Jump to content

கொரோனாவின் தாக்கம் – இலங்கையில் சுமார் 50க்கும் மேற்பட்ட உற்பத்தி நிலையங்களுக்கு பூட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

coronavirus-south-korea-720x450.jpg

கொரோனாவின் தாக்கம் – இலங்கையில் சுமார் 50க்கும் மேற்பட்ட உற்பத்தி நிலையங்களுக்கு பூட்டு

இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இங்குள்ள பிரபலமான சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு தொழில் புரிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் வாய்ப்பை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரொஹான் லக் ஷானி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன

இவற்றில் சில நிலையங்கள் இம் மாதம் முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளதுடன், ஏனையவை ஏப்ரல் மாத விடுமுறையின் பின்னர் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால் எதிர்வரும் மே மாதமளவில் சுமார் ஒன்பதரைக் கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/கொரோனாவின்-தாக்கம்-சுமா/

Link to comment
Share on other sites

10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கைக்கு வேறு எந்த நாடும் எவ்வித அழுத்தங்களை கொடுக்க முடியாது. ஒரு நாட்டின் மீது பொருளாதார தடையை மனித உரிமை ஆணைக்குழுவால் விதிக்க முடியாது.

என்னால் முடியும் -  கொரோனா 🤪

4 hours ago, தமிழ் சிறி said:

மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன

 

Link to comment
Share on other sites

இது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்தி ( இதெல்லாம் தற்காலிகமான பிரச்சனனை; இலங்கை பொருளாதாரம் கவிழ போகுது என்று கிளு கிளுப்பு ஊட்டுவதென்றால் எங்கட ஊடகங்களுக்கு தனி ஆனந்தம் தான்....!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Dash said:

இது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்தி ( இதெல்லாம் தற்காலிகமான பிரச்சனனை; இலங்கை பொருளாதாரம் கவிழ போகுது என்று கிளு கிளுப்பு ஊட்டுவதென்றால் எங்கட ஊடகங்களுக்கு தனி ஆனந்தம் தான்....!!!!

ஊடகங்கள மட்டும் இல்லை இலங்கைக்கு வெளியில் வாழும் இனப்பற்றார்களும் அடக்கம்.

Link to comment
Share on other sites

5 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இங்குள்ள பிரபலமான சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தேவைகள் குறையும் பொழுது இறக்குமதி / உற்பத்தி குறைந்துதான் ஆகவேண்டும். 

மேலை நாடுகளில், மக்கள் வெளியில் செல்வது குறைந்துள்ளது. வீட்டில் இருந்தும் அதிகளவில் வேலை செய்கின்றனர். ஆகவே அவர்களின் உடுப்பிற்கான தேவைகள் குறைந்திருக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ampanai said:

தேவைகள் குறையும் பொழுது இறக்குமதி / உற்பத்தி குறைந்துதான் ஆகவேண்டும். 

மேலை நாடுகளில், மக்கள் வெளியில் செல்வது குறைந்துள்ளது. வீட்டில் இருந்தும் அதிகளவில் வேலை செய்கின்றனர். ஆகவே அவர்களின் உடுப்பிற்கான தேவைகள் குறைந்திருக்கும்.  

இந்தியாவில்... வாகனம் வைத்திருக்கும்  மக்கள் அதிகம் வீட்டில் இருப்பதால்....
பெற்றோலின்  தேவை குறைந்து.... விலை மலிந்துள்ளதாம்.

Link to comment
Share on other sites

1 hour ago, Dash said:

இது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்தி ( இதெல்லாம் தற்காலிகமான பிரச்சனனை; இலங்கை பொருளாதாரம் கவிழ போகுது என்று கிளு கிளுப்பு ஊட்டுவதென்றால் எங்கட ஊடகங்களுக்கு தனி ஆனந்தம் தான்....!!!!

 

12 minutes ago, சுவைப்பிரியன் said:

ஊடகங்கள மட்டும் இல்லை இலங்கைக்கு வெளியில் வாழும் இனப்பற்றார்களும் அடக்கம்.

