Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’சஜித்துக்கு ரணில் இடமளிக்க வேண்டும்’ - இரா.சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

’சஜித்துக்கு ரணில் இடமளிக்க வேண்டும்’ - இரா.சம்பந்தன்

பொன்ஆனந்தம்

“சஜித் பிரமேதஸ என்பவர் நாட்டில் தெரிவான இளம் தலைவர். அவர் மக்களின் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஒருவர். எனவே முன்னாள் பிரமதர் ரணில் விக்கிரமசிங்க, சஜித்துக்கு வழிவிட்டு, அவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்கு இடமளிக்க வேண்டும் என்றுக் கேட்டுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரமான இரா.சம்பந்தன், அதேவே, ஜனநாயக மரபாகும் என்றும் வலியுறுத்தினார்.   

எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, தற்போதைய அரசாங்கத்தின் நிலைவரம் குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர்,  

நாட்டில் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்கள்  தொடர்பாக, தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு தனது முடிவை,  ஜனநாயக ரீதியாக எதிர்காலத்தில் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

“நாம் யாரையும் ஆளமாக ஆதரிக்கவில்லை. தேர்தலில் நின்ற இரு பகுதியினருடனும் தொடர்புகளை வைத்திருந்தோம். எமது மக்களின் நிலைமைக் குறித்து பேசினோம். எமது மக்களின் நீண்டகால கோரிக்கைத் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்ட நிலைப்பாடு குறித்து எமது மக்களிடம் நாம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க மக்கள் இம்முறை ஒருங்கிணைந்து அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

“எமது எதிர்கால நிலைப்பாடு குறித்து, ஜனநாயக ரீதியான முடிவுகளை நாம் எடுக்கவுள்ளோம். எமது மக்களைப் பொறுத்தளவில், நடந்து முடிந்தத் தேர்தலில் ஒற்றுமையாக வாக்களித்துள்ளனர். அவர்களிடத்தில் ஒற்றுமை மேம்பட்டதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

“எதிர்காலத்திலும் மக்கள் ஓரணியாக நின்றுச் செயற்படவேண்டும். அதன்மூலம் தமது நிலைப்பாட்டை உறுதி செய்யவேண்டும். மக்கள் ஒன்றுபட்டு தக்களது உரிமைசார்ந்த கோரிக்கை தொடர்பாக ஓரணியாக நிற்கின்றார்கள் என்பதை, சர்வதேசம் அறிவதுடன், அவர்கள் ஜனநாயக முடிவுகளுக்கான ஆதரவையும் வழங்க முன்வருவார்கள்” எனத் தெரிவித்தார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/சஜததகக-ரணல-இடமளகக-வணடம/175-241344

  • கருத்துக்கள உறவுகள்

'தன் மக்களின் துயர் துடைக்க வழியில்லை மூஞ்சூறு சயித்தையும் கட்டிக்கொண்டதாம்...'  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

’சஜித்துக்கு ரணில் இடமளிக்க வேண்டும்’ - இரா.சம்பந்தன்

பொன்ஆனந்தம்

“சஜித் பிரமேதஸ என்பவர் நாட்டில் தெரிவான இளம் தலைவர். அவர் மக்களின் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஒருவர். எனவே முன்னாள் பிரமதர் ரணில் விக்கிரமசிங்க, சஜித்துக்கு வழிவிட்டு, அவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்கு இடமளிக்க வேண்டும் என்றுக் கேட்டுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரமான இரா.சம்பந்தன், அதேவே, ஜனநாயக மரபாகும் என்றும் வலியுறுத்தினார்.   

எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, தற்போதைய அரசாங்கத்தின் நிலைவரம் குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர்,  

நாட்டில் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்கள்  தொடர்பாக, தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு தனது முடிவை,  ஜனநாயக ரீதியாக எதிர்காலத்தில் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாம் யாரையும் ஆளமாக ஆதரிக்கவில்லை. தேர்தலில் நின்ற இரு பகுதியினருடனும் தொடர்புகளை வைத்திருந்தோம். எமது மக்களின் நிலைமைக் குறித்து பேசினோம். எமது மக்களின் நீண்டகால கோரிக்கைத் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்ட நிலைப்பாடு குறித்து எமது மக்களிடம் நாம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க மக்கள் இம்முறை ஒருங்கிணைந்து அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

