Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Featured Replies

21 hours ago, Nathamuni said:

உங்கள் கருத்துடன் உடன் பட முடியவில்லை.

இந்திய அரசும், அதன் ராணுவமும் எமது இளைஞர்களை உசுப்பேத்தி ஆயுதம் கொடுத்து, முள்ளிவாய்க்கால் அழிவு வரை கொண்டு வந்து விட்டது.

அந்த நிலைமைக்கு காரணமானவர்களில், கருணாநிதியும் ஒருவர் என்று எமக்கு தெரியும்.

அதே நாட்டின் ஒருவர், குற்ற உணர்வில் எதுவும் பேசினால், அவர்கள் எம்மை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்று போட்டு தாக்குவது.

செய்தார்கள், வைகோவும், திருமாவும், திருமுருகனும். ஏன் லண்டன் தமிழர்கள், பாலுவையும், ஸ்டாலினையும் கூட லண்டன் அழைத்து உபசரித்து பேசினார்கள்.

நம்புவர்கள் நம்பி விட்டு போகட்டும்.... நம்பாதவர்கள் நம்பாமல் போகட்டும்... அது அவரவர் உரிமை.

அதுக்காக, உங்கள் விருப்பு, வெறுப்புகளை அடுத்தவர்கள் மீது திணிக்க வேண்டாமே.

ஒரு கோஸ்ட்டி, கூட்டமைப்பினை சாடுகின்றது. இன்னோரு கோஸ்ட்டி கஜேந்திரகுமார் பின்னால் நிக்கும்.

மேலும் ஒரு கோஸ்ட்டி டக்லஸ் தான் பிதாமகன் என்று சொல்லும்.

கருணாவை விரும்பும் கோஸ்ட்டியோ, அவர் மூலமாக மகிந்தவை வளைத்து அலுவல் பார்க்கலாமே என்று சொல்லும்.

இன்னும் ஒரு கோஸ்ட்டியோ, சர்வதேசத்தினை நம்புவோம் என்று சொல்லும்.

அது அவரவர் விருப்பு வெறுப்பு. அனைவைரையும் நமது விருப்பு வெறுப்புக்குள் கொண்டுவரும் வேலை, ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத வேலை.

கிருபனுக்கும், நந்தனுக்கும், உங்களுக்கும் பிடிக்கவில்லை.

பையனுக்கு, நெடுகருக்கு, இசைக்கு, ஈழப்பிரியருக்கு, குமாரசாமியாருக்கு பிடிக்கிறது.

ஆனால், வேண்டுமென்றே, பதிவினை போட்டு, அடுத்தவர்கள் பைத்தியக்காரர்கள், நாம் விண்ணாதி விண்ணர்கள் என்று காட்டிக்கொள்வதில் ஏதோ பெருமை. 🤧

ஏதோ மனதில் தோன்றியதை எழுதினேன். யாரும் தொப்பியை எடுத்துக் கொள்ள வேண்டாம். 🥺

நாதமுனி, மேற்கண்ட உங்கள் கருத்தின் மூலம் நீங்கள் சொல்ல வருவது.

  1. எமது தமிழ் இயக்கங்கள் சொந்த அறிவு சற்றும் இல்லாமல் இந்திய அரசின் உசுப்பேற்றல்களாலேயே ஆயுதம் ஏந்தி போராடினர். இக்கருத்து மூலம் சுமந்திரன் ஆயுதம.போராட்டம் குறித்து கூறிய கருத்துகளை நீங்கள் முழுமையாக ஆதரிக்கிறீர்கள். (சுமந்திரன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட சுமந்திரனுக்கு ஆதரவான இந்த கருத்துக்கும் விருப்பு தெரிவித்திருப்பது வேடிக்கை)
  2. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு அங்கு வாழும் சட்டபூர்வ பிரஜைகள் தமது விருப்பபடி யாருக்கும் ஆதரவு அளிக்க முழு உரிமையும் உள்ளது.  அது அவரவர் விருப்பு வெறுப்பு. அவர்களை துரோகிகள் என்று திட்ட ஈழத்தமிழர் எவருக்கும் உரிமை இல்லை.  
  • Replies 777
  • Views 64k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

 

எனவே தமிழகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டினதும் ஆதரவு இன்றி ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடிவும் வராது. அது இப்போது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள்தான். 

 

என்ன ஒரு ஏமாளியக இருக்கின்றீர்கள் 🤣. இதுவரை இவர்கள் செய்தவை தெரியாதா?

இவர்கள்  கிந்திய றோவின் வழிநடத்தலில் தலை ஆட்டும் பொம்மைகள். ஜெயா கூட ஒன்றும் செய்யமுடியவில்லை, இப்ப இருப்பவர்கள் கை பாவைகள். 

இவர்கள் தானாக ஓரங்கட்டப்படுவார்கள். இன்றைய இளைஞர்கள் நல்ல தெளிவுடன் தமிழ் இன உணர்வுடன் இருக்கின்றார்கள். எங்களில் சிலர்தான் நம்பிக்கையிழந்து நிற்கின்றோம்

 

 

1 hour ago, கிருபன் said:

நாம் தமிழரை அரசு கட்டிலில் ஏற்றிப் பார்க்க புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் செய்யும் ‘புரஜெக்ட்’, செந்தமிழன் சீமானின்  “வாய்” இருக்குமட்டும் வெற்றியளிக்காது😁

கிருபன் ,புலம் பெயர் தமிழரில் ஒரு சிறு பகுதியினர் செய்யும் அந்த “புரஜேக்ட்” நாம் தமிழரை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கல்ல.  நீங்கள் கூறிய அந்த “ சீமானின் வாய்”  என்ற Freetime  Entertainment object க்கான கூலியே. அது இல்லை என்றால்  நாம் தமிழர் வயசுக்கு வந்தால் என்ன வராமல் போனால் என்ன. 😂

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, tulpen said:

நாதமுனி, மேற்கண்ட உங்கள் கருத்தின் மூலம் நீங்கள் சொல்ல வருவது.

