Jump to content

12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் ;புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர்


Recommended Posts

12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர் க.இன்பராசா தெரிவித்தார். 

vlcsnap-1914-08-09-17h28m02s438.png

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பின்போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார். 

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. 

கடந்த ஆட்சியில் 12 போராளிகள் புனர்வாள்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் எதையும் அவர்கள் செய்யவில்லை. சாதாரணமாக அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனை விடுதலை செய்வதாக கூறப்பட்ட போதிலும் அவரைகூட இவர்களால் விடுதலை செய்ய முடியவில்லை. அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளிலேயே வாழ்கின்றனர். 

இந்த நிலையில் மொட்டுக்கு வாக்களியுங்கள் என அவர் தெரிவித்தார். மொட்டுக்கு வாக்களியுங்கள். ஒன்றில் முழுமையாக எம்மை அழிக்கட்டும் அல்லது சிறையில் உள்ள 132ற்கு மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யட்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் விமர்சனங்களை முன் வைத்த அவர், எந்த வாக்குறுதியின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அன்னத்திற்கு தமது ஆதரவினை வழங்கியது எனவும் வினாவெழுப்பினார். 

எம்மைப் பொறுத்தவரையில் இரு அரசியல் தலைவைர்களும் தராசு போன்றவர்கள். யார் வந்தாலும் எமக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/68745

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ampanai said:

ஒன்றில் முழுமையாக எம்மை அழிக்கட்டும் அல்லது சிறையில் உள்ள 132ற்கு மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யட்டும் எனவும் அவர் தெரிவித்தார்

2009 இல் முற்றாகவே தமிழர்களின் பலமாக இருந்த புலிகளை அழித்துவிட்டார்கள்.  இப்போது முன்னாள் புலிகளான கருணா, பிள்ளையான் தொடக்கம், சரணடைந்து அரசியலில் ஈடுபடும் முன்னாள் போராளிகள் எல்லோரும் புலிகளை அழித்த கோத்தாவின் பின்னால் நிற்கின்றனர். 

பத்து வருடங்களின் தமிழர்களின் நிலை இப்படியாகிவிட்டது. இப்போதெல்லாம் புலிக்கொடியைப் பார்த்தாலே உளச்சோர்வு வருகின்றது.🙁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

2009 இல் முற்றாகவே தமிழர்களின் பலமாக இருந்த புலிகளை அழித்துவிட்டார்கள்.  இப்போது முன்னாள் புலிகளான கருணா, பிள்ளையான் தொடக்கம், சரணடைந்து அரசியலில் ஈடுபடும் முன்னாள் போராளிகள் எல்லோரும் புலிகளை அழித்த கோத்தாவின் பின்னால் நிற்கின்றனர். 

பத்து வருடங்களின் தமிழர்களின் நிலை இப்படியாகிவிட்டது. இப்போதெல்லாம் புலிக்கொடியைப் பார்த்தாலே உளச்சோர்வு வருகின்றது.🙁

இது ஒரு உளவியல் போர் யுத்தி 
சிறுபான்மை இனத்தை அடக்கி ஆளும் வர்க்கம் உள்ள 
எல்லா நாடுகளிலும் இது இருக்கிறது.

தமிழர்களுக்கு  தூரோகத்துக்கு எப்போதுமே பஞ்சம் இருந்ததில்லை என்பதால் 
இந்த பகுதி எப்போதும் செழிப்பாக இருக்கிறது. 

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

இந்த நிலையில் மொட்டுக்கு வாக்களியுங்கள் என அவர் தெரிவித்தார். மொட்டுக்கு வாக்களியுங்கள்

இந்த நிலை வர பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதன்மையானதாக தெரிவது தமிழர் அரசியல் தலைமைகள். இன்றும் கூட அந்த துர்ப்பாக்கிய நிலை தொடர்கின்றது.  