“எமது எதிர்கால நிலைப்பாடு குறித்து, ஜனநாயக ரீதியான முடிவுகளை நாம் எடுக்கவுள்ளோம். எமது மக்களைப் பொறுத்தளவில், நடந்து முடிந்தத் தேர்தலில் ஒற்றுமையாக வாக்களித்துள்ளனர். அவர்களிடத்தில் ஒற்றுமை மேம்பட்டதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

“எதிர்காலத்திலும் மக்கள் ஓரணியாக நின்றுச் செயற்படவேண்டும். அதன்மூலம் தமது நிலைப்பாட்டை உறுதி செய்யவேண்டும். மக்கள் ஒன்றுபட்டு தக்களது உரிமைசார்ந்த கோரிக்கை தொடர்பாக ஓரணியாக நிற்கின்றார்கள் என்பதை, சர்வதேசம் அறிவதுடன், அவர்கள் ஜனநாயக முடிவுகளுக்கான ஆதரவையும் வழங்க முன்வருவார்கள்” எனத் தெரிவித்தார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/சஜததகக-ரணல-இடமளகக-வணடம/175-241344

மிச்சத்தையும் சொல்லுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா கூட்டமைப்புக்கும் அடுத்த தலைமை வர நீங்களும் வழிவிடோணும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, ஏராளன் said:

ஐயா கூட்டமைப்புக்கும் அடுத்த தலைமை வர நீங்களும் வழிவிடோணும்!

இந்த லெக்சனோடை ஒதுங்கும் எண்டு பார்த்தன்....ஒரு அசுமாத்தத்தையும் காணேல்லை

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனின் சாணக்கியம்.. சாம்பிராணி..ப்பா. கேட்டுப் பிரமியுங்கள் மக்களே. 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப் பாணத்துக்கு வருகின்றபோதெல்லாம் கொழும் பில் இருந்து ஓடிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜ யத்தின் போதெல்லாம் எட்டவே நின்றனர்.

அதுமட்டுமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் ரணில் செய்த அக்கிரமங்கள், சேர்ந்து பயணிப்போம் என்ற சத்தியத்துக்கு இழைத்த பெரும் துரோகமாகும். மைத்திரிபால சிறிசேனவோடு மட்டும் ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரம் முடியவில்லை. அது சஜித் பிரேமதாஸவையும் நம்ப வைத்துக் கழுத்தறுத்தது. 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

1 hour ago, ampanai said:

 

அதுமட்டுமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் ரணில் செய்த அக்கிரமங்கள், சேர்ந்து பயணிப்போம் என்ற சத்தியத்துக்கு இழைத்த பெரும் துரோகமாகும். 

என்னென்ன அக்கிரமங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

என்னென்ன அக்கிரமங்கள்?

அம்பனை அதை பற்றி பூரண விளக்கம் ஒன்றை தரவுள்ளார்.

😀

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா,அவருக்கு வழி விடவேண்டும் இவருக்கு வழி விடவேண்டும் என்று சொல்லும் நீங்கள் தமிழர் தரப்புக்குள் அதை முன்னுதாரணமாக செய்து காட்டலாமே?

1 hour ago, நிழலி said:

என்னென்ன அக்கிரமங்கள்?

யாருக்கும் நன்மை செய்யாதவரோடு கூட்டுச் சேர்ந்த தமிழ்க் கூட்டமைப்பை...

19886.jpg
இந்த நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன இப்போது முன்னாள் ஜனாதிபதி என விழிக்கப்படுகின்றார். மகிந்த ராஜபக்ச ­வோடு போட்டியிட்டு ஜனாதி பதித் தேர்தலில் வெற்றி பெற்றவர் மைத்திரி பால சிறிசேன.
 
ஜனாதிபதித் தேர்தலில் என்னோடு போட்டி யிட இருக்கின்ற அந்த வீரனை அறிய ஆசைப் படுகிறேன் என மகிந்த ராஜபக்ச ­ கர்ச்சித்த போது அவர் அருகிலேயே நின்றவர் மைத்திரி பால சிறிசேன. மிகுந்த துணிச்சலும் நேர்மையும் அவரிடம் இருந்தன. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர் பில் நேரிய முறையில் சிந்தித்தவர்.
எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டியது.
 
