Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மரவள்ளி கிழங்கும் பூசணிக்காயும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

தமிழ் கடையள்ளை அப்பப்ப கிடைக்கும். அது அவங்களிட்டை வாங்கிறதெண்டால் காணி பூமி தான் விக்கோணும்.தாய்லாந்து சைனிஸ் கடையள்ள கிடக்கு.ஒருக்கால் வாங்கி கத்தரிக்காய் கறிக்கு போட்டு சமைச்சு பாத்தம்.ஏழு வீடு தூரத்துக்கு நாத்தல் மணம். அப்பிடியெண்டால் என்ரை வீடு எப்பிடி நாறியிருக்குமெண்டு யோசிச்சு பாருங்கோ.  செற்றி சோபா கேட்டின் எல்லாம் நாற வெளிக்கிட்டுது.  அண்டையோடை கூனிறால் ஆசையே போட்டுது.😎

நீங்கள் பழசு பட்டதை வாங்கிருக்கியள் போல தெரிகிறது பழசு பட்டது வாசனை வேறாக இருக்கும் 

அட்றஸ்ஸ சொல்லுங்க பார்சல் அனுப்புறன் கிடைக்கும் போது 😎😃

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை போய் வரும்போது, கருவாடு, மாசிகருவாடு, றால் கருவாடு, கூனிக் கருவாடு வாங்கி வருவது. அங்கயே பயங்கர விலை. இங்கே அதன் 5 மடங்கு கூட. லாபம் பார்க்க என்று,  மலிவாக தாய்லாந்து பண்ணை றால் கருவாடினை கொண்டு வந்து அநியாயம் பண்ணுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

திரு.ஈழப்பிரியன்,

ஒரு கால்கிலோ சீனியையும், கீளான் நெல்லி சிறு இலைகளையும் வாங்கி மரவள்ளிக்கிழங்கும், பூசணியும் வேகும் கலவை மேலே கொட்டி கிளருங்கள், சுவை தூக்கிவிடும்.

சுவைத்துப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்..சரியோ..?

ஏதோ நம்மால் முடிஞ்ச சமையல் மருத்துவம் சொல்றேன். :)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

திரு.ஈழப்பிரியன்,

ஒரு கால்கிலோ சீனியையும், கீளான் நெல்லி சிறு இலைகளையும் வாங்கி மரவள்ளிக்கிழங்கும், பூசணியும் வேகும் கலவை மேலே கொட்டி கிளருங்கள், சுவை தூக்கிவிடும்.

சுவைத்துப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்..சரியோ..?

ஏதோ நம்மால் முடிஞ்ச சமையல் மருத்துவம் சொல்றேன். :)

வன்னியன்..... அந்தாளை,  கீழான்  நெல்லி இலையை தேடி....
காடு, மேடு... எல்லாம் அலைய வைக்கிற பிளான் போலை கிடக்கு.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறையில் செய்து சாப்பிடவில்லை, செய்து பார்க்கனும், frozen மரவள்ளியும் முடிந்துவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

மரவள்ளிக்கிழங்கும் சக்கரைபூசணிக்காயும் சேர்ந்த கறி ஊர்மனைகளிலை பிரபல்யமானது.
கோவில் அன்னதானங்களிலையும் முக்கிய இடம் பெறும்.
அங்காலை ஒராள் இஞ்சிச்சம்பல் எண்டுறார். பகிடிக்கும் உதுகளை சொல்லாதிங்கப்பு 😟

 

16 hours ago, Nathamuni said:

இஞ்சி சம்பல் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று யாரு சொன்னது?

நீலம் பெயர்ந்த மரவள்ளி என்று ஒன்று உண்டு. அதாவது வெண் நிற கிழங்கில் நீல நிறமாக ஒரு பகுதியில் ஊடறுத்து ஓடினால், இஞ்சி, அந்த கிழங்குடன் சேர்த்துண்டால் விஷமாகும் என்பர்.

அதுக்காக ஆளைக் கொல்லாது.

ஈழப்பிரியன்,  உங்கள் செய்முறைக்கு நன்றி.

அடுத்த முறை சிறிது வித்தியாசமாக செய்து பாருங்கள்.

வெங்காயத்தினையும், வழக்கமான வாசனை பொருட்களை போட்டு தாளித்து, அதனுள் இந்த இரண்டையும் சேர்த்து, கொஞ்சம் மாசிக் கருவாடும் எறிஞ்சு, வெந்து வந்ததும் எப்பன் (கொஞ்சம்) தேங்காய் பால் ஊத்தி இறக்கி, லைட்டா தேசிக்காய் புளியும் விட்டு அடிச்சு பாருங்கோ...

பிறகு வந்து சொல்லுங்கோவன்... ருசியை...