 

2 hours ago, ampanai said:

ஒன்றில் முழுமையாக எம்மை அழிக்கட்டும் அல்லது சிறையில் உள்ள 132ற்கு மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யட்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

இந்த வரிகள் என்னை, கையாலாகாத ஒரு சக உறவாக,  வெட்கி வேதனைப்படுத்திய வரிகள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலில் கோத்தாவுக்கும்,சஜீத்திற்கும் வாக்கு கேட்கும் தமிழர்களை பார்த்து " Masochist " என்று ஒருவர் எழுதி இருந்தார்...உண்மையிலேயே அந்த வார்த்தையை இன்டைக்கு தான் கேள்விப் படுறன்...உண்மையில் இது உளவியல் சம்பந்தமான ஒரு நிலைதான் "Masochism" என்றால் தன்னை உடல் ரீதியாகவோ உளரீதியாகவோ வேதனைப்படுத்திய ஒருவரை துன்பங்கள் இழைத்த ஒருவரை தொடர்ந்து விரும்புவது அதாவது போட்டு வெளு வெளுனு வெளுத்தவனை சாவடி அடித்தவனை காதலிப்பது வேதனையில் சுகம் காண்பது தொடர்ந்து துன்பத்திலே வாழவிரும்புவது.🤣
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

2009 இல் முற்றாகவே தமிழர்களின் பலமாக இருந்த புலிகளை அழித்துவிட்டார்கள்.  இப்போது முன்னாள் புலிகளான கருணா, பிள்ளையான் தொடக்கம், சரணடைந்து அரசியலில் ஈடுபடும் முன்னாள் போராளிகள் எல்லோரும் புலிகளை அழித்த கோத்தாவின் பின்னால் நிற்கின்றனர். 

பத்து வருடங்களின் தமிழர்களின் நிலை இப்படியாகிவிட்டது. இப்போதெல்லாம் புலிக்கொடியைப் பார்த்தாலே உளச்சோர்வு வருகின்றது.🙁

உங்க‌ளின் வலியும் வேத‌னையும் புரிகிற‌து கிருப‌ன் அண்ணா 😓/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் பேசுவதிலும் பேசாமல் இருப்பது மேல். 12 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வு அளித்து விடுவித்தவர்களே.. 25 ஆயிரம் போராளிகளையும் சுமார் 60 ஆயிரம் பொதுமக்களையும் கொன்று குவித்தனர். 

இதே கோத்தா.. தமிழ் ஆண்கள்.. இந்து சமுத்திரத்துக்கும்.. தமிழ் பெண் தனது இராணுவத்திற்கும் என்று கொக்கரித்ததை யாரும் இலகுவில் மறக்கக் கூடாது.

எதுஎப்படியோ.. தம் இருப்புக்காக இயக்குபவனுக்கு இசைவாக நடக்க வேண்டியது இவர்களின் இன்றைய காலத் தேவையாகி விட்டது. இதனை மக்கள் செவிமடுக்கனுன்னு அவசியமில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, nedukkalapoovan said:

இப்படிப் பேசுவதிலும் பேசாமல் இருப்பது மேல். 12 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வு அளித்து விடுவித்தவர்களே.. 25 ஆயிரம் போராளிகளையும் சுமார் 60 ஆயிரம் பொதுமக்களையும் கொன்று குவித்தனர். 

இதே கோத்தா.. தமிழ் ஆண்கள்.. இந்து சமுத்திரத்துக்கும்.. தமிழ் பெண் தனது இராணுவத்திற்கும் என்று கொக்கரித்ததை யாரும் இலகுவில் மறக்கக் கூடாது.

எதுஎப்படியோ.. தம் இருப்புக்காக இயக்குபவனுக்கு இசைவாக நடக்க வேண்டியது இவர்களின் இன்றைய காலத் தேவையாகி விட்டது. இதனை மக்கள் செவிமடுக்கனுன்னு அவசியமில்லை. 

வ‌ண‌க்க‌ம் ச‌கோத‌ரா , த‌மிழீழ‌த்தில் வ‌சிக்கும் இளைஞ‌ர்க‌ளின் ம‌ன‌ நிலை வேறு , பெரிய‌வ‌ர்க‌ளின் ம‌ன‌ நிலை வேறு மாதிரி அண்ணா ,

வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் எம் போராட்ட‌த்தை இப்போது உள்ள‌ சூழ் நிலையில் விரும்ப‌ வில்லை , இளைஞ‌ர்க‌ள் அவ‌ங்க‌ளின் ம‌ன‌ நிலை வேறு மாதிரி த‌லைவ‌ரை போராளிக‌ளை நெஞ்சில் சும‌ந்து கொண்டு வாழும் இளைஞ‌ர்க‌ள் அதிக‌ம் , 

