Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும் – இரா.சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும் – இரா.சம்பந்தன்

r-sampanthan.jpg

வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெற்று பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும். இதுவே எமது இலக்கு. இதற்கு எமது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இந்தத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். அதனால் தரமான வேட்பாளர்களை நாங்கள் களமிறக்குகின்றோம். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கும் உரிய இடம் வழங்கப்பட்டிருக்கின்றது. வடக்கு, கிழக்கு எங்கும் எமது தேர்தல் பரப்புரைகள் முன்னெடுக்கப்படும். கிராமங்கள் தோறும் சென்று எமது நிலைப்பாடுகளை மக்களிடம் தெரிவிப்போம் என நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் சர்வதேசம் இன்று எங்கள் பக்கம் நிற்கின்றது. உண்மை, நீதி, நியாயம் மற்றும் அரசியல் தீர்வு வேண்டும் என்பதில் சர்வதேசம் உறுதியாக நிற்கின்றது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைக்கும் ஆசனங்களைக் குறைக்கும் நோக்கத்துடன் அரசின் ஆதரவுடனும் வெளிச்சக்திகளின் ஆதரவுடனும் வடக்கு, கிழக்கில் இம்முறை பல கட்சிகள் களமிறக்கப்பட்டுள்ளன.

கூட்டமைப்புக்குத் துரோகம் இழைத்தவர்களும், தமிழினப் போராட்டத்துக்குத் துரோகம் இழைத்தவர்களும் இந்தத் தேர்தலில் களமிறங்குகின்றார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு எமது மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வென்றெடுக்கக்கூடியதான வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவரும்.

இந்தத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். அதனால் தரமான வேட்பாளர்களை நாங்கள் களமிறக்குகின்றோம். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கும் உரிய இடம் வழங்கப்பட்டிருக்கின்றது. வடக்கு, கிழக்கு எங்கும் எமது தேர்தல் பரப்புரைகள் முன்னெடுக்கப்படும். கிராமங்கள் தோறும் சென்று எமது நிலைப்பாடுகளை மக்களிடம் தெரிவிப்போம்.

சர்வதேசம் இன்று எங்கள் பக்கம் நிற்கின்றது. உண்மை, நீதி, நியாயம் மற்றும் அரசியல் தீர்வு வேண்டும் என்பதில் சர்வதேசம் உறுதியாக நிற்கின்றது.பொதுத்தேர்தலில் 20 ஆசனங்களைக் கூட்டமைப்பு கைப்பற்ற அனைத்துத் தமிழ் மக்களும் தங்கள் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். இறுதியாக எம்மிடம் மிஞ்சி இருக்கின்ற ‘வாக்குரிமை’ என்ற ஆயுதத்தை உரிய வகையில் எமது மக்கள் பயன்படுத்த வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்த்-தேசியக்-கூட்டமை-15/

  • கருத்துக்கள உறவுகள்

எலெக்சன் வந்துட்டா சின்ராசுவ கையிலையே புடிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

சர்வதேசம் இன்று எங்கள் பக்கம் நிற்கின்றது. உண்மை, நீதி, நியாயம் மற்றும் அரசியல் தீர்வு வேண்டும் என்பதில் சர்வதேசம் உறுதியாக நிற்கின்றது.பொதுத்தேர்தலில் 20 ஆசனங்களைக் கூட்டமைப்பு கைப்பற்ற அனைத்துத் தமிழ் மக்களும் தங்கள் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். இறுதியாக எம்மிடம் மிஞ்சி இருக்கின்ற ‘வாக்குரிமை’ என்ற ஆயுதத்தை உரிய வகையில் எமது மக்கள் பயன்படுத்த வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

கஜாவிற்கு கொஞ்சமும் சளைத்தவரில்லை என்று வரிக்கு வரி நிரூபிக்கிறீர்களே ஜயா ....
அந்த சர்வதேசம் யாரென்று கொஞ்சம் புட்டு புட்டு வைப்பீர்களோ ...சவேந்திர சில்வாவிற்கு பயணத்தடை விதித்தவுடனே சர்வதேசம் தமிழர் பக்கம் வந்துவிட்டதோ ....? எங்களையெல்லாம் பார்த்தால் உங்களுக்கு  🤬🤬

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

தமிழினப் போராட்டத்துக்குத் துரோகம் இழைத்தவர்களும் இந்தத் தேர்தலில் களமிறங்குகின்றார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு எமது மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

C767091-E-5-E88-439-B-A50-B-3-B787-E8-F9

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சியாக இருந்தே ஒன்றையும் பெறவில்லை. இனி பேரம் பேசும் சக்தியாக வந்து பெட்டியை வாங்க தான் சரி.

7 hours ago, கிருபன் said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும் – இரா.சம்பந்தன்

ஏன் கிடைக்கும் மில்லியன்கள் பில்லியன்களாக மாற்ற ஆசையோ?
சாகப்போற வயசில ஏனய்யா உங்களுக்கு இந்த ஆசை எல்லாம்?

  • கருத்துக்கள உறவுகள்

த.தே.கூட்டமைப்பை பலப்படுத்தவேணும் என்பதில உங்கள் அனைவரின் சுயநலமே தெரிகிறது. மற்ற புதியவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கி பார்ப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏகக்கட்சியாக இருந்து

மைத்திரியையும்

கோத்தாவையும் ஐனாதிபதியாக்கியதைத்தவிர இந்த 11 வருடங்களில்  என்னத்தை  கிழித்தீர்கள்  எனச்சொல்லுங்கள் முதலில்???