பத்திக்கிச்சு பத்திக்கிச்சு😂

  • கருத்துக்கள உறவுகள்

நூந்திருச்சு...

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

இலங்கை போய் வரும்போது, கருவாடு, மாசிகருவாடு, றால் கருவாடு, கூனிக் கருவாடு வாங்கி வருவது. அங்கயே பயங்கர விலை. இங்கே அதன் 5 மடங்கு கூட. லாபம் பார்க்க என்று,  மலிவாக தாய்லாந்து பண்ணை றால் கருவாடினை கொண்டு வந்து அநியாயம் பண்ணுகிறார்கள். 

தல சட்டப்படி குற்றம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

வன்னியன்..... அந்தாளை,  கீழான்  நெல்லி இலையை தேடி....
காடு, மேடு... எல்லாம் அலைய வைக்கிற பிளான் போலை கிடக்கு.  :grin:

இல்லையா பின்னே..?

தினமும் நாலைந்து கி.மீ நடப்பவர், அப்படியே பக்கத்திலுள்ள மலை, காடுகளில் தேடலாம்தானே..? :)

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

தல சட்டப்படி குற்றம்.

கடலையே கொண்டு வருகினம், நான் கொண்டு வருவது, குளம் இல்லை, குட்டை  😁

எனது நண்பர் இலங்கை சென்று வந்தபோது, ஒரு உறவினர், தமது மருமகள் சாமத்திய விழாவுக்கு என ஒரு சோடி தோடு கொடுத்து விட, இவர் nothing to declare பகுதியில் போகாமல், மறுபகுதிக்குள  போய் , தோட்டை காட்ட அவர்கள், ஆளை மேல கீழ பார்த்து விட்டு சிரித்துக் கொண்டே, £35 அடித்து விட்டார்கள்.

அவர் கட்டின காசை ரசீதுடன் கொடுக்க, அவர்கள் தோடும் வேணாம், வரியும் வேணாம் என்று சொல்லி விட்டார்கள்.

இவர்  பார்ட்டிக்கு வந்து, அவனவன், 'நகை கடையே கொண்டு  வாறான். ஒத்த சோடி தொங்கட்டானுக்கு வரி கொடுக்கிறானே எண்டு தான் கஸ்டம் காரன் சிரித்திருப்பான்'  என்று கடியோ, கடி வாங்கினார்.  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

வன்னியன்..... அந்தாளை,  கீழான்  நெல்லி இலையை தேடி....
காடு, மேடு... எல்லாம் அலைய வைக்கிற பிளான் போலை கிடக்கு.  :grin:

கொழும்பில் நான் அலைச்சேன் சிறி 😀😀🥰, மஞ்சள் காமாலைக்கு கீழான் நெல்லி நல்ல மருந்து. ஒரு முறை நான் கொழும்பில் படிப்பித்த பிள்ளைக்கு இந்த வருத்தம் வந்திட்டுது, நான் கல்கிசை முதல் வெள்ளவத்தை வரை நடந்து (குச் ஓழுங்கையெல்லாம்) இதை பிடிங்கி அவர்களிடம் கொடுத்தேன், அவிஞ்சு குடுக்க விரைவில் சுகமடைந்தார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2020 at 7:05 AM, தமிழினி said:

மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்ட அன்றே இஞ்சி தேநீரும் குடித்திருக்கேன்.

நீலம் பெயர்ந்த கிழங்கை சாப்பிட்டால் தான் பிரச்சனை என்று நினைக்கின்றேன்.

பகிர்வுக்கு நன்றி ஈழப்பிரியன் அண்ணா.

அடுத்தமுறை நாதமுனி அண்ணா சொன்ன விதத்தில் செய்து பாக்கனும்.

எல்லோருக்கும் என்றல்ல.எங்காவது ஒராளுக்கு ஒத்து வராமல் இருக்கலாம்.
நாதம் சொன்னது போல நீலநிற கிழங்குகளில் பிரச்சனை இருக்கலாம்.

18 hours ago, ராசவன்னியன் said:

திரு.ஈழப்பிரியன்,

ஒரு கால்கிலோ சீனியையும், கீளான் நெல்லி சிறு இலைகளையும் வாங்கி மரவள்ளிக்கிழங்கும், பூசணியும் வேகும் கலவை மேலே கொட்டி கிளருங்கள், சுவை தூக்கிவிடும்.

சுவைத்துப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்..சரியோ..?

ஏதோ நம்மால் முடிஞ்ச சமையல் மருத்துவம் சொல்றேன். :)

ஓ வன்னியரும் குசினிக்கை வந்தாச்சோ?

ஐயா தேத்தண்ணிக்கே 10 வருடமா சீனி போடாமலே ஓரிரு பேரீச்சம்பழத்துடன் தான் காலம் போகுது.

