Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிருசுவில் படுகொலையாளிக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு விலக்கப்பட வேண்டும் - சர்வதேச மன்னிப்பு சபை ஜனாதிபதிக்கு மகஜர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Vankalayan said:

உண்மையாகவே இங்கு கருத்து எழுதுபவர்களைவிட எனக்கு தமிழ்ப்பற்று அதிகம்। நான் பொதுவாக மற்றைய தளங்களில் தமிழை உயர்த்திய, தமிழர்களை உயர்த்திதான் எழுதுவேன்। இருந்தாலும் சில மதவாதிகள் செய்யும் தவறுக்காக எல்லா கிறிஸ்தவர்களையும் தாக்கி எழுதும்போது அது என்னை மிகவும் பாதித்ததுடன் நான் ஒரு தமிழன் அல்ல, கிறிஸ்தன் என்ற நிலைக்கு கொண்டு சென்றது। எனவே இங்கு எழுதுபவர்களின் நிலைமையை பொறுத்து சில வேளைகளில் மற்றம் ஏட்படலாம்। இருந்தாலும் இப்போது நாங்கள் ஒரு கிறிஸ்தவ (RC / Non  RC ) அமைப்பை உருவாக்கி கிறிஸ்தவ மக்களின் உரிமைக்காக பரிந்து பேச இருக்கிறோம்।  எனவே இப்போதைக்கு அப்படியே தொடருவோம்।    இருந்தாலும் உங்கள் கருத்துக்கள் , நடுநிலைமை என்னை கவர்ந்த ஒன்று। உங்களுக்கும் நன்றி , வணக்கம்।

ஏற்கனவே இருக்கின்ற சபை போதாது என்று இன்னொன்றா?....உங்களுக்குள் ஒருவரையொருவர் காட்டிக் கொடுப்பதில்லை என்று தீர்மானம் எடுக்க போறீர்களாக்கும்... உங்கள் அண்ணன்  சுமத்திரனை தலைவராய் போடுங்கள் ...... ஏற்கனவே அண்ணி சைட் பிசினஸாய்  அதைத் தான் செய்து கொண்டு இருக்கிறா ...முழு பிசினஸாய் தொடங்கிப் போட்டு அரசியலை ட்டு ஒதுங்க போறாரோ 🤔
தமிழனை வடக்கு ,கிழக்கு ,மலையகம் என்று பிரித்தீர்கள்...சோனகர்கள் ஒரு இனமாய் பிரிந்து போனார்கள்...இப்ப நீங்களும் அதாவது கத்தோலிக்கம் இல்லாத கிறிஸ்தவர்கள் என்று சொல்லி பிரிந்து போகப் போறீர்களோ?
 

எப்ப நீங்கள் இணைப் பற்றை விட மதப் பற்றை தூக்கி பிடித்தீர்களோ அதற்கு பிறகு உங்களுக்கு தமிழ்ப்பற்று இருக்குது என்று சொல்லும் தகுதியை நீங்கள் இழந்து விட்டீர்கள்...நீங்கள்,சுமத்திரன் போன்றோர் உங்கள் சுய லாபத்திற்காய் இனத்தையும் அழிப்பீர்கள் 

  • தொடங்கியவர்
1 hour ago, ரதி said:

ஏற்கனவே இருக்கின்ற சபை போதாது என்று இன்னொன்றா?....உங்களுக்குள் ஒருவரையொருவர் காட்டிக் கொடுப்பதில்லை என்று தீர்மானம் எடுக்க போறீர்களாக்கும்... உங்கள் அண்ணன்  சுமத்திரனை தலைவராய் போடுங்கள் ...... ஏற்கனவே அண்ணி சைட் பிசினஸாய்  அதைத் தான் செய்து கொண்டு இருக்கிறா ...முழு பிசினஸாய் தொடங்கிப் போட்டு அரசியலை ட்டு ஒதுங்க போறாரோ 🤔
தமிழனை வடக்கு ,கிழக்கு ,மலையகம் என்று பிரித்தீர்கள்...சோனகர்கள் ஒரு இனமாய் பிரிந்து போனார்கள்...இப்ப நீங்களும் அதாவது கத்தோலிக்கம் இல்லாத கிறிஸ்தவர்கள் என்று சொல்லி பிரிந்து போகப் போறீர்களோ?
 

எப்ப நீங்கள் இணைப் பற்றை விட மதப் பற்றை தூக்கி பிடித்தீர்களோ அதற்கு பிறகு உங்களுக்கு தமிழ்ப்பற்று இருக்குது என்று சொல்லும் தகுதியை நீங்கள் இழந்து விட்டீர்கள்...நீங்கள்,சுமத்திரன் போன்றோர் உங்கள் சுய லாபத்திற்காய் இனத்தையும் அழிப்பீர்கள் 

உங்கள் கருத்தில் வெளிப்படையாக பார்க்கும்பொழுது நியாயமாக தெரிந்தாலும், ஒரு கருத்தை சொல்லியாக வேண்டும் 

தமிழினம் இலங்கையில் ஒரு சிறுபான்மை இனம், சிங்களம் என பெரும்பான்மை இனத்தால் பலவேறு அழிவுகளை சவால்களை சந்திக்கும் இனம். 

எமது இனத்திற்குள், சிறுபான்மை மக்களாக கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பௌத்தர்கள் உள்ளார்கள். ஆக, நாம், இந்துக்கள்/சைவர்கள் பெருந்தன்மையாக நடந்து கொள்ளவேண்டும் இல்லாவிட்டால், எமது போராட்ட  நியாயத்தை இழந்துவிடும் அபாயம் உள்ளது. 

9 hours ago, ரதி said:

ஏற்கனவே இருக்கின்ற சபை போதாது என்று இன்னொன்றா?....உங்களுக்குள் ஒருவரையொருவர் காட்டிக் கொடுப்பதில்லை என்று தீர்மானம் எடுக்க போறீர்களாக்கும்... உங்கள் அண்ணன்  சுமத்திரனை தலைவராய் போடுங்கள் ...... ஏற்கனவே அண்ணி சைட் பிசினஸாய்  அதைத் தான் செய்து கொண்டு இருக்கிறா ...முழு பிசினஸாய் தொடங்கிப் போட்டு அரசியலை ட்டு ஒதுங்க போறாரோ 🤔
தமிழனை வடக்கு ,கிழக்கு ,மலையகம் என்று பிரித்தீர்கள்...சோனகர்கள் ஒரு இனமாய் பிரிந்து போனார்கள்...இப்ப நீங்களும் அதாவது கத்தோலிக்கம் இல்லாத கிறிஸ்தவர்கள் என்று சொல்லி பிரிந்து போகப் போறீர்களோ?
 

எப்ப நீங்கள் இணைப் பற்றை விட மதப் பற்றை தூக்கி பிடித்தீர்களோ அதற்கு பிறகு உங்களுக்கு தமிழ்ப்பற்று இருக்குது என்று சொல்லும் தகுதியை நீங்கள் இழந்து விட்டீர்கள்...நீங்கள்,சுமத்திரன் போன்றோர் உங்கள் சுய லாபத்திற்காய் இனத்தையும் அழிப்பீர்கள் 

நிச்சயமாக உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம்।தமிழ் பற்று இருந்தது.இப்போது இல்லை।

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2020 at 12:12, Vankalayan said:

