Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேர்தலில் கட்டுக்காசை விக்னேஸ்வரன் இழப்பது உறுதி;சுமந்திரன்

Featured Replies

எதிர்வரும் தேர்தலில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர ன் போட்டியிட வேண்டும் என தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அதில் அவர் கட்டுக்காசையும் இழக்கும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பங்கேற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வு கிடைக்காது விடின் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவது பற்றிச் சிந்திக்கவேண்டி வரும் என்ற சம்பந்தனின் கூற்று தமிழ் மக்களுக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும் என நேற்று கிளிநொச்சியில் நடந்த நிகழ்வு ஒன்றில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துத் தொடர்பில் சுமந்திரன் எம்.பியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்க்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவ்வாறான கருத்தை வெளியிடவேயில்லை என அடியோடு மறுத்தார் சுமந்திரன்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

“உள்ளுராட்சி சபைத் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவு கடுமையாக வீழ்ச்சியடைந்திருந்தது. ஆயினும், ஒக்டோபரில் அரசியல் சூழ்ச்சியை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவுத்தளம் வெகுவாக அதிகரித்துள்ளது.

அந்த நேரத்தில் கூட்டமைப்பு செயற்பட்ட விதம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டமைப்புக்கான ஆதரவு என்பது இப்போது அதிகரித்திருக்கின்றது.

தேர்தல் ஒன்று விரைவில் வரவேண்டும் அதில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கட்டாயம் போட்டியிட வேண்டும். அதில் அவர் கட்டுக்காசையும் இழக்கும் நிலைதான் ஏற்படும்.

http://thinakkural.lk/article/31256

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ampanai said:

அரசியல் தீர்வு கிடைக்காது விடின் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவது பற்றிச் சிந்திக்கவேண்டி வரும் என்ற சம்பந்தனின் கூற்று தமிழ் மக்களுக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும் என நேற்று கிளிநொச்சியில் நடந்த நிகழ்வு ஒன்றில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துத் தொடர்பில் சுமந்திரன் எம்.பியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்க்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவ்வாறான கருத்தை வெளியிடவேயில்லை என அடியோடு மறுத்தார் சுமந்திரன்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

“உள்ளுராட்சி சபைத் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவு கடுமையாக வீழ்ச்சியடைந்திருந்தது. ஆயினும், ஒக்டோபரில் அரசியல் சூழ்ச்சியை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவுத்தளம் வெகுவாக அதிகரித்துள்ளது.

எங்களுக்கு முன்னாடியே தெரியும் இது சம் மின் சொந்தக்கருத்தென்று ....
உங்களையெல்லாம் ..தூசனத்தால் ஏசினால் அது தூசனத்திற்கு வெட்கம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

“உள்ளுராட்சி சபைத் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவு கடுமையாக வீழ்ச்சியடைந்திருந்தது. ஆயினும், ஒக்டோபரில் அரசியல் சூழ்ச்சியை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவுத்தளம் வெகுவாக அதிகரித்துள்ளது.

--------

தேர்தல் ஒன்று விரைவில் வரவேண்டும் அதில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கட்டாயம் போட்டியிட வேண்டும். அதில் அவர் கட்டுக்காசையும் இழக்கும் நிலைதான் ஏற்படும்.

ரணிலுக்கு முண்டு கொடுத்து.. சம்பந்தன் தனது எதிர்க்க ட் சி தலைவர் பதவியை... 
மகிந்தவிடம்  பறி கொடுத்ததால்...  
கூத்தமைப்புக்கு, ஆதரவு பெருகி இருக்கு என்று சுமந்திரன் நினைக்கிறார் போலுள்ளது. 
------
விக்னேஸ்வரனுக்கு....   கட்டுக்காசு கிடைக்காது என்று, சுமந்திரன் கவலைப்பட முதல்,
உங்களுக்கு கட்டுக்காசு கிடைக்குமா  என்று யோசித்து பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

எங்களுக்கு முன்னாடியே தெரியும் இது சம் மின் சொந்தக்கருத்தென்று ....
உங்களையெல்லாம் ..தூசனத்தால் ஏசினால் அது தூசனத்திற்கு வெட்கம் 

விக்கினேசுவரன் அவர்களை விடுங்கள் அவரை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் "தூசனத்தால் ஏசினால் அது தூசனத்திற்கு வெட்கம்" என்ற இந்த வார்த்தையைக் கேட்டபின் நீங்களெல்லாம் உயிரோடிருப்பது வெட்டகம் அல்ல, கேவலத்திலும் கேவலம்.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அதற்க்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவ்வாறான கருத்தை வெளியிடவேயில்லை என அடியோடு மறுத்தார் சுமந்திரன்

