Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பகலவன் said:

நாமெல்லாரும் தமிழின விடிவு, தாயகம், தமிழீழம் எனபதில் ஒத்த கருத்துள்ளவர்கள். சீமானை விமர்சிப்பதால் மட்டும் எதிரிகள் ஆகிவிடமுடியாது. 

 

என்னுடைய நிலைப்பாடும் இதே தான் .உங்களை வார்த்தைகளால் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளவும்.

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

  

4 hours ago, நந்தன் said:

உங்கள் ஊரில் இருந்து மட்டுவில் வெகு தூரமில்லை  ,90ல் அரசியல் படிக்க வந்த போராளிகள்  மூண்று நேரம் என்ன  சாப்பிட்டார்கள் என்று தெரியுமா, மீண்டும் மீண்டும்  வந்து மூக்குடைபடுவதே  உங்கள் வேலை.

மீரா, நாதம் உங்கள்  மீதானமதிப்பை தரம் தாழ்த்தி கொண்டீர்கள் 

உங்களுக்கு எதுவுமே தெரியாது என்பது மட்டும் தெரியும். உங்களுக்கு அடுத்தவை சொல்லித் தான் தெரியும். ஆனால்.. எங்களுக்கு எங்கள் வீடே போராளிகளின் உணவுப் பொருள் சேமிப்பிடமாக இருந்தது. போராளிகளோடு தொடர்பாடலும் இருந்தது. என்னென்ன வேளைகளில் என்னென்ன சாப்பிட்டார்கள்.. போர்க்களத்தில்.. நெருக்கடிவேளையில் என்ன சாப்பிட்டார்கள்.. வெளிநாட்டு விருந்தினருக்கு என்ன வழங்கினார்கள்.. என்பது போதிய அளவுக்கு தெரிந்திருக்கிறது.

இதில் தாங்கள் எதைச் சொல்லி எந்த மூக்கை உடைத்தீர்களாக்கும். சும்மா சுய பிம்பத்தை பெருத்த பிம்பமாகக் காட்டுவதே தங்கள் வேலை. 

நாங்கள் ஒன்றும் சீமான் அல்ல.. நீங்களும் உங்களைப் போன்ற சிலரும் அரைவேக்காட்டுத்தனமாக கழுவி ஊத்த. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

நம்பும்படியாக இல்லை.  யாராவது அறிந்தவர்கள் மேலும் தகவல் தர முடியுமா?

ஜூட் ஐயா,

உங்களுக்கு கட்டாயம் Dr Paul Newman ஐத் தெரிந்திருக்கும். அவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்.

https://www.vikatan.com/government-and-politics/politics/64271-students-forum-turn-against-seeman

நிகழ்ச்சிக் குழுவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ' பால்நியூமன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கிறார். 2009 ஈழப்படுகொலைக்கு பின்னர் அது தொடர்பாக பல்வேறு நாடுகளில் விசாரனை நடக்கும்போது, புலிகளுக்கும், ஈழ விடுதலைக்கும் பச்சை துரோகம் செய்யும் விதமாக அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் புலிகள் குறித்து அவதூறான தகவல்களையும் பதிவு செய்தார். குழந்தைகளை தமிழீழ போரில் ஈடுபடுத்தியதாகவும்,அவர்களை  பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக  பிடிங்கி, ராணுவத்தில் இணைத்துக் கொள்வதாகவும், பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை செய்ததாகவும் பதிவு செய்திருக்கிறார்.  

ஈழ மக்களின் விடுதலைக்கான கட்சி என்று கூவிக்கொண்டு, ஈழவிடுதலையை நோக்கிய பயணத்தை திசை திருப்பிக்கொண்டு இருக்கும் நாம் தமிழர் கட்சியின் பால்நியூமன் பதிவு செய்தது சீமானுக்குத் தெரியாமல் நடந்து இருக்க வாய்ப்பில்லை. இதுதொடர்பாக, பால்நியூமனே அவரின் வாயால் கனடா வானொலியில் ஒப்புக்கொண்டு பேசியது மட்டும் இல்லாது அதை மறுமுறை பதிவு செய்து நியாயம் கற்பித்த ஆடியோ வெளியாகி பலரால் கண்டனத்திற்கு உள்ளாகி கொண்டு இருக்கிறது. 

——

 

போல் நியூமன் 2011இல் கனடாவில் நாம் தமிழர் கட்சியின் கிளை ஆரம்பக்கூட்டத்தில் பேசியவர்.

https://www.naamtamilar.org/இன்று-12-03-11-கனடாவில்-உதயமாகி/

நாம் தமிழர் கட்சி அனைத்துலக தமிழர்களின் நலன் காக்கும் விதத்தில் உலகமெங்கும் பரவிவாழும் தமிழர்களுக்கான ஒரு சர்வதேச அரசியலை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. அதன் முக்கிய நிகழ்வாக இன்று மாலை 4.30 மணிக்கு கனடாவில் நாம் தமிழர் கட்சி உதயமாகிறது.

சிறப்பு உரை – தாயகத்தில் இருந்தபடியே அகன்ற வெண்திரையில் செந்தமிழன் சீமான் வழங்கும் நேரடி எழுட்சி உரை 

தமிழகத்தில் இருந்து சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பு உரை – பால் நியூமன்

இடம் : Cultural Centre (5183 Sheppard Avenue East (Markham & Sheppard)

 

போல் நியூமன் டப்ளின் தீர்ப்பாயத்திலும் பேசியிருந்தார்.

Dr. Paul Newman holds a Doctorate of Philosophy on ‘Internal Displacement and Human Rights situation in Northern Sri Lanka’ from Bangalore University. He was one of the four public speakers at the Permanent People’s Tribunal on War Crimes against Sri Lanka. He also the Coauthor of ‘Unfettered Genocide in Tamil Eelam’, published by Karnataka State Open University, Mysore, India in November 2014. 

இவருடைய நீண்ட பேட்டி தமிழ் மிரரில் இருந்து வெட்டி   தமிழ் கனடியனில் வந்துள்ளது

http://www.tamilcanadian.com/article/6244

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

ஜூட் ஐயா,

உங்களுக்கு கட்டாயம் Dr Paul Newman ஐத் தெரிந்திருக்கும். அவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்.

https://www.vikatan.com/government-and-politics/politics/64271-students-forum-turn-against-seeman

நிகழ்ச்சிக் குழுவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ' பால்நியூமன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கிறார். 2009 ஈழப்படுகொலைக்கு பின்னர் அது தொடர்பாக பல்வேறு நாடுகளில் விசாரனை நடக்கும்போது, புலிகளுக்கும், ஈழ விடுதலைக்கும் பச்சை துரோகம் செய்யும் விதமாக அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் புலிகள் குறித்து அவதூறான தகவல்களையும் பதிவு செய்தார். குழந்தைகளை தமிழீழ போரில் ஈடுபடுத்தியதாகவும்,அவர்களை  பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக  பிடிங்கி, ராணுவத்தில் இணைத்துக் கொள்வதாகவும், பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை செய்ததாகவும் பதிவு செய்திருக்கிறார்.  

ஈழ மக்களின் விடுதலைக்கான கட்சி என்று கூவிக்கொண்டு, ஈழவிடுதலையை நோக்கிய பயணத்தை திசை திருப்பிக்கொண்டு இருக்கும் நாம் தமிழர் கட்சியின் பால்நியூமன் பதிவு செய்தது சீமானுக்குத் தெரியாமல் நடந்து இருக்க வாய்ப்பில்லை. இதுதொடர்பாக, பால்நியூமனே அவரின் வாயால் கனடா வானொலியில் ஒப்புக்கொண்டு பேசியது மட்டும் இல்லாது அதை மறுமுறை பதிவு செய்து நியாயம் கற்பித்த ஆடியோ வெளியாகி பலரால் கண்டனத்திற்கு உள்ளாகி கொண்டு இருக்கிறது. 

——

 

போல் நியூமன் 2011இல் கனடாவில் நாம் தமிழர் கட்சியின் கிளை ஆரம்பக்கூட்டத்தில் பேசியவர்.

https://www.naamtamilar.org/இன்று-12-03-11-கனடாவில்-உதயமாகி/

நாம் தமிழர் கட்சி அனைத்துலக தமிழர்களின் நலன் காக்கும் விதத்தில் உலகமெங்கும் பரவிவாழும் தமிழர்களுக்கான ஒரு சர்வதேச அரசியலை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. அதன் முக்கிய நிகழ்வாக இன்று மாலை 4.30 மணிக்கு கனடாவில் நாம் தமிழர் கட்சி உதயமாகிறது.

சிறப்பு உரை – தாயகத்தில் இருந்தபடியே அகன்ற வெண்திரையில் செந்தமிழன் சீமான் வழங்கும் நேரடி எழுட்சி உரை 

தமிழகத்தில் இருந்து சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பு உரை – பால் நியூமன்

இடம் : Cultural Centre (5183 Sheppard Avenue East (Markham & Sheppard)

 

போல் நியூமன் டப்ளின் தீர்ப்பாயத்திலும் பேசியிருந்தார்.