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப் பாணத்துக்கு வருகின்றபோதெல்லாம் கொழும் பில் இருந்து ஓடிவரும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் முக்கிய தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜ யத்தின் போதெல்லாம் எட்டவே நின்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எல்லாம் செய்வார் என்பதுபோல் கூட்டமைப்பு நடந்து கொண்டதைப் பார்க்கும்போது எங்கள் இனத் துக்கான மிகப்பெரும் கேடு இதுவென்று உண ரத் தோன்றும். அதுமட்டுமன்றி வடக்கு மாகாண முதல மைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை ஓரங்கட்டுவதில் கூட்டமைப்பும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் செய்த கூட் டுச்சதியை என்னவென்று சொல்வது.
 
ஆம், தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றில்; வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் நான் கதைக்கமாட்டேன். முன்பும் கதைத்ததில்லை. இனியும் கதைக்கப் போவதில்லை என்று பிரதமர் ரணில் கூறு கிறார். இதன்போது செவ்வி கண்ட ஊடகவிய லாளர் அதிர்ந்து போனார். ஒரு பிரதமர் என்ற வகையில் நீங்கள் வட மாகாணத்தின் முதலமைச்சரோடு கதைக் காமல் எங்ஙனம் வடக்கில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என்று அந்த ஊடகவிய லாளர் கேட்க, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கள் இருக்கிறார்கள். அவர்களோடு கதைத்து அபிவிருத்தியை ஏற்படுத்துவேன் என்கிறார் ரணில்.
 
இதன்போதாவது எங்கள் இனத்துக்கு ஈனம் இழைக்கப்படுகிறது என்பதைக்கூட உணரமுடியாதவர்களாக நாம் இருந்தோம்.
 
அதுமட்டுமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் ரணில் செய்த அக் கிரமங்கள், சேர்ந்து பயணிப்போம் என்ற சத் தியத்துக்கு இழைத்த பெரும் துரோகமாகும். மைத்திரிபால சிறிசேனவோடு மட்டும் ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரம் முடியவில்லை. அது சஜித் பிரேமதாஸவையும் நம்ப வைத்துக் கழுத்தறுத்தது. எனவே இத்தகையவரோடு கூட்டு நின்ற நம் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் எப்பேற் பட்டவர்கள் என்பதை இனிமேலாவது நம் தமிழினம் உணர்ந்தாக வேண்டும்.
 

 

நல்லாட்சியின் கொள்கையையும் சீரழித்து ஐக்கிய தேசியக் கட்சியையும் சீரழித்தது என்னையும் சீரழித்தமையால் நான் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை விரட்டியடித்தேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் - 4 DEC2018


ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி விட்டு மஹிந்த ராஜபக்ஷவை  நியமித்தது எதேர்ச்சையான நிகழ்வு அல்ல கடந்த மூன்றரை ஆண்டுகளில் கடந்து வந்த கசப்பான அனுபவங்களின் விளைவாகும்.

ரணில் விக்கிரமசிங்க தனக்கு விருப்பமான முறையில் மிக மோசமான நிலைக்கு ஆட்சியை கொண்டு சென்றார். ஒரு கட்டத்தில் என்னையும் அவர் கெடுத்துவிட்டார்.


மைத்திரி, எங்களை ஏமாற்றி விட்டார் – மாவை!  05 AUG


‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய ஆதரவை ஒக்டோபர் 18ஆம் திகதி மீளப்பெற்றதால் நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தோம்.

இன்றைக்கு எங்களுடைய நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருகின்றது உண்மைதான். மக்களுக்கு எவ்வாறு ஆறுதல் சொல்வதென்று எங்களுக்கும் தெரியாமல் இருகின்றது.

 

13 minutes ago, ampanai said:

யாருக்கும் நன்மை செய்யாதவரோடு கூட்டுச் சேர்ந்த தமிழ்க் கூட்டமைப்பை...

19886.jpg
இந்த நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன இப்போது முன்னாள் ஜனாதிபதி என விழிக்கப்படுகின்றார். மகிந்த ராஜபக்ச ­வோடு போட்டியிட்டு ஜனாதி பதித் தேர்தலில் வெற்றி பெற்றவர் மைத்திரி பால சிறிசேன.
 
