Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

அமிர் தலைமையிலான யாழ்பாணத்தவர்கள் ராசதுரைக்கு செய்தது அநியாயம். 

ஆனால் இது எத்தனை யாழ்பாணத்தவருக்குத் தெரியும்? ஊரில் உள்ளவர்களும், வெளிநாட்டில் வசிக்கும் யாழ்பாணத்தவரும், ராசதுரை துரோகி என பட்டம் கட்டி இலகுவில் கடந்து போக என்ன காரணம் ?

அமிர் தரப்பு ராசதுரை பற்றி யாழ் மக்களிடயே பரப்பிய அவதூறு?

அப்படியாயின் பிரபாகரன் பற்றி அமிர் பரப்பிய அவதூறுகள் ஏன் யாழ் மக்களிடம் எடுபடவில்லை?

ஏனென்றால் பிரபாவும் ஒரு யாழ்பாணத்தவர். 

ஆனால் ராசதுரை அப்படி இல்லையே? ஆகவேதான் அவரை காலாகாதுக்கும், இன்றும் துரோகி என இலகுவில் முத்திரை குத்த முடிகிறது.

#இச்சையின்றிய பிரதேசவாதம்

 

நுணாவிலன் மிக்க நன்றி அந்த ப்புத்தகத்திலும் இதைதான் எழுதியிருந்தார் ராசதுரை அவர்கள்

கோசான் பழைய வரலாறுகளை நாம் அறிந்து கொள்ள புத்தகங்களும் பழையவர்களும் தான்  துணை ஆனால் அவர் யார் பக்கம் சாய்கிராரோ என்பதுதான் பிரச்சினை 

Image may contain: 1 person, smiling

Edited by தனிக்காட்டு ராஜா

  • Replies 162
  • Views 15k
  • Created
  • Last Reply
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

 

நுணாவிலன் மிக்க நன்றி அந்த ப்புத்தகத்திலும் இதைதான் எழுதியிருந்தார் ராசதுரை அவர்கள்

கோசான் பழைய வரலாறுகளை நாம் அறிந்து கொள்ள புத்தகங்களும் பழையவர்களும் தான்  துணை ஆனால் அவர் யார் பக்கம் சாய்கிராரோ என்பதுதான் பிரச்சினை 

Image may contain: 1 person, smiling

ராஜதுரை அவர்கள் அமைச்சராக இருந்த காலத்தில் மன்னாரில் ஒரு நிகழ்வுக்கு வந்திருந்தார். அவருக்கு பெரிய விழா வைத்து அவரை வரவேட்டார்கள்.

அப்போது அங்கு ஒரு வாக்குறுதி கொடுத்தார் தான் ஒரு லட்ச்சம் ரூபாய் தருவதாகவும் அதனைக்கொண்டு ஒரு வாசிகசாலையை அமைக்கும்படி கூறி சென்றார். அங்கு பெரிய தட புடலாக விருந்தும் கொடுக்கப்பட்ட்து.

பின்னர் அந்த கிராமத்து பெரியவர்கள் அவரிடம் அந்த பணம் சம்மந்தமாக பேசியபோது அவர் சொன்னது இதுதான். நான் போற போற இடமெல்லாம் ஏதோவெல்லாம் சொல்லுவேன் , நான் ஒரு அரசியல்வாதி. நான் சொன்னதை வைத்துக்கொண்டு இங்கு வந்து அப்படி எல்லாம் இங்கு வரக்கூடாது என்று கூறினாராம். மிக சிறந்த அரசியல்வாதி. தமிழ் மக்களின் பாதுகாவலன். 

நான் அவர் பணம் கொடுக்கவில்லை அதனால் அந்த கிராமம் அழிந்து விட்ட்து என்று சொல்லவில்லை.

இவருடைய சரித்திரம் எங்களுக்கு நல்லாவே தெரியும். பல்டி அடிப்பதில் இவரைப்போல ஆளே கிடையாது. இருந்தாலும் பல்டி அடிப்பதில் சோனவனை இவரால் முந்த முடியவில்லை.

 

On 12/15/2019 at 2:51 PM, தனிக்காட்டு ராஜா said:

உங்களுக்கு விநாயகமூர்த்தி மூர்த்தி முறளிதரன் என்ற ஒருத்தரை மட்டுமே தெரியும் இன்னும் பலர் பெயர தெரியாமல் இருக்கிறார்கள் அவர்களெல்லாம் உங்களுக்கு தெரியாது போல

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Vankalayan said:

ராஜதுரை அவர்கள் அமைச்சராக இருந்த காலத்தில் மன்னாரில் ஒரு நிகழ்வுக்கு வந்திருந்தார். அவருக்கு பெரிய விழா வைத்து அவரை வரவேட்டார்கள்.

அப்போது அங்கு ஒரு வாக்குறுதி கொடுத்தார் தான் ஒரு லட்ச்சம் ரூபாய் தருவதாகவும் அதனைக்கொண்டு ஒரு வாசிகசாலையை அமைக்கும்படி கூறி சென்றார். அங்கு பெரிய தட புடலாக விருந்தும் கொடுக்கப்பட்ட்து.

பின்னர் அந்த கிராமத்து பெரியவர்கள் அவரிடம் அந்த பணம் சம்மந்தமாக பேசியபோது அவர் சொன்னது இதுதான். நான் போற போற இடமெல்லாம் ஏதோவெல்லாம் சொல்லுவேன் , நான் ஒரு அரசியல்வாதி. நான் சொன்னதை வைத்துக்கொண்டு இங்கு வந்து அப்படி எல்லாம் இங்கு வரக்கூடாது என்று கூறினாராம். மிக சிறந்த அரசியல்வாதி. தமிழ் மக்களின் பாதுகாவலன். 

நான் அவர் பணம் கொடுக்கவில்லை அதனால் அந்த கிராமம் அழிந்து விட்ட்து என்று சொல்லவில்லை.

இவருடைய சரித்திரம் எங்களுக்கு நல்லாவே தெரியும். பல்டி அடிப்பதில் இவரைப்போல ஆளே கிடையாது. இருந்தாலும் பல்டி அடிப்பதில் சோனவனை இவரால் முந்த முடியவில்லை.

அரசியல் வாதி ஆர்தான் பல்டி அடிக்கல இன்றுவரைக்கும் தமிழ் மக்களுக்கு தீர்வு வாங்கி கொடுப்போம் என்று கூட்டமைப்பு மக்களை ஏமாற்றல 

அதுதான் கோட்டபாய சொல்லிவிட்டார் தமிழர்களுக்கு சமஸ்டியும் கொடுக்க முடியாது என்று பிறகென்ன இவர்களும் காலத்தை ஓட்ட வேண்டாமா 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

1;  எல்லாவற்றையும் பபிரதேச மையவாதம் என்பதற்குள் பொதுமைப் படுத்துகிறீர்கள்

2; இங்கே கருத்தெழுதுவோரில் பெரும்பான்மையோரின் வயதை கருத்தில் கொள்ளவில்லை

3; பிரதேசவாதம் பேசிய அரசியல்வாதிகளின் பின்ணணியை கவனத்தில் கொள்ளவேண்டும்.

4; ஒருவர் தனது பின்புலத்தை பெருமையாக கூருவதில் தவறு இருப்பதாக கருதுகிறீர்களா ?