Dr. Paul Newman holds a Doctorate of Philosophy on ‘Internal Displacement and Human Rights situation in Northern Sri Lanka’ from Bangalore University. He was one of the four public speakers at the Permanent People’s Tribunal on War Crimes against Sri Lanka. He also the Coauthor of ‘Unfettered Genocide in Tamil Eelam’, published by Karnataka State Open University, Mysore, India in November 2014. 

இவருடைய நீண்ட பேட்டி தமிழ் மிரரில் இருந்து வெட்டி   தமிழ் கனடியனில் வந்துள்ளது

http://www.tamilcanadian.com/article/6244

 

பகலவன் போன்றவர்களும் எமது போராட்டத்தை இவர்களிடம் கொடுத்ததன் பலன் இது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

பகலவன் போன்றவர்களும் எமது போராட்டத்தை இவர்களிடம் கொடுத்ததன் பலன் இது...

முனைவர் போல் நியூமன் முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலைதான் என்று சாட்சியம் கொடுத்திருந்தார். 150, 000 மக்கள் இறுதி யுத்த காலத்தில் கொல்லப்பட்டனர் என்றும் சொல்லியிருந்தார். எனினும் ஒரே பக்கப்பார்வையாக மனித உரிமை செயற்பாட்டாளர் இருக்கக்கூடாதல்லவா. அதனால் புலிகளின் கட்டாய ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளையும் கொஞ்சம் தொட்டிருந்தார்.  இதைத்தான் விகடனின் வந்த கட்டுரை குறிப்பிடுகின்றது. வினவு இணையத்தில் கார்க்கியும் சொல்லியிருந்தார்.

அவரது அறிக்கை கிடைக்கவில்லை. ஆனால் வாசித்தளவில் 41 பக்க அறிக்கையில் 40வது பக்கத்தில்தான் புலிகளைப் பற்றிய குற்றச்சாட்டு வந்ததாம். 

http://pptsrilanka.org/wp-content/uploads/2018/09/Dublin_Permanent_Peoples_Tribunal_Final__Report.pdf

 

Day One: 14 January 2010
Session I : 9.00 a.m. - 11.00 a.m. (Open to the Public)
1. Mr Rajeev Sreetharan and Ms Janani Jananayagham (Tamils Against Genocide)
Evidence of war crimes based on satellite images of the region ‘ Safety Zone’ during the last
phase of war
2. Dr Paul Newman (Concerned Citizens’ Forum of South Asia)
An overall view of refugees and human rights especially in the aftermath of war

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

அதை தான் நான் குறிப்பிட்டேன். ஒரு புறம் பாரிய அர்பணிப்போடும் திறமையான யுத்த தந்திரங்களுடனும் வீரத்துடனும்   புலிககளின் தளபதிகள, போராளிகள்  போரிட்டு ஏற்படுத்திய வலு சமநிலையை ஏற்படுத்த  புலிகளின் அரசியல் துறை என்பது   சர்வதேச அரசியலை மிக மோசமாக கையாண்டது. மேற்குலகில் நட்பு சக்திகளை கட்டி எழுப்ப எந்த நடவடிக்கைகளும் எடுக்க வில்லை. காப்பாற்றகூடிய சக்திகொண்ட ராஜ தந்திரியான அன்ரன் பாலசிங்கத்தை இழந்த‍து புலிகளுக்கு பேரிழப்பு என்றே கூறவேண்டும்.  இறுதி போரின் தோல்விக்கும் பேரழிவுகும் இது பாரிய காரணமாக இருந்த‍து.  இறுதி கட்ட‍த்தில் இந்தியாவை கையாள ராஜிவ் கொலை தொடர்பான சில கருத்துகளை திரு அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த‍தை புலிகள் அங்கீகரிக்கவில்லை. 

பகலவனின் இந்த பதிவிற்கு விருப்பு பிள்ளியிட்டுவிட்டு பின்னர் இப்படி எழுதுகிறீர்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, MEERA said:

பகலவன் போன்றவர்களும் எமது போராட்டத்தை இவர்களிடம் கொடுத்ததன் பலன் இது...

நான் அப்படி நினைக்கவில்லை.

இது same side goal போட்டு, புலிகளை கண்டித்து, சிங்கள அரசினை கூடுதலாக கண்டிக்கும் செயல்.

ஒரேயடியாக, புலிகள் எந்த மனித உரிமை மீறல்களில் ஈடுபடவே இல்லை என்று சர்வதேச மன்றுகளில் சொல்ல கிளம்பினால், சிங்கள அரசின் மீது கண்டனம் தெரிவிக்கும் உரிமையினை இழந்துவிடுவோம்.

நடுநிலைமை போல காண்பித்து, அரசு மீது கூடுதலாக கண்டனம் தெரிவித்தால் தான் எடுபடும் என்பதே நிதர்சனம்.

அதேவேளை, இலங்கை அரசு, தாம் ஒன்றும் செய்யவில்லை, எல்லாம் புலிகள் தான் என்று சொல்லப்போக, அதுதான் அவர்களை பயங்கரவாதிகள் என்று அறிவித்தோம், ஆனால் நீங்கள் ஒரு ஜனநாயக அரசு அல்லவா என்று வாயினை மூட வைத்தார்கள்.

ஆகவே பால் நியூமன், பயங்கரவாதிகளாக அறிவிக்கப்படட புலிகள் ஒன்றுமே செய்யவில்லை, அரசுதான் எல்லாம் என்றால், யார் நம்புவார்கள்?

நான் கூட சொன்னேன். இவ்வாண்டு யுத்த வெற்றியினை கொண்டாடிக்கொண்டிருந்த சிங்களவர்கள் தளத்தினுள் போய், இந்த தருணத்தில், நாட்டின் சுதந்திரத்தினை பறிக்க வந்த இந்திய படைகளிடம் இருந்து போராடி, அதனை மீட்டு பாதுகாத்து தந்த, பிரபாகரனுக்கும், புலி வீரர்களுக்கும் எமது நன்றிகள் என்று போட்டிருந்தேன்.

இன்று வரை யாருமே மறுதலிக்கவில்லை. மறுதலிக்கமுடியாதவரே, நான் ஆப்படித்திருந்தேன்.

கிருபன் பார்வை வேறுவகையில் உள்ளது போலவே தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

நான் அப்படி நினைக்கவில்லை.

இது same side goal போட்டு, புலிகளை கண்டித்து, சிங்கள அரசினை கூடுதலாக கண்டிக்கும் செயல்.

ஒரேயடியாக, புலிகள் எந்த மனித உரிமை மீறல்களில் ஈடுபடவே இல்லை என்று சர்வதேச மன்றுகளில் சொல்ல கிளம்பினால், சிங்கள அரசின் மீது கண்டனம் தெரிவிக்கும் உரிமையினை இழந்துவிடுவோம்.

நடுநிலைமை போல காண்பித்து, அரசு மீது கூடுதலாக கண்டனம் தெரிவித்தால் தான் எடுபடும் என்பதே நிதர்சனம்.

அதேவேளை, இலங்கை அரசு, தாம் ஒன்றும் செய்யவில்லை, எல்லாம் புலிகள் தான் என்று சொல்லப்போக, அதுதான் அவர்களை பயங்கரவாதிகள் என்று அறிவித்தோம், ஆனால் நீங்கள் ஒரு ஜனநாயக அரசு அல்லவா என்று வாயினை மூட வைத்தார்கள்.

ஆகவே பால் நியூமன், பயங்கரவாதிகளாக அறிவிக்கப்படட புலிகள் ஒன்றுமே செய்யவில்லை, அரசுதான் எல்லாம் என்றால், யார் நம்புவார்கள்?

நான் கூட சொன்னேன். இவ்வாண்டு யுத்த வெற்றியினை கொண்டாடிக்கொண்டிருந்த சிங்களவர்கள் தளத்தினுள் போய், இந்த தருணத்தில், நாட்டின் சுதந்திரத்தினை பறிக்க வந்த இந்திய படைகளிடம் இருந்து போராடி, அதனை மீட்டு பாதுகாத்து தந்த, பிரபாகரனுக்கும், புலி வீரர்களுக்கும் எமது நன்றிகள் என்று போட்டிருந்தேன்.

இன்று வரை யாருமே மறுதலிக்கவில்லை. 

கிருபன் பார்வை வேறுவகையில் உள்ளது போலவே தெரிகிறது.

ஆனால் கட்டாய கருக்கலைப்பு என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்லவா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

கிருபன் பார்வை வேறுவகையில் உள்ளது போலவே தெரிகிறது

முனைவர்  போல் நியூமன் டப்ளின் தீர்ப்பாயத்தில் சொன்னது பற்றிய உங்கள் பார்வையோடு ஒத்துப்போகின்றேன்.😀

ஒரேயடியாக சிங்கள அரசையும், சிங்களப் படைகளையும் மட்டும் முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு காரணம் என்று சொன்னால் சொல்பவரின்மீது நம்பிக்கை வராதுதானே. 

