Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதால் இலங்கை தோல்வியடைகிறது – நஸீர் அஹமட்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதால் இலங்கை தோல்வியடைகிறது – நஸீர் அஹமட்!

In இலங்கை     June 18, 2019 9:33 am GMT     0 Comments     1247     by : Dhackshala

மனங்களை வெல்லாது மதத்தை முன்னுரிமைப்படுத்தி வருவதால் தோல்வி அடைந்த நாடாக இலங்கை மாறி வருவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாட்டில் அதிகாரபூர்வமற்ற அதிகாரிகளாக பேரின மதவாதிகள் செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சாடியுள்ளார்.

நாட்டின் சமகால நிலைமைகள் குறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில மேலும் தெரிவிக்கையில், “கடந்த 30 வருட காலமாக இடம்பெற்று வந்த ஆயுத மோதலை ஆட்சியாளர்கள் வெற்றிகொண்டிருந்தாலும் நாட்டிலுள்ள பல இனத்தவர்களினதும் மனங்களை வெல்லத் தவறிவிட்டனர்.

இதனாலேயே இப்பொழுது மதவாத நெருக்கடி அதிகரித்து நாளுக்கு நாள் புதுப்புது வடிவத்தில் விஸ்வரூபமெடுத்து வருகிறது. பேரினவாத மதவாதம் இந்த நாட்டைப் பிளவுபடுத்தியுள்ளது.

அதிகாரமளிக்கப்படாத ஆனால், அதிகாரத்தை செயற்படுத்தும் அதிகாரிகள் என மதவாதிகள் அறைகூவல் விடுத்து ஒரு சில இனவாதிகளை தவறாக வழிநடத்திச் சென்றுகொண்டிருக்கின்றனர்.

இந்த நிலைமையை ஆட்சியாளர்கள் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருப்பதை உற்றுக் கவனிக்கின்றபோது அதன் இனவாத ஆபத்து ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டும் என்றே எண்ணத்தோன்றுகிறது.

இதற்கும் மேலதிகமாக ஒருபடி மேலே சென்று ‘இனிமேல் நாட்டில் தீர்க்கப்படாமல் இருக்கும் சகல பிரச்சினைகளுக்கும் சமயவாதிகளே தீர்வைப் பெற்றுத் தருவார்கள்’ என கடுங்கோட்பாட்டு பேரினவாத மதவாதிகள் அறைகூவல் விடுத்துள்ளனர். இது எங்கு சென்று முடியுமென அச்சம் ஏற்படுகிறது.

பேரினவாதமும் அயோக்கிய அரசியலும் ஒன்றிணைந்துள்ளதன் விளைவு இதுவரை நடந்த அழிவுகளைவிட இன்னமும் இந்த நாட்டை பேரழிவுக்கு இட்டுச் செல்லும். அவ்வாறு இல்லாமல் இருக்க சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இன ஐக்கிய செயற்பாட்டாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/மதத்தை-முன்னுரிமைப்படுத/

  1. இஸ்லாமிய தீவிரவாதம் குண்டு வைத்துக் கொல்கிறது.
  2. முல்லைத்தீவு நீராவியடியில் பிள்ளை யார் ஆலயம் அமைந்த இடத்தில் புத்தரை பிரதிஷ்டை செய் என்று பெளத்த சிங்களம் போர்க் கொடி தூக்குகிறது.
  3. இந்து ஆலயங்களில் நடைபெறும் கும்பாபிஷேகமும் மகோற்சவமும் பணம் பறிக்கும் சடங்காயிற்று.
  4. மன்னாரில் பாடல் பெற்ற சிவத்தலத் தின் சிவராத்திரி வளைவை கத்தோ லிக்க மதகுருமார் முன்னிற்க, தள்ளி விழுத்தி காலால் மிதித்தனர்.
  5. அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணா விரதத்தை உசுப்பேத்த கொழும்பு மேற் றாணியார் தேரரை நேரில் சென்று சந்திக்கின்றார்.
இலங்கையில் இதுவே நிலை 😞 
  • கருத்துக்கள உறவுகள்

