போம் வெவ்வேறு வழிகளில் மூவரும் இதுவரையும் எமக்கு உதவியுள்ளார்கள் எதிர்காலத்திலும் தேவைப்படும் 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அபராஜிதன் said:

சீமானுக்கு எதிராக வளர்ந்து விடுவாரோ எனும் அச்சத்தில் நாம் தமிழர் கட்சியினரால் திருமுருகன் காந்திக்கு எதிராகத் ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பரவவிடப்பட்டுள்ளதாக சொன்னார்கள் அதுவாக இருக்க கூடும் நான் பார்க்கவில்லை இன்னும், ஈழத்தமிழராகிய எங்களுக்கு இவர்கள் மூவரும் தேவை.அவர்கள் உள்ளூர் அரசியலில் அடிபடுகிறார்கள் எனில் நாம் யார் மீதும் அவதூறு பரப்பாமல் விலகி இருப்போம் வெவ்வேறு வழிகளில் மூவரும் இதுவரையும் எமக்கு உதவியுள்ளார்கள் எதிர்காலத்திலும் தேவைப்படும் 

 

நல்லதொரு கருத்து அபராஜிதன். சில மேலதிக தகவல்கள்.

1) இந்தக் காணொளியை பரவ விட்டவர்கள் தமிழ் சிந்தனையாளர்கள் பேரவையினர். இவர்கள் தீவிர தமிழ்தேசிய கோட்பாடுகளைக் கொண்டவர்கள்.

2) திருமுருகன் காந்தி நாம் தமிழர் கட்சிக்கு எதிரான நிலையை சிறைக்கு செல்லும்போதே எடுத்துவிட்டவர். இருந்தும் அவர் குறித்து எதுவும் பேச வேண்டாம் என்பதுதான் நாதகவில் இருந்து வந்த உள் செய்தி. ஆனால் பலர் இக்காணொளிகளை பதிவிடுகிறார்கள்.

தமிழகத்தில் தமிழ்த்தேசீயம் என்பது மிகச் சிக்கலான விசயம். இதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றது. இந்திய தேசீயவாதம் திராவிட கருத்தியல் இவை இரண்டுடனும் முரண்பட்டு அதைக் கடந்து செல்ல வேண்டும். இனத்தேசீய ஒருமைப்பட்டிற்கே சாதியம் அது சார்ந்த அரசியல் பெரிய சவாலாக உள்ளது. தமிழகத்தின் தலைநகரம் முன்னர் தெலுங்கு பிரதேசமான சென்னையாக இருப்பதும் அங்கு திரைப்பட வியாபாரம் மருத்துவ மனைகள் கல்வி நிறுவனங்கள் ஏனைய வியாபாரங்களில் தெலுங்கர்களின் ஆதிக்கம் என பல காரணங்கள் அரசியல் அதிகராத்தில் தலையிடுகின்றது. உணர்ச்சி வசத்தால் மட்டும் தமிழ்த்தேசியத்தை கட்டியெழுப்ப முடியாது. புத்திசாலித்தனமான கேம். சிங்களவன் உணர்ச்சிவசப்பட்டிருந்தால் கருணா சரணடைந்த உடனே போட்டிருப்பான் ஆனால் கருணாவை பயன்படுத்திக்கொண்டான். அதுபோல் தான் தமிழ்த்தேசீயத்தை வைத்து கேம் ஆடுபர்களின் ஆட்டத்தை சரியான இடத்தில் மாற்றி தனதாக்கிக் கொண்டு தெடர்ந்து தமிழ்த்தேசியம் முன்னேறுதல் ஒன்றே வழி. ஈழத்தமிழர்களை பொறுத்தவரை எமது ஆதரவுக் குரல்கள் எத்தகைய பின்னணியை கொண்டிருந்தாலும் எமக்கு சாதகமாக இருக்கும்வரை அவற்றைப் பயன்படுத்த வேண்டியதுதான். 

11 hours ago, அபராஜிதன் said:

சீமானுக்கு எதிராக வளர்ந்து விடுவாரோ எனும் அச்சத்தில் நாம் தமிழர் கட்சியினரால் திருமுருகன் காந்திக்கு எதிராகத் ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பரவவிடப்பட்டுள்ளதாக சொன்னார்கள் அதுவாக இருக்க கூடும் நான் பார்க்கவில்லை இன்னும், ஈழத்தமிழராகிய எங்களுக்கு இவர்கள் மூவரும் தேவை.அவர்கள் உள்ளூர் அரசியலில் அடிபடுகிறார்கள் எனில் நாம் யார் மீதும் அவதூறு பரப்பாமல் விலகி இருப்போம் வெவ்வேறு வழிகளில் மூவரும் இதுவரையும் எமக்கு உதவியுள்ளார்கள் எதிர்காலத்திலும் தேவைப்படும் 

இவ்வாறான ஆரோக்கியமான அணுகுமுறையால் தான் ஏதாவது பிரயோசனம் உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, அபராஜிதன் said:

...ஈழத்தமிழராகிய எங்களுக்கு இவர்கள் மூவரும் தேவை.அவர்கள் உள்ளூர் அரசியலில் அடிபடுகிறார்கள் எனில் நாம் யார் மீதும் அவதூறு பரப்பாமல் விலகி இருப்போம் வெவ்வேறு வழிகளில் மூவரும் இதுவரையும் எமக்கு உதவியுள்ளார்கள் எதிர்காலத்திலும் தேவைப்படும்

சரியாக சொன்னீர்கள் ஜி..!

சிறு துரும்பும் பல் குத்த உதவும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • 4 months later...

தமிழ் நாட்டில் முகத்திரை கிழிக்கப்பட்ட திராவிட அரசியலாளர்கள் தமிழ்த் தேசியத்தின் பேரெழுச்சியைக் கண்டு அதிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள அதனையும் தமது சூழ்ச்சி வலையில் சுருட்டிக்கொள்ள தற்போது திருமுருகன் காந்தியைக் களத்திலிறக்கியுள்ளார்கள். இந்த கள இறக்கத்தின் பின்பு சீமான் பேசும் மண்சார்ந்த பண்பாட்டு மீட்சியுடன் கூடிய தற்சார்புத் தமிழ்த் தேசியக் கருத்தியலை அடியொற்றித் தானும் பேச ஆரம்பித்து விட்டார் திருமுருகன் காந்தி.

