Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்­ட­மைப்­பின் தலை­மைக்குப் பொருத்­த­மா­ன­வர் யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்­ட­மைப்­பின் அடுத்த தலைமை தொடர்­பாக இப்­போதே கேள்­வி­கள் எழ ஆரம்­பித்து விட்­டன. சம்­பந்­தன் மூப்­பின் இறு­திக் கட்­டத்தை எட்­டி­விட்­ட­தால் இந்­தக் கேள்­வி­கள் எழு­வது இயல்­பா­னது.

இந்­தி­யா­வின் தமிழ்­நாட்­டில் மு.கரு­ணா­நி­தி­யும் மூப்­பின் எல்­லை­யில் நின்­ற­போது தி.மு.கவுக்கு அடுத்த தலை­வ­ரைத் தேர்ந்­தெ­டுக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டது. ஆனால் வாரிசு அர­சி­ய­லில் ஊறிப்­போன இந்­தி­யா­வில் வழக்­கம்­போல கரு­ணா­நி­தி­யின் மகன்­க­ளில் ஒரு­வ­ரான மு.க. ஸ்டாலி­னின் பெயர் நீண்ட கால­மா­கவே அந்­தப் பத­விக்கு அடி­பட்டு வந்­தது. இதற்கு ஏற்­றாற்­போன்று தி.மு.கவின் செயல் தலை­வ­ராக அவர் அந்­தக் கட்­சி­யின் தலை­வ­ரான அவ­ரது தந்­தை­யா­ரான கரு­ணா­நி­தி­யால் நிய­மிக்­கப்­பட்­டார்.

கரு­ணா­நி­தி­யின் மறை­வுக்­குப் பின்­னர் கட்­சி­யின் பொதுக்­குழு அவ­ரையே தலை­வ­ரா­கத் தேர்ந்­தெ­டுத்­தது. இந்­தி­யா­வைப் பொறுத்­த­வ­ரை­யில் இவ்­வாறு பல உதா­ர­ணங்­க­ளைக் கூற முடி­யும். ஆனால் கூட்­ட­மைப்­பைப் பொறுத்­த­வ­ரை­யில் அந்த நிலை காணப்­ப­ட­வில்லை. சம்­பந்­த­னின் வாரி­சாக எவ­ருமே அடை­யா­ளம் காட்­டப்­ப­ட­வு­மில்லை.

தமிழ்­மக்­கள் வரா­லற்­றில் மிக மோச­மா­ன­தொரு கால­கட்­டத்­தி­லுள்­ள­னர். போர் ஏற்­ப­டுத்­திய வடுக்­கள் இன்­ன­மும் மறை­ய­வில்லை.
பல பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தி­யில் அவர்­கள் வாழ்ந்து வரு­கின்­ற­னர். இனப் பி­ரச்­சி­னைக்­கு­ரிய அர­சி­யல் தீர்வு அவர்­க­ளது கண்­ணுக்­கெட்­டிய தொலை­ வில் கூடத் தென்­ப­ட­வில்லை.

அவர்­கள் ஆவ­லு­டன் எதிர்­பார்த்­துக் காத்­தி­ருந்த புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­க­மும் கன­வாய்ப் போய்­வி­டுமோ? என்­றொரு நிலை­யும் காணப்­ப­டு­கின்­றது. இதை­விட ஒற்­று­மை­யி­ழந்த தமி­ழர்­கள் வெவ்வேறு திசை­க­ளில் தமது எண்­ணம்­போன்று பய­ணித்­துக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். கூட்­ட­ மைப்­புக்கு எதி­ரா­ன­வர்­கள் அந்த அமைப்பை அழித்து விடு­வ­தி­லேயே குறி­யா­கச் செயற்­ப­டு­கின்­ற­னர். கூட்­ட­மைப்பை வசை­பா­டு­வதே இவர்­க­ளின் வேலை­யா­கப் போய்­விட்­டது. இதற்கு முகம்­கொ­டுக்­க­வேண்­டிய தேவை­யும் கூட்­ட­மைப்­புக்கு ஏற்­பட்­டுள்­ளது.

