Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

கடந்த மாவீரர் தினத்தில் எனக்கு நன்கு தெரிந்த ஒரு பெண்ணைச் சந்தித்தேன். யேர்மனியில் அவர்கள் இருந்ததால் கண்டவுடன் மகிழ்வுடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது என் மகனுக்கு 27 வயது ஆறும் உங்களுக்குத் தெரிந்த பிள்ளை  இருந்தால் கூறுங்கள் என்றவுடன் மகனென்ன படித்துள்ளார் என்றேன். எலெக்ரோனிக் என்ஜினியர் ...இவ்வளவு சம்பளம் எடுக்கிறார் என்கிறார். என் மக்களும் சிவில் என்ஜினியர்தான். சாதகம் இருந்தால் தாங்கோ பொருத்தம் பார்ப்போம் என்றேன். நீங்கள் எங்களுக்குள் செய்வீங்களோ என்கிறார். எனக்கு முதலில் புரியவில்லை. ஏன் உங்களுக்கு என்ன என்றேன். இவர் வல்வெட்டித்துறை  நான் இவரை காதலித்து மணந்தது. என் அம்மா இதுவரை என்னோடு கதை பேச்சில்லை  அதுதான்.......என்று இழுத்தார். அதனால் என்ன உங்களை முன்பே எனக்குத் தெரியும்தானே. உங்களுக்கும் எங்களை பற்றித் தெரியும். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றேன். உடனே வற்சப்பில் தன் மகனின் சாதகத்தை அனுப்ப நான் என் ஒன்றுவிட்ட அண்ணாவிடம் அனுப்பினால் இரண்டு சாதகங்களும் பொருந்தவில்லை.

 

 

முற்போக்கான சிந்தனையுள்ளவர்கள் போல ஊர், பிரதேசம், சாதி, சமயம் எதுவும் பார்க்கமாட்டோம் என்று சொல்வோம். ஆனால் எவ்வளவுதான் தெரிந்திருந்தும், பழகியிருந்தும், குணநலன், நடையுடைபாவனை எல்லாம் அறிந்தும், முதலாவதாகச் சாதகம் பார்ப்பதுதான் தமிழர்களின் வேலை. இதனால் பல பொருத்தங்கள் சரியில்லை என்று கலியாணங்கள் நடப்பதில்லை. 

சாதகம் பார்க்கும் சமூகம் ஒருபோதும் தம்மை முன்னேறியவர்கள் என்று கருதமுடியாது. 

From Sophie’s World..

 

.. the ‘fortune-teller’ is trying to foresee something that is really quite unforeseeable. This is characteristic of all forms of foreseeing. And precisely because what they ‘see’ is so vague, it is hard to repudiate fortune-tellers’ claims.

When we gaze up at the stars, we see a veritable chaos of twinkling dots. Nevertheless, throughout the ages there have always been people who believed that the stars could tell us something about our life on Earth. Even today there are political leaders who seek the advice of astrologers before they make any important decisions.

  • Replies 405
  • Views 37.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

நீங்கள் கூறியதில் உண்மை இல்லாமல் இல்லை. 

இந்தப் பிரச்சனையைத் தவிர்ப்பதற்கு முடிந்த அளவு முயற்சிக்கிறேன். அதிலோன்று அவர்களை இலங்கைக்கு அடிக்கடி கூட்டிச் செல்ல முயற்சிப்பது. மற்றோன்று இலங்கையர்களுடன் முடிந்த அளவு பேச விடுவது. 

ஆனாலும் தோல்வியடைந்து விடுவேனோ என்று உள்ளூரப் பயம் 😀

பிள்ளைகளுடன் உரையாடும்போது தனித்துவமாக  இருப்பதின் சிறப்புகள்பற்றியும் கலப்பினத்தில் பிறந்த பிள்ளைகள் இழந்தவைபற்றியும் முடிந்த அளவு புரிய வைக்க முயற்சிப்பேன்.

ஆனால் முடிவு எப்படி அமையுமோ நாமறியோம் பராபரமே 🙏 

வரலாறு ஒரு காட்டாறு, அதில் மோட்டாரை போட்டு படகு ஓட்டினாலும், எதிர்திசையில் போனால், நேரமும், வலுவும்தான் விரையமாகும். ஆனாலும் உங்கள் வாழ்கை உங்கள் தெரிவு. 

கலப்பினத்தவருக்கு தனித்துவம் இல்லை என்றாகாது, எமக்கு நிகரான ஒரு தனிதுவமும், இணைந்த மரபுரிமையும் அவர்களுக்கும் உண்டு.

இப்போ எல்லாம் half-caste என்ற சொல்லை யாரும் பாவிப்பதில்லை. Dual heritage தான்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் : UCL இல. உங்கட மகன் எங்க படிச்சவர்.?

அவர் : சறே யூனிவேசிட்டி

நான்: இப்ப என்ன செய்யிறார்?

அவர்: எனக்கு 2 பெடியள் தங்கச்சி.மூத்தவன் கட்டீற்ரான். இவன் கடைக்குட்டி.
            இதுக்கு முதலும் ஒரு சம்மந்தம் வந்தது. பெட்டைச்சி கேம்பிரிச்சில படிச்சதெண்டு பெரிய      எடுப்புக்கதை.


( மூதேவி உந்த சறே யூனிவேசிட்டியில படிச்ச பிள்ளையை வச்சுக்கொண்டு அந்தக் கதை கதைக்கிறாய். அங்க படிச்ச பிள்ளை அதைச் சொன்னா அது உனக்கு எடுப்புக்கதையோ )

யூனிவேசிற்றியளுக்குள்ளேயே தராதரம் பார்த்துத்தான் கலியாணம் பேசுகிறீங்களாக்கும்! சுத்தம்😬

 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

திருமணப் பேச்சு 2

 

போன் வருகிறது

நான் : வணக்கம்

அவர் : யார் பேசிறது?

