Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊரில் ஒரு வீடு வேணும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அட கொடுமையே

கொட்டில் வீடு பாதுகாப்பாய் இருக்கும்....பயப்பிடாதேங்கோ :cool:

  • Replies 277
  • Views 41.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

No photo description available.

இவற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள். 

எவருக்காவது உடல் காயம் அல்லது பாதிப்பு நடந்ததா?

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உருத்திரபுரம் கோணாவிலில் என் கணவரின் தந்தை வாங்கிய 5 ஏக்கர் காணி உண்டு. அங்கு குழாய்க்கு கிணறு அடிக்க எவ்வளவு முடியும் என்று யாராவது கூறமுடியுமா ?? ???

6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உருத்திரபுரம் கோணாவிலில் என் கணவரின் தந்தை வாங்கிய 5 ஏக்கர் காணி உண்டு. அங்கு குழாய்க்கு கிணறு அடிக்க எவ்வளவு முடியும் என்று யாராவது கூறமுடியுமா ?? ???

குழாய்க்கிணறு குடாநாட்டுக்கு உகந்ததல்ல. மழைநீரை எவ்வாறு சேமித்து வடிகட்டிப் பாவிக்கலாம் என்று ஆராய்வது நல்லது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இணையவன் said:

குழாய்க்கிணறு குடாநாட்டுக்கு உகந்ததல்ல. மழைநீரை எவ்வாறு சேமித்து வடிகட்டிப் பாவிக்கலாம் என்று ஆராய்வது நல்லது.

பண்ணைத் திட்டத்துக்கு எப்படி மழைநீர் போதுமாக இருக்கும் ????

 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உருத்திரபுரம் கோணாவிலில் என் கணவரின் தந்தை வாங்கிய 5 ஏக்கர் காணி உண்டு. அங்கு குழாய்க்கு கிணறு அடிக்க எவ்வளவு முடியும் என்று யாராவது கூறமுடியுமா ?? ???

70 இலிருந்து 100 ஆயிரம் முடியும்.

1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பண்ணைத் திட்டத்துக்கு எப்படி மழைநீர் போதுமாக இருக்கும் ????

 

குறிப்பாகப் பண்ணைத் திட்டத்துக்குக் குழாய் கிணறு உகந்ததல்ல. குழாய்க்கிணறு மூலம் மேலே கொண்டு வரப்படும் நீரை நிரப்புவதற்காக கடல்நீர் கரையோரப் பகுதிகளூடாக நிலத்தடியில் உட்புகும். ஏற்கனவே யாழில் சடுதியான குழாய்க்கிணறு பாவனையில் உள்ளது. இது சில காலங்களில் நிவர்த்தி செய்ய முடியாத விளைவுகளை உண்டாக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, சுவைப்பிரியன் said:

70 இலிருந்து 100 ஆயிரம் முடியும்.

அவ்வளவு முடியுமா ??? ஆழமாகக் கிணறு வெட்டினால் நல்லதா அல்லது ????

1 minute ago, இணையவன் said:

குறிப்பாகப் பண்ணைத் திட்டத்துக்குக் குழாய் கிணறு உகந்ததல்ல. குழாய்க்கிணறு மூலம் மேலே கொண்டு வரப்படும் நீரை நிரப்புவதற்காக கடல்நீர் கரையோரப் பகுதிகளூடாக நிலத்தடியில் உட்புகும். ஏற்கனவே யாழில் சடுதியான குழாய்க்கிணறு பாவனையில் உள்ளது. இது சில காலங்களில் நிவர்த்தி செய்ய முடியாத விளைவுகளை உண்டாக்கும்.

கிணற்று நீரை நம்பிப் பண்ணைத் திட்டம் எப்படித் தொடங்கமுடியும்???

கிணற்று நீர் வற்றினால் பிறகு என்ன செய்வது ????

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, இணையவன் said:

குறிப்பாகப் பண்ணைத் திட்டத்துக்குக் குழாய் கிணறு உகந்ததல்ல. குழாய்க்கிணறு மூலம் மேலே கொண்டு வரப்படும் நீரை நிரப்புவதற்காக கடல்நீர் கரையோரப் பகுதிகளூடாக நிலத்தடியில் உட்புகும். ஏற்கனவே யாழில் சடுதியான குழாய்க்கிணறு பாவனையில் உள்ளது. இது சில காலங்களில் நிவர்த்தி செய்ய முடியாத விளைவுகளை உண்டாக்கும்.

