Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்கள் வர்த்தகம் செய்ய தடை: வென்னப்புவ பிரதேசசபை அதிரடி!

Featured Replies

8 minutes ago, Dash said:

இதற்கு கூட்டமைபை தவறு சொல்ல வேண்டாம்; வறிய மக்களுக்கு உதவ வேண்டியதே புலம்பெயர் மக்கள் இலகுவாக  செய்ய கூடியது

புலம்பெயர் மக்கள் இலகுவாக செய்யக்கூடிய ஒன்று தான். ஆனால் புலம்பெயர் உதவி செய்யும் அமைப்புகளுக்கு பணம் கொடுக்க மக்கள் பயப்படுகிறார்கள்.

வடக்கு கிழக்கில் தமிழர் பிரதிநிதிகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தம் மக்களுக்கு உதவ வேண்டியது அவர்கள் கடமை. அதற்கு சாட்டுப்போக்கு சொல்ல முடியாது.

  • Replies 65
  • Views 5.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, colomban said:

பிள்ளை பெறும் இயந்திரங்களாக முஸ்லிம்கள் பயன்படுத்தியுள்ளார்கள்..

தமிழ் பெண்களை மதம்மாற்றி இரண்டாவது அல்லாது மூன்றாவதாக   மணம் முடித்து பிள்ளை பெறும் இயந்திரங்களாக முஸ்லிம்கள் பயன்படுத்தியுள்ளார்கள் என அதுரலியே ரதனன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

தனக்கு கிடைத்த தகவல்களில் அடிப்படையில் 90 ஆயிரம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எண்னிக்க தொடர்பில் வாத விவாதம் ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டார்.

 

தான் வடக்கு பகுதிக்கு சென்ற போது இது விடயமாக அங்கு மக்கள் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளா

https://www.madawalaenews.com/2019/06/blog-post_914.html

 

இது  பழையசெய்தி சகோ

எதற்கு  மீண்டும்??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இத்தாலி நாட்டில் வாழும் இலங்கையருள் தமிழரை காட்டிலும் சிங்களவர்களே அதிகம்.

கத்தோலிக்கர்களாக இருக்கும் இவர்கள் இலங்கையில் மேற்கு கரையோர சிங்களவர்களே.

இத்தாலி நாட்டில் அதிகம் வசிப்பவர்கள் இருக்கும் இடம் என்ற அர்த்ததில் கொழும்பான் வென்னபுவவில் “இத்தாலி சிங்களவர்” அதிகம் என்கிறார்.

நீங்கள் இத்தாலியை பற்றி கதைக்கிறீர்கள் நாங்கள் வாழும் இங்கிலாந்தில் இன்னும் 60 ஆயிரம் சிங்களவர் வந்தால் இங்குள்ள தமிழ் ஆட்க்களை விட கூட இருப்பார்களாம் இங்குள்ள அரசியல் வாலா ஒன்றின் கதை இது யாரப்பா இந்த கதையை உனக்கு சொன்னது என்றால் விக்கிநேச்வ்ரனாம் 😀😀https://ta.wikipedia.org/wiki/சிங்களவர் முதலில் கண்டவரும் கை வைப்பதை நிப்பாட்டணும் விக்கியில் .

46 minutes ago, Dash said:

இதற்கு கூட்டமைபை தவறு சொல்ல வேண்டாம்;

கூட்டமைப்பு சரியாய் செய்த செயல் ஒன்றை சொல்லுங்க பாஸ் .

4 minutes ago, Nathamuni said:

ஆம்...

வடக்கு, கிழக்கு இணைந்தால், தாம் சிறுபான்மையாகி, அதிகாரமற்றவராவோம் என ஹிஸ்புல்லா, அதாவுல்லா, ரிசாத் கோஸ்டிகள் கூறின.

கிழக்கின் அதிகாரம் கையில் வந்த நிலையில் நடந்த அவலத்தை ஏப்பிரல் மாதம்  நாடும், உலகமும் பார்த்தது...

இதன் காரணாகவே, வடக்கு கிழக்கு இணைப்பை சிங்களம் நடாத்தி முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கிழக்கு தனியாக உள்ள போது முஸ்லிம்களின் வீதம் அதிகமாகவும் வடக்கு கிழக்கு இணைந்ததும் முஸ்லிம்களின் வீதம் வீழ்ச்சியடைந்ததும் காரணமாக முஸ்லிம்கள் அதை எதிர்த்தார்கள். அத்துடன் தமிழர்களின் கீழ் வாழ விரும்பாததாலும் அதை எதிர்த்தார்கள். அதே நேரம் இலங்கை அரசும் அவர்களை தூண்டி விட்டு வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்த்தது. சிங்களவர்களும் வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்த்தார்கள்.

இறுதியில் JVP தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சட்டபூர்வமாக வடக்கு கிழக்கை பிரித்தது. அதை கிழக்கு முஸ்லிம்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். வடக்கு கிழக்கு மீள இணையக்கூடாது எனவும் குரல்கொடுத்து வந்தார்கள். ஹிஸ்புல்லா, அதாவுல்லா, ரிசாத் மட்டுமல்ல, ஹரிஸ் மற்றும் பலரும் வடக்கு கிழக்கு இணைவுக்கு எதிராக கதைத்தவர்கள். ஹக்கீமும் வடக்கு கிழக்கு இணைவதானால் முஸ்லிம்களுக்கு தனியலகு வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தவர்.

தற்போது இந்திய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜெய்சங்கரும் வடக்கு கிழக்கு மீள் இணைவு தேவையில்லை, அதை அரசிடம் இந்தியா வலியுறுத்தாது என முன்னர் கூறியிருந்தார்.