  1. எமது தமிழ் இயக்கங்கள் சொந்த அறிவு சற்றும் இல்லாமல் இந்திய அரசின் உசுப்பேற்றல்களாலேயே ஆயுதம் ஏந்தி போராடினர். இக்கருத்து மூலம் சுமந்திரன் ஆயுதம.போராட்டம் குறித்து கூறிய கருத்துகளை நீங்கள் முழுமையாக ஆதரிக்கிறீர்கள். (சுமந்திரன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட சுமந்திரனுக்கு ஆதரவான இந்த கருத்துக்கும் விருப்பு தெரிவித்திருப்பது வேடிக்கை)
  2. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு அங்கு வாழும் சட்டபூர்வ பிரஜைகள் தமது விருப்பபடி யாருக்கும் ஆதரவு அளிக்க முழு உரிமையும் உள்ளது.  அது அவரவர் விருப்பு வெறுப்பு. அவர்களை துரோகிகள் என்று திட்ட ஈழத்தமிழர் எவருக்கும் உரிமை இல்லை.  

ஒரு கேள்வியுமே விளங்கேல்ல.

இவ்வளவு மொக்கனா இருக்கிறனே? 🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, உடையார் said:

என்ன ஒரு ஏமாளியக இருக்கின்றீர்கள் 🤣. இதுவரை இவர்கள் செய்தவை தெரியாதா?

இவர்கள்  கிந்திய றோவின் வழிநடத்தலில் தலை ஆட்டும் பொம்மைகள். ஜெயா கூட ஒன்றும் செய்யமுடியவில்லை, இப்ப இருப்பவர்கள் கை பாவைகள். 

இவர்கள் தானாக ஓரங்கட்டப்படுவார்கள். இன்றைய இளைஞர்கள் நல்ல தெளிவுடன் தமிழ் இன உணர்வுடன் இருக்கின்றார்கள். எங்களில் சிலர்தான் நம்பிக்கையிழந்து நிற்கின்றோம்

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் குறைந்தது 60% சனங்களின் ஆதரவைக் கொண்டிருப்பவர்கள்.  அரசியல் பலமிக்கவர்கள். ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு 80களில் இவர்களின் ஆதரவு இருந்ததால்தான் போராட்டமே வளர்ந்தது. ஆதரவு ஏன் இல்லாமல் போனது என்பதை நான் திரும்பவும் சொல்லத் தேவையில்லை என நினைக்கின்றேன்.😎

திராவிடக் கட்சிகளை ஓரங்கட்டலாம் என்று காங்கிரஸ், பா.ஜ.க. மனப்பால் குடிப்பதுபோல அண்ணன் சீமானின் தம்பிகளும் மனப்பால் குடிக்கலாம். தப்பில்லை. ஆனால் நீங்கள் சொல்வதுபோல இளைஞர்கள் தெளிவாக இருப்பதனால்தான் திராவிடக்கட்சிகளை ஓரம்கட்ட முடியாமல் இருக்கின்றது😁

ஈழத் தமிழர்களுக்கு இரண்டு தெரிவுகள் இருக்கின்றன.

1. கோத்தாவுடன் இணைந்து சிங்கள இனத்துடன் ஐக்கியமாதல்

2. சமூக அக்கறையும், இராஜதந்திரமும் உள்ள ஓர் புதிய அரசியல் தலைமையை தாயகத்தில் கட்டியமைத்து, பின்தளமாக பெரும்பான்மை தமிழக மக்களின் ஆதரவுள்ள கட்சிகளினதும், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களினதும் துணையுடன் ஒரு நீதியான தீர்வை தமிழர்களுக்கு பெற்றுக்கொள்ளல்.

இரண்டாவதைச் செய்ய நம்பிக்கையும், பொறுமையையும் இல்லாமல்தான் சீமான் போன்றவர்களின் பின்னால் சென்று முதலாவது தெரிவை விரைவுபடுத்துகின்றனர்.

 

இந்தியாவை எதிர்த்தல்’ என்பது புலம்பெயர் சூழலில் உள்ள பலரிடம் இருக்கும் ஒரு மனேபாவம். இதற்கு அவர்களின் வாழ்நிலையும் ஒரு காரணம். அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறிய பின்னர் – தெற்காசிய பிராந்தியத்திலிருந்தே வெளியேறிவிட்ட உணர்வை பெற்றுவிடுகின்றனர். இதனால் அவர்களால் இலகுவாக இந்திய எதிர்புணர்வுக்குள் தங்களை இணைத்துக் கொள்ள முடிகின்றது. முக்கியமாக ஒரு குறிப்பிட்ட தமிழ் அரசியல் தரப்பினர் மத்தியில் ‘றோ’ எதிர்ப்பு என்பது தீவிரமாக இருக்கின்றது. வடக்கிலும் புலம்பெயர் சமூகத்தினர் மத்தியிலும் ‘றோ எதிர்ப்பாளர்கள்’ என்னும் ஒரு பிரிவினர் இருந்து கொண்டே இருக்கின்றனர். பெரும்பாலும் இது ஒரு உணர்ச்சிவசப்பட்ட அரசியல் நிலையாகும் – மேலும் இவ்வாறு பேசுகின்ற போது தாங்கள் அறிவுபூர்வமாக பேசுவதாகவும் சிலர் எண்ணிக் கொள்ளக் கூடும்

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் குறைந்தது 60% சனங்களின் ஆதரவைக் கொண்டிருப்பவர்கள்.  அரசியல் பலமிக்கவர்கள். ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு 80களில் இவர்களின் ஆதரவு இருந்ததால்தான் போராட்டமே வளர்ந்தது. ஆதரவு ஏன் இல்லாமல் போனது என்பதை நான் திரும்பவும் சொல்லத் தேவையில்லை என நினைக்கின்றேன்.😎

திராவிடக் கட்சிகளை ஓரங்கட்டலாம் என்று காங்கிரஸ், பா.ஜ.க. மனப்பால் குடிப்பதுபோல அண்ணன் சீமானின் தம்பிகளும் மனப்பால் குடிக்கலாம். தப்பில்லை. ஆனால் நீங்கள் சொல்வதுபோல இளைஞர்கள் தெளிவாக இருப்பதனால்தான் திராவிடக்கட்சிகளை ஓரம்கட்ட முடியாமல் இருக்கின்றது😁

ஈழத் தமிழர்களுக்கு இரண்டு தெரிவுகள் இருக்கின்றன.

