Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீதரனுக்கு தலைமை பதவி வழங்கினால் ஆதரவு கொடுப்பேன்! சுமந்திரன் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை பதவியை சி.சிறீதரனுக்கு வழங்கினால் அதனை தான் ஆதரிப்பேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“கட்சிக்கு எதிரான நான் நடந்துகொள்பவன் அல்ல. எனினும், சக வேட்பாளர்கள் எனக்கு எதிராக பரப்புரை செய்தார்கள். நான் ஒருபோதும் அப்படி செய்யவில்லை. எனக்கு ஆதரவாக சிறீதரன் மட்டுமே இருந்தார்.

இதனால் இறுதியில் அவருக்கு எதிராகவும் பரப்புரை செய்தார்கள். இறுதியில் நானும், சிறீதரனுமே வெற்றிபெற்றோம். எமக்கு எதிராக சதி செய்தவர்கள் தோல்வியடைந்தார்கள்.

மக்கள் தீர்ப்பின்படி சிறீதரனும், நானும் வெற்றிபெற்றிருக்காவிட்டால், கட்சி இன்னும் அவமானமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும். ஓர் ஆசனத்தை பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்.

இதேவேளை, கட்சி மறுசீரமைக்கப்படும்போது அனைவரும் விரும்பி தலைமை பதவியை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்வேன் என சிறீதரன் கூறியுள்ளார். தனக்கு அந்த பதவியை தருமாரு அவர் கோரவில்லை.

அவ்வாறு சிறீதரனுக்கு தலைமை பதவி வழங்கினால் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன். மேலும் தேசியப்பட்டியல் அறிவிப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இழுபறி ஏதும் இல்லையென” அவர் மேலும் கூறியுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/253237?ref=home-latest

  • Replies 64
  • Views 5.7k
  • Created
  • Last Reply

சுமந்திரனை அன்ரன் பாலசிங்கம்😁😃 என ஸ்ரீதரன் சொன்ன போதே நினைத்தேன் 
ஸ்ரீதரன்  தான்   அடுத்த தேசிய தலைவர் என சுமந்திரன் சொல்வார்   என😂

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அபராஜிதன் said:

சுமந்திரனை அன்ரன் பாலசிங்கம்😁😃 என ஸ்ரீதரன் சொன்ன போதே நினைத்தேன் 
ஸ்ரீதரன்  தான்   அடுத்த தேசிய தலைவர் என சுமந்திரன் சொல்வவர் என😂

சிரித்து... வயிறு நோகுது, அபராஜிதன். 🤣

”வேலிக்கு... 🦎 ஓணான் 🐊 சாட்சி" என்று    இதைத்தான் சொல்வார்கள். 😁

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, அபராஜிதன் said:

சுமந்திரனை அன்ரன் பாலசிங்கம்😁😃 என ஸ்ரீதரன் சொன்ன போதே நினைத்தேன் 
ஸ்ரீதரன்  தான்   அடுத்த தேசிய தலைவர் என சுமந்திரன் சொல்வவர் என😂

அட நீங்கள் வேறு....

சுமந்திரன் ஆதரவு கொடுப்பதினூடாக சிறிதரனுக்கு சுமந்திரன் வேட்டுவைக்கிறார்.

இறுதியில் சுமந்திரனே அடுத்த தலைவர் என்பது நிரந்தரமாகும். 😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அட நீங்கள் வேறு....

சுமந்திரன் ஆதரவு கொடுப்பதினூடாக சிறிதரனுக்கு சுமந்திரன் வேட்டுவைக்கிறார்.

இறுதியில் சுமந்திரனே அடுத்த தலைவர் என்பது நிரந்தரமாகும். 😀

நீங்க வேற அவரது சுத்துமாத்திரனின் இலக்கு கூட்டமைப்பின் தலைமை.

சில காலங்களுக்கு முன்னரே இங்கு எழுதியிருக்கிறேன் சின்னக் கவுண்டரின் இலக்கு தமிழரசுக் கட்சித் தலைமை.

59 minutes ago, MEERA said:

நீங்க வேற அவரது சுத்துமாத்திரனின் இலக்கு கூட்டமைப்பின் தலைமை.