கிழக்கின் அதிகாரம் கையில் வந்த நிலையில் தான் 21/4 அவலம் நடந்தது என நீங்கள் நினைக்கிறீர்கள். உங்கள் நிலைப்பாடை என்னால் மாற்ற முடியாது. இலங்கையில் ஜிகாத் தோன்றியது இன்று நேற்றல்ல. 80 களில். அதை மகிந்த, கோத்தா, இலங்கை புலனாய்வுத்துறை வளர்த்தெடுத்து தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தினார்கள். வெளிநாடுகளும் பயன்படுத்துகிறது. மைத்திரி அரசும் பயன்படுத்துகிறது.

மாகாண சபை ஆட்சி முறையையே இல்லாமல் செய்யப்போகினம் என்ற மாதிரி ஒரு கதை சிங்களவர் மத்தியில் இருக்கிறது. அப்படியிருக்க வடக்கு கிழக்கு மீள இணையுமா என்பது கேள்விக்குறி.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Lara said:

கிழக்கு தனியாக உள்ள போது முஸ்லிம்களின் வீதம் அதிகமாகவும் வடக்கு கிழக்கு இணைந்ததும் முஸ்லிம்களின் வீதம் வீழ்ச்சியடைந்ததும் காரணமாக முஸ்லிம்கள் அதை எதிர்த்தார்கள். அத்துடன் தமிழர்களின் கீழ் வாழ விரும்பாததாலும் அதை எதிர்த்தார்கள். அதே நேரம் இலங்கை அரசும் அவர்களை தூண்டி விட்டு வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்த்தது. சிங்களவர்களும் வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்த்தார்கள்.

இறுதியில் JVP தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சட்டபூர்வமாக வடக்கு கிழக்கை பிரித்தது. அதை கிழக்கு முஸ்லிம்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். வடக்கு கிழக்கு மீள இணையக்கூடாது எனவும் குரல்கொடுத்து வந்தார்கள். ஹிஸ்புல்லா, அதாவுல்லா, ரிசாத் மட்டுமல்ல, ஹரிஸ் மற்றும் பலரும் வடக்கு கிழக்கு இணைவுக்கு எதிராக கதைத்தவர்கள். ஹக்கீமும் வடக்கு கிழக்கு இணைவதானால் முஸ்லிம்களுக்கு தனியலகு வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தவர்.

தற்போது இந்திய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜெய்சங்கரும் வடக்கு கிழக்கு மீள் இணைவு தேவையில்லை, அதை அரசிடம் இந்தியா வலியுறுத்தாது என முன்னர் கூறியிருந்தார்.

கிழக்கின் அதிகாரம் கையில் வந்த நிலையில் தான் 21/4 அவலம் நடந்தது என நீங்கள் நினைக்கிறீர்கள். உங்கள் நிலைப்பாடை என்னால் மாற்ற முடியாது. இலங்கையில் ஜிகாத் தோன்றியது இன்று நேற்றல்ல. 80 களில். அதை மகிந்த, கோத்தா, இலங்கை புலனாய்வுத்துறை வளர்த்தெடுத்து தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தினார்கள். வெளிநாடுகளும் பயன்படுத்துகிறது. மைத்திரி அரசும் பயன்படுத்துகிறது.

மாகாண சபை ஆட்சி முறையையே இல்லாமல் செய்யப்போகினம் என்ற மாதிரி ஒரு கதை சிங்களவர் மத்தியில் இருக்கிறது. அப்படியிருக்க வடக்கு கிழக்கு மீள இணையுமா என்பது கேள்விக்குறி.

80 களில் ஜஸ் இல்லை.

இருந்தாலும் 90 களில்இந்தியாவில், பம்பேயில், தாவீது குண்டுகளை வெடிக்க வைத்தான்.

ஏப்ரல் 21 பின் சகலரும் தமது நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய நிலையில் உள்ளனர். 

கிழக்கின் அதிகாரம் வந்த பின்.... என்பது எனது நிலைப்பாடு அல்ல...

புலிகள் தீவிரவாதம் தீவினுள் மட்டும். இஸ்லாமிய தீவிரவாதம் உலகளாவியது.

பதிவி விலகிய சிங்கள பாதுகாப்பு செயலர், ஒத்துக்கொள்கின்றார்.... தமக்கு வந்த புலனாய்வு தகவல்களை பெரிதாக எடுக்காமைக்கு காரணம், இந்தளவு அதிபயங்கரமாக இருக்காது என்று கருதியதால்.

ஜெயசங்கர் சொல்லும் போது நிலை வேறு.... இன்று அவர்கள் பாதுகாப்பு முன்னிலைப் படுகிறது.

வடக்குடன் இல்லாவிடில் , கிழக்கு ஊவா அல்லது சப்ரகமுவாவுடனாவது இணைக்கப்படும்.

Edited by Nathamuni

5 minutes ago, Nathamuni said:

80 களில் ஜஸ் இல்லை.

இருந்தாலும் 90 களில்இந்தியாவில், பம்பேயில், தாவீது குண்டுகளை வெடிக்க வைத்தான்.

ஏப்ரல் 21 பின் சகலரும் தமது நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய நிலையில் உள்ளனர். 

புலிகள் தீவிரவாதம் தீவினுள் மட்டும். இஸ்லாமிய தீவிரவாதம் உலகளாவியது.

பதிவி விலகிய சிங்கள பாதுகாப்பு செயலர், ஒத்துக்கொள்கின்றார்.... தமக்கு வந்த புலனாய்வு தகவல்களை பெரிதாக எடுக்காமைக்கு காரணம், இந்தளவு அதிபயங்கரமாக இருக்காது என்று கருதியதால்.