அக்கா சொல்வது கிளிநொச்சி என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

குழாய்க்கிணறு குடாநாட்டுக்கு உகந்ததல்ல. மழைநீரை எவ்வாறு சேமித்து வடிகட்டிப் பாவிக்கலாம் என்று ஆராய்வது நல்லது.

இது வன்னி, இனையவர்..

ஜந்து ஏக்கர் இருப்பதால், வெள்ளம் வடிந்தோடும் பாதையை பார்த்து, குளம் அமைத்து, மழைநீரை சேமித்து வடிகட்டிப் பாவிக்கலாம்.

பண்ணை வீதியில், அராலி சந்திக்கு பிறகு, மயிலப்புலம் பகுதியில், ராணுவ முகாம் பக்கத்தில், அவர்களே மழை வெள்ளம் தேங்குமிடத்தை கோடை காலத்தில் ஆழமாக்கி, குளமாக்கி, பக்கத்தில் மரங்களடர்ந்த பகுதியாக்கி... பறவைகள் வந்து போகுமிடமாக்கி உள்ளார்கள்.

இனி மீன் பிடிக்க மீனவர்களும், மாலைவேலைகளில், ஓய்வாக இருக்க. கிராமத்தவரும் வருவார்கள்.

Edited by Nathamuni

இது நீண்ட திரியாக பல திசைகளில் சென்றதால் எல்லாவற்றையும் வாசிக்க முடியவில்லை.😀
ஒரு விடயத்தை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். வீடு என்பது அண்மைக் காலமாக வெப்பத்தைத் தாங்கிப் பாதுகாப்பு வழங்குவதில் முக்கியத்துவம் பெறுகிறது. அழகுக்காகக் கட்டப்படும் நவீன சீமெந்து வீடுகள் எமது நாட்டிற்குப் பொருத்தமற்றவை.

சென்ற வருடம் எனது உறவினர் ஒருவருக்குச் சிறிய வீடொன்றிற்கான வரைபடத்தைக் கீறி அனுப்பியிருந்தேன். அதில் ஜூலை மாதத்திலும் டிசம்பர் மாதத்திலும் சூரியனின் பாதையையும் இந்த இரு காலங்களிலும் வீட்டில் எந்தப் பகுதி சூடாகிறது என்பதையும் கீழுள்ள படத்தில் காணலாம். 

அதற்கேற்றவாறு வாசல் ஜன்னல்கள் மற்றும் அறைகளை எங்கு வைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. ஜூலை மாதத்தில் அதிகம் சூரியனால் தாக்கப்படும் பகுதியில் வெப்பத் தடுப்புக்கள் வைக்கப்படும். வெளிப் புறமாக அப் பகுதிகளில் மரங்கள் வைக்க ஏதுவாகவும் வரையப்பட்டது.

house.jpg

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பண்ணைத் திட்டத்துக்கு எப்படி மழைநீர் போதுமாக இருக்கும் ????

 

சொட்டு நீர் பாசனம் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

அக்கா சொல்வது கிளிநொச்சி என்று நினைக்கிறேன்.

ஓம்

5 hours ago, இணையவன் said:

இது நீண்ட திரியாக பல திசைகளில் சென்றதால் எல்லாவற்றையும் வாசிக்க முடியவில்லை.😀
ஒரு விடயத்தை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். வீடு என்பது அண்மைக் காலமாக வெப்பத்தைத் தாங்கிப் பாதுகாப்பு வழங்குவதில் முக்கியத்துவம் பெறுகிறது. அழகுக்காகக் கட்டப்படும் நவீன சீமெந்து வீடுகள் எமது நாட்டிற்குப் பொருத்தமற்றவை.

சென்ற வருடம் எனது உறவினர் ஒருவருக்குச் சிறிய வீடொன்றிற்கான வரைபடத்தைக் கீறி அனுப்பியிருந்தேன். அதில் ஜூலை மாதத்திலும் டிசம்பர் மாதத்திலும் சூரியனின் பாதையையும் இந்த இரு காலங்களிலும் வீட்டில் எந்தப் பகுதி சூடாகிறது என்பதையும் கீழுள்ள படத்தில் காணலாம். 

