Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபம் விசமிகளால் உடைப்பு

Featured Replies

யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபம் இனந்தெரியாத நபரால் உடைக்கப்பட்டுள்ளது.

கோவிலின் மூலையில் அமைக்கப்பட்டிருந்த குறித்த சொரூபம் மக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலையில் உடைக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் நாட்டிலிருந்து வருகை தந்த ஒருவராலேயே சிலை உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

தற்போது மாதாவின் சொரூபம் பாதுகாப்பு நலன் கருதி அடைக்கல மாதா ஆலயத்தின் உட்பகுதிக்குள் கொண்டுசென்று வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://www.ibctamil.com/srilanka/80/144564

  • கருத்துக்கள உறவுகள்

கேவலம் கெட்ட செயல், அதுவும் புலம்பெயர் நாட்டிலிருந்து வந்தவரால் உள்ளுரில் பிரச்சனை உருவாக்கியுள்ளார். Vankalayan உங்களை நீண்ட நாட்களாக காணவில்லை, இவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை வேண்டும், முயற்சி செய்யுங்கள் உங்களின் கார்தினல் ஊடாக, என் ஆதரவு உங்களுக்கு உண்டு 

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற பிரச்சனை காணாது எண்டு இது வேறை ibc  உடைத்தவரின் முழுவிபரம் இல்லாமல் புலம்பெயர் நாட்டிலிருந்து வந்தவரால் என்று மொட்டையாய் போட்டு இருக்கு . அவர் உடைப்பதுக்கு  என்ன காரணம் ?

  • கருத்துக்கள உறவுகள்

சொரூபம் வைத்திருந்த இடம் அவருக்குச் சொந்தமாக இருக்குமோ 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

சொரூபம் வைத்திருந்த இடம் அவருக்குச் சொந்தமாக இருக்குமோ 😂

ம் தொடங்குங்கோ ..................

செய்தி முழுமையாய் வரமுதல் .

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, உடையார் said:

கேவலம் கெட்ட செயல், அதுவும் புலம்பெயர் நாட்டிலிருந்து வந்தவரால் உள்ளுரில் பிரச்சனை உருவாக்கியுள்ளார். Vankalayan உங்களை நீண்ட நாட்களாக காணவில்லை, இவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை வேண்டும், முயற்சி செய்யுங்கள் உங்களின் கார்தினல் ஊடாக, என் ஆதரவு உங்களுக்கு உண்டு 

இதை பொது அமைதிக்குப் பங்கம் விழைவிக்கும் செயலாகக் கருதி அதற்கான சட்ட நடவடிக்கையே சரியானதாக இருக்கும் என நினைக்கிறேன்.  சம்பவத்தைப் பெரிதுபடுத்துதல் சரியானதாக இருக்குமா 🤔

2 minutes ago, பெருமாள் said:

ம் தொடங்குங்கோ ..................

செய்தி முழுமையாய் வரமுதல் .

ஐயா,

சும்மா நகைச் சுவையாக எழுதினால் அதனை சீரியஸாக (தமிழ்ச் சொல் ?) எடுப்பதா ? 😧

😂 போட்டுள்ளேன் கவனிக்கவில்லையா 

  • கருத்துக்கள உறவுகள்

 திடீரென முளைக்கும் தேவனின் செய்தி சொல்ல வீடு வீடாக தேடிவரும் மத வியாபாரிகளின் மூஞ்சையைகூட உடைக்கலாம் தப்பில்லை.

ஆனால் காலம் காலமாக  ஒன்றோடு ஒன்றாக வாழ்ந்துவரும் கிறிஸ்தவர்களின் மனதை உடைக்கும் இந்த செயல்  மன்னிக்கவே முடியாத குற்றம்.

பரம்பரை பரம்பரையாக இந்துக்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் வாழ்ந்துவரும் எமது இனத்துக்கிடையில்  வழிபாடுகள்தான் வேறு வேறு.

இன வாழ்வுக்காய் ஒன்றிணைந்து போராடியதில்  எந்த வேறுபாடும் எமக்குள் இருந்ததில்லை.

அது ஒரு அழகிய கனா காலமாக இருந்த இயக்க கட்டுப்பாட்டுக்குள் இன்னமும்  இருந்திருந்தால் , இந்த செயலை செய்ய யாரும் துணியமாட்டார்கள் என்பது ஒருபுறம்,

செய்திருந்தால் இந்துவை காயப்படுத்திய கிறிஸ்தவனுக்கு ஒரு கிறிஸ்தவ போராளி மூலமே இயக்கம் தண்டனை வழங்கியிருக்கும்.

அதேபோல், கிறிஸ்தவனை காயப்படுத்திய ஒரு இந்துவை  இந்து போராளியை கொண்டே இயக்கம் தண்டனை வழங்கியிருக்கும்.

தமிழனாய் நடமாடுவது பாவமோ இல்லையோ தெரியாது, 

ஆனால் பிரபாகரன் என்ற ஆளுமையின் கீழ் வாழாமல் போனது சுய மரியாதையை விரும்பும் ஒவ்வொரு தமிழனுக்கும் சாகும்வரை அது ஒரு ஏக்கம் கலந்த வலிதான்.

4 hours ago, Gowin said:

யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபம் இனந்தெரியாத நபரால் உடைக்கப்பட்டுள்ளது.

இதுவும் மதவெறியின் விளைவுகளே!
இது போன்ற உடைப்புகள் கடும் கண்டனத்துக்கு உரியது. 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். அடைக்கல மாதா ஆலயத்தின் திருச்சொரூபத்தை சேதப்படுத்தியவர் கைது

யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபத்தை உடைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் மனநலம் குன்றியவர் என்று  யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

 

matha.jpg

 

இதனையடுத்து குறித்த நபர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அடைக்கல மாதா தேவாலயத்தின்  மூலையில் அமைக்கப்பட்டிருந்த குறித்த சொரூபம் மக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று முற்பகல் வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருக்கும் ஒருவரால் மாதா சிலையின் கண்ணாடிகள் மற்றும் கைப்பகுதி என்பன அடித்து உடைக்கப்பட்டது.

அந்த நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையைடுத்து தற்போது மாதாவின் சொரூபம் பாதுகாப்பு நலன் கருதி அடைக்கல மாதா ஆலயத்தின் உட்பகுதிக்குள் வைக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/83342

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.