அந்த 'கிளுகிளுப்பு' கொள்ளும் 'இனப்பற்றாளர்களில்' நானும் ஒருவன்   🙂 

அதற்கான காரணம், சிங்கள தேசத்தின் பொருளாதாரம் முழுமையாக சிதைய வேண்டும் என்பது அல்ல. அங்கு எமது உறவுகளும் உள்ளார்கள் என்பது தெரியும். சிங்களவ மக்களின் பொருளாதாரமும் சரியாய் வேண்டும் என்பதல்ல. 

ஆனால், அரசின் பொருளாதாரம் அவரகளின் இராணுவ இயந்திரத்திற்கு தீனி போடுவதை இல்லமால் செய்யும் அளவிற்கு சரிய வேண்டும் என்பது எனது விருப்பம்.   

Link to comment
Share on other sites

இலங்கையை விட்டு ஓடும் வெளிநாட்டு முதலீடு / பணம் 

COVID-19 hits Lanka’s economy; outflows of Rs. 19.6bn in two weeks

By S. Rubatheesan
View(s): 1069

With the coronavirus (COVID-19) slowing down the global economy, foreigners have rushed to encash Treasury Bonds and Bills held by them in Sri Lanka, resulting in an outflow of Rs 19.6 billion in two weeks, the Central Bank said.

According to Central Bank statistics, Rs 8.23 billion of foreign outflow was recorded this week by Friday while last week Rs 11.42 billion government securities were encashed.

Monthly Monetary Policy Review issued by the Central Bank of Sri Lanka (CBSL) said this week that the escalation of the coronavirus (COVID-19) outbreak to a ‘global health emergency’ was likely to affect Sri Lanka’s economic performance.

“Sri Lanka’s economic links with China could be directly affected as significant volumes of consumer goods, intermediate goods and investment goods are imported from China. The likely slowdown of the global economy and disruptions to the supply chain could affect Sri Lanka’s merchandise and service exports as well as related logistics,” the CBSL Policy Review said while stressing that the slowdown in global tourist movements would affect Sri Lanka’s tourism sector, in addition to the direct impact of lower arrivals from China.

http://www.sundaytimes.lk/200308/news/covid-19-hits-lankas-economy-outflows-of-rs-19-6bn-in-two-weeks-395801.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Dash said:

இது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்தி ( இதெல்லாம் தற்காலிகமான பிரச்சனனை; இலங்கை பொருளாதாரம் கவிழ போகுது என்று கிளு கிளுப்பு ஊட்டுவதென்றால் எங்கட ஊடகங்களுக்கு தனி ஆனந்தம் தான்....!!!!

  உண்மைதான், நாமெல்லாம் போராட்ட காலத்தில் இல்லை, போராடி தோற்ற காலத்திலிருக்கிறோம் என்பதை  நமது சில ஊடகங்களும், பொழுதுபோக்கு தேச பற்றாளர்களும் மறந்து ஒரு மயக்கத்திலிருக்கிறார்கள்.

இலங்கையின் பொருளாதாரம் சரிகின்றது எனும்போதெல்லாம்  எம்மையும் அறியாமல் ஒரு வலி ஏற்படுகிறது,

தமிழகத்தில் கர்நாடகா அணைகள் நிரம்பினால் மட்டுமே உபரிநீர் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் ,அதுவரை தமிழகத்தில் கால்நடை,சம்பாபயிர், அது இரண்டையும் தாங்கி சுமக்கும் தமிழக விவசாயி எவன் செத்தாலும் எமக்கு கவலையில்லை என்பதுபோல் கர்நாடகம் நடந்து கொள்ளும் நிலையில்தான்  இலங்கை தமிழர் பகுதியின் வாழ்வியலும் 2009இன் பின்னர்  சிங்களவனில் தொங்கி கொண்டிருக்கிறது.

இலங்கை பொருளாதாரம்  கொஞ்சம் நிமிர்ந்தால்தான், ஏதாவது கொஞ்சம் சிங்களவன் நமக்கும் கிள்ளி போடுவான் என்ற நிலையில்  மானத்துக்காய் போராடிய ஒரே குற்றத்தால் மானம் கெட்ட நிலையில்...எம்மினம்.