இவரை வைத்து சீமானை இல்லாமலாக்கும் நரி வேலைகளுக்கு ஒட்டு மொத்த திராவிட அரசியலாளர்களும் பின்னின்று உழைக்கின்றனர். ஏலவே இந்தியாவுடன் நக்கிப் பிழைப்பதை இராசதந்திரம் என்று காட்டும் திருநாவு, காசி வகையறாக்களின் பத்துக் கோடி தமிழர்களை முட்டாள்களாக்கும் அரசியலை சீமான் ஆங்காங்கே எதிர்த்தமையால் வந்த கோபத்தில் அவர்களும் அரசியல் வரட்சியில் அலையும் புலம்பெயரமைப்புகளை தமது கைக்குள் போட்டு வைத்திருக்கும் சிலரின் மூலம் திருமுருகன் காந்தியை முன்னிலைப்படுத்தி ஈழத்தமிழர் அரசியலை முன்னெடுக்க வேலை செய்கின்றனர். காசியானந்தன் வகையறாக்கள் செய்யும் அரசியல் ஈழத்தை மறுபடியும் இந்திய மாயையில் வீழ்த்தி விடுவதோடு பத்துகோடி தமிழருக்கும் ஆபத்தானதாக அமையும்.

10 கோடி உலகத் தமிழர் அனைவரும் தமிழ்த் தேசியம் என்ற உயிர்மைச் சிந்தாந்தத்தின்  அடிப்படையில் ஒன்றாகி உலகத் தமிழர்களுக்கான பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்குவதை வெறுக்கும் இந்தியாவுக்கு உதவியாக இருக்கப் போகின்றவர்களே இந்த திருமுருகனை முன்னிலைப்படுத்தும் திராவிடக் கூட்டம். சீமானை இலக்கு வைத்து இவர்கள் போடும் ஆட்டத்திற்கு ஈழத்தமிழர்களின் வலி தோய்ந்த அரசியல் பயன்படுத்தப்படுவது பேராபத்தானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, தம்பியன் said:

தமிழ் நாட்டில் முகத்திரை கிழிக்கப்பட்ட திராவிட அரசியலாளர்கள் தமிழ்த் தேசியத்தின் பேரெழுச்சியைக் கண்டு அதிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள அதனையும் தமது சூழ்ச்சி வலையில் சுருட்டிக்கொள்ள தற்போது திருமுருகன் காந்தியைக் களத்திலிறக்கியுள்ளார்கள். இந்த கள இறக்கத்தின் பின்பு சீமான் பேசும் மண்சார்ந்த பண்பாட்டு மீட்சியுடன் கூடிய தற்சார்புத் தமிழ்த் தேசியக் கருத்தியலை அடியொற்றித் தானும் பேச ஆரம்பித்து விட்டார் திருமுருகன் காந்தி.

இவரை வைத்து சீமானை இல்லாமலாக்கும் நரி வேலைகளுக்கு ஒட்டு மொத்த திராவிட அரசியலாளர்களும் பின்னின்று உழைக்கின்றனர். ஏலவே இந்தியாவுடன் நக்கிப் பிழைப்பதை இராசதந்திரம் என்று காட்டும் திருநாவு, காசி வகையறாக்களின் பத்துக் கோடி தமிழர்களை முட்டாள்களாக்கும் அரசியலை சீமான் ஆங்காங்கே எதிர்த்தமையால் வந்த கோபத்தில் அவர்களும் அரசியல் வரட்சியில் அலையும் புலம்பெயரமைப்புகளை தமது கைக்குள் போட்டு வைத்திருக்கும் சிலரின் மூலம் திருமுருகன் காந்தியை முன்னிலைப்படுத்தி ஈழத்தமிழர் அரசியலை முன்னெடுக்க வேலை செய்கின்றனர். காசியானந்தன் வகையறாக்கள் செய்யும் அரசியல் ஈழத்தை மறுபடியும் இந்திய மாயையில் வீழ்த்தி விடுவதோடு பத்துகோடி தமிழருக்கும் ஆபத்தானதாக அமையும்.

10 கோடி உலகத் தமிழர் அனைவரும் தமிழ்த் தேசியம் என்ற உயிர்மைச் சிந்தாந்தத்தின்  அடிப்படையில் ஒன்றாகி உலகத் தமிழர்களுக்கான பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்குவதை வெறுக்கும் இந்தியாவுக்கு உதவியாக இருக்கப் போகின்றவர்களே இந்த திருமுருகனை முன்னிலைப்படுத்தும் திராவிடக் கூட்டம். சீமானை இலக்கு வைத்து இவர்கள் போடும் ஆட்டத்திற்கு ஈழத்தமிழர்களின் வலி தோய்ந்த அரசியல் பயன்படுத்தப்படுவது பேராபத்தானது.

சீமானை ஏன் அழைக்கவில்லை மே17 இயக்கத்தின் விளக்கம்...

படிச்சுட்டு செத்துடுங்கடா தும்பிகளா

2011 நினைவேந்தலுக்கு சீமானை அழைத்த போது அனைவரும் வந்தமர்ந்து நிகழ்வு தொடங்கும் வரை நினைவேந்தலுக்கு வரமாட்டேனென சொன்னவர் , கடர்கரையில் 50000 தமிழர்கள் திரண்ட செய்தியறிந்தவுடன் பங்கேற்றார். ஐயா. காசி ஆனந்தன், நெடுமாறன், புலமைபித்தன் போன்றவர்களை ஒதுக்கிவிட்டு, கிட்டதட்ட புலமைபித்தனை கீழே தள்ளியவாறே முன்னேறி கூட்டத்தில் தன்னை முன்னிருத்தினர் அவருடன் வந்தவர்கள். நினைவேந்தல் நிகழ்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து நிகழ்வை ஒருங்கிணைக்கும் பொழுதில் கூட்டத்திற்குள் தனியே அமந்து கூட்டத்தினை இரண்டாக பிரித்தனர்.

இந்நிகழ்வு நடந்த ஒரு மாதத்தில் மூவர் தூக்கு அறிவிப்பு வெளியானது. அன்றிரவு துயரத்தோடு செய்வதறியாது திகைத்து நின்றபோது அனைத்து கட்சி, இயக்கத்தினரை ஒன்றாக இணைத்து கூட்டமைப்பாகி போராட்டம் நடத்துவோமென திட்டமிட்டனர் தோழர்கள்.. நெடுமாறன், வைகோ திருமா,ராமதாஸ்,மற்றும் இயக்கங்கள் அனைத்தும் இணைக்கவேண்டுமென முயன்று சீமானையும் சந்தித்து ஒன்றாய் நிற்கவேண்டுமென்ற போது...