சில காலங்களுக்கு முன்னரே இங்கு எழுதியிருக்கிறேன் சின்னக் கவுண்டரின் இலக்கு தமிழரசுக் கட்சித் தலைமை.

ஒன்று அவருக்கு அதட்குரிய தகமை இருக்கவேண்டும். அல்லது அங்குள்ள யாவரும் தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும். நிச்சயமாக சித்தார்தனும், அடைக்கலமும் அங்கிருந்து வெளியேறப்பவதில்லை. அவர்களும் தலையாட்டி பொம்மைகள்தான். வெளியில் பெரிதாக அறிக்கை விடடாலும் அவர்களால் தனியே பொய் பிழைக்கமுடியாதென்று நன்றாகவே அவர்களுக்கு தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

ஒன்று அவருக்கு அதட்குரிய தகமை இருக்கவேண்டும். அல்லது அங்குள்ள யாவரும் தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும். நிச்சயமாக சித்தார்தனும், அடைக்கலமும் அங்கிருந்து வெளியேறப்பவதில்லை. அவர்களும் தலையாட்டி பொம்மைகள்தான். வெளியில் பெரிதாக அறிக்கை விடடாலும் அவர்களால் தனியே பொய் பிழைக்கமுடியாதென்று நன்றாகவே அவர்களுக்கு தெரியும்.

 வங்காலையன், சின்னக் கவுண்டருக்கு தெரியும் அவரது தகமை என்ன என்பது. 

இது தமிழரசுக் கட்சியின் பிரச்சனை அதற்குள் சித்தரும் செல்வமும் தலையை நுளைக்க மாட்டினம். 

மேலும் சித்தரும் செல்வமும் வெளியேற வேண்டிய அவசியம் தற்போது இல்லை. ஆனால் கூட்டணியும் முன்னணியும் இணைந்தால் நிச்சயம் வெளியேறி அவர்களுடன் இணைவார்கள். 

4 minutes ago, MEERA said:

 வங்காலையன், சின்னக் கவுண்டருக்கு தெரியும் அவரது தகமை என்ன என்பது. 

இது தமிழரசுக் கட்சியின் பிரச்சனை அதற்குள் சித்தரும் செல்வமும் தலையை நுளைக்க மாட்டினம். 

மேலும் சித்தரும் செல்வமும் வெளியேற வேண்டிய அவசியம் தற்போது இல்லை. ஆனால் கூட்டணியும் முன்னணியும் இணைந்தால் நிச்சயம் வெளியேறி அவர்களுடன் இணைவார்கள். 

நீங்கள் தானே மேலே எழுதி இருந்தீர்கள் அவரின் இலக்கு கூட்ட்டமைப்பின் தலைமை எண்டு. அதுதான் அப்படி எழுதினேன். நீங்கள் மேலே எழுதியதை மீண்டும் ஒரு முறை பார்க்கவும். அவருக்கு அரசியவாதிக்குரிய தகமை இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளுகிறேன். பொய் சொல்லாமல் , அதை செய்வேன், இதை செய்வேன் என்று சொல்லாமல் அரசியல் வாதிக்கு தகுதி இல்லை என்பது வெளிப்படை. 

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200811-130226.jpg

அண்ணை அண்ணை .. என்னையும் ஒருக்கா வருங்கால முதல்வரே.! என்டு அழையுங்களேன்..☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்

கூத்தமைப்பின் தலைமையில் அரசுடன், வெளிநாடுகளுடன், இராஜதந்திரிகளுடன் பேச்சுவாத்தை நடாத்துவதற்கு (சுமந்திரன் தவிர்ந்த) யார் இருக்கிறார்கள் ? 

அதாவது 

இலங்கைத் தமிழர் சார்பில் அரசியல் தலைமைத்துவத்திற்கு தலைமை தாங்க / வழிநடாத்த தகுதிபடைத்தவர் யார் (சுமந்திரன் தவிர்த்து)  🤔

யாராவது கூறுங்கள். யாரை முன் மொழியலாம் 😀

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

கூத்தமைப்பின் தலைமையில் அரசுடன், வெளிநாடுகளுடன், இராஜதந்திரிகளுடன் பேச்சுவாத்தை நடாத்துவதற்கு (சுமந்திரன் தவிர்ந்த) யார் இருக்கிறார்கள் ? 