சம்­பந்­த­னின் சாணக்­கி­யம்
தொட­ரு­தல் வேண்­டும்
சம்­பந்­த­னின் சாணக்­கி­யம் தற்­போ­து­வரை கூட்­ட­மைப்­பைப் பாது­காத்­துக் கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால் அவ­ருக்­குப் பிறகு இது நீடிக்­குமா? என்­ப­து­தான் இன்று எழுந்­துள்ள கேள்­வி­யா­கும். இந்­தக் கேள்­விக்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ ப­வன் ஆஸ்­ரே­லி­யா­வில் வைத்­துக் பதி­ல­ளித்­தி­ருக்­கி­றார். சம்­பந்­தன் தமக்­குள்ள அனு­ப­வத்­தைக் கொண்டு கூட்­ட­மைப்­பைச் சரி­யான திசை­யில் நகர்த்­திக் கொண்­டி­ருக்­கி­றார். ஆனால் அனு­ப­வம் இல்­லா­த­வர்­கள் அவர்­போன்று செயற்­பட முடி­யாது.

கூட்­ட­மைப்­பின் அடுத்த தலைமை தொடர்­பா­கப் பல­ரும் பல்­வேறு வித­மா­கப் பேசு­வார்­கள். ஆனால் பொதுக்­கு­ழு­தான் இதை முடி­வு­செய்ய வேண்­டும். பொதுக்­கு­ழு­வில் அங்­கம் வகிப்­ப­வர்­கள் பொருத்­த­மான தலை­வ­ரைத் தேர்ந்­தெ­டுப்­பார்­கள் என்­றும் அவர் கூறி­ யி­ருக்­கி­றார். ஆகவே கூட்­ட­மைப்­பின் பொதுக்­குழு சரி­யான முடிவை எடுக்க வேண்­டும்.

போர் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்­த­போது ஈழத் தமி­ழர்­க­ளின் தலை­வ­ராக மட்­டு­மன்றி உல­கம் முழு­வ­தும் பரந்து வாழ்­கின்ற தமி­ழர்­க­ளின் தலை­வ­ரா­க­வும் ஒரு­வர் அடை­யா­ளம் காணப்­பட்­டி­ருந்­தார். அவ­ரது ஆணையை ஏற்­ப­தற்­கும் அனைத்­துத் தமி­ழர்­க­ளும் தயா­ராக இருந்­தார்­கள்.

இன்று அந்­தப் பொறுப்­பைப் கூட்­ட­ மைப்பு ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது. சம்­பந்­தன் அதன் தலை­வ­ராக உள்­ளார். தமி­ழர்­கள் சம்­பந்­த­னின் ஆணையை ஏற்று மைத்­தி­ரிக்கு வாக்­க­ளித்­த­தன் கார­ண­மா­கவே அவ­ரால் அரச தலை­வர் பத­வி­யில் அமர முடிந்­தது. இதன் மூல­மா­கத் தமி­ழர்­க­ளின் தலை­வர் சம்­பந்­தனே என்­பது நிரூ­ப­ண­மா­கி­ யது. இதே­நிலை தொட­ர­வேண்­டு­மா­னால் சம்­பந்­த­னுக்கு ஈடா­ன­தொரு தலை­வரே தெரி­வாக வேண்­டும்.

பொதுக்­கு­ழு­வுக்கு
பொறுப்­புண்டு
எந்­தக் கட்­சி­யி­லும் அதன் பொதுக்­கு­ழு­வுக்கே அதிக அதி­கா­ரங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இந்த வகை­யில் கூட்­ட­மைப்­பின் அடுத்த தலை­மை­யை­யும் அதன் பொதுக்­கு­ழுவே தீர்­மா­னிக்க வேண்­டும்.

வடக்கு மாகா­ண­ச­பை­யின் முத­ல­மைச்­ச­ராக சி.வி.விக்­னேஸ்­வ­ர­னைத் தெரிவு செய்­த­தில் பொதுக்­கு­ழு­வின் அங்­கீ­கா­ரம் பெறப்­பட்­டதா? எனச் சிலர் கேள்வி எழுப்­பக்­கூ­டும். கூட்­ட­ மைப்­பின் தலை­வர் என்ற வகை­யில் சம்­பந்­தனே அந்த முடிவை எடுத்­தார். இதற்­குப் பலர் எதிர்ப்­புத் தெரி­வித்­த­போ­தி­லும் சம்­பந்­த­னின் முடி­வில் மாற்­றம் ஏற்­ப­ட­வில்லை.