அவர்கள் அனைவரும் ஒன்றாய் நிற்கட்டும் நாம் மட்டும் தனித்து நிற்போமென்றார். இல்லை ஒட்டுமொத்த தமிழர் இயக்கங்களும் ஒன்றாக நிற்பதை மறுத்தார். அனைவரும் இணைந்து பொதுக்கூட்டம் நடத்தி கூட்டத்தினை திரட்டி அரசினை நெருக்குவோம் என்று திட்டமிட்டு சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்ட போது, ‘ யார் கடைசியில் பேசுவது” என்றார்.. ‘ தான் தலையாய் மட்டுமே இருக்க முடியும், இறுதி உரை என்னுடையதாய் இருக்கவேண்டுமென்றார்...

அனைத்து மூத்த தலைவர்களும் ஒத்துக் கொண்டு கூட்டத்தினை கூட்டிய பின்னர், கூட்டத்திற்கு செல்லாமல் புறக்கணித்தார். மூவர் உயிர்காப்பு கூட்டணி உருவானதில் இணைந்து கொள்ளாமல் விலகிநின்றார். செங்கொடி ஈகத்தின் போதும் இதே நிலை. கயல், சுஜாதா, வடிவாம்பாள் ஆகியோர் சாகும்வரை உண்ணவிரதம் இருந்த 8 நாட்களில் ஒரு நாள் கூட அவர்களை சந்திக்க வரவில்லை. கடுமையான கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாமல் பின்னர் வந்து சேரவேண்டியதானது.

அனைத்து கட்சி-இயக்கமும் சேர்ந்து, உயர்நீதிமன்றம் மூவர் தூக்கிற்கு தடைவிதிக்கவேண்டுமென கோரிக்கை வைத்து உயர்நீதிமன்ரத்தினை முற்றூகையாக திரள்வோம் என முடிவெடுத்த போதும் சீமான்மட்டும் அதை புறக்கணித்தார்... இதன் பின்னர் நிரந்தரமாக தூக்கினை ரத்து செய்யவேண்டுமென 44 நாட்கள் நடந்த தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் தமிழ்நாட்டிலேயே பங்கெடுக்காத ஒரே கட்சி இவர்கள் மட்டுமே.....

இவையனைட்த்திற்கும் நேரில் சென்று அழைத்த போது திருப்பி அனுப்பியவரே இந்த உத்தமர்.

இதே நிலைதான் 2011இல் தீவிரமான முல்லைப்பெரியாறு போராட்டத்திலும் தொடர்ந்து நடந்தது . 2011 டிசம்பர் 25ம் தேதி சென்னை மெரினாவில் நடைபெற்ற ஊர்வலத்திற்கு முதலாக அழைக்கப்பட்டவர் சீமான். அந்த ஊர்வலத்தில் பாரதிராஜா முதல் அனைத்து படைப்பாளிகளும் கட்சிகளும் பங்கெடுத்தாலும் பங்கெடுக்காத ஒரே நபர் இவர் மட்டுமே... இதே போன்று 2011 ல் கூடன்குள போராட்டகூட்டமைப்பிலும் இதே நிலை.

2012 பிப்ரவரி 18ம் தேதி அமெரிக்க தீர்மான எதிர்ப்பினை முன்வைத்து சென்னை மெரினாவில் மே17 இயக்கம் கூட்டிய கூட்டத்திற்கும் முதலாக சீமானிற்கு நேரில் அழைப்பு கொடுக்கப்பட்டது... தமிழீழ கோரிக்கையை முன்வைக்கும் இக்கூட்டத்திற்கு வரமறுத்தார். இக்கூட்டத்திற்கு த்டை விதிக்கப்பட்டதை மீறி போராட்டம் நட்ந்தது. திருமுருகன் , மணியரசன், தியாகு, தாமரை வீரசந்தானம், மல்லை சத்யா, எழிலன், காஞ்சி மக்கள்மன்ற மகேஸ், எழிலன், தீரன் ஹாரூண் ரஷீத், கீற்று ரமேஸ், வடிவாம்பாள், கயல் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கடந்த வருடம் முறியடிக்கப்பட்டது.

இந்த போராட்டம் நடத்தப்படுவதற்கு இருவாரங்கள் முன்பு சீமான் இதே ஐநா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கவேண்டுமென்று ஊர்வலம் சென்னையில் நடத்தினார். இக்கோரிக்கை தவ்றாய் போகுமென்று தோழமையுடன் நேரில் சென்றும் பேசினோம். இவரது இந்த ஊர்வலத்திற்கும் கூட எங்களுக்கு மட்டுமல்ல எவருக்கும அழைப்பில்லை.

இதன் பின்னர் அதே பிப்18ம் தேதிக்கு அடுத்து இடிந்தகரையில் போராடிய மக்கள் மீது ஜெயா அரசு வன்முறை ஏவியது. இதை கண்டித்து சாலை மறியலை சென்னையில் அனைத்து கட்சி-இயக்கத்தவரும் நடத்தினோம், ஐயா.மணியரசன் அவர்கள் மிக மோசமாக இழுத்துச் செல்லப்பட்டார். பெரியார் திராவிட கழக தோழர்கள் பேருந்துகளை தடுத்து நிறுத்தியதற்காக தாக்கப்பட்டனர். இப்போராட்டத்திலும் இவர் இணையவில்லை, மறுத்துவிட்டார்.

பின் 2012 நினைவேந்தல் கூட்டத்திற்கு அழைத்தோம். வருகிறேன் என்றவர், பின் வரமறுத்துவிட்டார். இந்த நினைவேந்தலுக்கு ராம்விலாஸ் பாஸ்வான் அழைத்த உடன் பங்கேற்பதாக சொல்லி, உறுதி அளித்தவாறு உடல்நலம் சரியில்லாத பொழுதிலும் பங்கேற்றார். குடந்தை அரசன் அவர்களின் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநாட்டிற்காக வந்தவர் நினைவேந்தலில் பங்கேற்றார்.

நேரில் சென்றே அழைப்பிதழ் வைக்கப்பட்ட சிமான் வரவில்லை. இதே போல டெஸோ மாநாட்டிற்கு எதிரான திமுகவை அம்பலப்படுத்தும் போராடத்திற்கு அழைத்த போது, பிற கட்சிகள் பங்கெடுத்தனவே ஒழிய, சீமான் பங்கேற்கவில்லை. வழக்கம் போல பிரதிநிதியும் அனுப்பப்படவில்லை. பின்2012 காமன்வெல்த்திற்கு எதிரான போராட்டத்தின் போது வலிந்து அழைத்த போது ஒரே ஒரு பிரதிநிதி மட்டுமே, போராட்டம் முடிந்த பின்னர் அனுப்பப்பட்டார்.

