Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விஷ்ணுவின் அவதாரமே புத்தர்: யாழில் உபதிஸ்ஸ தேரர் தெரிவிப்பு!

Featured Replies

விஷ்ணுவின் அவதாரமே புத்தர்: யாழில் உபதிஸ்ஸ தேரர் தெரிவிப்பு!

 

thero-720x450.jpg

புத்தரும் விஷ்ணுவின் அவதாரம் தான், எனவே வடக்கில் பௌத்த விகாரைகள் கட்டப்படுவதால், தமிழர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பணகல உபதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு சென்ற அவர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் யார் பெரும்பான்மையாக இருக்கிறார்கள், இந்துக்களா? கிறீஸ்தவர்களா? பௌத்தர்களா? இந்துக்கள் அதிகமாக வாழும் இங்கு பௌத்தரும் ஒரு இந்து தான்.

கிருஷ்ண பகவானின் எட்டாவது அவதாரம்தான் புத்த பகவான். பௌத்தர்கள் வேற்றுகிரக மதத்தவர்கள் அல்ல. அவர்கள் உங்கள் சொந்த மதத்தவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்பின்னர் நல்லை ஆதீன குரு முதல்வர் மற்றும் சின்மய மிசன் சுவாமிகள் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, மத வேற்றுமைகளைக் களைவதன் ஊடாக இனங்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்ப்பது தொடர்பில் கலந்துரையாடியதுடன், விரைவில் இந்து மத தலைவர்களையும், பௌத்த மத தலைவர்களையும் ஒன்றிணைத்து கலந்துரையாடல் ஒன்றை நடத்துவது தொடர்பாகவும் அவதானம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

http://athavannews.com/விஷ்ணுவின்-அவதாரமே-புத்த/

  • கருத்துக்கள உறவுகள்

அய் இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அப்ப சிங்கள பக்கம் விஸ்ணு கோவில் கட்டலாம் தலதா மாளிகையில் விஸ்ணு  சிலயை வைப்பதில் எந்த ஆட்சேபமும் சிங்களவர்களுக்கு இருக்காது என்று உபதிஸ்ஸ தேரர் கேட்டு சொல்வது நன்று .

 

  • தொடங்கியவர்

மத வேற்றுமைகளை மறக்க வேண்டும்! யாழில் தேரர் வலியுறுத்தல்

 

 

மத வேற்றுமைகளை மறந்து இனங்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்க்கும் நோக்குடன் இன்று யாழ்.மாவட்டத்திற்கு வருகைத் தந்த பணகல உபதிஸ்ஸ தேரர் இந்து மத தலைவர்களையும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்துள்ளார்.

இன்று காலை யாழ்.மாவட்டத்திற்கு வந்த பணகல உபதிஸ்ஸ தேரர் நல்லை ஆதீன குரு முதல்வர் மற்றும் சின்மய மிசன் சுவாமிகள் ஆகியோரை சந்தித்து மத வேற்றுமைகளை களைவதன் ஊடாக இனங்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்ப்பது தொடர்பில் பேசியிருந்தார்.

அத்துடன், விரைவில் இந்து மத தலைவர்களையும், பௌத்த மத தலைவர்களையும் ஒன்றிணைத்து கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தொடர்ந்து மாலை நான்கு மணிக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்த பணகல உபதிஸ்ஸ தேரர் யாழ்.மாவட்டத்திலும், குறிப்பாக வடமாகாணத்திலும் மக்களுக்குள்ள தேவைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

மேலும் வட்டுக்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சிறுவர் பாடசாலை அமைப்பு பணிகள் குறித்தும் தேரர் இதன் போது ஆராய்ந்தார்.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/189741?ref=home-feed

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அய் இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அப்ப சிங்கள பக்கம் விஸ்ணு கோவில் கட்டலாம் தலதா மாளிகையில் விஸ்ணு  சிலயை வைப்பதில் எந்த ஆட்சேபமும் சிங்களவர்களுக்கு இருக்காது என்று உபதிஸ்ஸ தேரர் கேட்டு சொல்வது நன்று .

 

அனேகமான விகாரைகளில் பிள்ளையாரின் சிலையும் விஸ்ணுவின் சிலையும் உள்ளது என்று எண்ணுகிறேன்.