அவ­ரது அர­சி­யல் சாணக்­கி­யம் விக்­னேஸ்­வ­ர­னின் விட­யத்­தில் தோல்­வி­யையே தழு­வி­யது.
தமி­ழர்­க­ளின் ஏக பிர­தி­நி­தி­க­ளான கூட்­ட­மைப்­பி­னர் தமது எதிர்­கா­லத் தலைமை தொடர்­பா­கத் தீர்க்­க­மான முடி­வொன்றை மேற்­காள்ள வேண்­டும். அந்­தப் பத­விக்­குப் பொருத்­த­மான ஒரு­வ­ரையே தெரி­வு­செய்ய வேண்­டும். ஏனெ­னில் இது தமி­ழர்­க­ளின் அர­சி­யல் எதிர்­கா­லம்.

https://newuthayan.com/story/16/கூட்­ட­மைப்­பின்-தலை­மைக்குப்-பொருத்­த­மா­ன­வர்-யார்.html

  • கருத்துக்கள உறவுகள்

சரவணபவன் ஐயா கடும் ஆர்வமா இருக்கிறார்?!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, ஏராளன் said:

சரவணபவன் ஐயா கடும் ஆர்வமா இருக்கிறார்?!

சுமந்திரனும் ஆர்வமாய்த்தான் இருக்கிறாராம்.....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

சுமந்திரனும் ஆர்வமாய்த்தான் இருக்கிறாராம்.....:cool:

சுமந்திரன் காரியத்தில் கண்ணாக   இருக்கிறார்☹️

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஜனநாயகம் பேசிக்கொண்டு பாசிசக் கட்சிகள் நடத்தாமல்.. கூட்டமைப்பின் எதிர்காலத் தலைமையோ.. அல்லது சொறீலங்காவில் அரசியல் கட்சிகளாகப் பதியப்பட்டுள்ளவற்றின் தலைமைகள் கால அட்டவணைப்படி.. வெளிப்படை தன்மை வாய்ந்த நடுநிலை மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் நிகழத்தக்க.. தலைமைக்கான.. கட்சி பதவி நிலைகளுக்கான.. உட்கட்சி தேர்தல்கள் மூலம்.. தேர்வுகள்.. நடத்தப்படுவது மிக அடிப்படை சனநாயக அவசியமாக உள்ளது. 

ஒரு கட்சிக்கு அதிகூடியது 5 ஆண்டுகளுக்கு மேல்.. ஒரு தலைவரோ.. செயலாளர் நாயகமோ.. மத்திய குழு தலைமையோ இருக்கக் கூடாது. அது சனநாயக முறைப்படி தேர்தல் மூலம் நிரப்பப்படுவது கட்டாயம் ஆக்கப்படுவதன் மூலமே..

சொறீலங்காவில் நிலவும் சனநாய் அக பாசிச கட்சி முறைமையை இல்லாமல் செய்ய முடியும்.

குறிப்பாக முன்னாள் ஆயுத இன்னாள் ஒட்டுக்குழுக் கட்சிகளான தமிழ் கட்சிகள் என்போரும் சரி..

வலதுசாரி.. இடதுசாரி... இரத்தக்கறை படியாத கட்சிகளாக இருப்பினும்... சரி

புதிசு புதிசா முளைக்கும் கட்சிகளும் சரி..

யாரும் தலைமை மாற்றத்தை விரும்புவர்களாகவோ.. கட்சிக்குள் மாற்றுத் தலைமையை எதிர்காலத்தில் உருவாக்குபவர்களாகவோ இல்லை.

இதுவும் தமிழர்கள் இன்று தலைவர் அற்ற நிற்கதி அரசியலுக்கு வர முக்கிய காரணம்.

இதே தவறை விடுதலைப்புலிகள் ஒரு போராளி அமைப்பாகச் செய்திருந்ததும்.. சர்வதேசம்.. சொறீலங்கா.. மற்றும் ஹிந்தியாவோடு இணைந்து அதன் தலைமையை குறிவைத்து நடவடிக்கை எடுக்க முக்கிய காரணமாக அமைந்தது.

விடுதலைப்புலிகளிடம்.. தேசிய தலைவருக்கு நிகர்த்த பல மாற்றுத் தலைமைகள் இருந்திருந்தால்.. சர்வதேசமோ சரி யாருமோ சரி.. இன்று அவர்களை அழித்திருக்க முடியாது. அழிக்க முதல் யோசித்திருப்பார்கள்.