ஜெயசங்கர் சொல்லும் போது நிலை வேறு.... இன்று அவர்கள் பாதுகாப்பு முன்னிலைப் படுகிறது.

நான் இலங்கையில் 80 களில் ஜிகாத் தோன்றியது என்று தான் கூறினேன். ISIS என கூறவில்லை. அன்ரன் பாலசிங்கம் அவர்களே அது பற்றி முன்னர் கூறியிருந்தார். 

அதை இலங்கை புலனாய்வு துறை உட்பட பலரும் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தி வந்தார்கள். தாம் பயன்படுத்துகிறோம் என்பதை யாரும் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள் தானே? 😊

கோத்தாவும் வளர்த்து விட்டவர், முஸ்லிம் அரசியல்வாதிகளும் வளர்த்து விட்டார்கள். பல நாட்டு புலனாய்வு துறையும் வளர்த்து விட்டார்கள். எனவே ISIS உடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதில் அதற்கு ஒரு சிக்கலும் இருந்திருக்காது. 😎

ஜெய்சங்கர் இப்பொழுது என்ன நிலைப்பாட்டில் உள்ளார் என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்.

அத்துடன் வடக்கு கிழக்கு இணைப்பு நினைத்ததும் நடந்து விடாது. பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பெற வேண்டும். மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பையும் நடத்த வேண்டியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Lara said:

நான் இலங்கையில் 80 களில் ஜிகாத் தோன்றியது என்று தான் கூறினேன். ISIS என கூறவில்லை. அன்ரன் பாலசிங்கம் அவர்களே அது பற்றி முன்னர் கூறியிருந்தார். 

அதை இலங்கை புலனாய்வு துறை உட்பட பலரும் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தி வந்தார்கள். தாம் பயன்படுத்துகிறோம் என்பதை யாரும் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள் தானே? 😊

கோத்தாவும் வளர்த்து விட்டவர், முஸ்லிம் அரசியல்வாதிகளும் வளர்த்து விட்டார்கள். பல நாட்டு புலனாய்வு துறையும் வளர்த்து விட்டார்கள். எனவே ISIS உடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதில் அதற்கு ஒரு சிக்கலும் இருந்திருக்காது. 😎

ஜெய்சங்கர் இப்பொழுது என்ன நிலைப்பாட்டில் உள்ளார் என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்.

அத்துடன் வடக்கு கிழக்கு இணைப்பு நினைத்ததும் நடந்து விடாது. பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பெற வேண்டும். மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பையும் நடத்த வேண்டியிருக்கலாம்.

ஐஸ் அப்போது இல்லாத படியால், 80களில் ஜிஹாத் பற்றி யாருமே பெரிதாக அலட்டிக் கொள்ள வில்லை என்று சொல்ல  வந்தேன்.

ஜெய்சங்கர் நிலைப்பாடு வேறு.... இந்திய நிலைப்பாடு வேறு.

மன்னாரின் ஊடாக, என்னென்ன கோதாரிகள் உள்ள வந்தனவோ என்கிற கவலை அவர்களுக்கு...

சிங்களத்தின் பொருளாதாரத்தினை ஒரே நாளில் துடைத்து எறிந்து விட்ட கிழக்கு இஸ்லாமிய அதிகாரத்தின் வலிமை. அதிகாரம் கையில் இருந்தபோது, சிங்களம் வேறுபக்கம் பார்த்தபோது, தமிழர்களை எப்படி நடாத்தினார்கள் என்பதற்கு கல்முனையே உதாரணம்.

வடக்கு, கிழக்கு இணைவது, தமிழர்களுக்காக அல்ல. அவர்களது பாதுகாப்புக்கு.

சிங்கள, இந்திய, இந்தியாவுக்கு அப்பால் மேற்கின் பாதுகாப்புக்கு....

சிரியாவில் முடக்கப்படட ஐஸ், இலங்கையில் மையம் கொள்ளலாம் என்ற கவலை அவர்களுக்கு.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் தமது அரசியல் பலத்தையும் பணப்பலத்தையும் பயன்படுத்தினால் அதே பிரதேசத்தில் அவர்களுக்கென தனியான முஸ்லிம் சந்தையொன்றை திறப்பதும் சாத்தியம் தானே.

47 minutes ago, Nathamuni said:

ஐஸ் அப்போது இல்லாத படியால், 80களில் ஜிஹாத் பற்றி யாருமே பெரிதாக அலட்டிக் கொள்ள வில்லை என்று சொல்ல  வந்தேன்.

ஜெய்சங்கர் நிலைப்பாடு வேறு.... இந்திய நிலைப்பாடு வேறு.

மன்னாரின் ஊடாக, என்னென்ன கோதாரிகள் உள்ள வந்தனவோ என்கிற கவலை அவர்களுக்கு...

சிங்களத்தின் பொருளாதாரத்தினை ஒரே நாளில் துடைத்து எறிந்து விட்ட கிழக்கு இஸ்லாமிய அதிகாரத்தின் வலிமை.

வடக்கு, கிழக்கு இணைவது, தமிழர்களுக்காக அல்ல. அவர்களது பாதுகாப்புக்கு.

சிங்கள, இந்திய, இந்தியாவுக்கு அப்பால் மேற்கின் பாதுகாப்புக்கு....

சிரியாவில் முடக்கப்படட ஐஸ், இலங்கையில் மையம் கொள்ளலாம் என்ற கவலை அவர்களுக்கு.

நாம் தான் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் ஜிகாத் தமிழ் முஸ்லிம் மக்களிடையே பிரச்சினைகளை உருவாக்குவதற்கு, புலிகளுக்கெதிரான செயற்பாடுகளுக்கு என பலவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததால் புலிகளுக்கு அது பற்றி தெரிந்திருந்தது.

இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் இலங்கை, இந்தியா, மேற்குலகின் பங்கில்லாமல் தான் நடந்தது என நீங்கள் வேண்டுமானால் நம்புங்கள். என்னால் அவ்வாறு நம்ப முடியாது. 

முன்னர் ஜெய்சங்கர் இந்தியாவின் நிலைப்பாட்டை தான் கூறினார். அப்பவும் மோடி தான் பிரதமர். இப்பொழுதும் ஜெய்சங்கர் நிலைப்பாடு என நான் கூறியது இந்தியாவின் நிலைப்பாட்டையும் சேர்த்து தான். மோடிக்கு வேறு ஜெய்சங்கரில் மதிப்பு உள்ளது. அதனால் தான் அவர் ஓய்வு பெற்ற பின்னும் அவரை பயன்படுத்தி வந்தார், இப்பொழுது இந்தியாவின் வெளிவிவகார அமைச்சராகவும் நியமித்துள்ளார்.

வடக்கு கிழக்கு இணைந்தால் எனக்கும் மகிழ்ச்சி தான்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

இறுதியில் JVP தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சட்டபூர்வமாக வடக்கு கிழக்கை பிரித்தது.

சொன்னதும் நானே.👆

சொல்வதும் நானே.👇

1 hour ago, Lara said:

வடக்கு கிழக்கு இணைப்பு நினைத்ததும் நடந்து விடாது. பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பெற வேண்டும். மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பையும் நடத்த வேண்டியிருக்கலாம்.

maxresdefault.jpg

கலங்கிநிற்பது நாமே. 😰😰

38 minutes ago, Paanch said:

சொன்னதும் நானே.👆

சொல்வதும் நானே.👇

maxresdefault.jpg

கலங்கிநிற்பது நாமே. 😰😰

இதிலென்ன கலக்கம்? நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வடக்கு கிழக்கை சட்டபூர்வமாக பிரித்தது JVP. இனி மீண்டும் வடக்கு கிழக்கை இணைப்பதானால் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பெற வேண்டும், மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டியுமிருக்கலாம் என எழுதியுள்ளேன். 😊

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

நாதமுனி 

இத்தாலியில் அனேகர் சிங்களவர்கள் மேலும் இவர்கள் மற்ற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் போலல்லாது. ஒருவித மதாவியர்கள், முரடர்கள், படிப்பறிவில்லாதவர்கள். கீழ்த்தட்டு மக்கள், unskilled laborers.


பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் இத்தாலியில் இருப்பார்கள். இப்படி இருப்பதனால் அவர்களுக்கு ஒருவித சமூக அந்தஸ்து கிடைகின்றது. இந்த அர்த்தத்தில் தான் கூறினேன். இவர்கள் இத்தாலி சிங்களவர்கள் என்று வேறொன்றுமில்லை.  

 

5 hours ago, Nathamuni said:

அப்ப, நீங்களும், புங்கையரும் ஊருக்கு திருப்பினால், புங்குடுதீவு வாசிகள் என்று சொல்லாமல், பிரான்ஸ் தமிழர், ஆஸ்திரேலிய தமிழர் என்று சொல்லலாமோ?

கொழும்பான் ஏதோ போட்டிருக்கிறார். அவர் வந்து விளப்பம் தருவார் என்று நினைக்கிறேன். 

விளப்பம் குழப்பம் தவிர்ப்பதால்,

விளப்பம் உயிரிலும் ஓம்பப்படும். 😂

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான், 

இந்த முத்துராஜவெல தொட்டு, மேற்கு கரையோரம் வழியே சிலாவத்துறை வரை வாழும் சிங்களவர்கள் பலர் ஒரு 100 வருடத்துக்கு முன்பு வரை தமிழர்களே.  போர்த்துகேயர் வருகைக்கு முன் இந்த பகுதி கோட்டே ராசதானியின் கீழ் இருந்தது, அப்போது இப்பகுதியை “டெமில பத்துவ” “தமிழர் பற்று” என அழைதுளனர். இங்கே கிராமங்கள் பல தமிழ் வன்னிமையின் கீழ், தமிழ் கிராமங்களாக பன்நெடுங்காலம் இருந்துளன. இன்றைக்கும் இதன் எச்சங்களாக முந்தல் உடப்பு போன்ற தமிழ் கிராமங்கள் இந்த கரையோரம் இருக்கிறன.

நீர்கொழும்பு ( கொழும்புக்கு அருகில் இருக்கும் கடல்னீரேரி சூழ்ந்த இடம்,

பாலாவி (பால் போன்ற ஆறு)

கட்டுவ( ன்),

கொச்சிக்கடை,

வாய்க்கா(ல்),

நைனாமடம(ம்),

மாற( ன்) வில்ல(லு),

ஆனைக்கழி(ய),

இரணைவில்ல(லு),

ஆனைமடு(வ),

அம்பகண்ட(ன்)வில்ல(லு),

ஆராச்சிக்கட்டு(வ),

ஆனைவிழுந்தான( ன் ),

மருதங்குளி,

புழுதிவயல்,

கல்லடி,

கரம்பை,

நாகவில்லு(வ),

நுரைச்சோலை,

கண்டல்குளி(ய),

கற்பிட்டி,

வண்ணாத்(தி)வில்லு(வ),

எழுவாங்குளம்,

வில்லு-பற்று(வ)

என சகல பெயர்களும் தமிழில் காரணப் பெயர்களாக அமைகிறமை இதற்கு ஒரு சான்றாகும்.

சிங்களத்தில் இவை எல்லாம் பொருளற்ற இடுகுறிப் பெயர்கள்.