அதாவது 

இலங்கைத் தமிழர் சார்பில் அரசியல் தலைமைத்துவத்திற்கு தலைமை தாங்க / வழிநடாத்த தகுதிபடைத்தவர் யார் (சுமந்திரன் தவிர்த்து)  🤔

யாராவது கூறுங்கள். யாரை முன் மொழியலாம் 😀

ஏன் கூட்டமைப்பின் தலைமையில்?

அரசியல் சாராத நிறைய பேர் இருக்கினம் 🙂

13 minutes ago, Kapithan said:

கூத்தமைப்பின் தலைமையில் அரசுடன், வெளிநாடுகளுடன், இராஜதந்திரிகளுடன் பேச்சுவாத்தை நடாத்துவதற்கு (சுமந்திரன் தவிர்ந்த) யார் இருக்கிறார்கள் ? 

அதாவது 

இலங்கைத் தமிழர் சார்பில் அரசியல் தலைமைத்துவத்திற்கு தலைமை தாங்க / வழிநடாத்த தகுதிபடைத்தவர் யார் (சுமந்திரன் தவிர்த்து)  🤔

யாராவது கூறுங்கள். யாரை முன் மொழியலாம் 😀

விடுதலைபுலிகள் செய்த தவறுகளில் இதுவும் ஒன்று. 2004 ம் ஆண்டு கூட்டமைப்பு வேட்பாளர் தேர்வை மேற்கொண்ட புலிகள்,  கட்சிகள் தவிர தங்கள் சார்பில் நிறுத்திய பொது  வேடபாளர் எல்லோரும் சொந்தமாக சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்கள். டம்மி பீசுகள்.  தாங்கள் சொன்னதைச்  சிந்திக்காமல்  செய்யும் தலையாட்டி பொம்மைகள். காத்திரமான ஆளுமை மிகுந்த வேட்பாளர்களை அவர்கள் தங்கள் சார்பில் நிறுத்தி இருந்தால்  இன்றைய நிலையை விட மேலானதாக இருந்திருக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ரதி said:

ஏன் கூட்டமைப்பின் தலைமையில்?

அரசியல் சாராத நிறைய பேர் இருக்கினம் 🙂

கேட்ட கேள்விக்கு நேரே பதில் தாருங்கள். தற்போதைய நிலையில் அவர்கள்தான்(சரி பிழைகளுக்கு அப்பால்) அரசியல் ரீதியில் தமிழகளுக்கு தலைமையேற்கிறார்கள்(பெரும்பான்மை என்கின்ற ரீதியில்) 👍

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கூத்தமைப்பின் தலைமையில் அரசுடன், வெளிநாடுகளுடன், இராஜதந்திரிகளுடன் பேச்சுவாத்தை நடாத்துவதற்கு (சுமந்திரன் தவிர்ந்த) யார் இருக்கிறார்கள் ? 

அதாவது 

இலங்கைத் தமிழர் சார்பில் அரசியல் தலைமைத்துவத்திற்கு தலைமை தாங்க / வழிநடாத்த தகுதிபடைத்தவர் யார் (சுமந்திரன் தவிர்த்து)  🤔

யாராவது கூறுங்கள். யாரை முன் மொழியலாம்

இங்குதான் பலரும் சறுக்குவது சுமத்திரன் எல்லாம் தெரிந்தவர் என்று அவரை உள்ளே கொண்டுவரும்போது நம்பவைக்கப்பட்டு உள்ளது அதையே எல்லோரும் நம்பியுள்ளனர் .கடைசியாக சிங்கள ஊடகத்துக்கு பேட்டி அளித்து கொள்ளுபாடு  வந்தவுடன் சுமத்திரனே பதறியடித்து சொன்னது தனக்கு சிங்களம் 40 வீதம்தான் ஆங்கிலமும் முழுமை அல்ல என்று ஒலிநாடா உள்ளது .