கால் கிலோ மீனை வாங்கி ஏழுபேர் சாப்பிட்டும்  ஒரு கோழியை மாசத்தில் ஒரு தடவைகூட வாங்க பத்துமுறை யோசித்தும் வாழும் தாயக தமிழர் பற்றி,

ஒரு கிலோ மீனை ஒவ்வொருநாளும் ஒரு மனிதனே சாப்பிட்டு கொண்டும்,  ஒரு நாள்    போத்தல் விஸ்கி பார்ட்டிக்கு 5 கோழிகளை வறுத்து தின்னும்  நாமெல்லாம் எந்த வெளிநாட்டு உதவியும் இல்லாத   எம்மினம்  எப்படிதான் வாழ்க்கை செலவை சமாளிக்கிறது  என்பதை எப்போதான் புரிந்து கொள்ள போகிறோமோ?

சோற்றுக்காக சுதந்திரத்தை இழக்ககூடாது என்று  சிந்தனை நமக்கு வரலாம், நாங்கள் வயிறுமுட்ட பிரியாணி திண்டுகொண்டு அவர்களை மட்டும் சுதந்திரத்தை கவனிக்க சொல்லி யாரும் சிந்திக்ககூடாது அது தவறு.

Link to comment
Share on other sites

18 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இங்குள்ள பிரபலமான சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு தொழில் புரிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் வாய்ப்பை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரொஹான் லக் ஷானி தெரிவித்துள்ளார்.

சில தரவுகளை ஆதாரங்களுடன் பார்க்கலாம், முடிவை நீங்களே ஏற்படுத்தி கொள்ளலாம்: 

a) எங்கே இந்த ஆடை உற்பத்தி ஆலைகள் உள்ளன? இதனால் யாருக்கு அதிகம் இலாபம் ??

- The Board of Investment in Sri Lanka’s interactive map showing the location of Export Processing Zones in Sri Lanka in 2014* Source: BOI (2014) *Reproduced with the Board of Investment (BOI’s) permission in February 2014. The status of Industrial Parks (IPs) have been redefined as EPZs, although IPs are referred to on the BOI website) Investment (BOI, 2010). 

மூலம் : https://www.researchgate.net/figure/The-Board-of-Investment-in-Sri-Lankas-interactive-map-showing-the-location-of-Export_fig1_292881969

 

b) இலங்கையில் ஒருவரின் சராசரி வருமானம் ஆண்டு ஒன்றிற்கு எவ்வளவு? 

ஆளுக்கு பத்து இலட்சம் / வருடத்திற்கு என்கிறது ஆகக் குறைந்த மதிப்பு ( வரிக்கு பின்னர்). இந்த தொகையை இப்பெறுபவர்கள் எத்தனை பேர் தமிழர் தாயகத்தில் உள்ளனர்? மேலாக மலையக உறவுகள்?? 

மூலம் :: https://www.averagesalarysurvey.com/sri-lanka

 

Link to comment
Share on other sites

 

c) மலையக மக்களின் குருதியை 72 வருடங்களாக குடிக்கும் சிங்கள நாடு 

மொத்த தேசிய உற்பத்தி ~ 82 அமெரிக்க பில்லியன்கள் 
இதில் தேயிலை ஊடாக வருவது - 1.4 அமெரிக்க பில்லியன்கள் 

ஆனால், அந்த மக்கள் வாழ்க்கை தரம் உயர்ந்ததாக இல்லை 

மூலம் ::   http://www.colombopage.com/archive_17B/Dec24_1514124607CH.php

d) இராணுவ செலவு : வருடத்திற்கு 2.2 அமெரிக்க பில்லியன்கள் !

மூலம் :: https://www.janes.com/article/87729/sri-lanka-raises-defence-budget

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

சில தரவுகளை ஆதாரங்களுடன் பார்க்கலாம், முடிவை நீங்களே ஏற்படுத்தி கொள்ளலாம்: 

a) எங்கே இந்த ஆடை உற்பத்தி ஆலைகள் உள்ளன? இதனால் யாருக்கு அதிகம் இலாபம் ??

- The Board of Investment in Sri Lanka’s interactive map showing the location of Export Processing Zones in Sri Lanka in 2014* Source: BOI (2014) *Reproduced with the Board of Investment (BOI’s) permission in February 2014. The status of Industrial Parks (IPs) have been redefined as EPZs, although IPs are referred to on the BOI website) Investment (BOI, 2010). 