உண்மையாகவே இங்கு கருத்து எழுதுபவர்களைவிட எனக்கு தமிழ்ப்பற்று அதிகம்। நான் பொதுவாக மற்றைய தளங்களில் தமிழை உயர்த்திய, தமிழர்களை உயர்த்திதான் எழுதுவேன்। இருந்தாலும் சில மதவாதிகள் செய்யும் தவறுக்காக எல்லா கிறிஸ்தவர்களையும் தாக்கி எழுதும்போது அது என்னை மிகவும் பாதித்ததுடன் நான் ஒரு தமிழன் அல்ல, கிறிஸ்தன் என்ற நிலைக்கு கொண்டு சென்றது। எனவே இங்கு எழுதுபவர்களின் நிலைமையை பொறுத்து சில வேளைகளில் மற்றம் ஏட்படலாம்। இருந்தாலும் இப்போது நாங்கள் ஒரு கிறிஸ்தவ (RC / Non  RC ) அமைப்பை உருவாக்கி கிறிஸ்தவ மக்களின் உரிமைக்காக பரிந்து பேச இருக்கிறோம்।  எனவே இப்போதைக்கு அப்படியே தொடருவோம்।    இருந்தாலும் உங்கள் கருத்துக்கள் , நடுநிலைமை என்னை கவர்ந்த ஒன்று। உங்களுக்கும் நன்றி , வணக்கம்।

