Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டாரா?

Featured Replies

Just now, nedukkalapoovan said:

குறித்த செய்திக் குறிப்பை.. மீள கண்டறிந்து மீளாய்வு செய்து கருத்தெழுத நேரமின்மை காரணமாக ஏற்பட்ட கருத்துத் தவறு. அது திருப்படுதல் தவறன்று. திருத்தப்படுதல்.. கருத்தியல் பண்பாகும். கருத்தியல் பண்பற்றவர்களுக்கு அவல்.. வடை.. வாய்ப்பனாகவே தெரியும். 

எல்லாக்கருத்தும் அப்படித்தானே இருக்குது..

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

குறித்த செய்திக் குறிப்பை.. மீள கண்டறிந்து மீளாய்வு செய்து கருத்தெழுத நேரமின்மை காரணமாக ஏற்பட்ட கருத்துத் தவறு. அது திருப்படுதல் தவறன்று. திருத்தப்படுதல்.. கருத்தியல் பண்பாகும். கருத்தியல் பண்பற்றவர்களுக்கு அவல்.. வடை.. வாய்ப்பனாகவே தெரியும். 

அது மனிதனின் உயர்ந்த பண்பு, தவற்றை திருந்திய பின்னும் எள்ளி நகையாடுவது அழகல்ல ஒரு மனிதனுக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

குறித்த செய்திக் குறிப்பை.. மீள கண்டறிந்து மீளாய்வு செய்து கருத்தெழுத நேரமின்மை காரணமாக ஏற்பட்ட கருத்துத் தவறு. அது திருப்படுதல் தவறன்று. திருத்தப்படுதல்.. கருத்தியல் பண்பாகும். கருத்தியல் பண்பற்றவர்களுக்கு அவல்.. வடை.. வாய்ப்பனாகவே தெரியும். 

எனக்கும் குழப்பம் இருந்தது. குருபரனைப் பற்றித் தெரியும். ஆனால் மணிவண்ணனைப் பற்றி அதிகம் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Robinson cruso said:

எல்லாக்கருத்தும் அப்படித்தானே இருக்குது..

உங்களின் உளறலைத் தானே சொல்கிறீர்கள். டக்கி.. காவடி இன்னும் கனகாலத்துக்கு எடுபடாது. 

Just now, nedukkalapoovan said:

உங்களின் உளறலைத் தானே சொல்கிறீர்கள். டக்கி.. காவடி இன்னும் கனகாலத்துக்கு எடுபடாது. 

ஆனால் பதில் சொல்லமாடீர்கள். உளறல், பணம், சோம்பு எண்டு அதற்ககு பின்னல் கோழைகள் மாதிரி ஒளித்துக்கொள்ள வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Robinson cruso said:

ஆனால் பதில் சொல்லமாடீர்கள். உளறல், பணம், சோம்பு எண்டு அதற்ககு பின்னல் கோழைகள் மாதிரி ஒளித்துக்கொள்ள வேண்டாம்.

பதிலா.. கேள்விக்கே இடமில்லை. இதில் பதில். நீங்கள் டக்கிக்கு என்ன தான் சோப்பு போட்டு வெளிர்க்க வைக்க முயன்றாலும்.. தாடியரின் அடாவடி அபகரிப்பு அரசியல் எமக்கு எந்த விடிவையும் தராது என்பதை அநேக மக்கள் உணர்ந்தே உள்ளனர். என்ன வறுமைக் கோட்டின் கீழ் ஒரு சில பகுதி மக்களை வைச்சிருந்து அவர்களை வாக்குப் போட பாவிப்பதை மட்டும் செய்யலாம். அதுதான் வீணை காட்டும் அபகரிப்பு அபிவிருத்தி. 

Edited by nedukkalapoovan

Just now, nedukkalapoovan said:

பதிலா.. கேள்விக்கே இடமில்லை. இதில் பதில். நீங்கள் டக்கிக்கு என்ன தான் சோப்பு போட்டு வெளிர்க்க வைக்க முயன்றாலும்.. தாடியரின் அடாவடி அபகரிப்பு அரசியல் எமக்கு எந்த விடிவையும் தராது என்பதை அநேக மக்கள் உணர்ந்தே உள்ளனர். என்ன வறுமைக் கோட்டின் கீழ் ஒரு சில பகுதி மக்களை வைச்சிருந்து அவர்களை வாக்குப் போட பாவிப்பதை மட்டும் செய்யலாம். அதுதான் வீணை காட்டும் அபிவிருத்தி. 