ஜனாதிபதித் தேர்தலில் என்னோடு போட்டி யிட இருக்கின்ற அந்த வீரனை அறிய ஆசைப் படுகிறேன் என மகிந்த ராஜபக்ச ­ கர்ச்சித்த போது அவர் அருகிலேயே நின்றவர் மைத்திரி பால சிறிசேன. மிகுந்த துணிச்சலும் நேர்மையும் அவரிடம் இருந்தன. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர் பில் நேரிய முறையில் சிந்தித்தவர்.
எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டியது.
 
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப் பாணத்துக்கு வருகின்றபோதெல்லாம் கொழும் பில் இருந்து ஓடிவரும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் முக்கிய தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜ யத்தின் போதெல்லாம் எட்டவே நின்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எல்லாம் செய்வார் என்பதுபோல் கூட்டமைப்பு நடந்து கொண்டதைப் பார்க்கும்போது எங்கள் இனத் துக்கான மிகப்பெரும் கேடு இதுவென்று உண ரத் தோன்றும். அதுமட்டுமன்றி வடக்கு மாகாண முதல மைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை ஓரங்கட்டுவதில் கூட்டமைப்பும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் செய்த கூட் டுச்சதியை என்னவென்று சொல்வது.
 
ஆம், தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றில்; வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் நான் கதைக்கமாட்டேன். முன்பும் கதைத்ததில்லை. இனியும் கதைக்கப் போவதில்லை என்று பிரதமர் ரணில் கூறு கிறார். இதன்போது செவ்வி கண்ட ஊடகவிய லாளர் அதிர்ந்து போனார். ஒரு பிரதமர் என்ற வகையில் நீங்கள் வட மாகாணத்தின் முதலமைச்சரோடு கதைக் காமல் எங்ஙனம் வடக்கில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என்று அந்த ஊடகவிய லாளர் கேட்க, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கள் இருக்கிறார்கள். அவர்களோடு கதைத்து அபிவிருத்தியை ஏற்படுத்துவேன் என்கிறார் ரணில்.
 
இதன்போதாவது எங்கள் இனத்துக்கு ஈனம் இழைக்கப்படுகிறது என்பதைக்கூட உணரமுடியாதவர்களாக நாம் இருந்தோம்.
 
அதுமட்டுமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் ரணில் செய்த அக் கிரமங்கள், சேர்ந்து பயணிப்போம் என்ற சத் தியத்துக்கு இழைத்த பெரும் துரோகமாகும். மைத்திரிபால சிறிசேனவோடு மட்டும் ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரம் முடியவில்லை. அது சஜித் பிரேமதாஸவையும் நம்ப வைத்துக் கழுத்தறுத்தது. எனவே இத்தகையவரோடு கூட்டு நின்ற நம் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் எப்பேற் பட்டவர்கள் என்பதை இனிமேலாவது நம் தமிழினம் உணர்ந்தாக வேண்டும்.
 

 

நல்லாட்சியின் கொள்கையையும் சீரழித்து ஐக்கிய தேசியக் கட்சியையும் சீரழித்தது என்னையும் சீரழித்தமையால் நான் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை விரட்டியடித்தேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் - 4 DEC2018


ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி விட்டு மஹிந்த ராஜபக்ஷவை  நியமித்தது எதேர்ச்சையான நிகழ்வு அல்ல கடந்த மூன்றரை ஆண்டுகளில் கடந்து வந்த கசப்பான அனுபவங்களின் விளைவாகும்.

ரணில் விக்கிரமசிங்க தனக்கு விருப்பமான முறையில் மிக மோசமான நிலைக்கு ஆட்சியை கொண்டு சென்றார். ஒரு கட்டத்தில் என்னையும் அவர் கெடுத்துவிட்டார்.


மைத்திரி, எங்களை ஏமாற்றி விட்டார் – மாவை!  05 AUG


‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய ஆதரவை ஒக்டோபர் 18ஆம் திகதி மீளப்பெற்றதால் நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தோம்.

இன்றைக்கு எங்களுடைய நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருகின்றது உண்மைதான். மக்களுக்கு எவ்வாறு ஆறுதல் சொல்வதென்று எங்களுக்கும் தெரியாமல் இருகின்றது.

 

நீங்கள் எழுதியது உங்கள் சொந்தக் கருத்து என நினைத்து விட்டேன்.

