Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் மத மாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு- சிவசேனா கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் மத மாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு- சிவசேனா கோரிக்கை

 

 

 

    by : Litharsan

வடக்கில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிவசேனா அமைப்பினைச் சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம், அரியாலையில் உள்ள பிலதெல்பியா ஆலயத்திற்கு முன்னால் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், “வடக்கில் மதமாற்ற சபைகள் நிறைந்து காணப்படுகின்றன. அவை எந்தச் சட்டத்திற்கு உட்பட்டு செயற்படுகின்றன என்பது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பிலதெல்பியா சபையானது ஒரு வயல் காணியில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு யார் அனுமதி கொடுத்தது? நல்லூர் பிரதேச சபை அதற்கு அனுமதி கொடுத்தது என்றால் அதனை நிர்வகிப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே.

அக்கட்சியில் உள்ளவர்களே இந்த ஆலயம் அமைப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். எனவே இது தொடர்பாக விசேட ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://athavannews.com/வடக்கில்-மத-மாற்றத்தில்/

ஆகா, ஆகா, நிறைய பேருக்கு இருப்பு கொள்ளப்போவதில்லை.
உலகமே வேற பிரச்சினையில சிக்கி இருக்க ஐயா வேறை எங்கையோ கை வைக்கிறார்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

வடக்கில் மத மாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு- சிவசேனா கோரிக்கை

 

 

 

    by : Litharsan

வடக்கில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிவசேனா அமைப்பினைச் சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம், அரியாலையில் உள்ள பிலதெல்பியா ஆலயத்திற்கு முன்னால் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், “வடக்கில் மதமாற்ற சபைகள் நிறைந்து காணப்படுகின்றன. அவை எந்தச் சட்டத்திற்கு உட்பட்டு செயற்படுகின்றன என்பது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பிலதெல்பியா சபையானது ஒரு வயல் காணியில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு யார் அனுமதி கொடுத்தது? நல்லூர் பிரதேச சபை அதற்கு அனுமதி கொடுத்தது என்றால் அதனை நிர்வகிப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே.

அக்கட்சியில் உள்ளவர்களே இந்த ஆலயம் அமைப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். எனவே இது தொடர்பாக விசேட ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://athavannews.com/வடக்கில்-மத-மாற்றத்தில்/

சச்சியர் நிச்சயமாக இரு பகுதியினரும் கைகலப்பில் ஈடுபடும்வரை நிறுத்தமாட்டார் போல தோன்றுகிறது. ஆணைக்குழு அமைக்குமாறு கோருவது அவருடைய உரிமை. ஆனால் அதை எங்கு நின்று கூறுகிறார் என்பது பிரச்சனையான விடயம். ☹️

ஒரு மத நிறுவனத்திற்கு முன்பு நின்று அதற்கெதிராக கருத்து தெரிவிக்கும் அளவு துணிச்சல் உள்ளதென்றால், அங்கு நின்று கூறினாலும் அடிவிழாது என்கின்ற நம்பிக்கை உள்ளதென்றால் அந்த அளவில் மத சகிப்புத்தன்மை எமது சமூகத்தில் உள்ளதென்று பொருள். 👍

அந்த சகிப்புத்தன்மையை இல்லதொழித்துவிடுவார் போலுள்ளது. ☹️

  • கருத்துக்கள உறவுகள்

sachi.jpg

வடக்கில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிவசேனா அமைப்பினை சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் யாழ் அரியாலையில் உள்ள பில் தெனியா ஆலயத்திற்கு முன்னால் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கில் மதமாற்ற சபைகள் நிறைந்து காணப்படுகின்றன. அவை எந்த சட்டத்திற்கு உட்பட்டு செயற்படுகின்றன என்பது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பில்தெனியா ஆலயமானது ஒரு வயல் காணியில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு யார் அனுமதி கொடுத்தது. நல்லூர் பிரதேச சபை என்றால் அதனை நிர்வகிப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே. இந்த மத மாற்றத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் சுமந்திரன் போன்றவர்கள் உள்ள கட்சியினர்தான் இந்த ஆலயம் அமைப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். எனவே இது தொடர்பில் விசேட ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

add.gif

மேலே உள்ள ஒளிப்பதிவில் உள்ளவர் உண்மையிலேயே ஒரு சிங்களவர் தானா ? என்றும் 
அவர் உண்மையிலேயே இலங்கையில் தானா உள்ளார் ? என்றும் கேட்கத்தோன்றுகின்றது.

