Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் பற்றி எரியும் ஈழத் தமிழரின் வீடு

Featured Replies

லண்டனில் பற்றி எரியும் ஈழத் தமிழரின் வீடு

 

 

லன்டனில் ஈழத் தமிழருக்குச் சொந்தமான ஒரு வீடு பற்றி எரிந்துகொண்டிருக்கும் காட்சி கீழே உள்ளது.

சற்று முன்னர் லன்டனின் வெம்பிளி பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த வீட்டில் இருந்த கடவுள் படத்திற்கு ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்தியே, வீடு பற்றி எரிந்ததற்கான காரணம் என்று கூறப்படுகின்றது.

 

http://www.ibctamil.com/security/80/100205?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்

வீடு வேண்டுமானால் எரிந்து போகட்டும். கடவுள் (படம்) என்னவானார்?

  • கருத்துக்கள உறவுகள்

சாம்பிராணிக் குச்சி தீ விபத்தை தூண்டியதால் கடவுள் பெரும்சோதியாக வடிவம் எடுத்துவிட்டார்.

வாட்ஸப்பில் பலரும் பகிர்ந்து சாமி பக்திக்காக வீட்டைக் கொளுத்தவேண்டாம் என்று அறிவுரை தருகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

அவையள் வீடடையும் பார்க்க காருக்கு எதுவும் நடந்திடக் கூடாது என்று தான் பயப்படுகினம்....ஆனால் கொஞ்சம் துணிந்த ஆட்கள் தான் கண்ணுக்கு முன்னால வீடு எரியுது பார்த்திட்டு வீடியோ எடுத்திட்டு நிக்கினம் 
 

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிலிருந்து, ஆசியூடாக, இலங்கையிலிருந்து நமக்கு லிங்கு வந்தது.

இந்த அறிவுரை கோஸ்டிகள், அதோட ஒரு ஓடியோ பைலையும் சேர்த்தனுப்பி வதை பண்ணுகினம்.

சரியப்பா... விபத்து ஒருக்காதான் நடக்கும். சரியப்பா நடந்துட்டுது.

அதுக்கு அறிவுரை அலம்பறை.... முடியல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவையவைக்கு வந்தால்த்தான் தெரியும்.....ஏதோ வேணுமெண்டு செய்தது மாதிரி கதைக்கினம்.......கரண்ட் கனெக்சன் எரியிற சம்பவமெல்லாம் கனக்க நடக்குது.......எரிவாயு லீக் பண்ணி முழுவீடுமே வெடிச்சு சிதறின சம்பவமெல்லாம் தெரியாமல் கதைக்கிறியள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Kavi arunasalam said:

வீடு வேண்டுமானால் எரிந்து போகட்டும். கடவுள் (படம்) என்னவானார்?

4 hours ago, கிருபன் said:

சாம்பிராணிக் குச்சி தீ விபத்தை தூண்டியதால் கடவுள் பெரும்சோதியாக வடிவம் எடுத்துவிட்டார்.

வாட்ஸப்பில் பலரும் பகிர்ந்து சாமி பக்திக்காக வீட்டைக் கொளுத்தவேண்டாம் என்று அறிவுரை தருகின்றனர்.

மனிதர்களுக்கு அவலங்கள் வருவது இயல்பு. அது போல் உங்களை போன்றவர்களுக்கும் வெவ்வேறு  விதத்தில் வரலாம்.

அப்போது இந்த தீ விபத்தை ஒரு கணம் நினைத்து பாருங்கள்.


அவரவர் நம்பிக்கைகள் ஒரு புறமிருக்க.......

உங்களைப் போன்றவர்கள்  தன்னம்பிக்கையை ஏன் சொந்த நாட்டில் காட்டவில்லை?

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

சாம்பிராணிக் குச்சி தீ விபத்தை தூண்டியதால் கடவுள் பெரும்சோதியாக வடிவம் எடுத்துவிட்டார்.

வாட்ஸப்பில் பலரும் பகிர்ந்து சாமி பக்திக்காக வீட்டைக் கொளுத்தவேண்டாம் என்று அறிவுரை தருகின்றனர்.

 

10 hours ago, நவீனன் said:

லண்டனில் பற்றி எரியும் ஈழத் தமிழரின் வீடு

 

 

லன்டனில் ஈழத் தமிழருக்குச் சொந்தமான ஒரு வீடு பற்றி எரிந்துகொண்டிருக்கும் காட்சி கீழே உள்ளது.

