Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘உறுதிமொழி கிடைத்தால் நான் விலகுவேன்’ - எம்.கே.சிவாஜிலிங்கம்

Featured Replies

2015 ஜனாதிபதி தேர்தலில் இலங்கை முழுவதிலும்,

மைத்திரி - 6,217,162 (51.28%)

மகிந்த - 5,768,090 (47.58%)

மைத்திரி மகிந்தவை விட 449,072 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார்.

  • Replies 61
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விசுகு said:

 

கருத்துக்களை  வைக்கும்போது  எழுந்தமானத்துக்கு 

எம்மை வெளிநாட்டில்  வாழ்வதால்  என்று அடைமொழிக்குள்  நீங்களாகவே எம்மை புகத்தி எழுதாதீர்கள்

அப்படியாயின்  எம்மாலும் உங்களைப்பற்றி  எழுதமுடியும்

இங்கு  நியாயமாக  தமிழ்  மக்களின் நீண்டநாள் பிரச்சினைகளுக்கு  தீர்வை  எவ்வாறு யாரால்  பெற்றுத்தரமுடியும்

இதுவரை  முடிந்திருக்கிறதா? 

முடியாதவரை  என்ன  செய்வது என்று  ஆதங்கத்துடனேயே  கருத்துக்களை  வைக்கின்றோம் 

அவற்றை  உதாசீனப்படுத்தி 

ஏதோ  எமது சுயநலங்களுக்காக சண்டையை  விரும்புகின்றோம்  என்பது எம்மை  மட்டுமல்ல  உங்களை  நீங்களே ஏமாற்றிக்கொள்வது தான்.

கீழே முகநூலில்  ஒருவர்  எழுதியதை  பதிகின்றேன்

இவரது  கருத்துக்கும் எமக்கு  எழுதியது போல்  நீங்கள் பதிலளிக்கமுடியாது

காரணம்  அவர்  அதே  நிலத்திலிருந்:து எழுதுகிறார்.

 

தேர்தலைப் புறணிப்பது பற்றி கதை எடுத்தால் சில பயலுகள் உடனே கேட்கிறாங்கள்,

"2005 இலே பகிஸ்கரித்ததாலே வந்த விளைவு தெரியும்தானே?" என்று.

ஆனால் பகிடி என்னவென்றால், அப்பிடி கேட்கிறவர்கள் எல்லாம், "எப்படா இந்த சண்டை முடியும் என்று காத்திருந்தவர்கள். 2009க்குப் பின்னரான சூழலை, நிம்மதி எனக் கொள்பவர்கள், முத்தையா முரளிதரன் சொன்னதையே தம் மனதுக்குள் தினமும் நினைப்பவர்கள்..."

அந்த அடிப்படையில் பார்த்தால் இவர்களும் முரளி மாதிரி மகிந்த ரெஜிமுக்குத்தான் நன்றி சொல்ல வேணும்!

ஆனால் இவர்கள் என்னடாவெண்டால், "இந்த நாட்டில் ஆர் யுத்தத்தத்தை ஆரம்பித்து வைத்தார்களோ அவர்களை நம்புகிறார்கள்"

இந்த முரண்நகை எனக்கு விளங்குதில்லை!
இந்த விசயத்திலை, சும்மா சொல்லக்கூடாது, முரளியின் வெளிப்படைத் தன்மையைப் பாராட்ட வேணும்!

ஒருவேளை இன்னொரு யுத்தம் வேண்டும் என நினைக்கிறார்களோ?

 

https://www.facebook.com/gnanadas.kasinathar

யாரையும் தனிப்பட்டு விமர்சிக்கவில்லை.

மற்றும்படி இதுவிடயமாக சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாகி விட்டதால் இன்னும் விவாதத்தை நீடிக்க விரும்பவில்லை.

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Justin said:

மேல்தட்டு ஆட்களுக்கு தான் ஆபத்து என்கிறார், வெள்ளைவானில் கொண்டு செல்லப் பட்டோருக்கு காசு செலவழித்து சோறு போட்டார்களாம் என்கிறார்! தலையில்லாத முண்டங்களாக உடல்கள் கிடைத்ததையும், வெறும் ஐம்பதினாயிரம் ரூபாய்க்காகவே மனிதர்கள் கொல்லப் பட்டதையும் அறிந்தவர்களுக்கு விசர் வராதா இதைக் கேட்டால்?

