Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பிக்குகளும் சிங்கள மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் மணலாறு (வெலிஓயா) பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்ட சிங்கள மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

DSC_8658.JPG

குறித்த பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பகுதி குருகந்த ரஜமஹா விகாரை என்ற தமது ஆலயம் அமைந்துள்ள பகுதி எனவும் இந்த ஆலயப் பகுதியில் அரசியல்வாதிகள் பிரச்சனைகளை ஏற்படுத்தி குழப்பங்களை உண்டு பண்ணுவதாகவும்  இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் இதில் கவனம் செலுத்தி தமது பிரச்சனைக்கு ஒரு தீர்வை பெற்றுத்தர வேண்டும் என கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

DSC_8673.JPG

இந்த ஆர்ப்பாட்டத்தை புல்மோட்டை பகுதியிலிருந்து சென்ற பௌத்த பிக்குகள் தலைமை தாங்கி நடத்தியிருந்தனர்.

DSC_8675.JPG

குறித்த அத்துமீறிய விகாரை அமைக்கப்பட்டுள்ள நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழ் மக்கள் வழிபாட்டுகளை மேற்கொள்ளவும் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ளவும்  மாவட்ட நீதிமன்று அனுமதி வழங்கியிருந்ததோடு இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கம் இன்றி வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் மாவட்ட நீதிமன்று கட்டளையிட்டிருந்த நிலையில்  மீண்டும் இன்றையதினம்  பௌத்த பிக்குகளும் சிங்கள மக்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிட தக்கது.

http://www.virakesari.lk/article/57571

இது சிங்கள பௌத்தர்களின் விகாரை! நீராவியடிப் பிள்ளளையார் ஆலய வளாகத்தை ஆக்கிரமித்த பௌத்த துறவிகள்; மக்கள்!

 

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து பௌத்த விகாரையை அமைத்து சர்ச்சைக்குரிய இடமாக திகழ்ந்து வருகின்ற குருகந்த ராஜமகா விகாரை பகுதியில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது சிங்கள பௌத்த மக்களுடைய விகாரை இதை எமக்கு தர வேண்டும் அரசியல்வாதிகளுடைய பயங்கரவாத தமிழ் மக்கள் குழுவுடைய குழப்பங்கள் காரணமாக தங்களுடைய விகாரையில் குழப்பம் நிகழ்கிறது இந்த விடயமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் இதில் கரிசனை கொண்டு தமது விகாரையை தம்மிடம் பெற்றுத் தருமாறு கோரி விகாரையின் விகாராதிபதி உட்பட பல இடங்களில் இருந்து வருகை தந்த பிக்குமாரும் கொக்குளாய் மணலாறு புல்மோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து வருகை தந்த சிங்கள மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

இன்று மதியம் 1.30 மணிக்கு குறித்த பகுதியில் அமைக்கப்பட்ட பாரிய புத்தர் சிலைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமை தாங்கி நடத்தியிருந்தார்.

குறித்த அத்துமீறிய விகாரை அமைக்கப்பட்டுள்ள நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழ் மக்கள் வழிபாட்டுகளை மேற்கொள்ளவும் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ளவும் மாவட்ட நீதிமன்று அனுமதி வழங்கியிருந்ததோடு இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கம் இன்றி வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் மாவட்ட நீதிமன்று கட்டளையிட்டிருந்த நிலையில் இன்றையதினம் வெளி இடங்களில் இருந்து வருகைதந்த பௌத்த பிக்குகளும் சிங்கள மக்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தமை மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தவா? என்ற சூழலை உருவாக்கியுள்ளது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

https://www.ibctamil.com/srilanka/80/121425?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ இராணுவ ஆட்சி வரப்போகுது என்று கருத்து எழுதினார்கள். பிக்குகள் ஆட்சி வரப்போகுது. புத்தம் சரணம் கச்சாமி.🙏

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் அவங்கட ஆட்சி தான்! வெளில காட்டாமல் இருந்தவங்கள்.
குண்டு வெடிப்போட கிளம்பிற்றாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வேலை இல்லாத நாதாரிகள், மொடடை  அடித்து, காவி துணி போட்டுக் கொண்டு.... மக்களை கிளப்பி... வருமானம் பார்க்கும் வேலை.

இப்ப திருகோணமலை பிக்கர், கிண்ணியா வெந்நீரூற்று பகுதில தனது வேலையை காட்டப் போறார்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

வேலை இல்லாத நாதாரிகள், மொடடை  அடித்து, காவி துணி போட்டுக் கொண்டு.... மக்களை கிளப்பி... வருமானம் பார்க்கும் வேலை.

இப்ப திருகோணமலை பிக்கர், கிண்ணியா வெந்நீரூற்று பகுதில தனது வேலையை காட்டப் போறார்.

இந்த மயக்கம் பரவலாக இருக்கிறது.  வெந்நீர் கிணறுகள் இருப்பது கன்னியா எனும் இடத்தில்.

கிண்ணியா என்பது பல கிலோ மீட்டர் தள்ளி அமைந்திருக்கும்  இசுலாமியர் பெருமளவில் வாழும் ஒரு கிராமம் .  தகவலுக்காக …….

On 6/6/2019 at 12:38 AM, Nathamuni said:

இப்ப திருகோணமலை பிக்கர், கிண்ணியா வெந்நீரூற்று பகுதில தனது வேலையை காட்டப் போறார். 

கன்னியாக்கு பதிலா கிண்ணியா டைப்பிங் சிலிப் எரர்!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கு எதுக்கு அடிபடுவது என்பது தெரியாது இங்கு ஒரு பரப்பு காணிக்கு அடிபட பின்பக்கத்தாலை பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை சைனா லவட்டுது அடுத்தபக்கம் அரபு முஸ்லீம் முழு இலங்கையும் தங்களுக்கு தான் சொந்தம் என்கிறார்கள் நீதிமன்றம் சொல்லியும் இவை அடங்கலை என்றால் ?

1 hour ago, பெருமாள் said:

சிங்களவனுக்கு எதுக்கு அடிபடுவது என்பது தெரியாது இங்கு ஒரு பரப்பு காணிக்கு அடிபட பின்பக்கத்தாலை பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை சைனா லவட்டுது அடுத்தபக்கம் அரபு முஸ்லீம் முழு இலங்கையும் தங்களுக்கு தான் சொந்தம் என்கிறார்கள் நீதிமன்றம் சொல்லியும் இவை அடங்கலை என்றால் ?

என்னுடைய சந்தேகம் என்னவென்றால் இதை சிங்களவர் செய்யவில்லை; மாறாக தமிழருக்கும் சிங்களவனுக்கும் பிரச்சனை பட வேண்டுமென்றா யாரோ செய்வது போல் உள்ளது மஹிந்தவாக இருக்கலாம் அல்லது தமிழனும் சிங்களவ்னும் அடிபட்டால் தான் தாங்கள் வளரலாம் என நினைக்கும் குழுவாகவும் இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.