Just now, MEERA said:

ஆனால் கட்டாய கருக்கலைப்பு என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்லவா....

அவர் கொடுத்த அறிக்கையை வாசிக்காமல் இதற்கு பதில் சொல்வது சரியாக இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

ஆனால் கட்டாய கருக்கலைப்பு என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்லவா....

நான் வாசிக்கவில்லை. ஆனாலும், காரணத்தினை விளங்கிக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கிருபன் said:

ஜூட் ஐயா,

உங்களுக்கு கட்டாயம் Dr Paul Newman ஐத் தெரிந்திருக்கும். அவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்.

https://www.vikatan.com/government-and-politics/politics/64271-students-forum-turn-against-seeman

நிகழ்ச்சிக் குழுவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ' பால்நியூமன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கிறார். 2009 ஈழப்படுகொலைக்கு பின்னர் அது தொடர்பாக பல்வேறு நாடுகளில் விசாரனை நடக்கும்போது, புலிகளுக்கும், ஈழ விடுதலைக்கும் பச்சை துரோகம் செய்யும் விதமாக அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் புலிகள் குறித்து அவதூறான தகவல்களையும் பதிவு செய்தார். குழந்தைகளை தமிழீழ போரில் ஈடுபடுத்தியதாகவும்,அவர்களை  பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக  பிடிங்கி, ராணுவத்தில் இணைத்துக் கொள்வதாகவும், பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை செய்ததாகவும் பதிவு செய்திருக்கிறார்.  

11 minutes ago, கிருபன் said:

அவர் கொடுத்த அறிக்கையை வாசிக்காமல் இதற்கு பதில் சொல்வது சரியாக இருக்காது.

ஈழ மக்களின் விடுதலைக்கான கட்சி என்று கூவிக்கொண்டு, ஈழவிடுதலையை நோக்கிய பயணத்தை திசை திருப்பிக்கொண்டு இருக்கும் நாம் தமிழர் கட்சியின் பால்நியூமன் பதிவு செய்தது சீமானுக்குத் தெரியாமல் நடந்து இருக்க வாய்ப்பில்லை. இதுதொடர்பாக, பால்நியூமனே அவரின் வாயால் கனடா வானொலியில் ஒப்புக்கொண்டு பேசியது மட்டும் இல்லாது அதை மறுமுறை பதிவு செய்து நியாயம் கற்பித்த ஆடியோ வெளியாகி பலரால் கண்டனத்திற்கு உள்ளாகி கொண்டு இருக்கிறது. 

——

 

போல் நியூமன் 2011இல் கனடாவில் நாம் தமிழர் கட்சியின் கிளை ஆரம்பக்கூட்டத்தில் பேசியவர்.

https://www.naamtamilar.org/இன்று-12-03-11-கனடாவில்-உதயமாகி/

நாம் தமிழர் கட்சி அனைத்துலக தமிழர்களின் நலன் காக்கும் விதத்தில் உலகமெங்கும் பரவிவாழும் தமிழர்களுக்கான ஒரு சர்வதேச அரசியலை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. அதன் முக்கிய நிகழ்வாக இன்று மாலை 4.30 மணிக்கு கனடாவில் நாம் தமிழர் கட்சி உதயமாகிறது.

சிறப்பு உரை – தாயகத்தில் இருந்தபடியே அகன்ற வெண்திரையில் செந்தமிழன் சீமான் வழங்கும் நேரடி எழுட்சி உரை 

தமிழகத்தில் இருந்து சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பு உரை – பால் நியூமன்

இடம் : Cultural Centre (5183 Sheppard Avenue East (Markham & Sheppard)

 

போல் நியூமன் டப்ளின் தீர்ப்பாயத்திலும் பேசியிருந்தார்.

Dr. Paul Newman holds a Doctorate of Philosophy on ‘Internal Displacement and Human Rights situation in Northern Sri Lanka’ from Bangalore University. He was one of the four public speakers at the Permanent People’s Tribunal on War Crimes against Sri Lanka. He also the Coauthor of ‘Unfettered Genocide in Tamil Eelam’, published by Karnataka State Open University, Mysore, India in November 2014. 

இவருடைய நீண்ட பேட்டி தமிழ் மிரரில் இருந்து வெட்டி   தமிழ் கனடியனில் வந்துள்ளது

http://www.tamilcanadian.com/article/6244

 

 

10 minutes ago, Nathamuni said:

நான் வாசிக்கவில்லை. ஆனாலும், காரணத்தினை விளங்கிக் கொள்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, MEERA said:

 

 

மீரா,

முழு விபரம் இல்லாமல் மேலோட்டமாக சொல்ல முடியாது.

முக்கியமாக, சிறுவர்களை இயக்கத்தில் சேர்ப்பது, பெண்பிள்ளைகளை வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்ப்பது, அவர்கள் இயக்கத்தில் இருக்கும் போது கருவுறின் கட்டாய கருக்கலைப்பு செய்வது போன்றவை சர்வதேசத்துக்கு சொல்லிய வகையில், தமிழர் கதிர்காமர் சிங்களத்துக்கு செய்த பெரும் கைங்கரியம்.

இதனால் தான், புலிகள் பயங்கரவாதிகள் லிஸ்ட்ல சேர்க்கப்பட்ட்னர்.

அதனை மறுக்க முடியுமா, போல் நியூமானால்?

இந்த விடயங்கள் சர்வதேசத்தில் எடுபடும் என்று கதிர்காமருக்கு தெரியும். ஏனெனில் இங்கு ராணுவத்தில் ஆண், பெண் உறவு சாதாரணம். கருத்தடை மாத்திரையுடன் விசயம் முடியும். 

ஆனால், அங்கே, கலாசாரம் வேறு என்பதால், புலிகள் அப்படி செய்தார்கள் என்று சொன்னார்.அதாவது, இங்கு ராணுவத்தில் போலவே, அங்கும் உறவுகள் இருந்தன. ஆனால், பிள்ளைகளை பெற்றுக் கொள்ள போனால் போராட முடியாது என்றுதான் அவ்வாறு செய்தார்கள் என்ற கதிர்காமர் செய்த இந்த ஜிகாலடி வேலையினால், புலிகள் பெரிதும், சர்வதேச ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது உண்மை.

அன்று மேலை நாடுகளில் படித்தவர்கள் யாருமே இவைகளை மறுதலிக்க புலிகள் பக்கம் இருக்கவில்லை.

அவருக்கு பிரதமர் பதவிக்கு சந்திரிகா நியமிக்க இருந்தார். ஆனாலும் மகிந்தா வெடி வைத்து, புலிகள் தலையில் போட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

மீரா,

முழு விபரம் இல்லாமல் மேலோட்டமாக சொல்ல முடியாது.

முக்கியமாக, சிறுவர்களை இயக்கத்தில் சேர்ப்பது, பெண்பிள்ளைகளை வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்ப்பது, அவர்கள் இயக்கத்தில் இருக்கும் போது கருவுறின் கட்டாய கருக்கலைப்பு செய்வது போன்றவை சர்வதேசத்துக்கு சொல்லிய வகையில், தமிழர் கதிர்காமர் சிங்களத்துக்கு செய்த பெரும் கைங்கரியம்.

இதனால் தான், புலிகள் பயங்கரவாதிகள் லிஸ்ட்ல சேர்க்கப்பட்ட்னர்.

அதனை மறுக்க முடியுமா, போல் நியூமானால்?

