Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா அண்மையில் வெளியிட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயரும் தொடர்ந்து இடம்பெறுகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 17/1/2021 at 23:58, குமாரசாமி said:

2009க்கு பின்னர் யார் யாரெல்லாம் புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர் சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றார்கள்?

நல்லகேள்வி, 2008 ஆம் ஆண்டு வரை எந்தொரு தனி நபரும்..விழிப்புணரவு நிகழ்ச்சிகள்..நடத்தியதில்லை..தமிழ்ஈழவிடுதலைப்புலிகளின் எற்பட்டிலேயே நடந்தது..1=தொலைபேசிமுலம் அறிவிப்பார்கள்.

2=எங்கள் தபால்பெட்டியில் நோட்டிஸ் போடுவார்கள.

3=மேலே சென்ன இரண்டையும் செய்வார்கள்.

விழிப்புணர்வு நிகழ்வுகள் மேலிடத்து உத்தரவுப்படியே செய்வதாய் இங்கே கூறுவார்கள். மேலிடமென்பது..கிளிநொச்சி  [இலங்கை]மற்றும்..ஓபர்கவுசன்.[ஜேர்மானி].ஆகும்.

2009க்குப்பின் மேலிடமில்லை..எனவே  விழிப்பணர்ச்சியில்லை..நான் அல்லது என்னைப்போன்ற தனிநபர்கள் விழிப்பணர்ச்சி நிகழ்வு நடத்தினால்  ஐந்து...பத்து...பேர்கூட வரமட்டார்கள்..

  • Replies 80
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தது என்று வெடி கொளுத்தி, ஆரவாரித்த கதை ஒன்றை தொடர்ந்து  அதில்  தாங்கள் கதாநாயகர்களாக கற்பனையிலாவது வலம் வரவேண்டும்  என்கின்ற  பலரது  ஆசையே: புலிகள் உயிர்ப்பு,  தடை  நாடகம். அவர்களுக்கே தெரியாது ஏன் தடை போடுகிறோம் என்று. வழமையானசெயல் ஒன்று  என்று நினைத்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
57 minutes ago, Kandiah57 said:

நல்லகேள்வி, 2008 ஆம் ஆண்டு வரை எந்தொரு தனி நபரும்..விழிப்புணரவு நிகழ்ச்சிகள்..நடத்தியதில்லை..தமிழ்ஈழவிடுதலைப்புலிகளின் எற்பட்டிலேயே நடந்தது..1=தொலைபேசிமுலம் அறிவிப்பார்கள்.

2=எங்கள் தபால்பெட்டியில் நோட்டிஸ் போடுவார்கள.

3=மேலே சென்ன இரண்டையும் செய்வார்கள்.

விழிப்புணர்வு நிகழ்வுகள் மேலிடத்து உத்தரவுப்படியே செய்வதாய் இங்கே கூறுவார்கள். மேலிடமென்பது..கிளிநொச்சி  [இலங்கை]மற்றும்..ஓபர்கவுசன்.[ஜேர்மானி].ஆகும்.

2009க்குப்பின் மேலிடமில்லை..எனவே  விழிப்பணர்ச்சியில்லை..நான் அல்லது என்னைப்போன்ற தனிநபர்கள் விழிப்பணர்ச்சி நிகழ்வு நடத்தினால்  ஐந்து...பத்து...பேர்கூட வரமட்டார்கள்..

ஒருங்கிணைப்பு சரியாக இருந்தால் மீண்டும் கூடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

ஒருங்கிணைப்பு சரியாக இருந்தால் மீண்டும் கூடுவார்கள்.

மிக்கநன்றி ,நல்லது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, Kandiah57 said:

மிக்கநன்றி ,நல்லது

பதில் திருப்தியாக இல்லை. ஏதோ மனதுக்குள் வைத்திருக்கின்றீர்கள்?????

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பதில் திருப்தியாக இல்லை. ஏதோ மனதுக்குள் வைத்திருக்கின்றீர்கள்?????