நான் : என்னுடைய பெயர் நிவேதா. உங்கள் வைப் இல்லையா?

அவர் : அவ குளிக்கிறா. நீங்கள் என்ன விசயமாய் எடுத்தனீங்கள்?

நான் : என்ர மகளுக்கு கலியாணம் பேசிறன். உங்களுக்கு மகன் இருக்கிறார் என்று சொன்னவை.

அவர்: யார் தந்தது எங்கட போன் நம்பர்

நான் : என்ர  பிரெண்ட் சுமதி.

என் மைண்ட் வொய்ஸ் (ஆர் தந்தா என்ன அலுவலைக் கதையன்)

அவர் : நீங்கள் ஊர்ல எவடம் ?

நான் : நான் இணுவில் நீங்கள் ?

அவர் :நான் சண்டிலிப்பாய் அவ கொக்குவில்.
            இணுவில்ல எவடம் ?
நான் : அம்மன் கோவிலடி. உங்கட வைபோட ஒரு அரை மணித்தியாலம் கழிச்சுக் கதைக்கட்டே.

அவர்:  அவ உடுப்பு மாத்திறா என்று நினைக்கிறன். அதுசரி உங்கட மக்கள் எங்க படிச்சவ.

நான் : UCL இல. உங்கட மகன் எங்க படிச்சவர்.?

அவர் : சறே யூனிவேசிட்டி

நான்: இப்ப என்ன செய்யிறார்?

அவர்: எனக்கு 2 பெடியள் தங்கச்சி.மூத்தவன் கட்டீற்ரான். இவன் கடைக்குட்டி.
            இதுக்கு முதலும் ஒரு சம்மந்தம் வந்தது. பெட்டைச்சி கேம்பிரிச்சில படிச்சதெண்டு பெரிய      எடுப்புக்கதை.


( மூதேவி உந்த சறே யூனிவேசிட்டியில படிச்ச பிள்ளையை வச்சுக்கொண்டு அந்தக் கதை கதைக்கிறாய். அங்க படிச்ச பிள்ளை அதைச் சொன்னா அது உனக்கு எடுப்புக்கதையோ )

நான் : அங்க படிச்சது எண்டால் கெட்டிக்கார பிள்ளையாக்கும்.

அவர் : இங்க மனிசி வந்திட்டா கதையுங்கோ.

மனைவி: உங்கட மகளுக்கே பாக்கிறியள்.

நான் : ஓம்

மனைவி : நீங்கள் இரண்டுபேரும் அரச உத்தியோகமோ பாக்கிறியள்?

நான்: இல்லை நாங்கள் சொந்தமாக்க கடை நடத்திறம்.

மனைவி : வேற ஏதும் பெடியள் இருந்தாச் சொல்லட்டே ?

நான் : சரி  

 

 

அன்ரி,

நீங்கள் கேம்பிரிட்ஜா, யூசிஎல் ஆ, சறேயா எண்டு பாக்கிறியள்.

அவர்கள் கடை நடத்துறியளா, அரச உத்தியோகமா?

என தராதரம் பாக்கினம்.

உங்கள் சம்பாசணையில் அந்தாள் ஆரம்பம் முதலே உங்களை வெட்டி விடப் பாக்கிறமாரித்தான் தெரியுது.

இப்படி தராதரம் சரி வந்தாலும், அடுத்து சாதகம் பொருந்துதா என பாக்கிறியள்.

இங்கே நடப்பது யாவாரமா? தலை சுத்துதடா  சாமி.

பிகு: இப்படி அவவிண்ட கலியாண விசயம் யாழில் அலசப்படுவது உங்கள் மகளுக்கு தெரியுமா?

என் தாயார் இப்படி என்ர கலியாண விசயத்தை பற்றி எழுதினால் நான் செம்ம கடுப்பாகி இருப்பேன் 😂

5 hours ago, கிருபன் said:
 

முற்போக்கான சிந்தனையுள்ளவர்கள் போல ஊர், பிரதேசம், சாதி, சமயம் எதுவும் பார்க்கமாட்டோம் என்று சொல்வோம். ஆனால் எவ்வளவுதான் தெரிந்திருந்தும், பழகியிருந்தும், குணநலன், நடையுடைபாவனை எல்லாம் அறிந்தும், முதலாவதாகச் சாதகம் பார்ப்பதுதான் தமிழர்களின் வேலை. இதனால் பல பொருத்தங்கள் சரியில்லை என்று கலியாணங்கள் நடப்பதில்லை. 

சாதகம் பார்க்கும் சமூகம் ஒருபோதும் தம்மை முன்னேறியவர்கள் என்று கருதமுடியாது. 

From Sophie’s World..

 

.. the ‘fortune-teller’ is trying to foresee something that is really quite unforeseeable. This is characteristic of all forms of foreseeing. And precisely because what they ‘see’ is so vague, it is hard to repudiate fortune-tellers’ claims.

When we gaze up at the stars, we see a veritable chaos of twinkling dots. Nevertheless, throughout the ages there have always been people who believed that the stars could tell us something about our life on Earth. Even today there are political leaders who seek the advice of astrologers before they make any important decisions.

உண்மையிலே, சாதி, அந்தஸ்து, பார்கிற ஆக்கள் கூட சாதகத்தை ஒரு சாட்டா பயன்படுத்துவதுண்டு.