 சுமத்திரன்  பல இடங்களில் இனியொரு ஆயுதப்போராட்டம் செய்து தமிழ் ஈழம்  என்று சொல்ல  யாருக்கும் துணிவிருக்காது என்று நக்கலும் நையாண்டியுமாய் கூறுகிறார் அதன் மறுவளம்  ஆயிரமாயிரமாய் தமிழீழம் கனவோடு ஆகுதியான மாவீரர்களை கொச்சை படுத்துகிறார் என்பது அவருக்கு புரியவில்லையா ?

தமிழீழம் கோரிக்கையை வைத்து முதன் முதல் வாக்கு கேட்டது அவரின் கட்சியே என்ற வரலாறு கூட தெரியாமல் பல இடங்களில் பேட்டி கொடுக்கிறார் இதுதான் அவரின் தகுதியா ?

 அப்படி தமிழர்  வரலாறு தெரியாத ஒருத்தரால் எப்படி வெளிநாட்டு தூதுவர்களுடன் கதைத்து  தீர்வை கொடுக்க முடியும் ?

சுமத்திரன் என்ற சொல் வந்து விழுந்தவனுடன் மல்லுக்கு நிக்கும் உங்களிடம் ஒரு கேள்வி சுமத்திரன் அங்கம் வகிக்கும் தமிழரசு கட்சிதான் முதமுதல் தமிழ் ஈழ கோரிக்கையை வைத்து வாக்கு வேட்டையை நடாத்தி வென்றது வரலாறு இப்ப ஒற்றை ஆட்சியில் வந்து நிக்கிறிர்கள் அப்ப  தமிழ் ஈழ கோசம் என்னவாயிற்று ? வாபஸ் பெற்று விட்டிர்களா ? இல்லையா ? உங்கள் ஆட்களிடம் கேட்டு பதில் தர முடியுமா ?

சுமத்திரனை விட  மும்மொழி  பாண்டித்தியம் உள்ளவர்கள் இளரத்தம்  அங்கு நிறைய உண்டு அவர்கள் வெளிவர சந்தர்ப்பங்கள் கொடுக்கப்படணும் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

இங்குதான் பலரும் சறுக்குவது சுமத்திரன் எல்லாம் தெரிந்தவர் என்று அவரை உள்ளே கொண்டுவரும்போது நம்பவைக்கப்பட்டு உள்ளது அதையே எல்லோரும் நம்பியுள்ளனர் .கடைசியாக சிங்கள ஊடகத்துக்கு பேட்டி அளித்து கொள்ளுபாடு  வந்தவுடன் சுமத்திரனே பதறியடித்து சொன்னது தனக்கு சிங்களம் 40 வீதம்தான் ஆங்கிலமும் முழுமை அல்ல என்று ஒலிநாடா உள்ளது .

 சுமத்திரன்  பல இடங்களில் இனியொரு ஆயுதப்போராட்டம் செய்து தமிழ் ஈழம்  என்று சொல்ல  யாருக்கும் துணிவிருக்காது என்று நக்கலும் நையாண்டியுமாய் கூறுகிறார் அதன் மறுவளம்  ஆயிரமாயிரமாய் தமிழீழம் கனவோடு ஆகுதியான மாவீரர்களை கொச்சை படுத்துகிறார் என்பது அவருக்கு புரியவில்லையா ?

தமிழீழம் கோரிக்கையை வைத்து முதன் முதல் வாக்கு கேட்டது அவரின் கட்சியே என்ற வரலாறு கூட தெரியாமல் பல இடங்களில் பேட்டி கொடுக்கிறார் இதுதான் அவரின் தகுதியா ?

 அப்படி தமிழர்  வரலாறு தெரியாத ஒருத்தரால் எப்படி வெளிநாட்டு தூதுவர்களுடன் கதைத்து  தீர்வை கொடுக்க முடியும் ?