மூலம் : https://www.researchgate.net/figure/The-Board-of-Investment-in-Sri-Lankas-interactive-map-showing-the-location-of-Export_fig1_292881969

 

b) இலங்கையில் ஒருவரின் சராசரி வருமானம் ஆண்டு ஒன்றிற்கு எவ்வளவு? 

ஆளுக்கு பத்து இலட்சம் / வருடத்திற்கு என்கிறது ஆகக் குறைந்த மதிப்பு ( வரிக்கு பின்னர்). இந்த தொகையை இப்பெறுபவர்கள் எத்தனை பேர் தமிழர் தாயகத்தில் உள்ளனர்? மேலாக மலையக உறவுகள்?? 

மூலம் :: https://www.averagesalarysurvey.com/sri-lanka

 

இது கிளிநொச்சியில் இருக்கிறது;இது தென் இலங்கை குஜராத்தி வம்சாவளியினரின் நிறுவனமானாலும், புலம் பெயர் தமிழர் சிலரின் கூட்டு முயற்சியிலேயே தொடங்கப்பட்டது.

கடந்த 10 வருடங்களில் எம்மமவ்ர்கள் நினைத்திருந்தால் இப்படியான முதலீடுகளை மேற்கொண்டு வடக்கையும் கிழக்கையும் அபிவிருத்தி செய்திருக்கலாம்,ஆனால் ஆளுக்கு 15000 தொடக்கம் 20000 பவுண்ஸ் வரை செலவளித்து வெளி நாட்டுக்கு அழைத்து அங்கிருப்பவர்களுக்கு வெளிநாட்டு ஆசையை காட்டி அவர்களையும் இங்களைத்து எமது இனத்தை பலவீனப்படுத்தியது தான் மிச்சம்.  

இவற்றை செய்ய மாட்டீனம் ஆனால்

1. ஊரில் சிறிதாக இருந்த  கோவிலகளை எல்லம் பெருப்பித்தல்

2.தாங்கள் படித்த பெரிய அரச பாடசாலைக்கு கணனி வாங்குதல்/ மதில் கட்டல்

3.புலம்பெயர் நாட்டில் சாமத்திய சடங்கு செயதல் (செலவு £ 100,000 வரை)

4. எமது கலாச்சாரத்தில் இல்லாத கல்யாண மண்டபம் கட்டுதல.

 

இப்படியான தேவை இல்லாத வேலைகள் செய்யவது என்றால் முன்னுக்கு நிப்பீனம்.

 

Link to comment
Share on other sites

3 hours ago, Dash said:

இது கிளிநொச்சியில் இருக்கிறது;இது தென் இலங்கை குஜராத்தி வம்சாவளியினரின் நிறுவனமானாலும், புலம் பெயர் தமிழர் சிலரின் கூட்டு முயற்சியிலேயே தொடங்கப்பட்டது.

கடந்த 10 வருடங்களில் எம்மமவ்ர்கள் நினைத்திருந்தால் இப்படியான முதலீடுகளை மேற்கொண்டு வடக்கையும் கிழக்கையும் அபிவிருத்தி செய்திருக்கலாம்,ஆனால் ஆளுக்கு 15000 தொடக்கம் 20000 பவுண்ஸ் வரை செலவளித்து வெளி நாட்டுக்கு அழைத்து அங்கிருப்பவர்களுக்கு வெளிநாட்டு ஆசையை காட்டி அவர்களையும் இங்களைத்து எமது இனத்தை பலவீனப்படுத்தியது தான் மிச்சம்.  

இவற்றை செய்ய மாட்டீனம் ஆனால்

1. ஊரில் சிறிதாக இருந்த  கோவிலகளை எல்லம் பெருப்பித்தல்

2.தாங்கள் படித்த பெரிய அரச பாடசாலைக்கு கணனி வாங்குதல்/ மதில் கட்டல்

3.புலம்பெயர் நாட்டில் சாமத்திய சடங்கு செயதல் (செலவு £ 100,000 வரை)

4. எமது கலாச்சாரத்தில் இல்லாத கல்யாண மண்டபம் கட்டுதல.