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு வென்னப்புவ பிரதேசசபை தடை விதித்துள்ளது.

நாட்டு நிலை சுமுகமடையும் வரை முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தகத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசசபை தலைவர், பிரதேச செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.65557801_10216612250872980_298473386962365557801_10216612250872980_2984733869623738368_n-225x300.jpg

http://www.pagetamil.com/61779/?fbclid=IwAR0KwfZZ3aSAQZ8R22mcqz_WmEXK-Xz-XqTAyRmQx2FKfHQT5RjwdHkFzeE

கிழக்கிலும் கோயில் திருவிழாக்களில் தற்காலிகாகமா நாட்டில் சுமுக நிலை திரும்பும் வரை முஸ்லீம் வியாபாரிகள் வியாபாரம் செய்யக் கூடாது என்று தமிழர்கள் தடை விதித்து இருந்தார்கள்...இது பற்றி முனிவர்ஜீக்கு அதிகமாய் தெரிந்திருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Lara said:

இதிலென்ன கலக்கம்? நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வடக்கு கிழக்கை சட்டபூர்வமாக பிரித்தது JVP. இனி மீண்டும் வடக்கு கிழக்கை இணைப்பதானால் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பெற வேண்டும், மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டியுமிருக்கலாம் என எழுதியுள்ளேன். 😊

நீங்களோ நானோ சட்டங்களை மீறமுடியாது. ஆனாலும்..... இணைப்பதானால் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பெற வேண்டும், பிரிப்பதானால் நீதிமன்றம் போதும் என்ற சட்டத்தை நீங்கள் சட்டமாக ஏற்றுக்கொண்டீர்கள். எனக்கு அச்சட்டம் ஒரு நகைப்புக்குரியதாகத் தெரிந்தது. சட்டங்களில் இருளைக் கண்டேன். உங்கள் கருத்திடுகைகளில் அல்ல.    

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

நீங்கள் இத்தாலியை பற்றி கதைக்கிறீர்கள் நாங்கள் வாழும் இங்கிலாந்தில் இன்னும் 60 ஆயிரம் சிங்களவர் வந்தால் இங்குள்ள தமிழ் ஆட்க்களை விட கூட இருப்பார்களாம் இங்குள்ள அரசியல் வாலா ஒன்றின் கதை இது யாரப்பா இந்த கதையை உனக்கு சொன்னது என்றால் விக்கிநேச்வ்ரனாம் 😀😀https://ta.wikipedia.org/wiki/சிங்களவர் முதலில் கண்டவரும் கை வைப்பதை நிப்பாட்டணும் விக்கியில் .

கூட்டமைப்பு சரியாய் செய்த செயல் ஒன்றை சொல்லுங்க பாஸ் .

விக்கி பாவம் ஐயா, நாணயம் இருக்கும் அளவுக்கு தந்திரம் இல்லாதவர். அவர் மட்டுமில்லை இலங்கை/சிங்கள ராசதந்திரத்துக்கு சரியாக “நீண்டகால” அடிப்படையில் பதில் கொடுக்க இன்னும் ஒரு தமிழ் தலைவராலும் இயலவில்லை என்பதே யதார்தம்( எல்லாளனில் தொடங்கி).

1 hour ago, Lara said:

இதிலென்ன கலக்கம்? நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வடக்கு கிழக்கை சட்டபூர்வமாக பிரித்தது JVP. இனி மீண்டும் வடக்கு கிழக்கை இணைப்பதானால் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பெற வேண்டும், மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டியுமிருக்கலாம் என எழுதியுள்ளேன். 😊

87 இல் இணைக்கப்பட்டது தற்காலிக இணைப்பு. அதை இலங்கையின் அரசமைப்புக்கு ஏற்ப ( சர்வசன வாக்கெடுப்பு) நிரந்தரமாக்க வேண்டும் என்பதே இந்திய-இலங்கை ஒப்பந்தம் சொன்னது. ஆனால் 20 வருடமாக தற்காலிகமாகவே இருந்தபின், ஜேவிபி தொடர்ந்த வழக்கில், தற்காலிக இணைவை பிரித்த உச்ச நீதி மன்றம், இனி இணைப்பதாகின் இலங்கை அரசமைப்புக்கு ஏற்பவே இணைக்க வேண்டும் என்று கூறியது.

Just now, goshan_che said:

விக்கி பாவம் ஐயா, நாணயம் இருக்கும் அளவுக்கு தந்திரம் இல்லாதவர். அவர் மட்டுமில்லை இலங்கை/சிங்கள ராசதந்திரத்துக்கு சரியாக “நீண்டகால” அடிப்படையில் பதில் கொடுக்க இன்னும் ஒரு தமிழ் தலைவராலும் இயலவில்லை என்பதே யதார்தம்( எல்லாளனில் தொடங்கி).

3 minutes ago, Paanch said:

நீங்களோ நானோ சட்டங்களை மீறமுடியாது. ஆனாலும்..... இணைப்பதானால் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பெற வேண்டும், பிரிப்பதானால் நீதிமன்றம் போதும் என்ற சட்டத்தை நீங்கள் சட்டமாக ஏற்றுக்கொண்டீர்கள். எனக்கு அச்சட்டம் ஒரு நகைப்புக்குரியதாகத் தெரிந்தது. சட்டங்களில் இருளைக் கண்டேன். உங்கள் கருத்திடுகைகளில் அல்ல.    