2012 ஜீன் -ஜுலையில் சிறப்பு முகாமெனும் ஈழ ஏதலிகள் முகாம் முற்றூகை போராட்டம், கண்டனப் போராட்டம், ஈழநேரு உள்ளிட்டவர்கள் நடத்திய சாகும்வரை போராட்டத்திற்கு ஆதரவான போராட்டமென எந்தப் போராட்டத்திலும் நாம் தமிழர் தனித்தே நின்றார்கள்.

2012 செப்டம்பரில் இடிந்தகரையின் மீது கடுமையான தாக்குதலை அரசு செய்த போதும் இதே நிலை. தனித்தே நிற்கிறோமென்றார். பிற போராட்டங்களின் போதும் இதே நிலைதான் நடந்தது.

2013 பிப்ரவரியில் ஐ.நா முற்றுகைப் போராட்டத்தினை நடத்தியதற்கு நேரில் அழைப்பு கொடுத்தோம். அனைத்து கட்சியினரும் ஐயா.நெடுமாறன் தலமையேற்க பங்கேற்றார்கள்..இதிலும் பங்கேற்க மறுத்தார். இது குறித்த கருத்தரங்குகள்-ஆர்ப்பாட்டங்கள் என எதிலும் அவர்கள் பங்கேற்கவில்லை.

2013இல் பாலச்சந்திரன் படுகொலை படம் வெளியான போது ஒன்றாய் சேர்ந்து காங்கிரஸ் அலுவலகத்தினை முற்றூகையிடுவோம் என்றபோதும் இதே நிலை. பின் தோழமை இயக்கங்கள்-கட்சிகளோடு இப்போராட்டத்தினை நடத்தினோம்.

பின்னர் 2013 மார்ச் மாதம் மூன்றாம் வாரத்தில் ஐ.நா தீர்மானத்தினை எதிர்த்த மெரினா ஒன்று கூடலுக்கு அழைப்பு கொடுத்தபோதும் அதை புறக்கணித்தார். எந்த பிரதிநிதியும் அனுப்பப்படவில்லை.

பின்னர் 2013 நினைவேந்தலுக்கு அழைப்பு கொடுத்தோம். வழக்கம் போல நேரிலேயே அழைப்பு கொடுக்கப்பட்டது.

திருமுருகனும், அருள்முருகனும் சென்று அழைத்தார்கள். வழக்கம்போல சீமான் வரவில்லை.

2013இல் வடக்குமாகாண சபை தேர்தல் தருணத்தில் மன்னாரில் தமிழர் நிலத்தை சிங்களவருக்கு கொடுப்பதான தகவல் வெளியானதை வைத்து போராட்டம் நடத்த அழைப்பு கொடுத்த போதும் பங்கேற்கவரவில்லை.

2013இல் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றூச்சுவர் இடிக்கப்பட்டபோது ஒன்றாய் நின்று ஜெயலலிதாவை எதிர்ப்போம் என்கிற போதும் இதே ஒற்றூமையற்ற நிலையே முன்னெடுத்தார்.

2014இல் ஐ.நா முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு கொடுத்தோம்.

2014 மார்ச்சில் மெரினாவில் ஐ.நா தீர்மான எதிர்ப்பு போராட்டம், இதனிடையே அமெரிக்க தூதரக முற்றுகைபோராட்டம், ஏழு தமிழர் விடுதலைக்கான மெரினா ஒன்றுகூடல் என்று எதிலும் ஒன்றாய் நிற்க மறுத்தார்கள்.

இந்தியாவின் அரசு அலுவலகங்கள் முற்றூகை போராட்டம் என எதிலும் பங்கேற்க மறுத்தார்கள். அரசு தடையை மீறி மே17 இயக்கமும் தோழமை கட்சி-இயக்கங்களும் பங்கேற்று ஒவ்வொரு முறையும் கைதானோம். எதிலும் பங்கேற்க மறுத்தார் சீமான்.

2015இல் நடந்த ஐ.நா முற்றூகைப் போரட்டம், அமெரிக்க தூதரகப் போராட்டமென ஒவ்வொன்றிலும் இதே நிலையெடுத்தார்கள்.

2015ல் நடந்த தமிழீழ நினைவேந்தலுக்கும் வரவில்லை. இம்முறை கிட்டதட்ட மூன்றுமணி நேரம் காத்திருந்து தோழர்கள் அழைத்த போதிலும் இதே நிலைதான்.

2015இல் அனைத்து அமைப்புகளும் ஒன்றுகூடி ஈழவிடுதலைக்கான பேரணி நடத்திய பொழுதில் கிட்டதட்ட 50-60 இயக்கங்கள் கட்சிகள் ஒன்றாய் நின்ற போதும் நாம் தமிழர் வரமறுத்தார்கள். அவர்களது நிலைப்பாடு என்பதே இந்த கூட்டங்களில் தங்களை தலைவராக முன்னிறுத்தவேண்டுமென்கிற கோரிக்கையே இவர்கள் தங்களை தனிமைப்படுத்தியதற்கான காரணம்.

இன்னும் பல போராட்டங்களை சொல்லமுடியும்... எந்த ஒரு நெருக்கடியான காலத்திலும் அனைத்து தமிழியக்கக்களோடு சேர்ந்து நின்றதில்லை...

இதே போன்ரு மீத்தேன் ஆவணப்பட வெளியீட்டிற்கும் பங்கேற்காமல் தவிர்த்தார்கள். இவ்வளவு ஏன் பாலைவனமாகும் காவிரி டெல்டா எனும் மீத்தேன் எதிர்ப்பு ஆவணப்படத்தினை திரையிட்ட நாம் தமிழர் தோழர்களை தடுத்து நிறுத்திய அதன் கட்சி பொருப்பாளர்கள், லைக்கா தயாரிப்பில் வெளியான கத்தி திரைப்படம் மீத்தேன் எதிர்ப்பினை பேசுகிறது என்று அதை பாராட்டி சுவரொட்டியும், பதாகைகளும் வைத்தனர்.

கத்தி திரைப்படத்தினை தயாரித்த லைக்கா நிறுவனம் ‘ராஜபக்சே’ தொடர்புடையது, என்று 120 கட்சி-அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியபோது அதை எதிர்த்து நின்றார் சீமான்....

