Jump to content

ரஜினியின் ‘பேட்ட’யில் தெறிக்கும் சாதியம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினியின் ‘பேட்ட’யில் தெறிக்கும் சாதியம்!

18.jpg

- ஜெ.வி.பிரவீன்குமார்

இந்திய மனங்களில் இன்று புரையோடிப் போயிருக்கும் சாதிய, மதவாத, பெண்ணடிமைத்தனப் போக்குகளை ஊக்குவித்ததிலும் அந்தக் கொடிய கட்டமைப்பு உடைபடாது காத்ததிலும் வழிவழி வந்த பல புராணங்களுக்கும் இதிகாசங்களுக்கும் பெரும்பங்கு உண்டு. அவற்றின் நீட்சியாகப் பல புராண நாடகங்களும் அதையே வலியுறுத்தின. அவற்றை அடியொற்றி உருவான சினிமா மட்டும் சும்மா இருந்துவிடுமா? சாதி ஆதிக்கத்தை எதிர்க்கும் படங்கள் அரிதினும் அரிதாக மட்டுமே வெளியாகும் சூழலில், சுய சாதியைப் போற்றும், பிற சாதிகளைக் கீழ்மைப்படுத்தும் படங்களைக் கணக்கில்லாமல் வெளியிட்டுத்தள்ளும் வேலையை ஒருபுறம் செவ்வனே செய்துதான் வருகிறது தமிழ் சினிமா. ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான ‘பேட்ட’ படமும் இதற்கு விலக்கல்ல.

உறவு அமைப்பில் தந்தைவழிச் சமூகத்துக்கும், சமூக வெளியில் ஆண் மையச் சிந்தனைகளுக்கும், நீதி போதனைகளில் உயர் சாதியினரின் நாட்டாமைத்தனத்துக்கும் காலங்காலமாகப் பழக்கப்பட்டுவிட்டதாலேயோ என்னவோ, சினிமாக்களில் இழிவுபடுத்தப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்தவர்களாகவுமே இன்றும் தொடர்கின்றனர். இந்தக் கீழ்த்தரமான வேலையைச் சில படங்கள் தெரிந்தே நேரடியாகச் செய்கின்றன. சில படங்கள் தெரியாமல் செய்கின்றன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ இதில் எந்த ரகம் என்பதை வாசகர் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்.

‘பேட்ட’ செய்த பிழை என்ன?

18a.jpg

படத்தில் ஸ்டைலிஷான ஹாஸ்டல் வார்டனாக வலம்வரும் ரஜினிகாந்த், ‘சிங்கம்’ சூர்யாவின் மீசையைக் கடன்வாங்கியதுபோல் ஃப்ளாஷ்பேக் சீன் ஒன்றில் சசிகுமாருடன் இணைந்து தோன்றுகிறார். அக்காட்சியில் ஊரில் ஆற்று மணல் எடுப்பவர்களைக் கண்டிக்கும் ரஜினி, சம்பந்தப்பட்டவர்களைப் பார்த்து ‘நாதாரிங்களா’ எனப் போகிறபோக்கில் திட்டிவிட்டுச் செல்கிறார். அதற்குப் பார்வையாளர்கள் கைதட்டுகிறார்கள். மீண்டும் ஓர் இடத்தில் அதே வார்த்தையைச் சொல்லி ரஜினி திட்ட, அதற்கும் கைதட்டுகிறார்கள். அதோடு விடவில்லை; தான் பேசுவதைக் கவனித்துக்கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரத்தைப் பார்த்து ‘ஓட்டுக் கேட்டியாடா நாதாரி’ என மீண்டும் ஒருமுறை அதே வார்த்தையைச் சொல்லித் திட்டுகிறார் ரஜினி. பார்வையாளர்களின் கைதட்டலோ இம்முறை இன்னும் அதிகமாகவே வந்து விழுகிறது.

‘வீழ்வேனென்று நினைத்தாயோ’ எனும் பாரதியாரின் புகழ்பெற்ற சொல்லைத் தனது துவக்க ‘பஞ்ச்’ வசனமாகப் பேசி ‘பேட்ட’யில் என்ட்ரி கொடுக்கிறார் ரஜினிகாந்த். படத்தின் என்ட்ரியில் அதைச் சரியாகப் பயன்படுத்தியுள்ள ரஜினி, அதே பாரதியார் சொன்ன ‘சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ எனும் வரிகளைப் படத்தின் பின்பகுதியில் தனது கவனத்தில் இறுத்திக்கொள்ள மறந்தது ஏன் எனத் தெரியவில்லை.