 

13 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஏன் மனிசி மாரோட சாப்பாட்டையே ஆயுள் பூரா சாப்பிட்டு வருத்தம் வந்து இருந்த கணவன் மார்கள் இல்லையா ...? அவர்களை இந்தநிலைக்கு ஆக்கியது மனிசிமார்தான் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா ...இன்னும் கொஞ்சம் ஒரு படிமேலே போய் தெரிந்தே கணவனுக்கு நஞ்சை சமைத்து கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னால் அதையும் ஏற்பீர்களா ....? அதை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் இதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் 

உந்த சிங்கபூருக்கே உரித்தான பெரனகன் சமையலையும் வீதி ஓரச் கடைகளையும் எல்லாரும் புகழந்தாலும், எனக்கு சொல்லும் படியாக பிடிக்கவில்லை.

ஆனால் கோமளவிலாஸ் சாப்பாடு அந்த மாதிரி.

 

  • கருத்துக்கள உறவுகள்

வகை வகையான சாப்பாடு என்றால் அது கோலாலம்பூர்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

உண்மையிலே, சாதி, அந்தஸ்து, பார்கிற ஆக்கள் கூட சாதகத்தை ஒரு சாட்டா பயன்படுத்துவதுண்டு

சரிதான். Background check முடியுமட்டும் reject செய்ய ஒரு “பிடி” வேண்டும்தானே!!

என்னைப் பொறுத்தவரை arranged marriage என்பது ஒரு “யாவாரம்”தான். அப்படிக் கட்டியவர்கள் பொறுத்தருள்க🙏🏿

நம்பிக்கையில்லாத விடயங்களைக்கூட ஒரு sales pitch உடன் சொல்லவேண்டிவரும். அப்ப்டி எல்லாம் “நடிக்க” வராது. அதனால் இயலுமானவரை negotiations களுடன் சம்பந்தப்படுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

திருமணப் பேச்சு 2

 

போன் வருகிறது

நான் : வணக்கம்

அவர் : யார் பேசிறது?

நான் : என்னுடைய பெயர் நிவேதா. உங்கள் வைப் இல்லையா?

அவர் : அவ குளிக்கிறா. நீங்கள் என்ன விசயமாய் எடுத்தனீங்கள்?

நான் : என்ர மகளுக்கு கலியாணம் பேசிறன். உங்களுக்கு மகன் இருக்கிறார் என்று சொன்னவை.

அவர்: யார் தந்தது எங்கட போன் நம்பர்

நான் : என்ர  பிரெண்ட் சுமதி.

என் மைண்ட் வொய்ஸ் (ஆர் தந்தா என்ன அலுவலைக் கதையன்)

அவர் : நீங்கள் ஊர்ல எவடம் ?

நான் : நான் இணுவில் நீங்கள் ?

அவர் :நான் சண்டிலிப்பாய் அவ கொக்குவில்.
            இணுவில்ல எவடம் ?
நான் : அம்மன் கோவிலடி. உங்கட வைபோட ஒரு அரை மணித்தியாலம் கழிச்சுக் கதைக்கட்டே.

அவர்:  அவ உடுப்பு மாத்திறா என்று நினைக்கிறன். அதுசரி உங்கட மக்கள் எங்க படிச்சவ.

நான் : UCL இல. உங்கட மகன் எங்க படிச்சவர்.?

அவர் : சறே யூனிவேசிட்டி

நான்: இப்ப என்ன செய்யிறார்?

அவர்: எனக்கு 2 பெடியள் தங்கச்சி.மூத்தவன் கட்டீற்ரான். இவன் கடைக்குட்டி.
            இதுக்கு முதலும் ஒரு சம்மந்தம் வந்தது. பெட்டைச்சி கேம்பிரிச்சில படிச்சதெண்டு பெரிய      எடுப்புக்கதை.


( மூதேவி உந்த சறே யூனிவேசிட்டியில படிச்ச பிள்ளையை வச்சுக்கொண்டு அந்தக் கதை கதைக்கிறாய். அங்க படிச்ச பிள்ளை அதைச் சொன்னா அது உனக்கு எடுப்புக்கதையோ )

நான் : அங்க படிச்சது எண்டால் கெட்டிக்கார பிள்ளையாக்கும்.

அவர் : இங்க மனிசி வந்திட்டா கதையுங்கோ.

மனைவி: உங்கட மகளுக்கே பாக்கிறியள்.

நான் : ஓம்

மனைவி : நீங்கள் இரண்டுபேரும் அரச உத்தியோகமோ பாக்கிறியள்?

நான்: இல்லை நாங்கள் சொந்தமாக்க கடை நடத்திறம்.

மனைவி : வேற ஏதும் பெடியள் இருந்தாச் சொல்லட்டே ?

நான் : சரி 

இந்த சம்பாசணையின் அடிப்படையில்.. நானுக்கும் பிரித்தானிய பல்கலைக்கழகங்களின் பட்டங்கள் பற்றிய அறிவு என்பதிலும் தெளிவு போதாது. இதில் வரும்.. மனைவிக்கும்.. பிரித்தானிய அரச உத்தியோகங்களின் தன்மை குறித்து ஒரு உருப்படியான தகவலும் தெரியாது.

இதில் பாவம்.. ஒரு பொண்ணும்.. பையனும்.. இதுகளை நம்பி வாழ்க்கை தொலைச்சுக்கிட்டு இருக்குதுங்க.

