Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு மயூரபதி பத்ரகாளி அம்மன் கோயில், அறங்காவலர் குழு மோசடிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மயூரபதி பத்ரகாளி அம்மன் கோயில், அறங்காவலர் குழு மோசடிகள்

இந்த ஆலயம் சாதாரண தமிழ், சிங்கள மக்களை மட்டுமல்ல, பணக்காரர்களையும், அரசியல்வாதிகளையும் கூட பக்தர்களாக கொண்டது.

2014ம் ஆண்டில் விஸ்தரிப்பு, மற்றும் புனரமைப்பு வேலைகளை தொடங்கி, பக்த கோடிகளிடம் பெரும் பணத்தை திரட்டியது.

ஆனாலும் இன்று வரை வேலைகள் முடியவில்லை. காரணம் பணமோசடி.

இந்த மோசடியின் அளவு பெரும் அதிர்சிகளை தந்துள்ளது.

இலங்கை பொலீசார், இந்திய பொலீசார், அமெரிக்க FBI என்று கிளறக் கிளற பெரும் பூதங்கள் கிளம்புகின்றன.

கோவில் விஸ்தரிப்பதாக பக்தரிடம் பணம் பறித்து, அந்த பணத்தை ஆட்டையைப் போட்டு, இந்தியாவில் பெரும் மோசடித் திட்டத்துக்கு முதலீடாக்கி உள்ளனர் என்பதே குற்றச்சாட்டாக உள்ளது. 

இந்தியாவில் ரைராணியம் அகழ்வு செய்கிறோம் என்று பலரை ஏமாத்தியுள்ளனர். இதனை நிஜமான புரஜக்ட் ஆக காட்ட, இந்திய அதிகாரிகளுக்கு, இந்த US$18.5m புரஜக்ட் தொடர்பில், இலஞ்சம் தரப்பட்டுள்ளது. பின்னர் அமெரிக்காவிலும் இந்த புரஜக்ட் தொடர்பில் நிதி திரட்டப்பட்டுள்ளது.

சாதரண இலங்கை கோவில் ஒன்றின் அறங்காவலர் குழுவின் சர்வதேச அளவு மோசடிகள் அதிரவைக்கின்றன.

அறங்காவலர் குழுவில் உள்ள இந்தியரான, சுந்தர் எனப்படும் பெரியசாமி சுந்தரலிங்கம் மீதே மூன்று நாட்டு விசாரணைகள் குவிக்கப்படுகின்றன.

இடையே, இலங்கை பொலீசாருக்கு, இந்தியாவில் நடக்கும் வியாபாரம் குறித்து விசாரணை செய்யும் அதிகாரம் இல்லை என்கிறார் அவர்.

ஆயினும் அமெரிக்க FBI விசாரணை முன்னெடுப்பே, இலங்கை, இந்திய விசாரணைகளை ஒன்றினைப்பதாக தெரிகிறது.

முழு விபரம் விசாரணை முடிவில் வரலாம்.

http://www.dailymirror.lk/recomended-news/Extortion-in-the-name-of-Devotion/277-194061

இது தொடர்பில் கொழும்பு நண்பர் சொன்னார்.

பெரும் அரசியல் செல்வாக்கு மிக்க, மகிந்தா போன்றோர் வந்து போகிற பணபலமிக்க கோவில், அயலவர்கள் விஸ்தரிப்புக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்பதால் இழுக்கப்படுகிறது என்று பக்கா பிஸ்னஸ் காரரான சுந்தர் அய்யா கதை விட்டு கொண்டிருந்த போதே நினைத்தேன், ஏதோ சரியில்லை என்று...

image_94b95893f0.jpg

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன ஆச்சரியம், மோசடி செய்ய தான் மதம் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கோவில் கொழும்பில் எங்குள்ளது?

  • கருத்துக்கள உறவுகள்

பாமன் கடைக்கு பக்கத்திலை, பழைய வெள்ளவத்தை  நெசவு தொழிற்சாலைக்கு அருகில்.
தமிழரை விட சிங்களவர் தான் அதிகம் போவார்கள். சனத் ஜெயசுரியா தீவிர பக்தன்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, zuma said:

பாமன் கடைக்கு பக்கத்திலை, பழைய வெள்ளவத்தை  நெசவு தொழிற்சாலைக்கு அருகில்.
தமிழரை விட சிங்களவர் தான் அதிகம் போவார்கள். சனத் ஜெயசுரியா தீவிர பக்தன்.

ஓ சரி நன்றி சும்மா.

  • கருத்துக்கள உறவுகள்

Mayurapathy Sri Bathrakali Amman Kovil Sri Lanka, 17A, Mayura ...

இரண்டு முறை இந்தக் கோவிலுக்கு... சென்றுள்ளேன்.
சர்வதேசம் விசாரிக்கின்ற அளவுக்கு... ஊழல் நடந்திருக்கின்றது என்று எதிர்பார்க்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தக் கோவில் கொழும்பில் எங்குள்ளது?