5; சுதந்திரத்தின் பின்னான இலங்கையில் தமிழருக்கு சனனாயக வழியில் தலைமையேற்ர அரசியல்வாதிகளின் கல்விப் பின்னணி

6; பிரதேசவாதம் யாழ்ப்பாணத்திற்கும் மட்டும் செல்லுபடியாகுமா அல்லது தென் தமிழீழத்திற்கும் பொருந்துமா.

 

உண்மையில் இதனைதோண்டத்தொடங்கினால், பல்லைத் தோண்டி மணக்க கொடுத்த கதையாக முடியுமென பயப்படுகிறேன்.

[அதுசரி புலவர் ஏன் மௌனமாக உள்ளார். அவருக்கு ஒரு தொகை விடயங்கள் தெரிய வேண்டுமே ?]

 

கப்பித்தான்,

பல்லைத்தோண்டி மணக்கும் படி ஆகாதவண்ணம் நாமிருவரும் உரையாடமுடியும் என்ற நம்பிக்கை மிக குறுகியகாலத்திலேயே உங்கள் மீது ஏற்பட்டுள்ளதால் தொடர்கிறேன்.

கருத்து ஒழுங்கு கருதி உங்கள் புள்ளிகளின் ஒழுங்கை மாற்றியுள்ளேன்.

6. பிரதேசவாதம் சற்று வித்தியாசமாக ஆனால் அதே வலுவுடன் முல்லைதீவிலும், திருமலையிலும், மட்டு-அம்பாறையிலும் இருக்கிறது. குறிப்பாக தொழில் போட்டி என்று வரும் போது அல்லது செய்த ஒரு தவறை மறைக்க - மிக இலகுவாக யாழ்-எதிர்வாதம் கையில் எடுக்கப்படும். ஆகவேதான் இவற்றை சம்பவம்-சம்பவமாக சீர்தூக்கி பாக்க வேண்டுமே ஒழிய. ஒட்டு மொத்தமாக ஒரு தரப்பை குற்றம் சுமத்த முடியாது. 2004 இல் யாழ் வம்சாவளி வர்தகர்கள் மட்டில் இருந்து விரட்டப்பட்டார்கள். அதை அங்கே வாழ்ந்த மக்கள் செய்யவில்லை, ஆனால் இலங்கையில் ஒரே ஒரு தரம், தமிழர்கள், தமிழர் நிலத்தில் இருந்து, தமிழர்களாலேயே விரட்டப்பட்டது அதுவே. ஆகவே இது ஒரு பகுதிக்கு மட்டுமானது அல்ல. ஆகவேதான் ஒவ்வொரு சம்பவத்தையும் பார்க்க வேண்டியதாகிறது.

அமிருக்கு சளைக்காத தலைவர், எந்த விதத்திலும் அமிரை போல தலைவர் பதவிக்கு தகுதியானவர், எங்கே பிறந்தார் என்ற அடிப்படையில் தலைவர் ஆகும் வாய்ப்பு பறிபோனது மட்டுமல்ல, கட்சிக்குள்ளே குழிபறிப்பு வெளிபடையாகவே நடந்தது, எம்பி பதவிக்கும் ஆபத்து வந்தது எனும் போது - அங்கே தலைவர்கள் எப்போதும் யாழில் இருந்தே வரவேண்டும் என்ற மையவாதம்தானே முன்னுக்கு நிற்கிறது?

2004 இல் இப்படி நடக்கவில்லை. ஆனால் அப்போதும் பிரதேசவாதத்தால் என்னை வஞ்சிக்கிறார்கள் என்ற கூச்சல் ஒரு கவசமாக கிளப்பபட்டது. ஆரம்பத்தில் பல நடுநிலையாளர்களே அதற்கு பலியான போதும் அதன் பின்னரான நிகழ்வுகள் அந்த காரணம் பொய்யானது என நிரூபித்தன.  

5. அந்தந்த காலத்தை அந்த கால தராசை கொண்டே நிரைக்க வேண்டும் ஆனாலும் -  அந்த காலத்து பிழைகளை பிழை என இனம் காணலாம்தானே?

3. உண்மைதான். ஆனா பிரதேசவாதத்துக்கு எதிர்வினையாற்றியவர்களையும் பிரதேசவாதிகளாக சித்தரிக்க கூடாது.

2&1. வயது குறைந்தவர்கள் பிரதேசவாதத்தை கையில் எடுக்கமாட்டார்களா? வயதில் இளையவர்கள் பிரதேசவாதத்தை கையில் எடுத்த போது (அமிர், கருணா, புள்ளையான்), வயதில் மூத்தவர்கள் எதிர்வினையாற்றியும் உள்ளார்கள் (செல்வா, பிரபா, ஜோசப் பராராஜசிங்கம்). பொதுமை படுத்தவில்லை. பிரதேசவாதம் உண்டு, ஆனால் அதை case-by-case ஆகவே ஆராயமுடியும்.

4. பின்புலத்தையிட்டு பெருமை படுவது வீண்வேலை என்பது என் எண்ணம். இன்ன சாதி என்பதும் ஒரு வகை பின்புலம்தானே? அதையொட்டி பெருமை கொள்வதை சிறுமை என ஏற்கும் நாம். இன்ன இடம் என்பதை இட்டு பெருமை கொள்வதை மட்டும் ஏன் ஏற்கிறோம்?

யாழில் - நாம்தான் கெட்டிக்காரர்கள், கல்விமான்கள், Jaffna Jew என்ற்ரெல்லாம் தம்மை பற்றித் தாமே பெருமைப்படுவார்கள். ஆனால் 2009-2019 மாவட்ட வெட்டுப் புள்ளிகளை எடுத்துப் பார்த்தால் யாழிற்கும் மட்டகளப்பிற்கும் பெரிய வித்யியாசமில்லை என்பது தெரியும். ஒரு காலத்தில் இருந்தது ஆனால் இப்போ இல்லை. இது எதை காட்டி நிற்கிறது? கல்விக்கான வளங்கள் யாழில் குவிந்தமையால் யாழ் கல்வியில் முண்ணனியில் இருந்தது. வளங்கள் சமனாக பகிரப்படும்போது (40 வருடங்களின் பின்)  பெரிய வித்தியாசமில்லை.

இதே போலதான் மட்டகளப்பில் ஏதோதாம் விருதோம்ப என்றே பிறந்தவர்கள் என்பது போல் சிலரின் தற்பெருமை இருக்கும். ஆனால் யாழில் கண்ட கஞ்ச பிசிநாறிகளை போலவே மட்டிலும் கண்டுள்ளேன் 😂

எனவே எந்த இயல்பையும் குழுநிலை படுத்தி பெருமை கொள்வது வீண்வேலை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கே ஆரம்பத்தில் சொன்னது - ஒரே செயலை செய்த யாழ்பாணத்தவர்கள் மீதான உக்கிரத்தை விட கருணாவின் மீதான உக்கிரம் ஏன் என்பதுதான்.

கருணா தொடர்ந்தும் அரசியல் செய்கிறார் என்றார் விசுகு. டக்லசும், சுரேசும், சித்தரும் என்ன செய்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

கப்பித்தான்,

பல்லைத்தோண்டி மணக்கும் படி ஆகாதவண்ணம் நாமிருவரும் உரையாடமுடியும் என்ற நம்பிக்கை மிக குறுகியகாலத்திலேயே உங்கள் மீது ஏற்பட்டுள்ளதால் தொடர்கிறேன்.

