Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சித்தியடைந்தும் தற்கொலை செய்த மாணவி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சித்தியடைந்தும் தற்கொலை செய்த மாணவி!

முல்லைத்தீவு – சிலாவத்தையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் அனைத்து பாடத்திலும் சித்தி பெற்ற மாணவி ஒருவர், எதிர்பார்த்த 9-ஏ சித்தி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இன்று (28) காலை 7.30 மணியளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கற்று வந்த சந்திரன் கம்ஷிகா (17-வயது) எனும் பாடசாலை மாணவியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று (27) வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் அனைத்து பாடத்திலும் சித்தி பெற்று தனது பாடசாலை ரீதியில் 3ம் இடத்தை பிடித்திருந்த நிலையிலேயே தான் எதிர்பார்த்தது போல் 9-ஏ சித்தி கிடைக்கவில்லை என தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வாழ்த்து சொல்வதற்கு அவரது பாடசாலை ஆசிரியர்கள் அழைப்பெடுத்த போதிலும் அவர்களுடன் பேச மறுத்திருந்த நிலையில் இன்று காலை சுவாமியறையில் குறித்த மாணவி தற்கொலை செய்துள்ளாள்.

மாணவர்களே நீங்கள் எதிர்பார்த்த பெறுபேற்றினை பெற முடியாமல் போவதும், சித்தியடையாமல் போவதும் அவமானம் கிடையாது. பரீட்சை பெறுபேறுகளை தாண்டி நீங்கள் வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது அதிகமுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

 

https://newuthayan.com/சித்தியடைந்தும்-தற்கொல/

 

 

 

என்னே கோழைத்தனம் 

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு கஷ்ட காலத்துக்குள்ளும் உன்னை வளர்க்க அந்தப் பெற்றோர் என்ன பாடு பட்டிருப்பார்கள், ஒருநிமிடம் நினைத்திருக்கலாம். அந்த பொறுப்புணர்ச்சி கூட இல்லையென்றால் நீயெல்லாம்..........! 

2 hours ago, suvy said:

இவ்வளவு கஷ்ட காலத்துக்குள்ளும் உன்னை வளர்க்க அந்தப் பெற்றோர் என்ன பாடு பட்டிருப்பார்கள், ஒருநிமிடம் நினைத்திருக்கலாம். அந்த பொறுப்புணர்ச்சி கூட இல்லையென்றால் நீயெல்லாம்..........! 

அதே!

கொஞ்சமும் பொறுப்பில்லாத பிள்ளையா இந்தப்பிள்ளை வளர்ந்திருக்கு.

2 hours ago, உடையார் said:

மாணவர்களே நீங்கள் எதிர்பார்த்த பெறுபேற்றினை பெற முடியாமல் போவதும், சித்தியடையாமல் போவதும் அவமானம் கிடையாது. பரீட்சை பெறுபேறுகளை தாண்டி நீங்கள் வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது அதிகமுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இதுவும் ஒரு சமூக குறைபாடு. அதாவது, சமூகமாக அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளை ஒரு மாணவர் மீது திணிப்பது..... அதன் எதிர்விளைவுகள் சில வேளைகளில் இவ்வாறு பாரதூரமாக இருந்து விடும். 

அடிப்படையில் எமது சமூகம் அதியுயர் கல்வி, வெளிநாடு செல்லுதல் போன்ற ஒரு சில தெரிவுகளை மட்டுமே வாழ்வில் இளையவர்களுக்கு தந்து நிற்கின்றது. புதிய சந்தர்ப்பங்களை உருவாக்கி தர வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் மரணத்தில் வருந்த ஏதுமில்லை. எங்கள் கல்வியமைப்பிலுள்ள குறைபாட்டின் வெளிப்பாடே இந்தத் தற்கொலை. ☹️

நல்ல கல்வி முறை நம்பிக்கையையும் பொறுப்பையும் மாணவருக்கு கொடுக்கும். 🙂

அந்த பிள்ளை மீது கோபப்பட எதுவுமே இல்லை. நாட்டின் கல்வி அமைப்பும் பெற்றோரின் அழுத்தமுமே இதற்கு காரணம்.

கல்வி என்பது அறிவுக்கானது ஒட்டுமொத்த மனித இனத்தின் முன்னேற்றத்திற்கானது என்பதை கணக்கெடுக்காது கல்வி என்பது தனிமனித அந்தஸ்துக்கானது என்றே எமது சமுதாயம் பல காலமாக புரிந்து வைத்துள்ளது. அந்த. புரிதல் தவறே எமது சமுதாயத்தின் பல இடர்பாடுகளைக்கு காரணமாக உள்ளது. அதில் ஒரு உதாரணமே இந்த கம்ஷிகா என்ற பிள்ளையின் இழப்பு.  

எமது சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பிள்ளையாகவே கம்ஷிகாவை கருதமுடியும். 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

அந்த பிள்ளை மீது கோபப்பட எதுவுமே இல்லை. நாட்டின் கல்வி அமைப்பும் பெற்றோரின் அழுத்தமுமே இதற்கு காரணம்.

கல்வி என்பது அறிவுக்கானது ஒட்டுமொத்த மனித இனத்தின் முன்னேற்றத்திற்கானது என்பதை கணக்கெடுக்காது கல்வி என்பது தனிமனித அந்தஸ்துக்கானது என்றே எமது சமுதாயம் பல காலமாக புரிந்து வைத்துள்ளது. அந்த. புரிதல் தவறே எமது சமுதாயத்தின் பல இடர்பாடுகளைக்கு காரணமாக உள்ளது. அதில் ஒரு உதாரணமே இந்த கம்ஷிகா என்ற பிள்ளையின் இழப்பு.  