ஒரு உண்மையை சொல்லுறேன் ம‌ன‌ வேத‌னையுட‌ன் , எங்க‌ட‌ ஊரில் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் நூற்றுக்கு நூறு புலி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் தான், எங்க‌ட‌ ஊரை புலியின் கோட்டை என்று தான் சொல்லுவோம் , அந்த‌ ஊரில் இப்போது ட‌க்கிள‌ஸ்சுக்கு ஆத‌ர‌வு கூடிட்டு போகுது , இது எங்கை போய் முடியுமோ தெரியாது /

எம‌க்காக‌ போராடுகிறோம் என்று சொன்ன‌ ஆட்க‌ள் ப‌ல‌ர் சிங்க‌ள‌வ‌னின் எலும்பு துண்டை ந‌க்கி பிழைக்கின‌ம் அண்ணா ,  
இந்த‌ 10வ‌ருட‌ம் எம்ம‌வ‌ர்க‌ள் புல‌ம் பெய‌ர் நாட்டிலும் ச‌ரி த‌மிழீழ‌த்திலும் ச‌ரி பெரிசா ஒன்றையும் சாதிச்சு கிழிக்க‌ல‌ , சும்மா கால‌த்தை ஓட்டின‌து தான் மிச்ச‌ம் , இன்னும் 10 வ‌ருட‌ம் க‌ழித்து பார்த்த‌ நில‌மை இத‌ விட‌ மோச‌மாய் இருக்கும் அண்ணா ,

எவ‌ள‌வு உயிர் தியாக‌ம் , எப்ப‌டி எல்லாம் எம் போராட்ட‌த்துக்கு க‌டின‌மாய் பாடு ப‌ட்டோம் , எல்லாம் க‌ண் இமைக்கும் நொடியில் அழிந்து போய் விட்ட‌து , 

யாழில் ம‌ற்றும் முக‌ நூலில் கிறுக்கி நாம் ஒன்றையும் சாதிக்க‌ முடியாது அண்ணா , 
நாடு போர‌ போக்கை பார்த்த‌ மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் வீனாய் போயிம்மோ என்ற‌ ம‌ன‌ வேத‌னை தான் வ‌ருது 😐/

Link to comment
Share on other sites

4 hours ago, nedukkalapoovan said:

இப்படிப் பேசுவதிலும் பேசாமல் இருப்பது மேல். 12 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வு அளித்து விடுவித்தவர்களே.. 25 ஆயிரம் போராளிகளையும் சுமார் 60 ஆயிரம் பொதுமக்களையும் கொன்று குவித்தனர். 

வெளியில் இவ்வாறு பேச வேண்டிய தேவை இருக்கலாம். 

ஆனால், வாக்கை வேறு யாருக்கும் கூட போடலாம், அதுதான் சனநாயகத்தில் உள்ள ஒரு அதிசயம். 

Link to comment
Share on other sites

இவர்கள் ஒன்று திரண்டு ஒரு கட்சி ஆரம்பித்து இருந்தார்கள் அல்லவா? ஊடகவியலாளர் எனச் சொல்லப்படும் வித்தியாதரனும் அதில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் தானே? கடந்த் நாடாளுமன்ற தேர்தலில் பங்கு பற்றினார்கள் என நினைக்கின்றேன். யாருக்காவது நினைவு இருக்கா?

யாழிலும் ஒருவர் அக் கட்சிக்கு பெரும் ஆதரவு கொடுத்து எழுதிக் கொண்டு இருந்தார். அவர் இப்ப கோத்தாவுக்கு ஆதரவு கொடுப்பார் என நினைக்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

7 hours ago, நிழலி said:

இவர்கள் ஒன்று திரண்டு ஒரு கட்சி ஆரம்பித்து இருந்தார்கள் அல்லவா? ஊடகவியலாளர் எனச் சொல்லப்படும் வித்தியாதரனும் அதில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் தானே? கடந்த் நாடாளுமன்ற தேர்தலில் பங்கு பற்றினார்கள் என நினைக்கின்றேன். யாருக்காவது நினைவு இருக்கா?

யாழிலும் ஒருவர் அக் கட்சிக்கு பெரும் ஆதரவு கொடுத்து எழுதிக் கொண்டு இருந்தார். அவர் இப்ப கோத்தாவுக்கு ஆதரவு கொடுப்பார் என நினைக்கின்றேன்.

மேலுள்ள செய்தி “புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி” பற்றிய செய்தி.

நீங்கள் கூறுவது “ஜனநாயக போராளிகள் கட்சி” பற்றி என நினைக்கிறேன். அவர்கள் சஜித்துக்கு ஆதரவு.