வணக்கம் வங்காலையான்! எதிர்ப்பு இருக்கும் என்பதற்காக உங்கள் கருத்துக்களை முடக்கி வைக்கத் தேவையில்லை. சிலரின் கருத்துக்கள் ஒருவருக்கு பாதிப்பையும், இன்னொருவருக்கு பக்குவத்தையும் ஏற்படுத்தி விடுகிறது என்பது உண்மை. உங்கள் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. மதமாற்றத்தின்காரணியை விட்டுவிட்டு மற்றவர்களை குற்றம் சாட்டுவதால் எந்தப்பயனுமில்லை. எல்லா மதங்களும் நல்லதையே போதிக்கிறது. நாமும் போதனையோடு நிறுத்திக்கொண்டு, அதற்குள்ளே எல்லோரும் நிற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதால், தேவை நோக்கி தள்ளப்படுவோரை தாங்க முடியாமல் இன்னொருவரை தாக்கி நம்மை காத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். சிலர் போதனையோடு நிற்காமல், அதை வாழ்வாக்கிவழிகாட்டி சாதிக்கும் போது, சகிக்க முடியாமல் நிந்திக்கிறோம். மதமாற்றம் என்கிற தலைப்பில் வந்த செய்திகள், உறவுகளின் பதிவுகளை ஆழமாக படித்தீர்கள் என்றால்: பலபேரின் உண்மை முகங்கள், அடாவடிகள், மாறி மாறி முன் பின் முரணான கருத்துக்கள், மழுப்பல்கள் புரியும். ஓரிடத்தில் எதிர்க்கருத்து. இன்னோர் இடத்தில் ஆதரவுக்கருத்து, வேடிக்கையாக இருக்கும். அப்படியே பயிற்றப்பட்டு வளர்ந்து விட்டார்கள். இது போன்ற  முன்னோரு தலைப்பில் ஒரு உறவு பதிந்திருந்த கருத்துக்கு உரிய விளக்கம் கொடுப்பதற்கு தகுந்த காலம் இது என்பதால் அவரது சந்தேகம் தீரும் என்கிற நம்பிக்கையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஏற்கெனவே உங்களுக்கு தெரிந்த விடயம் தான். இருந்தாலும் சம்பந்தப்பட்டவருக்காக பதிகின்றேன். அவரது கேலி ஜேசுநாதர் பலுகச் செய்த மீன், அப்பம் பற்றியது. நாம் மற்றவரை கேலி செய்வதற்கு பொருத்தமானதைமட்டும் எடுத்து விவாதிக்கும் போது. பல உண்மைகள் மறைந்து கேள்விகளும், கேலியும் எழுவது இயல்பானதே. சம்பவம் இதுதான். ஜேசு மக்களுக்கு போதித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்தவர்களுள் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளுமாவார்.  பொழுது சாயத்தொடங்க ஜேசுவின் சீடர் பன்னிருவரும் வந்து "இவ்விடம் பாலை நிலமாயிற்று,ஏற்கெனவே நெடுநேரமாகி விட்டது. சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும், பட்டிகளுக்கும் சென்று தங்கவும், உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பி விடும்" என்றனர். இன்று  எம் மதத்தில் இருப்போர் தேவை என்று வரும் போது அவர்களை இந்தச் சீடர்களைப்போலவே தள்ளி விட நாமும் நினைக்கிறோம். ஜேசு அவர்களிடம் "நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கு இவர்களிடம் எதுவும் இல்லை, இவர்களை பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை. அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்து விடுவார்கள். இவர்களுள் சிலர் நெடுந்தொலைவில் இருந்து வந்துள்ளனர்."என்று கூறினார். இங்கே, எமது உதவி தேவைப்படுவோர் யார் யார்? எப்படியான சூழ்நிலையில் உள்ளோர்? என்று கோடிட்டு கூறியுள்ளார். அதற்கு சீடர் அவரிடம் "இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்கப் போதுமான உணவு நமக்கு பாலை நிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்? " கேள்வி கேட்க்கின்றனர். அன்று  கடற்கரையில் தமது தந்தையுடன், வலைகளை பழுது பார்த்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி "என்னைப் பின்செல்" என்று ஜேசு சொன்னவுடன், கேள்வி கேட்க்காமல் உறவையும், உடைமைகளையும் விட்டுவிட்டு அவரை பின்தொடர்ந்தவர்கள். அவரோடு உண்டு, குடித்து, உறங்கியவர்களால்  அவர் எப்படிப்பட்ட குணம் உள்ளவர், வல்லமை  உடையவர் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. சந்தேகம் கொண்டு கேள்வி எழுப்புகின்றனர். இவ்வாறே நாமும் எம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தின் மீது அக்கறையில்லாமல் கேள்விகள் கேட்டு நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்கிறோம். இன்னொருவர் பணக்காரராக இருப்பார் போலுள்ளது "நாங்கள் போய்இருநூறு தெனாரியத்துக்கு அப்பம் வாங்கி இவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்கிறீரா?" நாங்களும் இப்படியான கேள்வி கேட்பதுண்டு காசையும் கொடுத்து, வாங்கி வேற கொடுக்க வேண்டுமா? நாங்கள் ஏன் செய்ய வேண்டும்? அவர்களே நம்மைப்போல் உழைத்து வாழட்டும்.     "அவ்வாறு வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு தூண்டும் கிடைக்காதே" என்று தட்டிக் கழிக்கிறார். ஜேசு அவர்களை பார்த்து "உங்களிடம் எத்தனை அப்பங்கள்உள்ளன ?" என்று கேட்க "ஏழு அப்பங்களும் கொஞ்சம் மீன்களும்" என்கிறார். இன்னொரு சிறுவனிடம், ஐந்து வாற்கோதுமை அப்பங்களும், இரண்டு மீன்களும் உண்டு. ஆனால் இத்தனை பேருக்கு எப்படிப் போதும்? " என்றனர். நிஞாயமான கேள்வி. இதுதான் இங்கு கருத்து பதிந்த உறவும் கேலி பண்ணியிருந்தார். இப்படி கேள்வி கேட்டு, கடமையை தட்டிக்கழிக்கும் மக்கள் மத்தியில் ஒரு சிறுவன். பெற்றோரில் தங்கி வாழ்பவன். பெற்றோர் தனக்கு கொடுத்தனுப்பிய உணவை தேவையறிந்து யார் வற்புறுத்தலும் இன்றி  மற்றவரோடு பகிர்ந்து உண்ண முன்வந்திருக்கிறான். அதை அவன் ஏற்கெனவே அறிவித்திருந்த படியாலேயே, அவன் வைத்திருந்ததை மற்றவர்கள் அறிந்து ஜேசுவுக்கு தெரிவிக்கிறார்கள். ஜேசுவோ திரளான சனங்களை தரையில் அமரச் செய்தார்.  மக்கள் நூறு பேராகவும், ஐம்பது பேராகவும் வரிசையாக அமர்ந்தனர். ஊர் முழுக்க உதவி செய்ய வேண்டும் என்பதில்லை. எங்களை சுற்றி தேவையிலுள்ள ஐந்து பேர், குறைந்தது என் வசதிக்கேற்ப ஒருவருக்காவது உதவி செய்யலாம். இதன் மூலம் நலிந்து தேவையிலுள்ளோர் மதம் மாறுவதைத் தடுக்கலாம். சீடரிடம் இருந்த அப்பங்களையும், மீன்களையும் எடுத்து கடவுளுக்கு நன்றி கூறிப் பிட்டு (பகிர்ந்து) சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களிடம் கொடுத்தார்கள். அனைவரும் வயிறார உண்டனர். நாங்கள் மற்றவருக்கு உதவ முன்வரும்போது, நம்மைப் பார்ப்போரும் நம்மோடு இணைந்து கொள்வார்கள். கடவுளும் நம்மையும், நம்மிடம்உதவி பெறுவோரையும் வளங்களால் நிறைவாக்குவார். 
இன்றைய இளைஞர்களும், அவர்களை பெற்றவர்களும் அதைத்தான் செய்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவும் ஒரு இளைஞன் பகிர்ந்த கருத்து: நாவற்குழியில் பாதிக்கப் பட்டு, உதவி தேவைப்படுவோரின் பட்டியல் நமக்குத் தரப்பட்டது. அங்கே நாட் கூலிகள், நோய் காரணமாக தனிமைப் படுத்தப்பட்டவர்கள் என்கிற வகையில் இருந்தார்கள். எங்களிடம் இருந்த சிறு தொகையை பகிர்ந்தளிக்க ஆயத்தம் செய்தோம். ஒருவர் தொள்ளாயிரம் கிலோ அரிசி தந்தார், வேறொருவர் அதைவிட கூடுதலான தொகை அரிசியைத் தந்தார். அவர்கள் தந்த பட்டியலின்படி ஒருவரும் தவறாமல் மூன்று நாளைக்கு தேவையான உலர் உணவுப்பொருட்களை கொடுத்தோம். தந்துதவியவர்களுக்கு நன்றி எனக் குறிப்பிட்டிருந்தார். இவர்களுக்கு மேலும் விமர்சனங்கள் உண்டு. தொந்தரவுகளும் உண்டு. ஆனால் பசி ஒன்றை ஆற்றவேண்டும் என்கிற நோக்கோடு தொடர்கிறார்கள், முட்டுகட்டைகள் ஏற்படும்வரை. இதைத்தான் அன்று ஜேசுவும் செய்தார், செய்யப் பணித்தார்.(கற்றுக்கொடுத்தார்). இங்கு கிராமங்களில் வந்து பாத்தால், நாள்தோறும் எந்த வேறுபாடுமில்லாமல் உதவி நடக்கிறது. ஆனால் படம் பிடிப்பதில்லை, விளம்பரம் செய்வதில்லை. காரணம் இது வியாபாரம் இல்லை, அரசியலும் இல்லை. ஒவ்வொருவரதும் கடமை. "பழிச்சொல்லுக்கும் பாராட்டுக்கும் செவி மடுத்தால் நல்லது எதுவும் செய்ய முடியாது". என சுவாமி விவேகானந்தர் கூறிச் சென்றுள்ளார். உங்களை கேலி செய்கிறார்கள் என்று விலகிப் போய் திரும்பிப் பாருங்கள், அவர்கள் அதே இடத்திலேயே இருந்து வேறொருவரை கேலி செய்து கொண்டிருப்பார்கள். அது அவர்களது குணம். பத்து வீதம் கமிஷன் என்றொரு விளக்கம் வேறு. நான் கமிஷன் கொடுத்தால், மற்றவர் கொடுப்பதுவும் கமிஷன் என்பதே எனது விளக்கம். அவர்கள் தமது சமுதாயத்திலுள்ள நலிந்தவர்களை, கைவிடப்பட்டவர்களுக்காக அதை கொடுக்கிறார்கள் என்பது இவர்களுக்கு எங்கே விளங்கப்போகுது? ஒருவர் செய்வதை வைத்து எல்லோரையும் ஒரே தட்டில் வைத்து விமர்சிப்பவர்களின் கருத்துக்களை நாம் செவிமடுக்கத்தேவை இல்லை. கோவில் வாசலில் அம்மா பசிக்குது. என்று கைநீட்டுவோரை கடந்து சென்று சாமிக்குப் பால் ஊற்றி விட்டால் எனது பாவங்கள் கழுவப்பட்டதே என்கிற பெருமையா? அன்றி சுவாமியை கழுவி சுத்தமாக்கிவிட்டேன். என்கிற திருப்தியா? நல்லதை நினைத்து செய்வோம். தூற்றுவோர் தூற்றட்டும். ஒரு முறை அன்னை திரேசா ஒரு செல்வந்தரிடம் ஏழை மக்களுக்காய் உதவி வேண்டிச் சென்றார். நோயாளிகளாலும், ஏழைகளாலும் தமது நகரத்தை மதிப்பிழக்கச் செய்கிறார். என்று அன்னை திரேசா மேல் அவனுக்கு கோவம். உதவி கேட்ட அன்னையிடம் கையை நீட்ட சொன்னான். அன்னையாரும் பணம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் கையை நீட்டினார். அந்த மனிதரோ தன் வெறுப்பையெல்லாம் காறி, எச்சியாகஅவரது கையில் உமிழ்ந்தார். அவரோ சிறிதும் கவலைப்படாமல் புன்முறுவலுடன், கையை தனது புடைவையில் துடைத்தபடியே, எனக்குரியத்தை இந்தக் கையில் தந்துவிடடீர். நன்றி. ஏழைகளுக்குரியதை இந்தக் கையில் தாரும். என்று மறு கையை நீட்டினாராம். அவ்வாறே ஒரு இரவு அன்னையாரின் கதவை யாரோ தட்டிக்கொண்டிருந்தார்களாம். கதவைத் திறந்தபோது, அங்கே ஒரு யாசகன் ஒரு  பார்சலை அன்னையிடம் கொடுத்து "அம்மா எனது இரவு உணவுக்காக ஒருவர் இதை எனக்கு  கொடுத்தார். நான் ஏற்கெனவே எனது உணவை வேறொருவர் தந்ததால்  எடுத்து விட்டேன். எனக்கு இது தேவையில்லை. உங்களிடம் உள்ளவர்களில் யாருக்காவது இது தேவைப்படலாம் ஆகவே இதை உங்களிடம் கொடுக்க வந்தேன்." என்றாராம். மனிதம் ஏழைகளிடம் பிறக்கிறது. ஏளனம் பணக்காரர்களிடம் இருக்கிறது. "அல்லேலூயா" என்பது தீண்டத்த தகாத சொல் அல்ல, ஆண்டவருக்கு நன்றி, மகிமை, புகழ் என்று பொருள். நமக்கு வேண்டத் தகாதவர்கள் சொல்வதால், அந்தச் சொல்லை கேலி செய்கிறோம். எம்மைப் படைத்தவரை பழித்துரைக்கிறோம். சாத்தான் என்று எம்மை யாராவது சொன்னால் நாம் ஏன் பயந்து குதிக்க வேண்டும்? எனது முகவரி சரியாய் இருந்தால் அது எனக்குரியது. இல்லையாயின் அதை அனுப்பியவரிடமே திரும்பிப் போய்ச்சேரும். ஒரு சாத்தானுக்குத் தான் மற்றச் சாத்தானை அடையாளம் காண முடியும். நாங்கள் எல்லோரும் தமிழரே. 2010ம் ஆண்டு, சிங்கள இனவெறியால் உறவுகள், உடைமைகள், இருப்பிடம் இழந்து மூச்சு விட தலை நிமிர்த்தினோம். சிங்களவன் போர் வெற்றி கொண்டாட துடித்துக்கொண்டிருந்தான். அந்த நேரம் இயற்கை அன்னை பொறுக்காது ஊற்றத் தொடங்கினாள். தென் பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. அப்போதும் யாழ்ப்பாணத்தில் இருந்து நிவாரணம் அனுப்பி வைத்தார்கள் இழப்பில் இருந்த தமிழர். ஆனால் வன்னிப்போர் நடந்த போது, வெளிநாட்டு தமிழர் பொருள் சேர்த்து, கப்பலை வாடகைக்கு அமர்த்தி பாதிக்கப் பட்ட மக்களுக்கு கொண்டுவந்தபோது: அதை அனுமதிக்காமல், குறித்த கப்பலும், ஆவலோடு கொட்டுவந்தவர்களும் காத்திருந்து கிடைக்காமல் போனது சிங்களவனின் இயல்பு. ஆகவே நாம் குறைகளோடும், நிறைகளோடும் ஏற்று வாழுவோம். கடவுளால் கூட எல்லோருக்கும் ஏற்றவராய் இருக்க முடியாது. புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2020 at 19:35, ampanai said:

ஏன் சிங்கப்பூர் தென்கொரியா கடன் இல்லாமல் வளர்ந்து நிற்கின்றன,

2018ல் சிங்கப்பூரின் கடன் 416,198 மில்லியன் அமெரிக்க டொலர்கள். 2017ல் தென் கொரியாவின் கடன் 612,075 மில்லியன் அமெரிக்க டொலர்கள். Google ல் National debt of Singapore என்று கொடுங்கள் உடனே வரும் தகவல். 