இதே லைக்கா நிறுவனம் இன்று ரஜினிக்காக கட்சியில் முதலீடு செய்திருக்கிறதே?... லைக்கா நிறுவனத்தின் தலைமை பொறுப்பாளர் ரஜினி கட்சியின் தலைமை பொறுப்பாளராகிறாரே இது எப்படி நடக்கிறது?...

இவ்வளவு ஏன், ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக அறிவிப்பானவுடன் நமல் ராஜபக்சே பாராட்டி செய்தி வெளியிடுகிறாரே... எனில் லைக்காவிற்கும், ராஜபக்சேவிற்குமான தொடர்பு சீமானுக்கு தெரியாதா?... லைக்கா-ராஜபக்சே-சீமான் ஒரே அணியாக நின்றது எப்படி?...

இதே போன்று எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் பச்சைமுத்து ‘ தனி நாடு வாங்கிதாரேன் என்று சொல்லி ஒருவன் லட்சம் பேரை கொலை செய்தான்’ என்று தேசியத்தலைவரை பேசியவரின் திரைப்படமான ‘புலிப்பார்வை’க்காக ஒன்றாக மேடையேறி படத்தினை சிறப்பித்தாரே, இது பற்றி ஏன் கேள்வி எழவில்லை?... இந்த புலிப்பார்வை திரைப்படம் பாலச்சந்திரனை கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டதை ஏன் கேள்வி கேட்கவில்லை....

தேசியத் தலைவர் பிரபாகரனை வாய்கிழிய பேசிய சீமான் தேசியத்தலைவரின் மகனை கொச்சைப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படம் பற்றி எதிர்ப்பு தெரிவிக்காமல், அவ்விழாவை சிறப்பித்தது எப்படி?.. இச்சமயங்களில் எல்லாம் தனித்து நின்றவர் தானே சீமான்?...

ஈழவிடுதலைக்காக தொடர்ந்து போராடும் இயக்கங்களோடு இணையாத சீமான், இந்து மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் ஈழ மக்களுக்காக என்று கலந்து கொண்டவர்தான்.. இத்தனை ஆண்டுகளாக அழைத்த போதும் வராதவர் , இன்று மே17 இயக்கம் மாநாடு நடத்திய போது அழைக்கவில்லை என கதறுவது ஏன்?...

கரு.பழனியப்பன், அமீரை வைத்து தன்னை ஏன் அழைக்கவில்லை கேள்வி கேட்க வைப்பது ஏன்?... ஏனென்றால் இன்று மே17 இயக்கம் அங்கீகரிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.. அதை தனது ஓட்டு வங்கியாக சுருட்டவேண்டுமென்பதைத் தவிர வேறென்ன எண்ணம் இருந்துவிட முடியும்?...

ஈழம், பிரபாகரன் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள், புலம்பெயர் மக்களிடம் வசூலிப்பவர்கள் ஏன் இதுவரை சொந்தமாக ஒரு பலமான மாநாட்டினை நடத்தவில்லை?.. இவர்கள் ஈழத்திற்காக கடைசியாக நடத்திய போராட்டம் எது?..

லண்டன் கோபிசிவந்தனின் உண்ணாநிலை போராட்டத்தின் போதும். ஈழத்தில் சிறுவன் தர்சன் கொலை செய்யப்பட்ட போதும் நடத்திய போராட்டத்திற்கு அழைத்த போது வராத சீமான், வெல்லும் தமிழீழம் எனும் மாநாட்டிற்கு ஏன் அழைக்கவில்லை என கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. ..

கிட்டதட்ட 7 ஆண்டுகளாக அழைத்த நிகழ்வுகளுக்கு வந்ததில்லை, பங்கெடுத்ததில்லை, பங்கேற்க இயலாத போது குறைந்தபட்சம் மரியாதை நிமித்தம் பேசியதும் இல்லை... இவ்வளவு ஏன் தொடர்ந்து பொய்களை மட்டுமே பதிலாக சொல்லும் சீமான், ரேசன்கடைகளை மூடுவது குறித்து தானே 5 ஆண்டுகளுக்கு முன்பு பேசியதாக கடந்தவருடம் 2017இல் பேசுகிறார்.இதை முதன்முதலில் அம்பலப்படுத்தியது மே17 இயக்கமே...

2015 டிசம்பர் நைரோபி மாநாட்டில் கையோப்பமானதை தொடர்ந்து மூன்றாவது மாதத்திலேயே மே17 இயக்கம் அம்பலப்படுத்தியது.. இந்நிகழ்வு நடந்தது 2015இல் ஆனால் 2017லேயே சீமான் சொல்கிறார், தான்தான் 5 ஆண்டுகளுக்கு ரேசன்கடைகள் மூடப்படுவதாக முதன்முதலில் எச்சரித்ததாக சொல்லுகிறார். அப்படி அவருக்கு இதுகுறித்த கவலை இருக்குமெனில் ஏன் மே17 இயக்கத்தோடு இணைந்து பணியாற்ற முன்வரவில்லை?..

ஏன் மே17 இயக்கத்தினரை தனது மேடையில் ஏற்றியது இல்லை?... 7 ஆண்டுகளாக தொடர்ந்து அழைத்த மே17 இயக்கத்தினரை கொச்சைப்படுத்தி உதாசீனப்படுத்திய சீமானும் அவரது தொண்டர்களும், இன்று தங்களை அழைக்கவில்லையே என கதறுவது ஏன்?....

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்
 
FB

தமிழீழ விடுதலை களத்தில் எதற்காக திருமுருகன் காந்தி உள்ளே வருகின்றார் ???
கட்டாயம் படித்து தெரிந்து தெளிந்து கொள்ளுங்கள்…
சிங்கள அரசின் தமிழினப் படுகொலைகள் மீதான மனித உரிமை வழக்கு தீர்மானத்தை கொண்டு வந்தது அமெரிக்கா. இதற்கு முக்கிய காரணம் ஈழத் தமிழர்கள் மீதான அக்கறை அல்ல ! இலங்கை அரசு சீனாவின் பக்கம் சாய்ந்து விடக்கூடாது என்ற அரசியல் ரீதியிலான கடிவாளமாக அந்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா கொண்டு வந்தது. இதன் மூலம் அமெரிக்கா இரண்டு பக்கமும் நல்லவர்கள் போல காண்பித்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டது.