ஜன­நா­யக போரா­ளிகள் கட்சி சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு

08-11-2019

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜன­நா­யக போரா­ளிகள் கட்சி சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ர­வ­ளிக்க தீர்­மா­னித்­துள்­ள­தாக அக் கட்­சியின் ஊடக பேச்­சாளர் க.துளசி தெரி­வித்­துள்ளார்.

ஜன­நா­யக போரா­ளிகள் கட்­சியின் தலை­மைச்­செ­ய­ல­கத்­தினால் நேற்று  ஊடக பேச்­சாளர் க. துள­சியின் பெய­ரிட்டு வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்­கையின் நிறை­வேற்று அதி­கா­ரம்­கொண்ட ஜனா­தி­ப­தி­யினை தெரி­வு­செய்யும் தேர்தல் ஒன்­றினை நாம் விரைவில் எதிர்­கொள்ள இருக்­கிறோம்.

எமது உற­வு­களே தெற்­கா­சிய பிராந்­திய நலன் சார்ந்து ஒரு விடு­த­லைப்­போ­ராட்டம் பயங்­க­ர­வாத முலாம் பூசி இலங்கை தீவின் குடி­க­ளான தமி­ழி­னத்தின் மீது மாபெரும் அழி­வு­களை ஏற்ப்­ப­டுத்தி முடித்து வைக்­கப்­பட்­டுள்­ளது.

யுத்­தத்தின் பின்­ன­ரான கடந்த பத்து ஆண்­டு­களில் தற்­போது ஏற்­பட்­டி­ருக்கும் அர­சியல் அனு­கூ­லத்­தினை தமி­ழினம் பயன்­ப­டுத்­தி­கொள்ள வேண்­டிய ஒரு அவ­சி­ய­மான தேர்­த­லா­கவே இதனை நாம் கரு­து­கிறோம்.

தமி­ழர்­க­ளது வாக்­கு­களே இது வரையில் ஜனா­தி­ப­தியை தீர்­மா­னிக்கும் ஆதிக்­க­சக்­தி­யாக இருந்து வந்­துள்­ளது. அது வாக்­க­ளிப்பின் ஊடா­கவும் வாக்­க­ளிப்பை தவிர்ப்­பதன் ஊடா­கவும் இடம்­பெற்­றுள்­ளது.

அவ்­வ­கையில் பல வேட்­பா­ளர்கள் இத்­தேர்தல் களத்­திற்கு வந்­தி­ருந்­தாலும் இரு வேட்­பா­ளர்­க­ளுக்­கி­டை­யி­லேயே போட்­டிகள் உச்­சம்­பெ­று­கி­றது.  அவ்­வ­கையில் எமது வாக்­கு­ப­லத்­தினை சரி­யான முறையில் உச்ச அளவில் பிர­யோ­கிப்­பதன் ஊடா­கவே எமது எதிர்­கால நலன்கள், அதி­கா­ரப்­பங்­கீடு, அர­சியல் கைதி­க­ளது விடு­தலை மற்றும் கடந்த காலங்­களில் ஏற்­பட்­டி­ருக்கும் இயல்பு நிலைமை என்­ப­ன­வற்றை தற்­காத்­து­கொள்ளும் வகையில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

சர்­வ­தேச மற்றும் பிராந்­திய அர­சு­க­ளுடன் இசைந்து செல்­ல­தக்க  சட்­டத்தின் ஆட்­சி­யினை மதித்து. நிலை­நி­றுத்­தக்­கூ­டிய,

குறிப்­பாக குடும்ப ஆட்சி முறைக்கு முற்­று­புள்ளி வைத்து செய­லாற்­ற­கூ­டி­ய­வ­ராக நாங்கள்  சஜித்­ பி­ரே­ம­தா­சாவை கரு­து­கிறோம். அவ்­வ­கையில் ஜன­நா­யக போரா­ளி­கள்­கட்­சி­யினர் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில்  சஜித்பிரேமதாசாவை ஆதரிக்கின்றோம்.  

அன்பான எமது மக்களே தேர்தல் தினத்திலன்று  தாயகபிரதேசத்தில் வாழ்கின்ற தமிழர்கள் அதி உச்சமாக வாக்கு பதிவொன்றினை மேற்கொண்டு எங்களுக்கான ஜனாதிபதியை நாங்களே தீர்மானிப்போம்.

https://www.virakesari.lk/article/68502

Link to comment
Share on other sites

16 hours ago, Maruthankerny said:

இது ஒரு உளவியல் போர் யுத்தி 
சிறுபான்மை இனத்தை அடக்கி ஆளும் வர்க்கம் உள்ள 
எல்லா நாடுகளிலும் இது இருக்கிறது.