1. கோத்தாவுடன் இணைந்து சிங்கள இனத்துடன் ஐக்கியமாதல்

2. சமூக அக்கறையும், இராஜதந்திரமும் உள்ள ஓர் புதிய அரசியல் தலைமையை தாயகத்தில் கட்டியமைத்து, பின்தளமாக பெரும்பான்மை தமிழக மக்களின் ஆதரவுள்ள கட்சிகளினதும், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களினதும் துணையுடன் ஒரு நீதியான தீர்வை தமிழர்களுக்கு பெற்றுக்கொள்ளல்.

இரண்டாவதைச் செய்ய நம்பிக்கையும், பொறுமையையும் இல்லாமல்தான் சீமான் போன்றவர்களின் பின்னால் சென்று முதலாவது தெரிவை விரைவுபடுத்துகின்றனர்.

 

இந்தியாவை எதிர்த்தல்’ என்பது புலம்பெயர் சூழலில் உள்ள பலரிடம் இருக்கும் ஒரு மனேபாவம். இதற்கு அவர்களின் வாழ்நிலையும் ஒரு காரணம். அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறிய பின்னர் – தெற்காசிய பிராந்தியத்திலிருந்தே வெளியேறிவிட்ட உணர்வை பெற்றுவிடுகின்றனர். இதனால் அவர்களால் இலகுவாக இந்திய எதிர்புணர்வுக்குள் தங்களை இணைத்துக் கொள்ள முடிகின்றது. முக்கியமாக ஒரு குறிப்பிட்ட தமிழ் அரசியல் தரப்பினர் மத்தியில் ‘றோ’ எதிர்ப்பு என்பது தீவிரமாக இருக்கின்றது. வடக்கிலும் புலம்பெயர் சமூகத்தினர் மத்தியிலும் ‘றோ எதிர்ப்பாளர்கள்’ என்னும் ஒரு பிரிவினர் இருந்து கொண்டே இருக்கின்றனர். பெரும்பாலும் இது ஒரு உணர்ச்சிவசப்பட்ட அரசியல் நிலையாகும் – மேலும் இவ்வாறு பேசுகின்ற போது தாங்கள் அறிவுபூர்வமாக பேசுவதாகவும் சிலர் எண்ணிக் கொள்ளக் கூடும்

 

 

 

 

திராவிட‌ம் ஓட்டுக்கு ம‌க்க‌ளுக்கு ப‌ண‌ம் குடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்க‌ முடியுமா என்று ஒருக்கா கேட்டு சொல்லுங்கோ மிஸ்ர‌ர் கிருப‌ன் அண்ணா ,

திராவிட‌ம் மெது மெதுவாக‌ அழியும் , திராவிட‌ க‌ட்சிக‌ளிட‌ம் ப‌ண‌ம் வேண்டி போட்டு ஓட்டு போட்ட‌ மக்க‌ளே ஒத்து கொள்ளுகின‌ம் , ஆனால் நீங்க‌ள் திராவிட‌ம் அது இது என்று புல‌ம்பிட்டு இருக்கிறீங்க‌ள் /

  • கருத்துக்கள உறவுகள்
ஒருவர் நான் ஆமைக்கறி சாப்பிட்டேன் என்பது இயல்பானது. அதை ஒரு விவாதம் ஆக்குவது அற்பத்தனம்
 
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 27/5/2020 at 10:10, tulpen said:

1991 ல் எம்மவரே அதை கெடுத்து குட்டி சுவராக்கும் வரை அந்த ஆதரவு இருந்த‍து.

கிந்திய ஆமி தமிழ் பெண்களையும் தமிழ் மக்களையும் கொன்று குவித்ததை எல்லாம் மறந்து விட்டீர்கள். ஆனால் தமிழ்நாட்டு கட்சிகளால் மறந்தும் மறைக்கப்படும் அந்த சம்பவங்களை ஒவ்வொரு மேடையிலும் சீமான் காரணங்களை சொல்லி விளங்கப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