Edited by விசுகு

8 hours ago, கிருபன் said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும் – இரா.சம்பந்தன்

r-sampanthan.jpg

 

சர்வதேசம் இன்று எங்கள் பக்கம் நிற்கின்றது. உண்மை, நீதி, நியாயம் மற்றும் அரசியல் தீர்வு வேண்டும் என்பதில் சர்வதேசம் உறுதியாக நிற்கின்றது.பொதுத்தேர்தலில் 20 ஆசனங்களைக் கூட்டமைப்பு கைப்பற்ற அனைத்துத் தமிழ் மக்களும் தங்கள் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். இறுதியாக எம்மிடம் மிஞ்சி இருக்கின்ற ‘வாக்குரிமை’ என்ற ஆயுதத்தை உரிய வகையில் எமது மக்கள் பயன்படுத்த வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்த்-தேசியக்-கூட்டமை-15/

ஒரு இழவும் வேண்டாம்... இப்படி சொல்லி சொல்லியே 40 வருடங்களுக்கும் மேல் புடுங்கின ஆணி எல்லாமே தேவையில்லாதா ஆணிகள் மாத்திரமே

கிடைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏற்ப அரசுடன் இணைந்து ஒன்றிரண்டு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்று வடக்கு கிழக்கை முன்னேற்ற முயன்றாலே கோடி நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஒரு இழவும் வேண்டாம்... இப்படி சொல்லி சொல்லியே 40 வருடங்களுக்கும் மேல் புடுங்கின ஆணி எல்லாமே தேவையில்லாதா ஆணிகள் மாத்திரமே

கிடைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏற்ப அரசுடன் இணைந்து ஒன்றிரண்டு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்று வடக்கு கிழக்கை முன்னேற்ற முயன்றாலே கோடி நன்றிகள்.

முரளிதரன்

பிள்ளையான்

டக்லசு மாதிரியா???

3 minutes ago, விசுகு said:

முரளிதரன்

பிள்ளையான்

டக்லசு மாதிரியா???

மூவரும் மோசமான உதாரணங்கள்.

ஆனாலும் சமஷ்டி பெற்றுத் தருவோம், வடக்கு கிழக்கை இணைத்து தருவோம் என்று தம்மால் முடியாத விடயங்களை சொல்லி சொல்லி காலத்தை கடத்துவதை விட அமைச்சுப் பதவிகளை பெற்றாவது தாம் சார்ந்த வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்து தம் மக்கள் பொருளாதார சுபூட்சம் பெற உதவுவது பல மடங்கு மேலானதும் சாத்தியமானதுமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

மூவரும் மோசமான உதாரணங்கள்.

ஆனாலும் சமஷ்டி பெற்றுத் தருவோம், வடக்கு கிழக்கை இணைத்து தருவோம் என்று தம்மால் முடியாத விடயங்களை சொல்லி சொல்லி காலத்தை கடத்துவதை விட அமைச்சுப் பதவிகளை பெற்றாவது தாம் சார்ந்த வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்து தம் மக்கள் பொருளாதார சுபூட்சம் பெற உதவுவது பல மடங்கு மேலானதும் சாத்தியமானதுமாகும்.

இல்லைச்சகோ

நானும் ஒரு காரணமாகத்தான்  கேட்டேன்

ஏனெனில் மக்களுக்கு  அந்தத்தெரிவு ஏற்கனவே  உண்டு

ஆனால் இவர்களிடம்  மக்கள்  பொறுப்பைக்கொடுப்பது 

உரிமையையும் விட்டுக்கொடுக்காது சலுகைகளையும்  பெறும்படி  தான்

ஆனால் என்ன  நடக்குது  என்றால் உரிமையை  விட்டுக்கொடுத்தபடி  சலுகைகளை  அவர்கள் தமக்கு  மட்டும்  பெற்றுக்கொள்கிறார்கள்.

இது  தொடர்ந்தால்......???

அது  தான் எனது  பயம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும் ...அவர் சரியாதான் எல்லாத்தையும் சொல்லுறார் ...நீங்கள் தான் தவறாக புறிந்துகொள்கிறீர்கள் 
"பேரம் பேசுறது " என்று அவர் சொல்வது அவருடைய தேவை எதோ அதை மட்டும் தான்.
அஞ்சோ , பத்தோ ,  வீடோ , பங்களாவோ , பதவியோ, சலுகையோ ...  

6 hours ago, Sasi_varnam said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும் ...அவர் சரியாதான் எல்லாத்தையும் சொல்லுறார் ...நீங்கள் தான் தவறாக புறிந்துகொள்கிறீர்கள் 
"பேரம் பேசுறது " என்று அவர் சொல்வது அவருடைய தேவை எதோ அதை மட்டும் தான்.
அஞ்சோ , பத்தோ ,  வீடோ , பங்களாவோ , பதவியோ, சலுகையோ ...  

தமிழன் உரிமைகளை வித்ததுக்கு சன்மானமா சொறிலங்கா அரசு சம்பந்தனுக்கு கொழும்புல கிடைச்ச சொகுசு வீடு போதல்ல.  
குகதாசன் கனடால சுருட்டி சம்பந்தனுக்கு கொடுத்த கோடிகளும் அவருக்கு போதல்ல.  
மனுஷன் தமிழினத்தை இன்னும் அழிச்சே தீருவன் என்டு ஒற்றை காலில நிக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.