Jump to content

தங்கைக்கு.... வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

தங்கைக்கு
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
எண்ணில் நினைவெல்லாம்
இன்னுமுன் சிரித்த முகம்.
பின்னே உன் பாதக் கொலுசின்
பாடல் மட்டும் ஒலிக்கவில்லை.
.
வாழ்வே பொய் என்பவளின்
மரணம் எங்கண் மெய்யாகும்.
முந்திவிட்டாய் போய்வா
விடுதலையாம் சிறகசைத்து
.
பெண்ணின் கசந்த விதியே
வசந்தத்தும் இலையுதிரவைக்கும் 
மங்கையரின் பாழ் விதியே
காடெரிந்த நாட்களிலும் தீ புகுந்து
குட்டிகட்க்காய் இரைதேடும்
அகதிப் பெண் புலிஒன்றை
கண்ணாடி கூண்டுள் வீழ்த்திவிட்டாய். 
வாழிய வல் விதியே
,

தங்கச்சி என் நினைவில் இருக்கும்
உன் முதல் வார்த்தை புன்சிரிப்பு.
என் காதுள் உறைந்த இறுதி வார்த்தை
உன் இயலாத பெண்ணுக்கான
அழுகையாய் இருந்தது,
எங்கும் மனிதர்கள் இருக்கின்றோம்.
இருக்கிறது தமிழ்நாடு.
எதற்கும் இனிமேல் அழாமல் போய்வாடி?
.
இதோ தாய்மண்ணால் வனைந்து 
நீ உடுத்த ஆடை கிடக்கிறது.
கலங்காதே
மின்னில் எரித்து
வங்கக் கடலில் எறிந்தால்
ஈழக்கரை சேர்ந்துவிடும்.
,
போய்வா

Link to comment
Share on other sites

துயரிடையும் நன்றி. நுணாவிலான் , புங்கையூரான் இணையவன், யாழ்கவி அனைவரது ஆதரவுக்கும் என் நன்றிகள்.  அன்பான

 நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புச்   சகோதரியை  இழந்த... துன்பத்தில், இருக்கும் ஜெயபாலன் அண்ணா அவர்களுக்கு,
எமது ஆழ்ந்த அனுதாபங்களை,  தெரிவித்துக் கொள்கின்றோம்.
சகோதரியின் ஆத்ம  சாந்திக்காக....  இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு.....கடந்த சில வாரங்களுக்கு முன் ல.சிறி இணையத்தில் அறிவிப்பு பார்த்தாக நினைவு.சகோதரியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்! :(

November 14, 

 
Image may contain: plant and flower
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் துயரில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கின்றோம். தங்கையின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கிறோம். மனஉணர்வுகளை கவிதையாக வடித்துள்ளீர்கள். ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.