அவரின் கோபம் ஒரு நடிப்பு போன்றும் அவரின் ஆங்கிலம் புலம்பெயர் தேசம் ஒன்றில் உள்ளவர் போன்றும் தெரிகிறது. 

45 minutes ago, பெருமாள் said:

வடக்கில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிவசேனா அமைப்பினை சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை என்ற மக்களாட்சி ஒற்றையாட்சி  பௌத்த மேலாதிக்க நாட்டில் - மத சுதந்தரம் பெயரளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தங்கள் மதங்களை தக்கவைக்க, சிறுபான்மை மதங்கள் அவரவர் வலிமைக்கு ஏற்ப போராடலாம்

  • கருத்துக்கள உறவுகள்

****

2 hours ago, ampanai said:

மேலே உள்ள ஒளிப்பதிவில் உள்ளவர் உண்மையிலேயே ஒரு சிங்களவர் தானா ? என்றும் 
அவர் உண்மையிலேயே இலங்கையில் தானா உள்ளார் ? என்றும் கேட்கத்தோன்றுகின்றது.

அவரின் கோபம் ஒரு நடிப்பு போன்றும் அவரின் ஆங்கிலம் புலம்பெயர் தேசம் ஒன்றில் உள்ளவர் போன்றும் தெரிகிறது

இலங்கை என்ற மக்களாட்சி ஒற்றையாட்சி  பௌத்த மேலாதிக்க நாட்டில் - மத சுதந்தரம் பெயரளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தங்கள் மதங்களை தக்கவைக்க, சிறுபான்மை மதங்கள் அவரவர் வலிமைக்கு ஏற்ப போராடலாம்

உங்கள் அனுமானம் சரிபோலத்தான் படுகிறது 🙂

Edited by நியானி
திரிகள் ஒன்றாக்கப்பட்டுள்ளன

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

மேலே உள்ள ஒளிப்பதிவில் உள்ளவர் உண்மையிலேயே ஒரு சிங்களவர் தானா ? என்றும் 
அவர் உண்மையிலேயே இலங்கையில் தானா உள்ளார் ? என்றும் கேட்கத்தோன்றுகின்றது.

அவரின் கோபம் ஒரு நடிப்பு போன்றும் அவரின் ஆங்கிலம் புலம்பெயர் தேசம் ஒன்றில் உள்ளவர் போன்றும் தெரிகிறது. 

மன்னிக்கவும் அது தவறாக இணைக்கப்பட்டது சச்சியின்  ஒளிநாடா  இணைக்க மாறி வந்துவிட்டது நீங்கள்  பார்த்தது புலம் பெயர்  சிங்களவர்களால் திட்டமிடப்பட்டு செய்த வேலை .இப்போதைக்கு அது வேணாம் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாளுக்கு வேற வேலை இல்லை  

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் குறட்டை விட்டு நித்திரை கொண்டுவிட்டு இப்ப எழும்பி நின்று "காந்தி செத்துட்டாரா "கேட்க்கும்  கேஸ் இது .

இனி அல்லுலோயா கூட்டத்தை யாழ் சனம்  பார்த்துக்கொள்ளும் .இவர் எல்லைப்புறங்களில் உள்ள காணி பறித்து கொண்டிருக்கும் அல்லா கூட்டத்தையும்  கிண்ணியா வெந்நீர் ஊற்றுகளில் அடாத்தாக கட்டப்படும் புத்த கோவில் பக்கமும் போங்க என்று சொல்லி பாருங்க போகமாட்டார் இதெல்லாம் செத்த பாம்பை அடிக்கும் வீரம் .