சுமத்திரன் என்ற சொல் வந்து விழுந்தவனுடன் மல்லுக்கு நிக்கும் உங்களிடம் ஒரு கேள்வி சுமத்திரன் அங்கம் வகிக்கும் தமிழரசு கட்சிதான் முதமுதல் தமிழ் ஈழ கோரிக்கையை வைத்து வாக்கு வேட்டையை நடாத்தி வென்றது வரலாறு இப்ப ஒற்றை ஆட்சியில் வந்து நிக்கிறிர்கள் அப்ப  தமிழ் ஈழ கோசம் என்னவாயிற்று ? வாபஸ் பெற்று விட்டிர்களா ? இல்லையா ? உங்கள் ஆட்களிடம் கேட்டு பதில் தர முடியுமா ?

சுமத்திரனை விட  மும்மொழி  பாண்டித்தியம் உள்ளவர்கள் இளரத்தம்  அங்கு நிறைய உண்டு அவர்கள் வெளிவர சந்தர்ப்பங்கள் கொடுக்கப்படணும் .

ஐயா பெருமாள்,

சுமந்திரன் தவிர்த்து என்று ஏற்கனவே குறிப்பிட்டுவிட்டேன். இதற்குப்பின்பும் ஏன் சுமந்திரன் புராணம் ? 

அந்த மனிதனை விட்டுவிடுவோம். வேறு யாரை பிரேரிப்பீர்கள் 🤔

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kapithan said:

கேட்ட கேள்விக்கு நேரே பதில் தாருங்கள். தற்போதைய நிலையில் அவர்கள்தான்(சரி பிழைகளுக்கு அப்பால்) அரசியல் ரீதியில் தமிழகளுக்கு தலைமையேற்கிறார்கள்(பெரும்பான்மை என்கின்ற ரீதியில்) 👍

நான் இது வரைக்கும் சும்மையே ஒரு திறமையானவராய் ஏற்கவில்லை அல்லது காணவில்லை ...அவரது திறமையை நிரூபிக்கின்ற மாதிரி ஏதாவது செய்திருந்தால் காட்டுங்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

ஐயா பெருமாள்,

சுமந்திரன் தவிர்த்து என்று ஏற்கனவே குறிப்பிட்டுவிட்டேன். இதற்குப்பின்பும் ஏன் சுமந்திரன் புராணம் ? 

அந்த மனிதனை விட்டுவிடுவோம். வேறு யாரை பிரேரிப்பீர்கள் 🤔

நிறைய பேர் உள்ளனர் முதலில் சுமத்திரன்   தீர்வு இல்லையேல் அரசியலில் இருந்து தான் ஒதுங்குவதாய்  சொன்னவர் அதை செய்ய சொல்லுங்க அதன் பின் நிறைய பேர் வருவினம் .

  • கருத்துக்கள உறவுகள்

கற்பித்தன் , நீங்கள் நினைக்கிறீர்கள் வெறும் ஆங்கிலமும் ,சிங்களமும் தெரிந்திருந்தால் அவர் திறமையானவர் என்று ...மொழியை யாராலும் தற்போதைய கால கட்டத்தில் இலகுவாய் கற்கலாம் ...மொழி தெரிந்தவன் எல்லாம் புத்திசாலி இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நான் இது வரைக்கும் சும்மையே ஒரு திறமையானவராய் ஏற்கவில்லை அல்லது காணவில்லை ...அவரது திறமையை நிரூபிக்கின்ற மாதிரி ஏதாவது செய்திருந்தால் காட்டுங்கள் 

இரதி,

உங்களுக்கு என்னதான் பிரச்சனை 🤥 சுமந்திரனை விட்டுவிட்டு கதையுங்கோ என்றால் திரும்பவும் அந்த ஆளை ஏன் உள்ளே கொண்டுவருகிறீர்கள் ☹️

1 hour ago, பெருமாள் said:

நிறைய பேர் உள்ளனர் முதலில் சுமத்திரன்   தீர்வு இல்லையேல் அரசியலில் இருந்து தான் ஒதுங்குவதாய்  சொன்னவர் அதை செய்ய சொல்லுங்க அதன் பின் நிறைய பேர் வருவினம் .