உங்களுக்குப் புரியாது, உங்களுக்கு ஊரில் இப்ப நடப்பதும் தெரியாது 2009௨015 இல் நடந்ததும் தெரியாது. 

என்ன அண்ணை.. தமிழை வாசிச்சு கிரகிப்பதில் ஏதும் சிக்கலோ 
நான் எப்ப அண்ணை வெள்ளை வேன்களில் தூக்கி மூன்று வேளை சோறு போட்டார்கள் என்று சொன்னேன் ...?
நீங்கள் கூறுவது போல கும்பல் கும்பலாக தூக்கி போட்டுத்தள்ளி  அதனை Justify பண்ணும்நிலையில் முன்பிருந்தது போல ஒரு நிலை இப்போது இல்லை என்று தான் சொன்னேன். இனி தூக்கினால் சோறு போடவேண்டிதான் வரும். உந்த அம்பத்தாயிரம் மாதிரி பலகதைகள் உண்டு , ராணுவத்தோட  நாலு நாள் கதைச்சு அவனோட துப்பாக்கியை தூக்கி பார்த்துவிட்டு அந்தத்தைரியத்தில்  நாலுவீடு தள்ளி போன் பன்னி  சந்தைக்கு போன மனுஷனை வெள்ளை வானிலை தூக்கிட்டோம் உடனடியாக ஒரு லட்சம் இந்த வங்கிக்கணக்கிற்கு போட்டுவிடு என்று சொல்லி போனை கட் பண்ணமுன் சந்தைக்கு போன கணவன் வீடு வந்து சேர்ந்த கதையும் நடந்திருக்கு. சத்தியமாக நம்புங்கோ இதுக்கும்  காரணம் கோத்தா தான்...வெள்ளை வானில் தூக்குப்பட்டு காணாமல் போனவர் லண்டனில் அசைலம் அடிச்ச கதையும் உண்டு...சத்தியமாக நம்புங்கோ அதுவும் கோத்தா கைங்கரியம் தான்

 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
On 10/11/2019 at 7:27 PM, Justin said:

தேர்தல் புறக்கணிப்பால், அல்லது அரும்பொட்டில் சிவாஜி அவர்கள் பெறும் தமிழ் வாக்குகளால் கோத்தா ஆட்சிக்கு வந்தால் அது தாயக மக்களுக்கு நாசம் இல்லையென்று நீங்கள் நினைத்தால் நான் உங்களுக்கு மேலதிகமாக  எதுவும் சொல்ல முடியாது!  

ஒரு தரப்பின் மீதான வெறுப்பு ஒரு நாளும் அரசியல் கொள்கையாக முடியாது! 

இங்கே கூட்டமைப்பு மீதும், ரணில் மீதும், கிழக்கில் முஸ்லிம்கள்  மீதும் இருக்கும் வெறுப்பே, வெள்ளைவான் வந்தாலும் பரவாயில்லை, இந்த மூன்று தரப்புகளையும் பழிவாங்குவோம் என்று பலரைப் பேச வைக்கிறது. இது அழிவுப் பாதை என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை!

மிகச்சரியான கணிப்பு. ஆனால் கூட்டமைப்பே கோட்டாவை ஆதரிப்பார்கள் போலுள்ளதே?

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2019 at 3:49 PM, Justin said:

இந்த விவகாரம் எனக்கு உணர்ச்சிபூர்வமான விவாதமாகி மாறி சிலரைத் திட்ட வேண்டிய அளவுக்கு வந்து விட்டது! அக்னி மன்னிக்க வேண்டும்! 

நேற்றே கோசான் விட்டு விடும்படி சொன்ன போது கேட்டிருக்க வேண்டும்! 

கோத்தாவை வரவைக்கும் எந்த நடவடிக்கையும் path to perdition என்பதே இது பற்றிய என் கடைசிப் பதிவு! அனைவரும் தொடர்ந்து உரையாடுங்கள்! 

அதுசரி சஜித் வந்தால் சரத் போன்சேகாதான் பாதுகாப்பு அமைச்சர் என்றும்  பேச்சு அடிபடுகிறதே??