நான் சொல்லக் கூடியது.. உங்க பொண்ணை அவ பாட்டில விடுங்க. அவவே பார்த்துக் கட்டிக்குவா. இங்க எல்லாரும்.. 16 ஐ பார்த்து.. 8 ஓட பழகி.. 4 கட் பண்ணி.. 1 கடைசியில கட்டுவினம். அதுவே எல்லாருக்கும் அமையட்டும். 

இத்தோடு இந்தக் கல்யாணப் பேச்சை நிறுத்துவது சாலச் சிறந்தது. ஆளாளுக்கு நீங்களே உங்களைக் காட்டிக்கொடுக்கிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

நானும் முன்பு இப்படி நினைப்பது உண்டு, ஆனால் தனது 2 வயதில் இந்த நாட்டுக்கு வந்த என் மனைவியிடம் இருந்து பல விடயங்களை அறிந்து கொண்டேன் அதில் ஒன்று:

ஊரில் வளர்ந்த எமக்கு தமிழர்களிடையே சாதி பார்ப்பது எப்படியோ அப்படித்தான் வெளிநாட்டில் வளரும் பிள்ளைகள் தமக்கிடையே இனம் பார்ப்பதையும் கருதுகிறார்கள்.

நாம் எமது பெற்றோர் சாதி பார்க்கும் போது அடைந்த விசனத்தையே இங்கே வளரும் பிள்ளைகள் நாம் இனம் பார்க்கும் போது அடைகிறார்கள்.

நிழலி, விசுகு தம் பிள்ளைகளின் கூற்றுக்கள் என கூறியவற்றை பார்த்தால் இது புரியும்.

இதனால் தம் இனத்தின் பெருமை, வராலாறு அறியாமல் அவர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல -ஆனால் அதுக்காக கலியாணம் கட்டாயம் அதே இனத்தில்தான் செய்ய வேண்டும் என்பதை அவர்களில் பலர் பிற்போக்குத்தனமாகவே பார்கிறார்கள்.

தவிரவும், முஸ்லீம்கள் எல்லாரும் அப்படித்தான், காப்பிலியை எப்படி முடிப்பது, வெள்ளைகாரன் ஒவ்வொரு நாளும் குளிக்கமாட்டன் இப்படி நாம் காவித் திரியும் பலதை அவர்கள், stereotyping என்றே பார்கிறார்கள். உண்மையும் அதுதான்.

கொஞ்ச காலத்திற்கு முன்பு திண்ணையில், மனைவி கொழும்பில் படிக்கும் போது காதலித்து திருமணம் செய்தீர்கள் என்று எழுதிய நினைவு...தற்போது இப்படி எழுதுகிறீர்கள் ...எதையா உண்மை 🤔
 

15 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஏன் மனிசி மாரோட சாப்பாட்டையே ஆயுள் பூரா சாப்பிட்டு வருத்தம் வந்து இருந்த கணவன் மார்கள் இல்லையா ...? அவர்களை இந்தநிலைக்கு ஆக்கியது மனிசிமார்தான் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா ...இன்னும் கொஞ்சம் ஒரு படிமேலே போய் தெரிந்தே கணவனுக்கு நஞ்சை சமைத்து கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னால் அதையும் ஏற்பீர்களா ....? அதை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் இதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் 

நீங்கள் சொன்ன மாதிரி பெண்களும் இருக்கிறார்கள்.ஏற்றுக் கொள்கிறேன்...ஆனால் உங்களுக்கு என்ன பிரச்சனை?...அண்மையில் தான் திருமணம் செய்தீர்கள்?  

 

1 hour ago, nedukkalapoovan said:

இந்த சம்பாசணையின் அடிப்படையில்.. நானுக்கும் பிரித்தானிய பல்கலைக்கழகங்களின் பட்டங்கள் பற்றிய அறிவு என்பதிலும் தெளிவு போதாது. இதில் வரும்.. மனைவிக்கும்.. பிரித்தானிய அரச உத்தியோகங்களின் தன்மை குறித்து ஒரு உருப்படியான தகவலும் தெரியாது.

இதில் பாவம்.. ஒரு பொண்ணும்.. பையனும்.. இதுகளை நம்பி வாழ்க்கை தொலைச்சுக்கிட்டு இருக்குதுங்க.

நான் சொல்லக் கூடியது.. உங்க பொண்ணை அவ பாட்டில விடுங்க. அவவே பார்த்துக் கட்டிக்குவா. இங்க எல்லாரும்.. 16 ஐ பார்த்து.. 8 ஓட பழகி.. 4 கட் பண்ணி.. 1 கடைசியில கட்டுவினம். அதுவே எல்லாருக்கும் அமையட்டும். 

இத்தோடு இந்தக் கல்யாணப் பேச்சை நிறுத்துவது சாலச் சிறந்தது. ஆளாளுக்கு நீங்களே உங்களைக் காட்டிக்கொடுக்கிறீர்கள். 

அது யார்  நானு சுமோவா

  • கருத்துக்கள உறவுகள்

 

4 hours ago, கிருபன் said:

யூனிவேசிற்றியளுக்குள்ளேயே தராதரம் பார்த்துத்தான் கலியாணம் பேசுகிறீங்களாக்கும்! சுத்தம்😬

 

நானும் நிறைய தமிழாக்கள் இங்கே தங்கட பிள்ளைகளது யூனிவசிற்சி பற்றி பீத்தறதை கேட்டு இருக்கன்  
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஏன் மனிசி மாரோட சாப்பாட்டையே ஆயுள் பூரா சாப்பிட்டு வருத்தம் வந்து இருந்த கணவன் மார்கள் இல்லையா ...? அவர்களை இந்தநிலைக்கு ஆக்கியது மனிசிமார்தான் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா ...இன்னும் கொஞ்சம் ஒரு படிமேலே போய் தெரிந்தே கணவனுக்கு நஞ்சை சமைத்து கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னால் அதையும் ஏற்பீர்களா ....? அதை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் இதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் 