உண்மை நாதா , இவ‌ரை 2005ம் ஆண்டு போட்டுத் த‌ள்ள‌ தானே புலிக‌ளுக்கு ஜ‌ரோப்பா த‌டை போட்ட‌து ,

இவ‌ன் இற‌ந்த‌ போது ச‌ந்திரிக்கா ம‌ருத்துவ‌ம‌னையில் ம‌ருத்துவ‌ர்க‌ளின் கையை பிடித்து க‌த‌றி அழுதா எப்ப‌டியாவ‌து காப்பாற்ற‌ சொல்லி , ஆனால் அவ‌ரின் உட‌ம்  அதிக‌ தோட்டா பாய்ந்து விட்ட‌து , அவ‌ரின் உயிர் ம‌ருத்துவ‌ம‌னையில் பிரிந்த‌து  /

ச‌ந்திரிக்காவுக்கு எவ‌ள‌வு ந‌ல்ல‌வ‌னாய் இருந்து இருக்கிறான் என்ப‌த‌ இப்ப‌ உண‌ர‌ முடியுது 

Link to comment
Share on other sites

18 minutes ago, பையன்26 said:

உண்மை நாதா , இவ‌ரை 2005ம் ஆண்டு போட்டுத் த‌ள்ள‌ தானே புலிக‌ளுக்கு ஜ‌ரோப்பா த‌டை போட்ட‌து ,

இவ‌ன் இற‌ந்த‌ போது ச‌ந்திரிக்கா ம‌ருத்துவ‌ம‌னையில் ம‌ருத்துவ‌ர்க‌ளின் கையை பிடித்து க‌த‌றி அழுதா எப்ப‌டியாவ‌து காப்பாற்ற‌ சொல்லி , ஆனால் அவ‌ரின் உட‌ம்  அதிக‌ தோட்டா பாய்ந்து விட்ட‌து , அவ‌ரின் உயிர் ம‌ருத்துவ‌ம‌னையில் பிரிந்த‌து  /

ச‌ந்திரிக்காவுக்கு எவ‌ள‌வு ந‌ல்ல‌வ‌னாய் இருந்து இருக்கிறான் என்ப‌த‌ இப்ப‌ உண‌ர‌ முடியுது 

உண்மைதான் பையன் கதிர்காமர் என்பவர் உயிருடன்  இருக்கும் போது அவரின் சரவதேசப் பிரச்சாரங்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் தவித்து பின்னர்  அவரைப் போட்டுத்தள்ளி ஐரோப்பிய ஒன்றியத்திடம் தடை வாங்கியது  தமிழீழப் போராட்டத்தில் எவ்வளவு பெரிய ராஜதந்திர வெற்றி. 

Link to comment
Share on other sites

3 hours ago, கற்பகதரு said:

நம்பும்படியாக இல்லை.  யாராவது அறிந்தவர்கள் மேலும் தகவல் தர முடியுமா?

டப்ளின் தீர்ப்பாயத்தின் அறிக்கையை ஒருவழியாக தேடிப் பிடித்துவிட்டேன். 

Yumpu.com/en/document/read/43514302/dublin-tribunal-final-report-tamilnet

இந்த இணைப்புக்கு முன்னால் www போட்டுக் கொள்ளுங்கள்.

இந்த இணைப்பின் 40 ஆவது பக்கத்தில் பால் நியூமன் 2009 ஆண்டு எழுதிய ஒரு கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரையை வாசித்து பார்க்க வேண்டும்.

பொதுமக்கள் மீதான தாக்குதல் (Civilian Targets)என்பதற்கு ஆதாரங்களாக இந்தக் கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.

2009 இல்தான் நாம் தமிழர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது பால் நியூமன் அதில் இல்லை. 2015 வாக்கில் இணைந்தார் என நினைக்கிறேன்.

வழக்கம்போல கீற்று, மே17 இவர்கள் எல்லாம் நாம் தமிழர் கட்சியின் மீதான தாக்குதல் செய்ய இந்த விடயத்தை பயன்படுத்துகிறார்கள். இந்த சக்தியை திமுக, காங்கிரஸ், மதிமுக மீது பயன்படுத்தலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பையன்26 said:

உண்மை நாதா , இவ‌ரை 2005ம் ஆண்டு போட்டுத் த‌ள்ள‌ தானே புலிக‌ளுக்கு ஜ‌ரோப்பா த‌டை போட்ட‌து ,

போட்டு தள்ளியது புலிகள் இல்லை.

பிரதமர் பதவி அவருக்கு கொடுக்கப்படும் என்று, மகிந்தா செய்த வேலை.

காமினி, லலித் கொலைகள், பிரேமதாச செய்தது.

புலிகளை எதனையுமே ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ இல்லை. ராஜிவ் கொலை உள்பட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

என்னுடைய நிலைப்பாடும் இதே தான் .உங்களை வார்த்தைகளால் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளவும்.

தாத்தா , நீங்க‌ள் அவ‌ர் ம‌ன‌ம் நோகும் ப‌டி ஒன்றும் எழுத‌ வில்லை , 

நானும் நாதாவும் ப‌க‌ல‌வ‌னை பார்த்து நேர்மையாய் தான் ஒரு சில‌ கேள்விக‌ளை கேட்டோம் , அதில் அவ‌ர் ம‌ன‌ம் நோகும் ப‌டி நாம் ந‌ட‌ந்து கொள்ள‌ வில்லை , அண்ண‌ன் சீமானை த‌ர‌ம் தாழ்த்தி ப‌க‌ல‌வ‌ன் அருவ‌ருப்பாக‌ எழுதி இருந்தார் , அத‌ற்கு பிற‌க்கு யோசிச்சு பார்த்தேன் இவ‌ரை எல்லாம் ஏன் அண்ணா என்று அழைக்க‌னும் , அவ‌ரின் பெய‌ரை சொல்லி அழைப்ப‌தே ச‌ரி என்று என் ம‌ன‌சு சொல்லிச்சு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, tulpen said:

உண்மைதான் பையன் கதிர்காமர் என்பவர் உயிருடன்  இருக்கும் போது அவரின் சரவதேசப் பிரச்சாரங்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் தவித்து பின்னர்  அவரைப் போட்டுத்தள்ளி ஐரோப்பிய ஒன்றியத்திடம் தடை வாங்கியது  தமிழீழப் போராட்டத்தில் எவ்வளவு பெரிய ராஜதந்திர வெற்றி. 

துல்ப‌ன்  , ஜ‌யா அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ச‌ர்வ‌தேச‌ சூழ் நிலை அறிந்து அத‌ற்கு ஏற்ற‌ போல் காய் ந‌க‌ர்த்தினார் , எம்ம‌வ‌ர் வ‌ன்னியில் இருந்து கூட‌ அவ‌ச‌ர‌ப் ப‌ட்ட‌து உண்மை தான் , வாழ்க்கையில் எல்லாரும் பிழை த‌வ‌றுக‌ள் விடுவ‌து வ‌ழ‌க்க‌ம் , எல்லாரும் க‌ண்ண‌ மூடிட்டின‌ம் நாம் அவ‌ர்க‌ளை விம‌ர்சிக்காம‌ அடுத்த‌ க‌ட்ட‌த்த‌ நோக்கி ந‌க‌ர‌ பாப்போம்   , 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

December 4 இல் எழுதியது

Link to comment
Share on other sites

இந்த திரியின் போக்கினை நினைக்கும்போது சில பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வருகின்றன.

1) 1984: எங்கள் ஊரில் நிறையப் பேர் ரெலோ, புளட் ஆட்கள்தான். புலியை கவனித்தவர்கள் மிக குறைவு. என்னைப் போன்ற ஒரு சிலர்தான் இயக்கத்துக்கு ஆதரவு.

2) 2006 / 2007 வாக்கில் கருணாநிதிக்கு ஆதரவான பல திரிகள் இங்கே ஆரம்பிக்கப்பட்டன. அன்று நானும், என்னைப் போன்ற ஒரு சிலரும்தான் கருணாநிதியை நம்பக் கூடாது எனும் நிலைப்பாட்டினில் கருத்துக்களை பதிந்தோம். அன்று கருணாநிதி தமிழகத்தின் முதல்வர். ஆனாலும், நாங்கள் பதிந்த கருத்துகள் எடுபடவில்லை. கடைசியில் கருணாநிதியின் துரோகம் 2009 இல் முழுமையாக வெளிப்பட்டது. எல்லோரும் குய்யோ முறையோ என அழுது கண்ணீர் வடித்தோம். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

3) 2010 இலங்கை பாராளுமன்ற தேர்தல். எல்லோரும் கூட்டமைப்புக்கு அமோக ஆதரவு. நானும் ஒரு சிலரும்தான் (விசுகு அண்ணாவும், குசா அண்ணாவும், தமிழ்சிறியும் என நினைக்கிறேன்), கஜேந்திர குமாரையும் கவனிக்க வேண்டும் என கருத்துகள் பதிந்தோம். சம்பந்தர் மீது நம்பிக்கை இருந்ததில்லை. கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்; எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடக்கூடாது என்பன எமது வாதங்கள். ஆனால் நாங்கள் சிறுபான்மைதான். பெரும்பாலானவர்கள் தமிழர் ஒற்றுமை, சம்பந்தர் “தீர்வுப்பொதி” தருவார் என்றெல்லாம் எழுதினார்கள். பிறகு எல்லாரும் சேர்ந்து சம்பந்தனையும், சுமந்திரனையும் திட்டி தீர்த்ததுதான் மிச்சம். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

4) பிறகு 2008 முதற்கொண்டு அண்ணன் சீமானை கவனித்து வந்து 2014 முதற்கொண்டு யாழில் பதிந்து வருகிறேன். ஆனாலும் இதுக்கு ஆதரவானவர்கள் சிறுபான்மையினர்தான். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

“ஒரு விடயத்தை ஊடறுத்து உண்மைத் தன்மையை உணர்வது என்பது கடினமானது. அந்த தன்மை இல்லாது போனால் அரசியல் பிழைத்து எதிர்கால தலைமுறையை சிக்கலில் கொண்டுபோய் விடும்.”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, இசைக்கலைஞன் said:

இந்த திரியின் போக்கினை நினைக்கும்போது சில பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வருகின்றன.