கருத்து ஒழுங்கு கருதி உங்கள் புள்ளிகளின் ஒழுங்கை மாற்றியுள்ளேன்.

6. பிரதேசவாதம் சற்று வித்தியாசமாக ஆனால் அதே வலுவுடன் முல்லைதீவிலும், திருமலையிலும், மட்டு-அம்பாறையிலும் இருக்கிறது. குறிப்பாக தொழில் போட்டி என்று வரும் போது அல்லது செய்த ஒரு தவறை மறைக்க - மிக இலகுவாக யாழ்-எதிர்வாதம் கையில் எடுக்கப்படும். ஆகவேதான் இவற்றை சம்பவம்-சம்பவமாக சீர்தூக்கி பாக்க வேண்டுமே ஒழிய. ஒட்டு மொத்தமாக ஒரு தரப்பை குற்றம் சுமத்த முடியாது. 2004 இல் யாழ் வம்சாவளி வர்தகர்கள் மட்டில் இருந்து விரட்டப்பட்டார்கள். அதை அங்கே வாழ்ந்த மக்கள் செய்யவில்லை, ஆனால் இலங்கையில் ஒரே ஒரு தரம், தமிழர்கள், தமிழர் நிலத்தில் இருந்து, தமிழர்களாலேயே விரட்டப்பட்டது அதுவே. ஆகவே இது ஒரு பகுதிக்கு மட்டுமானது அல்ல. ஆகவேதான் ஒவ்வொரு சம்பவத்தையும் பார்க்க வேண்டியதாகிறது.

அமிருக்கு சளைக்காத தலைவர், எந்த விதத்திலும் அமிரை போல தலைவர் பதவிக்கு தகுதியானவர், எங்கே பிறந்தார் என்ற அடிப்படையில் தலைவர் ஆகும் வாய்ப்பு பறிபோனது மட்டுமல்ல, கட்சிக்குள்ளே குழிபறிப்பு வெளிபடையாகவே நடந்தது, எம்பி பதவிக்கும் ஆபத்து வந்தது எனும் போது - அங்கே தலைவர்கள் எப்போதும் யாழில் இருந்தே வரவேண்டும் என்ற மையவாதம்தானே முன்னுக்கு நிற்கிறது?

2004 இல் இப்படி நடக்கவில்லை. ஆனால் அப்போதும் பிரதேசவாதத்தால் என்னை வஞ்சிக்கிறார்கள் என்ற கூச்சல் ஒரு கவசமாக கிளப்பபட்டது. ஆரம்பத்தில் பல நடுநிலையாளர்களே அதற்கு பலியான போதும் அதன் பின்னரான நிகழ்வுகள் அந்த காரணம் பொய்யானது என நிரூபித்தன.  

5. அந்தந்த காலத்தை அந்த கால தராசை கொண்டே நிரைக்க வேண்டும் ஆனாலும் -  அந்த காலத்து பிழைகளை பிழை என இனம் காணலாம்தானே?

3. உண்மைதான். ஆனா பிரதேசவாதத்துக்கு எதிர்வினையாற்றியவர்களையும் பிரதேசவாதிகளாக சித்தரிக்க கூடாது.

2&1. வயது குறைந்தவர்கள் பிரதேசவாதத்தை கையில் எடுக்கமாட்டார்களா? வயதில் இளையவர்கள் பிரதேசவாதத்தை கையில் எடுத்த போது (அமிர், கருணா, புள்ளையான்), வயதில் மூத்தவர்கள் எதிர்வினையாற்றியும் உள்ளார்கள் (செல்வா, பிரபா, ஜோசப் பராராஜசிங்கம்). பொதுமை படுத்தவில்லை. பிரதேசவாதம் உண்டு, ஆனால் அதை case-by-case ஆகவே ஆராயமுடியும்.

4. பின்புலத்தையிட்டு பெருமை படுவது வீண்வேலை என்பது என் எண்ணம். இன்ன சாதி என்பதும் ஒரு வகை பின்புலம்தானே? அதையொட்டி பெருமை கொள்வதை சிறுமை என ஏற்கும் நாம். இன்ன இடம் என்பதை இட்டு பெருமை கொள்வதை மட்டும் ஏன் ஏற்கிறோம்?

யாழில் - நாம்தான் கெட்டிக்காரர்கள், கல்விமான்கள், Jaffna Jew என்ற்ரெல்லாம் தம்மை பற்றித் தாமே பெருமைப்படுவார்கள். ஆனால் 2009-2019 மாவட்ட வெட்டுப் புள்ளிகளை எடுத்துப் பார்த்தால் யாழிற்கும் மட்டகளப்பிற்கும் பெரிய வித்யியாசமில்லை என்பது தெரியும். ஒரு காலத்தில் இருந்தது ஆனால் இப்போ இல்லை. இது எதை காட்டி நிற்கிறது? கல்விக்கான வளங்கள் யாழில் குவிந்தமையால் யாழ் கல்வியில் முண்ணனியில் இருந்தது. வளங்கள் சமனாக பகிரப்படும்போது (40 வருடங்களின் பின்)  பெரிய வித்தியாசமில்லை.

இதே போலதான் மட்டகளப்பில் ஏதோதாம் விருதோம்ப என்றே பிறந்தவர்கள் என்பது போல் சிலரின் தற்பெருமை இருக்கும். ஆனால் யாழில் கண்ட கஞ்ச பிசிநாறிகளை போலவே மட்டிலும் கண்டுள்ளேன் 😂

எனவே எந்த இயல்பையும் குழுநிலை படுத்தி பெருமை கொள்வது வீண்வேலை.

சே, 

நான் சொல்லத் தயங்கிய விடயங்களில் சிலவற்றை மேலோட்டமாகத் தொட்டிருப்பதாக கருதுகிறேன்.

வயது.

எனது வளர்பராயத்தின் Adulthood  மிகப்பெரும் பகுதி யுத்தகாலத்தின் போது கழிந்தது. யுத்தத்தின் வலிகள் தமிழரில் மிகப் பெரும்பாலானோருக்குத் தெரியும். இங்கு கருத்தெழுதுவோவோரில் பலர் அந்த சூழலில் இருந்து வந்தவர்கள். ஆனால் அவர்கள் [யாழ்ப்பாணிகள்] எல்லோரையும் பொதுப்படையாக யாழ் மைய வாதத்திற்குள் உள்ளடக்குவது சரியானதாக அமையுமா ?

நான், எனது குடும்பம், எனது அயல், எனது ஊர், எனது மாவட்டம்.......... என்கின்ற போக்கு பிழை என கூறலாமா ?

பிழை எனில் எப்போது ?

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நான் இங்கே ஆரம்பத்தில் சொன்னது - ஒரே செயலை செய்த யாழ்பாணத்தவர்கள் மீதான உக்கிரத்தை விட கருணாவின் மீதான உக்கிரம் ஏன் என்பதுதான்.

கருணா தொடர்ந்தும் அரசியல் செய்கிறார் என்றார் விசுகு. டக்லசும், சுரேசும், சித்தரும் என்ன செய்கிறார்கள்?

டக்லசு, சுரேசு, சித்தர் போன்றோரை முரளீதரனுடன் ஒப்பிடுவது சரியானதுதானா ?

