Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் மூழ்கிய சீன போர் கப்பலை மீட்க வரும் சீனா

Featured Replies

யாழில் மூழ்கிய சீன போர் கப்பலை மீட்க வரும் சீனா

 

சீன நாட்டுக் கப்பல் ஒன்று 500 ஆண்டுகளிற்கு முன்பு யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் மூழ்கிய  இலங்கை சீன நாட்டுத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து அகழ்வு ஆராச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

chainas.jpg

அல்லைப்பிட்டி பகுதியில் 500 ஆண்டுகளிற்கும் முன்னர் இலங்கை கடற்பரப்பில் பயணித்த ஓர் கப்பல் விபத்திற்கு உள்ளாகி மூழ்கியுள்ளதாகவும் அதன் எச்சங்கள் அப்பகுதியில் இருப்பதாகவும் ஓர் தகவல் சீன அரசிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் சீன நாட்டின் ஏற்பாட்டில் 1980 ஆம் ஆண்டு இப் பகுதியில் ஓர் ஆரம்ப ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆய்வின்போது சில சீன நாட்டு நாணயம் மற்றும் சீனக் கப்பலின் சில பாகங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அப்பகுதியில் ஆய்விற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் நாட்டில் இடம்பெற்ற போர் காரணமாக குறித்த ஆய்வுப் பணி இடைநிறுத்தப்பட்டிருந்த்து.

இந்த நிலையில் தற்போது சீன அரசு உத்தியோக பூர்வமாக இலங்கை அரசிடம் எழுத்தில் விண்ணப்பித்து இலங்கை சீன அரசுகள் ஒப்பந்தம் மேற்கொண்டு அதன் அடிப்படையில் தற்போது சீன மற்றும் இலங்கை நாடுகளின் தொல் பொருள் திணைக்களங்கள் இணைந்து அல்லைப்பிட்டி கடற்பகுதியில் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/38429

  • கருத்துக்கள உறவுகள்

நீ(இந்தியா) புலிகளை அழித்து துணை துதரகம் அமைத்து வடபகுதியை கைப்பற்றலாம் என்றால் நான் 500 வருடத்திற்க்கு முற்பட்ட கப்பலை கண்டுபிடிக்கிறன் என்ற போர்வையில் வடபகுதியை கைப்பற்றுவேன்

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்கடா காதில பூ சுத்திரீங்களா?

அல்லைப்பிட்டீல கப்பல் போற கடலா?

எங்கடா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

யாழில் மூழ்கிய சீன போர் கப்பலை மீட்க வரும் சீனா

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

என்னங்கடா காதில பூ சுத்திரீங்களா?

அல்லைப்பிட்டீல கப்பல் போற கடலா?

எங்கடா?

சீனக்கப்பல் மூழ்குமுன் அல்லை கடலாக இருந்தது. மூழ்கியபின் அல்லை பிட்டியாகி விட்டது முனிவரே. ?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

என்னங்கடா காதில பூ சுத்திரீங்களா?

அல்லைப்பிட்டீல கப்பல் போற கடலா?

எங்கடா?

சீன கப்பல் விவகாரம் உண்மையாக இருக்கலாம் அல்லது புனையப்பட்டதாக இருக்கலாம்.

ஆனால் அல்லைப்பிட்டி கடலில் அன்றைய காலத்து பாரிய கப்பல்கள் வந்திருப்பதத்திற்கு நிறையவே சூழ்நிலை ஏதுக்கள்  உண்டு.

ஏன் போர்த்துக்கேயர் கோட்டையை அந்த இடத்தில் நிர்மாணிதார்கள்? போர்த்துக்கேயர் காலத்திட்ற்கு முன்பும் அங்கு கோட்டை இருந்திருக்கிறது.

போர்த்துக்கேயர் தீபகற்பம் ஊடாகவே (முதல் ?) ஆக்கிரமிப்பு தாக்குதலை மேற்கொண்டார்கள். அது கைகூடாமல் போகவே, மன்னார் வழியாக மதம் மாற்றம் வழியாகா ஆக்கிரமிப்பை மேற்கொண்டார்கள்.

இந்த கடல் நிச்சயமாக சோழ மண்டலத்தில் இருந்தது. சோழரிற்கும் சீனரிற்கும் நிறையவே கடல் வலி வணிகம் இருந்தது.

ஆயினும், சீனாவின் நோக்கம் என்பதே இதில் மிகப் பெரிய கேள்வி குறி.    மற்றும் 500 ஆண்டுகளுக்கு  முன்பு (1510 -,1520?) என்பதும் நம்பக்  கூடியது அன்று. சொறி லங்கா புத்தர் சிலைகளை புதைப்பது போல இது மூழ்கடிப்பட்ட கப்பலா?