காரணம், ‘நாதாரி’ என்பது பன்றி மேய்க்கும் போயர் சமூக மக்களைக் குறிக்கும் ஒரு சொல்லாக அறியப்பட்டு வருகிறது. ஆனால், படத்திலோ அது தவறு செய்பவர்களை வசைபாடுவதற்கான ஒரு சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த வசனத்தைக் கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல் அரங்கு நிறைந்த கைதட்டல்களும் விசில்களும் பெருவாரியாகப் பறக்கின்றன என்றால் என்ன அர்த்தம்? தவறென்றே தெரியாத அளவுக்கு அந்த வார்த்தை பொதுவெளியில் சகஜப்படுத்தப்பட்டுள்ளது என்றுதானே அர்த்தம்?

படத்தில் அந்த வசனம் இடம்பெறும் கதைக்களம் மதுரை. அந்தக் காட்சியில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள சசிகுமாரும் மதுரை. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஊரும் மதுரை என்றே அறியப்படுகிறது. இப்படியிருக்க அதே மதுரைப் பகுதியையொட்டிய பன்றி மேய்க்கும் மக்களுக்குத்தான் குறிப்பிட்ட அந்தப் பெயர் வழங்கப்படுகிறது என்பது இவ்விஷயத்தில் கூடுதல் கொடுமை.

18b.jpg

ஏன் கண்டுகொள்ளப்படுவதில்லை?

நாதாரி மட்டுமல்ல சண்டாளர், பண்டாரம், பண்டி, கேப்மாரி, லம்பாடி என சினிமாக்களிலும் பொதுவெளியிலும் இழிவாகச் சித்திரிக்கப்படும் சாதிகள் பல. “நாதாரித்தனம் பண்ணினாலும் நாசூக்கா பண்ணனும்...”, “அட சாண்டாளப் பாவிங்களா...”, “பெரிய லம்பாடி பொம்பளையா இருக்கும்போல...” என சினிமாவில் வடிவேலு உள்ளிட்ட காமெடியன்களால் மேற்கண்ட வசனங்கள் உச்சரிக்கப்படும்போது அவை கதாபாத்திரங்களுக்கு இடையேயான சகஜமான உரையாடலென்பதைத் தாண்டி, நிஜ உலகில் சில சாதிகளையும் இழிவுபடுத்துகின்றன என்பதைப் பலரும் உணருவதில்லை அல்லது தெரிந்தும் கண்டுகொள்வதில்லை.

இப்படியாக அவை தொடர்ந்து பயன்படுத்தப்படும்போது லம்பாடி என்பது ஒடுக்கப்பட்ட இனமென்றோ, சண்டாளர் என்பது பார்ப்பனப் பெண்ணாக அறியப்படும் ஒருவருக்கும், சூத்திர ஆணாக அறியப்படும் ஒருவருக்கும் பிறந்தவரைக் குறிப்பிடப் பயன்படுத்தும் வார்த்தையாகப் பொதுச்சமூகம் கட்டமைத்து வைத்துள்ளதையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு பலருக்கும் இல்லாமல் போகிறது. இந்தச் சொற்கள் உருவான பின்புலம் சமூக இழிவைக் குறிக்கிறது. இச்சொற்களை வசைச் சொற்களாகத் திரைப்படங்கள் இயல்பாகப் பயன்படுத்துவதன் மூலம் அந்த இழிவு பொதுப் புத்தியில் வலுப்படுகிறது. ஒரு சமூகத்தை ஒரு படத்தில் குறிப்பிடுவதைத் தவறு எனச் சொல்ல முடியாது. ஆனால், ஒரு சமூகத்தை ஒட்டுமொத்தமாகப் பொதுப்படுத்தி இழிவாகச் சித்திரிக்கும்பட்சத்தில் அது ஏற்கத்தக்கதல்ல.

பேட்டயிலும் தொடரும் ‘பீப்’ சாங்க்

18c.jpg

சாதியை இழிவுப்படுத்துவது ஒருபுறம் என்றால் மற்றொரு புறமோ பெண்களைக் கீழ்த்தரமாகச் சித்திரிக்கும் பாடலையும் தன்னகத்தே கொண்டுள்ளது பேட்ட.

