Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதிர்காமம் நோக்கிய யாத்திரைக்கு அனுமதி கிடைத்துள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காமம் நோக்கிய யாத்திரைக்கு அனுமதி கிடைத்துள்ளது

May 23, 2020

Kathirkamam-800x340.jpg

யாழிலில் இருந்து கதிர்காமத்தை நோக்கிய யாத்திரையை ஆரம்பிக்கவுள்ளதாக யாத்திரைக்கு தலமை தாங்கி செல்லவுள்ள சி. ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார்.  யாழ்.ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் , இம்முறை கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை தடைப்படும் என எண்ணியிருந்தோம். ஆனால் முருகனின் அருளால் இம்முறை யாத்திரைக்கு அருள் கிடைத்துள்ளது. எமக்கு பாத யாத்திரை செல்வதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது.

எதிர்வரும் 30ஆம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நிதியில் இருந்து , மோகனதாஸிடம் வேல் பெற்று , கதிர்காமத்தை நோக்கி யாத்திரையை தொடங்கவுள்ளோம். தொடர்ந்து 46 நாட்கள் கால் நடையாக கதிர்காமத்தை நோக்கி சென்று கதிர்காம கந்தனின் கொடியேற்ற தினத்தன்று அங்கு சென்றடைவோம்.

கடந்த காலங்களில் போன்று இம்முறையும்  யாத்திரையை தொடங்கவுள்ளோம். கொரோனோ தொற்று அபாயம் காரணமாக உரிய சுகாதார முறைகளை போணி நடக்கவுள்ளோம். அத்துடன் யாத்திரை செல்லும் அனைவரும் இரண்டு மீற்றர் சுற்றளவு இடைவெளியை தொடர்ந்து பேணி நடக்கவுள்ளோம் என தெரிவித்தார். #யாத்திரை  #அனுமதி #கதிர்காமம்  #கொரோனோ
 

http://globaltamilnews.net/2020/143486/

  • கருத்துக்கள உறவுகள்

தனி வெளிக்கிட ஆய்த்தமோ

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

தனி வெளிக்கிட ஆய்த்தமோ

அது தொடரும் அண்ணை நிலமையை பொறுத்தே அரசு இன்று அனுமதி அளித்துள்ளது  சில வேளை கொரானோ அதிகரிக்குமானால் தடைப்படலாம் அப்படி தடைப்படாவிட்டால் தனிக்காட்டுராஜாவும் காட்டுவழி பயணம் தொடருவார்

 

3 hours ago, விவசாயி விக் said:

இந்த யாத்திரைகள் எம்மக்களுக்கு கடடாயம் தேவை.  வீட்டுக்குள் அடைபட்டு இருக்கிறார்கள்.  கோவில் தேவாலய யாத்திரைகள், பாடசாலை பயணங்கள் என்று  உள்ளூர் சுற்றுலாவை ஊக்குவிக்கவேண்டும்.

இப்போது சிங்கள மக்கள் தமிழர் பிரதேசத்தில் சுற்றுலா செல்கிறார்கள்.

பல லட்சத்தை தாண்டிச்செல்லும் பக்தர்கள். விவசாயி அவர்களே வருடா வருடம் சில நேரம் இந்தவருடம் குறைவாகலாம் இந்த கொரானோ வைரசின் தாக்கத்தினால் செல்ல முடிந்தால் படங்களை இணைக்கிறேன்.

கொழும்பிலிருந்து சிங்கள நண்பர்களும் வருவார்கள் உகந்தை வழியாக காட்டினூடாக செல்வதற்கு . சில நேரம் வெள்ளைக்காரர்கள் கூட வருவார்கள் காவியுடன் ஆரம்பகாலத்தில் அமெரிக்கர் ஒருவரே முன்னின்று வருவார் . 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படி தடைப்படாவிட்டால் தனிக்காட்டுராஜாவும் காட்டுவழி பயணம் தொடருவார்

தனியாவா மனைவியோடா?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

தனியாவா மனைவியோடா?

நாங்கள் வருடா வருடம் செல்வது நண்பர்களுடன் மட்டுமே மனைவி இதுவரை செல்லவில்லை அதுபோக அவாக்கு ஆரம்ப மாணவர்களின் கற்கைகளுக்கு ஆசிரியர் அண்ணா அதனால் வரவும் மாட்டா எங்கள் குழந்தையும் சின்ன ஆள் அதனால் வரவே மாட்டார்

IMG-0760.jpg

படம் எடுத்தது நான் போகிறவர்கள் என் நண்பர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

தனியாவா மனைவியோடா?

பிறகேன் அங்க போவான்......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

பிறகேன் அங்க போவான்......!   😁

இல்ல சிலவேளை விட்டுட்டு வர ...........

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காமம் நோக்கிய யாத்திரைக்கு அனுமதி கிடைத்துள்ளது....

இதுக்கு தடையில்லை...கோட்டையில் 10 ..15 சனம் கூடி தொழுகையில்  ஈடுபட அவர்கள் கைது...இசுலாமியருக்கு சனிமாற்றம் ..குரு மாற்றம் சரியில்லையோ..

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விவசாயி விக் said:

மிக்க மகிழ்ச்சி தனிக்காட்டு ராஜா.  இன்னும் படங்கள் இணையுங்கள்.  நன்றி.