16 hours ago, ரதி said:


எப்ப நீங்கள் இணைப் பற்றை விட மதப் பற்றை தூக்கி பிடித்தீர்களோ அதற்கு பிறகு உங்களுக்கு தமிழ்ப்பற்று இருக்குது என்று சொல்லும் தகுதியை நீங்கள் இழந்து விட்டீர்கள்...

யாழ் களத்தில் பலரும் தமிழ்ப்பற்று இருக்குது என்று சொல்லும் தகுதியை எப்போதோ இழந்து விட்டனர். உண்மையில் மக்களுக்கு பொதுவாக மொழிப்பற்றிலும் பார்க்க மதப்பற்றே உறுதியானது. சிறு வயதிலிருந்தே ஊட்டப்படும் கடவுள்கள் மீதான பயம், பக்தி, காதல், பாசம், அன்பு ஆகியவை இதற்கு முதல் காரணம். மக்கள் பின்பற்றும் சடங்குகள் மத அடிப்படையில் அமைந்திருப்பது இரண்டாவது காரணம். பல்வேறு கலாச்சாரங்களையும் பின்பற்றும் பல்வேறு நாட்டுமக்கள் தமிழ் பேசுகிறார்கள். ஆங்கிலம், சீனம் போன்ற மொழிகளும் இவ்வாறனவையே. ஆகவே மொழிப்பற்று மதப்பற்றிலும் பார்க்க மக்களுக்கு குறைவு. இலங்கையில் ‘சிங்களம் மட்டும்’ சட்டத்துடன் தோன்றிய மொழிப்பிரச்சினை போராக மாறிய பொதுக்காரணத்தால் மொழியால் மக்கள் ஒன்றுபட்டார்கள். இப்போது போர் முடிந்துவிட்டது. தமிழரின்மொழிப்பிரச்சினைக்கு    எழுதப்படாத தீர்வாக சிங்களம் படிப்பது உருவாகிவிட்டது. முன்னாள் முதலமைச்சர்விக்னேஸ்வரனோ அதை வெளிப்படையாகவே ஊக்குவித்துள்ளார். அவரது குடும்ப உறவுகளுள் சிங்களவரும் உள்ளனர். ஆகவே போருக்கு முந்திய மொழிப்பற்று மறைந்து போகிறது. மதப்பற்றே மேலோங்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2020 at 03:12, Vankalayan said:

உண்மையாகவே இங்கு கருத்து எழுதுபவர்களைவிட எனக்கு தமிழ்ப்பற்று அதிகம்। நான் பொதுவாக மற்றைய தளங்களில் தமிழை உயர்த்திய, தமிழர்களை உயர்த்திதான் எழுதுவேன்। இருந்தாலும் சில மதவாதிகள் செய்யும் தவறுக்காக எல்லா கிறிஸ்தவர்களையும் தாக்கி எழுதும்போது அது என்னை மிகவும் பாதித்ததுடன் நான் ஒரு தமிழன் அல்ல, கிறிஸ்தன் என்ற நிலைக்கு கொண்டு சென்றது। எனவே இங்கு எழுதுபவர்களின் நிலைமையை பொறுத்து சில வேளைகளில் மற்றம் ஏட்படலாம்। இருந்தாலும் இப்போது நாங்கள் ஒரு கிறிஸ்தவ (RC / Non  RC ) அமைப்பை உருவாக்கி கிறிஸ்தவ மக்களின் உரிமைக்காக பரிந்து பேச இருக்கிறோம்।  எனவே இப்போதைக்கு அப்படியே தொடருவோம்।    இருந்தாலும் உங்கள் கருத்துக்கள் , நடுநிலைமை என்னை கவர்ந்த ஒன்று। உங்களுக்கும் நன்றி , வணக்கம்।

இல்லை எனக்குத் தான் தமிழ் பற்று அதிகம் 

9 hours ago, Vankalayan said:

நிச்சயமாக உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம்।தமிழ் பற்று இருந்தது.இப்போது இல்லை।

 

இதுக்குள்ளையும் கொண்டுவந்து ஆதாரமே இல்லா மூடநம்பிக்கைளை பெரிசா திணிக்குமளவுக்கு நிலைமை மோசமா இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎24‎-‎04‎-‎2020 at 17:36, ampanai said:

உங்கள் கருத்தில் வெளிப்படையாக பார்க்கும்பொழுது நியாயமாக தெரிந்தாலும், ஒரு கருத்தை சொல்லியாக வேண்டும் 

தமிழினம் இலங்கையில் ஒரு சிறுபான்மை இனம், சிங்களம் என பெரும்பான்மை இனத்தால் பலவேறு அழிவுகளை சவால்களை சந்திக்கும் இனம். 

எமது இனத்திற்குள், சிறுபான்மை மக்களாக கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பௌத்தர்கள் உள்ளார்கள். ஆக, நாம், இந்துக்கள்/சைவர்கள் பெருந்தன்மையாக நடந்து கொள்ளவேண்டும் இல்லாவிட்டால், எமது போராட்ட  நியாயத்தை இழந்துவிடும் அபாயம் உள்ளது. 

இந்துக்கள்/சைவர்கள் எவ்வாறு பெருந்தன்மையாய் நடந்து கொள்ள வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? 

 

11 hours ago, கற்பகதரு said:

2018ல் சிங்கப்பூரின் கடன் 416,198 மில்லியன் அமெரிக்க டொலர்கள். 2017ல் தென் கொரியாவின் கடன் 612,075 மில்லியன் அமெரிக்க டொலர்கள். Google ல் National debt of Singapore என்று கொடுங்கள் உடனே வரும் தகவல். 

யாழ் களத்தில் பலரும் தமிழ்ப்பற்று இருக்குது என்று சொல்லும் தகுதியை எப்போதோ இழந்து விட்டனர். உண்மையில் மக்களுக்கு பொதுவாக மொழிப்பற்றிலும் பார்க்க மதப்பற்றே உறுதியானது. சிறு வயதிலிருந்தே ஊட்டப்படும் கடவுள்கள் மீதான பயம், பக்தி, காதல், பாசம், அன்பு ஆகியவை இதற்கு முதல் காரணம். மக்கள் பின்பற்றும் சடங்குகள் மத அடிப்படையில் அமைந்திருப்பது இரண்டாவது காரணம். பல்வேறு கலாச்சாரங்களையும் பின்பற்றும் பல்வேறு நாட்டுமக்கள் தமிழ் பேசுகிறார்கள். ஆங்கிலம், சீனம் போன்ற மொழிகளும் இவ்வாறனவையே. ஆகவே மொழிப்பற்று மதப்பற்றிலும் பார்க்க மக்களுக்கு குறைவு. இலங்கையில் ‘சிங்களம் மட்டும்’ சட்டத்துடன் தோன்றிய மொழிப்பிரச்சினை போராக மாறிய பொதுக்காரணத்தால் மொழியால் மக்கள் ஒன்றுபட்டார்கள். இப்போது போர் முடிந்துவிட்டது. தமிழரின்மொழிப்பிரச்சினைக்கு    எழுதப்படாத தீர்வாக சிங்களம் படிப்பது உருவாகிவிட்டது. முன்னாள் முதலமைச்சர்விக்னேஸ்வரனோ அதை வெளிப்படையாகவே ஊக்குவித்துள்ளார். அவரது குடும்ப உறவுகளுள் சிங்களவரும் உள்ளனர். ஆகவே போருக்கு முந்திய மொழிப்பற்று மறைந்து போகிறது. மதப்பற்றே மேலோங்குகிறது.