‘கெத்தா நடந்து வர்றான் கேட்டையெல்லாம் கடந்து வர்றான் .... த்தா வெடியை ஒண்ணு போடு தில்லால...’

இந்தப் படத்தில் ரஜினி நடனமாடும் தொடக்க பாடலில் இடம்பெறும் வரிகள் இவை. பாடல் வெளியானபோதே குறிப்பிட்ட அந்த வரிகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், படக்குழு அதைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. ஆடியோவிலோ, ட்ரெய்லர் அல்லது டீசர் வெளியீட்டின்போதோ தவறான வரிகள் இருக்கின்றன எனச் சுட்டப்பட்டபின் குறிப்பிட்ட வரிகளை நீக்கி வெளியிடப்பட்ட திரைப்படங்கள் பல. ஆனால், படமே ரிலீஸான போதும் அந்த வார்த்தையை நீக்கவில்லை என்றால் U/A சான்றிதழ் பெற்ற இந்தப் படத்தை எப்படி எடுத்துக்கொள்வது?

தணிக்கைத் துறையின் போதாமை

திரைப்படம் ஒருவரின் எண்ணங்களையும் செயல்களையும் பெரிதும் ஊக்குவிக்கக் கூடியது; எனவே, திரைப்படத் தணிக்கை என்பது அவசியமாகிறது. ஒரு விஷயத்தைப் படிப்பதனால் ஏற்படும் தாக்கத்தைவிடப் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி திரைப்படங்களுக்கு உண்டு. இருண்ட திரையரங்குகளில் கவனச் சிதறலுக்கு வாய்ப்புகள் மிகக் குறைவு; இத்தருணங்களில் நடிப்பும், வசனங்களும் மக்கள் மனதில் மிக ஆழமாய்ப் பதியும் திறன் வாய்ந்தவை. ஒரு திரைப்படம் நன்மைகள் கற்பிக்கும் அதே அளவுக்குத் தீய கருத்துகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் வலிமையுடையது; எனவே இவற்றை மிகவும் கவனத்துடனும் பொறுப்புடனும் பயன்படுத்த வேண்டும். தனிப்பட்ட இனத்தையோ, மதத்தையோ, பிரிவையோ காட்சியின் வழியாகவோ, வார்த்தையின் வழியாகவோ தவறாகச் சித்திரிப்பது ஏற்புடையதல்ல. இவையெல்லாம் திரைப்படத் தணிக்கைத் துறை கவனிக்க வேண்டிய அம்சங்கள். ஆனால், அவையெல்லாம் முறைப்படி கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதைத் தணிக்கைத் துறையினரும் திரைத் துறையினரும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்.

 

 

https://minnambalam.com/k/2019/01/17/18

 

Link to comment
Share on other sites

நாதாரி என்றது ஒரு சாதியைக் குறிக்கும் சொல் என்று இப்பதான் அறிகின்றேன். இந்த சொல்லை அடிக்கடி எழுத்தில் கூட பாவித்துள்ளேன். அதே மாதிரி சண்டாளர் என்ற சொல்லை கலைஞர் கருணாநிதி கூட பயன்படுத்தி இருக்கின்றார்.
 

இப்படியான கட்டுரைகள் சாதி பற்றிய பிரக்ஞை இன்றி பாவிக்கின்றவர்களுக்கு கூட சாதிய சாயத்தை போட்டு பார்த்து சாதியத்தை வளர்க்க உதவுகின்றனவா என சந்தேகம் எனக்கு வருவதுண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

நாதாரி என்றது ஒரு சாதியைக் குறிக்கும் சொல் என்று இப்பதான் அறிகின்றேன். இந்த சொல்லை அடிக்கடி எழுத்தில் கூட பாவித்துள்ளேன். அதே மாதிரி சண்டாளர் என்ற சொல்லை கலைஞர் கருணாநிதி கூட பயன்படுத்தி இருக்கின்றார்.
 