1) 1984: எங்கள் ஊரில் நிறையப் பேர் ரெலோ, புளட் ஆட்கள்தான். புலியை கவனித்தவர்கள் மிக குறைவு. என்னைப் போன்ற ஒரு சிலர்தான் இயக்கத்துக்கு ஆதரவு.

2) 2006 / 2007 வாக்கில் கருணாநிதிக்கு ஆதரவான பல திரிகள் இங்கே ஆரம்பிக்கப்பட்டன. அன்று நானும், என்னைப் போன்ற ஒரு சிலரும்தான் கருணாநிதியை நம்பக் கூடாது எனும் நிலைப்பாட்டினில் கருத்துக்களை பதிந்தோம். அன்று கருணாநிதி தமிழகத்தின் முதல்வர். ஆனாலும், நாங்கள் பதிந்த கருத்துகள் எடுபடவில்லை. கடைசியில் கருணாநிதியின் துரோகம் 2009 இல் முழுமையாக வெளிப்பட்டது. எல்லோரும் குய்யோ முறையோ என அழுது கண்ணீர் வடித்தோம். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

3) 2010 இலங்கை பாராளுமன்ற தேர்தல். எல்லோரும் கூட்டமைப்புக்கு அமோக ஆதரவு. நானும் ஒரு சிலரும்தான் (விசுகு அண்ணாவும், குசா அண்ணாவும், தமிழ்சிறியும் என நினைக்கிறேன்), கஜேந்திர குமாரையும் கவனிக்க வேண்டும் என கருத்துகள் பதிந்தோம். சம்பந்தர் மீது நம்பிக்கை இருந்ததில்லை. கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்; எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடக்கூடாது என்பன எமது வாதங்கள். ஆனால் நாங்கள் சிறுபான்மைதான். பெரும்பாலானவர்கள் தமிழர் ஒற்றுமை, சம்பந்தர் “தீர்வுப்பொதி” தருவார் என்றெல்லாம் எழுதினார்கள். பிறகு எல்லாரும் சேர்ந்து சம்பந்தனையும், சுமந்திரனையும் திட்டி தீர்த்ததுதான் மிச்சம். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

4) பிறகு 2008 முதற்கொண்டு அண்ணன் சீமானை கவனித்து வந்து 2014 முதற்கொண்டு யாழில் பதிந்து வருகிறேன். ஆனாலும் இதுக்கு ஆதரவானவர்கள் சிறுபான்மையினர்தான். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

“ஒரு விடயத்தை ஊடறுத்து உண்மைத் தன்மையை உணர்வது என்பது கடினமானது. அந்த தன்மை இல்லாது போனால் அரசியல் பிழைத்து எதிர்கால தலைமுறையை சிக்கலில் கொண்டுபோய் விடும்.”

ப‌ழைய‌ யாழ் க‌ள‌ உற‌வின் பெய‌ர் என‌க்கு நினைவில் இல்லை , நீங்க‌ள் 2006ம் ஆண்டு எழுதின‌த‌ , நான் 2008ம் ஆண்டு க‌ட‌சியில் எழுத‌ தொட‌ங்கினேன் க‌ருணாநிதியை ந‌ம்ப‌ வேண்டாம் , அப்ப‌ ப‌ழைய‌ யாழ்க‌ள் உற‌வு எழுதினார் த‌ம்பி நீங்க‌ள் சின்ன‌ பெடிய‌ன் கலைஞ‌ரின் அர‌சிய‌ல் ராஜ த‌ந்திர‌ம் எல்லாம் உம‌க்கு தெரியாது என்று / 2009ம் ஆண்டு ஆயுத‌ம் மெள‌வுனிச்ச‌ கையோடு யாழில் ப‌ழைய‌ உற‌வுக‌ள் எழுதாம‌ ஒதுங்கின‌வை , என‌க்கு க‌ருணாநிதியை ப‌ற்றி இல‌வ‌ச‌ அறிவுரை சொன்ன‌வ‌ரும் பின்னாளில் காண‌ம‌ல் போய் விட்டார் ட‌ங்கு 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, இசைக்கலைஞன் said:

புலிகள் தமிழக அரசியலில் தலையிடவில்லை. ஆனால் இறுதிப்போரில் இந்தியாவின் பங்கு அதிகரிக்கவே, தமிழகத்தில் உள்ள ஆதரவாளர்களை அழைத்து சந்திப்புகள் நடந்தன. குறிப்பாக, பாரதிராஜாவும் சென்று பார்த்தார். தீர்க்கமாக போராட்டங்களை ஒருங்கிணைக்க ஆரம்பித்தார், (இயக்குநர் சங்கம்). ஆனால் நீடிக்க முடியவில்லை. அவரது வாகனத்தை எரித்துவிடவும், ஒதுங்கிக் கொண்டார்.

இன்றுவரையில் தனது பலத்துக்கும் அதிகமாக முயற்சி செய்து வருவபவர்களில் சீமான் முக்கியமானவர். ஆனால் தமிழகத்தில் தமிழர்களே அடிமை. இந்திய அளவிலும் அடிமைகள் என்பதை விளங்கியே செயற்பட்டு வருகிறார்.

சீமான் இந்திய அரசின் கைப்பொம்மை என்பதுபோல நிழலி எழுதியிருந்தார். நாம் தமிழர் கட்சி ஆரம்பித்தபோது கூடவே ஒருங்கிணைந்து வேலை பார்த்தவர் சுப. முத்துக்குமார். தமிழகத்தை சேர்ந்த இவர் புலிகளிடம் பயிற்சி பெற்று தமிழகத்தில் வேலை செய்தவர். பின்னர் 2013 இல் அடையாளம் தெரியாதவர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதான் அங்கே நிலைமை.

அவரது வளர்ச்சி பொறுக்காமல் சீமான் தான் போட்டுத் தள்ளினார் என்று அந் நேரம்  எல்லோரும் கதைத்தார்கள் 

 

24 minutes ago, இசைக்கலைஞன் said:

இந்த திரியின் போக்கினை நினைக்கும்போது சில பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வருகின்றன.

1) 1984: எங்கள் ஊரில் நிறையப் பேர் ரெலோ, புளட் ஆட்கள்தான். புலியை கவனித்தவர்கள் மிக குறைவு. என்னைப் போன்ற ஒரு சிலர்தான் இயக்கத்துக்கு ஆதரவு.

2) 2006 / 2007 வாக்கில் கருணாநிதிக்கு ஆதரவான பல திரிகள் இங்கே ஆரம்பிக்கப்பட்டன. அன்று நானும், என்னைப் போன்ற ஒரு சிலரும்தான் கருணாநிதியை நம்பக் கூடாது எனும் நிலைப்பாட்டினில் கருத்துக்களை பதிந்தோம். அன்று கருணாநிதி தமிழகத்தின் முதல்வர். ஆனாலும், நாங்கள் பதிந்த கருத்துகள் எடுபடவில்லை. கடைசியில் கருணாநிதியின் துரோகம் 2009 இல் முழுமையாக வெளிப்பட்டது. எல்லோரும் குய்யோ முறையோ என அழுது கண்ணீர் வடித்தோம். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

3) 2010 இலங்கை பாராளுமன்ற தேர்தல். எல்லோரும் கூட்டமைப்புக்கு அமோக ஆதரவு. நானும் ஒரு சிலரும்தான் (விசுகு அண்ணாவும், குசா அண்ணாவும், தமிழ்சிறியும் என நினைக்கிறேன்), கஜேந்திர குமாரையும் கவனிக்க வேண்டும் என கருத்துகள் பதிந்தோம். சம்பந்தர் மீது நம்பிக்கை இருந்ததில்லை. கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்; எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடக்கூடாது என்பன எமது வாதங்கள். ஆனால் நாங்கள் சிறுபான்மைதான். பெரும்பாலானவர்கள் தமிழர் ஒற்றுமை, சம்பந்தர் “தீர்வுப்பொதி” தருவார் என்றெல்லாம் எழுதினார்கள். பிறகு எல்லாரும் சேர்ந்து சம்பந்தனையும், சுமந்திரனையும் திட்டி தீர்த்ததுதான் மிச்சம். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

4) பிறகு 2008 முதற்கொண்டு அண்ணன் சீமானை கவனித்து வந்து 2014 முதற்கொண்டு யாழில் பதிந்து வருகிறேன். ஆனாலும் இதுக்கு ஆதரவானவர்கள் சிறுபான்மையினர்தான். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

“ஒரு விடயத்தை ஊடறுத்து உண்மைத் தன்மையை உணர்வது என்பது கடினமானது. அந்த தன்மை இல்லாது போனால் அரசியல் பிழைத்து எதிர்கால தலைமுறையை சிக்கலில் கொண்டுபோய் விடும்.”