ஏற்கனவே பூசணி இனிப்பு.இதெல்லாம் தேவையா?

நீங்க இளந்தாரி நிறைய சீனி போட்டு சாப்பிடுங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

எல்லோருக்கும் என்றல்ல.எங்காவது ஒராளுக்கு ஒத்து வராமல் இருக்கலாம்.
நாதம் சொன்னது போல நீலநிற கிழங்குகளில் பிரச்சனை இருக்கலாம்.

ஓ வன்னியரும் குசினிக்கை வந்தாச்சோ?

ஐயா தேத்தண்ணிக்கே 10 வருடமா சீனி போடாமலே ஓரிரு பேரீச்சம்பழத்துடன் தான் காலம் போகுது.

ஏற்கனவே பூசணி இனிப்பு.இதெல்லாம் தேவையா?

நீங்க இளந்தாரி நிறைய சீனி போட்டு சாப்பிடுங்க.

பேரீச்சம்பழம்???????

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓ வன்னியரும் குசினிக்கை வந்தாச்சோ..?

வேறை வழி..?

பெருசு எவ்வழியோ அவ்வழிதானே மத்தவங்களுக்கும்..!

28 minutes ago, ஈழப்பிரியன் said:

... பேரீச்சம்பழத்துடன் தான் காலம் போகுது.

ரொம்ப சாப்பிடாதீங்க.. :)

அரபிகள் இந்தவயசுல இருக்குற மாதிரி ஆகிவிடுவீர்கள்..! 😋

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

பேரீச்சம்பழம்???????

பேரிச்சம்பழத்துக்க என்ன பிரச்சனை?
இப்ப 10 வருடத்துக்கு மேலாக இது தான்.
Super leval 6-6.1 over 10 years.

3 minutes ago, ராசவன்னியன் said:

ரொம்ப சாப்பிடாதீங்க.. :)

அரபிகள் இந்தவயசுல இருக்குற மாதிரி ஆகிவிடுவீர்கள்..! 😋

ஒன்று அல்லது இரண்டு தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

பேரிச்சம்பழத்துக்க என்ன பிரச்சனை?
இப்ப 10 வருடத்துக்கு மேலாக இது தான்.
Super leval 6-6.1 over 10 years.

சுகர் கூடாதா? 

எனக்கு பேரீச்சம் பழம் சரியான விருப்பம்.ஆரோ ஓண்டு வெருட்டி விட்டுது.அதுக்குப்பிறகு தொட்டும் பாக்கிறேல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சுகர் கூடாதா? 

நல்ல கேள்வி.
சீனி உள்ள பண்டங்கள் கேக் ஐஸ்கிறீம் என்று இருந்திட்டு எங்காவது போனால் அல்லது வீட்டிலோ சாப்பிடுவது வழமை.

சோறு புட்டு இடியப்பம் இதில் கூட சாப்பிடும் போது சீனியாக மாறினாலும் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை.

எனவே தான் சீனி போட்டு வழமையாக குடிக்கும் தேநீரையும் இப்படி குடிக்க வேண்டி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2020 at 8:16 PM, தனிக்காட்டு ராஜா said:

 

அப்படியே இதற்குள் கூனித்தூள் என்று சொல்ல்ப்படுகின்ற (இறால் இனத்தில் மிகச்சிறியது அதை காயவைத்து இடித்து வைப்பார்கள்) அதையும் கொஞ்சம் உள்ளேபோட்டால் வாசனையே வேறு ரகமா இருக்கும் இது என்னைபோல அசைவகாரர்களுக்கு மட்டும்  

தனி இங்கு ஊரில் குனி றால் கருவாடு பைக்கற்றில இருக்கு அதை அப்படியே பாவிக்கலாமா அல்லது கழுவ வேணுமா.கழுவினால் குமைஞ்சு போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, சுவைப்பிரியன் said:

தனி இங்கு ஊரில் குனி றால் கருவாடு பைக்கற்றில இருக்கு அதை அப்படியே பாவிக்கலாமா அல்லது கழுவ வேணுமா.கழுவினால் குமைஞ்சு போகுது.

ம் ஆகச்சிறிது என்றால் கொஞ்சம் சுடு தண்ணீரில் போட்டு கழுவினால் போதும் அதிக நேரம் கழுவினால் எதுவும் மிஞ்சாது ஊர் நிற்கிறதா கேள்விப்பட்டன் கவனமாக இருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம் ஆகச்சிறிது என்றால் கொஞ்சம் சுடு தண்ணீரில் போட்டு கழுவினால் போதும் அதிக நேரம் கழுவினால் எதுவும் மிஞ்சாது ஊர் நிற்கிறதா கேள்விப்பட்டன் கவனமாக இருங்கள்

ம்ம் .அக்கறைக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.