கொஞ்சம் விவரமாகச் சொன்னால்த்தானே எமக்குப் புரியும்

9 hours ago, கிருபன் said:
 

முற்போக்கான சிந்தனையுள்ளவர்கள் போல ஊர், பிரதேசம், சாதி, சமயம் எதுவும் பார்க்கமாட்டோம் என்று சொல்வோம். ஆனால் எவ்வளவுதான் தெரிந்திருந்தும், பழகியிருந்தும், குணநலன், நடையுடைபாவனை எல்லாம் அறிந்தும், முதலாவதாகச் சாதகம் பார்ப்பதுதான் தமிழர்களின் வேலை. இதனால் பல பொருத்தங்கள் சரியில்லை என்று கலியாணங்கள் நடப்பதில்லை. 

சாதகம் பார்க்கும் சமூகம் ஒருபோதும் தம்மை முன்னேறியவர்கள் என்று கருதமுடியாது. 

From Sophie’s World..

 

.. the ‘fortune-teller’ is trying to foresee something that is really quite unforeseeable. This is characteristic of all forms of foreseeing. And precisely because what they ‘see’ is so vague, it is hard to repudiate fortune-tellers’ claims.

When we gaze up at the stars, we see a veritable chaos of twinkling dots. Nevertheless, throughout the ages there have always been people who believed that the stars could tell us something about our life on Earth. Even today there are political leaders who seek the advice of astrologers before they make any important decisions.

வாழ்க்கை என்பது நீண்டது. எமது முற்போக்குச் சிந்தனை எம் பிள்ளைகள் வாழ்வை சீரழித்துவிடக்கூடாது என்னும் பயம் தான். இத்தனைக்கும் என் பெற்றோர், நான் எல்லாம் காதல் திருமணம் தான். ஆனால் என் ஒரு தம்பியும் தங்கையும் பேசிக் செய்த திருமணம் தான். நன்றாகத்தான் வாழ்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

யூனிவேசிற்றியளுக்குள்ளேயே தராதரம் பார்த்துத்தான் கலியாணம் பேசுகிறீங்களாக்கும்! சுத்தம்😬

 

பலரும் கேட்பது அப்பிடித்தான். நல்ல பல்கலைக்கழகங்களில் படித்திருக்கும் ஆண்கள் Russell Group யூனிவேசிற்றியில் படித்தார்களா என்றெல்லாம் கேட்பார்கள். 

3 hours ago, goshan_che said:

அன்ரி,

நீங்கள் கேம்பிரிட்ஜா, யூசிஎல் ஆ, சறேயா எண்டு பாக்கிறியள்.

அவர்கள் கடை நடத்துறியளா, அரச உத்தியோகமா?

என தராதரம் பாக்கினம்.

உங்கள் சம்பாசணையில் அந்தாள் ஆரம்பம் முதலே உங்களை வெட்டி விடப் பாக்கிறமாரித்தான் தெரியுது.

இப்படி தராதரம் சரி வந்தாலும், அடுத்து சாதகம் பொருந்துதா என பாக்கிறியள்.

இங்கே நடப்பது யாவாரமா? தலை சுத்துதடா  சாமி.

பிகு: இப்படி அவவிண்ட கலியாண விசயம் யாழில் அலசப்படுவது உங்கள் மகளுக்கு தெரியுமா?

என் தாயார் இப்படி என்ர கலியாண விசயத்தை பற்றி எழுதினால் நான் செம்ம கடுப்பாகி இருப்பேன் 😂

உண்மையிலே, சாதி, அந்தஸ்து, பார்கிற ஆக்கள் கூட சாதகத்தை ஒரு சாட்டா பயன்படுத்துவதுண்டு.

 

இப்ப நான் இந்தக் கேள்விக்குப் பதில் எழுதவில்லை கோசான். பிறகு எழுntதிறன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

இந்த சம்பாசணையின் அடிப்படையில்.. நானுக்கும் பிரித்தானிய பல்கலைக்கழகங்களின் பட்டங்கள் பற்றிய அறிவு என்பதிலும் தெளிவு போதாது. இதில் வரும்.. மனைவிக்கும்.. பிரித்தானிய அரச உத்தியோகங்களின் தன்மை குறித்து ஒரு உருப்படியான தகவலும் தெரியாது.

இதில் பாவம்.. ஒரு பொண்ணும்.. பையனும்.. இதுகளை நம்பி வாழ்க்கை தொலைச்சுக்கிட்டு இருக்குதுங்க.

நான் சொல்லக் கூடியது.. உங்க பொண்ணை அவ பாட்டில விடுங்க. அவவே பார்த்துக் கட்டிக்குவா. இங்க எல்லாரும்.. 16 ஐ பார்த்து.. 8 ஓட பழகி.. 4 கட் பண்ணி.. 1 கடைசியில கட்டுவினம். அதுவே எல்லாருக்கும் அமையட்டும். 

இத்தோடு இந்தக் கல்யாணப் பேச்சை நிறுத்துவது சாலச் சிறந்தது. ஆளாளுக்கு நீங்களே உங்களைக் காட்டிக்கொடுக்கிறீர்கள். 