ஜயோடா இது ரொம்ப ஓவர்🥰 ...இப்படி தங்களை தாங்கள் புகழ்ந்த ஆட்கள் எல்லாம் காணாமற் போனதை யாழிலேயே பார்த்து கொண்டு இருக்கிறன் ...கஜேந்திரகுமார் இப்ப எங்கே இருக்கார்? என்ன செய்து கொண்டு இருக்கார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

போட்டு தள்ளியது புலிகள் இல்லை.

பிரதமர் பதவி அவருக்கு கொடுக்கப்படும் என்று, மகிந்தா செய்த வேலை.

காமினி, லலித் கொலைகள், பிரேமதாச செய்தது.

புலிகளை எதனையுமே ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ இல்லை. ராஜிவ் கொலை உள்பட.

புலிகள் இராணுவ நடவடிக்கை அல்லாத கொலைகளை உரிமை கோருவதில்லை! அதன் விளக்கம் அது அவர்கள் செய்யவில்லை என்பதால் அல்ல! எதிர் காலத்தில் அதில் ஈடுபட்டதாக யாரும் கைதானாலும் கூட சாட்சியங்களாக இந்த அறிக்கைகள் இருக்கக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை. 
ஆனால், கொலை செய்தவன், செய்தவனைத் தெரிந்தவன் என்று ஆட்கள் இருக்கும் போது இப்படியான புலிகள் செய்யவில்லை என்ற அம்புலிமாமாக் கதைகள் ஒரு சிலரிடம் மட்டுமே பிரபலமாகும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

 

மருதர் இதை எழுதும் போது உங்களுக்கே சிரிப்பு வரலையா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

அவரது வளர்ச்சி பொறுக்காமல் சீமான் தான் போட்டுத் தள்ளினார் என்று அந் நேரம்  எல்லோரும் கதைத்தார்கள் 

 