யாழில் ஒரு சிலர் தான் தீவிர மதப் பற்றாளர்கள் ...மற்றவர்கள் சைவ/இந்து மதத்தை யாராவது தாக்கிப் பேசினால் மட்டும் அதற்கு எதிராய் குரல் கொடுப்பவர்கள்... எமது மதத்தை அழித்து விட்டால் இனத்தை அழித்து விடலாம் என்று  சிலர் நினைக்கிறார்கள் ...என்னைப் பொறுத்த வரை  இனமும்,  மதமும் ஒன்றிப் பிணைந்துள்ளது 
 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கற்பகதரு said:

உண்மையில் மக்களுக்கு பொதுவாக மொழிப்பற்றிலும் பார்க்க மதப்பற்றே உறுதியானது. சிறு வயதிலிருந்தே ஊட்டப்படும் கடவுள்கள் மீதான பயம், பக்தி, காதல், பாசம், அன்பு ஆகியவை இதற்கு முதல் காரணம். மக்கள் பின்பற்றும் சடங்குகள் மத அடிப்படையில் அமைந்திருப்பது இரண்டாவது காரணம். பல்வேறு கலாச்சாரங்களையும் பின்பற்றும் பல்வேறு நாட்டுமக்கள் தமிழ் பேசுகிறார்கள். ஆங்கிலம், சீனம் போன்ற மொழிகளும் இவ்வாறனவையே. ஆகவே மொழிப்பற்று மதப்பற்றிலும் பார்க்க மக்களுக்கு குறைவு. இலங்கையில் ‘சிங்களம் மட்டும்’ சட்டத்துடன் தோன்றிய மொழிப்பிரச்சினை போராக மாறிய பொதுக்காரணத்தால் மொழியால் மக்கள் ஒன்றுபட்டார்கள். இப்போது போர் முடிந்துவிட்டது. தமிழரின்மொழிப்பிரச்சினைக்கு    எழுதப்படாத தீர்வாக சிங்களம் படிப்பது உருவாகிவிட்டது. முன்னாள் முதலமைச்சர்விக்னேஸ்வரனோ அதை வெளிப்படையாகவே ஊக்குவித்துள்ளார். அவரது குடும்ப உறவுகளுள் சிங்களவரும் உள்ளனர். ஆகவே போருக்கு முந்திய மொழிப்பற்று மறைந்து போகிறது. மதப்பற்றே மேலோங்குகிறது.

 

51 minutes ago, ரதி said:

எமது மதத்தை அழித்து விட்டால் இனத்தை அழித்து விடலாம் என்று  சிலர் நினைக்கிறார்கள் ...என்னைப் பொறுத்த வரை  இனமும்,  மதமும் ஒன்றிப் பிணைந்துள்ளது 
 

நீங்களும் நானும் உங்களின் இந்த கருத்துடன் முழுமையாக உடன்படுகின்றோம். “மொழி” இங்கு இடம்பெறவில்லை என்பதை கவனித்தீர்களா? மதம், கலாச்சாரம், நம்பிக்கைகள் ஆகியவை ஒன்றிப்பிணைந்தவை. பல்வேறு இனத்தவர் இஸ்லாமியராக இருந்தாலும், அவர்கள் அனைவரும் தம்மை ஒரே இனமாக, “முஸ்லிம்” களாக பார்க்கிறார்கள். உலகளாவிய பல்வேறு நாடுகளில் உள்ள இந்துக்கள் தம்மை இந்துக்கள் முதல், இந்தியர் பிறகு என்றே பார்க்கிறார்கள். இதுவே அவர்களின் “இனம்” என்று சட்டரீதியாகவும், பொது வழக்கிலும் சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, சீனா, மலேசியா, பீஜீ, மொரீசியஸ், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் கருதப்படுகிறது. இந்த நாடுகளை பொறுத்தளவில்,  நாமனைவரும் “இந்தியர்” என்ற இனத்துள் வருகிறோம்; எங்கள் மதம் இந்து மதம்; எம்மில் மதம் மாறியவர்களும் உண்டு என்பதே சர்வதேச அளவில் நாம் அறியப்பட்டுள்ள விதமாகும். தமிழும், தமிழரும் இந்த “இந்தியர்” பிரிவின் உபபிரிவு பேசும் மொழியும் அதை காட்டும் இனமும் ஆகும். மறுபடியும் நீங்கள் சொல்வது போல, மதப்பற்றே உறுதியானது: இது இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். ஈழத்தமிழர் மத்தியில் காணப்பட்ட அபரீதமான மொழிப்பற்று ஒரு போர்க்கால நிகழ்வும் தேவையுமாக இருந்தது. அது இன்று பழைய வரலாறாகி இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2020 at 04:27, ampanai said:

உலககெங்கும் சிங்கள அடக்குமுறை காரணமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் எவ்வாறு பொருளாதார ரீதியாக ஒப்பீட்டளவில் உயர்ந்த நிலையில் உள்ளனர்??

புரியாத மொழி, தெரியாக சூழல் - இந்த நாடுகளிலே முதலாம் தலைமுறை தமிழர்கள் ஏன் வறுமையாக இல்லை ? ஆனால், சிறிலங்காவில் ?? 

இலங்கை தமிழர்கள் குடியேறிய வளர்ச்சி அடைந்த நாடுகளில் அவர்களை மாதிரி குடியேறிய மற்றய இனத்தவர்கள் என்ன வறுமையிலா இருக்கிறார்கள். எல்லோரும் நல்லாக தானே இருக்கிறார்கள். அந்த நாடுகள் பொருளாதர வளர்ச்சி அடைந்தவை. கனடாவில் கொரோனாவினால் வேலை வருமானம் பாதிக்கபட்டவர்களுக்கு வழங்கபடும் CERB வாரம் $500 எல்லோருக்கும் தானே.வறுமை எப்படி வரமுடியும்.
இலங்கையில் தங்களது முயற்சியினால் முன்னேறி உயர் நிலையில் உள்ள தமிழர்களும் உள்ளனர்.

  • தொடங்கியவர்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை தமிழர்கள் குடியேறிய வளர்ச்சி அடைந்த நாடுகளில் அவர்களை மாதிரி குடியேறிய மற்றய இனத்தவர்கள் என்ன வறுமையிலா இருக்கிறார்கள். எல்லோரும் நல்லாக தானே இருக்கிறார்கள். அந்த நாடுகள் பொருளாதர வளர்ச்சி அடைந்தவை. கனடாவில் கொரோனாவினால் வேலை வருமானம் பாதிக்கபட்டவர்களுக்கு வழங்கபடும் CERB வாரம் $500 எல்லோருக்கும் தானே.வறுமை எப்படி வரமுடியும்.
இலங்கையில் தங்களது முயற்சியினால் முன்னேறி உயர் நிலையில் உள்ள தமிழர்களும் உள்ளனர்.

வறுமைக்கு பல காரணங்கள் உள்ளன. நீங்கள் கூறுவது போன்று பணம் தரப்பட்டாலும் அந்த பந்தை பிழையான வழியில் ஆடி விடுவார்கள், அதனால் வறுமை. வறுமை என்பதின் புரிதலும் மாறுபடும். 