 87 இல் இணைக்கப்பட்டது தற்காலிக இணைப்பு. அதை இலங்கையின் அரசமைப்புக்கு ஏற்ப ( சர்வசன வாக்கெடுப்பு) நிரந்தரமாக்க வேண்டும் என்பதே இந்திய-இலங்கை ஒப்பந்தம் சொன்னது. ஆனால் 20 வருடமாக தற்காலிகமாகவே இருந்தபின், ஜேவிபி தொடர்ந்த வழக்கில், தற்காலிக இணைவை பிரித்த உச்ச நீதி மன்றம், இனி இணைப்பதாகின் இலங்கை அரசமைப்புக்கு ஏற்பவே இணைக்க வேண்டும் என்று கூறியது.

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

அதெல்லாம் கவலைப்படாதீங்க.

நம்ம ஞானசேரர், சும்மா அதிர வைப்பார். கல்முனை விசயம் போல, இந்த விசயங்களையும் காதில் போட்டு வைக்க வேண்டும்.

சம்பந்தர் கோஸ்டிக்கு, ரவூப் கக்கீம் என்ற தலையை காட்டிக் கொண்டு, ஹிஸ்புல்லா, ரிசாத் போன்ற வால்கள், அதே சுத்துமாத்துக்களை தமிழர்களுக்கு எதிராக செய்வது இனி கஸ்டமான வேலை.

சும்மாவா சொன்னார்கள், சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் பார்க்க, சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்று.

வடக்கு, கிழக்கு இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டால் பல விட்டுக் கொடுப்புகள் சாட்சிக்காரர் கோரினர்.

இப்போது, வடக்கு, கிழக்கு இணைப்பு தானே நடக்கும். காரணம் அவர்கள் பாதுகாப்பு.

இது தவறான கணிப்பீடு, சிங்கள ராஜதந்திரத்தை பற்றிய குறைமதிப்பீடு மட்டுமல்ல, 48 இல் இருந்து சிங்கள ராஜதந்திரத்திடம் தொடர் தோல்விகளை சந்தித்தும் நாம் ஒரு பாடத்தையும் படிக்கவில்லை என்பதை காட்டி நிக்கிறது.

முஸ்லீம்களை அடக்க வடகிழக்கை இணைத்து அதிகாரத்தை தமிழர் கையில் தருவத் என்பது நடக்க கூடியதல்ல.

சிங்களத்தின் தொலை நோக்கு நகர்வு:

1. வடக்கு கிழக்கு இடையே ஒரு சிங்கள பகுதியை ஏற்படுத்தி அதன் குடிபரம்பலை மேலும் விரிவு படுத்துவது (அலம்பில் முதல் வெருகல் வரை).

2.பொலன்நறுவை, மகியங்கன, அம்பாறையில் இருந்து உள்நோக்கி நகர்ந்து படுவான்கரையின் இனப்பரம்பலை சிங்களவர்க்கு சாதகமாக மாற்றுவது. 

3. கிழக்கில் எல்லை மீள் நிர்ணயம் செய்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இனமும் அதிக பெரும்பான்மை இல்லமல் செய்வது.

4. ஈற்றில் கிழக்கை சிங்கள பெரும்பானமை மாகாணம் ஆக்குவது.

5. இலக்கு 4 ஐ அடையும் வரை தமிழரையும், முசுலீம்களையும் சிண்டு முடிந்து விடுவது.

6. வடக்கிலும் 1-6 ஐ நடை முறைப்படுத்துவது.

ஒரு போதும் முசிலீம்களை அடக்க, தமிழருக்கு இணைந்த வடகிழக்கின் அதிகாரத்தை தர ஒத்துக்கொள்ள மாட்டர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

விக்கி பாவம் ஐயா, நாணயம் இருக்கும் அளவுக்கு தந்திரம் இல்லாதவர். அவர் மட்டுமில்லை இலங்கை/சிங்கள ராசதந்திரத்துக்கு சரியாக “நீண்டகால” அடிப்படையில் பதில் கொடுக்க இன்னும் ஒரு தமிழ் தலைவராலும் இயலவில்லை என்பதே யதார்தம்( எல்லாளனில் தொடங்கி).

பாஸ் மறுபடியும் படித்து பாருங்க விக்கியரை சொல்லவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

கொழும்பான், 

இந்த முத்துராஜவெல தொட்டு, மேற்கு கரையோரம் வழியே சிலாவத்துறை வரை வாழும் சிங்களவர்கள் பலர் ஒரு 100 வருடத்துக்கு முன்பு வரை தமிழர்களே.  போர்த்துகேயர் வருகைக்கு முன் இந்த பகுதி கோட்டே ராசதானியின் கீழ் இருந்தது, அப்போது இப்பகுதியை “டெமில பத்துவ” “தமிழர் பற்று” என அழைதுளனர். இங்கே கிராமங்கள் பல தமிழ் வன்னிமையின் கீழ், தமிழ் கிராமங்களாக பன்நெடுங்காலம் இருந்துளன. இன்றைக்கும் இதன் எச்சங்களாக முந்தல் உடப்பு போன்ற தமிழ் கிராமங்கள் இந்த கரையோரம் இருக்கிறன.

நீர்கொழும்பு ( கொழும்புக்கு அருகில் இருக்கும் கடல்னீரேரி சூழ்ந்த இடம்,

பாலாவி (பால் போன்ற ஆறு)

கட்டுவ( ன்),

கொச்சிக்கடை,

வாய்க்கா(ல்),

நைனாமடம(ம்),

மாற( ன்) வில்ல(லு),

ஆனைக்கழி(ய),

இரணைவில்ல(லு),

ஆனைமடு(வ),

அம்பகண்ட(ன்)வில்ல(லு),

ஆராச்சிக்கட்டு(வ),

ஆனைவிழுந்தான( ன் ),

மருதங்குளி,

புழுதிவயல்,

கல்லடி,

கரம்பை,

நாகவில்லு(வ),

நுரைச்சோலை,

கண்டல்குளி(ய),

கற்பிட்டி,

வண்ணாத்(தி)வில்லு(வ),

எழுவாங்குளம்,

வில்லு-பற்று(வ)

என சகல பெயர்களும் தமிழில் காரணப் பெயர்களாக அமைகிறமை இதற்கு ஒரு சான்றாகும்.