இப்படியான கட்டுரைகள் சாதி பற்றிய பிரக்ஞை இன்றி பாவிக்கின்றவர்களுக்கு கூட சாதிய சாயத்தை போட்டு பார்த்து சாதியத்தை வளர்க்க உதவுகின்றனவா என சந்தேகம் எனக்கு வருவதுண்டு

உங்களுக்கும்,எனக்கும் தெரியாத மாரிரி ரஜனிக்கும் தெரியாமல் இருக்கும்....இதை எல்லாம் தூக்கிப் பிடித்துக் கொண்டு 😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தவறு செய்பவர்களை வசைபாடுவதற்கான ஒரு சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த வசனத்தைக் கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல் அரங்கு நிறைந்த கைதட்டல்களும் விசில்களும் பெருவாரியாகப் பறக்கின்றன என்றால் என்ன அர்த்தம்? தவறென்றே தெரியாத அளவுக்கு அந்த வார்த்தை பொதுவெளியில் சகஜப்படுத்தப்பட்டுள்ளது என்றுதானே அர்த்தம்?

வார்தைகளின் அர்த்தம் தெரியாமல் சகஜமாகப் பாவிக்கப்படுவதால் வரும் பிரச்சினை. ஆங்கிலத்திலும் f word வசைபாடவும், பாராட்டவும், சுயநிந்தனைக்கும் பாவிக்கப்படுகின்றது. ஆனால் பண்பில்லாத வார்த்தை என்று பொதுவாக தவிர்க்கப்படுகின்றது.

4 minutes ago, ரதி said:

உங்களுக்கும்,எனக்கும் தெரியாத மாரிரி ரஜனிக்கும் தெரியாமல் இருக்கும்....இதை எல்லாம் தூக்கிப் பிடித்துக் கொண்டு 😟

நிழலிக்கும் யாழ் கள விதிகள் மறந்துபோய்விட்டது!🤪

 

. உரையாடல்

  • "நீ, வா, போ, அவன், அவள்" என்று ஒருமையில் சக கள உறுப்பினர்களை விளித்தல், அழைத்தல், குறிப்பிடுதல் ஆகாது.
  • "நீர், உமது, உமக்கு, உம்முடைய" என்றும் சக கள உறுப்பினர்களை விளித்தல், அழைத்தல், குறிப்பிடுதல் ஆகாது.
  • துரோகி, பச்சோந்தி, பன்னாடை, நாதாரி, வாந்தி, புண்ணாக்கு, மொக்குக் கூட்டம் போன்ற மலினமான தூற்றுதலுக்குரிய பதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • சோனி, காக்கா, தொப்பி பிரட்டி, பயங்கரவாதி, காட்டுமிராண்டி போன்ற பதங்களும் தவிர்க்கப்படல் வேண்டும்
  • க ற் ப ழி ப் பு (பாலியல் வல்லுறவு/வன்புணர்வு), விபச்சாரி (பாலியல் தொழிலாளி), விபச்சாரம் (பாலியல் தொழில்), அலி (திருநங்கை) போன்ற பிற்போக்கான பதங்கள் தவிர்க்கப்படல் வேண்டும். பதிலாக அடைப்புக்குள் குறிப்பிடப்பட்டுள்ள பதங்களைப் பயன்படுத்துதல் வேண்டும்.
  • சாதிப்பெயர்களாலும், இழிவான வசைச் சொற்களாலும் சுட்டுதல், திட்டுதல், தூற்றுதல் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • மாற்றுத் திறனாளிகளைத் தூற்றுதல் தவிர்க்கப்படல் வேண்டும்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

வார்தைகளின் அர்த்தம் தெரியாமல் சகஜமாகப் பாவிக்கப்படுவதால் வரும் பிரச்சினை. ஆங்கிலத்திலும் f word வசைபாடவும், பாராட்டவும், சுயநிந்தனைக்கும் பாவிக்கப்படுகின்றது. ஆனால் பண்பில்லாத வார்த்தை என்று பொதுவாக தவிர்க்கப்படுகின்றது.