அதற்கேற்றவாறு வாசல் ஜன்னல்கள் மற்றும் அறைகளை எங்கு வைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. ஜூலை மாதத்தில் அதிகம் சூரியனால் தாக்கப்படும் பகுதியில் வெப்பத் தடுப்புக்கள் வைக்கப்படும். வெளிப் புறமாக அப் பகுதிகளில் மரங்கள் வைக்க ஏதுவாகவும் வரையப்பட்டது.

house.jpg

ஒன்றைச் செய்வதற்கு முன் நன்றாகத் திட்டமிடுவது நல்லதுதான்.

3 hours ago, பெருமாள் said:

சொட்டு நீர் பாசனம் 

 

பெரும் தோப்புக்களுக்கு இது சரியாக இருக்கும். சிறிய பரப்புக்கு பொருந்துமா என்று பார்க்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, இணையவன் said:

குழாய்க்கிணறு குடாநாட்டுக்கு உகந்ததல்ல. மழைநீரை எவ்வாறு சேமித்து வடிகட்டிப் பாவிக்கலாம் என்று ஆராய்வது நல்லது.

அப்படி என்டால் குளம் தான் வெட்ட வேணும்.அதுவும் நீர் வற்றாமல் ஆவியாகாமல் பாக்க வேணும்.அதை விட குழாய் கிணற்றில் மழை நீரை சேமிக்கலாம்.

15 hours ago, பெருமாள் said:

சொட்டு நீர் பாசனம் 

 

அதுக்கும் நீராதாரம் வேணுமே.

18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவ்வளவு முடியுமா ??? ஆழமாகக் கிணறு வெட்டினால் நல்லதா அல்லது ????

கிணற்று நீரை நம்பிப் பண்ணைத் திட்டம் எப்படித் தொடங்கமுடியும்???

கிணற்று நீர் வற்றினால் பிறகு என்ன செய்வது ????

ஆம் வன்னியில் அப்படித்தான் முடியும்.மற்றது உங்கள் பண்ணைத்திட்டம் என்ன.5 ஏக்கருக்கு உரு கிணறு கானாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

அதுக்கும் நீராதாரம் வேணுமே.

யாழில் வீணாக கடலில் விடப்படும் மழைநீர் அளவு பாரியது மழை  நீர் சேகரிப்பே முதன்மையாய் இருத்தல் நல்லது எதிர்காலத்தில் பாரிய அனுகூலங்களை பெற்று  தரும் . 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

அப்படி என்டால் குளம் தான் வெட்ட வேணும்.அதுவும் நீர் வற்றாமல் ஆவியாகாமல் பாக்க வேணும்.அதை விட குழாய் கிணற்றில் மழை நீரை சேமிக்கலாம்.

அதுக்கும் நீராதாரம் வேணுமே.

ஆம் வன்னியில் அப்படித்தான் முடியும்.மற்றது உங்கள் பண்ணைத்திட்டம் என்ன.5 ஏக்கருக்கு உரு கிணறு கானாது.

கொஞ்சம் தென்னை, வாழை மற்றது சில பயன் தரும் மரங்கள் மா, பலா, வேம்பு, முருங்கை, கயூ. மற்றும் ஆடு,மாடு, கோழிகள்  கொஞ்சம் இப்படி ....

1 hour ago, பெருமாள் said:

யாழில் வீணாக கடலில் விடப்படும் மழைநீர் அளவு பாரியது மழை  நீர் சேகரிப்பே முதன்மையாய் இருத்தல் நல்லது எதிர்காலத்தில் பாரிய அனுகூலங்களை பெற்று  தரும் . 

 

மழை நீர் சேகரிப்பு நல்லதுதான். முயற்சி செய்து பார்க்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

மழை நீர் சேகரிப்பு நல்லதுதான். முயற்சி செய்து பார்க்கவேண்டும்

How much rainfall does Israel get?
Rainfall is unevenly distributed, significantly lower in the south of the country. In the extreme south, rainfall averages near 30 millimeters (1.18 in) annually; in the north, average annual rainfall exceeds 900 millimeters (35.4 in).
 