2 hours ago, நவீனன் said:

நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு சென்ற அவர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது நல்லெண்ண விஜயமாக தெரியவில்லை.விசத்தை விதைக்கும் விஜயமாகவே தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரின் காலத்தில்....பிராமணர்களின்...அட்டகாசம் மிகவும் அதிகமாக இருந்தது!

வேள்வித் தீயில்....மிருகங்களை...ஆகுதியாக்கிப்...பின்னர் அவற்றைப் பிராமணர்கள் உண்டார்கள்!

அப்போது...புத்தர்....எதற்காக அவற்றைத் தீயில் இடுகின்றீர்கள் என்று கேட்டார்! அதற்குப் பிராமணர்களின் பதில்....அவற்றை நாங்கள் மோட்சத்திற்கு அனுப்புகின்றோம் என்பதாக இருந்தது!

அப்படியானால்....நீங்கள் ஏன்.....பூஜை...வேள்வி என்று நேரத்தை வீணாக்குகிறீர்கள்? நீங்களும் வேள்விக் குண்டத்தில்...பாய்ந்து மோட்சத்தைப் பெறலாமே என்று கேட்டாராம்!

இந்து மதத்தின் பலங்களில் ...ஒன்று......ஒன்றை நீங்கள் மாற்ற முடியாவிட்டால்....நீங்களும் அதனுடன் சேர்ந்து விடுங்கள் ....அல்லது அதை உள்வாங்கி விடுங்கள்! 

இதனால் தான்.....பார்ப்பனீயம்...புத்தரை....விஷ்ணுவின் பதினோராவது அவதாரமாக்கி கொண்டது!

உண்மையில்....பார்ப்பனீயம்...புத்த மதத்தை....இந்தியாவில் இருந்து வழித்துத் துடைத்ததில்....வெற்றி கண்டது என்று தான் சொல்ல வேண்டும்!

சில திரிபிடகங்கள் இலங்கையில் அப்போது இருந்த படியால் தான்.....புத்தமதம் தப்பிப் பிழைத்தது!

அவற்றைத் தான்.....சீன யாத்திரிகர் ஒருவர்.....சீனாவுக்குக் கொண்டு சென்று....புத்த மதத்துக்கு....மீண்டும் உயிர் கொடுத்தார்!

 

அதெல்லாம் சரி.....விஷ்ணுவுக்கும்....யாழ்ப்பாணத் தமிழனுக்கும்.....என்ன சம்பந்தம்...என்பது தான் புரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

அதெல்லாம் சரி.....விஷ்ணுவுக்கும்....யாழ்ப்பாணத் தமிழனுக்கும்.....என்ன சம்பந்தம்...என்பது தான் புரியவில்லை!

புங்கையூரான்.... ஸ்ரீலங்கா புத்த பிக்கு ஏதாவது சொன்னால்,
இடது காதாலை  கேட்டு, வலது காதாலை.....  "நைசாய்"  வெளியிலை விட்டு விட வேண்டும். :grin:
இதுக்கு சம்பந்தம் தேட வெளிக்கிட்டு, உங்கடை  மூளையை... குழப்பாதீங்கோ....  ? ?

  • கருத்துக்கள உறவுகள்

கலி புருசனின் அவதாரமே  தேரர்  உபதிஸ்ஸ.. ?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

அதெல்லாம் சரி.....விஷ்ணுவுக்கும்....யாழ்ப்பாணத் தமிழனுக்கும்.....என்ன சம்பந்தம்...என்பது தான் புரியவில்லை!

பணம் காசு கண்டதும் கோவிலும் கோபுரமும் கட்டுவான் யாழ்பாணத் தமிழன். 

கன்னி குமரியென பெண்ணைக் கண்டதும் பள்ளியறையும் படுக்கையறையும் கட்டுவான் விட்டுணு.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Paanch said:

பணம் காசு கண்டதும் கோவிலும் கோபுரமும் கட்டுவான் யாழ்பாணத் தமிழன். 

கன்னி குமரியென பெண்ணைக் கண்டதும் பள்ளியறையும் படுக்கையறையும் கட்டுவான் விட்டுணு.