 

இப்படியான தேவை இல்லாத வேலைகள் செய்யவது என்றால் முன்னுக்கு நிப்பீனம்.

தகவலுக்கு நன்றி 

தேடிப்பார்த்ததில், இந்த நிறுவனம் பல நாடுகளில் கிளைகளை கொண்டிருந்தாலும், கொழும்பில் தலைமையகத்தை கொண்டுள்ளது; மகிந்தவுடன் நெருக்கத்தை கொண்டுள்ளது; பல வரி சலுகைகளை அவரிடம் பெற்று இரண்டு தொழிற்சாலைகளை வடக்கில் ஆரம்பித்தது, அண்ணளவாக 4000 பேரை வேலைக்கமர்த்தியுள்ளது. நல்ல விடயம். 

https://www.masholdings.com/global-presence.html#global-presence-overview

இந்த நிறுவனத்தின் மொத்த பெறுமதி 2பில்லியன்கள் அமெரிக்க டாலர்கள். அதனுடன் தனிப்பட்ட தமிழர்களை ஒப்பிட முடியாது, பலரும் 1983ன் பின்னர் அகதிகளாக இலங்கையில் இருந்து வெளியேறியவர்கள்.

ஆக, ஒரு முதலீடாக செய்வதற்ககு பாரிய தொகை தேவை, மேலாக அரசியல் செல்வாக்கு தேவை. 

அது இல்லாத இடத்தில் தனிப்பட்ட ரீதியில் இவ்வாறன வழிகளில் தான் உதவிட முடியும். இல்லை என்றால் வேறு எவ்விதமாக புலம்பெயர் தமிழர் உதவிட முடியும் என்பதினை தெளிவுபடுத்துங்கள்  

 

Link to comment
Share on other sites

யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் சராசரியாக  அண்ணளவாக 6%/வருடத்திற்கு வளர்ந்துள்ளது. அப்படியானால், பாதிக்கப்பட்ட, மீட்கப்பட்ட  தமிழர்களின் பொருளாதாரம் அதை விடவும் அதிகமாக வளர்ந்திருக்க வேண்டும். வளர்ந்திருக்கின்றதா? இல்லை என்றால் யார் காரணம்:  புலம்பெயர் செல்வந்தர்கள்? இல்லை பகுதிநேர / பொழுதுபோக்கு தேச பற்றாளர்கள் ??

தாயக மக்களுக்கு முயற்சி இல்லை என்றால், எவ்வாறு புலம்பெயர்ந்த அவர்களின் அதே உறவுகள் ஒப்பீட்டளவில் முன்னேறி இருக்கின்றார்கள்? ஆக, சிங்களம் தான் முன்னேற்றத்தை  தாயகத்தில் கட்டுப்படுத்துகின்றது என்பது உண்மையாகின்றது. 

புலம்பெயர் மக்களால் பொதுவாக புறக்கணிக்கப்படும் மலையக மக்களை பாருங்கள். அவர்கள் முன்னேறவில்லையா ? இல்லை முன்னேற்றம் மறுக்கப்படுகின்றதா? இல்லை அதற்கும் புலம்பெயர் தமிழர்கள் மீது தான் குறை சொல்ல முடியுமா???

Link to comment
Share on other sites

இலங்கையில் வறுமைக்கோடு என்பது நாள் ஒன்றிற்கு 900 ரூபாய்களை ஆளுக்கு உழைப்பது என்பது என சர்வதேச நிதி அமைப்புக்கள் கணக்கிடுகின்றன (2018/19 தரவு),

மேலும், 40% மக்கள்  இந்த வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளார்கள் எனவும் கூறப்படுகின்றது. ஆக, சிங்கள மக்களும் கூட பலரும் வறுமைக்கோட்டிற்கு கீழே தான் வாழுகின்றனர்.

ஆனால், இன்றும் இராணுவத்திற்கு 2.2 அமெரிக்க பில்லியன்களை செலவழிப்பது என்பது தமிழ் மக்களை ஒரு இராணுவ அடக்குமுறைக்குள், ஒரு உளவியல் அழுத்தத்திற்குள் வைத்திருக்கும் ஒரே நோக்கம். அதை முறிபடிக்க இன்று எம்மிடம் எந்த வழியோ இல்லை அரசியல் பலமோ இல்லை.