அய்யா... உங்களது ஆட்சீயில தான், கிழக்கிலே மதத்துக்கு முன்னுரிமை கொடுத்து, அரேபியமும், வஹாபிஸமும், பயங்கரவாதமும் வளர இடம் கொடுத்து, சஹாரானையும் கண்டுகொள்ளாமல் வளர விட்டு, சக தமிழ் பேசும் மக்களை அதே மட்டக்களப்பிலும், வெளியேயும் கொன்றழித்து விட்டு, இது... போதனை... வேற தேவையா?

3 hours ago, பரியாரி said:

மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதால் இலங்கை தோல்வியடைகிறது – நஸீர் அஹமட்!

In இலங்கை     June 18, 2019 9:33 am GMT     0 Comments     1247     by : Dhackshala

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கூடாரத்தில் ஒருவன் இருந்தானாம். அவன் ஒட்டகம் வெளியே இருந்தது. அதிக குளிர் அடிக்கவே, ஒட்டகம் சிறிது மூக்கை மட்டும் உள்ளே நுழைத்தது. இவனும் “சரி மூக்கை மட்டும்தானே உள்ளே நுழைக்கிறது” என்று விட்டுவிட்டான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முகம், கழுத்து, வயிறு என முற்றிலுமாக உள்ளே நுழைந்து படுத்துக் கொண்டது. இவனுக்கு இடம் போதாமல், ஒட்டகத்தை வெளியிலும் தள்ளமுடியாமல் இவன் வெளியே படுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதை இன்னொரு பன்டிக்குட்டி சொல்லக்கூடாது......

8 hours ago, பரியாரி said:

மதத்தை முன்னுரிமைப்படுத்தி வருவதால் தோல்வி அடைந்த நாடாக இலங்கை மாறி வருவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இவர் சிங்கள-பௌத்த இனமதவெறியை காரணமாக சொல்கிறாரா அல்லது உலகளாவிய முஸ்லீம் இனமதவெறியை காரணமாக சொல்கிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுற ஆளை பாருங்கள், இவர்கள் எப்பவாவது தமிழர் என்று தங்களை அடையாள படுத்தியிருக்கிறார்களா ? இப்ப பௌத்தமும் இஸ்லாமும் முட்டி மோதுகிறார்கள். இவர்களுக்கு வெளியில் இருந்து மத ரீதியாக பல ஆதரவுகள் வருகுது. ஊருக்குத்தான் உபதேசம் எனக்கு இல்லை.

 எப்பவும் தனக்கு என்றால் படக்கு படக்கு என்று அடிக்குமாம், 

கண்ணாடியை பார்த்துக்கொண்டு இதை சொன்னால் அழகு. 😎

14 hours ago, ampanai said:

இஸ்லாமிய தீவிரவாதம் குண்டு வைத்துக் கொல்கிறது.

வஹாபிஸம் என்பது முஸ்லிம்களுக்குள் பிரச்சினைகளை உருவாக்கவும் அடிப்படை இஸ்லாத்தை அழிப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட ஒன்று. (உருவாக்கத்தில் UK இன் பங்கு இருந்தது)

சவுதி அதற்குள் விழுந்த ஒரு நாடு.

இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் சவுதியுடன் தொடர்பிலிருப்பதால் இலகுவில் வஹாபிஸம் இலங்கைக்குள் வந்து விட்டது.

அல் கைடா, தலிபான், ISIS போன்றவற்றை உருவாக்கியவர்கள், பயன்படுத்துபவர்கள் யார் என்று பார்த்தால் குண்டு வைத்து கொல்வது இஸ்லாமிய தீவிரமா இல்லை வேறு தீவிரவாதமா என்று புரியும்.

Edited by Lara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.