1200mm
 
In Jaffna, Sri Lanka, during the entire year, the rain falls for 57 days and collects up to 1200mm (47.2") of precipitation.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எப்படி மழை நீரை சேகரித்துப் பயன்படுத்துவது என்பதைத்தான் பார்க்க வேண்டும். வன்னிப பகுதியில் அப்படி செய்பவர்களின் விபரங்கள் யாருக்காவது தெரியுமா???

  • கருத்துக்கள உறவுகள்
On 25/6/2020 at 14:20, இணையவன் said:

குழாய்க்கிணறு குடாநாட்டுக்கு உகந்ததல்ல. மழைநீரை எவ்வாறு சேமித்து வடிகட்டிப் பாவிக்கலாம் என்று ஆராய்வது நல்லது.

அவ சொல்றது உருத்திரபுரம் கிளிநொச்சி ஆக இருக்கணும் யாழில் உருத்திரபுரம் கோணாவில் என்ற பெயர் உள்ளதாக அறியவில்லை 

On 25/6/2020 at 14:11, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உருத்திரபுரம் கோணாவிலில்

இரண்டு வேறு வேறு இடம்கள் கிளிநொச்சியில் கோணாவிலுக்கு பக்கத்தில் முறிப்பு குளம் (அதன் முழு பெயர் நினைவில் இல்லை ) சங்கரியரின் உடும்பு காணி அங்குதான் இருப்பதாய் கேள்வி 

 

அந்த பக்கம் கல்லெறிந்து காணி பிடிப்பது என்று பகிடிக்கு சொல்வார்கள் மாமா கல்லு துலைக்கு  எறியக்கூடியவரோ ?

😀

  • கருத்துக்கள உறவுகள்
On 25/6/2020 at 15:11, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உருத்திரபுரம் கோணாவிலில் என் கணவரின் தந்தை வாங்கிய 5 ஏக்கர் காணி உண்டு. அங்கு குழாய்க்கு கிணறு அடிக்க எவ்வளவு முடியும் என்று யாராவது கூறமுடியுமா ?? ???

உருத்திரபுரமா அல்லது கோனாவிலா.இரன்டும் வேறு வேறு ஊர்கள்.

அக்கா மன்னாரில் வெற்றிச்செல்வி (எழுத்தாளர் மற்றும் மு .போராளி) மாதிரி பண்ணை மற்றும் தூறல் நீர்ப்பாசனம் போன்றவற்றில் சிறிய அளவில் ஈடுபடுகிறார் முகநூலிலும் உள்ளார், அண்மையில்  விவசாய திணைக்களம் அறிவித்த மானியம் சம்பந்தமான மேலதிக தகவல்களிற்காக அவரை தொடர்பு கொண்டேன் . உங்களிற்கு உண்மையான ஆர்வம் இருப்பின் அவரை தொடர்பு கொண்டால் அவர் உங்களிற்கு இவை பற்றிய தகவல் மற்றும் தொடர்புகளை தரக்கூடும் .மற்றும் விவாசாய திணைக்களம் அல்லது கமநல சேவை நிலையங்களை நீங்களாக அணுகி சென்றால் அவர்கள் வழி காட்டுவார்கள் 

Edited by அபராஜிதன்

மாதிரி பண்ணை போன்ற விவசாய நடவடிக்கைகள் மனித உடல் உழைப்பை பெருமளவில் கோருவன, எல்லாரும் செய்கிறார்களே என ஆசைப்பட்டு இவற்றில் இறங்க முயற்சி செய்யாதீர்கள் .உண்மையான ஆர்வம் இருப்பின் இறங்குங்கள் இங்கு மனிதர்களை கூலி வேலைகளிற்கு பிடிப்பது பெரும் கஸ்டமாக உள்ளது . நீங்கள் இப்பகுதிகளிற்கு  புதியவராக இருப்பின் தொடர்புகள் முக்கியமானவை . சந்தை வசதியும் பெரியளவில் இல்லை
ஆர்கானிக் பண்ணை ஒன்று நெடுங்கேணி அண்டிய பகுதியில் பாவற்காய் உற்பத்தி செய்து வெளிநாடுகளிற்கு ஏற்றுமதி செய்ய படுகிறது அது விவசாய அமைச்சின் கண்காணிப்பின் கீழ் செயற்படுகிறது என கிளிநொச்சியில் உள்ள விவசாய திணைக்களத்தில் வேலை செய்பவர் சொன்னார்.
வயல் நிலங்களை தூர்ப்பது மேடாக்குவது (ஆழ்துளை கிணறு அடிப்பது) போன்றவற்றிற்கு உரிய அனுமதிகள் எடுக்க வேண்டும்  