இவ்வாறான உலக பொருளாதார நெருக்கடிகளே மக்களை அரசிற்கு எதிராக போராட வைக்கும் வறுமைக்கோட்டின் கீழே வாழும் மக்களை அரசிற்கு எதிராக போராட வைக்கும். சர்வாதிகார, குடும்ப மற்றும் இராணுவ ஆட்சிகளை கூட பொருளாதார மந்தம் தடுக்கும்.

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

இலங்கையில் வறுமைக்கோடு என்பது நாள் ஒன்றிற்கு 900 ரூபாய்களை ஆளுக்கு உழைப்பது என்பது என சர்வதேச நிதி அமைப்புக்கள் கணக்கிடுகின்றன (2018/19 தரவு),

மேலும், 40% மக்கள்  இந்த வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளார்கள் எனவும் கூறப்படுகின்றது. ஆக, சிங்கள மக்களும் கூட பலரும் வறுமைக்கோட்டிற்கு கீழே தான் வாழுகின்றனர்

image_a49eb5b83b.jpg 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 3/9/2020 at 10:47 AM, ampanai said:

தகவலுக்கு நன்றி 

தேடிப்பார்த்ததில், இந்த நிறுவனம் பல நாடுகளில் கிளைகளை கொண்டிருந்தாலும், கொழும்பில் தலைமையகத்தை கொண்டுள்ளது; மகிந்தவுடன் நெருக்கத்தை கொண்டுள்ளது; பல வரி சலுகைகளை அவரிடம் பெற்று இரண்டு தொழிற்சாலைகளை வடக்கில் ஆரம்பித்தது, அண்ணளவாக 4000 பேரை வேலைக்கமர்த்தியுள்ளது. நல்ல விடயம். 

https://www.masholdings.com/global-presence.html#global-presence-overview

இந்த நிறுவனத்தின் மொத்த பெறுமதி 2பில்லியன்கள் அமெரிக்க டாலர்கள். அதனுடன் தனிப்பட்ட தமிழர்களை ஒப்பிட முடியாது, பலரும் 1983ன் பின்னர் அகதிகளாக இலங்கையில் இருந்து வெளியேறியவர்கள்.

ஆக, ஒரு முதலீடாக செய்வதற்ககு பாரிய தொகை தேவை, மேலாக அரசியல் செல்வாக்கு தேவை. 

அது இல்லாத இடத்தில் தனிப்பட்ட ரீதியில் இவ்வாறன வழிகளில் தான் உதவிட முடியும். இல்லை என்றால் வேறு எவ்விதமாக புலம்பெயர் தமிழர் உதவிட முடியும் என்பதினை தெளிவுபடுத்துங்கள்  

 

சிறிய பயன் தரும் முதலீடுகள் எத்தனையோ செய்யலாம், முதலில் ஈழத்தமிழர்கள் பொருளாதாரம் என்றால் என்ன என்பதை கற்க வேண்டும்.

உதாரணமாக  100 வறியவர்களுக்கு உதவும் போது ஆளுக்கு ஒரு தையல் இயந்திரம் வேண்டி கொடுக்காமல் அதையெல்லம் சேர்த்து ஒரு தொழிற்சாலையாக அமைத்தால் அதனூடு வருமானம் வருமல்லவா

Link to comment
Share on other sites

3 hours ago, Dash said:

சிறிய பயன் தரும் முதலீடுகள் எத்தனையோ செய்யலாம், முதலில் ஈழத்தமிழர்கள் பொருளாதாரம் என்றால் என்ன என்பதை கற்க வேண்டும்.

உதாரணமாக  100 வறியவர்களுக்கு உதவும் போது ஆளுக்கு ஒரு தையல் இயந்திரம் வேண்டி கொடுக்காமல் அதையெல்லம் சேர்த்து ஒரு தொழிற்சாலையாக அமைத்தால் அதனூடு வருமானம் வருமல்லவா

உண்மை. ஆனால், இன்றுள்ள மத்திய அரசியல் முறையால் அது பெரியளவில் சாத்தியமில்லை. 