20200528-205836.png

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people sitting and outdoor

ஒரு மஞ்சள் பையுடன் சென்னைக்கு வந்த கலைஞர் கருணாநிதி குடும்பம் எப்படி முப்பதாயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தது என்று கேட்க முடியாதவர்கள்,
ஒரு நடிகையாக மூப்பனார் வீட்டுக் கல்யாணத்தில் 600 ருபாவுக்கு டான்ஸ் ஆடிய ஜெயலலிதா எப்படி நாற்பத்தையாயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தார் என்பதை கேட்க முடியாதவர்கள்,
இட்லிக்குள் எப்படி கறி வந்தது என்று சீமானிடம் கேட்கிறார்கள். சரி. பரவாயில்லை.
நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனோவுக்கு 6 பேர் பலியாகியுள்ளார்கள். அதைப் பற்றி அக்கறைப்படாதவர்கள் இட்லிக்குள் கறி வந்தது எப்படி என்று அக்கறை கொள்கின்றனர். சரி. பரவாயில்லை.
திருச்சி சிறைக்குள் ஒரு அயுள் கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சிறையில் இருக்கும் ஏழு தமிழரை விடுதலை செய்யும்படி சீமான் கேட்கிறார்.
ஆனால் இட்லிக்குள் கறி எப்படி வந்தது என்று கவலைப்படுபவர்கள் இந்த ஏழு தமிழர் பற்றியும் ஒரு வரியிலாவது அக்கறை காட்டியிருக்கலாம். சரி. பரவாயில்லை.
தமிழகத்தில் உள்ளவர்கள் தங்கள் அரசியலுக்காக சீமானை கிண்டல் பண்ணுகிறார்கள். ஆனால் ஈழத் தமிழர் சிலர் ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்று புரியவில்லை.
சீமான் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார். அதுமட்டுமல்ல ஒரு ஈழத் தமிழரே ( பிரபாகரன்) தன் தலைவர் என்றும் பகிரங்கமாக கூறுகிறார்.
ஆனாலும் சில ஈழத் தமிழர்கள் அவரை ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. சரி. பரவாயில்லை.
சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களில் ஒருவரான முருகன் தன் தந்தையின் மரண சடங்கை கைத்தொலைபேசி மூலம் பார்க்க அனுமதி கேட்டார். அனுமதிக்கப்படவில்லை.
அடுத்து லண்டனில் இருக்கும் தன் மகளுடன் கைத்தெலைபேசியில் பேசுவதற்கு அனுமதி கேட்டார். அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
சீமான் இந்த ஈழத் தமிழரான முருகனுக்கும் அவர் மகளுக்காகவும் குரல் கொடுக்கிறார். 
ஆனால் சீமானை கிண்டல் செய்யும் ஈழத் தமிழர்கள் இந்திய அரசின் இந்த அடிப்படை மனிதவுரிமை மீறல் பற்றி ஒரு வரிகூட எழுதுவதில்லை. சரி. பரவாயில்லை.
இட்லிக்குள் கறி இருக்கிறதோ இல்லையோ ஆனால் தமிழனுக்குள் இருக்கும் இன உணர்வை இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

ஒரு மஞ்சள் பையுடன் சென்னைக்கு வந்த கலைஞர் கருணாநிதி குடும்பம் எப்படி முப்பதாயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தது என்று கேட்க முடியாதவர்கள்,
ஒரு நடிகையாக மூப்பனார் வீட்டுக் கல்யாணத்தில் 600 ருபாவுக்கு டான்ஸ் ஆடிய ஜெயலலிதா எப்படி நாற்பத்தையாயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தார் என்பதை கேட்க முடியாதவர்கள்,
இட்லிக்குள் எப்படி கறி வந்தது என்று சீமானிடம் கேட்கிறார்கள். சரி. பரவாயில்லை.
நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனோவுக்கு 6 பேர் பலியாகியுள்ளார்கள். அதைப் பற்றி அக்கறைப்படாதவர்கள் இட்லிக்குள் கறி வந்தது எப்படி என்று அக்கறை கொள்கின்றனர். சரி. பரவாயில்லை.
திருச்சி சிறைக்குள் ஒரு அயுள் கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சிறையில் இருக்கும் ஏழு தமிழரை விடுதலை செய்யும்படி சீமான் கேட்கிறார்.
ஆனால் இட்லிக்குள் கறி எப்படி வந்தது என்று கவலைப்படுபவர்கள் இந்த ஏழு தமிழர் பற்றியும் ஒரு வரியிலாவது அக்கறை காட்டியிருக்கலாம். சரி. பரவாயில்லை.
தமிழகத்தில் உள்ளவர்கள் தங்கள் அரசியலுக்காக சீமானை கிண்டல் பண்ணுகிறார்கள். ஆனால் ஈழத் தமிழர் சிலர் ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்று புரியவில்லை.
சீமான் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார். அதுமட்டுமல்ல ஒரு ஈழத் தமிழரே ( பிரபாகரன்) தன் தலைவர் என்றும் பகிரங்கமாக கூறுகிறார்.
ஆனாலும் சில ஈழத் தமிழர்கள் அவரை ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. சரி. பரவாயில்லை.
சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களில் ஒருவரான முருகன் தன் தந்தையின் மரண சடங்கை கைத்தொலைபேசி மூலம் பார்க்க அனுமதி கேட்டார். அனுமதிக்கப்படவில்லை.
அடுத்து லண்டனில் இருக்கும் தன் மகளுடன் கைத்தெலைபேசியில் பேசுவதற்கு அனுமதி கேட்டார். அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
சீமான் இந்த ஈழத் தமிழரான முருகனுக்கும் அவர் மகளுக்காகவும் குரல் கொடுக்கிறார். 
ஆனால் சீமானை கிண்டல் செய்யும் ஈழத் தமிழர்கள் இந்திய அரசின் இந்த அடிப்படை மனிதவுரிமை மீறல் பற்றி ஒரு வரிகூட எழுதுவதில்லை. சரி. பரவாயில்லை.
இட்லிக்குள் கறி இருக்கிறதோ இல்லையோ ஆனால் தமிழனுக்குள் இருக்கும் இன உணர்வை இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

Tholar balan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி முடிஞ்சிட்டுதா :unsure:

இந்த திரியை வாசித்தலில் புரிந்தது;
எங்கட சனத்திற்கு உசுப்பேற்ற யாரும் இருந்து கொண்டேயிருக்கோணும்🙂.
விசிலடித்தான் குஞ்சுகளாகவேயிருந்து பழகிட்டோம்😛.
இணையவனும், நுணாவும் சீமானிற்கு சப்போட் 😄
நிழலி இல்லை 😆
மோகன்🤔

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 28/5/2020 at 10:40, tulpen said:

கிருபன்,  வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றோர் புலிகளுக்கு உண்மையான நிலமையை ஜதாரத்த‍ம் என்ன என்பதை களத்தில் இருந்த புலிகளுக்கு  அவர்களுக்கு புரியும் படி எடுத்து சொல்லி இருக்கலாம் என்பதே எனது கருத்து.  2005 ம் ஆண்டிற்கு பின்னரான பல மாற்றங்கள் என்பது புலிகள் தலைமையில் தான் தங்கி இருந்த‍து. ஆகவே அவர்களுடம் நெருங்கிய தொடர்பில் இருந்த நெடுமாறன் போன்றோர் நிலைமையை எடுத்து கூறியிருக்கலாம். அதன் மூலம் புலிகளின் அரசியல் அணுகு முறையில் மாற்றத்தை கொண்டுவந்து முள்ளிவாய்கால் அவலத்தை தடுத்து நிறுத்தி இருக்க முடியும். மாறாக புலிகளை மேலும் உசுப்பேற்றுவதை தான் அவர்கள் செய்தார்கள்.

(நான் இவ்வாறு கூறுவதன் மூலம் 1980 களில் இருந்து எமது போராட்டத்தில் அக்கறையுடன் அவர்கள் செய்த பல உதவிகளை மறப்பது என்று நினைக்க கூடாது. அவர்களின் உதவகள் என்றும் நன்றியுடனும் மரியாதையுடனும் நினைத்து பார்க்க கூடியவை)

அவயள விடுங்க, நீங்கள் ஏன் எடுத்து சொல்லேல்ல?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

அவயள விடுங்க, நீங்கள் ஏன் எடுத்து சொல்லேல்ல?

இதைப் பற்றி நிறைய எழுதப்பட்டு இருக்கு. மூத்த உறுப்பினராக இருந்த ஈரோஸ் பாலகுமார் (அவரின் வீட்டில் அண்ணன் சீமான் முதன்முதல் உடும்புக்கறி சாப்பிட்டார்!) கூட எடுத்துச் சொல்லமுற்பட்டார். ஆனால் அவரின் சந்திப்பைக்கூட தலைமைப்பீடம் தவிர்த்துவிட்டது. வன்னிக்குப்போய் பெரும் தளபதிகளுடன் படம் எல்லாம் எடுக்கக்கூடிய (அண்மையில் கனடாவில் மரணமடைந்த சுரேஸ் போன்று) செல்வாக்கானவர்களாக இருந்தால் லொபி செய்ய முடிந்திருக்கும். ருல்பன் அப்படியானவர் என்றால் அவராலும் முடியவேயில்லையே!

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, கிருபன் said:

இதைப் பற்றி நிறைய எழுதப்பட்டு இருக்கு. மூத்த உறுப்பினராக இருந்த ஈரோஸ் பாலகுமார் (அவரின் வீட்டில் அண்ணன் சீமான் முதன்முதல் உடும்புக்கறி சாப்பிட்டார்!) கூட எடுத்துச் சொல்லமுற்பட்டார். ஆனால் அவரின் சந்திப்பைக்கூட தலைமைப்பீடம் தவிர்த்துவிட்டது. வன்னிக்குப்போய் பெரும் தளபதிகளுடன் படம் எல்லாம் எடுக்கக்கூடிய (அண்மையில் கனடாவில் மரணமடைந்த சுரேஸ் போன்று) செல்வாக்கானவர்களாக இருந்தால் லொபி செய்ய முடிந்திருக்கும். ருல்பன் அப்படியானவர் என்றால் அவராலும் முடியவேயில்லையே!

ஜி, அப்போ இவருக்கும் புலிகளின் ஆயுத போராட்டத்திற்கும் தொடர்பில்லையா?

இவர் ஐரோப்பாவிற்கு வந்து பிரச்சாராம் செய்தபோது, இடம் பொருள் ஏவல் புரியாமல்  கரும்புலிகளை புகழ்கிறேன் என்று கரும்புலிகளின் நடவடிக்கைகளை  உளறியது தான் மிச்சம்.

இவரும் புதுவையும் கடைசிவரை தனது பிள்ளைகளை போராட்டத்தில் இணைக்கவேயில்லை.... ஆனால் பொதுமக்களை உசுப்பேற்றி இணைத்து விட்டிருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இதைப் பற்றி நிறைய எழுதப்பட்டு இருக்கு. மூத்த உறுப்பினராக இருந்த ஈரோஸ் பாலகுமார் (அவரின் வீட்டில் அண்ணன் சீமான் முதன்முதல் உடும்புக்கறி சாப்பிட்டார்!) கூட எடுத்துச் சொல்லமுற்பட்டார். ஆனால் அவரின் சந்திப்பைக்கூட தலைமைப்பீடம் தவிர்த்துவிட்டது. வன்னிக்குப்போய் பெரும் தளபதிகளுடன் படம் எல்லாம் எடுக்கக்கூடிய (அண்மையில் கனடாவில் மரணமடைந்த சுரேஸ் போன்று) செல்வாக்கானவர்களாக இருந்தால் லொபி செய்ய முடிந்திருக்கும். ருல்பன் அப்படியானவர் என்றால் அவராலும் முடியவேயில்லையே!

 

1 hour ago, MEERA said:

ஜி, அப்போ இவருக்கும் புலிகளின் ஆயுத போராட்டத்திற்கும் தொடர்பில்லையா?

இவர் ஐரோப்பாவிற்கு வந்து பிரச்சாராம் செய்தபோது, இடம் பொருள் ஏவல் புரியாமல்  கரும்புலிகளை புகழ்கிறேன் என்று கரும்புலிகளின் நடவடிக்கைகளை  உளறியது தான் மிச்சம்.

இவரும் புதுவையும் கடைசிவரை தனது பிள்ளைகளை போராட்டத்தில் இணைக்கவேயில்லை.... ஆனால் பொதுமக்களை உசுப்பேற்றி இணைத்து விட்டிருந்தார்கள்.