சில உதாரணங்களை கூறலாம் :

- கடன் : தமது வருமானத்திற்கு மேலான கடன் 
- மது மற்றும் அது சார்ந்த பாவனைகள், இவற்றிற்கு அடிமையாவது 

அடிப்படையில் சுதந்திர பொருளாதாரத்தை கொண்ட நட்டுகளில் பணத்தை திட்டமிடல் ஒரு கலை. அதை சரியான வழியில் நடத்தாவிடின் வறுமை பற்றிக்கொள்ளலாம்.   

  • தொடங்கியவர்
On 17/4/2020 at 09:52, ampanai said:

ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தீர்மானம் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச சட்டங்களையும் இலங்கையினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளையும் மீறுவதாக அமைந்துள்ளது.

Image

18 hours ago, satan said:

வணக்கம் வங்காலையான்! எதிர்ப்பு இருக்கும் என்பதற்காக உங்கள் கருத்துக்களை முடக்கி வைக்கத் தேவையில்லை. சிலரின் கருத்துக்கள் ஒருவருக்கு பாதிப்பையும், இன்னொருவருக்கு பக்குவத்தையும் ஏற்படுத்தி விடுகிறது என்பது உண்மை. உங்கள் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. மதமாற்றத்தின்காரணியை விட்டுவிட்டு மற்றவர்களை குற்றம் சாட்டுவதால் எந்தப்பயனுமில்லை. எல்லா மதங்களும் நல்லதையே போதிக்கிறது. நாமும் போதனையோடு நிறுத்திக்கொண்டு, அதற்குள்ளே எல்லோரும் நிற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதால், தேவை நோக்கி தள்ளப்படுவோரை தாங்க முடியாமல் இன்னொருவரை தாக்கி நம்மை காத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். சிலர் போதனையோடு நிற்காமல், அதை வாழ்வாக்கிவழிகாட்டி சாதிக்கும் போது, சகிக்க முடியாமல் நிந்திக்கிறோம். மதமாற்றம் என்கிற தலைப்பில் வந்த செய்திகள், உறவுகளின் பதிவுகளை ஆழமாக படித்தீர்கள் என்றால்: பலபேரின் உண்மை முகங்கள், அடாவடிகள், மாறி மாறி முன் பின் முரணான கருத்துக்கள், மழுப்பல்கள் புரியும். ஓரிடத்தில் எதிர்க்கருத்து. இன்னோர் இடத்தில் ஆதரவுக்கருத்து, வேடிக்கையாக இருக்கும். அப்படியே பயிற்றப்பட்டு வளர்ந்து விட்டார்கள். இது போன்ற  முன்னோரு தலைப்பில் ஒரு உறவு பதிந்திருந்த கருத்துக்கு உரிய விளக்கம் கொடுப்பதற்கு தகுந்த காலம் இது என்பதால் அவரது சந்தேகம் தீரும் என்கிற நம்பிக்கையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஏற்கெனவே உங்களுக்கு தெரிந்த விடயம் தான். இருந்தாலும் சம்பந்தப்பட்டவருக்காக பதிகின்றேன். அவரது கேலி ஜேசுநாதர் பலுகச் செய்த மீன், அப்பம் பற்றியது. நாம் மற்றவரை கேலி செய்வதற்கு பொருத்தமானதைமட்டும் எடுத்து விவாதிக்கும் போது. பல உண்மைகள் மறைந்து கேள்விகளும், கேலியும் எழுவது இயல்பானதே. சம்பவம் இதுதான். ஜேசு மக்களுக்கு போதித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்தவர்களுள் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளுமாவார்.  பொழுது சாயத்தொடங்க ஜேசுவின் சீடர் பன்னிருவரும் வந்து "இவ்விடம் பாலை நிலமாயிற்று,ஏற்கெனவே நெடுநேரமாகி விட்டது. சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும், பட்டிகளுக்கும் சென்று தங்கவும், உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பி விடும்" என்றனர். இன்று  எம் மதத்தில் இருப்போர் தேவை என்று வரும் போது அவர்களை இந்தச் சீடர்களைப்போலவே தள்ளி விட நாமும் நினைக்கிறோம். ஜேசு அவர்களிடம் "நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கு இவர்களிடம் எதுவும் இல்லை, இவர்களை பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை. அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்து விடுவார்கள். இவர்களுள் சிலர் நெடுந்தொலைவில் இருந்து வந்துள்ளனர்."என்று கூறினார். இங்கே, எமது உதவி தேவைப்படுவோர் யார் யார்? எப்படியான சூழ்நிலையில் உள்ளோர்? என்று கோடிட்டு கூறியுள்ளார். அதற்கு சீடர் அவரிடம் "இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்கப் போதுமான உணவு நமக்கு பாலை நிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்? " கேள்வி கேட்க்கின்றனர். அன்று  கடற்கரையில் தமது தந்தையுடன், வலைகளை பழுது பார்த்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி "என்னைப் பின்செல்" என்று ஜேசு சொன்னவுடன், கேள்வி கேட்க்காமல் உறவையும், உடைமைகளையும் விட்டுவிட்டு அவரை பின்தொடர்ந்தவர்கள். அவரோடு உண்டு, குடித்து, உறங்கியவர்களால்  அவர் எப்படிப்பட்ட குணம் உள்ளவர், வல்லமை  உடையவர் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. சந்தேகம் கொண்டு கேள்வி எழுப்புகின்றனர். இவ்வாறே நாமும் எம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தின் மீது அக்கறையில்லாமல் கேள்விகள் கேட்டு நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்கிறோம். இன்னொருவர் பணக்காரராக இருப்பார் போலுள்ளது "நாங்கள் போய்இருநூறு தெனாரியத்துக்கு அப்பம் வாங்கி இவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்கிறீரா?" நாங்களும் இப்படியான கேள்வி கேட்பதுண்டு காசையும் கொடுத்து, வாங்கி வேற கொடுக்க வேண்டுமா? நாங்கள் ஏன் செய்ய வேண்டும்? அவர்களே நம்மைப்போல் உழைத்து வாழட்டும்.     "அவ்வாறு வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு தூண்டும் கிடைக்காதே" என்று தட்டிக் கழிக்கிறார். ஜேசு அவர்களை பார்த்து "உங்களிடம் எத்தனை அப்பங்கள்உள்ளன ?" என்று கேட்க "ஏழு அப்பங்களும் கொஞ்சம் மீன்களும்" என்கிறார். இன்னொரு சிறுவனிடம், ஐந்து வாற்கோதுமை அப்பங்களும், இரண்டு மீன்களும் உண்டு. ஆனால் இத்தனை பேருக்கு எப்படிப் போதும்? " என்றனர். நிஞாயமான கேள்வி. இதுதான் இங்கு கருத்து பதிந்த உறவும் கேலி பண்ணியிருந்தார். இப்படி கேள்வி கேட்டு, கடமையை தட்டிக்கழிக்கும் மக்கள் மத்தியில் ஒரு சிறுவன். பெற்றோரில் தங்கி வாழ்பவன். பெற்றோர் தனக்கு கொடுத்தனுப்பிய உணவை தேவையறிந்து யார் வற்புறுத்தலும் இன்றி  மற்றவரோடு பகிர்ந்து உண்ண முன்வந்திருக்கிறான். அதை அவன் ஏற்கெனவே அறிவித்திருந்த படியாலேயே, அவன் வைத்திருந்ததை மற்றவர்கள் அறிந்து ஜேசுவுக்கு தெரிவிக்கிறார்கள். ஜேசுவோ திரளான சனங்களை தரையில் அமரச் செய்தார்.  மக்கள் நூறு பேராகவும், ஐம்பது பேராகவும் வரிசையாக அமர்ந்தனர். ஊர் முழுக்க உதவி செய்ய வேண்டும் என்பதில்லை. எங்களை சுற்றி தேவையிலுள்ள ஐந்து பேர், குறைந்தது என் வசதிக்கேற்ப ஒருவருக்காவது உதவி செய்யலாம். இதன் மூலம் நலிந்து தேவையிலுள்ளோர் மதம் மாறுவதைத் தடுக்கலாம். சீடரிடம் இருந்த அப்பங்களையும், மீன்களையும் எடுத்து கடவுளுக்கு நன்றி கூறிப் பிட்டு (பகிர்ந்து) சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களிடம் கொடுத்தார்கள். அனைவரும் வயிறார உண்டனர். நாங்கள் மற்றவருக்கு உதவ முன்வரும்போது, நம்மைப் பார்ப்போரும் நம்மோடு இணைந்து கொள்வார்கள். கடவுளும் நம்மையும், நம்மிடம்உதவி பெறுவோரையும் வளங்களால் நிறைவாக்குவார். 