உருத்திரபுரம் வேறு  கோணாவில்  கிளிநொச்சியிலிருந்து அக்கராயன் போற பகுதி இரண்டும் வேறு வேறு என நினைக்கிறன் 
உங்களிற்கு ஏதும் தொடங்கும் திட்டங்கள் இருப்பின்  வந்து இடங்களை பார்த்து இங்கேயே கொஞ்ச நாள் தங்கி இருந்து அதன் பிறகு நன்றாக திட்டமிடுங்கள் 
உங்கு (வெளிநாட்டில் ) இருக்கும் போது சில விஷயங்கள் இலகு போல் தோன்றலாம் ஆனால் செயற்படுத்த நினைக்கும் போது தான் தெரியும் அது அப்பிடி ஒன்றும் அவ்வளவு இலகுவானது  இல்லை என  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

உருத்திரபுரமா அல்லது கோனாவிலா.இரன்டும் வேறு வேறு ஊர்கள்.

உருத்திரபும் சிவன் கோவிலுக்குச் சொந்தமான 5 ஏக்கர் காணிக்கு அடுத்த காணியாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

அவ சொல்றது உருத்திரபுரம் கிளிநொச்சி ஆக இருக்கணும் யாழில் உருத்திரபுரம் கோணாவில் என்ற பெயர் உள்ளதாக அறியவில்லை 

இரண்டு வேறு வேறு இடம்கள் கிளிநொச்சியில் கோணாவிலுக்கு பக்கத்தில் முறிப்பு குளம் (அதன் முழு பெயர் நினைவில் இல்லை ) சங்கரியரின் உடும்பு காணி அங்குதான் இருப்பதாய் கேள்வி 

 

அந்த பக்கம் கல்லெறிந்து காணி பிடிப்பது என்று பகிடிக்கு சொல்வார்கள் மாமா கல்லு துலைக்கு  எறியக்கூடியவரோ ?

😀

மாமா காசு குடுத்தது வாங்கிய காணிதான் அது.😃

2 hours ago, அபராஜிதன் said:

அக்கா மன்னாரில் வெற்றிச்செல்வி (எழுத்தாளர் மற்றும் மு .போராளி) மாதிரி பண்ணை மற்றும் தூறல் நீர்ப்பாசனம் போன்றவற்றில் சிறிய அளவில் ஈடுபடுகிறார் முகநூலிலும் உள்ளார், அண்மையில்  விவசாய திணைக்களம் அறிவித்த மானியம் சம்பந்தமான மேலதிக தகவல்களிற்காக அவரை தொடர்பு கொண்டேன் . உங்களிற்கு உண்மையான ஆர்வம் இருப்பின் அவரை தொடர்பு கொண்டால் அவர் உங்களிற்கு இவை பற்றிய தகவல் மற்றும் தொடர்புகளை தரக்கூடும் .மற்றும் விவாசாய திணைக்களம் அல்லது கமநல சேவை நிலையங்களை நீங்களாக அணுகி சென்றால் அவர்கள் வழி காட்டுவார்கள் 

 ஆனால் இப்ப அதில ஒரு புதுப் பிரச்சனை. வேறு ஆட்கள் அந்தக் காணியைப் பிடிச்சு வச்சிரிக்கினம் 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆனால் இப்ப அதில ஒரு புதுப் பிரச்சனை. வேறு ஆட்கள் அந்தக் காணியைப் பிடிச்சு வச்சிரிக்கினம் 😀

உண்மையை சொல்வதுதானே  முஸ்லீம் கூட்டம் அபகரித்து விட்டது என்று .

வெற்றி செல்வி மன்னார்  முஸ்லிம்கள் நல்லவர்கள் என்று நினைக்கிறா காலம் செய்த கோலம் . .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.