Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்

 

sampanthan-300x200.jpg1997ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சியை வென்றிருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் நினைவுகூரல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“மகாத்மா காந்தி ஆரம்பித்த உண்மை மற்றும் ஒத்துழையாமையை அடிப்படையாகக் கொண்ட சத்தியாக்கிரக போராட்டத்தை பாடமாக எடுத்துக் கொண்டு, 1977ஆம் ஆண்டில்,  தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அகிம்சைப் போராட்டத்தை  முன்னெடுத்திருந்தால், சிறிலங்காவில் ஆயுதப் போராட்டத்தை தடுத்திருக்கலாம்.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக 1977இல் அவர்கள் வன்முறையற்ற போராட்டத்தில் ஈடுபடாமல் போனது மிகப் பெரிய தவறு.

அப்போது நாடாளுமன்றத்தில் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் வலுவாக இருந்தது. வடக்கு கிழக்கில் இருந்து பெருமளவு தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

1977 ஆம் ஆண்டை நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். அப்போது, ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐதேக அரசாங்கம் பதவியில் இருந்தது.

அப்போது, காந்தி கற்றுக் கொடுத்த, சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை, போன்ற அகிம்சை வழியில் செயற்பட்டிருந்தால்,  இந்த நாட்டில் ஒரு ஆயுதப் போராட்டத்தை நாம் தடுத்திருக்க முடியும்.

நாம் அதை செய்திருந்தால், வன்முறை இன்றி எமது பிரதேசங்களில் சுயாட்சியை வென்றிருக்க முடியும்.

இந்த நாட்டில் மீண்டும் ஒரு வன்முறை ஏற்படாது என்பது எனது நம்பிக்கை.

சிறிலங்கா அரசாங்கம்  தேசியப் பிரச்சினைக்கு சரியான தொரு தீர்வை வழங்கும் கடமையை நிறைவேற்றத் தவறினாலும் கூட, தமிழ் மக்கள் மகாத்மா காந்தியின் போதனைகளின் அடிப்படையில், வன்முறையின்றி தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/10/13/news/33440

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவ்வளவு நாளும்.. இந்த ஆளை ஒரு அரை விசர் என்று தான் எடை போட்டிருந்தேன்!

இப்போது தான் தெரியும் ... முழு விசர் எண்டு...!

மகாத்மா இலங்கையில் இருந்திருந்தால்.. அவரது முடிவு .. நாலாம் மாடியில் தான் முடிந்திருக்கும் என்பது கூடப் புரியாத விசர் !

Edited by புங்கையூரன்

18 minutes ago, nunavilan said:

“மகாத்மா காந்தி ஆரம்பித்த உண்மை மற்றும் ஒத்துழையாமையை அடிப்படையாகக் கொண்ட சத்தியாக்கிரக போராட்டத்தை பாடமாக எடுத்துக் கொண்டு, 1977ஆம் ஆண்டில்,  தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அகிம்சைப் போராட்டத்தை  முன்னெடுத்திருந்தால், சிறிலங்காவில் ஆயுதப் போராட்டத்தை தடுத்திருக்கலாம்.

சம்மந்தன் தான் இறக்கும்வரை நக்கி நக்கி மட்டும் தான் ஈனப் பிழைப்பு நடத்துவேன் என்று மீண்டும் மீண்டும் அடித்து சொல்கிறார்!

உந்த மாதிரி பினாத்திறத விட்டு சம்மந்தனும் விக்கியும் பல்கலைக்கழாக மாணவர்களுக்கு பின்னால நடந்திருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் காலம் கெட்டுவிடவில்லை. சம்பந்தரும் சுமந்திரனும் இன்னும் கையாலாகாத அரசியல்வாதிகளும் அஹிம்சைப் போராட்டத்தை நடத்த காலிமுகத் திடலில் அல்லது துரையப்பா அரங்கில் குந்தி இருக்கலாம். கூட சில காக்கா, குருவிகள் கூட குந்தாது ?

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் மகாத்மா காந்தியினால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்பது முழுப்பிழை.  இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட சேதங்களினால்தான் இந்தியா உட்பட பலநாடுகளுக்கு பிரித்தானியா சுதந்திரம் வழங்கியது.  அகிம்சையாயிருப்பதினால் வண்டி ,தொந்தி குறைந்து உடல் மெலிந்து அழகாக இருக்கலாம். வேறு ஒரு சதத்துக்கும் பிரயோசனமில்லை.  அகிம்சையை உலகத்துக்குக்காட்டியாதாக பீத்திக்கொண்டிருக்கும் கிந்தியாகூட தீலிபன், அன்னைபூபதியின் அகிம்சையைக் கண்டுகொள்ளவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை செல்வா செய்யாத அகிம்சை வழிப்போரட்டமா? அவரே இனித் தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்று சொல்லிவிட்டுத்தானே இறந்தார்? அப்போது ஆயுதப் போராட்டம் எங்கே இருந்தது?