இன்றைய இளைஞர்களும், அவர்களை பெற்றவர்களும் அதைத்தான் செய்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவும் ஒரு இளைஞன் பகிர்ந்த கருத்து: நாவற்குழியில் பாதிக்கப் பட்டு, உதவி தேவைப்படுவோரின் பட்டியல் நமக்குத் தரப்பட்டது. அங்கே நாட் கூலிகள், நோய் காரணமாக தனிமைப் படுத்தப்பட்டவர்கள் என்கிற வகையில் இருந்தார்கள். எங்களிடம் இருந்த சிறு தொகையை பகிர்ந்தளிக்க ஆயத்தம் செய்தோம். ஒருவர் தொள்ளாயிரம் கிலோ அரிசி தந்தார், வேறொருவர் அதைவிட கூடுதலான தொகை அரிசியைத் தந்தார். அவர்கள் தந்த பட்டியலின்படி ஒருவரும் தவறாமல் மூன்று நாளைக்கு தேவையான உலர் உணவுப்பொருட்களை கொடுத்தோம். தந்துதவியவர்களுக்கு நன்றி எனக் குறிப்பிட்டிருந்தார். இவர்களுக்கு மேலும் விமர்சனங்கள் உண்டு. தொந்தரவுகளும் உண்டு. ஆனால் பசி ஒன்றை ஆற்றவேண்டும் என்கிற நோக்கோடு தொடர்கிறார்கள், முட்டுகட்டைகள் ஏற்படும்வரை. இதைத்தான் அன்று ஜேசுவும் செய்தார், செய்யப் பணித்தார்.(கற்றுக்கொடுத்தார்). இங்கு கிராமங்களில் வந்து பாத்தால், நாள்தோறும் எந்த வேறுபாடுமில்லாமல் உதவி நடக்கிறது. ஆனால் படம் பிடிப்பதில்லை, விளம்பரம் செய்வதில்லை. காரணம் இது வியாபாரம் இல்லை, அரசியலும் இல்லை. ஒவ்வொருவரதும் கடமை. "பழிச்சொல்லுக்கும் பாராட்டுக்கும் செவி மடுத்தால் நல்லது எதுவும் செய்ய முடியாது". என சுவாமி விவேகானந்தர் கூறிச் சென்றுள்ளார். உங்களை கேலி செய்கிறார்கள் என்று விலகிப் போய் திரும்பிப் பாருங்கள், அவர்கள் அதே இடத்திலேயே இருந்து வேறொருவரை கேலி செய்து கொண்டிருப்பார்கள். அது அவர்களது குணம். பத்து வீதம் கமிஷன் என்றொரு விளக்கம் வேறு. நான் கமிஷன் கொடுத்தால், மற்றவர் கொடுப்பதுவும் கமிஷன் என்பதே எனது விளக்கம். அவர்கள் தமது சமுதாயத்திலுள்ள நலிந்தவர்களை, கைவிடப்பட்டவர்களுக்காக அதை கொடுக்கிறார்கள் என்பது இவர்களுக்கு எங்கே விளங்கப்போகுது? ஒருவர் செய்வதை வைத்து எல்லோரையும் ஒரே தட்டில் வைத்து விமர்சிப்பவர்களின் கருத்துக்களை நாம் செவிமடுக்கத்தேவை இல்லை. கோவில் வாசலில் அம்மா பசிக்குது. என்று கைநீட்டுவோரை கடந்து சென்று சாமிக்குப் பால் ஊற்றி விட்டால் எனது பாவங்கள் கழுவப்பட்டதே என்கிற பெருமையா? அன்றி சுவாமியை கழுவி சுத்தமாக்கிவிட்டேன். என்கிற திருப்தியா? நல்லதை நினைத்து செய்வோம். தூற்றுவோர் தூற்றட்டும். ஒரு முறை அன்னை திரேசா ஒரு செல்வந்தரிடம் ஏழை மக்களுக்காய் உதவி வேண்டிச் சென்றார். நோயாளிகளாலும், ஏழைகளாலும் தமது நகரத்தை மதிப்பிழக்கச் செய்கிறார். என்று அன்னை திரேசா மேல் அவனுக்கு கோவம். உதவி கேட்ட அன்னையிடம் கையை நீட்ட சொன்னான். அன்னையாரும் பணம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் கையை நீட்டினார். அந்த மனிதரோ தன் வெறுப்பையெல்லாம் காறி, எச்சியாகஅவரது கையில் உமிழ்ந்தார். அவரோ சிறிதும் கவலைப்படாமல் புன்முறுவலுடன், கையை தனது புடைவையில் துடைத்தபடியே, எனக்குரியத்தை இந்தக் கையில் தந்துவிடடீர். நன்றி. ஏழைகளுக்குரியதை இந்தக் கையில் தாரும். என்று மறு கையை நீட்டினாராம். அவ்வாறே ஒரு இரவு அன்னையாரின் கதவை யாரோ தட்டிக்கொண்டிருந்தார்களாம். கதவைத் திறந்தபோது, அங்கே ஒரு யாசகன் ஒரு  பார்சலை அன்னையிடம் கொடுத்து "அம்மா எனது இரவு உணவுக்காக ஒருவர் இதை எனக்கு  கொடுத்தார். நான் ஏற்கெனவே எனது உணவை வேறொருவர் தந்ததால்  எடுத்து விட்டேன். எனக்கு இது தேவையில்லை. உங்களிடம் உள்ளவர்களில் யாருக்காவது இது தேவைப்படலாம் ஆகவே இதை உங்களிடம் கொடுக்க வந்தேன்." என்றாராம். மனிதம் ஏழைகளிடம் பிறக்கிறது. ஏளனம் பணக்காரர்களிடம் இருக்கிறது. "அல்லேலூயா" என்பது தீண்டத்த தகாத சொல் அல்ல, ஆண்டவருக்கு நன்றி, மகிமை, புகழ் என்று பொருள். நமக்கு வேண்டத் தகாதவர்கள் சொல்வதால், அந்தச் சொல்லை கேலி செய்கிறோம். எம்மைப் படைத்தவரை பழித்துரைக்கிறோம். சாத்தான் என்று எம்மை யாராவது சொன்னால் நாம் ஏன் பயந்து குதிக்க வேண்டும்? எனது முகவரி சரியாய் இருந்தால் அது எனக்குரியது. இல்லையாயின் அதை அனுப்பியவரிடமே திரும்பிப் போய்ச்சேரும். ஒரு சாத்தானுக்குத் தான் மற்றச் சாத்தானை அடையாளம் காண முடியும். நாங்கள் எல்லோரும் தமிழரே. 2010ம் ஆண்டு, சிங்கள இனவெறியால் உறவுகள், உடைமைகள், இருப்பிடம் இழந்து மூச்சு விட தலை நிமிர்த்தினோம். சிங்களவன் போர் வெற்றி கொண்டாட துடித்துக்கொண்டிருந்தான். அந்த நேரம் இயற்கை அன்னை பொறுக்காது ஊற்றத் தொடங்கினாள். தென் பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. அப்போதும் யாழ்ப்பாணத்தில் இருந்து நிவாரணம் அனுப்பி வைத்தார்கள் இழப்பில் இருந்த தமிழர். ஆனால் வன்னிப்போர் நடந்த போது, வெளிநாட்டு தமிழர் பொருள் சேர்த்து, கப்பலை வாடகைக்கு அமர்த்தி பாதிக்கப் பட்ட மக்களுக்கு கொண்டுவந்தபோது: அதை அனுமதிக்காமல், குறித்த கப்பலும், ஆவலோடு கொட்டுவந்தவர்களும் காத்திருந்து கிடைக்காமல் போனது சிங்களவனின் இயல்பு. ஆகவே நாம் குறைகளோடும், நிறைகளோடும் ஏற்று வாழுவோம். கடவுளால் கூட எல்லோருக்கும் ஏற்றவராய் இருக்க முடியாது. புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