ருல்பன் இடம் கேட்டிருந்தேன் 😟

3 hours ago, Nathamuni said:

அவயள விடுங்க, நீங்கள் ஏன் எடுத்து சொல்லேல்ல?

 

1 hour ago, Nathamuni said:

 

ருல்பன் இடம் கேட்டிருந்தேன் 😟

நாத முனி நான் அப்படி எடுத்து சொல்ல வெளிக்கிட்டிருந்தால்... என்னுடன் யாழ் களத்தில் உரையாடி இருப்பீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, tulpen said:

 

நாத முனி நான் அப்படி எடுத்து சொல்ல வெளிக்கிட்டிருந்தால்... என்னுடன் யாழ் களத்தில் உரையாடி இருப்பீர்களா? 

தலைவா,

எனது முந்தய பதிவுகளை நீங்கள் பார்க்கவில்லை போலும்.

கிருபன், புலி ஆதரவாளர், சீமான் ஆதரவாளர் அல்ல.

நான் புலிகள் விசயத்தில் நடுநிலையாளர், சீமான் ஆதரவாளர். இரண்டையும் குழப்புவதில்லை. அது வேறு, இது வேறு என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

சீமான், பிரபாகரனை தலைவனாக கொண்டு செல்ல வேண்டிய தேவையையும், அதன் அவலமான (தமிழகத்தில் நிலவும்) காரணத்தினையும் புரிந்து கொள்கிறேன்.

கிருபன் போல, excel மண்டபம் போகும் சந்தர்ப்பம் எனக்கு கிடைகவில்லை. ஏனெனில் இங்கே உணர்வுக்கு முன் சிலரது பண ஆசை முன்னே உள்ளது என உணர்ந்ததால்.

oxford பக்கத்தில், ஒரு பெரிய காணித்துண்டு வாங்கி, பணம் பார்க்க ஒரு குரூப் கிளம்பியது. பெரிசா போகவில்லை போலுள்ளது.

இங்கே பணத்துக்காக தூக்கி பிடிப்பவர்களுக்கும், அங்கே ஒரு அவலத்தினை தடுக்க தூக்கிப் பிடிப்பவர்களுக்கும் வேறுபாடு உண்டு.

இந்த புரிதல் இருந்தால், சீமான் எதிர்க்கப்படுவதன் காரணமும் புரியும். மீண்டும் சொல்கிறேன். தொப்பியை உங்கள் தலைக்கு போட்டுக் கொண்டு வராதீர்கள்.

 

Edited by Nathamuni

30 minutes ago, Nathamuni said:

தலைவா,

எனது முந்தய பதிவுகளை நீங்கள் பார்க்கவில்லை போலும்.

கிருபன், புலி ஆதரவாளர், சீமான் ஆதரவாளர் அல்ல.

நான் புலிகள் விசயத்தில் நடுநிலையாளர், சீமான் ஆதரவாளர். இரண்டையும் குழப்புவதில்லை. அது வேறு, இது வேறு என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

கிருபன் போல, excel மண்டபம் போகும் சந்தர்ப்பம் எனக்கு கிடைகவில்லை. ஏனெனில் இங்கே உணர்வுக்கு முன் சிலரது பண ஆசை முன்னே உள்ளது என உணர்ந்ததால்.

oxford பக்கத்தில், ஒரு பெரிய காணித்துண்டு வாங்கி, பணம் பார்க்க ஒரு குரூப் கிளம்பியது. பெரிசா போகவில்லை போலுள்ளது.

எமது தமிழ் மக்கள் இலங்கை தீவில் உரிமையுடன் தலை நிமிர்ந்து வாழ புலிகளின் ஆயுத போராட்டம் ஒரு உந்து சக்தியாக அமையும் என்று நம்பியதால்  நான் புலிகளின் போராட்ட‍த்தின் ஆதரவாளராக புலிகள் இருக்கும் போது இருந்தேன்.  ஏனைய மக்களை போல் என்னால் முடிந்த பங்களிப்பையும் செய்தேன். எனது நம்பிக்கை பொய்த்து நான் நம்பிய  புலிகள்  தமது மோசமான அரசியலால் நம்பிய மக்களையும் நட்டாற்றில் விட்டு தாமும் காலாவதியாகினர். 

 சீமான் அடுத்த நாட்டில் பதவிக்கு வர துடிக்கும்  அதற்காக இனவெறியை கையில் எடுத்து அதை தூண்டிவரும்  அரசியல்வாதிகளில் ஒருவர்  என்பதால் அவரை ஆதரிக்க வேண்டிய எந்த தேவையும் எனக்கு இல்லை.  நான் தமிழக தமிழரும் இல்லை எனக்கு வாக்குரிமையும் இல்லை. நீங்கள் ஒரு பதிவில் கூறியது போல் எதிர் காலத்திலாவது  சீமான் திருந்தினால் தமிழக மக்கள் அவரை ஆதரிக்கலாம்.  எப்படியோ அவர் பதவிக்கு வருவதை தீர்மானிப்பது தமிழக தமிழரே. 

தமிழகத்தில் வாக்குரிமை இல்லாத அடுத்து நாட்டு பிரஜையாக நீங்கள் உங்களை சீமான் ஆதரவாளர் என்று கூறுகிறீர்கள். தமிழத்தில்  வாக்குரிமை உள்ள தமிழக பிரஜைகள் சட்டபூர்வமாக ஒரு கட்சியை ஆதரிப்பதை அங்கீகரிக்க மறுக்கும் நீங்கள்  அவர்களை திமுக ,அதிமுக சொம்பு என்று கொச்சைப்படுத்துகின்றீர்கள். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, tulpen said:

 சீமான் அடுத்த நாட்டில் பதவிக்கு வர துடிக்கும்  அதற்காக இனவெறியை கையில் எடுத்து அதை தூண்டிவரும்  அரசியல்வாதிகளில் ஒருவர்  என்பதால் அவரை ஆதரிக்க வேண்டிய எந்த தேவையும் எனக்கு இல்லை.  நான் தமிழக தமிழரும் இல்லை எனக்கு வாக்குரிமையும் இல்லை. நீங்கள் ஒரு பதிவில் கூறியது போல் எதிர் காலத்திலாவது  சீமான் திருந்தினால் தமிழக மக்கள் அவரை ஆதரிக்கலாம்.  எப்படியோ அவர் பதவிக்கு வருவதை தீர்மானிப்பது தமிழக தமிழரே. 