இது எனக்கு மட்டுமான பிரச்சனை இல்லை நெடுக்ஸ். எனது நடப்புவட்டம், ஊர்வட்டம், தெரிந்தவர், போனவர் எனப் பலரின் பிரச்சனையாகிவிட்டது. இது என் பிள்ளைகளுக்குத் திருமணமாகவில்லை என்பதற்காகத் திறக்கப்பட்ட திரி அல்ல. நாட்டு நடப்பு எப்படி இருக்கு என்று மற்றவர்களுக்கு கூறுவதற்காகத் திறந்தது. எங்கள் இளையவர்கள் மனவோட்டம் பெற்ரோரின் மனம் எப்படியெல்லாமிருக்கிறது என்று அலசுவதற்காகத் திறந்தேன்.

எங்களில ஒரு பிரச்சனை ஒன்றை எழுதினால் அதை உடனே எழுதுபவருடன் முடிச்சுப்போடுவது. 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

வரலாறு ஒரு காட்டாறு, அதில் மோட்டாரை போட்டு படகு ஓட்டினாலும், எதிர்திசையில் போனால், நேரமும், வலுவும்தான் விரையமாகும். ஆனாலும் உங்கள் வாழ்கை உங்கள் தெரிவு. 

கலப்பினத்தவருக்கு தனித்துவம் இல்லை என்றாகாது, எமக்கு நிகரான ஒரு தனிதுவமும், இணைந்த மரபுரிமையும் அவர்களுக்கும் உண்டு.

இப்போ எல்லாம் half-caste என்ற சொல்லை யாரும் பாவிப்பதில்லை. Dual heritage தான்.

நான் கூறும் அடையாளம் என்பது Originally. தமிழர் தமிழராகவும் சிங்களவர் சிங்களவராகவும் இருப்பது.  பல்வேறு இந்திய வம்சாவளியினரின் வீடுகளிற்குச் சென்றுள்ளேன். அவர்கள் தமது வேர்களைத் தொலைத்து அதன் அடியாக அவர்கள் தமது டையாளத்த மீள் நிறுவுவதற்காகவும் அடையாளத்தை இனம் காண்பதற்காகவும் படும் அவஸ்தை எழுத்தில் வடிக்க முடியாதது. 

இழப்பின் அவஸ்தையை அவர்களிடம் நேரடியாகக் கண்டவன். 
காலம் எல்லாவற்றையும் மாற்றும் குணப்படுத்தும் என்பது உண்மைதான். 

ஆனால் கண்முன்னே எனது குழந்தைகள் தங்கள் அடையாளத்தைத் தொலைத்து நிற்பதை பார்க்கும் தைரியம் எனக்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

கொஞ்ச காலத்திற்கு முன்பு திண்ணையில், மனைவி கொழும்பில் படிக்கும் போது காதலித்து திருமணம் செய்தீர்கள் என்று எழுதிய நினைவு...தற்போது இப்படி எழுதுகிறீர்கள் ...எதையா உண்மை 🤔
 

கொழும்பில் படித்தேன் என எழுதியிருப்பேன்.

கொழும்பில் காதலித்தேன் எனவும் எழுதி இருப்பேன்.

ஆனால் கொழும்பில் காதலித்தவரை கல்யாணம் செய்தேன் என எழுதி இருக்க மாட்டேன் 🤭🤣

2 hours ago, ரதி said:

 

நானும் நிறைய தமிழாக்கள் இங்கே தங்கட பிள்ளைகளது யூனிவசிற்சி பற்றி பீத்தறதை கேட்டு இருக்கன்  
 

சறே அப்படி ஒன்றும் குறைந்த யூனியும் இல்லை. சில பாடத்திட்டங்களில் பேர்போன  யூனிகளை விட, சறேயின் ஆய்வு தகுதி அதிகம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kapithan said:

நான் கூறும் அடையாளம் என்பது Originally. தமிழர் தமிழராகவும் சிங்களவர் சிங்களவராகவும் இருப்பது.  பல்வேறு இந்திய வம்சாவளியினரின் வீடுகளிற்குச் சென்றுள்ளேன். அவர்கள் தமது வேர்களைத் தொலைத்து அதன் அடியாக அவர்கள் தமது டையாளத்த மீள் நிறுவுவதற்காகவும் அடையாளத்தை இனம் காண்பதற்காகவும் படும் அவஸ்தை எழுத்தில் வடிக்க முடியாதது. 

இழப்பின் அவஸ்தையை அவர்களிடம் நேரடியாகக் கண்டவன். 
காலம் எல்லாவற்றையும் மாற்றும் குணப்படுத்தும் என்பது உண்மைதான். 

ஆனால் கண்முன்னே எனது குழந்தைகள் தங்கள் அடையாளத்தைத் தொலைத்து நிற்பதை பார்க்கும் தைரியம் எனக்கில்லை.

நானும் அதே அடையாளத்தைதான் சொல்கிறேன்.

ஒரு விடயம் சொல்கிறேன் முடிந்தால், விரும்பினால் செய்து பாருங்கள். இப்போ ஆன்லைனில் DNA பரிசோதனை செய்யும் வசதி வந்து விட்டது. 

சும்மா செய்து பாருங்கள் - உங்கள் originality பற்றி நீங்கள் எழுப்பிய பல பிம்பங்கள் சுக்கலாக உடையும்.

எனது நண்பர் ஒருவர் - பயங்கர இஸ்லாமிய வெறுப்புள்ள ஒரு சீக்கியர். டெஸ்ட் செய்துபார்த்தால் அவரின் மரபுரிமையிக் 2.5% அளவில் அரேபிய டிஎன்ஏ😂.

இங்கே ஒரிஜினல் தமிழன், ஒரிஜினல் சிங்களவன், ஒரிஜினல் ஆங்கிலேயன் என்று யாருமில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நானும் அதே அடையாளத்தைதான் சொல்கிறேன்.