நன்றி உங்கள் கருத்துக்கு। உண்மைகளை எழுதும்போது அதை ஏற்றுக்கொள்ள கஷடமாகத்தான் இருக்கும்। இவர்கள் அல்லேலூயா கூடடம் என்று பிழையாக அவதூறாக எழுதுவதுண்டு। அல்லேலூயா கூடடம் என்று வைத்துக்கொண்டாலும் அவர்கள் இணையத்தளத்தில் நம்மைப்போல நேரத்தை வீணாக்குவதில்லை।

இங்கு அல்லேலூயா கூடடத்தை சேர்ந்த யாருமே கருது எழுதுவதில்லை। அந்த கூடடத்தில் நான் இருந்திருந்தால் இங்கு வந்திருக்க மாடடேன்। அவர்கள் இந்த நேரத்தில் நாலு அரோகரா கூடடத்தை சேர்ந்தவரை தங்கள் பக்கம் சேர்த்திருப்பார்கள்।

இங்கு கருது எழுதும் இலங்கை தமிழர்கள் ஏன் அரோகரா கூடடத்தை சேர்ந்தவர்கள் அங்கு போவதை தடுக்காமல் இருக்கிறார்கள்। அந்த அல்லேலூயா கூடத்தில் இருப்பவர்களில் 90 % இந்துக்கள்தான்। இதில் எழுதுவதால் ஒரு பிரயோசனமும் இல்லை।  

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது। எனவே உங்கள் கருத்துக்கு நன்றி। நான் இந்த lock down முடியும் வரையும் இந்த களத்தில் நிச்சயமாக இருப்பேன்।

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Vankalayan said:

இங்கு கருது எழுதும் இலங்கை தமிழர்கள் ஏன் அரோகரா கூடடத்தை சேர்ந்தவர்கள் அங்கு போவதை தடுக்காமல் இருக்கிறார்கள்।

அவர்களை அங்கே விரட்டுபவர்களே  இவர்கள் தான்.

அரசியலமப்பை மீறி கோட்டாபயவால் விடுதலை செய்யப்பட்ட படுகொலையாளி! உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு

மிருசுவிலில் தமிழ் மக்களைப் படுகொலை செய்த சம்பவத்தில் குற்றவாளியாக காணப்பட்ட இராணுவச் சிப்பாயை ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐந்து வயது குழந்தை உட்பட எட்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியாக காணப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு பொதுமன்னிப்பு வழங்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மற்றும் அதன் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கோரியுள்ளனர்.

ஞானபாலன் ரவிவீரன், செல்லமுத்து தெய்வகுலசிங்கம், வில்வராஜா பிரதீபன், சின்னையா வில்வராஜா, வில்வராஜா பிரசாத், நடேசு ஜெயச்சந்திரன், கதிரன் ஞானச்சந்திரன் மற்றும் அவரது மகனான ஞானச்சந்திரன் சாந்தன் ஆகியோர் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த படுகொலை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, நீதியரசர்கள் புவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜெயவர்த்தன, முர்து பெர்னான்டோ ஆகிய ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வினால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பு மிகவும் பாரதூரமானது என அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் ரத்நாயக்க முதியன்சலாகே சுனில் ரத்நாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்கும் ஜனாதிபதியின் தீர்மானம் வெளிப்படையானது அல்லவெனவும் சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது அல்லவெனவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், இந்த வழக்கில் சாட்சியமளித்தவர்கள் மிரட்டப்படுவதுடன், பாரபட்சம் காட்டப்படுவதாகவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மிருசுவில் படுகாலை சம்பவத்தில் குற்றவாளியாக காணப்பட்ட ரத்நாயக்க முதியன்சலாகே சுனில் ரத்நாயக்கவை விடுதலை செய்யும் ஜனாதிபதியின் தீர்மானம் சட்டத்திற்கும் அரசியலமைப்புக்கும் முரணானது என சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்கள், ஜனாதிபதியின் தீர்மானம் அரசியலமைப்பை மீறியுள்ளது என தீர்ப்பளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.

குற்றவாளியை பொதுமன்னிப்பில் விடுதலை செய்வது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மற்றும் குற்றவாளியின் விடுதலை தொடர்பான ஏனைய அடிப்படை ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதியால் ரத்நாயக்க முதியன்சலாகே சுனில் ரத்நாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்கும் ஆணையை இரத்துச் செய்ய வேண்டும் என மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மற்றும் அதன் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து உயிர்களை பாதுகாக்கும் நோக்குடன் சிறைச்சாலையில் நெரிசலை குறைக்கும் வகையில் சிறிய குற்றங்களில் ஈடுபட்டவர்களை விடுவிக்க கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்திய பின்னணியில் ஐந்து வயது குழந்தை உட்பட எட்டு தமிழர்களை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கஜபா ரெஜிமெண்ட் இராணுவ சிப்பாய் ரத்நாயக்க முதியன்சலாகே ஜனாதிபதியினால் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் எம்.ஏ.சமன் குமார மற்றும் கல்கமுவ உஸ்கல சியம்பலாகமுவ கே.எல்.டி அசங்க புஷ்பகுமார ஆகியோர் உயிரிழந்ததுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/142257

  • கருத்துக்கள உறவுகள்

மிருசுவில் படுகொலையாளிக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பை இரத்துச்செய்யவேண்டும்- சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகொள்

மிருசுவிலில் எட்டு பொதுமக்களை கொலை செய்த படைவீரருக்கு பொதுமன்னிப்பை வழங்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைக்கு எதிராக மூன்று நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிட்ட வழக்கு குறித்த பத்து பக்க ஆய்வொன்றை வெளியிட்டுள்ளதுடன் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை பொதுமன்னிப்பை கைவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுமன்னிப்பு வழங்கி சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவை சிறையிலிருந்து விடுதலை செய்யும் தீர்மானத்தை இலங்கை ஜனாதிபதி இரத்து செய்யவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

சார்ஜன்ட் ரத்நாயக்க இழைத்த குற்றங்களிற்கு ஈடான தண்டiனையை அவர் அனுபவிப்பதை உறுதி செய்யவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவரிற்கு மரணதண்டனையை நிறைவேற்றவேண்டியதில்லை என தெரிவித்துள்ள மன்னிப்புச்சபை சார்ஜன்ட் ரத்நாயக்காவிற்கான தண்டனையை ஆயுள் தண்டனைiயாக ஜனாதிபதி மாற்றவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மிருசுவிலில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு நஸ்ட ஈடு உட்பட பயனுள்ள இழப்பீடுகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்ககப்படுவதை உறுதி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை அவர்கள் அரச அதிகாரிகளினால் துன்புறுத்தல்கள், மிரட்டல்கள்,போன்றவற்றிற்கு உட்படுத்தப்படுவதை தடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பத்து பக்க ஆய்வில் சர்வதேச மன்னிப்புச்சபை, இலங்கையின் தசாப்தகால உள்நாட்டு மோதலின் போது ஆயுத படையை சேர்ந்த ஒருவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு சில வழக்குகளில் ஒன்றில், நீதியை மாற்றியமைப்பதற்காக கொரோனா வைரஸ் சூழ்நிலை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை விரிவாக ஆராய்ந்துள்ளது.

http://thinakkural.lk/article/39948

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.