Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிணற்றில் வீழ்ந்த பசுமாட்டை மீட்ட இளைஞர்கள்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பற்ற பாழடைந்த கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிருக்குப் போரடிக் கொண்டிருந்த பசுமாட்டை அந்தப் பகுதி இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதான சந்திக்கு அண்மையிலுள்ள பகுதியில் பாதுகாப்பற்ற பாழடைந்த கிணற்றுக்குள் பசுமாடு தவறி வீழ்ந்துள்ளது.

வெளியே வருவதற்கு பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட போதும் பசுவால் வெளியே வரமுடியவில்லை இதையடுத்து அப்பகுதி மக்கள் பிரதேச சபையினருக்கு தகவல் வழங்கினர்.

எனினும் பிரதேச சபையினர் குறித்த நேரத்துக்கு சமூகமளிக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் சிலர் உரிய முறையில் செயற்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பசு மாட்டினை மீட்டனர்.

cow-3.jpgcow-2.jpgcow-1.jpgcow-5.jpgcow-4.jpg

https://newuthayan.com/story/16/கிணற்றில்-வீழ்ந்த-பசுமாட்டை-மீட்ட-இளைஞர்கள்.html

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞர்களுக்கு  பாராட்டுக்கள்.......!

கிணற்றுக்கு எனக்கும் கூட நிறைய பொருத்தம் உண்டு.இங்கு பலருக்கும் இருக்கலாம் ஆனால் நான்தான் முந்திரி கொட்டை. அடியேனின்  செயல்கள் சில. .....!

----- நானும் ஒரு பசு விழுந்து விட்டது. பின் சேலைகளால் அதன் வயிற்றில் கட்டி துலா கயிற்றில் இழுத்து கட்டி மேலிருந்து நண்பர்கள் இழுக்க காப்பாற்றப்பட்டது.

----- நல்லூரில் எனது பெரியம்மா தவறி கிணற்றில் விழ ஓடிப்போய் குதித்து தூக்கியது.

----- யாழ்ப்பாணத்தில் பக்கத்து வீட்டு ஐயா ஒருநாள் போதையில் விழுந்திட்டார். அவரை காப்பாற்றியது.

------  என் உறவுக்கார அம்மா ஒரு பாழுங் கிணற்றில் விழுந்திருக்கிறார். அவரை தேடி திரிந்து இறுதியில் அங்கு கண்டுபிடித்து தூக்கியது.

----- தட்டாதெருவடியில்  அக்கா கிணத்தடியில் பாத்திரம் கழுவ பேணி பறந்து கிணற்றில் விழ அவ கலங்கி நிக்க, கலங்காதே என்று சொல்லி நான் சட்டென்று குதித்து அதை தேடி எடுத்து மேலே வர  நிண்டவர் போனவர் எல்லாம் துலைவானே  மாரி  கிணத்துல ஏண்டா குதித்தனி, பேணி போனால் போகுது என்று  கண்டபடி அக்காவுக்கும் எனக்கும் பேச கடைசியாய் சொன்னாங்கள் எங்கையாவது மிசின் பிடிச்சு கொண்டுவந்து இப்ப கிண்ணத்தை இறையுங்கோ என்று சுபமாக முடித்து வைத்தார்கள்.....!  

ம்......மலரும் நினைவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாறு.....!  😁

3 minutes ago, suvy said:

இளைஞர்களுக்கு  பாராட்டுக்கள்.......!

கிணற்றுக்கு எனக்கும் கூட நிறைய பொருத்தம் உண்டு.இங்கு பலருக்கும் இருக்கலாம் ஆனால் நான்தான் முந்திரி கொட்டை. அடியேனின்  செயல்கள் சில. .....!

----- நானும் ஒரு பசு விழுந்து விட்டது. பின் சேலைகளால் அதன் வயிற்றில் கட்டி துலா கயிற்றில் இழுத்து கட்டி மேலிருந்து நண்பர்கள் இழுக்க காப்பாற்றப்பட்டது.

----- நல்லூரில் எனது பெரியம்மா தவறி கிணற்றில் விழ ஓடிப்போய் குதித்து தூக்கியது.

----- யாழ்ப்பாணத்தில் பக்கத்து வீட்டு ஐயா ஒருநாள் போதையில் விழுந்திட்டார். அவரை காப்பாற்றியது.