ஏன் காவடி/பால் செம்பு எடுக்கவோ? :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நில்மினி லைக் போட்டிருக்கிறா....

 

ஏன் என்று யோசிக்கிறேன்... 🤔

 

செய்திக்கா அல்லது மோசடிக்கா 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

Mayurapathy Sri Bathrakali Amman Kovil Sri Lanka, 17A, Mayura ...

இரண்டு முறை இந்தக் கோவிலுக்கு... சென்றுள்ளேன்.
சர்வதேசம் விசாரிக்கின்ற அளவுக்கு... ஊழல் நடந்திருக்கின்றது என்று எதிர்பார்க்கவில்லை.

பழைய கோவிலுக்கோ இல்லை புது கோயிலுக்கோ..😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, Nathamuni said:

நில்மினி லைக் போட்டிருக்கிறா....

 

ஏன் என்று யோசிக்கிறேன்... 🤔

 

செய்திக்கா அல்லது மோசடிக்கா 😎

 நில்மினிக்கு மயுராபதி அம்மன் கோவில் விசயம் கனக்க தேரிஞ்சிருக்கும் போலை...😎

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, zuma said:

இதில் என்ன ஆச்சரியம், மோசடி செய்ய தான் மதம் இருக்கின்றது.

செய்த, செய்கிற மோசடிகளை மறைக்கவும் மதத்தை பயன்படுத்தலாம். ஏமாந்தவர்கள் இருக்கும்வரை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஏன் காவடி/பால் செம்பு எடுக்கவோ? :grin:

கொழும்பில் நின்ற காலங்களில் நண்பர் ஒருவரின் வேண்தலினால் ஒவ்வொரு சனியும் போவோம்.
மதியம் சாப்பாடு பிரசாதம் பிரமாதமாக இருக்கும்.இதுக்காகவே போவோம்.
அது வெங்கடேஸ்வரர் கோவிலாக இருக்கலாம்.
தெகிவளையில் இருந்து உள்ளே போகும் வீதி(களுபோவில ஆக இருக்கலாம்)
நிறைய கூட்டமாக இருந்தாலும் தாராளமாக சாப்பாடு இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ தான் ஞாபகம் வருகிறது 
இது விஸ்ணு கோவில்.

சனிக்கிழமை அல்ல
ஞாயிற்றுக்கிழமை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

நில்மினி லைக் போட்டிருக்கிறா....

 

ஏன் என்று யோசிக்கிறேன்... 🤔

 

செய்திக்கா அல்லது மோசடிக்கா 😎

 

4 hours ago, குமாரசாமி said:

 நில்மினிக்கு மயுராபதி அம்மன் கோவில் விசயம் கனக்க தேரிஞ்சிருக்கும் போலை...😎

நில்மினியிடமிருந்து.... மேலதிக ✍  தகவல்களை,  ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம். 🙂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிக்கா அம்மையார் காலத்தில் டக்கியரும் நிர்வாகத்தை வெருட்டி.. சம்திங் சம்திங் வாங்கினதாக செய்திகள் அடிபட்டன.

நான்.. இந்தக் கோவிலுக்கு போவதுண்டு. நல்ல கொழும்பு உற்பத்தி.. வெள்ளை பிகருகள் பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 19/8/2020 at 17:18, zuma said:

பாமன் கடைக்கு பக்கத்திலை, பழைய வெள்ளவத்தை  நெசவு தொழிற்சாலைக்கு அருகில்.
தமிழரை விட சிங்களவர் தான் அதிகம் போவார்கள். சனத் ஜெயசுரியா தீவிர பக்தன்.

உங்க ஆள் கோத்தா போறதில்லையோ இந்த கோயிலுக்கு ?

சிங்களவன் கிண்ணியாவில் பிள்ளையார் கோவிலை உடைக்கிறான் இங்கு பக்த்தனாக வருகிறான் இதைப்பார்த்து பிக்குகள் குரைப்பதில்லையாக்கும் அவ்வளவு பயமாக்கும் இந்த அம்மனிடம் சிங்களவர்களுக்கும் அத்துடன்  zuma வுக்கும் போல் தெரிகிறது இந்த திரியில்  முதலாவது கருத்தும் அதன் பின் வந்த கருத்தும் 😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, nedukkalapoovan said:

சந்திரிக்கா அம்மையார் காலத்தில் டக்கியரும் நிர்வாகத்தை வெருட்டி.. சம்திங் சம்திங் வாங்கினதாக செய்திகள் அடிபட்டன.

நான்.. இந்தக் கோவிலுக்கு போவதுண்டு. நல்ல கொழும்பு உற்பத்தி.. வெள்ளை பிகருகள் பார்க்கலாம். 

ஆகா இவரும் அம்மன் பக்தர்.😎

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nedukkalapoovan said:

சந்திரிக்கா அம்மையார் காலத்தில் டக்கியரும் நிர்வாகத்தை வெருட்டி.. சம்திங் சம்திங் வாங்கினதாக செய்திகள் அடிபட்டன.