1000 - 1100 என்றால் சாத்தியக்  கூறுகள் உண்டு. ஏனெனில், சோழரின் மிக உச்சமான காலம். 

  • கருத்துக்கள உறவுகள்

AP.PNG.69ca06d1a2773e1e261d6ba37e574a48.PNG

போர்த்துக்கேயர் காலம் 1506 -1638.

 

அல்லைப்பிட்டியை சுற்றி பெரும் கடல் இல்லை.

மேலும் ராமர் பாலத்தினால் (ஆடம்ஸ் பிரிட்ஜ்) பெரும் கப்பல்கள் இலங்கையை சுத்தியே செல்கின்றன. 

இந்த பாலத்தினை கப்பல் போக்கு வரத்திற்கு அமைவாக வெட்டி ஆளப்படுத்துவதே சேது கால்வாய்த் திட்டம். இப்போது கிடப்பில் உள்ளது.
500 வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பியர்கள் தான் அப்பகுதியில் கடலில் கோலோச்சினார்கள். சீனர்கள் வந்ததாக சரித்திரம் இல்லை.

அல்லை சமுத்திரா பீச் ரிசார்ட் இருப்பது, இப்போது இந்த விசயமாக கூகுளை கிளறிய போது தெரிந்தது. 

அடுத்த முறை போனால் விசாரிக்க வேண்டும்.

AP.PNG.6f58dafffaa91cd540b2855cb4811567.PNG

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

 

48 minutes ago, Nathamuni said:

அல்லைப்பிட்டியை சுற்றி பெரும் கடல் இல்லை.

ஆழ்கடல் இல்லைத் தான்.

ஆனால் அன்றைய வணிக கப்பல்கள் பயணிப்பதற்கு போதுமான ஆழம்  உடையது.

https://www.britannica.com/place/Arabian-Sea

1 hour ago, Nathamuni said:

மேலும் ராமர் பாலத்தினால் (ஆடம்ஸ் பிரிட்ஜ்) பெரும் கப்பல்கள் இலங்கையை சுத்தியே செல்கின்றன. 

இந்த பலத்தினை கப்பல் போக்கு வரத்திற்கு அமைவாக வெட்டி ஆளப்படுத்துவதே சேது கலவை திடடம். இப்போது கிடப்பில் உள்ளது.
500 வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பியர்கள் தான் அப்பகுதியில் கடலில் கோலோச்சினார்கள். சீனர்கள் வந்ததாக சரித்திரம் இல்லை. 

 

ஏறத்தாழ இதே ஆழத்திலேயே தூத்துக்குடி துறைமுகம், ராமர் பாலத்திற்கு தென் கிழக்காக உள்ளது.

கப்பல் மூழ்கிய நூற்றாண்டே மிகப் பெரிய கேள்விக்கு குறி.

கப்பல் மூழ்கிய நூற்றாண்டே மிகப் பெரிய கேள்விக்கு குறி. ஆனால், 15ம்  நூற்றாண்டு என்றால் சீனாவின் கடல் ஆதிக்கம் இருந்தது.

இதை முழுமையாக பார்க்கவும். கீழேயுள்ள குறிப்புகளையும் பார்க்கவும்.

 

 

 

 

 

 

 

  • தொடங்கியவர்

சீனாவுக்கும் இலங்கைக்கும் வரலாற்று தொடர்பா? யாழ்ப்பாணத்தில் ஆய்வு

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே நிலவியதாக சொல்லப்படும் பண்டையகால தொடர்புகள் பற்றி கண்டறிய இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து இலங்கையின் யாழ்ப்பாணத்தில் ஆய்வுப் பணிகளை ஆரம்பித்துள்ளன.

சீனாவுக்கும் இலங்கைக்கும் வரலாற்று தொடர்பா?

இரு நாடுகளின் தொல்லியல் திணைக்களங்கள் இணைந்து யாழ்ப்பாணத்தின் அல்லைப்பிட்டில் இந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளன.

இலங்கைக்கும் சீனாவிற்கும் 1200 வருடங்களுக்கு முன்னர் தொடர்புகள் இருந்ததாக கூறி, சீன அரசினால் கடந்த 1980 ஆண்டு யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி கப்பல் துறை பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த ஆய்வில் கப்பல் பாகங்கள், நாணயங்கள், சமய வழிபாட்டுக்கான பொருட்கள் உள்ளிட்ட பல சான்றுப் பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன. ஆனாலும் இலங்கையில் தொடர்ந்த உள்நாட்டு யுத்தம் காரணமாக இந்த அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

சீனாவுக்கும் இலங்கைக்கும் வரலாற்று தொடர்பா?