யோவ் பெருமாள் 😡

அந்த ஆளை விடுங்கோ என்றால் திரும்பவும் ஏன் அந்த ஆளைப்பற்றியே கதைச்சுக்கொண்டு இருக்கிறீர். ☹️ அந்த ஆளைவிட்டுவிட்டு நான் கேட்பதற்கு  உளமார பதில் கூறுங்கள்.

 யாரை முன்னிலைப்படுத்துவீர்கள் 🤔 ஏன் முன்னிலைப்படுத்துவீர்கள் 🤔

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

கற்பித்தன் , நீங்கள் நினைக்கிறீர்கள் வெறும் ஆங்கிலமும் ,சிங்களமும் தெரிந்திருந்தால் அவர் திறமையானவர் என்று ...மொழியை யாராலும் தற்போதைய கால கட்டத்தில் இலகுவாய் கற்கலாம் ...மொழி தெரிந்தவன் எல்லாம் புத்திசாலி இல்லை 

ஐயோ ரதி 😤

கருவாட்டைச் சுற்றிச் சுற்றி வரும் இலையான் போல அந்த ஆளைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள் 😤

நீங்கள் யாரை பிரேரிப்பீர்கள் 🤔 ஏன் 🤔

(😢தயவு செய்து திரும்பவும் சுமந்திரனை உள்ளே கொண்டுவராதீர்கள் 🙏 பிளீஸ்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

இரதி,

உங்களுக்கு என்னதான் பிரச்சனை 🤥 சுமந்திரனை விட்டுபிட்டு கதையுங்கோ என்றால் திரும்பவும் அந்த ஆளை ஏன் உள்ளே கொண்டுவருகிறீர்கள் ☹️

யோவ் பெருமாள் 😡

அந்த ஆளை விடுங்கோ என்றால் திரும்பவும் ஏன் அந்த ஆளைப்பற்றியே கதைச்சுக்கொண்டு இருக்கிறீர். ☹️ அந்த ஆளைவிட்டுவிட்டு நான் கேட்பதற்கு  உளமார பதில் கூறுங்கள்.

 யாரை முன்னிலைப்படுத்துவீர்கள் 🤔 ஏன் முன்னிலைப்படுத்துவீர்கள் 🤔

உங்களுக்கு கோபம் வருமென்பதுக்காக சுமத்திரன் என்ற குழப்பவாதி கடந்த பத்துவருடங்களில் செய்த சுத்துமாத்துக்களை கடந்து போய்  கதைக்க முடியாது கபிதான் நடந்த தமிழ்த்தேசிய உடைவுகளுக்கு முழுமுதல் காரணமே அவர்தான் அவரால் நாப்பதுவருடங்கள் பின்னோக்கி போய்  உள்ளோம் மறுப்பதாயின் முன் உள்ள பகுதியில் நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலை  தாருங்கள் அதன் பின் உங்கள் கேள்விக்கு பதில் வரும் .

8 minutes ago, Kapithan said:

கருவாட்டைச் சுற்றிச் சுற்றி வரும் இலையான் போல அந்த ஆளைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள் 😤

கருவாட்டு கவிச்சி நாத்தம் கூட ஒரு எல்லைக்குள் நிக்கும் உங்கள் ஆளின் சுத்து மாத்து  அதைவிட கூட .

அதென்ன நீங்க வருவீங்கள் ஒரு இனத்தின் அடிப்படை கேள்வி யுத்த குற்ற விசாரணையை இல்லாமல் பன்னுவீர்கள் பிறகு அதை பற்றி அவரை பற்றி  கதைக்க கூடாது என்பீர்கள் என்ன நியாயம் ?

மேல் உள்ளத்துக்கு சரியான பதில் வேணும் இல்லாவிடின் அவர் சாவுக்கு பிறகும் தொடரும் .

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு கோபம் வருமென்பதுக்காக சுமத்திரன் என்ற குழப்பவாதி கடந்த பத்துவருடங்களில் செய்த சுத்துமாத்துக்களை கடந்து போய்  கதைக்க முடியாது கபிதான் நடந்த தமிழ்த்தேசிய உடைவுகளுக்கு முழுமுதல் காரணமே அவர்தான் அவரால் நாப்பதுவருடங்கள் பின்னோக்கி போய்  உள்ளோம் மறுப்பதாயின் முன் உள்ள பகுதியில் நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலை  தாருங்கள் அதன் பின் உங்கள் கேள்விக்கு பதில் வரும் .