ஒரு விடயம் சொல்கிறேன் முடிந்தால், விரும்பினால் செய்து பாருங்கள். இப்போ ஆன்லைனில் DNA பரிசோதனை செய்யும் வசதி வந்து விட்டது. 

சும்மா செய்து பாருங்கள் - உங்கள் originality பற்றி நீங்கள் எழுப்பிய பல பிம்பங்கள் சுக்கலாக உடையும்.

எனது நண்பர் ஒருவர் - பயங்கர இஸ்லாமிய வெறுப்புள்ள ஒரு சீக்கியர். டெஸ்ட் செய்துபார்த்தால் அவரின் மரபுரிமையிக் 2.5% அளவில் அரேபிய டிஎன்ஏ😂.

இங்கே ஒரிஜினல் தமிழன், ஒரிஜினல் சிங்களவன், ஒரிஜினல் ஆங்கிலேயன் என்று யாருமில்லை.

நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம் ஆனால் இப்போது நானும் எனது பிள்ளைகளும்  தமிழர்.. அந்த அடையாளத்தை இறக்கும்வரை இழக்க விரும்பவில்லை.

எல்லோரும் தங்கள் அடையாளத்தை இழக்கத் தயாராகும்போது நானும் தயாராவேன்.

 

மொழியும் எங்கள் பழக்க வழக்கங்களும்தான் எமங்கள்  அடையாளம். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

நீங்கள் சொன்ன மாதிரி பெண்களும் இருக்கிறார்கள்.ஏற்றுக் கொள்கிறேன்...ஆனால் உங்களுக்கு என்ன பிரச்சனை?...அண்மையில் தான் திருமணம் செய்தீர்கள்?  

இல்லை ...சும்மா கேட்டு பார்த்தேன் ...எதுக்கெடுத்தாலும் ஆணை குறை கூறும் போக்கு தான் தொடர்கிறதா 
இல்லை பெண்கள் பக்கம் பிழைகள் இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறீர்ர்களா என்று அறியத்தான் ...
நமது மனிசிக்கு சமைக்கவே தெரியாது ,அந்த வகையில் தப்பிச்சுட்டேன் ஒரு வகையில் அதனால் முதிர்ச்சியும் வந்திட்டு ஒருவேளை மனிசிக்கு சமைக்கத்தெரிஞ்சிருந்தால் சமையலில் அவர்மீது தங்கியிருப்பதால் முதிர்ச்சி குறைந்திருக்கும், என்ன இப்போதைக்கு  புருஷனை அளவுக்கதிமாக பிடிச்சுப்போய் அத்தான் ..இண்டைக்கு உங்களுக்கு பிடித்ததை சமைத்திருக்கிறேன் என்று நம்மளை ஆய்வு கூட எலியாக்காமல் இருந்தாலே போதும்  

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

சரிதான். Background check முடியுமட்டும் reject செய்ய ஒரு “பிடி” வேண்டும்தானே!!

என்னைப் பொறுத்தவரை arranged marriage என்பது ஒரு “யாவாரம்”தான். அப்படிக் கட்டியவர்கள் பொறுத்தருள்க🙏🏿

நம்பிக்கையில்லாத விடயங்களைக்கூட ஒரு sales pitch உடன் சொல்லவேண்டிவரும். அப்ப்டி எல்லாம் “நடிக்க” வராது. அதனால் இயலுமானவரை negotiations களுடன் சம்பந்தப்படுவதில்லை.

 arranged marriage என்பது ஒரு “யாவாரம்”தான்.

காதல் திருமணத்தில்  ஒன்றும்  பார்ப்பதில்லையா???

ஆகக்குறைந்தது அழகாவது  இருக்குமே?????

17 hours ago, goshan_che said:

கொழும்பில் படித்தேன் என எழுதியிருப்பேன்.

கொழும்பில் காதலித்தேன் எனவும் எழுதி இருப்பேன்.

ஆனால் கொழும்பில் காதலித்தவரை கல்யாணம் செய்தேன் என எழுதி இருக்க மாட்டேன் 🤭🤣

இப்ப நீங்களும் மைண்ட் வொய்சில பேசிறதென்று நினைத்து இங்கே எழுதிவிட்டமாதிரி இருக்கு !! 😂

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பது எல்லோராலும் அங்கீகரிக்கபட்ட ஒரு விபச்சாரம் 
----------------------------------------------------------------------அருந்ததி ராய்----------------

முன்பும் ஒரு திரியில் இப்படி ஒரு தவறான கண்ணோட்டமும் 
எழுத்துக்களும் இருந்ததால் இதை எழுதுகிறேன் 
ஒரு சமூக வெளியில் ஒருவர் திரி திறந்து ஒரு திறந்த வெளியில் பேச வரும்போது 
அந்த கருவை அவரின் சொந்த வீட்டு பிரச்சனையாக மட்டும் தயவு செய்து பார்க்காதீர்கள் 
ஒரு சமூக விடயமாக கருத்தில்கொண்டு  கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
அது யாழ் களத்தில் உறவை மேம்படுத்தும் என்பது எனது எண்ணம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/28/2020 at 3:55 PM, goshan_che said:

இதை சொல்லும் பருவம் இன்னும் என்ர ஆளுக்கு இல்லை.

ஆனால் நாளைக்கு இன்னொரு ஆணை காட்டி- இவன் தான் என் வாழ்க்கைத்துணை என்று காட்டினாலும் - விதியே என்று ஏற்கத்தான் வேண்டும் என்ற நிலைக்கு நான் இப்பவே வந்து விட்டேன்.