கருணா அம்மான் மீது நாங்கள் வைத்திருந்த அன்பும் மரியாதையும் இவர்கள் மீது வைக்கவில்லையே தவிர முரளீதரன் மீது வரும் வெறுப்பும் கோபமும் அவர் போராட்டத்திற்கும் , தென் தமிழீழத்திற்கும் ஏற்படுத்தியது சேதம் தொடர்பானது.

பன்றியையும் புலியையும் ஒப்பிடுதல் தகுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

பிற்காலத்தில் முளீதரனும் ஒரு புத்தகம் எழுதுவார் , மனமும் வருந்துவார்.

ஆனால் தென் தமிழீழம் என்கின்ர ஒன்றே இருக்கப் போவதில்லை.  

அப்போதும் சிலர் இருப்பர் யாழ் மைய வாதத்தை கைகாட்டுவதற்கு. 

 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kapithan said:

சே, 

நான் சொல்லத் தயங்கிய விடயங்களில் சிலவற்றை மேலோட்டமாகத் தொட்டிருப்பதாக கருதுகிறேன்.

வயது.

எனது வளர்பராயத்தின் Adulthood  மிகப்பெரும் பகுதி யுத்தகாலத்தின் போது கழிந்தது. யுத்தத்தின் வலிகள் தமிழரில் மிகப் பெரும்பாலானோருக்குத் தெரியும். இங்கு கருத்தெழுதுவோவோரில் பலர் அந்த சூழலில் இருந்து வந்தவர்கள். ஆனால் அவர்கள் [யாழ்ப்பாணிகள்] எல்லோரையும் பொதுப்படையாக யாழ் மைய வாதத்திற்குள் உள்ளடக்குவது சரியானதாக அமையுமா ?

நான், எனது குடும்பம், எனது அயல், எனது ஊர், எனது மாவட்டம்.......... என்கின்ற போக்கு பிழை என கூறலாமா ?

பிழை எனில் எப்போது ?

 

கப்பித்தான்,

1. போராட்டம் பல தளைகளை பலவீனமாக்கியது என்பது மறுப்பதற்கில்லை. அதனால் 70களிற்கு பின்னானவர்களின் மனநிலை முந்தியோர் போல இல்லை என்பதும் உண்மையே. ஆனால் இங்கே, குறிப்பாக கருணா பற்றிய திரிகளில் எழுதுபவர்களில் மிகமிகச் சிலரே 70 க்கு பின் பிறந்தவர்கள் என நினைக்கிறேன்.

2. நான், என் குடும்பம் இத்யாதி தற்பெருமைகள் அறவே வீண்வேலை.  ஆனால் தவிர்க இயலாதன. ஆனால் குறைந்த பட்சம் இதை குடும்பத்தோடு நிப்பாட்டுவதே உசிதம். அடுத்த கட்டத்துக்கு நகர்தி நான் இந்த ஊர்காரன்- நாம் எல்லோரும் இப்படித்தான் - இது எம் பெருமை என்பதெல்லாம் என்னளவில் சுத்த பைத்தியகாரத்தனம். 

19 minutes ago, Kapithan said:

டக்லசு, சுரேசு, சித்தர் போன்றோரை முரளீதரனுடன் ஒப்பிடுவது சரியானதுதானா ?

கருணா அம்மான் மீது நாங்கள் வைத்திருந்த அன்பும் மரியாதையும் இவர்கள் மீது வைக்கவில்லையே தவிர முரளீதரன் மீது வரும் வெறுப்பும் கோபமும் அவர் போராட்டத்திற்கும் , தென் தமிழீழத்திற்கும் ஏற்படுத்தியது சேதம் தொடர்பானது.

பன்றியையும் புலியையும் ஒப்பிடுதல் தகுமா ?

87 ற்கு முன் பல பன்றிகள் புலிகளாகவே கருதப்பட்டன. 

தமிழர் தரப்பை பலவீனப்படுத்திய தமிழர்கள் வரிசையில் வேணும் எண்டால் முதல் 5 பேருக்குள் கருணா வரக்கூடும். ஆனால் அவர் மட்டுமே ஒரு மாபெரும் காரணி என்பது உண்மைக்குப் புறம்பானது.

ஏன் இது மீள மீள நிறுவப்படுகிறது என பார்க்கும் போது, இச்சையின்றிய பிரதேசவாதமே காரணியாக முன்னெழுகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

கப்பித்தான்,

1. போராட்டம் பல தளைகளை பலவீனமாக்கியது என்பது மறுப்பதற்கில்லை. அதனால் 70களிற்கு பின்னானவர்களின் மனநிலை முந்தியோர் போல இல்லை என்பதும் உண்மையே. ஆனால் இங்கே, குறிப்பாக கருணா பற்றிய திரிகளில் எழுதுபவர்களில் மிகமிகச் சிலரே 70 க்கு பின் பிறந்தவர்கள் என நினைக்கிறேன்.

2. நான், என் குடும்பம் இத்யாதி தற்பெருமைகள் அறவே வீண்வேலை.  ஆனால் தவிர்க இயலாதன. ஆனால் குறைந்த பட்சம் இதை குடும்பத்தோடு நிப்பாட்டுவதே உசிதம். அடுத்த கட்டத்துக்கு நகர்தி நான் இந்த ஊர்காரன்- நாம் எல்லோரும் இப்படித்தான் - இது எம் பெருமை என்பதெல்லாம் என்னளவில் சுத்த பைத்தியகாரத்தனம். 

2 - அப்படியானால் எம்மை தமிழர் என்பது எங்ஙனம் சரியாகும் ?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

பிற்காலத்தில் முளீதரனும் ஒரு புத்தகம் எழுதுவார் , மனமும் வருந்துவார்.

ஆனால் தென் தமிழீழம் என்கின்ர ஒன்றே இருக்கப் போவதில்லை.  

அப்போதும் சிலர் இருப்பர் யாழ் மைய வாதத்தை கைகாட்டுவதற்கு. 

 

ரதி அக்காச்சி போன்ற ஒரு சிலரைத் தவிர கருணாவின் பிரிவுக்கு யாழ் மையவாதம் உடனடி காரணமாகவோ அல்லது, நீண்டகால காரணமாகவோ இருந்தது என்பதை மட்டக்களப்பில் யாரும் ஏற்பதில்லை என்பதற்கு அவரின் தொடர் தேர்தல் தோல்விகளே சாட்சி.

ஆனால் ராஜதுரையின் கதை வேறு. களம் வேறு. அதனால்தான் அவர் காசி ஆனந்தனை வெல்ல முடிந்தது.

ஆனாலும் - மேலே கட்டுரை ஆசிரியர் இரா துரைரத்தினம் கூறுவது போல, யு என் பியில் சேராமல், தனித்துவ அரசியலை ராஜதுரை செய்திருக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

2 - அப்படியானால் எம்மை தமிழர் என்பது எங்ஙனம் சரியாகும் ?

தமிழர் என்பது வெற்றுப் பெருமை அல்ல. எம் அடையளம். எம் மொழி வளம். எம் கலாச்சார முதிசம். இதில் பெருமை பட ஏதுமில்லை. ஆனால் கட்டிக்காக்கும் கடமை இருக்கிறது.

சும்மா பெருமைக்கு கெமர் மன்னர்கள் கம்போடியாவில் கட்டிய கோவிலை தமிழர் கோவில் என்பதும். 

சுமேரியர் தமிழர் என்பதும்.

ஆப்கானிஸ்தானில் தமிழ் ஊர் என்பதும் பைத்தியகாரத்தனமே.