இந்த சமயத்தில் ஆசியா கண்டத்தில் வல்லரசாக தன்னை முன்னிறுத்த, நேரடியாக சீனாவையும் மறைமுகமாக அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கவும் முடிவு செய்த இந்திய அரசு ஒரு ‘அண்டர்கவர் ஆபிரேசன்’ திட்டம் போடுகிறது !
அதன்படி தமிழீழ இனப் படுகொலைகளுக்கு நீதி கேட்டு கடுமையாக போராடிவரும் இரண்டு முக்கிய மையங்களை தேர்வு செய்கின்றது :

1) புலம்பெயர் தமிழர்களின் தொடர் போராட்ட களமான ஜெனீவா
2) அரசியல் ரீதியிலான அழுத்தம் கொடுக்கும் தமிழகம்
இந்த இரண்டு இடங்களிலும் சிங்கள அரசுக்கு நேரடியாக அழுத்தம் கொடுக்கும் வகையில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருவதை திசை திருப்பவும், அதே சமயம் சர்வதேச அரங்கில் நிலுவையில் இருக்கும் தீர்மானத்தை அமெரிக்காவிடம் இருந்து பறித்து தன் வசம் வைத்துக் கொள்ளவும் இந்தியா உள்துறை அமைச்சகம் முடிவெடுக்கின்றது.
அந்த திட்டத்திற்கு பெரும் உதவியாக இருப்பார் என்று எண்ணி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அரசியல் ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் பல முக்கிய புள்ளிகளை அனுப்பி தங்கள் வழிக்கு கொண்டுவர இந்திய உளவுத்துறை முயற்சி செய்கிறது. ஆனால் அதில் எந்த பலனும் கிடைக்காததால், சட்ட ரீதியாக பல சிக்கல்களை நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கின்றது. அந்த சமயத்தில் சீமான் அதிமுக அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நன்றிக்காக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல இடங்களில் மத்திய உளவுத்துறையின் திட்டங்களுக்கு இடையூராக இருந்தார். ஜெயலலிதாவின் ஆட்சி காரணமாக, சீமானை கைது செய்ய மத்திய உளவுத்துறை எடுத்த பல நடவடிக்கைகள் தோல்வியடைந்தன.
இந்த நிலையில் தமிழகத்தில் தமிழீழ விடுதலைக்கு குரல் கொடுக்கும் தமிழ் உணர்வாளர்களை சீமானுக்கு எதிராக திருப்பி மற்றொரு மாற்று சக்தி வேண்டும் என்று இந்திய உளவுத்துறை முடிவு செய்கின்றது. இங்குதான் நமது திருமுருகன் காந்தி அப்பாவியாக மெரீனாவில் மெழுகுவர்த்தி ஏற்றி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை கவர களம் இறக்கி விடப்படுகின்றார் !
அவரது முதல் மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டத்தில் வைகோ சீமான் உட்பட அனைத்து தலைவர்களும் கலந்து கொள்கின்றார்கள். இதன் மூலம் திருமுருகன் காந்தி கட்சி சார்பற்ற ஒரு நபராக மக்களிடம் அடையாளப்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக அந்த ஆண்டின் சிறந்த மனிதராக விஜய் டிவி அவரை தெரிந்தெடுத்து விருது வழங்கி கௌரவிக்கின்றது. விஜய் டிவி தமிழீழத்திற்கு ஆதரவாக இருப்பதாக காட்டிக்கொள்ளும் போதே நமது மண்டையில் ஒரு பல்பு எரிந்து இருந்திருக்க வேண்டும் !

சரி அடுத்த காட்சிக்கு செல்வோம். இப்படியாக மெல்ல மெல்ல தமிழீழ ஆதரவாளர்களிடம் நெருங்கி வந்த திருமுருகன் காந்தி, திடீரென்று அமெரிக்க தீர்மானத்தை எரிக்க வேண்டும் என்று கிளப்பி விடுகின்றார். அத்துடன் மாணவ அமைப்பில் இருக்கும் சிலரை தூண்டி உசுப்பேத்தி அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடச் செய்து அந்த நாட்டுக் கொடியை எரிக்க திட்டம் போட்டு கொடுக்கின்றார். பாவம் அந்த நிகழ்வில் மாட்டி சிறைக்கு சென்றது நாலு மாணவர்கள் மட்டுமே, இவர் மீது கைவைக்காமல் பத்திரமாக பார்த்துக் கொள்கிறது உளவுத்துறை.
இந்த நிகழ்வுக்கு பிறகு அவர் தனது மேடைகளில் அறிக்கைகளில் எல்லாம் சிங்கள அரசையும், இந்திய அரசையும் விட்டுவிட்டு அமெரிக்காவை சகட்டு மேனிக்கு திட்ட ஆரம்பிக்கின்றார்… பொறுக்கி அமெரிக்காவே, அயோக்கிய அமெரிக்காவே… இப்படியாக இன்று வரை திட்டிக் கொண்டுதான் இருக்கின்றார்.
இதனை கண்ட புலம் பெயர் தமிழ் மக்கள் இவரிடம் ஏதோ ஒரு புது திட்டம் இருக்கிறது என்றும், அதன் மூலம் தமிழினப் படுகொலைகளுக்கு நீதி கிடைத்துவிடும் என்றும் நம்பி இவரை அவர்கள் நாட்டிற்கு பேச அழைக்கின்றார்கள். அதற்கு உறுதுணையாக வைகோவும் அவ்வப்போது உதவி செய்து வந்தார். அவர் எப்போதும் தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை திசை திருப்பும் மிக முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்பதால், அவரையும் தங்கள் திட்டத்தில் உளவுத்துறை பயன்படுத்திக் கொள்ளும்.
இப்படியாக திருமுருகன் காந்தி தான் செல்லும் இடங்களில் எல்லாம், அமெரிக்காவை திட்டியும் அவர்களின் தீர்மானத்தை இந்தியாவே முன்வந்து எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் புலம் பெயர் மற்றும் தமிழக மக்களிடம் பரப்புரை செய்து வந்தார். இதன்மூலம் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆண்டுதோறும் செல்லும் போராட்ட குழுவினர், இலங்கை மீதான இனப் படுகொலை தீர்மானத்தை இந்தியா தலைமை வகிக்க வேண்டும் என்று மனித உரிமை கழகத்தை வலியுறுத்துமாறு இந்திய உளவுத்துறை தீட்டிக் கொடுத்த திட்டத்தின்படி ஒரு கட்டமைப்பை உருவாக்க கடுமையாக உழைத்தார். இதற்காக சில முறை ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று அங்கு நடைபெற்ற கூட்டத்தொடரிலும் பங்கு பெற்று இதைத்தான் உலகத் தமிழர்கள் விரும்பிக்கின்றார்கள் என்று ஒரு மாயையை உருவாக்க முயற்சி செய்தார்.
இடையிடையில் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வரும் ஆதரவு தன்னை பாதித்து விடக் கூடாது என்பதற்காக, மற்ற தமிழ் இயக்கங்கள் அனைத்துடனும் தேடிச் சென்று நட்பை வளர்த்துக் கொண்டார். அதே சமயம் அவர்களில் யாரும் நாம் தமிழர் கட்சியுடன் சேர்ந்து விடக்கூடாது என்ற உளவுத்துறையின் திட்டத்தின்படி, தெளிவாக காய் நகர்த்தி வந்தார். இதனிடையே ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு, அவரின் முயற்சிகளுக்கு தொய்வு ஏற்பட்டது.
அந்த சமயத்தில்தான் அவரை சம்பந்தமே இல்லாமல் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யும் நாடகத்தை அரங்கேற்றியது மத்திய உளவுத்துறை. எப்படி சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து அவருக்கு ஒரு பெரிய ஆதரவு அலை உருவானதோ, அதே போல இவருக்கும் உருவாகும் என்று எதிர்பார்த்து ஏமாந்தது மத்திய உளவுத்துறை. இருப்பினும் தனது விடா முயற்சியை கைவிடாமல், தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பணிகளை விசுவாசமாக தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் திருமுருகன் காந்தியை உலகத் தமிழ் உணர்வளர்கள் சரியாக புரிந்து கொள்ளவேண்டியது மிக மிக அவசியம் என்பதையே இந்த கட்டுரை வலியுறுத்துகின்றது.