வலம்புரி ரணில் + தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இணைந்து விக்கியரை கஷ்டப்படுத்தினர் என்றும் வடக்குக்கு மைத்திரி வரும் போது கூட்டமைப்பினர் கலந்து கொள்ளவில்லை என்றும் எழுதி விட்டு பின் மைத்திரிக்கு ரணில் அக்கிரமங்கள் செய்தார் என்று போகின்ற போக்கில் எழுதியுள்ளனர். அவர்களும் என்னென்ன அக்கிரமங்கள் செய்தனர் குறிப்பிடவில்லை.

ஏற்கனவே பெரும் கடனில் மிக மோசமாக தள்ளாடிக் கொண்டிருந்த இலங்கை அரசில் காத்திரமாக எதனையும் செய்யும் திறனற்று ரணில் அரசு தள்ளாடிக் கொண்டு இருக்கும் போது திடீரென மகிந்தவை 2018 ஒக்டோபரில் பிரதமராக்கி அரசியல் கூத்தாடி எல்லாவற்றையும் நாசமாக்கியவர் மைத்திரி. அதன் பின் ஏப்ரலில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பான விவரங்களை பெற்றும் பாதுகாப்பு சபையைக் கூட கூட்டாமல் இருந்தவரும் அவர் தான். இவற்றை எல்லாம் விட அடுத்த நாள் அரசியல் தீர்வு திட்டத்தின் நகலை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருந்த போது அதை குழப்பியடிக்கவே மகிந்தவை ஒரே நாளில் பிரதமராக்கியவர் மைத்திரி.

இவை எல்லாம் அக்கிரமங்களின் வரிசையில் வராது போல

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நீங்கள் எழுதியது உங்கள் சொந்தக் கருத்து என நினைத்து விட்டேன்.

வலம்புரி ரணில் + தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இணைந்து விக்கியரை கஷ்டப்படுத்தினர் என்றும் வடக்குக்கு மைத்திரி வரும் போது கூட்டமைப்பினர் கலந்து கொள்ளவில்லை என்றும் எழுதி விட்டு பின் மைத்திரிக்கு ரணில் அக்கிரமங்கள் செய்தார் என்று போகின்ற போக்கில் எழுதியுள்ளனர். அவர்களும் என்னென்ன அக்கிரமங்கள் செய்தனர் குறிப்பிடவில்லை.

ஏற்கனவே பெரும் கடனில் மிக மோசமாக தள்ளாடிக் கொண்டிருந்த இலங்கை அரசில் காத்திரமாக எதனையும் செய்யும் திறனற்று ரணில் அரசு தள்ளாடிக் கொண்டு இருக்கும் போது திடீரென மகிந்தவை 2018 ஒக்டோபரில் பிரதமராக்கி அரசியல் கூத்தாடி எல்லாவற்றையும் நாசமாக்கியவர் மைத்திரி. அதன் பின் ஏப்ரலில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பான விவரங்களை பெற்றும் பாதுகாப்பு சபையைக் கூட கூட்டாமல் இருந்தவரும் அவர் தான். இவற்றை எல்லாம் விட அடுத்த நாள் அரசியல் தீர்வு திட்டத்தின் நகலை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருந்த போது அதை குழப்பியடிக்கவே மகிந்தவை ஒரே நாளில் பிரதமராக்கியவர் மைத்திரி.

இவை எல்லாம் அக்கிரமங்களின் வரிசையில் வராது போல

பொதுவாக ரணிலையும், மைத்தியையும் ஒப்பிட்டால் ரணில் நரிதான் அதில் சந்தேகமில்லை. ஆனால் மைத்திரியோ நரியைவிடப் பயங்கரமான ஓநாய். சனாதிபதியின் ஆதரவில்லாமல் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நடைபெறச் சாத்தியமில்லை. அந்த இனவழிப்பு வேளையில் மகிந்தா பொறுப்புகளை மைத்திரியிடம் கொடுத்துவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார். முள்ளிவாய்காலில் தமிழர்களை மிகவும் கொடூரமாக அழித்தது கோத்தபாய என்று நாங்கள் சாடிக்கொண்டிருக்கிறோம், ஆனால் சனாதிபதிப் பொறுப்பிலிருந்த மைத்திரியின் ஆதரவும், அனுமதியும் இல்லாமல், கோத்தபாயவால் தமிழின அழிப்பை நடாத்தியிருக்க முடியாது.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.