ஆனால் கீழடியில் எம் வரலாற்றை தேடுவதும்,

எம் நிலத்தில் எம் மொழிக்கு தேவைப்படும் அந்தஸ்தை கோருவதும்.

எம் நிலத்தில் எம் இனவிகிதாசாரத்தை பேண விழைவதும் (தனியார் குடியேற்றத்தை தடுக்காமல்)

பெருமை அல்ல - எம் உரிமை.

 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, goshan_che said:

கப்பித்தான்,

1. போராட்டம் பல தளைகளை பலவீனமாக்கியது என்பது மறுப்பதற்கில்லை. அதனால் 70களிற்கு பின்னானவர்களின் மனநிலை முந்தியோர் போல இல்லை என்பதும் உண்மையே. ஆனால் இங்கே, குறிப்பாக கருணா பற்றிய திரிகளில் எழுதுபவர்களில் மிகமிகச் சிலரே 70 க்கு பின் பிறந்தவர்கள் என நினைக்கிறேன்.

2. நான், என் குடும்பம் இத்யாதி தற்பெருமைகள் அறவே வீண்வேலை.  ஆனால் தவிர்க இயலாதன. ஆனால் குறைந்த பட்சம் இதை குடும்பத்தோடு நிப்பாட்டுவதே உசிதம். அடுத்த கட்டத்துக்கு நகர்தி நான் இந்த ஊர்காரன்- நாம் எல்லோரும் இப்படித்தான் - இது எம் பெருமை என்பதெல்லாம் என்னளவில் சுத்த பைத்தியகாரத்தனம். 

87 ற்கு முன் பல பன்றிகள் புலிகளாகவே கருதப்பட்டன. 

தமிழர் தரப்பை பலவீனப்படுத்திய தமிழர்கள் வரிசையில் வேணும் எண்டால் முதல் 5 பேருக்குள் கருணா வரக்கூடும். ஆனால் அவர் மட்டுமே ஒரு மாபெரும் காரணி என்பது உண்மைக்குப் புறம்பானது.

ஏன் இது மீள மீள நிறுவப்படுகிறது என பார்க்கும் போது, இச்சையின்றிய பிரதேசவாதமே காரணியாக முன்னெழுகிறது.

 

உங்களுடய சில கருத்துக்களுடன் உடன்பட முடியவில்லை. எல்லாவற்றையும் மையவாதத்தினுள் பொமைப்படுத்துகிறீர்கள் என்கிறேன்.

பிரதேசவாதம் கதைப்போர், அவர்களின் பின்ணனி, அவர்கள் யார், அவர்கள் கல்வியின் பின்புலம், மிக முக்கியமாக எத்தகைய சந்தர்ப்பங்களில் பிரதேசவாதம் கையிலெடுக்கப்படுகிறது என்பதை நாம் ஆராயத்தவற விடுகிறோம் என நினைக்கிறேன்.

எனது பார்வையில்   சாதி, சமயம், பிரதேசவாதம், பால் வேறுபாடு, உடற் குறைபாடு போன்றவற்றினை ஆயுதமாக பாவிப்போர் உண்மையில் தங்கள் பவீனத்தை மறைப்பதற்காகவே இதனை கையிலெடுப்பதாக நம்புகிறேன்.

நான் உன்னைவிட மேலானவன் ஆதலால் நான்தான் தகுதியானவன் என்பதாகவோ அல்லது நான் தகுதியானவன் ஆனால் இதனால்தான் தோற்றேன் என்பதாகவோ அவர்களின் வாதம் இருக்கிறது. 

தோல்வியின் இறுதிக்கணத்தில் அவ்ர்கள் எல்லோரினதும் இறுதி ஆயுதம் இதுதான்.

13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அரசியல் வாதி ஆர்தான் பல்டி அடிக்கல இன்றுவரைக்கும் தமிழ் மக்களுக்கு தீர்வு வாங்கி கொடுப்போம் என்று கூட்டமைப்பு மக்களை ஏமாற்றல 

அதுதான் கோட்டபாய சொல்லிவிட்டார் தமிழர்களுக்கு சமஸ்டியும் கொடுக்க முடியாது என்று பிறகென்ன இவர்களும் காலத்தை ஓட்ட வேண்டாமா 

எல்லா அரசியல்வாதிகளும் பல்டி அடிக்கிறார்கள் எண்டு சொல்ல முடியாது. நேர்மையான அரசியல்வாதிகள் இருந்திருக்கிறார்கள் , இப்பவும் இருக்கிறார்கள்.

கோத்தபாய சமஷடி மட்டுமல்ல 13 மே முழுமையாக தர முடியாது எண்டுதான் கூறி இருக்கிறார்.

இப்போது வருகிற தேர்தலில் சம், சும் எல்லோரும் வெளியே. இவர்களால்தான் நமக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை.

எனவே புதிதாக நிறையவே கட்சிகள்,தலைமைகள் உருவாகி வருகின்றன. இவர்கள் சமஷடி, ஈழம் நிச்சயம் நமக்கு பெற்று தருவார்கள். ஏன் என்றால் இவர்கள் எல்லாம் மிகவும் நேர்மையான , திறமையான அரசியல்வாதிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/20/2019 at 7:29 PM, goshan_che said:

நான் இங்கே ஆரம்பத்தில் சொன்னது - ஒரே செயலை செய்த யாழ்பாணத்தவர்கள் மீதான உக்கிரத்தை விட கருணாவின் மீதான உக்கிரம் ஏன் என்பதுதான்.

கருணா தொடர்ந்தும் அரசியல் செய்கிறார் என்றார் விசுகு. டக்லசும், சுரேசும், சித்தரும் என்ன செய்கிறார்கள்?

கோசான் மற்றவர்களின் துரோகத்திலிருந்து தமிழர்கள் மீண்டு வந்தார்கள், ஆனால் முரளிதரனின் துரோகத்திலிருந்து தமிழர்களால் மீள முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/20/2019 at 3:35 PM, goshan_che said:

கப்பித்தான்,

1. போராட்டம் பல தளைகளை பலவீனமாக்கியது என்பது மறுப்பதற்கில்லை. அதனால் 70களிற்கு பின்னானவர்களின் மனநிலை முந்தியோர் போல இல்லை என்பதும் உண்மையே. ஆனால் இங்கே, குறிப்பாக கருணா பற்றிய திரிகளில் எழுதுபவர்களில் மிகமிகச் சிலரே 70 க்கு பின் பிறந்தவர்கள் என நினைக்கிறேன்.

2. நான், என் குடும்பம் இத்யாதி தற்பெருமைகள் அறவே வீண்வேலை.  ஆனால் தவிர்க இயலாதன. ஆனால் குறைந்த பட்சம் இதை குடும்பத்தோடு நிப்பாட்டுவதே உசிதம். அடுத்த கட்டத்துக்கு நகர்தி நான் இந்த ஊர்காரன்- நாம் எல்லோரும் இப்படித்தான் - இது எம் பெருமை என்பதெல்லாம் என்னளவில் சுத்த பைத்தியகாரத்தனம். 

87 ற்கு முன் பல பன்றிகள் புலிகளாகவே கருதப்பட்டன. 