------  என் உறவுக்கார அம்மா ஒரு பாழுங் கிணற்றில் விழுந்திருக்கிறார். அவரை தேடி திரிந்து இறுதியில் அங்கு கண்டுபிடித்து தூக்கியது.

----- தட்டாதெருவடியில்  அக்கா கிணத்தடியில் பாத்திரம் கழுவ பேணி பறந்து கிணற்றில் விழ அவ கலங்கி நிக்க, கலங்காதே என்று சொல்லி நான் சட்டென்று குதித்து அதை தேடி எடுத்து மேலே வர  நிண்டவர் போனவர் எல்லாம் துலைவானே  மாரி  கிணத்துல ஏண்டா குதித்தனி, பேணி போனால் போகுது என்று  கண்டபடி அக்காவுக்கும் எனக்கும் பேச கடைசியாய் சொன்னாங்கள் எங்கையாவது மிசின் பிடிச்சு கொண்டுவந்து இப்ப கிண்ணத்தை இறையுங்கோ என்று சுபமாக முடித்து வைத்தார்கள்.....!  

ம்......மலரும் நினைவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாறு.....!  😁

மாரிக் கிணற்றில் குதிச்சும் நல்ல வேளை தப்பினீர்கள். இல்லாவிட்டால் எங்களுக்கு சுவி அண்ணாவும் கிடைத்து இருக்க மாட்டார், துருச்சாமியும் கிடைத்து இருக்க மாட்டார்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இளைஞர்களுக்கு  பாராட்டுக்கள்.......!

கிணற்றுக்கு எனக்கும் கூட நிறைய பொருத்தம் உண்டு.இங்கு பலருக்கும் இருக்கலாம் ஆனால் நான்தான் முந்திரி கொட்டை. அடியேனின்  செயல்கள் சில. .....!

----- நானும் ஒரு பசு விழுந்து விட்டது. பின் சேலைகளால் அதன் வயிற்றில் கட்டி துலா கயிற்றில் இழுத்து கட்டி மேலிருந்து நண்பர்கள் இழுக்க காப்பாற்றப்பட்டது.

----- நல்லூரில் எனது பெரியம்மா தவறி கிணற்றில் விழ ஓடிப்போய் குதித்து தூக்கியது.

----- யாழ்ப்பாணத்தில் பக்கத்து வீட்டு ஐயா ஒருநாள் போதையில் விழுந்திட்டார். அவரை காப்பாற்றியது.

------  என் உறவுக்கார அம்மா ஒரு பாழுங் கிணற்றில் விழுந்திருக்கிறார். அவரை தேடி திரிந்து இறுதியில் அங்கு கண்டுபிடித்து தூக்கியது.

----- தட்டாதெருவடியில்  அக்கா கிணத்தடியில் பாத்திரம் கழுவ பேணி பறந்து கிணற்றில் விழ அவ கலங்கி நிக்க, கலங்காதே என்று சொல்லி நான் சட்டென்று குதித்து அதை தேடி எடுத்து மேலே வர  நிண்டவர் போனவர் எல்லாம் துலைவானே  மாரி  கிணத்துல ஏண்டா குதித்தனி, பேணி போனால் போகுது என்று  கண்டபடி அக்காவுக்கும் எனக்கும் பேச கடைசியாய் சொன்னாங்கள் எங்கையாவது மிசின் பிடிச்சு கொண்டுவந்து இப்ப கிண்ணத்தை இறையுங்கோ என்று சுபமாக முடித்து வைத்தார்கள்.....!  

ம்......மலரும் நினைவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாறு.....!  😁

ஒரு அஞ்சு ரூபாப் பாத்திரத்திற்காக இந்தாள் ஐனூறு ரூபாவுக்கு கிணறு இறைக்க வைச்சிருக்குது! இங்க கவனம், பழக்க தோசத்தில குழாய்க்கிணறுக்குள்ள குதிச்சு விடாதையுங்கோ, பிறகு சக்சன் போட்டுத் தான் எடுக்க வேணும்! 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

----- தட்டாதெருவடியில்  அக்கா கிணத்தடியில் பாத்திரம் கழுவ பேணி பறந்து கிணற்றில் விழ அவ கலங்கி நிக்க, கலங்காதே என்று சொல்லி நான் சட்டென்று குதித்து அதை தேடி எடுத்து மேலே வர  நிண்டவர் போனவர் எல்லாம் துலைவானே  மாரி  கிணத்துல ஏண்டா குதித்தனி, பேணி போனால் போகுது என்று  கண்டபடி அக்காவுக்கும் எனக்கும் பேச கடைசியாய் சொன்னாங்கள் எங்கையாவது மிசின் பிடிச்சு கொண்டுவந்து இப்ப கிண்ணத்தை இறையுங்கோ என்று சுபமாக முடித்து வைத்தார்கள்.....!  