என்ன எமது ஆக்களிடம் இருந்து விலகி போ, நானும் உன்னுடன் வாறேன், நம்மை யாரும் அதிகம் அறியாத ஒரு ஊரில் போய் நீ விரும்பியபடி வாழலாம் ( இது என்னால் எனது சமூகத்தில் இதை முகம் கொடுக்க முடியாதமையால் மட்டுமே) என்றுதான் சொல்வேனோ ஒழிய அவரின் விருப்பத்துக்கு குறுக்கே நிற்கப்போவதில்லை.

அப்படி நிற்பதால் ஒரு சில மனமுறிவுகள், தற்கொலைகளை தவிர வேறு எதையும் நான் சாதிக்க போவதில்லை என்ற தெளிவு எனக்கு உண்டு.

இங்கு அமெரிக்காவில் யாழ்ப்பாண தமிழ் பெண்கள் மூன்று பேர் எனக்கு தெரிய 
பெண்களை திருமணம் முடித்து மகிழ்ச்சியாக (என்றுதான் நினைக்கிறேன்) வாழ்கிறார்கள் 
ஒரு குடும்பத்துக்கு இரண்டு பிள்ளைகளும் உண்டு (எவ்வாறு என்பது எனக்கே தெரியவில்லை... ஆதலால் என்னை கேட்க்காதீர்கள்  ஊசி மூலம் ஸ்பெர்ம் ஏற்றி இருக்கலாம்) 
பேஸ்புக் மற்றும் சோசியல் மீடியா எல்லாவற்றிலும் பகிரங்கமாகவே இருக்கிறார்கள் 
நாங்களும் எல்லோரும் ஒரே மாதிரிதான் பழகுகிறோம் எல்லா நிகழ்வுகளுக்கும்  பெண்ணும் பெண்ணும் சோடியாகத்தான் வருவார்கள் போவார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

நான் கூறும் அடையாளம் என்பது Originally. தமிழர் தமிழராகவும் சிங்களவர் சிங்களவராகவும் இருப்பது.  பல்வேறு இந்திய வம்சாவளியினரின் வீடுகளிற்குச் சென்றுள்ளேன். அவர்கள் தமது வேர்களைத் தொலைத்து அதன் அடியாக அவர்கள் தமது டையாளத்த மீள் நிறுவுவதற்காகவும் அடையாளத்தை இனம் காண்பதற்காகவும் படும் அவஸ்தை எழுத்தில் வடிக்க முடியாதது. 

இழப்பின் அவஸ்தையை அவர்களிடம் நேரடியாகக் கண்டவன். 
காலம் எல்லாவற்றையும் மாற்றும் குணப்படுத்தும் என்பது உண்மைதான். 

ஆனால் கண்முன்னே எனது குழந்தைகள் தங்கள் அடையாளத்தைத் தொலைத்து நிற்பதை பார்க்கும் தைரியம் எனக்கில்லை.

நீங்கள் கூறுவது சரிதான். எல்லா இனத்துக்கும் ஒரு தனித்துவம் இருந்தாலும் எம் தனித்துவத்தைப் பேணுவதும் அடுத்த தலைமுறைக்கு கடத்துவதும் மிக அவசியமானது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் கூறுவது சரிதான். எல்லா இனத்துக்கும் ஒரு தனித்துவம் இருந்தாலும் எம் தனித்துவத்தைப் பேணுவதும் அடுத்த தலைமுறைக்கு கடத்துவதும் மிக அவசியமானது.

இதை ஊரை விட்டு கிளம்ப முன் யோசித்திருக்க வேண்டும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

கொழும்பில் படித்தேன் என எழுதியிருப்பேன்.

கொழும்பில் காதலித்தேன் எனவும் எழுதி இருப்பேன்.

ஆனால் கொழும்பில் காதலித்தவரை கல்யாணம் செய்தேன் என எழுதி இருக்க மாட்டேன் 🤭🤣

சறே அப்படி ஒன்றும் குறைந்த யூனியும் இல்லை. சில பாடத்திட்டங்களில் பேர்போன  யூனிகளை விட, சறேயின் ஆய்வு தகுதி அதிகம்.

சறேயையும் கேம்பிரிச்சையும் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் படித்து முடித்து வேலைக்கு நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்போது எங்கு படித்த மாணவனுக்கு அதிக சந்தர்ப்பம் என்பது உங்களுக்கும் தெரியும் தானே. எழுதவேண்டும் என்பதற்காக எழுதக்கூடாது 😀

1 minute ago, goshan_che said:

இதை ஊரை விட்டு கிளம்ப முன் யோசித்திருக்க வேண்டும்.

 

ஊரை வீட்டுக் கிளம்பும்போது உதையெல்லாம் யோசிக்கும் வயதா ??அல்லது அறிவா ???😀

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சறேயையும் கேம்பிரிச்சையும் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் படித்து முடித்து வேலைக்கு நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்போது எங்கு படித்த மாணவனுக்கு அதிக சந்தர்ப்பம் என்பது உங்களுக்கும் தெரியும் தானே. எழுதவேண்டும் என்பதற்காக எழுதக்கூடாது 😀

என்ன படித்தீர்கள் என்பதிலும் இருக்கிறது அக்கா 
அந்த அந்த துறையில் இருப்பவர்களுக்கு எந்த பாடசாலையில் இதை 
எவ்வாறு கற்பிக்கிறார்கள் என்பது தெரியும் (அவர்கள்தான் நேர்முக தேர்வில் இறுதி முடிவு எடுப்பது)
நீங்கள் எழுதுவது பொதுவானது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.