தமிழர் தரப்பை பலவீனப்படுத்திய தமிழர்கள் வரிசையில் வேணும் எண்டால் முதல் 5 பேருக்குள் கருணா வரக்கூடும். ஆனால் அவர் மட்டுமே ஒரு மாபெரும் காரணி என்பது உண்மைக்குப் புறம்பானது.

ஏன் இது மீள மீள நிறுவப்படுகிறது என பார்க்கும் போது, இச்சையின்றிய பிரதேசவாதமே காரணியாக முன்னெழுகிறது.

 

ஈழ போராட்ட்துக்கு 
ஓடிப்போனவர்கள் என்ற வரிசையில் நானும் நீங்களும் கூட துரோகம் செய்தவர்கள்தான்.
பெண் பிள்ளைகள் பாம்பு புத்துக்குள்ளாலும் முள்வேலி கண்ணிவெடிகளை கடந்து 
பாலி இனஅழிப்பு இராணுவத்தை நோக்கி நகர நாம்  கொழும்பு விமான நிலையம் நோக்கி நகர்ந்தவர்கள். 

அதுக்காக நாமும் கருணாவும் ஒன்றா?
டக்ளஸு அமீர் போன்றவர்கள் உடனிருந்து கொன்றவர்கள் இல்லை 

கருணா புலிகளுக்கு செய்த துரோகம் கூட மன்னிக்கலாம் உ
இவ்வளவு காலமும் இத்தனை இழப்புகளுக்கும் முகம் கொடுத்து 
போராட்டத்தை வளர்த்த மட்டு அம்பாறை மக்களுக்கும் போராளிகளுக்கும் 
செய்தது துரோகம் இல்லை ...... ஒரு இழிவான மனித மனம் ஒன்று செய்ய ஒருபோதும் செய்ய துணியாதது.

இந்த குரங்குளை பற்றி பேசுவதே வீண் 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Vankalayan said:

எல்லா அரசியல்வாதிகளும் பல்டி அடிக்கிறார்கள் எண்டு சொல்ல முடியாது. நேர்மையான அரசியல்வாதிகள் இருந்திருக்கிறார்கள் , இப்பவும் இருக்கிறார்கள்.

கோத்தபாய சமஷடி மட்டுமல்ல 13 மே முழுமையாக தர முடியாது எண்டுதான் கூறி இருக்கிறார்.

இப்போது வருகிற தேர்தலில் சம், சும் எல்லோரும் வெளியே. இவர்களால்தான் நமக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை.

எனவே புதிதாக நிறையவே கட்சிகள்,தலைமைகள் உருவாகி வருகின்றன. இவர்கள் சமஷடி, ஈழம் நிச்சயம் நமக்கு பெற்று தருவார்கள். ஏன் என்றால் இவர்கள் எல்லாம் மிகவும் நேர்மையான , திறமையான அரசியல்வாதிகள்.

நேர்மையான ஒரு அரசியல்வாதியை உங்களால் சுட்ட முடியுமா ? 

கூறுங்கள் பார்க்கலாம்  ?

  • கருத்துக்கள உறவுகள்
On 12/21/2019 at 11:27 AM, Vankalayan said:

எல்லா அரசியல்வாதிகளும் பல்டி அடிக்கிறார்கள் எண்டு சொல்ல முடியாது. நேர்மையான அரசியல்வாதிகள் இருந்திருக்கிறார்கள் , இப்பவும் இருக்கிறார்கள்.

கோத்தபாய சமஷடி மட்டுமல்ல 13 மே முழுமையாக தர முடியாது எண்டுதான் கூறி இருக்கிறார்.

இப்போது வருகிற தேர்தலில் சம், சும் எல்லோரும் வெளியே. இவர்களால்தான் நமக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை.

எனவே புதிதாக நிறையவே கட்சிகள்,தலைமைகள் உருவாகி வருகின்றன. இவர்கள் சமஷடி, ஈழம் நிச்சயம் நமக்கு பெற்று தருவார்கள். ஏன் என்றால் இவர்கள் எல்லாம் மிகவும் நேர்மையான , திறமையான அரசியல்வாதிகள்.

அப்படி யார் இருக்கிறார்கள் என கூறமுடியுமா

 

7 hours ago, Kapithan said:

நேர்மையான ஒரு அரசியல்வாதியை உங்களால் சுட்ட முடியுமா ? 

கூறுங்கள் பார்க்கலாம்  ?

எனது கேள்வியும் அதான் 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MEERA said:

கோசான் மற்றவர்களின் துரோகத்திலிருந்து தமிழர்கள் மீண்டு வந்தார்கள், ஆனால் முரளிதரனின் துரோகத்திலிருந்து தமிழர்களால் மீள முடியவில்லை.

ஏன் என்றால் அதோடு யுத்தம் முடிவடைந்து விட்டது ... கருணா , புலிகளோடு நின்றிருந்தாலும் யுத்தம் முடிவடைந்து தான் இருக்கும் என்பதை உங்களைப் போன்ற பலர் உணர மாட்டார்கள் ...இப்படியெல்லாம் சேர்ந்து அடிக்கப் போகிறோம் என்று பேச்சு வார்த்தைகளில் சொல்லி இருப்பார்கள்... யுத்தம் இனிப் பலன் தராது என்று கருணா உணர்ந்திருக்கலாம்...கருணாவின் சுயநலம் அதில் இருந்தாலும் அதில் பிழை இல்லை என்பது என் நிலைப்பாடு...தலைவர் அப்பவே உணர்ந்திருந்தால் 2009 யுத்தமே நடந்திருக்காது [சமாதான காலத்தில் அங்கிருந்த போராளிகள் எல்லோரும் குடும்ப வாழ்க்கை போன்றவற்றில் ஈடுப்பட்டார்கள்,ஒழுங்கான பயிற்சி இல்லை,போதிய ஆயுதங்கள் இல்லை .இவை எல்லாம் தெரிந்து கொண்டே எப்படி தலைவர் போரை எதிர் கொண்டார்?]...தலைவரது நிலைப்பாட்டில் தலைவர் சரி என்றால் ,கருணாவின் நிலைப்பாட்டில் கருணாவும் சரி தான் ...எவ்வளவு காலத்திற்கு தான் ஆயுதத்தால் போராடிக் கொண்டே இருக்கப் போகிறீர்கள் ?...சர்வதேசமும் ,இலங்கையரசும் போரை திணித்தது தான் . ஆனால் புலிகளும் அதை எதிர்பார்த்து அல்லவா இருக்க வேண்டும்? ...யுத்தத்திற்கு தயார் இல்லை என்றால் ஏதாவது சமாதான உடன்படிக்கையில் கை சாத்திட்டு விட்டு பிறகு எம்மை கொஞ்சம், கொஞ்சமாய் பலப் படுத்தி இருக்க வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

ஈழ போராட்ட்துக்கு 
ஓடிப்போனவர்கள் என்ற வரிசையில் நானும் நீங்களும் கூட துரோகம் செய்தவர்கள்தான்.
பெண் பிள்ளைகள் பாம்பு புத்துக்குள்ளாலும் முள்வேலி கண்ணிவெடிகளை கடந்து 
பாலி இனஅழிப்பு இராணுவத்தை நோக்கி நகர நாம்  கொழும்பு விமான நிலையம் நோக்கி நகர்ந்தவர்கள். 