வேட்டியை கழட்டி குடுத்து கொஞ்சநஞ்ச தமிழ் மானத்தையும்  கப்பல் ஏற்றியவர் 

  • கருத்துக்கள உறவுகள்

 

இவரை பிடிச்சு வெளுக்கணும் ...அவர்கள் செய்வது பிழை என்றால் ஒரு கேஸை போட்டு சட்ட ரீதியாய் அணுகலாம் 

 

2 hours ago, பெருமாள் said:

இவ்வளவு நாளும் குறட்டை விட்டு நித்திரை கொண்டுவிட்டு இப்ப எழும்பி நின்று "காந்தி செத்துட்டாரா "கேட்க்கும்  கேஸ் இது .

இனி அல்லுலோயா கூட்டத்தை யாழ் சனம்  பார்த்துக்கொள்ளும் .இவர் எல்லைப்புறங்களில் உள்ள காணி பறித்து கொண்டிருக்கும் அல்லா கூட்டத்தையும்  கிண்ணியா வெந்நீர் ஊற்றுகளில் அடாத்தாக கட்டப்படும் புத்த கோவில் பக்கமும் போங்க என்று சொல்லி பாருங்க போகமாட்டார் இதெல்லாம் செத்த பாம்பை அடிக்கும் வீரம் .

வேட்டியை கழட்டி குடுத்து கொஞ்சநஞ்ச தமிழ் மானத்தையும்  கப்பல் ஏற்றியவர் 

இந்த கள்ள காணி திருடர்களை பற்றி இவர் வாய் திறக்க மாட்டர்.... ஏன் .. இவர்கள் இருவரையும் இயக்குபவர்கள் ஒருவரே. ஆனா தமிழ் கிறிஸ்த்தவர்களுடன் மல்லுக்கட்ட நிப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Dash said:

தமிழ் கிறிஸ்த்தவர்களுடன் மல்லுக்கட்ட நிப்பார்.

அவரை காட்சிக்கு கொண்டுவந்ததே தமிழர்களிடையே பிளவு உண்டு பண்ணவே .

அல்லோயாய  எல்லாம் எப்ப கிறிஸ்தவர்கள் ஆனார்கள் ?

5 hours ago, பெருமாள் said:

அவரை காட்சிக்கு கொண்டுவந்ததே தமிழர்களிடையே பிளவு உண்டு பண்ணவே .

அல்லோயாய  எல்லாம் எப்ப கிறிஸ்தவர்கள் ஆனார்கள் ?

நீங்கள் பிழையாக எழுதி இருக்கிறீர்கள்। அல்லேலூயா எல்லாம் அப்போது கிறிஸ்தவர்கள் ஆனார்கள் என்பது பிழை। அல்லேலூயா எல்லோரும் கிறிஸ்தவர்கள்தான்। அரோகரா எல்லோரும் எப்போது கிறிஸ்தவர்கள் என்று கேட்டிருக்க வேண்டும்।

இருந்தாலும் சச்சி ஐயா மத ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு நல்ல மனிதன்। இந்தியாவில் இப்போது சங்கிகள் எல்லாம் முஸ்லீம் ஆதரவு கோசம் போட ஆரம்பித்துவிடடார்கள்। அடிக்க வேண்டிய இடத்தில அடித்தால் எல்லாம் சரியாகிவிடும்। 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kali said:

ஆகா, ஆகா, நிறைய பேருக்கு இருப்பு கொள்ளப்போவதில்லை.
உலகமே வேற பிரச்சினையில சிக்கி இருக்க ஐயா வேறை எங்கையோ கை வைக்கிறார்.  