தமிழர்களுக்கு  தூரோகத்துக்கு எப்போதுமே பஞ்சம் இருந்ததில்லை என்பதால் 
இந்த பகுதி எப்போதும் செழிப்பாக இருக்கிறது. 

கடந்தாலும் உண்மையான நிலைமை!

Link to comment
Share on other sites

13 hours ago, ரதி said:

இந்த தேர்தலில் கோத்தாவுக்கும்,சஜீத்திற்கும் வாக்கு கேட்கும் தமிழர்களை பார்த்து " Masochist " என்று ஒருவர் எழுதி இருந்தார்...உண்மையிலேயே அந்த வார்த்தையை இன்டைக்கு தான் கேள்விப் படுறன்...உண்மையில் இது உளவியல் சம்பந்தமான ஒரு நிலைதான் "Masochism" என்றால் தன்னை உடல் ரீதியாகவோ உளரீதியாகவோ வேதனைப்படுத்திய ஒருவரை துன்பங்கள் இழைத்த ஒருவரை தொடர்ந்து விரும்புவது அதாவது போட்டு வெளு வெளுனு வெளுத்தவனை சாவடி அடித்தவனை காதலிப்பது வேதனையில் சுகம் காண்பது தொடர்ந்து துன்பத்திலே வாழவிரும்புவது.🤣

கோத்தபாயா பூச்சாண்டி காட்டி சஜித்துக்கு வாக்குப் பிச்சை எடுபவர்கள் மனோநிலையும் "Masochism" மனோநிலைதான்!

Link to comment
Share on other sites

கோத்தா ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வெள்ளைவான் கலாச்சாரம், இனவழிப்பு என கூறும் எதிர்த்தரப்பு. சஜித் ஆட்சிக்கு வந்தால் அதி உச்ச அரசியல் பகிர்வு என கூறும் கூட்டமைப்பு. 

உண்மை, இரண்டிற்கும் நடுவே தான் இருக்கும்.  

கோத்தா வந்தால் ,மீண்டும் வெள்ளை வான் கலாச்சாரம் தலை தூக்காது. சஜித் வந்தால் அதி உச்ச அதிகார பகிவும் இல்லை. ஆனால், யார் வந்தாலும் இனவழிப்பு தொடரும். 

சிங்களவர்களுக்கு வாக்களித்தால் தமிழர்கள் ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொண்டார்கள் எனவும் சர்வதேசத்திற்கு சிங்களம் கூறும். சிவாஜிக்கு வாக்களித்தால் அது சிங்களத்தை நிராகரிப்பதாகவும் பார்க்கலாம். 

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. 

Link to comment
Share on other sites

6 hours ago, Lara said:

மேலுள்ள செய்தி “புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி” பற்றிய செய்தி.

நீங்கள் கூறுவது “ஜனநாயக போராளிகள் கட்சி” பற்றி என நினைக்கிறேன். அவர்கள் சஜித்துக்கு ஆதரவு.

ஜன­நா­யக போரா­ளிகள் கட்சி சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு

08-11-2019

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜன­நா­யக போரா­ளிகள் கட்சி சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ர­வ­ளிக்க தீர்­மா­னித்­துள்­ள­தாக அக் கட்­சியின் ஊடக பேச்­சாளர் க.துளசி தெரி­வித்­துள்ளார்.

ஜன­நா­யக போரா­ளிகள் கட்­சியின் தலை­மைச்­செ­ய­ல­கத்­தினால் நேற்று  ஊடக பேச்­சாளர் க. துள­சியின் பெய­ரிட்டு வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்­கையின் நிறை­வேற்று அதி­கா­ரம்­கொண்ட ஜனா­தி­ப­தி­யினை தெரி­வு­செய்யும் தேர்தல் ஒன்­றினை நாம் விரைவில் எதிர்­கொள்ள இருக்­கிறோம்.

எமது உற­வு­களே தெற்­கா­சிய பிராந்­திய நலன் சார்ந்து ஒரு விடு­த­லைப்­போ­ராட்டம் பயங்­க­ர­வாத முலாம் பூசி இலங்கை தீவின் குடி­க­ளான தமி­ழி­னத்தின் மீது மாபெரும் அழி­வு­களை ஏற்ப்­ப­டுத்தி முடித்து வைக்­கப்­பட்­டுள்­ளது.