அதுக்காக நாமும் கருணாவும் ஒன்றா?
டக்ளஸு அமீர் போன்றவர்கள் உடனிருந்து கொன்றவர்கள் இல்லை 

கருணா புலிகளுக்கு செய்த துரோகம் கூட மன்னிக்கலாம் உ
இவ்வளவு காலமும் இத்தனை இழப்புகளுக்கும் முகம் கொடுத்து 
போராட்டத்தை வளர்த்த மட்டு அம்பாறை மக்களுக்கும் போராளிகளுக்கும்
 
செய்தது துரோகம் இல்லை ...... ஒரு இழிவான மனித மனம் ஒன்று செய்ய ஒருபோதும் செய்ய துணியாதது.

இந்த குரங்குளை பற்றி பேசுவதே வீண் 

எனக்கு நீங்கள் இதில் எழுதியது விளக்கம் இல்லாமல் இருக்கிறது மருதர் ... மட்டு, அம்பாறை மக்களுக்கு கருணா நல்லது தானே செய்திருக்கிறார்... உயிர் தப்பிய 5000ம் போராளிகளைகளைத் தவிர, பலவந்தமாய்  பெடியங்களை பிடிப்பதும் நின்று போயிட்டுது அவரது பிரிவுக்கு பிறகு.
எனக்கு அந்த நேரம் ஒரே வருத்தம் என்றால் அவர் போய் மகிந்தவுடன் கூட்டு சேர்ந்தது [இது பற்றி முன்னரும் யாழில் எழுதி இருக்கன்.]....அதனால் தான் கிழக்கு மக்கள் இன்னும் அவரை முழுமையாய் ஏற்றுக் கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன் .

 

 

9 minutes ago, ரதி said:

ஏன் என்றால் அதோடு யுத்தம் முடிவடைந்து விட்டது ... கருணா , புலிகளோடு நின்றிருந்தாலும் யுத்தம் முடிவடைந்து தான் இருக்கும் என்பதை உங்களைப் போன்ற பலர் உணர மாட்டார்கள் ...இப்படியெல்லாம் சேர்ந்து அடிக்கப் போகிறோம் என்று பேச்சு வார்த்தைகளில் சொல்லி இருப்பார்கள்... யுத்தம் இனிப் பலன் தராது என்று கருணா உணர்ந்திருக்கலாம்...கருணாவின் சுயநலம் அதில் இருந்தாலும் அதில் பிழை இல்லை என்பது என் நிலைப்பாடு...தலைவர் அப்பவே உணர்ந்திருந்தால் 2009 யுத்தமே நடந்திருக்காது [சமாதான காலத்தில் அங்கிருந்த போராளிகள் எல்லோரும் குடும்ப வாழ்க்கை போன்றவற்றில் ஈடுப்பட்டார்கள்,ஒழுங்கான பயிற்சி இல்லை,போதிய ஆயுதங்கள் இல்லை .இவை எல்லாம் தெரிந்து கொண்டே எப்படி தலைவர் போரை எதிர் கொண்டார்?]...தலைவரது நிலைப்பாட்டில் தலைவர் சரி என்றால் ,கருணாவின் நிலைப்பாட்டில் கருணாவும் சரி தான் ...எவ்வளவு காலத்திற்கு தான் ஆயுதத்தால் போராடிக் கொண்டே இருக்கப் போகிறீர்கள் ?...சர்வதேசமும் ,இலங்கையரசும் போரை திணித்தது தான் . ஆனால் புலிகளும் அதை எதிர்பார்த்து அல்லவா இருக்க வேண்டும்? ...யுத்தத்திற்கு தயார் இல்லை என்றால் ஏதாவது சமாதான உடன்படிக்கையில் கை சாத்திட்டு விட்டு பிறகு எம்மை கொஞ்சம், கொஞ்சமாய் பலப் படுத்தி இருக்க வேண்டும் 

போல்ட் செய்யப்பட்ட கருத்து 100 வீதம்  சரியானது. அது நடந்துருந்தால் இன்று உள்ள நிலையை விட பல மடங்கு சிறந்த நிலையில் இருந்திருப்போம் என்பது தன் நிதர்சனம். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, MEERA said:

கோசான் மற்றவர்களின் துரோகத்திலிருந்து தமிழர்கள் மீண்டு வந்தார்கள், ஆனால் முரளிதரனின் துரோகத்திலிருந்து தமிழர்களால் மீள முடியவில்லை.

கருணா பிரிவு புலிகளுக்கு ஏற்பட்ட மிகபெரிய பின்னடைவு என்பது மறுப்பதற்கில்லை. உண்மையை சொல்லப்போனால் - ஜெயசிக்குறு சமயமே, ஜெயந்தன், அன்பரசி படையணிகள் வந்து கைகொடுத்திராவிடின் புலிகள் மரபுவழி போர் முறையை கைவிட்டு, கரந்தடி முறைமைக்கு மாறும்படி அல்லது   மரபுவழியில் போராடி அழியும்படி (2006-09 இல நடந்தது போல) ஆகியிருக்கும். ஆகவே கருணா பிரிவால் புலிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது என்பது மறுப்பதற்கில்லை. 

ஆனாலும் இந்த பிரிவின் பின்னும் புலிகளுக்கு அதன் தாக்கங்களை மட்டுப்படுத்த, உத்திகளை மாற்றி அமைக்க, வேணுமெண்டால் பிளான் A ஆகிய மரபுவழிப்போர் சரிவராத போது, பிளான் B ஆகிய கரந்தடி முறைக்கு மாற, 2005 தேர்தலில் நிதானித்து முடிவெடுக்க என பலவாய்புகள் இருந்தன. கருணா பிரிவின் பின்னரான இந்த முடிவுகளை புலிகள் சரியாக எடுத்திருந்தால் - கருணா பிரிவும், மாத்தையா சம்பவம் போல, ஒரு கணிசமான தாக்கத்தை செலுத்திய ஆனா பாரிய தாக்கத்தை கொடுக்காத சம்பவமாக போயிருக்கும்.

ஆனால் - இதை விட மோசமான “கையிறு கொடுப்புகள்” 2009 மே வரை புலிகளுக்கு கொடுக்கப்பட்டது. ஒபாமா தலையிடுவார், நோர்வே தலையிடும், இந்தியாவில் ஆட்சி மாறும், இப்படி ஒரு பகுதியாலும்.

மேலே ரஞ்சித் கூறியதை போல ஆயுத கப்பல்கள் வரவை தடுத்ததிலும்.

அண்ணை -இறங்குங்கோ இதுதான் இறுதி யுத்தம் என்றவகையிலும்,

விடுதலை புலிகளை மிக மோசமாக வழிநடத்தி (வேணுமென்றே), அவர்களை பிளான் B யை பற்றி சிந்திக்கவும் விடாமல், வழிச்சு துடைக்கும் படி ஆக்கியதில் இந்த மறைகரங்களின் பங்கு அபரிமிதமானது.

இவர்களுடன் ஒப்பிடும் போது கருணா பிரிவால் ஏற்பட்டது அதிகமில்லை.

யார் இந்த மறைகரங்கள் - கேபி வெளியால் தெரிபவர். ஏனையவர்கள் ? நீங்கள் சந்தேகிப்பவர்கள் சிலரை யோசித்துப் பாருங்கள் - நான் யோசித்துப்பார்த்ததில்- எல்லாரும் யாழ்ப்பாணத்தவர்கள்.

இப்போ சொல்லுங்கள் - போராட்டத்தின் தோல்வியில் யாரின் பங்களிப்பு மிகையானது?