நான்.. இந்தக் கோவிலுக்கு போவதுண்டு. நல்ல கொழும்பு உற்பத்தி.. வெள்ளை பிகருகள் பார்க்கலாம். 

நாங்கள் இந்த கோயிலுக்கு போறது இதுக்குத் தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, வாதவூரான் said:

நாங்கள் இந்த கோயிலுக்கு போறது இதுக்குத் தான்

சனம் வரிசையிலை வருது.....😄

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

சனம் வரிசையிலை வருது.....😄

சாமி தரிசனம் பெறவோ? 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

சாமி தரிசனம் பெறவோ? 

சாமி + ஸ்திரி தரிசனம் பெற. 

அந்தக் காலத்தில் இருந்து எங்க காலம் ஊடாக இந்தக் காலம் வரை.. இது தான் கதி. மேடை ஒன்று தான் ஆடும் ஆட்கள் வேறு. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 19/8/2020 at 18:53, தமிழ் சிறி said:

 

நில்மினியிடமிருந்து.... மேலதிக ✍  தகவல்களை,  ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம். 🙂

இப்பதான் குமாரசாமி அண்ணாவும் சிறியும் இங்கையும்  என்னை தேடியிருக்கினம் என்று பார்த்தேன். 

1885 ஆம் ஆண்டளவில் வெள்ளவத்தை நெசவு தெழிற்சாலை கட்டுவதற்காக தமிழ் நாடு மற்றும் கேரளாவில் இருந்து வந்த தொழிலார்களை  சிறு தொடர்வீடுகளில்  அமர்த்தினார்கள். அதில் ஒரு சிறு வீடு கோயிலாக மாற்றப்பட்டு அந்த தொழிலார்கள் பத்திரகாளியை கும்பிட்டு வந்தார்கள். 1970' களில் ஒரு சிறிய பழமை வாய்ந்த, நிறைய தமிழர்களால் விரும்பப்பட்ட ஒரு கோயிலாக இருந்தது. அப்போதே மிகவும் பக்தி கொண்ட நிறைய சிங்கள மக்கள்  இந்த கோவிலுக்கு வருவார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வியாபார மயமாக்கப்பட்ட பின் நான் போவதில்லை. 1990' களில் புதுசு புதுசாக பூசைகள் என்று துடங்கி பெண்கள் எல்லோரும் தலையில் செம்புடன் காலி வீதியில் எல்லாம் ஊர்வலம் போவார்கள். எனக்கு இவையெல்லாம் அனாவசியமான எமது இலங்கை தமிழர்களின் வழிபாடு முறையில் இருந்து  வேறுபட்ட  விதமாக பட்டது. நிறய காலத்துக்கு பிறகு ஒருமுறை போயிருந்தேன் . அரசாங்கம் வழங்கிய நிலத்தை பாவித்து கோவிலை பெருசாக கட்டியிருக்கிறார்கள். தனியாக சிங்களத்தில் மட்டும் அறிவிப்பு பலகைகள் இருந்தன. ஏன் என்று கேட்டேன். தமிழ் பக்தர்களுக்கு என்ன செய்ய வேணும்  என்று தெரியும். சிங்கள பக்தர்கள் தெரியாமல் பிழையாக ஏதும் செய்துவிடக்கூடாது என்பற்காக தான் என்று சொன்னார்கள். எனக்கு என்னவோ அந்த பழய கோயிலும் பூசை முறைகளும் தான் விருப்பம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 19/8/2020 at 13:30, குமாரசாமி said:

ஏன் காவடி/பால் செம்பு எடுக்கவோ? :grin:

😂 ஈழப்பிரியன் அண்ணாவை பால் செம்பு , காவடியுடன் எப்படி இருப்பார் என்று கற்பனை பண்ணிப்பார்க்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nilmini said:

😂 ஈழப்பிரியன் அண்ணாவை பால் செம்பு , காவடியுடன் எப்படி இருப்பார் என்று கற்பனை பண்ணிப்பார்க்கிறேன்

ஈழப் பிரியனுக்கு.... முதுகு நோ, இருக்கிற படியால்...
காவடி... எல்லாம், இப்ப   எடுக்க முடியாது.  

நீங்கள், அவரின்... முதுகு நோவை, குணப்படுத்தினால்...
வாற வருசம்... குமாரசாமி அண்ணையும், ஈழப் பிரியனும்...
தூக்கு காவடி எடுப்பார்கள்... என்பது நிச்சயம்.  

  • கருத்துக்கள உறவுகள்

அட.... இந்தப் பதிவுக்குள், நேற்று... 
றொபின்சன் குருசோ.. எழுதிய சீண்டல்  கருத்தையும்,
அதற்கு நான்,  சாமர்த்தியமாக எழுதிய  பதிலையும்...  இன்று காணவில்லை. 😮

அதனை... நிர்வாகம் நீக்கியதும், சரியே...  :grin:

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.