சிங்களத்தில் இவை எல்லாம் பொருளற்ற இடுகுறிப் பெயர்கள்.

 

போகிற போக்கில் கிழக்கு, வன்னி எல்லாம் இப்படி இடுகுறிப் பெயர்களாக  விரைவில் மாறிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

பாஸ் மறுபடியும் படித்து பாருங்க விக்கியரை சொல்லவில்லை 

கிழிஞ்சுது கிருஸ்ணகிரி. நான் உங்கள் இணைப்பை பாக்கேல்ல. விக்கி எண்டதும் விக்கியரை சொல்றியளாக்கும் எண்டு நினைச்சன்😂. ஒரே தாமாசா போச்சு😂

5 minutes ago, கிருபன் said:

போகிற போக்கில் கிழக்கு, வன்னி எல்லாம் இப்படி இடுகுறிப் பெயர்களாக  விரைவில் மாறிவிடும்.

ஈற்றில் நாவற்குழிய, மானிப்பாய, சாவகச்சேரிய, கொடிகம, கங்கசந்துறே, மருதனாமடம எண்டு வந்து நிக்கும் ☹️😡

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

இந்த முத்துராஜவெல தொட்டு, மேற்கு கரையோரம் வழியே சிலாவத்துறை வரை வாழும் சிங்களவர்கள் பலர் ஒரு 100 வருடத்துக்கு முன்பு வரை தமிழர்களே.  போர்த்துகேயர் வருகைக்கு முன் இந்த பகுதி கோட்டே ராசதானியின் கீழ் இருந்தது, அப்போது இப்பகுதியை “டெமில பத்துவ” “தமிழர் பற்று” என அழைதுளனர். இங்கே கிராமங்கள் பல தமிழ் வன்னிமையின் கீழ், தமிழ் கிராமங்களாக பன்நெடுங்காலம் இருந்துளன. இன்றைக்கும் இதன் எச்சங்களாக முந்தல் உடப்பு போன்ற தமிழ் கிராமங்கள் இந்த கரையோரம் இருக்கிறன.

கிராமங்கள் அல்ல தமிழ்நாடு பிரிந்துதான் இலங்கையே தோன்றியது. ஆதாரமாக குமரிக்கண்டம் இன்றும் கடலுக்குள் இருப்பதை ஆராட்சிகளும் தெரிவிக்கின்றன. கடற்கோள் ஒன்றின்பின்பு தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து ஒரு தீவாகத் தோற்றம் பெற்றுள்ளதுதான் இலங்கை. தமிழுக்குப்பின் தோன்றிய மொழிகளே இன்று தமிழை அழிக்க முற்படுகின்றன. முன்வந்த செவியை பின்வந்த கொம்புகள் மறைப்பதைப்போல.😢

  • கருத்துக்கள உறவுகள்

யாராகினும் விவாதம் செய்ய விரும்பின், உங்கள் கருத்துக்களை தாராளமாக பதியுங்கள். ஆனால் அடுத்தவர் கருத்து தவறானது என்று ஆரம்பித்து பீத்திக்க்கொள்ளாமல் இருந்தால் நல்லது. 

வடக்கு, கிழக்கு இணையும், அது தமிழர் நலுனுக்காக இருக்காது என்று தானே சொல்கிறேன். ஆனால் அங்கே சிங்கள குடியுர்ப்புகள் பெருமளவில் அமையும்.

இல்லாவிடில் கிழக்கு, ஊவா அல்லது சப்ராமூவா மாகாணத்துடன் இணைக்கப்படும்.

ஆக மொத்தம், கிழக்கு தனியே இருக்கப் போவதில்லை. காரணம் பாதுகாப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Paanch said:

கிராமங்கள் அல்ல தமிழ்நாடு பிரிந்துதான் இலங்கையே தோன்றியது. ஆதாரமாக குமரிக்கண்டம் இன்றும் கடலுக்குள் இருப்பதை ஆராட்சிகளும் தெரிவிக்கின்றன. கடற்கோள் ஒன்றின்பின்பு தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து ஒரு தீவாகத் தோற்றம் பெற்றுள்ளதுதான் இலங்கை. தமிழுக்குப்பின் தோன்றிய மொழிகளே இன்று தமிழை அழிக்க முற்படுகின்றன. முன்வந்த செவியை பின்வந்த கொம்புகள் மறைப்பதைப்போல.😢

நீங்கள் சொல்வது ஒரு எடுகோள். ஆனால் உண்மையாக இருக்கலாம். Ice Age, காலாத்தில் லண்டனில் தற்போது Finchley Road ஸ்டேசன் இருந்த இடம் வரை துருவ பனிக்கட்டிகள் படந்திருந்தனவாம். அப்போது ஐரோப்பா கண்டத்துக்கும் பிரிதானிய தீவுகளுக்கும் இடையில் கடல் இல்லை. இப்போ ஆங்கில கால்வாய் இருக்கும் இடம் முழுவதும் தரை. பனி உருகி வடிந்த போது, பிரித்தானியா தீவாக, நடுவில் இருந்த தாழ்வான பகுதி ஆங்கில கால்வாயாக (கடல்) மாறி விட்டது.

இப்போ இலங்கை இந்தியா இடையேயான பாக்கு நீரிணையின் ஆழத்தை விட, ஆங்கில கால்வாய் பன்மடங்கு ஆழமான கடற்பகுதி.