கந்தையா...அண்ணை, எதையோ... சொல்ல வாறார்  போலை கிடக்கு.
அந்த வார்த்தைகள்... ஏன்,   துல்லியமாக.. வர மாட்டுதாம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 17/1/2021 at 16:23, விளங்க நினைப்பவன் said:

அவர் அப்படி தான். முன்பு ஒரு முறை நான் நான் நிலாந்தன் கட்டுரையை விமர்சித்ததற்கு நிலாந்தன் அறிவானவர் அவர் கட்டுரையை விளங்கி கொள்வதற்கு அறிவு வேண்டும் என்றவர் 🤣

எங்கேயையாயாயாயா எழுதினேன்... 🤣🤣🤣

ஒருக்கா காட்டுங்கோஓஓஓஓஒ மறந்து போட்டன்... 😂😂

4 hours ago, Kandiah57 said:

நல்லகேள்வி, 2008 ஆம் ஆண்டு வரை எந்தொரு தனி நபரும்..விழிப்புணரவு நிகழ்ச்சிகள்..நடத்தியதில்லை..தமிழ்ஈழவிடுதலைப்புலிகளின் எற்பட்டிலேயே நடந்தது..1=தொலைபேசிமுலம் அறிவிப்பார்கள்.

2=எங்கள் தபால்பெட்டியில் நோட்டிஸ் போடுவார்கள.

3=மேலே சென்ன இரண்டையும் செய்வார்கள்.

விழிப்புணர்வு நிகழ்வுகள் மேலிடத்து உத்தரவுப்படியே செய்வதாய் இங்கே கூறுவார்கள். மேலிடமென்பது..கிளிநொச்சி  [இலங்கை]மற்றும்..ஓபர்கவுசன்.[ஜேர்மானி].ஆகும்.

2009க்குப்பின் மேலிடமில்லை..எனவே  விழிப்பணர்ச்சியில்லை..நான் அல்லது என்னைப்போன்ற தனிநபர்கள் விழிப்பணர்ச்சி நிகழ்வு நடத்தினால்  ஐந்து...பத்து...பேர்கூட வரமட்டார்கள்..

யாழ் களமிருக்கே.. 👍

On 17/1/2021 at 16:08, Kandiah57 said:

நான் இளைஞனாக இருந்தபோது எல்லாம் தெரியும் என நினைத்தேன் .கொஞ்சம்  வயதானபோது கொஞ்சம் தான் தெரியும் என உணர்த்தேன்.  முதிர்ச்சி அடைத்தபோது தான் தெரிந்தது எனக்கு எதுவும் தெரியாது என்று இப்படிச்சென்னவர்    .சாக்ரடீஸ் எனற அறிஞர். அத்த சாக்ரடீஸ்  வாரிசு இங்கேயிருப்பதைக்கண்டேன்.  நன்றி😄😎

அந்த வயதானவரை என்னுடன் ஒப்பிடாதீர்கள் பிளீஸ். இன்னும் கொஞ்சக் காலம் இளமையோடிக்க விரும்புகிறேன்... 🙏

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

பதில் திருப்தியாக இல்லை. ஏதோ மனதுக்குள் வைத்திருக்கின்றீர்கள்?????

ஆம் உண்மை, முன்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தவர்களால், விழிப்பணர்வு நிகழ்வுகளை ஒழுங்கு செய்யமுடியும்..ஆனால் அவர்கள் செய்யமாட்டார்கள்..எனெனில் ..மக்கள் ..அவர்களை..கேள்வி. கேட்ப்பார்கள் முதலிட்டுக்கு என்ன நடத்தது?..கடைசியாகச்சேர்த்த 2000.  த்தைத்திருப்பி தா என்பார்கள்..😁😎

 

19 hours ago, தமிழ் சிறி said:

கந்தையா...அண்ணை, எதையோ... சொல்ல வாறார்  போலை கிடக்கு.
அந்த வார்த்தைகள்... ஏன்,   துல்லியமாக.. வர மாட்டுதாம். 

