Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரன் உருவான காரணத்தை நியாயப்படுத்தினார் மைத்திரி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

maithripala-sirisena-720x450.jpg

பிரபாகரன் உருவான காரணத்தை நியாயப்படுத்தினார் மைத்திரி!

நல்லிணக்கம் தொடர்பாக பேசப்பட்டுவரும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரி, தான் பெற்ற அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். தான் சிறுவனாக இருந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களிடம் சிங்கள மக்கள் மோசமாக நடந்துகொண்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

”ரயில் பயணம் தொடர்பில் எனக்கு அனுபவம் உண்டு. பொலனறுவையில் இருந்து கொழும்பிற்கு 7, 8 மணித்தியாலங்கள் பயணிக்கும் தபால் ரயில் சேவை உள்ளது. அந்த ரயில் அதிகாலை 3 அல்லது 4 மணிக்கு கொழும்பு கோட்டையை அடையும்.

எனது பெற்றோர், அப்போது சிறுவர்களாக இருந்த எம்மை அழைத்துக்கொண்டு பொலனறுவை ரயில்வே நிலையத்திற்கு செல்வார்கள். அப்போது கொழும்பிற்கு பயணிப்பதற்காக சுமார் 400, 500 பேர் ரயில் நிலையத்தில் குவிந்திருப்பார்கள். அந்த ரயில் மட்டக்களப்பிலிருந்து வரும்.

தேசிய நல்லிணக்கம் தொடர்பாக நாம் கதைக்கும் சந்தர்ப்பத்தில் நான் இந்த விடயத்தைக் கூறுகின்றேன். மட்டக்களிப்பிலிருந்து வரும் ரயிலில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் நிறைந்திருப்பார்கள். பொலனறுவையில் ரயிலில் ஏறும்போது எமக்கு ஆசனங்கள் இருக்காது. அப்போது சிங்கள மக்கள் என்ன செய்தார்கள்? ஆசனங்களில் சிறு குழந்தைகளுடன் உறக்கத்தில் இருக்கும் தமிழ் மக்களை அடித்து துரத்திவிட்டு அந்த இருக்கைகளில் சிங்கள மக்கள் அமர்ந்துகொள்வார்கள். இதனை நான் ஒருநாளோ, இரண்டு நாட்களோ பார்க்கவில்லை. பல தடவைகள் கண்டுள்ளேன்.

அப்போது பயத்தில் ‘ஐயோ சாமி’ என கத்திக்கொண்டு, அழுதுகொண்டு மலசலகூடங்களிலும் மறைவான இடங்களிலும் சிறு குழந்தைகளுடன் தமிழ் மக்கள் ஒளிந்துகொள்வார்கள். எமது மதிப்பிற்குரிய சிங்கள மக்கள் அந்த ஆசனங்களில் அமர்ந்துகொண்டு உறங்குவார்கள். இவ்வாறுதான் பிரபாகரன்கள் உருவானார்கள்” என்றார்.

http://athavannews.com/பிரபாகரன்-உருவான-காரணத்த/

  • கருத்துக்கள உறவுகள்

இவர் நல்லவரா கெட்டவரா?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஏராளன் said:

இவர் நல்லவரா கெட்டவரா?

இவர் இப்படி சொன்ன படியால் எங்களுடயை ஆட்களுக்கு நல்லவர் ஆனால் அவ‌ருடைய ஆட்களுக்கு கெட்டவர்😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இவர் நல்லவரா கெட்டவரா?

இவர் நல்லவர் ஆனால் கெட்டவர். 😂

மைத்திரியின் ஊரும் பொலன்னறுவைதானே!

புகையிரதத்தில் இருக்கையில் அமர்ந்த மக்களை, தான் அடித்து எழுப்பியதை ஞாபகப்படுத்துகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மனுசன் பழசை மறக்காத மனுசன் போல 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

பிரபாகரன் உருவான காரணத்தை நியாயப்படுத்தினார் மைத்திரி!

முடிந்தால் திரும்பவும் ஒரு பிரபாகரன் உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்க சார்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

இவர் இப்படி சொன்ன படியால் எங்களுடயை ஆட்களுக்கு நல்லவர் ஆனால் அவ‌ருடைய ஆட்களுக்கு கெட்டவர்😀

இப்ப  ரயிலில் சிங்களவர்கள்  தமிழரை  அடிப்பதில்லையே

எனவெ  நல்லிணக்கம்  வந்து  விட்டது  என்கிறார்

ஒரு விடயத்தை மேலோட்டமாக அணுகுகின்றது என்பது இது தான். முட்டாள் மைத்திரி.

காலம் காலமாக கலவரங்கள் எனும் பெயரில் இடம்பெற்ற இனவழிப்புகளும், தமிழ் மண்ணை அபகரிக்கும் அடாத்தான சிங்கள குடியேற்றங்களும், சிங்கள பவுத்த பேரினவாதத்தை உயர்த்தி பிடிக்கும் அரசியலமைப்பும் இவற்றுக்கு எதிராக குரலெழுப்பி சரியான விதத்தில் உரிமைகளுக்காக போராடாத தமிழ் அரசியல்வாதிகள் எனும் சுயநலவாதிகளின் கூட்டமும்தான் பிரபாகரன் உருவாக காரணம்,

எம் போராட்டமே சிங்கள பகுதியில் நடக்கும் வெறும் அடக்குமுறைகளால் ஆனது என்று காட்டி விட்டால் 'இப்ப சீட் கொடுக்கின்றம் தானே ... எதுக்கு அரசியல் தீர்வு' என சிங்கள மக்களை எம்மை பார்த்து கேட்க வைக்கலாம்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மைத்திரி பாலர் வகுப்புக்கு கதை சொல்லுறார் போலை கிடக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

சம்..சும் ஆமாப்போடக்காணமே...

பிரபாகரன் உருவானதன் உண்மையான காரணத்தை மறைத்து வெறும் சீட்டுக்காக தான் போராட்டம் ஆரம்பித்த மாதிரி சில்லறை காரணம் சொல்கின்றார் . 

வடக்கு கிழக்கு இணைந்த தேசத்தில் தமிழ் மக்கள் ஒரு பெரும்பான்மை இனம் அவர்கள் மொழியால் , மதத்தால் , ஒரு தனி இனம் . அவர்கள் சுயமாக தங்களை தானே தீர்மானித்து ஆளுகின்ற உரிமை உள்ளவர்கள் . விரும்பினால் சிங்களத்துடன் இணையலாம் அல்லது தனித்து செல்கின்ற உரிமை உள்ளவர்கள் .

இவ்வாறனான் நீண்ட பிரச்சனைகளை விட்டுட்டு ......சும்மா .... உளறக்கூடாது , சம்பந்தன் சுமந்திரன் அல்ல தமிழ் தலைவர்கள் .....இவர்களின் கருத்துக்களை ஒப்புவிக்கின்ற மாதிரி நினைக்க வேண்டாம் ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.