பாஞ்சர்.......பள்ளியறையும்...படுக்கையறையும்...ஒண்டு தானே! ?

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, புங்கையூரன் said:

பாஞ்சர்.......பள்ளியறையும்...படுக்கையறையும்...ஒண்டு தானே! ?

பள்ளியறைக்குச் சென்று திருப்பள்ளியெழுச்சி பாடலாம்.?

படுக்கையறைக்குச் சென்று திருப்பள்ளியழுச்சி பாடக்கூடாது.?

36 minutes ago, Paanch said:

பள்ளியறைக்குச் சென்று திருப்பள்ளியெழுச்சி பாடலாம்.?

படுக்கையறைக்குச் சென்று திருப்பள்ளியழுச்சி பாடக்கூடாது.?

திருப்பள்ளியெழுச்சி இல்லாமல் படுக்கையறைக்கு சென்று என்ன பிரயோசனம் பாஞ்ச். ?

 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குவின் வழியிலையே போவம்.. விஷ்ணுவின் அவதாரம் புத்தர் என்றால்.. விஷ்ணுவின் பிற அவதாரங்கள் எல்லாம் கோவில்களில் இருக்க.. புத்தருக்கு ஏன் தனி விகாரைகள். பேசாமல் புத்தரை கோவிலின் ஒரு மூலையில் வைச்சு வழிபட்டு விட்டுப் போவது தானே.

மத வெறியை தூண்டாமல்.. யதார்த்தத்தை சரியாக உள்வாங்கி.. புத்தரை கோவிலில் ஒரு மூலையில் வைச்சு வழிபடுவதோடு.. விகாரைகள் எல்லாவற்றையும்.. அன்னதான மடங்களாக.. சிறுவர் முதியோர் பொழுதுபோக்கு இடங்களாக மாற்றுவதே சிறந்தது. எனி விகாரைகளை வலிந்து அமைக்க வேண்டிய அவசியமும் இல்லை. கோவில்களை அமைத்தால் போதும். 

இதுதான் உண்மையான மத ஐக்கியமாகும். 

இதனை அந்த பிக்குவிடம்.. எங்கட ஐயாக்கள் சொல்லுவினமோ..???!☺️

அத்தோடு.. இலங்கை ஒரு சைவ இந்து நாடு என்று அரசியல் அமைப்பிலும் மாத்திடுங்க. ?

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

பிக்குவின் வழியிலையே போவம்.. விஷ்ணுவின் அவதாரம் புத்தர் என்றால்.. விஷ்ணுவின் பிற அவதாரங்கள் எல்லாம் கோவில்களில் இருக்க.. புத்தருக்கு ஏன் தனி விகாரைகள். பேசாமல் புத்தரை கோவிலின் ஒரு மூலையில் வைச்சு வழிபட்டு விட்டுப் போவது தானே.

மத வெறியை தூண்டாமல்.. யதார்த்தத்தை சரியாக உள்வாங்கி.. புத்தரை கோவிலில் ஒரு மூலையில் வைச்சு வழிபடுவதோடு.. விகாரைகள் எல்லாவற்றையும்.. அன்னதான மடங்களாக.. சிறுவர் முதியோர் பொழுதுபோக்கு இடங்களாக மாற்றுவதே சிறந்தது. எனி விகாரைகளை வலிந்து அமைக்க வேண்டிய அவசியமும் இல்லை. கோவில்களை அமைத்தால் போதும். 

இதுதான் உண்மையான மத ஐக்கியமாகும். 

இதனை அந்த பிக்குவிடம்.. எங்கட ஐயாக்கள் சொல்லுவினமோ..???!☺️

அத்தோடு.. இலங்கை ஒரு வைச இந்து நாடு என்று அரசியல் அமைப்பிலும் மாத்திடுங்க. ?

நெடுக்ஸ் அண்ணே... உங்கள் பதிவில், ஒரு எழுத்துப்  பிழை இருக்கின்றது. ?
சைவ என்பதற்கு.... வைச என்று வந்துள்ளது என நினைக்கின்றேன்.
நீங்கள் எழுதியதை,  அப்படியே.... வாசிக்க,  எனக்கு  வேறு அர்த்தம் வருகின்றது. ?

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.