Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆத்தா.....நானும் பாசாயிட்டேன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனதுக்கும்…..உதடுகளுக்கும் ,

தொடுசல் அறுந்து நாளாகி விட்டது!

 

வேடம் போடுவதில்,

நாடக நடிகர்களையும்….,

மிஞ்சியாகி விட்டது!

 

மாடு மாதிரி உழைச்ச,

களைப்புப் போக,

உல்லாசப் பயணம் போனால்…,

அந்தக் கடற்கரை…..,

ஊர்க் கடற்கரையிடம்…,

பிச்சை வாங்க வேண்டும்…,

போலத் தெரிகின்றது!

 

வசதியில்லாததுகள்,

வறுமையில் வாழ்பவர்கள்…,

விற்கின்ற பொருட்களை…,

அறாத விலை பேசி வாங்குவதில்…,

ஒரு திருப்தி…!

உறுத்துகின்ற மனதுக்கு..,

நாங்களும் வாங்கா விட்டால்…,

அதுகள் பட்டினி தான்…,

என்று ஒரு சமாதானம்!

 

வங்கியட்டைகளின் கனதி….,

வீட்டுக்கடனின் பரிமாணம்,

கட்ட வேண்டிய சிட்டைகளின்…,

கடைசித் திகதிகள்!

எல்லாமே மனதை அரித்தாலும்,

போலிக் கௌரவம் …..,

வேலி தாண்டு என்கிறது!

 

அபூர்வமான பொழுதுகளில்…,

அன்றைய வாழ்வின்,

நினைவுகள் வந்து போகும்!

 

இப்போதெல்லாம்…,

தபால் பெட்டியைத் திறக்கையில்..….,

தற்பாதுகாப்புத் தேடி…,

ஓடுகின்றது மனது..!

 

ஆறுதல் தேடி….,

ஊர் தேடிப் போகையில்…,

அங்குள்ள சொந்தங்கள்,

உங்களுக்கு என்ன குறை?

எங்களுக்கும்…,

அங்க வரத்தான் விருப்பம் !

 

உண்மையைச் சொன்னால்….,

நாங்கள் நல்லா வாறது..,

உங்களுக்கு எரிச்சல்...,

எண்டுதுகள்!

 

இப்போதெல்லாம் நானும்…,

உண்மை பேசுவதில்லை!

 

எங்காவது கணனி கிடைத்தால்,

வங்கிக் கணக்கை ஒருக்கால்…,

எட்டிப்பார்க்க வேணும்!

 

நாட்கள் போகப்போக …,

நானும் நல்ல நடிகனாகி விட்டேன்!

  • கருத்துக்கள உறவுகள்

ம் நாட்டு நடப்பு இப்ப இப்பிடித்தான் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

நாட்கள் போகப்போக …,

நானும் நல்ல நடிகனாகி விட்டேன்!

வாழ்க்கை என்பது ஒரு நாடகமேடை தான்.

வந்தவரேல்லாம் விருப்பமோ விருப்பமில்லையோ நடித்தே தீரவேண்டும்.

3 hours ago, புங்கையூரன் said:

வங்கியட்டைகளின் கனதி….,

வீட்டுக்கடனின் பரிமாணம்,

கட்ட வேண்டிய சிட்டைகளின்…,

கடைசித் திகதிகள்!

எல்லாமே மனதை அரித்தாலும்,

போலிக் கௌரவம் …..,

 வேலி தாண்டு என்கிறது!

இதிலே எங்களை விட வெள்ளைகள் ரொம்ப மோசம்.எடுக்கிற சம்பளத்துக்கு முழுக்க ஏதாவது கடனடிப்படையில் வாங்கி வைத்திருப்பார்கள்.தற்செயலாக வேலை போனால் கட்ட வழி இல்லாமல் எல்லாமே போகும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை பேசி வாங்கிக் கட்டுறதை விட மௌனம் சர்வார்த்த சாதனம்.......!  😁

நாட்டு நடப்பை கவிதை பேசுது....!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கவிதையை ஏன் யாழின் பிறந்த நாள் பகுதியில் எழுதவில்லை ?

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தகாலம் வருகுது. வங்கிக் கடனட்டைகளை  எடுத்து துடைத்து வையுங்கோ.  வெளிநாட்டு நடப்பை நயமாகச் சொல்லியுள்ளது கவிதை. புங்கையூரன் நடிகனாகியது சரி. எப்ப பாசாகினீங்க. 

10 hours ago, புங்கையூரன் said:

மாடு மாதிரி உழைச்ச,

களைப்புப் போக,

உல்லாசப் பயணம் போனால்…,

அந்தக் கடற்கரை…..,

ஊர்க் கடற்கரையிடம்…,

பிச்சை வாங்க வேண்டும்…,

போலத் தெரிகின்றது!

 

ஆறுதல் தேடி….,

ஊர் தேடிப் போகையில்…,

அங்குள்ள சொந்தங்கள்,

உங்களுக்கு என்ன குறை?

எங்களுக்கும்…,

அங்க வரத்தான் விருப்பம் !

 

உண்மையைச் சொன்னால்….,

நாங்கள் நல்லா வாறது..,

உங்களுக்கு எரிச்சல்...,

எண்டுதுகள்!

அனுபவ வரிகள், புங்கை அண்ணா! வலிகளைக் கவிதையாக்கியுள்ளீர்கள். தொடருங்கள். 😊

1 hour ago, ரதி said:

இந்த கவிதையை ஏன் யாழின் பிறந்த நாள் பகுதியில் எழுதவில்லை ?

அதையே தான் நானும் நினைத்தேன். 😊

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புங்கையூரன் said:

மனதுக்கும்…..உதடுகளுக்கும் ,

தொடுசல் அறுந்து நாளாகி விட்டது!