இதே நிலைதான் இன்று தமிழர் கட்சி எங்கனும்.. அது ஈழமாகட்டும்.. தமிழகமாகட்டும். 

ஆண்டு பின்..அடிமைப்பட்டு... இன்று.. விடுதலை வேண்டி நிற்கும் ஒரு போராட்ட குணமுள்ள இனம்... நிச்சயம் பல் தலைமைத்துவத்தைக் கொண்டியங்குவது இன்றைய உலக ஒழுங்கில்.. மிக முக்கியமாகும். குறிப்பாக.. இராணுவ பலத்தால்... பலவீனமான.. இனங்களை அடக்கி நிலங்களை வளங்களை பறிக்க நினைக்கும் சர்வதேச அரச கொடுங்கோன்மை.. நிலையெடுத்துள்ள நிலையில்.. இது சிந்திக்கப்பட வேண்டும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் தான்,

ஆனால் அவரது அரசியல் கொள்கைகள், நடவடிக்கைகள் திருத்தப்பட அல்லது மாற்றப்பட வேண்டும்.

 

1 hour ago, MEERA said:

சுமந்திரன் தான்,

ஆனால் அவரது அரசியல் கொள்கைகள், நடவடிக்கைகள் திருத்தப்பட அல்லது மாற்றப்பட வேண்டும்.

 

புலிசார்பு அரசியல் ஒருபோதும், இலங்கை அரசிடம் எடுபடாது.

சுமந்திரன் போல, வித்தியாசமான அணுகுமுறைதான் தற்காலத்து தமிழரின் அரசியல் பயணிக்கப் போகுது - விரும்பியோ விரும்பாமலோ 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, thulasie said:

புலிசார்பு அரசியல் ஒருபோதும், இலங்கை அரசிடம் எடுபடாது.

சுமந்திரன் போல, வித்தியாசமான அணுகுமுறைதான் தற்காலத்து தமிழரின் அரசியல் பயணிக்கப் போகுது - விரும்பியோ விரும்பாமலோ 

புலி சார்போ.. எதிர்ப்போ.. சொறீலங்கா அரசிடம் இருந்து எதுவும் தமிழர்களுக்கு உரிமை.. தீர்வுன்னு எனிக் கிடைக்காது.

சுமந்திரன் சுத்தி மாத்திப் பேசி.. சொந்தப் பொக்கட்டை நிரப்பலாமே தவிர.. தமிழ் மக்களுக்கு அவரால் ஒரு நன்மையும் விளையாது.

சொறீலங்காவை கட்டுப்படுத்தும் சக்தியாக.. ஒன்று மேற்குலகம் இருக்குது.. இன்னொன்று சீனா இருக்குது.

தமிழர்களின் எதிர்கால அரசியல் என்பது இதில் யாரை அதிகம் திருப்திப்படுத்துவது என்பதில் தான் எனி அமையுமே தவிர.. சுமந்திரன் வகையறாக்களின் சுத்துமாத்துச் பேச்சு நேர விரையமும்.. அநாவசியமும் ஆகும்.

அதேபோல் சொறீலங்கா அரசு தமிழர் உரிமைகளை.. தீர்வை தரும் என்று எதிர்பார்ப்பது அரசியல் படுமுட்டாள் தனங்களில் ஒன்று. 🙂

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஓரளவுக்குகேனும் தமிழருக்கு ஏதாவது செய்ய தற்போது உள்ள சூழ்நிலையில் [கூட் டமைப்பை] பொறுத்த வரை சுமத்திரனால் மட்டுமே முடியும் 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் உங்க கொன்னர் கும்மானை தலைவராக்கினால்.. நிறையப் பெற்றுத் தருவாருன்னு சொல்லேல்ல.

அவர் ஜோதிடம்.. பலிக்கவில்லை என்ற கவலையில் இருக்க விட்டுவிட்டீர்கள் போலும்.

சுமந்திரன் ஒரு அரைவேக்காடு. சம்பந்தனின் இயலாமை நிரப்பி. அவ்வளவே. இவர்களால்.. தமிழ் மக்களுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்காது. 

Edited by nedukkalapoovan

வருடங்களுக்கு முன், இங்கிருந்து கூட்டமைப்பின் ஓர் எம்பியுடன், சிலர் தொடர்பு கொண்டு சில விடயங்களை கதைத்த போது ... பல விடயங்களை தொட்டுச் சென்றாராம் ...