யுத்­தத்தின் பின்­ன­ரான கடந்த பத்து ஆண்­டு­களில் தற்­போது ஏற்­பட்­டி­ருக்கும் அர­சியல் அனு­கூ­லத்­தினை தமி­ழினம் பயன்­ப­டுத்­தி­கொள்ள வேண்­டிய ஒரு அவ­சி­ய­மான தேர்­த­லா­கவே இதனை நாம் கரு­து­கிறோம்.

தமி­ழர்­க­ளது வாக்­கு­களே இது வரையில் ஜனா­தி­ப­தியை தீர்­மா­னிக்கும் ஆதிக்­க­சக்­தி­யாக இருந்து வந்­துள்­ளது. அது வாக்­க­ளிப்பின் ஊடா­கவும் வாக்­க­ளிப்பை தவிர்ப்­பதன் ஊடா­கவும் இடம்­பெற்­றுள்­ளது.

அவ்­வ­கையில் பல வேட்­பா­ளர்கள் இத்­தேர்தல் களத்­திற்கு வந்­தி­ருந்­தாலும் இரு வேட்­பா­ளர்­க­ளுக்­கி­டை­யி­லேயே போட்­டிகள் உச்­சம்­பெ­று­கி­றது.  அவ்­வ­கையில் எமது வாக்­கு­ப­லத்­தினை சரி­யான முறையில் உச்ச அளவில் பிர­யோ­கிப்­பதன் ஊடா­கவே எமது எதிர்­கால நலன்கள், அதி­கா­ரப்­பங்­கீடு, அர­சியல் கைதி­க­ளது விடு­தலை மற்றும் கடந்த காலங்­களில் ஏற்­பட்­டி­ருக்கும் இயல்பு நிலைமை என்­ப­ன­வற்றை தற்­காத்­து­கொள்ளும் வகையில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

சர்­வ­தேச மற்றும் பிராந்­திய அர­சு­க­ளுடன் இசைந்து செல்­ல­தக்க  சட்­டத்தின் ஆட்­சி­யினை மதித்து. நிலை­நி­றுத்­தக்­கூ­டிய,

குறிப்­பாக குடும்ப ஆட்சி முறைக்கு முற்­று­புள்ளி வைத்து செய­லாற்­ற­கூ­டி­ய­வ­ராக நாங்கள்  சஜித்­ பி­ரே­ம­தா­சாவை கரு­து­கிறோம். அவ்­வ­கையில் ஜன­நா­யக போரா­ளி­கள்­கட்­சி­யினர் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில்  சஜித்பிரேமதாசாவை ஆதரிக்கின்றோம்.  

அன்பான எமது மக்களே தேர்தல் தினத்திலன்று  தாயகபிரதேசத்தில் வாழ்கின்ற தமிழர்கள் அதி உச்சமாக வாக்கு பதிவொன்றினை மேற்கொண்டு எங்களுக்கான ஜனாதிபதியை நாங்களே தீர்மானிப்போம்.

https://www.virakesari.lk/article/68502

முன்னால் போராளிகளுக்கிடையில் கூட இப்படி இரு வேறு கட்சிகளா? அவர்களிடையேயே ஒற்றுமை இல்லையெனில் வேறு எவரிடம் அதை எதிர்பார்க்க முடியும்? கிருபன் சொன்னதுதான் நினைவுக்கு வருகின்றது.

Link to comment
Share on other sites

5 hours ago, ampanai said:

 

சிங்களவர்களுக்கு வாக்களித்தால் தமிழர்கள் ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொண்டார்கள் எனவும் சர்வதேசத்திற்கு சிங்களம் கூறும். சிவாஜிக்கு வாக்களித்தால் அது சிங்களத்தை நிராகரிப்பதாகவும் பார்க்கலாம். 

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. 