ஆகவே, இலங்கை தமிழகம் இடையே ஒரு நிலத்தொடர்பு இருந்திருக்கும் என்பதும் ice age in முடிவில், ஆங்கில கால்வாய் உருவாகி சில ஆயிரம் வருடங்களுக்கு பின்னும் இந்த நில தொடர்பு இருந்து, கடல் மட்டம் மேலும் உயர், இந்த தொடர்பு அழிந்து போயிருக்கும் என்பதும் ஏற்புடையதே.

ஆனால் இவை பல்லாயிரம் வருடங்களுக்கு முந்திய pre historic காலத்தை பற்றிய எடுகோள்.

நான் சொன்னது, சில நூறு வருடங்களுக்கு முந்தைய recorded history.

6 minutes ago, Nathamuni said:

யாராகினும் விவாதம் செய்ய விரும்பின், உங்கள் கருத்துக்களை தாராளமாக பதியுங்கள். ஆனால் அடுத்தவர் கருத்து தவறானது என்று ஆரம்பித்து பீத்திக்க்கொள்ளாமல் இருந்தால் நல்லது. 

வடக்கு, கிழக்கு இணையும், அது தமிழர் நலுனுக்காக இருக்காது என்று தானே சொல்கிறேன். ஆனால் அங்கே சிங்கள குடியுர்ப்புகள் பெருமளவில் அமையும்.

இல்லாவிடில் கிழக்கு, ஊவா அல்லது சப்ராமூவா மாகாணத்துடன் இணைக்கப்படும்.

ஆக மொத்தம், கிழக்கு தனியே இருக்கப் போவதில்லை. காரணம் பாதுகாப்பு.

கிழக்கு தனியே, சிங்கள பெரும்பான்மை மாகாணமாக இருக்கும். 

3 minutes ago, goshan_che said:

இலங்கையின் மாகாணங்களை, ஒவ்வொரு மாகாணமும் கடல் தொடர்பு உள்ளதாக 6 ஆக குறைக்கும் திட்டம் ஏற்கனவே தயார், இதில் உவா, வடமத்தி இல்லாமல் ஆக்கப்பட்டு, கிழக்குடன் சேரும்.

Edited by goshan_che

இந்த தடை இன முரண்பாடுகளைத் தவிர்த்து இன ஐக்கியத்தை கட்டியெழுப்ப உதவும் என்று பிரதேச சபை நீதிமன்றில் அறிவித்துள்ளது!

அதனால் சிங்களவர்களுடன் ஒட்டி உறவாடும் முஸ்லிம்களும் இந்த தடையை வரவேற்று பள்ளிவாசல்களில் பதாதைகளை தொங்கவிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

2 hours ago, goshan_che said:

87 இல் இணைக்கப்பட்டது தற்காலிக இணைப்பு. அதை இலங்கையின் அரசமைப்புக்கு ஏற்ப ( சர்வசன வாக்கெடுப்பு) நிரந்தரமாக்க வேண்டும் என்பதே இந்திய-இலங்கை ஒப்பந்தம் சொன்னது. ஆனால் 20 வருடமாக தற்காலிகமாகவே இருந்தபின், ஜேவிபி தொடர்ந்த வழக்கில், தற்காலிக இணைவை பிரித்த உச்ச நீதி மன்றம், இனி இணைப்பதாகின் இலங்கை அரசமைப்புக்கு ஏற்பவே இணைக்க வேண்டும் என்று கூறியது.

நன்றி. எனது முதல் கருத்தில் தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு என குறிப்பிட்டுள்ளேன். ஏனைய கருத்தில் அதை விட்டு விட்டேன்.

இலங்கை இந்திய ஒப்பந்தப்படி தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்பட வேண்டுமா அல்லது கிழக்கு தனியான நிர்வாக அலகை கொண்டிருக்க வேண்டுமா என்பதை அறிய 31 December 1988 அல்லது அதற்கு முன் பொது வாக்கெடுப்பை நிகழ்த்த வேண்டும். ஆனால் அதை தள்ளிப்போடுவதற்கான உரிமை இலங்கை ஜனாதிபதிக்கு உள்ளது. 7 September 1988 அன்று J.R.Jayewardene பொது வாக்கெடுப்பு நிகழும் வரை கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைந்து ஒரே நிர்வாகப்பிரிவாக இயங்க வேண்டும் என பிரகடனப்படுத்தினார். பின் பொது வாக்கெடுப்பு ஜனாதிபதிகளால் தொடர்ச்சியாக தள்ளிப்போடப்பட்டு வந்தது. எனவே இறுதியில் வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால் வடமாகாணத்துடன் சேர்ந்திருப்பதால் தமது உரிமைகள், நலன்களுக்கு பாதிப்பு, ஒரு இனம் மட்டும் நேர்மையற்ற முறையில் அனுகூலங்களை பெற்றுக்கொள்வார்கள், கிழக்கு மாகாண மக்களை சமனாக நடத்த மாட்டார்கள் என அங்குள்ள மக்கள் அச்சப்படுகிறார்கள், தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என பல்லின மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் தனி மாகாண சபையை உருவாக்குவதில் தோல்வி, மற்றும் நீண்ட காலமாக பொதுவாக்கெடுப்பு நடத்தப்படாமை அம்மக்களுக்கான உரிமை மறுப்பு என்பது போன்ற காரணங்களையும் முன்வைத்து தான் பிரித்தார்கள்.

மீண்டும் இணைப்பதானால் இலங்கை அரசமைப்புக்கு ஏற்ப தான் இணைக்கப்பட வேண்டும். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.