உங்களது எதிர்ப்போ, எனது ஆதரவோ... பெரிதாக எதுவும் செய்யப்போவதில்லை.

கிருபனிடம் கேட்ட, அவர் பதில் அளிக்காத அதே கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்.

சிங்களவன் எப்படி எம்மை ஆளலாம் என்று சண்டையிட்ட புலிகளை ஆதரித்து விட்டு, தமிழனை தமிழனே ஆளனும் என்று சொல்லும் சீமான் இனவெறியன் என்பது என்ன நியாயம்? 

ஒரே ஒரு காரணம் இருக்கலாம்.

மன்னிக்க வேண்டும்... இலங்கை ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று குப்புக்கரணம் அடித்த இருவர்; ஒருவர் டக்லஸ் அடுத்தவர் கருணா.

இனவெறி இல்லாதவர்கள். உங்கள் பதிவு படி... திருந்தியவர்கள்.

அவர்களுக்கு உங்கள் பேராதரவு உண்டா?

Edited by Nathamuni

10 minutes ago, Nathamuni said:

உங்களது எதிர்ப்போ, எனது ஆதரவோ... பெரிதாக எதுவும் செய்யப்போவதில்லை.

கிருபனிடம் கேட்ட, அவர் பதில் அளிக்காத அதே கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்.

சிங்களவன் எப்படி எம்மை ஆளலாம் என்று சண்டையிட்ட புலிகளை ஆதரித்து விட்டு, தமிழனை தமிழனே ஆளனும் என்று சொல்லும் சீமான் இனவெறியன் என்பது என்ன நியாயம்? 

நான் வாழும் சுவிஸ் நாட்டில் ஒரு அரசியல் வாதி ஒருவர் இங்கு பிறந்து பிரஜாவரிமை பெற்ற ஒரு வெளிநாட்டு  வம்சாவளியினர் எவரும் என்ன தகுதி அவருக்கு இருந்தாலும்  எப்போதும்  சுவிற்சர்லாந்தின் ஜனாதிபதியாக முடியாது.  தூய சுவிஸ்கார‍ர் மட்டும் தான் சுவிஸை ஆளவேண்டும் என்று சொன்னால் அது இனவெறியாக தான் இருக்க முடியும்.  அதை தான் சீமானும் கூறுகிறார். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

இந்த திரி முடிஞ்சிட்டுதா :unsure:

இந்த திரியை வாசித்தலில் புரிந்தது;
எங்கட சனத்திற்கு உசுப்பேற்ற யாரும் இருந்து கொண்டேயிருக்கோணும்🙂.
விசிலடித்தான் குஞ்சுகளாகவேயிருந்து பழகிட்டோம்😛.
இணையவனும், நுணாவும் சீமானிற்கு சப்போட் 😄
நிழலி இல்லை 😆
மோகன்🤔

 

 

உங்களை போல நந்தன் கிருபன் அண்ணா போல அறிவாளிகளாக 
பிறக்கும் பாக்கியம் எல்லா தமிழருக்கும் கிடைக்காததும் சீமான் செய்த தவறுதான்! 

அறிவாளிகள் வெட்டி புடுங்குவதை விட 
சாமானியர்கள்தான் இந்த உலகை வடிவமைக்கிறார்கள் 
என்பது உப்பு போல கசக்கும் ...உணவுக்கு இன்றி அமையாதது. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

நான் வாழும் சுவிஸ் நாட்டில் ஒரு அரசியல் வாதி ஒருவர் இங்கு பிறந்து பிரஜாவரிமை பெற்ற ஒரு வெளிநாட்டு பிரஜையின் வம்சாவளியினர் எவரும் என்ன தகுதி அவருக்கு இருந்தாலும்  எப்போதும்  சுவிற்சர்லாந்தின் ஜனாதிபதியாக முடியாது.  தூய சுவிஸ்கார‍ர் மட்டும் தான் சுவிஸை ஆளவேண்டும் என்று சொன்னால் அது இனவெறியாக தான் இருக்க முடியும்.  அதை தான் சீமானும் கூறுகிறார். 

உங்களுடன் ஒரு ஆக்கபூர்வமான விவாதம் ஆரம்பித்த சில நேரங்களில் குழம்பி விடுகிறீர்கள்.

சுவிஸில் உங்களால் தலை கீழாக நின்றாலும் ஜனாதிபதியாக முடியாது. இதனை ஒரு அரசியல் வாதி வாயால் சொல்ல வேண்டியதில்லை. தவறான உதாரணம். அங்குள்ள சில காண்டோன்களில், வெளியூர்க்கார்களுக்கு குடியுரிமை கொடுக்கவே உள்ளூர் தேர்தல் நடத்தப்பட்டு, பெரும்பாலானவை இனவாதம் காரணமாக நிராகரிக்கப்படுள்ளது.

அமெரிக்காவில் ஆஸ்திரேலியாவில் பிறந்த வெள்ளை தோல் ஆர்னோல்ட் ஜனாதிபதியாக முடியாத வகையில் சட்டம் உள்ளது. அது இனவாதம் இல்லையே. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

கிருபனிடம் கேட்ட, அவர் பதில் அளிக்காத அதே கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்.