ஒரே ஒரு முறை ஐரோப்பா நாடுகளுக்கு பயணம் சென்று அங்கு தமிழீழ விடுதலை பற்றி பேசிய சீமானின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. ஆனால் வருடா வருடம் தவறாமல் வெளிநாடுகளுக்கு குறிப்பாக ஐரோப்பா நாடுகளுக்கு செல்லும் திருமுருகன் காந்தி மற்றும் வைகோ போன்றவர்கள் அங்கு சென்று வார்த்தைக்கு வார்த்தை தமிழீழ விடுதலை வேண்டும் என்று ஆவேசமாக பேசுகின்றார்களே ! அவர்கள் பாஸ்போர்ட் ஏன் முடக்கப் படுவதில்லை என்று யோசித்துப் பார்த்தால் சில உண்மைகள் உடனே விளங்கிவிடும் !
நீட் எனும் கல்வி பிரச்சனைக்காக குரல் கொடுக்க நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்த உள்ளரங்கு கருத்தரங்கம் ஒன்றிற்கு பெரிய அரங்கம் தேடிய போது, அவர்கள் ஈழத்தை பற்றியும் பிரபாகாரன் பற்றியும் பேசிவிடுவார்கள் என்று காரணம் சொல்லி உளவுத்துறையின் மிரட்டலுக்கு பயந்து சென்னையில் அனைத்து அரங்கங்களும் அனுமதி தர மறுத்துவிட்டன. ஆனால் தமிழீழ விடுதலை என்ற பெயரில் கருத்தரங்கு நடத்த சென்னையின் மையப் பகுதியில் மிகப் பெரிய அண்ணா அரங்கத்தில், திருமுருகன் காந்திக்கு எப்படி யார் அனுமதி கொடுத்தார்கள் என்று சிந்தித்து பார்த்தால் சில முடிச்சுகள் அவிழ்ந்துவிட வாய்ப்புகள் உண்டு.
இருள் அகன்று திரை விலகி தமிழர்கள் விழிப்படைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் – இந்த நீண்ட கட்டுரையை வாசித்தமைக்கும் யோசித்தமைக்கும் நன்றி !

நன்றி அருள்

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் அவலம் முடிந்து நடைபெற்ற 2010 இலங்கை சனாதிபதி தேர்தலில் தமிழர் தாயகத்தில் பலர் சரத் போன்சேகாவுக்கு அதிகளவில் வாக்களித்தார்கள். அத்தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் மகிந்தா, சரத்பொன்சேகா. தமிழர்களை கொன்ற சரத்பொன்சேகாவுக்கு தமிழர்கள் வாக்களித்த காரணம்  மகிந்தா அத்தேர்தலில் வெற்றி பெறக்கூடாது. அத்தேர்தலில் விக்கிரமாபாகு கருனரட்னா, சிவாஜிலிங்கம் போன்றவர்களும் போட்டியிட்டார்கள். 2015 தேர்தலில் தமிழர்களை கொன்ற மகிந்தா அரசில் இருந்த போர்குற்றவாளி மைத்திரிக்கு தமிழர்கள் அதிகம் வாக்களித்து வெற்றி பெறச் செய்தார்கள். காரணம் மகிந்தா தோற்கவேண்டும் என்பதற்காக.  

தமிழகத்தில் எமக்காகக் குரல் கொடுப்பவர்கள் வை.கோ, சீமான், திருமுருகன் காந்தி, வேல்முருகன் போன்றவர்கள். இதில் திருமுருகன் காந்தியைத்தவிர மற்றவர்கள் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆனால் அவர்களின் வாக்குவீதம் வெறும் 2% .  இதுவரை காலமும் ( 60 களுக்குப்பிறகு) தமிழகத்தில்நடைபெற்ற தேர்தலில் திமுக அல்லது அதிமுக மட்டுமே வென்றன. இக்கட்சிகள் 30 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைக் கொண்டன.  தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள். அங்குள்ள மக்கள் தங்களுடைய பிரச்சனைகளைத்தீர்க்க யார் வெற்றி பெறக்கூடாது. இரண்டு கள்ளர்களிலும் யார் பரவாயில்லை என்று வக்களிக்கிறார்கள். வை.கோ சென்ற முறை திமுக, அதிமுக தவிர்ந்து  விஜயகாந்த் தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு , அக்கூட்டணி படு தோல்வியைத் தழுவியது. ஏற்கனவே மதிமுகவில் இருந்து பலர் விலகி வேறு கட்சியில் தாவிவிட்டார்கள். தற்போதைய சூழலில் ஸ்டலினா, ஏடப்பாடியா நல்லது என்று தீர்மானித்து ஸ்டாலினுக்கு ஆதரவு தருகிறார்.  வருகிற வருடம் நாடாளுமன்றத்தேர்தல் ராகுலா அல்லது மோடியா வெல்லவேண்டும் என்று தமிழக மக்கள் வாக்களிக்கப்போகிறார்கள். எனக்கு ராகுல் தோற்கவேண்டும் என்பது விருப்பம். 2009 முள்ளிவாய்க்காலுக்கு காரணம் என்பதினால். ஆனால் தமிழக மக்கள் பலர் (ஈழ ஆதரவு உள்ளவர்கள்) மோடி தோற்க வேண்டும் என்பதற்காக ராகுல் இருக்கிற கூட்டணிக்கு வாக்களிக்கலாம்.  பிஜேபி அரசின் சமிபகாலமாக தமிழர்களுக்கு எதிரான சல்லிக்கட்டு, நீட் தேர்வு, சிறுபான்மையினருக்கான செயற்பாடு,  கூடாங்குளம் பிரச்சனை, காவிரிபிரச்சனை ,முக்கியமாக விவசாயிகள் தற்கொலை போன்றவற்றுக்காக ராகுலுக்கு வாக்களிக்கலாம்.  ஏடப்பாடி அரசு இயக்குவது மோடி அரசு.  இதனால் தான் வை.கோ, திருமுருகன் காந்தி போன்றவர்கள் திமுகவுக்கு ஆதரவு தருகிறார்கள். அதாவது யார் வெற்றிபெறக்கூடாது என்பதற்காகவே மற்றவருக்கு வாக்களிக்கலாம். 