தமிழ்ஈழவிடுதலைப்புலிகள் தடை என்று சொல்லப்படுகின்றபோதும்..அது உண்மையில்..செயலில்..தமிழ் மக்களின். விடுதலக்கான தடையேயாகும்..சுவிஸ்சில்..நிதி சேகரிந்து தமிழ்ஈழ்விடுதலைப்பலிகளுக்கு அனுப்பியது தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது..கீழ் நீதிமன்றத்தில்..தமிழ்ஈழவிடுதலைப்புலிகள் பயங்கரவாதயமைப்புயில்லை .மாறக..தமிழ்மக்களின்.  விடுதலைக்காக போராடியமைப்பாகும் .என்றும்,நிதிசேகரிப்பில் முறைகேடு நடக்கவில்லையென்றும். தீர்ப்பு வழங்கியது..சுவிஸ்யரசு எதிர்த்து மேல்முறையிடு செய்தது .மேல்நீதிமன்றிலும் இதே தீர்ப்பு வழங்கப்பட்டது..இப்போ சுவிஸ்யரசு மீண்டும் எதிர்க்கவுள்ளது..இந்தத்தீர்ப்பை  இப்படியேவிட்டால்..,தமிழ்மக்களின் விடுதலைப்போரை அங்கிகரிக்கும்படி சுவிஸ்தமிழர்கள் கோரலாம்..சுவிஸ்யரசும் எற்க்கவேண்டி ஏற்ப்படும்..விடுதலைப்புலிகள் தடை மற்றநாடுகளில் .எடுக்கவேண்டியும் வரலாம்..எதற்க்கும் இந்த வழக்கு வெற்றிபெற குமாரசாமியண்ணை ஒர் அர்ச்சனை செய்வார் என நம்புவோம்...😜துல்பனுக்கு இதுபற்றி கூடுதல் விபரம்  தெரிந்திருக்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

எங்கேயையாயாயாயா எழுதினேன்... 🤣🤣🤣

ஒருக்கா காட்டுங்கோஓஓஓஓஒ மறந்து போட்டன்... 😂😂

யாழ் களமிருக்கே.. 👍

அந்த வயதானவரை என்னுடன் ஒப்பிடாதீர்கள் பிளீஸ். இன்னும் கொஞ்சக் காலம் இளமையோடிக்க விரும்புகிறேன்... 🙏

நிச்சயமாக,நீங்களும்,உங்கள் கருத்துகளும் ,ஆரோக்கியத்துடனும்,இளமையுடனும் இருப்பதை நாங்களும் விரும்புகிறோம்..😁👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
59 minutes ago, Kandiah57 said:

ஆம் உண்மை, முன்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தவர்களால், விழிப்பணர்வு நிகழ்வுகளை ஒழுங்கு செய்யமுடியும்..ஆனால் அவர்கள் செய்யமாட்டார்கள்..எனெனில் ..மக்கள் ..அவர்களை..கேள்வி. கேட்ப்பார்கள் முதலிட்டுக்கு என்ன நடத்தது?..கடைசியாகச்சேர்த்த 2000.  த்தைத்திருப்பி தா என்பார்கள்..😁😎

புலம்பெயர் தேசங்களில் காசு சேர்த்தவர்கள் மட்டும்தான் இருக்கின்றார்களா? 
ஏனைய பலர் இருக்கின்றார்களே? அதாவது புலிகளுக்கு எதிரான ஈழம் விரும்பிகள்? இப்போது அவர்கள் எங்கே போனார்கள்? புலிக்கொடி இல்லாமல் ஏதாவது செய்யலாமே?
ஒரு குடையின் கீழ் என்றவர்கள் இன்று எங்கே போனார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

புலம்பெயர் தேசங்களில் காசு சேர்த்தவர்கள் மட்டும்தான் இருக்கின்றார்களா? 
ஏனைய பலர் இருக்கின்றார்களே? அதாவது புலிகளுக்கு எதிரான ஈழம் விரும்பிகள்? இப்போது அவர்கள் எங்கே போனார்கள்? புலிக்கொடி இல்லாமல் ஏதாவது செய்யலாமே?
ஒரு குடையின் கீழ் என்றவர்கள் இன்று எங்கே போனார்கள்?