அது வ‌த‌ந்தி அக்கா ,
அண்ண‌ன் சீமானுக்கு மிக‌வும் வேண்ட ப‌ட்ட‌வ‌ர் அண்ண‌ன் சீமானோடு ஒன்னா ப‌ய‌ணித்த‌வ‌ர் , இந்த‌ உண்மை ச‌ம்ப‌வ‌ம் என‌க்கு ந‌ல்லா தெரியும் ,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள்! ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வடக்கிற்கு 50 ஆயிரம் சோலர் பவர் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி வீட்டுதிட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா, கண்டி வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்த பின்பும் எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என்பன கனவு போன்றே இருந்தது. இது சம்மந்தமாக பல அமைச்சர்கள் செயற்பட்டிருந்தாலும் அது பூரணப்படுத்தப்படவில்லை. எமது மாவட்டத்தின் வீட்டுத் திட்ட தேவை, உட்கட்டமைப்பு வசதிகளின் தேவை, வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கூறி வந்தோம். இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது போன்று தற்போது வடக்கிற்கு சோலர் பவர் வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பயனாளிகளுக்கு 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டம் இதன் மூலம் கிடைக்கவுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு 25 ஆயிரம் வீட்டுத்திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 50 ஆயிரம் வீட்டுத்திட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் எடுக்கப்பட்ட தகவல்கள் 25 ஆயிரத்தையும் கடந்து சென்றதால் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கில் வீடற்ற எவரும் இனி இருக்க முடியாது. உப குடும்பங்கள் அனைவருக்குமே இதன் மூலம் வீட்டுத்திட்டம் கிடைக்கும். வீட்டுத்திட்டம் மட்டுமன்றி எமது மாவட்ட மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் மக்களிடம் இருந்தும், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் ஊடாகவும் தகவல்களைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பொது இடங்கள் மற்றும் மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று, மக்களது குடிநீர் இணைப்புக்களை வழங்க முதல் கட்டமாக வவுனியா மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும், மன்னார் மாவட்டத்திற்கு 1,500 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்பு மன்னார் மாவட்டத்திற்கு 2,500 உம், வவுனியா மாவட்டத்திற்கு 1,500 உம், முலலைத்தீவு மாவட்டத்திற்கு 1,500 உம் வழங்கப்பட்டு வருகின்றது. கிராம மட்ட தேவைகள் குறித்து நாங்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்து விசேட நிதியைப் பெற்று இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சில கிராம மக்களுக்கு இத் தகவல்கள் கிடைக்கவில்லை. மின்சாரம், நீர் இணைப்பு இல்லாதவர்கள் உங்கள் பகுதி உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொள்ளவும். அல்லது எமக்கு தெரியப்படுத்தவும். பொது வீதிகளுக்கான மின்சார இணைப்பும் வழங்கப்படுகிறது. எமது மக்களுக்கு எது தேவையோ அதனை செய்வதற்கு ஜனாதிபதி அவர்கள் தயதராக இருக்கின்றார். கேட்டுப் பெற வேண்டியது எங்களது பொறுப்பு. மாவட்ட மட்டத்தில் 1,000 பேருக்கு பாரிய வாகனங்களை இயக்குவதற்கான பயற்சி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரம்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது அமைப்புக்களும் இளைஞர்களை வழிப்படுத்தி அவர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெறப் கூடிய நிலையை உருக்வாக்க முன்வர வேண்டும். இதேபோன்று, பல கிராமங்களில் காணிகள் வன இலாகா சார்ந்த பிரச்சனையாக இருக்கிறது. அதனை விடுவிக்க தொடர் நடைவடிக்கை இடம்பெறுகின்றது. நான் கடந்த காலங்களில் 3 ஜனாதிபதிகளுடன் பணியாற்றி இருக்கின்றேன். ஆனால் கடந்த காலத்தில் இருந்த இரு ஜனாதிபதிகள் வனஇலாகாவிடம் இருந்து காணிகளை விடுவிக்க பூரண கரிசணை காட்டவில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதனை விடுவிக்க துரித நடவடிக்கை எடுத்துள்ளார். தேசிய ரீதியில் காணி விடுவிப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இரண்டு மாதங்களில் பல காணிகள் விடுவிக்கப்படும். விடுவிப்பதற்கான காணிகளின் விபரம் வந்துள்ளது. இதன் மூலம் காணி இல்லாத மக்களுக்கு அதே கிராம்களில் காணிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்டபட்டுள்ளது. அவர்களது கிராமத்தில் காணி இல்லாதுவிடின் அயல் கிராமத்தில் காணியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பதற்கான நிலம் மற்றும் விவசாய நிலம் என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலர் சில பகுதிகளில் ஏக்கர் கணக்கில் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்துள்ளார்கள். அதனை மீட்டு பொது மக்களக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் பொதுவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிலர் தற்போது அந்த அமைச்சர், அந்த எம்.பி என சொல்லி காணி எடுத்து தருவதாக கிராமங்களில் பணம் பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பல முகவர்கள் நிதி பெறுவதாக கூறப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது பெயரையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டால் முறைப்பாடு செய்யுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். அரசசேவைகளை வழங்குவதற்கு எந்தப் பணமும் அறவிடப்பட முடியாது. நாங்கள் மக்களது சேவையாளர்கள். மக்களிடம் பணம் பெற்று தான் அவர்களுக்கு சேவை வழங்கும் கலாசாரம் இல்லை. வன்னியில் அவ்வாறு நடைபெறக் கூடாது. ஒரு காணிக்கு 15 நாளில் ஆவணம் தருவதாகவும் பணம் பெறப்படுகிறது. வவுனியா ஊடகவியலாளர்கள் தமது குடியிருப்பு காணி பெற எத்தனை வருடமாக போராடுகிறார்கள். ஆனால் 15 நாளில் ஆவணத்துடன் காணி எவ்வாறு சாத்தியம். இவ்வாறு பொய்யான கதைக்களைக் கூறி பாமர மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றுகிறார்கள். நாமும் காணிப் பிரச்சனை, குளம் பிரச்சனை என அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு வருகின்றோம். போய் பார்வையிடுவதும் கதைப்பதும் தான் முகப் புத்தகங்களில் வருகிறது. அதற்கு என்ன நடந்தது என்பது பிறகு வருவதில்லை. அதற்கு என்ன நடந்தது என்ற தகவலைக் கேளுங்கள். மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஒரு நபர் 70 ஏக்கர் காணிகளை பிடித்து வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு கொடுத்துள்ளதாக அமைப்பு ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது. இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல், எம்மை சந்திக்கும் பலர் எம்முடன் நின்று புகைப்படம் எடுப்பார்கள். அப்படி எடுத்த ஒருவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் நானும் துணை என கூறாது முறைப்பாடு தாருங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். எம்.பி ஒருவரின் அரசியல் கட்சி பிரதி நிதி பிறிதொரு நபருக்கு காணி கொடுக்க மக்கள் தயார் என பிரதேச செயலாளருக்கு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த மக்களுக்கு அந்த விடயம் தெரியாது. அந்த எம்.பிக்கும் தெரியுமோ தெரியாது. சுடலைக் காணியை கூட பிடித்து கொடுக்கிறார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். காணி மற்றும் வீட்டுத்திட்டம் தொடர்பான விடயங்கள் பிரதேச செயலகத்தில் உள்ளன. அங்கு சென்று பார்வையிட்டு தங்களது விபரங்கள் இல்லையெனில் பதிவு செய்யுங்கள். முகவர்களிடம் பணம் செலுத்தி ஏமாறாது அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருங்கள். காணி ஆவணங்கள் கிடைப்பின் அது நீண்ட ஒரு நடவடிக்கை ஊடாகவே நடைபெறுகிறது. அது ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் பிரதேச செயலகம் முன்னெடுக்கும் நடவடிக்கை. எம்.பி மார் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பெயர் பெறுவதற்காக முகவர்கள் கூறுவது பொய் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.     http://www.samakalam.com/காணி-தருவதாக-யாராவது-பணம/  
    • ”பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் கொலைகளின் உண்மைகளை அறியலாம்” பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த கொலைகளின் உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் கூறுகையில். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே நாம் பலமுறை விவாதித்துள்ளோம். ஆனால் எவ்வளவு தான் விவாதித்தாலும்இ விசாரணைகளை மேற்கொண்டாலும் அது குறித்து திருப்தியடைய முடியாமையினாலேயே இது குறித்து தொடர்ந்தும் விவாதிக்க வேண்டியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பலரும் பாராளுமன்றத்தில் பேசியிருந்தாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருப்பினும் இதன் பின்புலத்தில் இருந்தவர்கள் 2005ஆம் ஆண்டு முதல் நாட்டினுள் செயற்பட்டுக் கொண்டு இருந்துள்ளனர். இது தொடர்பில் நாம் எவ்வளவுதான் எடுத்துரைப்பினும் அதனை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் மீண்டும் சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பிப்பதாக நாம் நேற்று செய்தியொன்றை பார்த்திருந்தோம். காத்தான்குடியில் பள்ளியொன்றினுள் இரண்டு குழுவினர்களுக்கு இடையே இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதாக தமிழ்வின் என்ற நாளிதழிலில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலின் பின்புலத்தில் அதாவது இந்த தாக்குதலை அடிப்படையாக கொண்டே இலங்கையில் புலனாய்வு துறையினால் செயற்படுத்தப்பட்ட டிரிபோலி பிளாட்டூன் (Tripoli Platoon) இது செனல்-4 செய்தியிலும் வெளியாகியிருந்தது. அதாவது டிரிபோலி பிளாட்டூன் என்பது மூன்று கோணங்கள். அந்த மூன்று கோணங்களாவது தமிழ் சிங்களம் முஸ்லிம். இவர்களை கொண்ட புலனாய்வு துறையுடன் தொடர்புடைய குழுவே இதனை 2004இ 2005 காலப்பகுதியில் ஆரம்பித்திருந்தது. 2004 என்பதைவிட 2005 என்பதே உகந்ததாக இருக்கும். 2004இ 2005 காலப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெறும்போது இதனுடன் பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் தொடர்புபட்டிருந்தார். பொலிஸ் பாஹிஸ் என்பவர் தற்போது பிரித்தானியாவில் இருக்கிறார். அவர் தற்போதும் இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரியாக செயற்பட்டு வருகிறார். இதனை நாம் சகல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டுள்ளோம். அவரது முகப்புத்தக கணக்கு உள்ளிட்ட அனைத்தையும் நாம் இதற்கு முன்னரே வெளிப்படுத்தியுள்ளோம். பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் 2004இல் ‘இமானிய நெஞ்சங்கள்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். இது இஸ்லாமிய அல்லது முஸ்லிம் சமூகம் சார்ந்த அமைப்பு இல்லை. இது இலங்கை புலனாய்வு துறையின் செயற்பாடாகும். நாட்டினுள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த இமானிய நெஞ்சங்கள் என்ற அமைப்பு 2004, 2005 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. பொலிஸ் பாஹிஸ், ஆர்மி மொஹிதீன் கலீல் ஆகிய மூவரே இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடையவர்கள். ரத்ன தேரரும் இந்த ஆர்மி மொஹிதீன் குறித்து நேற்று கதைத்திருந்தார்;. இந்த கலீல் என்ற நபர் 2005 டிசம்பர் மாதம் 25ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் குற்றவாளியாவார். மேலும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கஜன் மாமா என்ற ஒருவர் கலீல், பிரதீப் மாஸ்டர் ஆகியோரும் இந்த வழக்கில் தொடர்புபட்டவர்கள் ஆவர். கலீல் என்பவர் இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடைய நபராவார். இவரும் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் தொடர்புபட்டு 2005ஆம் ஆண்டு சிறைக்கு சென்று 2020ஆம் ஆண்டு கோட்டாபய அரசாங்கத்தில் விடுதலையாகியிருக்கிறார். இது எவ்வாறு இடம்பெற்றது என்றால் புலனாய்வு துறைக்கு தேவையான இரண்டு மூன்று கொலை சம்பவங்களை அரங்கேற்றுவதற்கு இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் மேற்கொள்ளும் பிற கொலை சம்பவங்கள் குறித்து ஆராய்வதில்லை. இதற்கு உதாரணமாக ஒரு சிலவற்றை கூறுகின்றேன். 