இந்நிலையில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே பண்டையகால தொடர்புகள் இருந்ததற்கான சான்றுப் பொருட்கள் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்டிருப்பதால் அவை தொடர்பில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென சீன அரசு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து யாழ்ப்பாணத்தின் அல்லைப்பிட்டி கப்பல் துறைப் பகுதியில் இரு நாடுகளினதும் தொல்பொருள் திணைக்கள நிபுணர்கள் இணைந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீனாவுக்கும் இலங்கைக்கும் வரலாற்று தொடர்பா?

இதே வேளை, கப்பல் துறைப் பகுதியில் ஏற்கனவே மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களையும் தற்போது நடைபெறுகின்ற ஆய்வுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ள பொருட்களையும் கொண்டு பார்க்கையில் இரு நாடுகளுக்குமிடையே வணிக ரீதியான தொடர்புகள் இருந்திருக்கலாமென்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-45188758

 

 

 

 

யாழ்ப்பாணத்துடனான தொடர்பு- வரலாற்று வேர்களை அல்லைப்பிட்டியில் தேடுகிறது சீனா

 

archeological-exhumation-in-Allaipitty-2

 

பண்டைக்காலத்தில்  சீனாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் இருந்த கடல்வழி வணிகத் தொடர்புகள் குறித்து, சீனாவின் ஷங்காய் அரும்பொருள் காட்சியகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள், அல்லைப்பிட்டியில் அகழ்வாய்வில் ஈடுபட்டுள்ளனர்.

பண்டைய சீனாவின் பட்டுப்பாதை வணிகம், யாழ்ப்பாணத்துக்கும் பரவியிருந்ததாக கூறப்படுகிறது.

1980களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள தீவகத்தின் அல்லைப்பிட்டி பகுதியில், சீன நாணயங்கள் மற்றும் பண்டைக்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அங்கு சீன ஆய்வாளர்கள் ஆய்வுகளில் ஈடுபட்டனர்.

பின்னர் போர்ச் சூழலினால் அந்த ஆய்வுகள் கைவிடப்பட்டன.

இந்த நிலையில்,  அல்லைப்பிட்டி கப்பல் துறைப் பகுதியில் சீனாவின். ஷங்காய் அருங்காட்சியகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள் மீண்டும் ஆகழ்வாய்வில் ஈடுபட்டுள்ளனர்.

அல்லைப்பிட்டி பகுதியில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கியதாக கூறப்படும் சீன வணிகக் கப்பல் ஒன்றினது தடயங்களைக் கண்டறியும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியுடனும், சிறிலங்கா தொல்பொருள் திணைக்களத்தின் துணையுடனும் இந்த அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

எனினும், இந்த அகழ்வாராய்ச்சி தொடர்பாக உள்ளூரில் உள்ள தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கருத்து எதையும் வெளியிட மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

archeological-exhumation-in-Allaipitty-2archeological-exhumation-in-Allaipitty-1archeological-exhumation-in-Allaipitty-4archeological-exhumation-in-Allaipitty-3

http://www.puthinappalakai.net/2018/08/15/news/32344

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தட­யங்­கள் சிக்­க­வில்லை

 
20180814_115821-780x405.jpg

500 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் மூழ்­கி­யது என்று கூறப்­ப­டும் சீனக் கப்­ப­லைத் தேடி அல்­லைப்­பிட்­டி­யில் நேற்று முன்­னெ­டுக்­கப்­பட்ட அகழ்­வுப் பணி­க­ளில் முக்­கிய தட­யங்­கள் எவை­யும் கண்­டு­ பி­டிக்­கப்­ப­ட­வில்லை என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

இந்த அகழ்­வுப் பணி­க­ளில் சீனப் பணி­யா­ளர்­க­ளும் ஈடு­பட்­டுள்­ள­னர்.

https://newuthayan.com/story/09/தட­யங்­கள்-சிக்­க­வில்லை.html

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா ஆட்டையை போட படுகிற பாடு இருக்கே எனக்கென்னமோ நாங்கள்  மூன்று நாட்டு குடியுரிமை பெற போகிறோம் போல தோன்றுகிறது :)

எதுக்கோ  அம்முறானுக  ******. இறைவனுக்கே வெளிச்சம். கப்பலாம் கப்பல்.