நடக்கிற காரியமா... 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

புலம்பெயர் தேசங்களில் காசு சேர்த்தவர்கள் மட்டும்தான் இருக்கின்றார்களா? 
ஏனைய பலர் இருக்கின்றார்களே? அதாவது புலிகளுக்கு எதிரான ஈழம் விரும்பிகள்? இப்போது அவர்கள் எங்கே போனார்கள்? புலிக்கொடி இல்லாமல் ஏதாவது செய்யலாமே?
ஒரு குடையின் கீழ் என்றவர்கள் இன்று எங்கே போனார்கள்?

புலிகளுக்கு எதிரான ஈழம் விரும்பிகள் எங்கும் போகவில்லை இங்குதான் இருக்கிறார்கள். அவர்கள் கோவில்களை வைத்துப் பராமரித்து, அதற்குள் யாழ்ப்பாணத்தான், காரைதீவான், புங்குடுதீவான் என்று புடுங்குப்பட்டு, புங்குப்பாட்டை நீதிமன்றங்கள்வரையில் கொண்டுசென்று, இங்குள்ள சட்டத்தரனிகள் மேலும் செல்வம் சேர்த்து வாழ்வதற்குப் பெரும் தொண்டு புரிந்து வருகிறார்கள்.

புலம்பெயர் தேசங்களில் காசு சேர்த்தவர்களும், பள்ளிக்கூடங்களையும் கூடவே பள்ளிக்கூடத்தால் கோவில்களையும் பராமரித்து, தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துவராத கோவில் நிர்வாகிகளையும், பூசாரிகளையும் அடிக்கடி மாத்திக் கல்வியையும், பக்தியையும் உங்கள் பிள்ளைகள் பெறவேண்டுமாயின் எங்களை ஆதரியுங்கள் என்று புலிக்கொடியையும் காட்டிப் பெற்றோரைக் குழப்பி இன்றும் மீன்பிடித்து வருகிறார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

புலம்பெயர் தேசங்களில் காசு சேர்த்தவர்கள் மட்டும்தான் இருக்கின்றார்களா? 
ஏனைய பலர் இருக்கின்றார்களே? அதாவது புலிகளுக்கு எதிரான ஈழம் விரும்பிகள்? இப்போது அவர்கள் எங்கே போனார்கள்? புலிக்கொடி இல்லாமல் ஏதாவது செய்யலாமே?
ஒரு குடையின் கீழ் என்றவர்கள் இன்று எங்கே போனார்கள்?

ஒன்றை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்..நான்இங்கு  யாழ்களத்தில் அடிபடவும் ..தமிழர்களை பிளவுபடுத்தவும் வரவில்லை..இதுபோன்றநடவடிக்கைகள்.   தமிழ்ஈழம் மலர்வதைப்பாதிக்கும்..இலங்கையில் போர் முடியும்வரை ,இலங்கையிலும்,  வெளிநாடுகளிலும் புலிகள் தவிர மற்றவர்கள் போராடுவது தடுக்கப்பட்டிருந்தது..இலங்கையிலுள்ளவர்கள் , புலிகளால் ,தமிழ்தேசியகூட்டமைப்புடன் இணைக்கப்பட்டுவிட்டார்கள்....வெளிநாடுகளில் எந்தவொருயமைப்பும் பெரிதாக வளர்ச்சியடையவில்லை..மக்கள் ஆதரவில்லை.