குறைந்தபட்சம், மாகாண ஆட்சிக்குள், நேரடி வெளிநாட்டு முதலீடு வேறு அழுத்தங்களுக்கு ஆகாமல் அமுலாக்க முடியும் என்றால் சாத்தியமாகலாம். 

அதுவரை, சிறிய அளவிலேயே உதவிகளை செய்ய முடியும் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Dash said:

சிறிய பயன் தரும் முதலீடுகள் எத்தனையோ செய்யலாம், முதலில் ஈழத்தமிழர்கள் பொருளாதாரம் என்றால் என்ன என்பதை கற்க வேண்டும்.

பார்ரா ........ அண்ணன்  கிளம்பிட்டாறு தங்களுக்கு தெரிந்த  பொருளாதாரத்தை சொல்லி தருவதுதானே .  சொறிலங்கா புலம்பெயரை நேரடியாய் உதவி செய்ய விடமாட்டார்கள் எனும் அரசியலையும் புரியனும் .அம்பானி விழுந்து விழுந்து சொல்வது உங்களுக்கு  புரியவில்லையா ?

அல்லது வழக்கம்போல் புலம்பெயர் மீதான சேறடிப்பா ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "இப்பொது Neanderthals (Homo neanderthalensis) இன் மரபணு இப்போதுள்ள மனித வர்க்கத்தில் 2 - 2.5% இருக்கிறது என்பது பின்னைய முடிவு" ஆம் , அது சரி , ஏனென்றால்,     Though Modern humans and Neanderthals lived in separate regions evolving along separate evolutionary lineages for hundreds of thousands of years, Neanderthals are still our closest currently known relative. Because of that evolutionary proximity, despite being recognized as different species, it is still possible that members of our two species exchanged genetic information. This exchange of DNA is called introgression, or interbreeding. Neanderthal-Homo sapiens interbreeding Neanderthals are known to contribute up to 1-4% of the genomes of non-African modern humans, depending on what region of the word your ancestors come from, and modern humans who lived about 40,000 years ago have been found to have up to 6-9% Neanderthal DNA (Fu et al., 2015).  ............................................................... "சிங்கமும், மனிதனும் species அடிப்படை யில் மிக தொலைவு என்பதால் சாத்திய கூறுகள் மிக, மிக  குறைவு என்பதே இப்பொது நம்ப கூடியது" ஆம், அது முற்றிலும் சரியான வாதம்  ................................................................... "மகாவம்சம்  சிங்கம் என்ற சொல்லை மிருகத்தை குறிக்க பயன்படுத்தியதா அல்லது அந்த தன்மை மனிதன் (போன்ற) குறிக்க பயன்படுத்தியதா. " கட்டாயம் சிங்கத்தைக் [மிருகத்தைக்] குறிக்கத்தான் பயன்படுத்தப் பட்டுள்ளது தெளிவாக அங்கு தெரிகிறது  ஆறாம் அத்தியாயம் / விஜயன் வருகையில் [CHAPTEE VI / THE COMING OF VIJAYA ]  "மற்றவர்கள் அங்கும் இங்குமாக ஓடி விட்டனர். ஆனல் அவள் [விஜயனின் தாய்], சிங்கம் வந்த அதே பாதையில் ஓடினாள் .... தூரத்தில் அவளைப் பார்த்தது. உடனே காமவெறி சிங்கத்தைப் பற்றிக்கொண்டது. வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது ....  அவளைத் தனது முதுகின் மீது சுமந்து கொண்டு வேகமாகத் தனது குகையைச் சென்றடைந்தது. அங்கு சிங்கம் அவளுடன் கூடியது. இந்தக் கூடலின் விளவாக ராஜகுமாரி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒன்று ஆண் [சீகபாகு / சிங்கபாகு /Sihabahu / Sinhabahu] ; ஒன்று பெண் [சிங்கசீவலி / சீகவலி / Sinhasivali or Sihasivali]. [the other folk fled this way and that, but she fled along the way by which the lion had come ...  love (for her) laid hold on him, and he came towards her with waving tail and ears laid back ...  took her  upon his back and bore her with all speed to his cave, and there he was united with her, and from this union with him the princess in time bore twin-children, a son and a daughter.]   "வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது" [he came towards her with waving tail and ears laid back]   என்ற வரி தெளிவாக மிருகம் என்று சொல்லுகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை  ..................................................................... மகாவம்சம் அத்தக்கதா [Aṭṭhakathā - Buddhist Commentarial Literature / The word aṭṭhakathā is a general term, meaning exposition of the sense (aṭṭha = attha, Skt. artha), explanation, commentary.] Buddhist monks of Mahavihara, maintained this historical record of the Sri Lankan history starting from 3rd century B.C., some what similar to a modern day diary. These records were combined and compiled into a single document in the 5th century CE by Buddhist monk Mahathera Mahanama. There is evidence as per Wilhelm Geiger, there was another compilation prior to this known as “Mahavamsa Atthakatha” and Mahathera Mahanama relied on this text. Earlier document known as “Dipavamsa” also come down to us which is much simpler and contain less information than Mahavamsa, probably compiled using previously mentioned “Mahavamsa Atthakatha”?   ........................................... "சிங்களத்தில் இருந்த அத்தக்கதாவை  புத்தகோச பாளியில் எழுதிவிட்டு, சிங்கள மூலத்தை எரித்து விட்டததாகவும், ஏனெனில் சிங்களம் தெய்வ மொழி இல்லை என்றும் கருதப்படுகிறது' It is observed two groups of people in the 5th century A.D. – Hindus, speaking Tamil and the converts (Buddhists) speaking the new language (Sinhala).  There is a popular here say, emerged from the Later Burmese Biographical Text Buddhaghosuppatti ( perhaps as early as the 15th century) that Buddhaghosa Thera burnt ancient Sihala Atthakathas after he translated them into  Pali, introducing the Mula Bhasha [first language, primary language; epithet for Pali, the liturgical language of Theravada Buddhism. /  பாளி மொழியை வழிபாட்டு அல்லது தெய்வீக மொழியாக தேரவாத பௌத்தத்தில் கருதப்படுகிறது]  Please note that The Buddhaghosuppatti, a later biographical text, is generally regarded by Western scholars as being legend rather than history. So the text is not very reliable. Also It is not stated in Culavamsa [The Cūḷavaṃsa is a continuation of the Mahavamsa. But unlike the Mahavamsa it was written by different authors at different periods. / இதுவும்  பாளி மொழியில் தான் எழுதப்பட்டது / கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது] that he burned the scriptures , Though it contains the main account of Buddhaghosa’s life. ஆகவே உண்மையில் அவர் எரித்தாரா என்பதும் ஒரு கேள்விக்குறியே? Tradition regarding the Aṭṭhakathā [Buddhist Commentarial Literature by L. R. Goonesekere, BPS / Buddhist Publication Society, Kandy • Sri Lanka] The Ceylonese tradition regarding the aṭṭhakathā is that they were composed (in Pali, it is to be presumed) at the First Council (Saṅgīti) and rehearsed at the two following Councils. They were introduced to Ceylon by Mahinda who also, it is said, translated them into Sinhala. The earliest record of this tradition is contained in the introduction in Buddhaghosa’s commentaries. [“For explaining the meaning, the Commentary was originally recited by the 500 Masters (i.e. the Arahats assembled at the First Council) and was later rehearsed (at the two following Councils). Then it was brought to the island of the Sinhalese by the great Mahinda, the master (of Dhamma), and was rendered into the Sinhala language for the benefit of the island dwellers.”] It recurs in the accounts of Buddhaghosa contained in the Mahāvaṃsa  and the Saddhammasaṅgaha.  According to the Dīpavaṃsa  and the Mahāvaṃsa,  the commentaries (the Sinhala version, it is to be inferred) were put into writing in Ceylon along with the Pali canon in the reign of Vaṭṭagāmaṇī Abhaya in the first century B. C. The Mahāvaṃsa,  and Saddhammasaṅgaha  further state that, at the time of Buddhaghosa, the aṭṭhakathā (the original Pali) had disappeared in India. It is not known how far this statement was correct, but the original Pali aṭṭhakathā were not recorded in writing and no trace of them exists today. As will be seen, the Sinhala aṭṭhakathā put into writing in Vaṭṭagāmaṇī Abhaya’s time have also disappeared.
    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.