 

வேடம் போடுவதில்,

நாடக நடிகர்களையும்….,

மிஞ்சியாகி விட்டது!

 

மாடு மாதிரி உழைச்ச,

களைப்புப் போக,

உல்லாசப் பயணம் போனால்…,

அந்தக் கடற்கரை…..,

ஊர்க் கடற்கரையிடம்…,

பிச்சை வாங்க வேண்டும்…,

போலத் தெரிகின்றது!

 

வசதியில்லாததுகள்,

வறுமையில் வாழ்பவர்கள்…,

விற்கின்ற பொருட்களை…,

அறாத விலை பேசி வாங்குவதில்…,

ஒரு திருப்தி…!

உறுத்துகின்ற மனதுக்கு..,

நாங்களும் வாங்கா விட்டால்…,

அதுகள் பட்டினி தான்…,

என்று ஒரு சமாதானம்!

 

வங்கியட்டைகளின் கனதி….,

வீட்டுக்கடனின் பரிமாணம்,

கட்ட வேண்டிய சிட்டைகளின்…,

கடைசித் திகதிகள்!

எல்லாமே மனதை அரித்தாலும்,

போலிக் கௌரவம் …..,

வேலி தாண்டு என்கிறது!

 

அபூர்வமான பொழுதுகளில்…,

அன்றைய வாழ்வின்,

நினைவுகள் வந்து போகும்!

 

இப்போதெல்லாம்…,

தபால் பெட்டியைத் திறக்கையில்..….,

தற்பாதுகாப்புத் தேடி…,

ஓடுகின்றது மனது..!

 

ஆறுதல் தேடி….,

ஊர் தேடிப் போகையில்…,

அங்குள்ள சொந்தங்கள்,

உங்களுக்கு என்ன குறை?

எங்களுக்கும்…,

அங்க வரத்தான் விருப்பம் !

 

உண்மையைச் சொன்னால்….,

நாங்கள் நல்லா வாறது..,

உங்களுக்கு எரிச்சல்...,

எண்டுதுகள்!

 

இப்போதெல்லாம் நானும்…,

உண்மை பேசுவதில்லை!

 

எங்காவது கணனி கிடைத்தால்,

வங்கிக் கணக்கை ஒருக்கால்…,

எட்டிப்பார்க்க வேணும்!

 

நாட்கள் போகப்போக …,

நானும் நல்ல நடிகனாகி விட்டேன்!

புங்கையூரான்... உங்களது கவிதையில், எதை மேற்கோள் காட்டி  கருத்து கூறுவது... 
என்ற அளவிற்கு முழுவதும், வெளிநாட்டு வாழ்க்கை பற்றிய யதார்த்தமான... அருமையான வரிகள். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ம் நாட்டு நடப்பு இப்ப இப்பிடித்தான் இருக்கு.

நன்றி.....சுமே!

18 hours ago, ஈழப்பிரியன் said:

வாழ்க்கை என்பது ஒரு நாடகமேடை தான்.

வந்தவரேல்லாம் விருப்பமோ விருப்பமில்லையோ நடித்தே தீரவேண்டும்.

இதிலே எங்களை விட வெள்ளைகள் ரொம்ப மோசம்.எடுக்கிற சம்பளத்துக்கு முழுக்க ஏதாவது கடனடிப்படையில் வாங்கி வைத்திருப்பார்கள்.தற்செயலாக வேலை போனால் கட்ட வழி இல்லாமல் எல்லாமே போகும்.

உண்மை தான்.....ஈழப்பிரியன்!

வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்குள்.....காலம் நம்மை முந்தி விடும்!

நன்றி...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

உண்மை பேசி வாங்கிக் கட்டுறதை விட மௌனம் சர்வார்த்த சாதனம்.......!  😁

நாட்டு நடப்பை கவிதை பேசுது....!

கிருஷ்ண பரமாத்மா கூட.....சில இடங்களில் பொய் சொல்லுகிறார்!

தருமர் கூட அசுவத்தாமன் கொல்லப்பட்டானா என்ற துரோணரின் கேள்விக்கு...ஆம் என்றே பதிலளிக்கிறார்!

நாங்கள் எம்மாத்திரம்?

நன்றி....சுவியர்!

12 hours ago, ரதி said:

இந்த கவிதையை ஏன் யாழின் பிறந்த நாள் பகுதியில் எழுதவில்லை ?

ரதி....இது அவசரத்தில் எழுத்தப்பட்ட ஒரு கவிதை!

எழுதி முடிந்ததும்....ஏதோ ஒரு...செயற்கைத்தனம்....இருப்பது போல இருந்தது!

அதனாலேயே....அந்தப் பகுதியில்....பதியவில்லை!

ஏதாவது அங்கு பதிய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது!

நன்றி ....!  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் தமிழனின் துயரக்கவிதை.

  • 1 month later...
On 3/12/2019 at 11:04 AM, புங்கையூரன் said:

ஆறுதல் தேடி….,

ஊர் தேடிப் போகையில்…,

அங்குள்ள சொந்தங்கள்,

உங்களுக்கு என்ன குறை?

எங்களுக்கும்…,

அங்க வரத்தான் விருப்பம் !

 

உண்மையைச் சொன்னால்….,

நாங்கள் நல்லா வாறது..,

உங்களுக்கு எரிச்சல்...,

எண்டுதுகள்!

 

இப்போதெல்லாம் நானும்…,

 உண்மை பேசுவதில்லை!

இங்கு வந்து பார்த்த பின் தான் புரியும்.

நல்லதொரு கவிதை, வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.