On 12/20/2019 at 10:40 PM, Kapithan said:

உங்களுடய சில கருத்துக்களுடன் உடன்பட முடியவில்லை. எல்லாவற்றையும் மையவாதத்தினுள் பொமைப்படுத்துகிறீர்கள் என்கிறேன்.

பிரதேசவாதம் கதைப்போர், அவர்களின் பின்ணனி, அவர்கள் யார், அவர்கள் கல்வியின் பின்புலம், மிக முக்கியமாக எத்தகைய சந்தர்ப்பங்களில் பிரதேசவாதம் கையிலெடுக்கப்படுகிறது என்பதை நாம் ஆராயத்தவற விடுகிறோம் என நினைக்கிறேன்.

எனது பார்வையில்   சாதி, சமயம், பிரதேசவாதம், பால் வேறுபாடு, உடற் குறைபாடு போன்றவற்றினை ஆயுதமாக பாவிப்போர் உண்மையில் தங்கள் பவீனத்தை மறைப்பதற்காகவே இதனை கையிலெடுப்பதாக நம்புகிறேன்.

நான் உன்னைவிட மேலானவன் ஆதலால் நான்தான் தகுதியானவன் என்பதாகவோ அல்லது நான் தகுதியானவன் ஆனால் இதனால்தான் தோற்றேன் என்பதாகவோ அவர்களின் வாதம் இருக்கிறது. 

தோல்வியின் இறுதிக்கணத்தில் அவ்ர்கள் எல்லோரினதும் இறுதி ஆயுதம் இதுதான்.

பிரதேச, சாதி, இனவாதத்தால் பாதிக்கப்படுகிறேன் என்று பொய்யாக பாசாங்கு செய்பவர்கள் உளர். உண்மையே.

இதை இங்கே playing the race card என்பர். ஒரு வெள்ளையினமல்லாதவர், தன்னில் உள்ள பிழையை மறைக்க- குற்றம் சாட்டுபவர் தன்னை இனரீதியாக ஒதுக்கிறார் என்று பொய்க்கூச்சல் போடுவது.

அதற்க்காக பிரதேச, சாதி, இனவாதமே இல்லை என்றாகி விடாது

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

ஈழ போராட்ட்துக்கு 
ஓடிப்போனவர்கள் என்ற வரிசையில் நானும் நீங்களும் கூட துரோகம் செய்தவர்கள்தான்.
பெண் பிள்ளைகள் பாம்பு புத்துக்குள்ளாலும் முள்வேலி கண்ணிவெடிகளை கடந்து 
பாலி இனஅழிப்பு இராணுவத்தை நோக்கி நகர நாம்  கொழும்பு விமான நிலையம் நோக்கி நகர்ந்தவர்கள். 

அதுக்காக நாமும் கருணாவும் ஒன்றா?
டக்ளஸு அமீர் போன்றவர்கள் உடனிருந்து கொன்றவர்கள் இல்லை 

கருணா புலிகளுக்கு செய்த துரோகம் கூட மன்னிக்கலாம் உ
இவ்வளவு காலமும் இத்தனை இழப்புகளுக்கும் முகம் கொடுத்து 
போராட்டத்தை வளர்த்த மட்டு அம்பாறை மக்களுக்கும் போராளிகளுக்கும் 
செய்தது துரோகம் இல்லை ...... ஒரு இழிவான மனித மனம் ஒன்று செய்ய ஒருபோதும் செய்ய துணியாதது.

இந்த குரங்குளை பற்றி பேசுவதே வீண் 

உண்மைதான் வீண்வேலைதான். 

அதனால்தான் நான் பொதுவாக இவர் பற்றிய திரிகளில் கலந்து கொள்வதில்லை.

ஆனால் இங்கே இவரை வைத்து - தெரிந்தோ, தெரியாமலோ பிரதேசவாதம் முன்வைக்கப்படும் போது - அதை சுட்டிக்காட்ட வேண்டியதாகிறது.

10 hours ago, Kapithan said:

நேர்மையான ஒரு அரசியல்வாதியை உங்களால் சுட்ட முடியுமா ? 

கூறுங்கள் பார்க்கலாம்  ?

வங்காலையான் அங்கதமாக (sarcastic) எழுதியுள்ளார் என நினக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

எனக்கு நீங்கள் இதில் எழுதியது விளக்கம் இல்லாமல் இருக்கிறது மருதர் ... மட்டு, அம்பாறை மக்களுக்கு கருணா நல்லது தானே செய்திருக்கிறார்... உயிர் தப்பிய 5000ம் போராளிகளைகளைத் தவிர, பலவந்தமாய்  பெடியங்களை பிடிப்பதும் நின்று போயிட்டுது அவரது பிரிவுக்கு பிறகு.
எனக்கு அந்த நேரம் ஒரே வருத்தம் என்றால் அவர் போய் மகிந்தவுடன் கூட்டு சேர்ந்தது [இது பற்றி முன்னரும் யாழில் எழுதி இருக்கன்.]....அதனால் தான் கிழக்கு மக்கள் இன்னும் அவரை முழுமையாய் ஏற்றுக் கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன் .

 

 

அக்காச்சி,

1. இலங்கையில் ஏன் தமிழர்கள் போராட தொடங்கினர்? தம் நிலத்தை தாமே ஆள வேண்டும். குறிப்பாக தமிழர் நிலங்களில் குடியேற்றங்கள் மூலம் தமிழர் சிறுபான்மையாக்கப் படுவதை தடுக்க வேண்டும். 

2. ஆயுதப் போரின் முன் குடியேற்றம் அசுர கதியில் நடந்த்தா? ஆம்

3. போரின் போது மந்தமடைந்ததா? ஆம்

4. போரின் பின் அதி தீவிரம் அடைந்துளதா? ஆம்

5. 2009 க்கு முன் தமிழர் தம் பேரம் பேசு வலுவை தக்க முறையில் அரசியலில் பாவிக்காமல் விட்டதும், ஈற்றில் பேரம் பேசும் நிலையை முற்றாக இழந்ததுமே, இன்று போரின் பின் தமிழர் நிலங்கள் கேட்பாரன்றி பறி போக காரணமா? ஆம்.

6. தமிழ்கள் பேரம் பேசும் நிலையை இழந்தமைக்கு, இன்று நிலங்கள் பறிபோவற்கு கருணா பிரிவும் காரணங்களில் ஒன்றா? ஆம்

7. திருமலை ஏற்கனவே பறிபோன மாவட்டம். அடுத்து பறிபோகப்போகும் மாவட்டங்களை, பறிபோகும் வாய்ப்பு அடிப்படையில் வரிசைப்படுத்துக? மட்டு-அப்மாறை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம்.

8. கேள்விகள்6, 7க்கான பதில்களை உற்று நோக்கின், கருணா பிரிவால் மொத்த தமிழ இனமும் பாதிப்படைந்தாலும், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது மட்டு-அம்பாறை தமிழ் மக்களின் நீண்டகால இருப்பு அல்லவா? ஆம்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

கருணா பிரிவால் மொத்த தமிழ இனமும் பாதிப்படைந்தாலும், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது மட்டு-அம்பாறை தமிழ் மக்களின் நீண்டகால இருப்பு அல்லவா? ஆம்.

கருணா அம்மானின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி இதற்கான பதிலை “இல்லை” என்று ஆக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.