நாங்கள் எமக்கு தொடர்ந்து குரல் கொடுப்பவர்களுக்கு ஆதரிக்கவேண்டும். அவர்களின் தமிழக அரசியல்நிலைப்பாட்டினைப் பார்த்து குழப்பமடையக்கூடாது.  அண்மைக்காலங்களில் எம்மவர்களின் முகப்புத்தகங்களில் எமக்கு ஆதரவு தரும் தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிரான கருத்துக்கள் (அவர்களின் அரசியல்நடவடிக்கை காரணமாக)  இடம்பெற்றுவருகின்றன. இவை எமக்கான ஆதரவைக் குறைக்கசெய்யும்.  முகப்புத்தகங்கள், இணையங்களில் தீர விசாரிக்காத செய்திகள் தெரிந்தோ தெரியாமலோ பரப்பப்பட்டு வருகின்றன.   பெரும்பாலும் இவை கற்பனைகள்.   அண்மையில் முகப்புத்தகமொன்றில் வாசித்த செய்தி -  காசி ஆனந்தன் தன்னுடைய பிள்ளைக்கு தமிழகத்தில் முன்பு தனது செல்வாக்கினைப் பாவித்து மருத்துவபீடத்துக்கு அனுமதி வாங்கியிருந்தார். ஆனால் அண்மையில் தமிழகத்தில் அகதிமாணவி ஒருவரின் மருத்துவபீட அனுமதிக்கு இவர் உதவி செய்யவில்லை.   எம்.ஜி.ஆர், கலைஞர் ஆட்சியின் போது தமிழகத்தில் ஈழமாணவர்களுக்கு கோட்டா சிஸ்டம் மூலம் மருத்துவ பொறியியல் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 1991ல் முதன் முறையாக ஆட்சியைக்கைப்பற்றிய ஜெயலலிதாவினால் ஈழமாணவர்களின் கோட்டா சிஸ்டம் நிறுத்தப்பட்டது.  1996ல் மீண்டும் ஆட்சியைக்கைப்பற்றிய கலைஞரினால் ஈழமாணவர்களுக்கு மீண்டும்  கோட்டா சிஸ்டம் மூலம்  பொறியியல் துறைக்கு விண்ணப்பித்த முதல் 20 இடங்களைப்பெற்ற  மாணவர்களுக்கும், மருத்துவதுறைக்கு விண்ணப்பித்த முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. காசி ஆனந்தனின் பிள்ளை கோட்டா சிஸ்டத்தின் மூலமே மருத்துவ அனுமதிபெற்றார்.  தற்பொழுது ஈழமாணவர்களுக்கு கோட்டா சிஸ்டம் இல்லை. அதனால் அகதி மாணவிக்கு அனுமதி கிடைக்கவில்லை.   

எமக்கு தொடர்ந்து குரல் கொடுப்பவர்களின் ஆதரவு தேவை. ஆதரவு தருபவர்களை ,நாம் இழக்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

.... எம்.ஜி.ஆர், கலைஞர் ஆட்சியின் போது தமிழகத்தில் ஈழமாணவர்களுக்கு கோட்டா சிஸ்டம் மூலம் மருத்துவ பொறியியல் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 1991ல் முதன் முறையாக ஆட்சியைக்கைப்பற்றிய ஜெயலலிதாவினால் ஈழமாணவர்களின் கோட்டா சிஸ்டம் நிறுத்தப்பட்டது.  1996ல் மீண்டும் ஆட்சியைக்கைப்பற்றிய கலைஞரினால் ஈழமாணவர்களுக்கு மீண்டும்  கோட்டா சிஸ்டம் மூலம்  பொறியியல் துறைக்கு விண்ணப்பித்த முதல் 20 இடங்களைப்பெற்ற  மாணவர்களுக்கும், மருத்துவதுறைக்கு விண்ணப்பித்த முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. காசி ஆனந்தனின் பிள்ளை கோட்டா சிஸ்டத்தின் மூலமே மருத்துவ அனுமதிபெற்றார்.  தற்பொழுது ஈழமாணவர்களுக்கு கோட்டா சிஸ்டம் இல்லை. அதனால் அகதி மாணவிக்கு அனுமதி கிடைக்கவில்லை.  

இது உண்மைதான்..

அ.தி.மு.க., தி.மு.க  இரண்டும் சந்தர்ப்பாவத அரசியல் கட்சிகள் தான். ஆனால் தேசியக் கட்சிகளைக் காட்டிலும் இவை இரண்டும் தேவலை, நம் சொந்த மாநிலப் பிரச்சனைகளுக்கும், இனம் சார்ந்த விடயங்களுக்கும் இவர்கள் பதவியில் இருப்பதுதான் நல்லது என எண்ணுகிறார்கள். தேசியக் கட்சிகளினால் தமிழகம் இழந்தவைகள் அதிகம், அதை யாரும் இங்கே மறக்கவில்லை.

 

1 hour ago, கந்தப்பு said:

..எமக்கு தொடர்ந்து குரல் கொடுப்பவர்களின் ஆதரவு தேவை. ஆதரவு தருபவர்களை ,நாம் இழக்கக்கூடாது.

vil-super.gif   மெத்த சரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.