ம்......மலரும் நினைவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாறு.....!  😁

சுவியர்.... மண்ணெண்ணை தட்டுப்பாடான நேரத்தில...
மாரிக் கிணத்தை  இறைக்கச்  சொன்ன ஊர்ப் பெருசுகளை, என்ன செய்வது?
ஆமா.... அந்த நேரம்  கிணத்தை இறைத்த  செலவையும், பேணியின் விலையையும்.. அறிய மிக ஆவலாக உள்ளது. 🤪
அது கிடக்கட்டும்.. முன் பின் யோசியாமால், உங்கள் உதவும் மனப் பான்மையை மிக பாராட்டுகின்றேன்.
அது தான்.. மனிதம், சுவியர். 👍

இளைஞர்கள் செயல் பாராட்டப்பட வேண்டும்!

 

8 hours ago, suvy said:

நானும் ஒரு பசு விழுந்து விட்டது. பின் சேலைகளால் அதன் வயிற்றில் கட்டி துலா கயிற்றில் இழுத்து கட்டி மேலிருந்து நண்பர்கள் இழுக்க காப்பாற்றப்பட்டது.

----- நல்லூரில் எனது பெரியம்மா தவறி கிணற்றில் விழ ஓடிப்போய் குதித்து தூக்கியது.

----- யாழ்ப்பாணத்தில் பக்கத்து வீட்டு ஐயா ஒருநாள் போதையில் விழுந்திட்டார். அவரை காப்பாற்றியது.

------  என் உறவுக்கார அம்மா ஒரு பாழுங் கிணற்றில் விழுந்திருக்கிறார். அவரை தேடி திரிந்து இறுதியில் அங்கு கண்டுபிடித்து தூக்கியது.

உங்களுக்கு "உயிர்காக்கும் உத்தமர்" விருது வழங்கப்பட வேண்டும்! 

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞர்களின் பொறுப்பான செயல் மெய்ச்சப்பட வேண்டும்.

ஆனாலும், இது வரை யாழ் இணையத்தில், விபத்துகளும் கிணற்றுடன் சம்மந்தப்பட்ட விபத்துக்கள் , அநேகமாக தூர்வடைந்த அல்லது போதிய அளவு உயரமில்லாத  தடுப்பின்றி சிறு வயதினர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த விபத்துக்களும் செய்திகளாக அவ்வப்போது வந்த வண்ணமே என்ற நிலை இருக்கிறது.

இந்த செய்தியில் உள்ள கிணறு தூர்வடைந்து, தெருவோரம், பலரும் புழங்கும் இடத்தில்  இருக்கிறது.

இப்படிப்பட்ட கிணறுகள் பல இருக்கவே சந்தர்ப்பம் இருக்கிறது, ஏனெனில் யுத்தத்தின் காரணமான இடப்பெயர்வும், அழிவுகளும்.

இப்படிப்பட்ட கிணறுகளை  மூடுவதற்கு அல்லது பராமரிப்பில் கொணர்ந்து, உபயோகப்படுத்துவதற்கு, அந்தந்த கிராம மற்றும் உள்ளூராட்சி சபைகள் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இதை அதிக பிரசங்கியாக இங்கு சொல்லவில்லை.

Public Health and safety யில் உதாரணமாக பின்பற்றப்பட கூடிய நாடு South  Africa.

இலங்கையைப் போன்ற திட்டமிட்ட, வன்முறையான பாரிய இனம், பொருள் அழிவுகள் இல்லாவிட்டாலும்,  கறுப்பின சமூகம் வன்முறை கலந்த பொருளாதார, கலாசார, நிறவெறி ஒடுக்குமுறைகளை  எதிர்கொண்டது.