நிழலிக்கும் யாழ் கள விதிகள் மறந்துபோய்விட்டது!🤪

 

. உரையாடல்

  • "நீ, வா, போ, அவன், அவள்" என்று ஒருமையில் சக கள உறுப்பினர்களை விளித்தல், அழைத்தல், குறிப்பிடுதல் ஆகாது.
  • "நீர், உமது, உமக்கு, உம்முடைய" என்றும் சக கள உறுப்பினர்களை விளித்தல், அழைத்தல், குறிப்பிடுதல் ஆகாது.
  • துரோகி, பச்சோந்தி, பன்னாடை, நாதாரி, வாந்தி, புண்ணாக்கு, மொக்குக் கூட்டம் போன்ற மலினமான தூற்றுதலுக்குரிய பதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • சோனி, காக்கா, தொப்பி பிரட்டி, பயங்கரவாதி, காட்டுமிராண்டி போன்ற பதங்களும் தவிர்க்கப்படல் வேண்டும்
  • க ற் ப ழி ப் பு (பாலியல் வல்லுறவு/வன்புணர்வு), விபச்சாரி (பாலியல் தொழிலாளி), விபச்சாரம் (பாலியல் தொழில்), அலி (திருநங்கை) போன்ற பிற்போக்கான பதங்கள் தவிர்க்கப்படல் வேண்டும். பதிலாக அடைப்புக்குள் குறிப்பிடப்பட்டுள்ள பதங்களைப் பயன்படுத்துதல் வேண்டும்.
  • சாதிப்பெயர்களாலும், இழிவான வசைச் சொற்களாலும் சுட்டுதல், திட்டுதல், தூற்றுதல் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • மாற்றுத் திறனாளிகளைத் தூற்றுதல் தவிர்க்கப்படல் வேண்டும்

உதை நான் இப்ப தான் வாசிக்கிறேன்...இன்னும் கொஞ்ச நாளில் மறந்து போய் விடுவேன்...நன்றி இணைப்பிற்கு  

Link to comment
Share on other sites

38 minutes ago, கிருபன் said:

வார்தைகளின் அர்த்தம் தெரியாமல் சகஜமாகப் பாவிக்கப்படுவதால் வரும் பிரச்சினை. ஆங்கிலத்திலும் f word வசைபாடவும், பாராட்டவும், சுயநிந்தனைக்கும் பாவிக்கப்படுகின்றது. ஆனால் பண்பில்லாத வார்த்தை என்று பொதுவாக தவிர்க்கப்படுகின்றது.

நிழலிக்கும் யாழ் கள விதிகள் மறந்துபோய்விட்டது!🤪

 

. உரையாடல்

  • "நீ, வா, போ, அவன், அவள்" என்று ஒருமையில் சக கள உறுப்பினர்களை விளித்தல், அழைத்தல், குறிப்பிடுதல் ஆகாது.
  • "நீர், உமது, உமக்கு, உம்முடைய" என்றும் சக கள உறுப்பினர்களை விளித்தல், அழைத்தல், குறிப்பிடுதல் ஆகாது.
  • துரோகி, பச்சோந்தி, பன்னாடை, நாதாரி, வாந்தி, புண்ணாக்கு, மொக்குக் கூட்டம் போன்ற மலினமான தூற்றுதலுக்குரிய பதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • சோனி, காக்கா, தொப்பி பிரட்டி, பயங்கரவாதி, காட்டுமிராண்டி போன்ற பதங்களும் தவிர்க்கப்படல் வேண்டும்
  • க ற் ப ழி ப் பு (பாலியல் வல்லுறவு/வன்புணர்வு), விபச்சாரி (பாலியல் தொழிலாளி), விபச்சாரம் (பாலியல் தொழில்), அலி (திருநங்கை) போன்ற பிற்போக்கான பதங்கள் தவிர்க்கப்படல் வேண்டும். பதிலாக அடைப்புக்குள் குறிப்பிடப்பட்டுள்ள பதங்களைப் பயன்படுத்துதல் வேண்டும்.
  • சாதிப்பெயர்களாலும், இழிவான வசைச் சொற்களாலும் சுட்டுதல், திட்டுதல், தூற்றுதல் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • மாற்றுத் திறனாளிகளைத் தூற்றுதல் தவிர்க்கப்படல் வேண்டும்

நாதாரி என்ற வார்த்தை வசவுச் சொல் அல்லது நக்கலடிக்க சொல் என்று தெரியும். பல தடவை நண்பர்களுக்கும் கதைக்கும் போதும் சொல்லியிருக்கின்றேன். ஆனால் சாதி என்று தெரியாது.