மற்றவர்களை,நாங்கள் நினைத்தநேரம் போராடு எனக்கூறமுடியாது ..என்னெனில் எவரும் அவர்களுக்கு பங்களிப்பு செய்ததுகிடையாது..ஆனல். புலிகளுக்கு பெரும்பாலன தமிழ்மக்கள் பங்களிப்பு செய்திருக்கிறர்கள்..புலிகள்பற்றிகேள்வி கேட்க்கவும் கருத்துகூறவும் அந்தமக்களுக்குயுரிமையுண்டு..தற்போது தமிழ்ஈழத்தில். புலிகள் இயங்கவில்லை. இங்கு காசுசேர்த்தவர்களாலும் ,முன்பு செய்த போராட்டம்போல்..இப்போ செய்யமுடியாது..ஆனால் அவர்களால் செய்யமுடியும் அவர்கள்தான் செய்யவும் வேண்டும்..நான் இங்கு வந்திருத்தகாலத்தில் இங்கே புளட்க்கு நல்லதரவு இருந்தது..அவர்கள இலங்கையில் செயல்பபடததால் ஆதரவையிழந்துவிட்டார்கள்..புலிகள் செயல்பட்டதால்.ஆதரவு  பெருகியது..இதிலிருந்து தெரிவதுயாதுவெனில்...தமிழ்ஈழத்தில் எவர்போராடினாலும். அவர்களுக்கு வெளிநாட்டிலுள்ள தமிழர் ஆதரவுவழங்குவார்கள்..யாரகயிருந்தலும் போராடுவதற்க்கு எண்ணவும்,சிந்திக்கவும்,விரும்பவும்,முயற்ச்சிக்கவும்..வேண்டும்  மக்கள் ஆதரவும் வேண்டும் .இப்போ மக்கள் ஆதரவு பெறுவது மிகக்கடினம் என்னெனில்..நம்பிக்கையில்லை...நிதிமோசடிசெய்தல்...தங்களுக்குள்ளடிபடுதல். பழையனுபவம்...இப்படி பலகாரணமுண்டு..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

 .இப்போ மக்கள் ஆதரவு பெறுவது மிகக்கடினம் என்னெனில்..நம்பிக்கையில்லை...நிதிமோசடிசெய்தல்...தங்களுக்குள்ளடிபடுதல். பழையனுபவம்...இப்படி பலகாரணமுண்டு..

இவ்வாறு சொல்லி மக்கள் தப்பிக்கும் வேலையே தற்போது நடக்கிறது. 

மக்கள் நினைத்தால் மட்டுமே எதுவும் சாத்தியம். புலிகளைக்கூட அவர்களே வழி நடாத்தினார்கள். அவர்களில் இருந்தே புலிகள் வந்தார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

இவ்வாறு சொல்லி மக்கள் தப்பிக்கும் வேலையே தற்போது நடக்கிறது. 

மக்கள் நினைத்தால் மட்டுமே எதுவும் சாத்தியம். புலிகளைக்கூட அவர்களே வழி நடாத்தினார்கள். அவர்களில் இருந்தே புலிகள் வந்தார்கள்

புலிகளை தமிழ் மக்கள் வழிநடத்தினார்களா? 🤣

அந்த தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் தான் முள்ளிவாய்க்காலில் தம்மை தடுத்து வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அமேசன் பிரைமில் "அந்த அறிக்கை" ஆங்கிலப்படத்தை தயவு செய்து பாருங்கள், மேற்கு நாட்டினர் தாம் செய்யும் தவறுகளை எவ்வாறேனும் நியாயப்படுத்த முனைவர், சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு சளைத்தவர்கள் அல்ல மேற்கு நாட்டினர், அண்மையில் அவுஸ்திரேலியப்படையினர் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட படுகொலைகள் வெளிவந்தவுடன் அதனை உலகம் எவ்வாறு கையாண்டது? (அந்த விவரம் வெளியே வராமல் இருப்பதற்காக அதனை வெளியிட முனைந்த சட்டத்தரணியின் மீதும் செய்தி நிறுவனத்தின் மீதும் சட்டத்துறையும் சட்ட அமலாக்கப்பிரிவான காவல்துறையின் ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் உலகு எவ்வாறு அணுகியது) இந்த உலகு நியாயத்திற்கு மதிப்பளிப்பதில்லை மாறாக பணத்திற்கும் அதிகாரத்திற்கும் மதிப்பளிக்கும், ஏழைகளுக்கு நீதி கிடைக்காது, அதிகாரம் செலுத்தும் நிலைக்கு நாம் உயர்ந்தால் மாத்திரமே மாற்றம் ஏற்படும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, விசுகு said:

இவ்வாறு சொல்லி மக்கள் தப்பிக்கும் வேலையே தற்போது நடக்கிறது. 