Edited by நியானி
தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

தட­யங்­கள் சிக்­க­வில்லை

 
20180814_115821-780x405.jpg

500 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் மூழ்­கி­யது என்று கூறப்­ப­டும் சீனக் கப்­ப­லைத் தேடி அல்­லைப்­பிட்­டி­யில் நேற்று முன்­னெ­டுக்­கப்­பட்ட அகழ்­வுப் பணி­க­ளில் முக்­கிய தட­யங்­கள் எவை­யும் கண்­டு­ பி­டிக்­கப்­ப­ட­வில்லை என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

இந்த அகழ்­வுப் பணி­க­ளில் சீனப் பணி­யா­ளர்­க­ளும் ஈடு­பட்­டுள்­ள­னர்.

https://newuthayan.com/story/09/தட­யங்­கள்-சிக்­க­வில்லை.html

அதிசயம் ஆனால் உண்மை! 

500 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் கடலில் இருந்து தவறித் தரையில் விழுந்து மூழ்­கி­யதாக நம்பப்படும் சீனக் கப்­ப­லைத் தேடி அல்­லைப்­பிட்­டி­யில் நேற்றுப் பனங்கூடல் தரை ஒன்று தோண்டப்பட்டது. இந்தத் தோண்டல் பணி­க­ளில் முக்­கிய தட­யங்­கள் எவை­யும் கண்­டு­ பி­டிக்­கப்­ப­ட­வில்லை என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரக்கணக்கான கிலோமீற்றருக்கு அப்பால் ,இந்திய சீன எல்லையில் சீனாவை ஒருவழி பண்ணபோறோம் எண்டு ஆயிரக்கணக்கான டாங்கிகள்,ரஷ்ய சுக்கோய் ,அமெரிக்கc-17 விமானங்கள், பிரெஞ்சு ரபேல் விமானத்துக்கான கொள்வனவுகள் என்று...

  தனது மக்களுக்கு பகல் கனவு பகல் காட்சி காட்டி கொண்டிருக்கிறது இந்தியா,

ஆனால் அலட்டிகொள்ளாமல் இந்தியாவிலிருந்து  50 மைல் தொலைவில் உள்ள அல்லைபிட்டியில் வந்து நிற்கிறது சீனா...வாழ்த்துக்கள்.

இந்தியாவும் சீனாவும் சேர்ந்துதான் எம்மை அழித்தாலும், முதுகில் குத்திய இந்திய எதிரியைவிட, நேரில் வந்து நெஞ்சில் குத்திய சீன எதிரி கெளரவமானவன்!

நண்பர்கள் என்று நமக்கு யாருமே இல்லாதுபோய்விட்ட சூழலில், இருக்கும் எதிரிகளுள் யார் சிறந்தவன் என்று நினைத்து ஆறுதலடைய வேண்டிய நிலமையில் நிற்கிறது ஈழ தமிழரின் நிகழ்காலம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

20180814_115821-780x405.jpg

வடலிக்கை  என்ன கோதரியை தடவுறாங்களப்பா?

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

20180814_115821-780x405.jpg

வடலிக்கை  என்ன கோதரியை தடவுறாங்களப்பா?

அவயன்ற தாத்தாட பூட்டனின் தாத்தா, சங் யோய்ங், 500 வருசத்துக்கு முந்தி, பனங்கள்ளு அடிச்சிற்று, பனங்கொட்டையோட புதைச்சு வைச்ச பாக்குவெட்டியை தேடினமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சீன பாசை பழக்த்தான் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் சீனக் கடலில் மூழ்க்கிப் போன சோழர் கப்பலை தேடி பதிலுக்கு போயிருக்கலாம்.. எங்களுக்கு என்றொரு தேசம் இருந்திருந்தால்.. அதுக்கு தலைவர் பிரபாகரன் போல் ஒரு தலைவர் இருந்திருந்தால்... இப்போது நாம் இப்படியான செய்திகளை வாசித்து கொட்டாவி தான் விட முடியும். வேறு எதுவும் எங்களால் முடியாது. இந்த முடிவை நாமே நமக்கு எழுதிக் கொண்டது தான் எங்கள் இனத்துரோகத்தின் அற்புதமான வெளிப்பாடு. ?

சீனாவின்  இழந்த புதையல் கப்பல்களைத் தேடும் முயற்சி. 
அத்துடன் ராணுவ கண்காணிப்பாகவும் இருக்கலாம்.

https://www.scmp.com/news/china/society/article/2118421/hunt-ming-dynasty-admiral-zheng-hes-lost-treasure-ship-heats

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.