...." ... என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள், நானும், என்னுடன் இருக்கும் இரு சிலரும் ஒன்றும் அங்கு செய்ய முடியவில்லை! கஜேந்திரகுமார் உள்ளிருந்து போராடுவதற்கு பதில், கூட்டாக வெளியேறி விட்டார்! இப்போ நாம் தனிமரங்களாக! சம்பந்தருக்கு இப்போ நடைபெறுபவைகள் தெரிவதில்லை, மறதி அதற்கு மேல்! அவரின் இடத்துக்கு மாவையை (வேறொருவர் இல்லாததால்) தானும் முன்னுக்கு தள்ளுவோம் என்றால், மாவையார், தனக்கு சட்டம் தெரியாது, ஆங்கில அறிவு குறைவு, ஆகையால் கட்சி தலைமை தான் ஏற்கத்தயாரில்லை என்றும், தனக்கு வடமாகாண முதலமைச்சர் பதவி போதும் என்று நிற்கிறார். நாம் விரும்பியோ, விரும்பாமலோ சுமந்திரன் தான் அடுத்த தலைவர் என்றாராம் ... இந்தியாவின் விருப்பமும் அதுவே ..." ... என்றாராம்.

அவர் இறுதியாக கூறியதே உண்மை! ... 10 வருடங்களுக்கு முன், இனந்தெரியாத மனிதனாக இருந்த சுமந்திரனை, பின் கதவால் நுளைவித்து, குறுகிய காலத்தில் தலைமை பதவிக்கு கொணர்ந்த பெருமை, பிராந்திய அரசுக்கோ, அவர்களின் புலனாய்வுத்துறைக்குத்தான் சாரும்!  இன்று இந்திய அரசியலுக்காக, இந்திய வல்லாதிக்கத்தின் பக்கம் சாய்ந்திருக்கும் யானை கோஷ்டிக்கும், ஒரு பாகனாக செயற்படும் சுமந்திரனே முதல் தெரிவு!

இதில் எங்கள் விருப்பம், உங்கள் விருப்பம், தமிழ் மக்களின் விருப்பம் என்றெல்லாம் தீர்கமாக சிந்தித்து, முடிவெடுத்து, தலைமை பொறுப்பை ஒப்படைக்கலாம் என்ற கனவை கலைப்போம்! நிஜ உலகிற்கு வருவோம்!

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nedukkalapoovan said:

ஏன் உங்க கொன்னர் கும்மானை தலைவராக்கினால்.. நிறையப் பெற்றுத் தருவாருன்னு சொல்லேல்ல.

அவர் ஜோதிடம்.. பலிக்கவில்லை என்ற கவலையில் இருக்க விட்டுவிட்டீர்கள் போலும்.

சுமந்திரன் ஒரு அரைவேக்காடு. சம்பந்தனின் இயலாமை நிரப்பி. அவ்வளவே. இவர்களால்.. தமிழ் மக்களுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்காது. 

நெடுக்கர்,"கூ ட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமத்திரன்" என்று தெளிவாக எழுதியுள்ளேன்...என்ட தலைவர் என்று எழுதவுமில்லை,தேசிய தலைவர் என்று எழுதவுமில்லை ...என்ர  அண்ணரின் அரசியலை பொறுத்திருந்து பாருங்கோ 😠 
 

Quote

சம்­பந்­த­னின் சாணக்­கி­யம் தற்­போ­து­வரை கூட்­ட­மைப்­பைப் பாது­காத்­துக் கொண்­டி­ருக்­கின்­றது. 

Quote

தமி­ழர்­கள் சம்­பந்­த­னின் ஆணையை ஏற்று மைத்­தி­ரிக்கு வாக்­க­ளித்­த­தன் கார­ண­மா­கவே அவ­ரால் அரச தலை­வர் பத­வி­யில் அமர முடிந்­தது. இதன் மூல­மா­கத் தமி­ழர்­க­ளின் தலை­வர் சம்­பந்­தனே என்­பது நிரூ­ப­ண­மா­கி­ யது.

ஆண்டவா.....😈

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் அடுத்த தலைவர் ரணில் விக்கிரமசிங்கா அல்லது சஜித் பிரேமதாஸ ஏனென்றால் சுமந்திரனின் யானையின் குட்டி வாலுக்குள்ளதானே பதுங்கி இருக்கின்றார்🤪

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.