யாழில் நாதாரி என்று யாரையும் நான் குறிப்பிட்டதாக ஞாபகம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இவ்வளவு காலமும்  வடிவேலு இன்னும் பல நடிக நடிகைகள் நாதாரி நாதாரி என திட்டி பகிடியாயோ இல்லை சீரியஸ்சாயோ  கதைக்கேக்கை மின்னம்பல ஆசிரியர் என்ன கோமாவைலையே இருந்தவர்?  :grin:

Link to comment
Share on other sites

ஒரு பொழுதுபோக்கிற்கான திரைப்படத்தைப் பற்றி எப்படியெல்லாம் கருத்துச் சொல்கிறார்கள். தூண்டி விடுகிறது என்பது இதைத்தானோ? 🤔

Link to comment
Share on other sites

இவ்வாறான வார்த்தைகள் குறிப்பிட்ட சமூகத்தை புண்படுத்துகின்றது என்பதை நாம் அறிந்திருப்பது அவசியமானது. இப்படி ஒருவர் எழுதாமல் விட்டிருந்தால் எமக்கு இது தெரியவாய்பில்லாமல் போயிருக்கும். முடிந்தவரை இவ்வார்த்தையை எதிர்காலத்தில் தவிரக்க உதவும். 

 

12 hours ago, கிருபன் said:

‘கெத்தா நடந்து வர்றான் கேட்டையெல்லாம் கடந்து வர்றான் .... த்தா வெடியை ஒண்ணு போடு தில்லால

இதே அனிருத்தும் சிம்புவும் பீப் பாடல் போட்டபோது சென்னையின் வெள்ள அவலத்தையும் மீறி கலாச்சாரப் போராட்டங்கள் நடந்தது. அதேபோல் ஒரே ஒரு எழுத்தை மெளனமாக்கி இந்தப்பாடல் உள்ளது ஆனால் இப்போது இது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. காரணம் ரஜனிகாந் என்ற பிரபலம். 

இவ்வாறான சினிமா சொல்லாடல்கள் எப்படி இளைய சமூகத்தை பாதிக்கின்றது என்பதை  அறியவேண்டுமானல் த்தா டப்மாஸ் என்று ஆங்கிலத்தில் யுரிபில் தட்டினால் பார்க்கலாம். 

எமக்கு சினிமா பொழுதுபோக்காக இருந்தாலும் தமிழ்நாட்டில் இப்பொழுதுபோக்குதான் அரசியலில் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றது. 

சினிமா நிச்சயமாக பொழுதுபோக்கு மட்டுமாக  இருப்பதில்லை. 

Link to comment
Share on other sites

7 hours ago, சண்டமாருதன் said:

இவ்வாறான வார்த்தைகள் குறிப்பிட்ட சமூகத்தை புண்படுத்துகின்றது என்பதை நாம் அறிந்திருப்பது அவசியமானது. இப்படி ஒருவர் எழுதாமல் விட்டிருந்தால் எமக்கு இது தெரியவாய்பில்லாமல் போயிருக்கும். முடிந்தவரை இவ்வார்த்தையை எதிர்காலத்தில் தவிரக்க உதவும். 

இருந்தாலும் கூட இக்கட்டுரையாளர் சொல்வது போல சாதியத்தைக் கீழ்மைப்படுத்தும் விதத்தில் இத்திரைப்படத்தில் காட்சிகள் இல்லை. படத்தில் இடம்பெறும் ஒரு சில வார்த்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு எழுதப்படும் இப்படியான கட்டுரைகளே சாதியத்தை தூண்டிவிடுபவை. இவ்வாறு ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அர்த்தம் கற்பித்தால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல வார்த்தைகளைத் தணிக்கை செய்யவேண்டிவரும். அதாவது குறிப்பிட்ட சாதியைத் தாண்டி அவை பேச்சு வழக்கில் கலந்துவிட்டன. இது மொழிப்பயன்பாட்டில் இயல்பான ஒன்று. இனியும் அவற்றை குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் வரையறை செய்தலே சாதியத்தை ஊக்குவிக்கும் செயலாகும். சாதியத்தை எதிர்க்க / ஒழிக்கப் பல வழிகள் உண்டு. இவ்வாறான 'ஊதிப் பெருப்பித்தல்கள்' அல்ல. 