டாக்குக்கு சோப்பு போடடதுமில்லை. போடப்போவதுமில்லை. இருந்தாலும் மக்கள் ஆதரவு அதிகரிப்பதை நீங்கள் உணர வேண்டும். அவர் சேவை செய்யவில்லை எண்டு சொல்லுவம்.

தமிழ் தேசியம் பேசி அங்கு போகின்றவர்கள் ரோட்டில் நின்று அவலப்படும் மக்களுக்கு, பட்டினியால் வாடும் மக்களுக்கு, வீடற்ற மக்களுக்கு என்ன செய்யபோகிறார்கள் எண்டு கேட்டு சொல்லுங்கள். வேறு ஒன்றும் தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கட்சி எடுத்த முடிவை மத்தியகுழுவில் கேள்வி கேட்டார் என குறிப்பிட்டு, மணிவண்ணனை கட்சியின் பொறுப்புக்களில் இருந்து நீக்கியதாக அறிவிப்பு.

இது கவுண்டமணியை செந்தில் ஒரு மாதத்துக்கு முன்னர் தேவாங்கு என்று சொன்னதுக்கு இப்போ வந்து அடிக்கிற நகைச்சுவை மாதிரி இருக்கு.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

எனக்கும் குழப்பம் இருந்தது. குருபரனைப் பற்றித் தெரியும். ஆனால் மணிவண்ணனைப் பற்றி அதிகம் தெரியாது.

நல்ல காலம் குருபரன் தப்பிட்டார் 
 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

குறித்த செய்திக் குறிப்பை.. மீள கண்டறிந்து மீளாய்வு செய்து கருத்தெழுத நேரமின்மை காரணமாக ஏற்பட்ட கருத்துத் தவறு. அது திருப்படுதல் தவறன்று. திருத்தப்படுதல்.. கருத்தியல் பண்பாகும். கருத்தியல் பண்பற்றவர்களுக்கு அவல்.. வடை.. வாய்ப்பனாகவே தெரியும். 

உங்கள் நாகரீகத்துக்கு நன்றி. இனிமேலாவது தயவு செய்து நின்று நிதானிச்சு என்ன எழுதுகிறோம் என்று யோசிச்சு பொறுமையா சுருக்கமாக எழுதுங்கோ அண்ணாச்சி. அது உங்களுக்கும் வாசிக்கிற ஆக்களுக்கும் நல்லது.😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணன் குறித்த முடிவை அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளோம்; கஜேந்திரகுமார்

August 15, 2020

gajen-300x151.png

 

“தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்தும், பேச்சாளர் பதவியிலிருந்தும் மணிவண்ணனை நீக்கும் முடிவை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளோம். இன்று அவருக்கு பதிவு தபாலில் அனுப்பி வைப்போம். அதை படித்து விட்டு அவர் தனது நிலைப்பாட்டை அறிவித்த பின்னர், மேலதிகமாக எமது நிலைப்பாட்டை தெரிவிப்போம்” என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழு கூடி ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்டன. விசேடமாக மணிவண்ணன் தொடர்பாக பேசி சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவுகளை நாங்கள் நேற்று இரவு எழுத்துமூலமாக மணிவண்ணனிற்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டது. அந்த அறிவித்தல் பதிவு தபாலில் இன்று அனுப்பி வைக்கப்படும். அதை படித்து விட்டு அவர் தனது நிலைப்பாட்டை அறிவித்த பின்னர், மேலதிகமாக எமது நிலைப்பாட்டை தெரிவிப்போம்” என்றார்.