இலங்கை தேர்தலில் ஒருவர் போட்டியிடும் போதே அவர் நடைமுறையில் இருக்கும் இலங்கை அரசின் அரசியலமைப்பையும், ஒற்றையாட்சியையும், சட்டங்களையும் ஏற்றுக் கொண்டவராகவே ஆகின்றார். அதனால் தான் அவர் இலங்கை பிரஜையாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் அங்கு காணப்படுகின்றது. அப்படி போட்டியிடும் எவரை ஆதரித்தாலும் அதை சர்வதேசம் வேறு கண் கொண்டு பார்க்கப் போவதில்லை. சர்வதேசம் அதை தானாகவே விளங்கிக் கொள்ளும். அதை சிங்களம் சொன்னால் தான் சர்வதேசம் நம்பும் எனும் வாய்ப்பும் இல்லை.

இலங்கை தேர்தலில் ஒருவர் போட்டியிடும் போதே அவர் நடைமுறையில் இருக்கும் இலங்கை அரசின் அரசியலமைப்பையும், ஒற்றையாட்சியையும், சட்டங்களையும் ஏற்றுக் கொண்டவராகவே ஆகின்றார். அதனால் தான் அவர் இலங்கை பிரஜையாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் அங்கு காணப்படுகின்றது. அப்படி போட்டியிடும் எவரை ஆதரித்தாலும் அதை சர்வதேசம் வேறு கண் கொண்டு பார்க்கப் போவதில்லை. சர்வதேசம் அதை தானாகவே விளங்கிக் கொள்ளும். அதை சிங்களம் சொன்னால் தான் சர்வதேசம் நம்பும் எனும் வாய்ப்பும் இல்லை.

மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பாக அமையும் என்றால் அந்த மகேசனும் பல தடவைகள் தவறிழைத்தவனாகவே ஆகின்றான். ஏனெனில் மக்களின் தீர்ப்பால் உலகில் பல சர்வாதிகாரிகளும், அழிவை ஏற்படுத்துகின்றவர்களும் உருவானதாகவே வரலாறு சொல்கின்றது.

Link to comment
Share on other sites

1 hour ago, நிழலி said:

இலங்கை தேர்தலில் ஒருவர் போட்டியிடும் போதே அவர் நடைமுறையில் இருக்கும் இலங்கை அரசின் அரசியலமைப்பையும், ஒற்றையாட்சியையும், சட்டங்களையும் ஏற்றுக் கொண்டவராகவே ஆகின்றார். அதனால் தான் அவர் இலங்கை பிரஜையாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் அங்கு காணப்படுகின்றது. அப்படி போட்டியிடும் எவரை ஆதரித்தாலும் அதை சர்வதேசம் வேறு கண் கொண்டு பார்க்கப் போவதில்லை. சர்வதேசம் அதை தானாகவே விளங்கிக் கொள்ளும். அதை சிங்களம் சொன்னால் தான் சர்வதேசம் நம்பும் எனும் வாய்ப்பும் இல்லை.

இலங்கை தேர்தலில் ஒருவர் போட்டியிடும் போதே அவர் நடைமுறையில் இருக்கும் இலங்கை அரசின் அரசியலமைப்பையும், ஒற்றையாட்சியையும், சட்டங்களையும் ஏற்றுக் கொண்டவராகவே ஆகின்றார். அதனால் தான் அவர் இலங்கை பிரஜையாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் அங்கு காணப்படுகின்றது. அப்படி போட்டியிடும் எவரை ஆதரித்தாலும் அதை சர்வதேசம் வேறு கண் கொண்டு பார்க்கப் போவதில்லை. சர்வதேசம் அதை தானாகவே விளங்கிக் கொள்ளும். அதை சிங்களம் சொன்னால் தான் சர்வதேசம் நம்பும் எனும் வாய்ப்பும் இல்லை.

மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பாக அமையும் என்றால் அந்த மகேசனும் பல தடவைகள் தவறிழைத்தவனாகவே ஆகின்றான். ஏனெனில் மக்களின் தீர்ப்பால் உலகில் பல சர்வாதிகாரிகளும், அழிவை ஏற்படுத்துகின்றவர்களும் உருவானதாகவே வரலாறு சொல்கின்றது.

Let us agree to disagree 🙂 குறிப்பு : கனடாவில் சுய நிர்ணய உரிமை கொண்ட மாநிலம், நாட்டின் பொது தேர்தலில் பிரிவினை கேட்டு போட்டியிடுகின்றது.

Link to comment
Share on other sites

24 minutes ago, ampanai said:

Let us agree to disagree 🙂 குறிப்பு : கனடாவில் சுய நிர்ணய உரிமை கொண்ட மாநிலம், நாட்டின் பொது தேர்தலில் பிரிவினை கேட்டு போட்டியிடுகின்றது.