"உருட்டும் பிரட்டும் சிரட்டையும் கையும்"😝

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ampanai said:

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பங்கேற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வு கிடைக்காது விடின் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவது பற்றிச் சிந்திக்கவேண்டி வரும் என்ற சம்பந்தனின் கூற்று தமிழ் மக்களுக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும் என நேற்று கிளிநொச்சியில் நடந்த நிகழ்வு ஒன்றில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துத் தொடர்பில் சுமந்திரன் எம்.பியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்க்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவ்வாறான கருத்தை வெளியிடவேயில்லை என அடியோடு மறுத்தார் சுமந்திரன்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

“உள்ளுராட்சி சபைத் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவு கடுமையாக வீழ்ச்சியடைந்திருந்தது. ஆயினும், ஒக்டோபரில் அரசியல் சூழ்ச்சியை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவுத்தளம் வெகுவாக அதிகரித்துள்ளது.

அந்த நேரத்தில் கூட்டமைப்பு செயற்பட்ட விதம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டமைப்புக்கான ஆதரவு என்பது இப்போது அதிகரித்திருக்கின்றது.

தேர்தல் ஒன்று விரைவில் வரவேண்டும் அதில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கட்டாயம் போட்டியிட வேண்டும். அதில் அவர் கட்டுக்காசையும் இழக்கும் நிலைதான் ஏற்படும்.

http://thinakkural.lk/article/31256

ஒரு  பொய்யை  சொல்லிவிட்டு

அதை  மறைக்க  இன்னொரு தர்க்கத்தை  திறந்து  விடுகிறார்

மிகவும்  ஆபத்தான  பேர்வழி

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கட்டுகாசை இழக்கிறது முதலில் இருக்கட்டும் தீர்வு இல்லையேல் அரசியலில் இருந்து விலகல் என்று சொன்ன மானஸ்தனை நாங்க தேடிக்கொண்டு இருக்கிறம் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

"உருட்டும் பிரட்டும் சிரட்டையும் கையும்"😝

ஹாஹாஹா...... இந்தப் பழமொழியை, இப்பதான்  முதன் முதலாக கேள்விப் படுகின்றேன். 🤣
சுமந்திரனுக்கு பொருத்தமான... நல்ல பழமொழி நுணாவிலான். :grin:

அரசுக்கு ஆதரவாக சுமந்திரன் இருக்கிறார்
சொல்லும் கருத்தை கவனித்தால் ஏற்கனவே பிக்ஜ் பண்ணிவிட்டார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, காரணிகன் said:

அரசுக்கு ஆதரவாக சுமந்திரன் இருக்கிறார்
சொல்லும் கருத்தை கவனித்தால் ஏற்கனவே பிக்ஜ் பண்ணிவிட்டார்களோ?

முதலும் அதுதானே நடந்ததாக சனம் நினைக்கினம்.

6 minutes ago, ஏராளன் said:

முதலும் அதுதானே நடந்ததாக சனம் நினைக்கினம்.

இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

அவர் கட்டுகாசை இழக்கிறது முதலில் இருக்கட்டும் தீர்வு இல்லையேல் அரசியலில் இருந்து விலகல் என்று சொன்ன மானஸ்தனை நாங்க தேடிக்கொண்டு இருக்கிறம் .

Ãhnliches Foto  Bildergebnis für  à®à¯à®®à®¨à¯à®¤à®¿à®°à®©à¯  Bildergebnis für  à®à¯à®®à®¨à¯à®¤à®¿à®°à®©à¯

Ãhnliches Foto

Bildergebnis für  à®à¯à®®à®¨à¯à®¤à®¿à®°à®©à¯

"முட்டைக்  கண்ணன், வாயை திறந்தால்... பொய் தான் வரும்."

பெருமாள்.... "பாட்டுக்கு... எசப் பாட்டு, பாடுற மாதிரி..."  நுணாவிலானின் பழமொழியை வாசித்தவுடன்...
இந்தப் பழமொழி,  சுமந்திரனுக்காக....  "ஆட்டோ  மெற்றிக்காக"  வந்து விட்டது.  :grin:

சுமந்திரனை விட மோசமான பேர்வழிகளாக டக்ளசும் ஆனந்தசங்கரியும் இருக்க முடியாது என்பதை சுமந்திரன் அடிக்கடி நிரூபித்து வருகிறார்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.