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Eppothum Thamizhan said:

அதுசரி சஜித் வந்தால் சரத் போன்சேகாதான் பாதுகாப்பு அமைச்சர் என்றும்  பேச்சு அடிபடுகிறதே??

சஜித்துக்கு நம்பிக்கையாக செயற்படுவேன்- பொன்சேகா உறுதி

sarath_fonseka--621x414

எவ்வித இன, மத, பிரதேச பேதங்களுமின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன் என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணி நேற்று வாரியபொல நகரில் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை சஜித் பிரேமதாச என்னிடம் ஒப்படைப்பதாக கூறியிருக்கின்றார். நான் அவருடைய நம்பிக்கையைப் பூர்த்தி செய்யும் விதமாக புதிய அரசாங்கத்தில் எனது பொறுப்பை நிறைவேற்றுவேன் எனவும் பொன்சேகா எம்.பி. மேலும் கூறியுள்ளார். 

http://www.dailyceylon.com/190935/

  • தொடங்கியவர்

சஜித்தும் கோத்தாவும் கொழுக்கட்டையும் மோதகமும் மாதிரித்தான் 🙂 

6 hours ago, Eppothum Thamizhan said:

அதுசரி சஜித் வந்தால் சரத் போன்சேகாதான் பாதுகாப்பு அமைச்சர் என்றும்  பேச்சு அடிபடுகிறதே??

2010 இல் சரத்பொன்சேகா சனாதிபதித் தேர்தலில் நிற்கும் போது அவருக்கு அதிகப்படியான வாக்கு வீதம் கிடைத்தது தமிழ் பகுதிகளில் இருந்து தான். மஹிந்தவுக்கு எதிராக எவர் நின்றாலும் அவரை ஆதரிக்க வேண்டும் என்ற அளவுக்கு தமிழ் மக்களிடம் மகிந்த வெறுப்பு இருந்தது. இப்பவும் வடக்கில் அந்த வெறுப்பில் பெரிய மாற்றம் இல்லை.

55 minutes ago, நிழலி said:

இப்பவும் வடக்கில் அந்த வெறுப்பில் பெரிய மாற்றம் இல்லை.

நேரடியாக அறிந்த அனுபவங்களின் அடிப்படையிலான கருத்து என்டு நினைக்கிறன்!

33 minutes ago, Rajesh said:

நேரடியாக அறிந்த அனுபவங்களின் அடிப்படையிலான கருத்து என்டு நினைக்கிறன்!

ஓம்.

வெறுப்பு மட்டுமல்லாமல் அச்சமும் காணப்படுகின்றது வடக்கில்

  • கருத்துக்கள உறவுகள்

 ஒரு முகநூலில் படித்தது!
 

அடே தமிழா.....
உங்களை ஆயுதம் தூக்க சொல்லவில்லை.
ஒரு குண்டை கட்டிக்கொண்டு வெடிக்கச் சொல்லவில்லை...
நீங்கள் கொஞ்சம்மேனும்சிந்தியுங்கள்!!!!
நாங்கள் தமிழர்கள் இது தமிழரின்தேசம் !!
சிங்களவனே சொல்கிறான் அடிக்கடி வடக்கு கிழக்கு மக்களை பார்த்து எச்சரிக்கறான் மீண்டும் இரத்த ஆறு ஓடும் ஏன்று ....புத்தனுக்கே தெரிகிறது , புரிகிறது அது தமிழர்களின் தேசம் ஏன்று ?

தேசம் என்பதைக்கூட விடு நாங்கள் மனிதர்கள்தானே?
பத்து வருடத்திற்கு முன் ஒரு மாபெரும் மனிதப்படுகொலையினை செய்தவனை
புனிதப்படுத்தாதீர்கள்!!
உங்களுக்கு முன் ஒரு சந்ததி செத்ததையும் அவர்கள் செய்த தியாகத்தைகொச்சை படுத்தாதீர்கள்.

இவன் உங்களை தேடி வரும்போது கூட தனது மெய்பாதுகாவலுடன் தானே வருகிறான்.

அந்த தமிழ் மண்ணில் ஆழத்தில் புதையுண்ட புலிப்பயத்தை பலியாக்கதீர்கள் பண்புள்ளவரே!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.