2006 ஜனவரி 31ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு டி.ஆர்.ஓ. என்ற அமைப்பிலிருந்து சென்றவர்களை வெள்ளை வானில் கடத்திச் செல்கின்றனர். இலங்கையில் வெள்ளை வான் கலாசாரம் ஆரம்பமாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெள்ளை வானில் கடத்திச் சென்று பெண்கள் உள்ளிட்டோரை துஸ்பியோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்கின்றனர். அதில் தனுஸ்கோடி பிரிமினி கணக்காளர் சண்முகநாதன் சுவேந்திரன்இ தப்பிராஜா வசந்தராஜா கைலாயப்பிள்ளை ரவீந்திரன் உள்ளிட்ட பத்து பேர் இருந்தனர். இது குறித்து வெளியான செய்தியொன்றை இங்கு முன்வைக்கிறேன் ‘கிழக்கின் உறவுகளை கடத்தி கொலை செய்த’ பாராளுமன்ற உறுப்பினரின் பெயரும் படமும் இதில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கபடவில்லை. 2006 டிசம்பர் 15ஆம் திகதி கிழக்கு மாகாண முன்னாள் துணைவேந்தர் எஸ்.ரவீந்திரன் என்பவர் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் வைத்து கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதற்கு முன்னர் கருணா பிள்ளையான் குழுவினரால் பாலசுகுமாரன் என்ற முன்னாள் பேராசிரியர் கடத்தப்பட்டிருந்ததுடன் துணை வேந்தரையும் அப்தவியிலிருந்து விலகுமாறு எச்சரிக்கப்பட்டிருந்தது. அவர் அப்பதவியிலிருந்து விலகாமையினாலேயே அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சுந்தரராசா எனும் நபர் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இவை அனைத்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இடம்பெறுகின்றன. இதனை செய்தது யார் என்பது குறித்து இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் குற்றம் சாட்டப்படுபவர்கள் இந்த பாராளுமன்றத்தினுள்ளும் உள்ளனர். இந்த 2007ஆம் ஆண்டில் கடத்தப்பட்டவரின் மகள் 2009ஆம் ஆண்டு கொலை செய்யப்படுகிறார் அதற்று முன்னர் 2009 மார்ச் 11ஆம் திகதி திருகோணமலை புனித மேரிஸ் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வந்த வர்ஷா ஜுட் ரிஜி என்ற ஆறு வயதுடைய முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுமி கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய் கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்பட்ட பின்னர் மார்ச் மாதம் 13ஆம் திகதி கண்கள் வாய் கைகள் கட்டப்பட்ட நிலையில் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்படுகிறது. ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று இவ்வாறு கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்புலத்தில் செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்ட மேர்வின் என்ற நபர் கைது செய்யப்படுகிறார். அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இங்கு இருக்கிறார். இவருடன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட உப செயலளார் வரதராஜா ஜனார்த்தனன் இவர் நிசாந்தன் மற்றும் ரெஜினோல்ட் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றனர். அப்போது பிரதி அமைச்சராகவிருந்த கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரனின் ஊடக பேச்சாளர் இனியபாரதி இக்கொலையை பிள்ளையான குழுவினரே மேற்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு பிள்ளையானின் ஊடக பேச்சாளரான அசாத் மௌலானா இல்லை அதனை செய்தது கருணா என்று கூறுகின்றார். அதாவது அசாத் மௌலானாவும் இதில் தொடர்புபட்டிருக்கிறார். சில நாட்களின் பின்னர் இந்த நால்வரும் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ புலனாய்வு பிரிவினரால்; சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அதாவது அந்த கொலையுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்ட நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஒருவர் சைனட் உட்கொண்டு உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஏனைய இருவரும் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். கருணாவின் ஊடக பேச்சாளர் பிள்ளையான் செய்ததாக கூறுகிறார். பிள்ளையானின் ஊடக பேச்சாளர் கருணா செய்ததாக கூறுகிறார். இவ்வாறிருக்க சந்தேகநபர்கள் நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருக்கும்போது கொல்லப்படுகின்றனர். டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்பை பாருங்கள். டிரிபோலி பிளாட்டூன் தேவைக்கேற்ப அவர்களுக்கு தேவையானவர்களை கொலை செய்தவுடன் அதிலுள்ள சில உறுப்பினர்கள் கப்பம் பெறுவதற்கு ஆறு வயது குழந்தை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையை மூடி மறைப்பதற்கு இராணுவம் உதவுகின்றது. அதன் தொடர்பை நன்கு புரிந்துக் கொள்ளுங்கள். 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சந்திரராசா எனும் நபர் கொலை செய்யப்படுகின்றார். இவரது கொலை தொடர்பில் என்னிடம் அதிக தகவல்கள் இல்லை. ஆனால் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ;ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த அவரது மகளான தனுசியா சதீஸ்குமார் என்ற எட்டு வயது சிறுமி 28.04.2009 கட்டத்தப்பட்ட நிலையில் பின்னர் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய்க்காகவே இச்சிறுமி கட்டத்தப்பட்டுள்ளார். இச்சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு மட்டக்களப்பில் 25 மாணவர்கள் தொடர்ந்து ஒன்பது நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தின் பின்னர் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் கந்தசாமி ரதீஸ்குமார் மற்றையவர் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் புலனாய்வுத்துறை பிரதானி திவ்யசீலன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் இருவரும் இராணுவ புலனாய்வுத்துறையின் அப்போதைய கேர்னல் நிஜாப் முதலிப்-இன் கீழ் பணியாற்றியவர்கள் ஆவர். இந்த கைது செய்யப்பட்ட இருவர் உள்ளிட்ட நால்வரும் ஊரணி அல்லது கல்வியன்காடு பகுதியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இது இரண்டாவது உதாரணம். டிரிபோலி பிளாட்டூனுடன் அரசாங்கத்திற்கு தேவையான கொலைகளை அரங்கேற்றுவதால் அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதால் அவர்கள் கொள்ளையடிக்கின்றனர் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு இடமளிக்கின்றனர். அவர்கள் சிக்கிக் கொண்ட பின்னர் அரசாங்கம் தலையீடு செய்து அவர்களை காப்பாற்றுவதற்காக இந்த மரணங்களை மறைத்துள்ளனர். இவ்வாறான உதாரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். மேலும் இவ்வாறு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் எனும் போது லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட மாத்திரமே கொலை செய்யப்பட்டவர்கள் என பலரும் எண்ணிக் கொண்டிருக்கக் கூடும். வர்ஷா ஜுட் ரிஜி கொலையின் போது பிள்ளையானின் அப்போதைய ஊடக பேச்சாளராக இருந்த அசாத் மௌலானா அக்கொலை கருணா குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதே அசாத் மௌலானா மீண்டும் கூறியிருக்கிறார். லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட ஆகியோரின் கொலை தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். நடேசன் என்ற ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். தம்பையா என்ற பேராசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார். கிஷேர் என்ற மிகவும் திறமையான விளையாட்டு அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் என்ன தொடர்பு என சிலருக்கு கேள்வி எழலாம். நான் அதற்கு சிறந்த உதாரணமொன்றை தருகிறேன். 2008 மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் 2019 கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டு ஸ்திரமற்ற நிலையினூடாக ஆட்சிக்கு வருவதற்கு கோட்டாபயவிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தேவைப்பட்டதை போன்று 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தேர்தலுக்கு முன்னர் பிள்ளையான் மற்றும் அம்மாவட்டத்தில் அப்போதிருந்த அரசியல்வாதிகளுக்கு ராஜபக்ஷ ஆட்சியை நிறுவுவதற்கு ஏதேனுமொரு முறைமை தேவைப்பட்டது. அது ஒரு பரீட்சார்த்த நடவடிக்கை. மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்தில் பரிசீலிக்கப்பட்ட விடயமே நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டது. 2008இல் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உறுப்பினரான சாந்தன் என்பவர் பட்டப்பகலில் சப்பாத்து கடையொன்றினுள் வைத்து முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தும் இருவரினால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். அந்த இருவரில் ஒருவரின் பெயர் ஹுசைன் மற்றையவர் நான் ஏற்கனவே குறிப்பிட்ட பொலிஸ் ஃபாஹிஸ் என்பவர். சாந்தன் எனும் நபர் கொல்லப்பட்டு ஒரு வாரத்திற்குள் தமிழ் குழுவொன்று காத்தான்குடிக்கு சென்று அங்கு 13 பேர் கொல்லப்படுகின்றனர். இதனூடாக காத்தான்குடி கிழக்கு மாகாணத்தில் ஸ்திரமற்ற நிலையொன்று ஏற்பட்டது. இது 2008 மாகாணசபை தேர்தலை அடிப்படையாகக் கொண்டு தேர்தலுக்கு முன்னதாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இதன் பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல் வெளியானவுடன் எமக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன. பிள்ளையான் என்ற நபரை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு காரணம் பிள்ளையான் வாயை திறந்தால் அனைவருக்கும் பிரச்சினையாகிவிடும் என பயந்துவிட்டனர். அதனாலே அவரை விடுதலை செய்ய நேரிட்டது. 2018 வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த முறையான அறிக்கை வெளியிட்ட புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் என்னை சந்தித்தார். அவர் கூறினார் நாம் இதனை கூறினோம். ஆனால் எமது புலனாய்வுத்துறை அறிக்கையை புறக்கணித்துவிட்டனர். 2019இல் தாளங்குடாவில் சஹ்ரானின் தாக்குதலுக்கு முன்னதாக இடம்பெற்ற தாக்குதல் குறித்து நாம் எடுத்துரைத்தோம். அந்த புலனாய்வுத்துறை அறிக்கையை மறைத்துவிட்டனர். பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வந்தவுடன் 2008இல் சாந்தன் என்ற நபரை மட்டக்களப்பில் வைத்து கொலை செய்த ஹுசைன் என்ற நபரின் தற்போதைய பெயர் ரவீந்திரன் குகன். அவரது அடையாள அட்டை இலக்கம் இங்குள்ளது. அவர் மட்டக்களப்பில் உள்ளார். ஆனால் அவர் தற்போது ஹுசைன் என்ற பெயரிலா அல்லது ரவீந்திரன் குகன் என்ற பெயரில் உள்ளாரா என்பது தெரியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை மேற்கொண்டிருந்தால் தகவல்களை வெளியிட இவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் தற்போது இவை அனைத்தையும் மூடிமறைத்துள்ளனர். 2005ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் கொலையுடன் தொடர்புடைய பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்தார். மரண விசாரணை முன்னெடுக்கயேனும் இடமளிக்காமல் அவரது சடலத்தை எரித்துவிட்டனர். அதனால் நான் ஜனாபதியிடம் கோருவதுஇ இந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரை காப்பாற்றுவதற்காக உங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்துங்கள். விசாரணை நடத்தினால் இந்த சபையில் மூன்று நாட்களை நாம் வீணாக்க தேவையில்லை. இந்த ஒரு நபரை கைது செய்து விசாரணை நடத்தினால் அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ள முடியும். 2005 முதல் இந்த சம்பவங்களுடன் அவர் தொடர்புபட்டுள்ளார். அந்த தொடர்புகளை கண்டறிய முடியும். ஜனாதிபதி தேர்தல் குறித்து அஞ்ச வேண்டாம். அவர்களிடம் வெறும் 50 ஆயிரம் வாக்குகள் மாத்திரமே இருந்தது. அதுவும் கடந்த முறை இருந்த 50 ஆயிரம் தற்போது 20 ஆயிரமாக குறைந்திருக்கும். அதனால் இது குறித்து சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு நான் ஆணித்தரமாக கேட்டுக் கொள்கிறோம். எதிர் வரும் காலங்களில் ஏற்பட இருக்கும் அசம்பாவிதங்களுக்கும் முற்றுப்புள்ளி வையுங்கள். மக்களை காப்பாற்றுங்கள். -(     http://www.samakalam.com/பிள்ளையானை-கைது-செய்து-வ/
    • வடிவேலு மூட்டைப் பூச்சி அடிக்கும் மிசின் கண்டு பிடித்த மாதிரி இவர்களும் ஒவ்வொரு குரங்காய் பிடித்து வைத்து பொருத்துவார்கள் போல.........!   😁
    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.