கருவாட்டு கவிச்சி நாத்தம் கூட ஒரு எல்லைக்குள் நிக்கும் உங்கள் ஆளின் சுத்து மாத்து  அதைவிட கூட .

அதென்ன நீங்க வருவீங்கள் ஒரு இனத்தின் அடிப்படை கேள்வி யுத்த குற்ற விசாரணையை இல்லாமல் பன்னுவீர்கள் பிறகு அதை பற்றி அவரை பற்றி  கதைக்க கூடாது என்பீர்கள் என்ன நியாயம் ?

மேல் உள்ளத்துக்கு சரியான பதில் வேணும் இல்லாவிடின் அவர் சாவுக்கு பிறகும் தொடரும் .

ஐயோஓஓஓஓஓஓ.....😭

பெருமாள்,  உங்களால் தகுதியானவரெனக் குருதும் ஒருவரை கூறமுடியாவிட்டால் பிரச்சனையில்லை. அதற்காக சுமந்திரனை இதற்குள் வலிந்து இழுக்காதீர்கள். ஏனென்றால் எனது கேள்வி அவர்பாற் பட்டதல்ல. ☹️

அனேகமாக எனது கேள்விக்கு மிகப் பெரும்பாலும் ஒருவரும் ஒருவரையும் பிரேரிக்கப்போவதில்லை என நம்புகிறேன் 😀

Edited by Kapithan

1 hour ago, Kapithan said:

ஐயோஓஓஓஓஓஓ.....😭

பெருமாள்,  உங்களால் தகுதியானவரெனக் குருதும் ஒருவரை கூறமுடியாவிட்டால் பிரச்சனையில்லை. அதற்காக சுமந்திரனை இதற்குள் வலிந்து இழுக்காதீர்கள். ஏனென்றால் எனது கேள்வி அவர்பாற் பட்டதல்ல. ☹️

அனேகமாக எனது கேள்விக்கு மிகப் பெரும்பாலும் ஒருவரும் ஒருவரையும் பிரேரிக்கப்போவதில்லை என நம்புகிறேன் 😀

கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் நான் அவன் இல்லை எண்டு ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதை வாசித்தால் இவர்கள் எல்லோருக்கும் பதில் கிடைக்கும். எனவே காப்பிதான் நீங்கள் இவர்களுக்கு பதில் எழுதி மேலும் நேரத்தை வீணாக்காதீர்கள். நிச்சயமாக அவர்கள் ஜெயராஜின் கருத்தை ஏற்றுக்கொள்ள மாடடார்கள். சொம்பு என்னும் படடத்தை மட்டுமே அவர்களால் வழங்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அனேகமாக எனது கேள்விக்கு மிகப் பெரும்பாலும் ஒருவரும் ஒருவரையும் பிரேரிக்கப்போவதில்லை என நம்புகிறேன்

தனி ஒருவராக இருக்க கூடாது என்பது முதலாவது மாற்ற முடியாத நிபந்தனை ஆக இருக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Robinson cruso said:

கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் நான் அவன் இல்லை எண்டு ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதை வாசித்தால் இவர்கள் எல்லோருக்கும் பதில் கிடைக்கும். எனவே காப்பிதான் நீங்கள் இவர்களுக்கு பதில் எழுதி மேலும் நேரத்தை வீணாக்காதீர்கள். நிச்சயமாக அவர்கள் ஜெயராஜின் கருத்தை ஏற்றுக்கொள்ள மாடடார்கள். சொம்பு என்னும் படடத்தை மட்டுமே அவர்களால் வழங்க முடியும்.

ஒருவருமே ஒருவரைத்தானு ஒருபோதும் ஒறுக்கப்போவதில்லை என்பது என் துணிபு. 😀

நான்இதுவரை சமூக வலைத்தளங்கள் எதிலும் இல்லை. (யாழ் தவிர) நிம்மதியாக இருக்கிறேன். 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.