தனிச் சிங்களம், பண்டா - செல்வா ஒப்பந்தக் கிழிப்பு, தொடர்ச்சியாக தமிழர்க்கெதிரான இனவன்முறைகள் என்று 1977 இற்கு முன்னர் எவ்வளவோ விடயங்கள் நடந்தனவே? அப்போது ஆயுதப் போரட்டம் எங்கிருந்தது?

சரி, இதெல்லாவற்றையும் விட்டு விடலாம். 2009 இற்குப் பின்னர் போரே நடக்கவில்லை. அப்படியாயின், தமிழருக்கு சுயாட்சி எல்லாம் வேண்டாம், இணைந்த வடக்குக் கிழக்கு மாகணத்துடன் அதிகாரப் பகிர்வொன்றைத் தருவதற்கு இன்று தடையாக இருப்பது எது ?

உங்களைப் போய் சாணக்கியர், அரசியல் பழம், கொட்டை என்றெல்லாம் சொன்னார்களே?????

 

  • கருத்துக்கள உறவுகள்

42930-E06-BF68-49-F1-B125-6-CBE8-FC32180

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்

 

sampanthan-300x200.jpg1997ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சியை வென்றிருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.

நிச்சயம் இந்தப் பெரியவரை அங்கொடைக்கு அனுப்பிப் பரிசோதிப்பதைத் தவிர வேறு வழியில்லை. :innocent:

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு அரசியலில் எல்லாமே நிறைவா கிடைச்சிட்டு.. வாழ்க்கையிலும் நல்ல நிறைவு.. தன் மக்கள்.. தன் மனைவி.. குடும்பம்.. பணம்..வெளிநாடு.. வீடு வாசல் என்று அவருக்கு என்ன.. அதுபோக பென்சன் எடுக்கிற வயசிலும்.. முழுச் சம்பளத்துடன் கூடிய அரசியல் பதவிகள்.. சிங்கள எஜமான வீட்டில் எதிர்கட்சி தலைவர் ராஜமரியாதை... இப்படியான நிலையில்.. அவருக்கு அறளை வேற.. கூட அவரையே மாதிரி ஒரு அல்லக்கை...இவ்வளவும் இருக்கிற ஒரு முழு மனிதன்.. என்ன கதைப்பான்.. செருக்குக் கதை தான் கதைப்பான். அவன் கண்ணுக்கு.. அறிவுக்கு யதார்த்தம் என்பது புலப்படவே முடியாது. 

இவரிடத்தில்.. இதுதான் நிகழ்கிறது. ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

முதலில் மகாத்மா காந்தியினால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்பது முழுப்பிழை.  இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட சேதங்களினால்தான் இந்தியா உட்பட பலநாடுகளுக்கு பிரித்தானியா சுதந்திரம் வழங்கியது.  அகிம்சையாயிருப்பதினால் வண்டி ,தொந்தி குறைந்து உடல் மெலிந்து அழகாக இருக்கலாம். வேறு ஒரு சதத்துக்கும் பிரயோசனமில்லை.  அகிம்சையை உலகத்துக்குக்காட்டியாதாக பீத்திக்கொண்டிருக்கும் கிந்தியாகூட தீலிபன், அன்னைபூபதியின் அகிம்சையைக் கண்டுகொள்ளவில்லை. 

மற்றது, பிரித்தானியாவின் நோக்கம் செல்வம், பணம் சேர்ப்பது.

கிந்தியாவில் இருந்து பிடுங்கப்படக் கூடிய செல்வதை விட செலவு அதிகமானதால், கிந்தியவை  பிரித்தானியா பேரரசில் இருண்டது நீக்கினால் முற்றான வங்குரோதை ஆகக்குறைந்தது தாமதிக்கலாம் என்ற முடிவின் பின்னரே பிரித்தானை காந்திக்கு செவி மடுத்து போல காட்டிக்கொண்டது.

மேலும்,   பிரித்தானியா பேரரசு பணத்தையும், செலவத்தையும் பிரித்தானிய பிரித்தானிய மண்ணிற்கு சேர்க்கும் ஓர் வர்த்தக, நிர்வகாக அலகாவே நோக்கினர். இனத்தை அழிப்பது அவர்கள் நோக்கமல்ல. மாறாக, கிந்தியாவை ஒப்பீட்டளவில் மலிந்த, தகுந்த காரணத்தை கொண்டுபயிற்றுவிக்க கூடிய  மனிதவலு வழங்கும் ஓர் வளமாக, மிக முக்கியமாக பிரித்தானியாவிற்கு ஓர் வெகுமதியாகேவே நோக்கினர்.

கிந்தியாவிடற்கு ஆட்சி மாற்றம் பிரித்தானியாவிடம் இருந்து கையளிக்கப்பட்டபோது, நேரு, மவுண்ட் பட்டன், எட்வீனா பட்டன் என்ற காமம், பாலியல், காதல், உணர்ச்சி ததும்பிய  முக்கோண உறவினால் மிகவும் வழவழப்பாக   ஆட்சி மாற்றம் நடைபெற்றது.    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.