Link to comment
Share on other sites

Quote

 

வடிவேலு தமிழில் புகழ்பெறச்செய்த கெட்டவார்த்தைகள் பல. நாதாரி என்றால் மதுரைப்பக்கம் பன்றிமேய்க்கும் போயர்களைக்குறிக்கும் சொல். அவர்கள் புகார்செய்ததை அடுத்து அதை தணிக்கைத்துறை தடைசெய்தது. எடுபட்ட பயல் என்றால் பேதிநோய் வந்து பொட்டலமாகக் கட்டி எடுக்கப்பட்ட சடலம் என்று பொருள்.

மேலும் வாசிக்க https://www.jeyamohan.in/2196#.XEKFF9JKjIU

மறுபிரசுரம் முதற்பிரசுரம் 2009


 

 

12 hours ago, மல்லிகை வாசம் said:

இருந்தாலும் கூட இக்கட்டுரையாளர் சொல்வது போல சாதியத்தைக் கீழ்மைப்படுத்தும் விதத்தில் இத்திரைப்படத்தில் காட்சிகள் இல்லை. படத்தில் இடம்பெறும் ஒரு சில வார்த்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு எழுதப்படும் இப்படியான கட்டுரைகளே சாதியத்தை தூண்டிவிடுபவை. இவ்வாறு ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அர்த்தம் கற்பித்தால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல வார்த்தைகளைத் தணிக்கை செய்யவேண்டிவரும். அதாவது குறிப்பிட்ட சாதியைத் தாண்டி அவை பேச்சு வழக்கில் கலந்துவிட்டன. இது மொழிப்பயன்பாட்டில் இயல்பான ஒன்று. இனியும் அவற்றை குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் வரையறை செய்தலே சாதியத்தை ஊக்குவிக்கும் செயலாகும். சாதியத்தை எதிர்க்க / ஒழிக்கப் பல வழிகள் உண்டு. இவ்வாறான 'ஊதிப் பெருப்பித்தல்கள்' அல்ல. 

ஒரு சமூகம் தம்மை நிந்திப்பதாக பல வருடங்களுக்கு முன்பு முறைப்பாடு செய்து தடைசெய்யப்பட்ட வார்த்தையை பிரயோகிப்பதும் அதை நியாயப்படுத்துவதும்  ஆரோக்கியமாக தென்படவில்லை. மேலும் இவ்வாரத்தை குறித்து அறியக்கூடியதாவது : அடிப்படையில் ஒருவரை பழிப்பதற்கோ அவமானப்படுத்துவதற்கோ சாதியில் தாழ்ந்தவர்களை சுட்டிக்காட்டுவதுபோல் இவ்வாரத்தை வடிவேலுசார்ந்த மதுரைப்பக்கம் பயன்பாட்டில் இருந்திருக்கின்றது. அது பொதுவெளியில் நகைச்சுவையோடு கலந்து வெளிப்படும்போது ஏனையவர்களால் இதன் உள்ளார்ந்த அர்த்தம் புரிந்துகொள்ளப்படவில்லை. புரிந்துகொள்ளாமல் இவ்வார்த்தையை அதிகமானவர்கள் பொதுவெளியில் பயன்படுத்தும் போது குறிப்பிட்ட சமூகம் வேதனைக்கு உட்படுகின்றது.  இதன் பிரகாரம்  குறிப்பிட்ட சமூகம் இதை ஏற்கனவே முறைப்பாடு செய்து தடைசெய்துள்ளது.

On 1/17/2019 at 10:39 AM, கிருபன் said:

படத்தில் அந்த வசனம் இடம்பெறும் கதைக்களம் மதுரை. அந்தக் காட்சியில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள சசிகுமாரும் மதுரை. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஊரும் மதுரை என்றே அறியப்படுகிறது. இப்படியிருக்க அதே மதுரைப் பகுதியையொட்டிய பன்றி மேய்க்கும் மக்களுக்குத்தான் குறிப்பிட்ட அந்தப் பெயர் வழங்கப்படுகிறது என்பது இவ்விஷயத்தில் கூடுதல் கொடுமை.

 

மேலும் எமக்கு இந்திய சாதியக் கட்டமைப்புகளும் அதன் உட்பிரிவுகளும் பரிட்சயம் இல்லை. அதனால் இதை மேற்கொண்டு அணுகுவதும் சரிபிழை கருத்தாடடிலில் ஈடுபடுவதும் பொருத்தமற்றது எனக் கருதுகின்றேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.