மக்கள் நினைத்தால் மட்டுமே எதுவும் சாத்தியம். புலிகளைக்கூட அவர்களே வழி நடாத்தினார்கள். அவர்களில் இருந்தே புலிகள் வந்தார்கள்

 விசுகர்! எனது கருத்து அஃதே.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் மேயக்கட்டிவிட்ட மாடு போல அங்கயே சுத்தி கொண்டிருப்பம், அது தானே தடை போடுபவர்களின் விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விசுகு said:

இவ்வாறு சொல்லி மக்கள் தப்பிக்கும் வேலையே தற்போது நடக்கிறது. 

மக்கள் நினைத்தால் மட்டுமே எதுவும் சாத்தியம். புலிகளைக்கூட அவர்களே வழி நடாத்தினார்கள். அவர்களில் இருந்தே புலிகள் வந்தார்கள்

அப்ப 2009ஆம் ஆண்டிலிருந்து 2021வரை ஏன்போராடவில்லை? மக்கள் நினைக்கவில்லையா?மக்களைச்சந்திக்கச்சென்றவருடன் சிலசமயம் நானும் போயிருக்கிறேன் .பணம் தருவதைத்தவிர்ப்பதற்க்காக, மக்கள் என்னென்ன கேட்ப்பார்கள் ..என்பது எனக்கு நன்கு தெரியும்..என்னுடைய..சொந்தக்கருத்து  புலிகளுக்கு மக்கள் போதிய பங்களிப்பும்..ஆதரவும் வழங்கியுள்ளார்கள். எனவே தமிழ்ஈழத்திலும் சரி வெளிநாட்டிலும் சரி தொடர்ந்தும் தமிழ்ஈழவிடுதலைப்புலிகளே. போராடவேண்டும். புதியவர்கள் போராடவேண்டும் என்ற கருத்து சிறுபிள்ளைத்தனமானது.😁🙏

43 minutes ago, vasee said:

அமேசன் பிரைமில் "அந்த அறிக்கை" ஆங்கிலப்படத்தை தயவு செய்து பாருங்கள், மேற்கு நாட்டினர் தாம் செய்யும் தவறுகளை எவ்வாறேனும் நியாயப்படுத்த முனைவர், சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு சளைத்தவர்கள் அல்ல மேற்கு நாட்டினர், அண்மையில் அவுஸ்திரேலியப்படையினர் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட படுகொலைகள் வெளிவந்தவுடன் அதனை உலகம் எவ்வாறு கையாண்டது? (அந்த விவரம் வெளியே வராமல் இருப்பதற்காக அதனை வெளியிட முனைந்த சட்டத்தரணியின் மீதும் செய்தி நிறுவனத்தின் மீதும் சட்டத்துறையும் சட்ட அமலாக்கப்பிரிவான காவல்துறையின் ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் உலகு எவ்வாறு அணுகியது) இந்த உலகு நியாயத்திற்கு மதிப்பளிப்பதில்லை மாறாக பணத்திற்கும் அதிகாரத்திற்கும் மதிப்பளிக்கும், ஏழைகளுக்கு நீதி கிடைக்காது, அதிகாரம் செலுத்தும் நிலைக்கு நாம் உயர்ந்தால் மாத்திரமே மாற்றம் ஏற்படும்

நல்ல சிந்தனை, நாங்கள்,எப்படிஅதிகாரம் செலுத்தும் நிலைக்குஉயரமுடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Kandiah57 said:

..என்னுடைய..சொந்தக்கருத்து  புலிகளுக்கு மக்கள் போதிய பங்களிப்பும்..ஆதரவும் வழங்கியுள்ளார்கள். எனவே தமிழ்ஈழத்திலும் சரி வெளிநாட்டிலும் சரி தொடர்ந்தும் தமிழ்ஈழவிடுதலைப்புலிகளே. போராடவேண்டும். புதியவர்கள் போராடவேண்டும் என்ற கருத்து சிறுபிள்ளைத்தனமானது.😁🙏

 

அப்படியென்றால் நீங்கள் அதிகம் பேசணும் எழுதணும் யாழிலும்.

1 hour ago, Justin said:

புலிகளை தமிழ் மக்கள் வழிநடத்தினார்களா? 🤣

அந்த தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் தான் முள்ளிவாய்க்காலில் தம்மை தடுத்து வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்களா?

கொஞ்ச பக்கங்களை கிழித்து விட்டு வரும் உங்களுக்கு வரலாற்றை எழுதி விளக்கப் படுத்த எனக்கு வயதும் ஆயுளும் ஒத்துழைக்காது. நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Kandiah57 said:

 

நல்ல சிந்தனை, நாங்கள்,எப்படிஅதிகாரம் செலுத்தும் நிலைக்குஉயரமுடியும்?

முன்னர் சிறுபான்மை வெள்ளையினத்தவர் பெரும்பான்மை கறுப்பினத்தவர்களை தென்னாபிரிக்காவில் அடக்கியாண்டார்கள், அதே போல ஒட்டு மொத்த உலக சனத்தொகையில் சிறுபான்மையினத்தவர்களான வெள்ளையினத்தவர்கள் உலகை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளார்கள். ருபேர்ட் மேர்டொக் யூத இனத்தவர், செல்வந்தர், மேற்குலகில் தனது தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலிகள் என தனது தகவல் தொடர்பு சாதனங்களினூடாக வலது சாரி கட்சிகளுக்காக செயற்படுகிறார், வலது சாரிக்கட்சி முதலாளித்துவம் மற்றும் அடிப்படைவாதத்தினூடாக தமதிருப்பை உறுதிப்படுத்துகிறது, விடுதலைப்புலிகள் அமைப்பு பொதுவுடமைக்கொள்கையான இடது சாரி அமைப்பு, இந்தியாவில் இந்திராகாந்தி ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் அமெரிக்க இந்திய உறவு கடுமையாக பாதிப்பிற்குள்ளாகியிருந்தது ஆனால் இப்போது மோடி ஒரு வலது சாரி, இந்த உலகையாளும் சிறுபான்மை வெள்ளையினத்தவர்களுக்கு உலகெங்கும் இவ்வாறான வலது சாரி முகவர்கள் தேவை (அடியாட் கள்) உலகையாள.
எவ்வாறு ரூபேர்ட் மேர்டொக் மேற்குலகில் அரசை தீர்மானிக்கின்றார், பணம், அதிகாரம்,நாமும் பொருளாதார மற்றும் கல்வி மூலம் அதிகாரங்களை பெறுவதுடன் காலத்திற்கேற்ப கொள்கை வகுப்புக்களையும் செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அப்படியென்றால் நீங்கள் அதிகம் பேசணும் எழுதணும் யாழிலும்.

கொஞ்ச பக்கங்களை கிழித்து விட்டு வரும் உங்களுக்கு வரலாற்றை எழுதி விளக்கப் படுத்த எனக்கு வயதும் ஆயுளும் ஒத்துழைக்காது. நன்றி

கஷ்டப் படாதீர்கள் விசுகர்! உங்கள் போலியான வரலாற்றுப் பாடம் போராட்ட காலத்தில் தாயகத்தில் இருந்த என் போன்றோருக்கு அவசியமில்லை! 