சற்று முன்னர் லன்டனின் வெம்பிளி பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த வீட்டில் இருந்த கடவுள் படத்திற்கு ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்தியே, வீடு பற்றி எரிந்ததற்கான காரணம் என்று கூறப்படுகின்றது.

 

http://www.ibctamil.com/security/80/100205?ref=imp-news

 

தாயின் மீது பாசமுள்ள பொறுமையான பிள்ளைகள். அப்பாவியான தாய்.

 

4 hours ago, ரதி said:

அவையள் வீடடையும் பார்க்க காருக்கு எதுவும் நடந்திடக் கூடாது என்று தான் பயப்படுகினம்....ஆனால் கொஞ்சம் துணிந்த ஆட்கள் தான் கண்ணுக்கு முன்னால வீடு எரியுது பார்த்திட்டு வீடியோ எடுத்திட்டு நிக்கினம் 
 

தாய்க்கு தான் கார் மீது அக்கறை.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் கவலைதரும் விடையம்....தீ சாதாரண நிலையில் இருந்தபோதே தீயணைப்பு படை வந்திருந்தால் அணைத்திருக்கலாம்....எவ்வளவு நேரம் எடுத்து அவர்கள் வருகிறார்கள்.....அதைவிட இந்தக்காருகளையே காப்பாற்றி இருக்கலாம்தானே.....

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, alvayan said:

உண்மையில் கவலைதரும் விடையம்....தீ சாதாரண நிலையில் இருந்தபோதே தீயணைப்பு படை வந்திருந்தால் அணைத்திருக்கலாம்....எவ்வளவு நேரம் எடுத்து அவர்கள் வருகிறார்கள்.....அதைவிட இந்தக்காருகளையே காப்பாற்றி இருக்கலாம்தானே.....

காரின் திறப்புகள்... வீட்டிற்குள்  இருந்திருக்குமோ தெரியவில்லை.
என்றாலும்... கார்க் கண்ணாடியை  உடைத்து, அந்தக் கார்களை சிறிது  தூரம் தள்ளிக் கொண்டு போய் விட்டிருக்கலாம்.
திடீரென்று  இப்படி நடக்கும் போது... அதிர்ச்சியில் என்ன செய்வது என்று, அவர்கள்   திகைத்துப் போய் இருக்கலாம்.
நெருப்பு விடயத்தில்.... மிக அவதானமாக இருக்க வேண்டும். சிறிய தவறு கூட.... வாழ்க்கையையே பிரட்டிப் போட்டு விடும்.  ?

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் திட்டமிட்டு செய்யப்பட்ட காப்புறுதி பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலான வீடு எரிப்பாக இருக்கலாம். சிங்கன் நிறைய வங்கிகளில் அனகாசை ஆட்டை போட்டிட்டார்போல.  நம்பமுடியாது. இல்லாதுவிட்டால் மிகவும் கூலாக படம்பிடிச்சு யூ ரியூப்பில போடுவினமோ யோசிச்சுப்பாருங்கோ, சரி இன்னுமொரு விடையம் வீடு எரியத்தொடங்கும்போது இவையள் எங்க இருந்தவையள் தூரத்துக்குப்போனமாதிரித் தெரியவில்லை தீயணைப்பு வர நாஙு நிமிடம் எடுத்திருக்கு ஆனால் இவையள் நாஙு ஐந்து நிமிடத்துக்கு முன்பே வந்துவிட்டினம் பிடித்த நெருப்பை அணைக்க எதுவித கரிசனையும் எடுக்கவில்லை. மூன்று நாஙு குடும்ப உறுப்பினர்களில் யாரிடமே திறப்பு இல்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடுகளில் smoke detector / fire alarm எதுவும் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

இந்த வீடுகளில் smoke detector / fire alarm எதுவும் இல்லையா?

சில இடங்களில் இவற்றைக் களற்றி விட்டுவதும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

இந்த வீடுகளில் smoke detector / fire alarm எதுவும் இல்லையா?

2.24 நிமிடத்தில் "fire alarm சத்தம் கேட்டு மேலே வந்ததாக கூறுகிறார்கள்"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.