 

http://thinakkural.lk/article/62615

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, முதல்வன் said:

உங்கள் நாகரீகத்துக்கு நன்றி. இனிமேலாவது தயவு செய்து நின்று நிதானிச்சு என்ன எழுதுகிறோம் என்று யோசிச்சு பொறுமையா சுருக்கமாக எழுதுங்கோ அண்ணாச்சி. அது உங்களுக்கும் வாசிக்கிற ஆக்களுக்கும் நல்லது.😀

உங்கள் அறிவுரைக்கு ரெம்ப நன்றி. அதெப்படி நாங்க அண்ணாச்சி.. தம்பியாச்சி..??! 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

பதவியேற்க முன்னமே பட்டம் கொடுத்தாயிற்று 🤣

இப்படித்தான் கருணாவைப்பற்றித் தேசியத்தலைவருக்கு நிறைய முறைப்பாடுகள் சென்றன் ஆனால் அதை அவர் நம்பவில்லை இறுதிவரை அவன் என்னால் வளர்க்கப்பட்டவன் ஆகவே பிழைவிடமாட்டான் என்னை ஒருக்கால் அவன் சந்திச்சபின்பு  பாருங்கோவன் எனக்கூறியவர். 

சமூகம்பற்றிய  அக்கறை இருக்கவேண்டும் ஆனால் மணிவண்ணன் நீதிமன்றில் ஆயராகும் வழக்குகள் எல்லாமே யாழ் குடாநாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடும் காடையர்கூட்டத்தினதாகும். இந்தக்காடையர்கள்தான் சுதுமலையில் நடைபெறவிருந்த கூட்டத்தைக் கலைச்சவையள் சும்ம இல்லை வாள் கத்திகொண்டு. அடுதநாள் கஜனையும் கஜேந்திரனையும் மணிவண்ணன் சந்திச்சவர் ஆனால் இதுபற்றி அவர் வாய்திறக்கவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்தது அது எனது கைகளை மீறிப்போய்விட்டது எதிர்காலத்தில் இப்படி நடக்காது என எதுவும் கூறவில்லை.

மணிவண்ணனை கட்சியிலிருந்து முழுவதுமாக அகற்றவில்லை  அவரது பதவிகளைத் திரும்பப்பெறப்பட்டிருக்கு இல்லையேல் சுமந்திரனைப்போல் அவரும் செய்தித் தொடர்பாளராக கண்டதையும் கூறி குழப்புவார் சுதுமலைக் கூட்டத்தைக் குழப்பிப்போட்டு ஒண்டும் தெரியாதவராக நின்றவர் நாளை எதுவும் செய்யமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்.

  • கருத்துக்கள உறவுகள்

மணி நீக்கப்பட்டதற்கு காரணம் என்ன..? சில்லறை காரணத்தை கூறிய தமிழ்தேசிய மக்கள் முன்னணி..

Mani-TNPF-Vakeesam-01-1024x976.jpg

மணிவண்ணன் தமிழ்தேசிய மக்கள் முன்னணியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு கட்சியின் மத்திய குழு சில சில்லறை காரணங்களை முன் வைத்திருக்கின்றது.

குறிப்பாக கடந்த முறை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தமை.

நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது சிறு சிறு குழுக்களை அமைத்து செயற்பட்டமை.

புலம்பெயர் தேசத்தில் கட்சிக்கு எதிராக செயற்படுபவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட நபர்களுடன் தொடர்புகளை பேணியமை.

ஆகிய குற்றங்கள் மணிவண்ணன் மீது சுமத்தப்பட்டுள்ளது.

https://jaffnazone.com/news/19915

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Elugnajiru said:

இப்படித்தான் கருணாவைப்பற்றித் தேசியத்தலைவருக்கு நிறைய முறைப்பாடுகள் சென்றன் ஆனால் அதை அவர் நம்பவில்லை இறுதிவரை அவன் என்னால் வளர்க்கப்பட்டவன் ஆகவே பிழைவிடமாட்டான் என்னை ஒருக்கால் அவன் சந்திச்சபின்பு  பாருங்கோவன் எனக்கூறியவர். 

என்ன துணிச்சல் இருந்தால் இப்படி தேசியத்தலைவரின் தலைமைத்துவ முடிவுகளிலே குற்றம் காண்பீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் எப்போதாவது வரவேண்டும்தானே

இப்படித்தான் தேசியத்தலைவரது வீரச்சவை அறிவிப்பதில் நீண்டகாலம் இழுத்தடிச்சனீங்கள். இன்னமும் நிறையவே இருக்கு காலம் கருதி எழுதாமல் இருக்கிறேன்.