 கணணி வழி, செவி வழி கேட்டு ஈழவரலாற்றைப் புரிந்து கொள்வோருக்கு மட்டுமே கற்பித்தால் வரவேற்பிருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

கஷ்டப் படாதீர்கள் விசுகர்! உங்கள் போலியான வரலாற்றுப் பாடம் போராட்ட காலத்தில் தாயகத்தில் இருந்த என் போன்றோருக்கு அவசியமில்லை! 

 கணணி வழி, செவி வழி கேட்டு ஈழவரலாற்றைப் புரிந்து கொள்வோருக்கு மட்டுமே கற்பித்தால் வரவேற்பிருக்கும்!

உண்மை தான். போராட்டம் உங்கள் ஒரு சில கோட்சூட்டுடன் வெளிநாடு வந்தோரை மட்டுமே பாதித்தது. என் போன்று அனைத்தையும் இழந்து கட்டிய சறத்துடன் ஓடி வந்தவர்களை வரலாற்றில் வரவிடமாட்டீர்கள் என்பது தெரிந்தது தான். ஆனால் கட்டிய சறத்துடன் ஓடி வந்தவர்களை வரலாறு எழுதும்.  ஏனெனில் அவர்களை எழுதாமல் வரலாறு பூர்த்தி ஆகாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

உண்மை தான். போராட்டம் உங்கள் ஒரு சில கோட்சூட்டுடன் வெளிநாடு வந்தோரை மட்டுமே பாதித்தது. என் போன்று அனைத்தையும் இழந்து கட்டிய சறத்துடன் ஓடி வந்தவர்களை வரலாற்றில் வரவிடமாட்டீர்கள் என்பது தெரிந்தது தான். ஆனால் கட்டிய சறத்துடன் ஓடி வந்தவர்களை வரலாறு எழுதும்.  ஏனெனில் அவர்களை எழுதாமல் வரலாறு பூர்த்தி ஆகாது. 

வந்தவர் என்ன அந்தஸ்துடன் எப்படி வந்தார் என்ற பேச்சை நான் தொடுவதில்லை!

ஆனால் வந்த வழியை எடுக்காமல் நீங்கள் எந்த திரியிலும் கருத்தாடுவதேயில்லை! இந்தப் பிரச்சினை உங்களுடையது, எனவே எனக்கு கருத்தில்லை!

ஆனால், தவறான, மிகைப்படுத்திய "பக்தி" வரலாற்றை எழுதி, பரப்பி நூறு ஆண்டுகள் கழித்து இராமாயணம், நளவெண்பா போல தமிழர் போராட்டம் கற்பனைக் காவியமாக வாசித்து தூக்கி வீசப்படும் நிலை தான் உங்கள் போன்றோரால் உருவாகும்!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

வந்தவர் என்ன அந்தஸ்துடன் எப்படி வந்தார் என்ற பேச்சை நான் தொடுவதில்லை!

ஆனால் வந்த வழியை எடுக்காமல் நீங்கள் எந்த திரியிலும் கருத்தாடுவதேயில்லை! இந்தப் பிரச்சினை உங்களுடையது, எனவே எனக்கு கருத்தில்லை!

ஆனால், தவறான, மிகைப்படுத்திய "பக்தி" வரலாற்றை எழுதி, பரப்பி நூறு ஆண்டுகள் கழித்து இராமாயணம், நளவெண்பா போல தமிழர் போராட்டம் கற்பனைக் காவியமாக வாசித்து தூக்கி வீசப்படும் நிலை தான் உங்கள் போன்றோரால் உருவாகும்!

நான் போரால் பாதிக்கப்படவில்லை என்பதை எவ்வாறு முடிவு செய்கிறீர்கள்?? முன் பின் ஓடி வந்ததை வைத்து எவ்வாறு நக்கல் நையாண்டி செய்வீர்கள்?? 

அடிக்கடி இவ்வாறான வார்த்தைகளை பாவித்து இங்குள்ள உறவுகளை கோபப்படுத்துவதை பலரும் பல முறை குறிப்பிட்டுள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.