ஆனாலும், South Africa இல் இப்போது கூட கொலை, கொள்ளை சாதாரணமானது. Public    Health and safety இல் யாரவது கைவைத்தால், அல்லது ஒழுங்கு விதிமுறைகள் புறக்கணிக்கப்பட்டால், சவுத் ஆபிரிக்கா அரச நிர்வாகத்தின் கோரப்பற்களுக்கு இரையாக வேண்டி வரும்.
 

 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, suvy said:

----- தட்டாதெருவடியில்  அக்கா கிணத்தடியில் பாத்திரம் கழுவ பேணி பறந்து கிணற்றில் விழ அவ கலங்கி நிக்க, கலங்காதே என்று சொல்லி நான் சட்டென்று குதித்து அதை தேடி எடுத்து மேலே வர  நிண்டவர் போனவர் எல்லாம் துலைவானே  மாரி  கிணத்துல ஏண்டா குதித்தனி, பேணி போனால் போகுது என்று  கண்டபடி அக்காவுக்கும் எனக்கும் பேச கடைசியாய் சொன்னாங்கள் எங்கையாவது மிசின் பிடிச்சு கொண்டுவந்து இப்ப கிண்ணத்தை இறையுங்கோ என்று சுபமாக முடித்து வைத்தார்கள்.....!  

ம்......மலரும் நினைவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாறு.....!  😁

மாரிக் கிணறு என்றால் நிறையத் தண்ணீர் இருக்குமே.....! அவ்வளவு தண்ணீருக்குள்ளும் குதித்த பயத்தில் வந்த அந்த மஞ்சள் நிறத்தண்ணீரை அவர்கள் எப்படிக் கண்டுபிடித்தார்கள் சுவி அவர்களே.? 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, suvy said:

இளைஞர்களுக்கு  பாராட்டுக்கள்.......!

கிணற்றுக்கு எனக்கும் கூட நிறைய பொருத்தம் உண்டு.இங்கு பலருக்கும் இருக்கலாம் ஆனால் நான்தான் முந்திரி கொட்டை. அடியேனின்  செயல்கள் சில. .....!

----- நானும் ஒரு பசு விழுந்து விட்டது. பின் சேலைகளால் அதன் வயிற்றில் கட்டி துலா கயிற்றில் இழுத்து கட்டி மேலிருந்து நண்பர்கள் இழுக்க காப்பாற்றப்பட்டது.

----- நல்லூரில் எனது பெரியம்மா தவறி கிணற்றில் விழ ஓடிப்போய் குதித்து தூக்கியது.

----- யாழ்ப்பாணத்தில் பக்கத்து வீட்டு ஐயா ஒருநாள் போதையில் விழுந்திட்டார். அவரை காப்பாற்றியது.

------  என் உறவுக்கார அம்மா ஒரு பாழுங் கிணற்றில் விழுந்திருக்கிறார். அவரை தேடி திரிந்து இறுதியில் அங்கு கண்டுபிடித்து தூக்கியது.

----- தட்டாதெருவடியில்  அக்கா கிணத்தடியில் பாத்திரம் கழுவ பேணி பறந்து கிணற்றில் விழ அவ கலங்கி நிக்க, கலங்காதே என்று சொல்லி நான் சட்டென்று குதித்து அதை தேடி எடுத்து மேலே வர  நிண்டவர் போனவர் எல்லாம் துலைவானே  மாரி  கிணத்துல ஏண்டா குதித்தனி, பேணி போனால் போகுது என்று  கண்டபடி அக்காவுக்கும் எனக்கும் பேச கடைசியாய் சொன்னாங்கள் எங்கையாவது மிசின் பிடிச்சு கொண்டுவந்து இப்ப கிண்ணத்தை இறையுங்கோ என்று சுபமாக முடித்து வைத்தார்கள்.....!  

ம்......மலரும் நினைவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாறு.....!  😁

இளங்கன்று பயமறியாது.  😎

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

கிணற்றுக்கு எனக்கும் கூட நிறைய பொருத்தம் உண்டு.இங்கு பலருக்கும் இருக்கலாம் ஆனால் நான்தான் முந்திரி கொட்டை. அடியேனின்  செயல்கள் சில. .....!

 

இன்று முதல் உங்கள் கெளரவப் பெயர் கிணறு பாய்ந்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.