எமது சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பிள்ளையாகவே கம்ஷிகாவை கருதமுடியும். 

ஒவ்வொரு வருடமும் இப்படி இழப்பு நடந்துக்கொண்டுதான் இருக்கிறது எல்லாவற்றிலும் ஒப்பீடு மார்க்ஸ் , அந்தப்பிள்ளைய பார் , படிக்காட்டால் நீ என்ன செய்ய போற என்ற கேள்வி 

இப்படியான கேள்விகள் தான் பிள்ளைகளை ஒதுக்குறது நாளைய உலகை வெல்ல அறிவுரைகள் யாரும் வழங்குவதில்லை வழங்கினாலும் அந்த நிலையில் மனம் ஏற்றுக்கொள்ளாது 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

அந்த பிள்ளை மீது கோபப்பட எதுவுமே இல்லை. நாட்டின் கல்வி அமைப்பும் பெற்றோரின் அழுத்தமுமே இதற்கு காரணம்.

கல்வி என்பது அறிவுக்கானது ஒட்டுமொத்த மனித இனத்தின் முன்னேற்றத்திற்கானது என்பதை கணக்கெடுக்காது கல்வி என்பது தனிமனித அந்தஸ்துக்கானது என்றே எமது சமுதாயம் பல காலமாக புரிந்து வைத்துள்ளது. அந்த. புரிதல் தவறே எமது சமுதாயத்தின் பல இடர்பாடுகளைக்கு காரணமாக உள்ளது. அதில் ஒரு உதாரணமே இந்த கம்ஷிகா என்ற பிள்ளையின் இழப்பு.  

எமது சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பிள்ளையாகவே கம்ஷிகாவை கருதமுடியும். 

 

 

 

ஒரு தமிழ் உயிரின் பெறுமதி தெரியாதவர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

அந்த பிள்ளை மீது கோபப்பட எதுவுமே இல்லை. நாட்டின் கல்வி அமைப்பும் பெற்றோரின் அழுத்தமுமே இதற்கு காரணம்.

கல்வி என்பது அறிவுக்கானது ஒட்டுமொத்த மனித இனத்தின் முன்னேற்றத்திற்கானது என்பதை கணக்கெடுக்காது கல்வி என்பது தனிமனித அந்தஸ்துக்கானது என்றே எமது சமுதாயம் பல காலமாக புரிந்து வைத்துள்ளது. அந்த. புரிதல் தவறே எமது சமுதாயத்தின் பல இடர்பாடுகளைக்கு காரணமாக உள்ளது. அதில் ஒரு உதாரணமே இந்த கம்ஷிகா என்ற பிள்ளையின் இழப்பு.  

எமது சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பிள்ளையாகவே கம்ஷிகாவை கருதமுடியும். 

💯

உண்மையான காரணத்தை மிகத் தெளிவாக எழுதியுள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பு அறிவுக்கும் அதன் பயன்பாட்டுக்கும் என்ற புரிதல் இல்லாத தமிழ் சமூகம்.. படிப்பை வெட்டி கெளரவத்துக்கும் சமூக அந்தஸ்துக்கும் என்று மாற்றி அமைத்துக் கொண்டதன் விளைவுகளில் இதுவும் ஒன்று.

இது தற்கொலை அல்ல.. தமிழ் சமூகம் படிப்பை மையப்படுத்தி தூண்டி வரும் படுகொலைகளாகும்.

கடந்த ஆண்டும் யாழ் இந்துக்கல்லூரி மாணவன் ஒருவன் மீள் பரீட்சார்த்தியாக ஒரு பாடம் பரீட்சை எழுதிய பின்.. இவ்வாறு படுகொலை செய்யப்பட்டார். காரணம்.. சமூகத்தின் போலி அந்தஸ்தின் முன் தோற்றுவிடுவேனோ என்ற பயம். 

இப்படிப் பலரை எமது சமூகம் பலியெடுத்து விட்டது. ஆனாலும்.. திருந்துவதாக இல்லை. திருத்தியே ஆக வேண்டும்.. எப்படியாவது. இன்றேல் இந்தப் பலியிடல்கள் தொடரும்.

கண்ணீரஞ்சலியும் ஆழ்ந்த அனுதாபமும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

போஸ்ர்மோடம் மருத்துவ அறிக்கை இல்லாமல் ஒரு இறப்பை வேகமாக கொலை, தற்கொலை என்று நிறுவுவதற்கு எங்கள் ஊடகங்களை விட்டால் வேறு ஒருத்தரும் அடிக்கமுடியாது.

இறந்த சிறுமிக்கு காணப்பட்ட உளவியல் பிரச்சனைகள், வாழ்ந்த சூழ்நிலை, பெற்றோர், நண்பர்கள், சுற்றம், பாடசாலை, தனியார் கல்வி நிறுவனம் என பல்வேறு காரணிகள் ஆராயப்படவேண்டும்.

ஒருவர் தனது உயிரை தானே எடுத்துக்கொள்வது எதேச்சையாக நடக்க வாய்ப்பு உள்ளதா இல்லையா, இந்த சிறுமியின் இறப்பின் பின்னால் உள்ள விடயங்கள் எவை இவை எல்லாம் மருத்துவர் அறிக்கை, உளவியல் மருத்துவர், சமூகவியல் விற்பன்னர்களால் ஆராயப்பட்டு எமக்கு விளக்கப்படவேண்டிய விடயங்கள்.

குத்துமதிப்பாய் செய்தியை எழுதி சிறுமியை குறை பிடிப்பான் ஏன்?

ஆழ்ந்த அனுதாபங்கள் சிறுமி, குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலை சமூகம் அனைவருக்கும்!

Edited by நியாயத்தை கதைப்போம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.