கேள்வியிலேயே பதில் இருந்ததால் பதிலளிக்கவேண்டி இருந்திருக்கவில்லை!

தெலுங்கு நாயக்கர்கள் 500 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை ஆண்டார்கள் என்றாலும் அவர்களின் பரம்பரையினர் தமிழ்நாட்டில் பிறந்து தமிழர்களாக இனமாகவும் உணர்வாகவும் கொண்டுள்ளனர். அவர்களை தெலுங்கன் என்று சொல்லுவதுதான் நியாயம் என்றால் எங்கேபோய் முட்டிக்கொள்ள? இதைத்தான் கடைந்தெடுத்த இனவாதம் என்பது.

சிங்களவன் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து தமிழரை தனக்கும் கீழானவர்கள் என்று சொல்கின்றான். சிங்களவனுக்கு தமிழும் தெரியாது (கொன்னைத் தமிழ் சேர்ப்ப்பில்லை), தமிழுணர்வும் கிடையாது. இது பச்சைப்புள்ளைக்கும் தெரியும் என்பதால் கேள்வி மப்பில் வந்ததாக்கும் என்று நினைத்திருந்தேன். இரண்டாம் தரமும் கேட்டதால் ஒன்றில் மப்பில்லை. அல்லது இரண்டு தரமும் மப்புத்தான்😜

 

இனங்களை பற்றி ஆராயவெளிக்கிட்டால் சிங்களவனை தமிழரின் பரம்பரையினர் என்றும் நிறுவலாம்.😀 தலைவர்  பிரபாகரனை மலையாளி என்றும் நிறுவலாம்.🤒

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Maruthankerny said:

உங்களை போல நந்தன் கிருபன் அண்ணா போல அறிவாளிகளாக 
பிறக்கும் பாக்கியம் எல்லா தமிழருக்கும் கிடைக்காததும் சீமான் செய்த தவறுதான்! 

எல்லோரும் சிங்களவன் எப்படி எம்மை ஆளலாம் என்று புலிகளை ஆதரித்தார்களாம். சிலர் இயக்கத்திலும் இருந்தார்களாம்.

தமிழனை, தமிழனே ஆளவேண்டும் என்று சீமான் சொல்வது இனவாதமாம்.

நல்லா இருக்குது நியாயம், நியாமாரே.

11 minutes ago, கிருபன் said:

கேள்வியிலேயே பதில் இருந்ததால் பதிலளிக்கவேண்டி இருந்திருக்கவில்லை!

தெலுங்கு நாயக்கர்கள் 500 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை ஆண்டார்கள் என்றாலும் அவர்களின் பரம்பரையினர் தமிழ்நாட்டில் பிறந்து தமிழர்களாக இனமாகவும் உணர்வாகவும் கொண்டுள்ளனர். அவர்களை தெலுங்கன் என்று சொல்லுவதுதான் நியாயம் என்றால் எங்கேபோய் முட்டிக்கொள்ள? இதைத்தான் கடைந்தெடுத்த இனவாதம் என்பது.

சிங்களவன் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து தமிழரை தனக்கும் கீழானவர்கள் என்று சொல்கின்றான். சிங்களவனுக்கு தமிழும் தெரியாது (கொன்னைத் தமிழ் சேர்ப்ப்பில்லை), தமிழுணர்வும் கிடையாது. இது பச்சைப்புள்ளைக்கும் தெரியும் என்பதால் கேள்வி மப்பில் வந்ததாக்கும் என்று நினைத்திருந்தேன். இரண்டாம் தரமும் கேட்டதால் ஒன்றில் மப்பில்லை. அல்லது இரண்டு தரமும் மப்புத்தான்😜

 

இனங்களை பற்றி ஆராயவெளிக்கிட்டால் சிங்களவனை தமிழரின் பரம்பரையினர் என்றும் நிறுவலாம்.😀 தலைவர்  பிரபாகரனை மலையாளி என்றும் நிறுவலாம்.🤒

With images) | Smiley, Smiley emoji, Emoticon

 

அடேங்கப்பா விளக்கம் !!

500 வருசத்துக்கு முன்னம் வந்த தெலுங்கன் இன்னும் தமிழ் பேசி ஆளலாம்.

72 வருசத்துக்கு முன்னம் ஆளத்தொடங்கிய சிங்களவன் தமிழ் இன்னும் பேசாததால், ஆளப்படாது.

அதுதான் நம்ம இனவாத தத்துவம்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Maruthankerny said:

உங்களை போல நந்தன் கிருபன் அண்ணா போல அறிவாளிகளாக 
பிறக்கும் பாக்கியம் எல்லா தமிழருக்கும் கிடைக்காததும் சீமான் செய்த தவறுதான்! 

அறிவாளிகள் வெட்டி புடுங்குவதை விட 
சாமானியர்கள்தான் இந்த உலகை வடிவமைக்கிறார்கள் 
என்பது உப்பு போல கசக்கும் ...உணவுக்கு இன்றி அமையாதது. 

 

எதிர்பார்த்த எதிர்வினைதான் வந்துள்ளது. நாம் மற்றவர்கள் எப்படிச் சிந்திப்பார்கள் என்று உய்த்தறியும்நுண்ணறிவையும் கொண்டுள்ளோம் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.😎

சாமானியர்கள்தான் இந்த உலகை வடிவமைக்கின்றார்கள் என்ற கருத்தியலை விதைத்து பெரும்பான்மையானவர்களை கோர்ப்பரேட் உலகம் அடிமையாக வைத்திருக்கின்றது என்று நாளை புலம்பக்கூடாது. இலுமினாட்டி, freemasons போன்ற அமைப்புக்களில் இருப்பவர்கள்தான் உலகை ஆளுகின்றார்கள் என்றும் நம்பக்கூடாது. ஆமா!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.