 

நீங்கள்  நக்கலாக எழுதாமல் உணர்வாக எழுதினால் என்னால் சொல்லக்குடியது என்னவெனில் "சுடுங்கோ என்னை"

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணன் தொடர்பான விவகாரத்தின் உண்மை நிலையை கட்சியும் மணிவண்ணனும் தெளிவு படுத்த வேண்டும்.கட்சியின் கொள்கைக்கு எதிராக பொதுவெளியில் மணிவண்ணனின் செயற்பாடோ பேச்சுக்கள் இருக்கவில்லை.பிரிவது ,பிரிப்பது சுலபம் சேர்ப்பது கடினம் .இதை இரண்டு தரப்பும் உணரவேண்டும்.கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் வருமிடத்து அனைவரும் கலந்து பேசி பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துடன் இணைந்து(மனக்கசப்புகள் இருப்பினும்)செயற்படவேண்டும். ஆதரவளித்த மக்களை வெறுப்பேற்றும் முயற்சிகளை செய்ய வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.வெண்ணை திரண்டு வரும்போது தாளியை உடைக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Elugnajiru said:

இப்படித்தான் கருணாவைப்பற்றித் தேசியத்தலைவருக்கு நிறைய முறைப்பாடுகள் சென்றன் ஆனால் அதை அவர் நம்பவில்லை இறுதிவரை அவன் என்னால் வளர்க்கப்பட்டவன் ஆகவே பிழைவிடமாட்டான் என்னை ஒருக்கால் அவன் சந்திச்சபின்பு  பாருங்கோவன் எனக்கூறியவர். 

சமூகம்பற்றிய  அக்கறை இருக்கவேண்டும் ஆனால் மணிவண்ணன் நீதிமன்றில் ஆயராகும் வழக்குகள் எல்லாமே யாழ் குடாநாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடும் காடையர்கூட்டத்தினதாகும். இந்தக்காடையர்கள்தான் சுதுமலையில் நடைபெறவிருந்த கூட்டத்தைக் கலைச்சவையள் சும்ம இல்லை வாள் கத்திகொண்டு. அடுதநாள் கஜனையும் கஜேந்திரனையும் மணிவண்ணன் சந்திச்சவர் ஆனால் இதுபற்றி அவர் வாய்திறக்கவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்தது அது எனது கைகளை மீறிப்போய்விட்டது எதிர்காலத்தில் இப்படி நடக்காது என எதுவும் கூறவில்லை.

மணிவண்ணனை கட்சியிலிருந்து முழுவதுமாக அகற்றவில்லை  அவரது பதவிகளைத் திரும்பப்பெறப்பட்டிருக்கு இல்லையேல் சுமந்திரனைப்போல் அவரும் செய்தித் தொடர்பாளராக கண்டதையும் கூறி குழப்புவார் சுதுமலைக் கூட்டத்தைக் குழப்பிப்போட்டு ஒண்டும் தெரியாதவராக நின்றவர் நாளை எதுவும் செய்யமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்.

நான் சொல்லேல்ல தீவிர தமிழ் தேசியம் கதைப்பவர்கள் தலைவரை துரோகி என்று சொல்லும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை என்று அது தான் நடந்து கொண்டு இருக்குது.

எனக்கு உண்மையிலேயே மணிவண்ணனை பற்றி தெரியாது ...ஒத்துக் கொள்கிறேன் ....என்னுடைய கேள்வி எல்லாம் ஒன்றே ஒன்று தான்  அவரில் பிழை இருந்தால், ஏன் அவருக்கு தேர்தலில் சீட்டு கொடுத்தனீங்கள்?
 

தேசியத்திற்கு  எதிராக செயற்படுகிறார்  என்று அவரை போட்டுத்தள்ளும் காலம் போய் அவரை நீக்கியுள்ளோம் என்று கூறும் காலம் வந்தது ஒரு முன்னேற்றம் தான். தமிழ் தேசியததிற்காக  போராடுபவர்களுக்கு காலம் அளித்த நிர்ப்பந்தம்.  இவ்வாறாக நிர்பந்தங்களால் மட்டும் எமது செயல்முறைகளை மாற்றுவதோடு நின்றுவிடாது நாமாவே எமது தவறுகளை உணர்ந்து எம்மை மாற்றிக்கொண்டு தமிழ் தேசியத்ததை மிளிரவைக்க எமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.