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? கனடா அரசியலமைப்பில் பிரிவினை கோருவது தவறல்ல என இருக்கும் போது அப்படி தேர்தலில் பிரிவினைக்காக போட்டியிட முடியும். ஆனால் இலங்கை / இந்திய அரசியலமைப்பில் அவ்வாறு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதரவு கொடுப்பதென்பதும் வாக்களிப்பதென்பதும் அவரவர் உரிமை  கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு எனும் போது இவர்களும் ஆவர்களுக்கு கொடுக்கத்தானா வேண்டும் 

யார் வென்றாலும் நமக்கு இருபக்கமும் அடிதான் அந்த அடி வேண்டினவனுக்கும் அதில் இருந்து விடுபட்டவனுக்குமே அதன் வலி புரியும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் செயலாளளர் வெல்லக் கூடாதென்பதே நான் கதைத்த பெரும்பாலான சனம் சொல்வது, அதற்காகவே அன்னத்திற்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

முன்னாள் செயலாளளர் வெல்லக் கூடாதென்பதே நான் கதைத்த பெரும்பாலான சனம் சொல்வது, அதற்காகவே அன்னத்திற்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளார்கள்.

இவர்கள் தமிழர்கள்தானே. பயம் இருக்கத்தான் செய்யும். 

ஆனால் மத்தியதர வர்க்க சிங்களவர்கள் கோத்தபாயாவுக்கு ஆதரிக்கும் நிலை உள்ளதால் கோத்தபாயாவின் வெற்றியை தடுக்கமுடியாது என்றுதான் நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 07:19 PM   கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கென சகல வசதிகளும் கொண்ட புதிய கட்டடத் தொகுதி இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திருகோணமலையில் திறந்துவைக்கப்பட்டு, அரச உத்தியோகத்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.  இந்த கட்டடம் செந்தில் தொண்டமானின் 241 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லை எனவும், தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடியதொரு கட்டடத்தொகுதியை கட்டமைக்கும் பணிகள் பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால்  அக்கட்டடத்தை நிர்மாணித்துத் தருமாறு  ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர். அக்கோரிக்கையின் பிரகாரம், ஆளுநர் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/182051
    • 26 APR, 2024 | 05:13 PM     சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவாக அரசாங்க தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை சிதைவடைந்திருப்பது குறித்து தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது.  இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமாக ஆட்சி முறைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியடையவும் மேலும் அநீதிகளுக்கும்  வழிவகுத்திருக்கிறது.  உத்தியோகபூர்வமான பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பிலான கேள்விகள் தொடரவே செய்கின்றன. பொறுப்பற்ற முறையில் தங்களது கடமையை செய்யத் தவறியவர்களில் சிலர் அதற்கான விளைவுகளைச் சந்தித்தபோதிலும், மூடிமறைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உணர்வு மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது. தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவருகின்ற கதைகள் உண்மையைக் கண்டறிவதற்கு புதிய உறுதிப்பாட்டுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகின்றன.  அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சான்றுகளைச் சேகரிக்கும் அதன் பிரிவை தொடர்ந்து செயற்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாக அல்லது தியாகிகளாக திருநிலைப்படுத்துவதற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை மேற்கொள்கின்ற முயற்சியின் நோக்கம் படுகொலைகள் பற்றிய நினைவை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதேயாகும். இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது இலங்கையின் வரலாற்றை கறைபடுத்திய வன்செயல் மற்றும் அநீதியின் பரந்த பின்புலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 1989ஆம் ஆண்டில் உச்சநிலைக்குச் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடக்கம் 2009 மே மாதம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப்போர் வரை மோதல்களினதும் வன்முறைகளினதும் காயங்கள் ஆழமானவையாக இருக்கின்றன. நல்லிணக்கத்துக்கான எமது தேடலில் எமது கடந்த காலத்தின் வேதனைமிகு உண்மைகளுக்கு முகங்கொடுத்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும்  குணப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், நீதிக்கான தேடுதல் பக்கச்சார்பான நலன்களையும் தேர்தல் ஆணைகளையும் கடந்தவையாக இருக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் பொறுப்புக்கூறல் மற்றும்  நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளுக்கு புதுச்சக்தியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவமும் எதிர்கால அரசாங்கத்தின் தலைமைத்துவமும் சுயநலன்களின் நெருக்குதல்களில் இருந்து விடுபட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான தேடலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/182046
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.