வைத்திருக்கிற தடியை பிடுங்கி அடித்திருக்கனும், சும்மா ஊதிகிட்டு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Vankalayan said:

நீங்கள் பிழையாக எழுதி இருக்கிறீர்கள்। அல்லேலூயா எல்லாம் அப்போது கிறிஸ்தவர்கள் ஆனார்கள் என்பது பிழை। அல்லேலூயா எல்லோரும் கிறிஸ்தவர்கள்தான்। அரோகரா எல்லோரும் எப்போது கிறிஸ்தவர்கள் என்று கேட்டிருக்க வேண்டும்।

இருந்தாலும் சச்சி ஐயா மத ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு நல்ல மனிதன்। இந்தியாவில் இப்போது சங்கிகள் எல்லாம் முஸ்லீம் ஆதரவு கோசம் போட ஆரம்பித்துவிடடார்கள்। அடிக்க வேண்டிய இடத்தில அடித்தால் எல்லாம் சரியாகிவிடும்। 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2020 at 03:09, Vankalayan said:

நீங்கள் பிழையாக எழுதி இருக்கிறீர்கள்। அல்லேலூயா எல்லாம் அப்போது கிறிஸ்தவர்கள் ஆனார்கள் என்பது பிழை। அல்லேலூயா எல்லோரும் கிறிஸ்தவர்கள்தான்

உண்மை தான்.அல்லேலூயா யேசு உம்மை அழைக்கிறார் பிரிவுகளும் கிறிஸ்தவர்களே. எனக்கு மத பிரசாரம் செய்தவர் தாங்கள் தான் உண்மையான கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொண்டார்.

On 29/4/2020 at 03:09, Vankalayan said:

அல்லேலூயா எல்லாம் அப்போது கிறிஸ்தவர்கள் ஆனார்கள் என்பது பிழை।

சிலர் எனது மதம் சைவம் நான் இந்து இல்லை என்று சொல்வதில்லையா அது மாதிரி நினைத்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2020 at 06:06, உடையார் said:

 

 

அரபு நாடு ஒன்றில் பல வருடங்கள் வேலைபார்க்கும் எனது உறவினரோடு கதைத்த போது இதைபற்றியும் கேட்டேன்.அவர் சொன்னவற்றில் இருந்து
அங்கே வேலை பார்க்கும் இந்திய தமிழர்களில் தனக்கு தெரிந்த வரை திமுக, காங்கிரஸ் ஆதரவானவர்கள் தான் அதிகம்.
அரபிகளை பொறுத்தவரை முஸ்லிம்கள் மற்றது Non-Muslim தான்.  வெள்ளைகார Non-Muslim க்கு மதிப்பு.
அரபியர்கள் ஆசிய முஸ்லிம்களை சிறிதும் மதிப்பது இல்லை அவர்கள் நல்லாக பந்தம் பிடித்தாலும். இளவரசியின் பேச்சு இந்திய இலங்கை அரசியல்வாதிகளின் பேச்சு போன்றது.

28 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உண்மை தான்.அல்லேலூயா யேசு உம்மை அழைக்கிறார் பிரிவுகளும் கிறிஸ்தவர்களே. எனக்கு மத பிரசாரம் செய்தவர் தாங்கள் தான் உண்மையான கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொண்டார்.

சிலர் எனது மதம் சைவம் நான் இந்து இல்லை என்று சொல்வதில்லையா அது மாதிரி நினைத்திருப்பார்கள்.

சைவத்துக்கும் இந்துவுக்கு என்ன வித்தியாசம்? எனக்கு தெரியாதபடியால் கேட்க்கிறேன்। 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Vankalayan said:

சைவத்துக்கும் இந்துவுக்கு என்ன வித்தியாசம்? எனக்கு தெரியாதபடியால் கேட்க்கிறேன்।

தமிழ் இணையங்களில் தான் எனது மதம் சைவம் நான் இந்து இல்லை என்று சிலர் சொல்வதை பார்த்திருக்கிறேன். வித்தியாசம் இருப்பது எனக்கு தெரியாது.

8 hours ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ் இணையங்களில் தான் எனது மதம் சைவம் நான் இந்து இல்லை என்று சிலர் சொல்வதை பார்த்திருக்கிறேன். வித்தியாசம் இருப்பது எனக்கு தெரியாது.

நன்றி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.