எனது ஒரு யாத்திரை எனும் தலைப்பில் பல படங்கள் இணைத்திருக்கிறேன் விவசாயி அவர்களே

 

15 hours ago, suvy said:

பிறகேன் அங்க போவான்......!   😁

அதுவும் சரிதான் 

 

13 hours ago, ஈழப்பிரியன் said:

இல்ல சிலவேளை விட்டுட்டு வர ...........

ஹாஹா வீட்ட விட்டு துரத்த போறிங்கள் போல

கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம்

In ஆன்மீகம்     May 28, 2020 9:52 am GMT     0 Comments     1216     by : Dhackshala

Katharagama-2-720x450.jpg

யாழ். தொண்டமனாறு செல்வ சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம கந்தன் ஆலயத்தை நோக்கி பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

செல்வசந்நிதி முருகன் ஆலயத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, ஆலய கப்புறாளையால் யாத்திரைக்கு தலைமை தாங்கி செல்லும் அடியவரின் கையில் முருக பெருமானின் வேல் கையளிக்கப்பட்டது.

வேலினை பெற்றுக்கொண்ட அடியவர்கள் கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரையை ஆரம்பித்தனர். இந்த யாத்திரை குழுவினர் எதிர்வரும் 4ஆம் திகதி விசாகம் அன்று முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் நடைபெறும் விசேட பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து கதிர்காமம் நோக்கி பாத யாத்திரையாக சுமார் 46 நாட்கள் சென்று கதிர்காம கந்தனின் கொடியேற்ற தினத்தன்று ஆலயத்தைச் சென்றடையவுள்ளனர்.

இம்முறை கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக யாத்திரை தடைபடும் என எதிர்ப்பார்த்தபோதிலும் முருக பெருமானின் அருளால் இம்முறை யாத்திரை தடங்கல் இன்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முருக பெருமானின் அருலாசியுடன் கதிர்காம கந்தனை சென்றடைவோம் என யாத்திரையில் பங்கேற்ற அடியவர் ஒருவர் தெரிவித்தார்.

Katharagama-4-720x405.jpg

Katharagama-3-720x405.jpg

Katharagama-2-720x405.jpg

Katharagama-1-720x405.jpg

Katharagama-5-720x405.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 23/5/2020 at 17:55, ஈழப்பிரியன் said:

தனியாவா மனைவியோடா?

 

On 23/5/2020 at 20:29, suvy said:

பிறகேன் அங்க போவான்......!   😁

 

On 23/5/2020 at 21:56, ஈழப்பிரியன் said:

இல்ல சிலவேளை விட்டுட்டு வர ...........

இவை இரண்டு பேர்ரை குசும்பை பாரன்...😎

1 hour ago, Rajesh said:

பின்னர் அங்கிருந்து கதிர்காமம் நோக்கி பாத யாத்திரையாக சுமார் 46 நாட்கள் சென்று கதிர்காம கந்தனின் கொடியேற்ற தினத்தன்று ஆலயத்தைச் சென்றடையவுள்ளனர்.

ஒரு நாளைக்கு 10 -  15 கிலோமீட்டர் நடப்பார்கள் போல. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

 

 

இவை இரண்டு பேர்ரை குசும்பை பாரன்...😎

பெடியள் கதைக்கிற இடத்தில பெருசுகளுக்கு என்ன வேலை?

யாழ் - கதிர்காமம் பாதயாத்திரை கைவிடப்பட்டது

யாழ்.கதிர்காம பாதயாத்திரை கைவிடப்பட்டுள்ளதாக பாதயாத்திரை குழுத் தலைவர் வேல்சாமி தெரிவித்தார்.

வியாழனன்று யாழ்.தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் விசேட பூஜையுடன் வேல்சாமி தலைமையில் பாதயாத்திரை ஆரம்பமானது.

எனினும் மறுநாள் வெள்ளிக்கிழமை மதியம் கைதடிசிவன் ஆலயத்தைச் சென்றடைந்ததும் கைவிட நேரிட்டது என குறிப்பிட்டுள்ளர்.

கொரோனோ வைரஸ் தாக்கத்தினால், இம்முறை கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை தடைப்படும் என எண்ணியிருந்ததாக பாதயாத்திரைக்கு தலைமை தாங்கி இருந்த சி.ஜெயசங்கரன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/144406

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Rajesh said:

யாழ் - கதிர்காமம் பாதயாத்திரை கைவிடப்பட்டது

யாழ்.கதிர்காம பாதயாத்திரை கைவிடப்பட்டுள்ளதாக பாதயாத்திரை குழுத் தலைவர் வேல்சாமி தெரிவித்தார்.

வியாழனன்று யாழ்.தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் விசேட பூஜையுடன் வேல்சாமி தலைமையில் பாதயாத்திரை ஆரம்பமானது.

எனினும் மறுநாள் வெள்ளிக்கிழமை மதியம் கைதடிசிவன் ஆலயத்தைச் சென்றடைந்ததும் கைவிட நேரிட்டது என குறிப்பிட்டுள்ளர்.

கொரோனோ வைரஸ் தாக்கத்தினால், இம்முறை கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை தடைப்படும் என எண்ணியிருந்ததாக பாதயாத்திரைக்கு தலைமை தாங்கி இருந்த சி.ஜெயசங்கரன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/144406

நந்த வனத்திலோர் ஆண்டி, அவன் நாலாறுமாதமாய் குயவனை வேண்டி, கொண்டுவந்தான் ஒரு தோண்டி, அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி. 😩

நீண்ட ஊரடங்கு காலத்தில் நடைபயணம் சாத்தியமில்லை

தவிர்ப்பதே மேலான முடிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.