Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

108 ஆடுகள் வெட்டி கறி விருந்து வைத்த சீமான்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

108 ஆடுகள் வெட்டி கறி விருந்து வைத்த சீமான்! எதற்கு தெரியுமா? வெளியான புகைப்படங்கள்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குல தெய்வ கோவிலில் 108 ஆடுகள் வெட்டி கறிவிருந்து படைத்துள்ளார்.

குலதெய்வ கோவிலான சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே, முடிக்கரை வீரமாகாளியம்மன் கோவிலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், தன் மகனான பிரபாகரனுக்கு முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தினார்.

இந்த விழாவில், பங்கேற்ற கட்சியினர், தொண்டர்களுக்கு சீமான், 108 ஆடுகள் வெட்டி கறிவிருந்து அளித்தார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

அதன் பின் அவர் கூறுகையில், விவசாயி மட்டும் தான், உற்பத்தி செய்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை.

இந்த நிலை மாறாத வரை, அரசு பயிர்கடன் தள்ளுபடி செய்தாலும், விவசாயிகள் மீண்டும் கடனாளியாகவே மாறுவர். சசிகலா வருகை, அ.தி.மு.க.,வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

நாம் தமிழர் கட்சி எட்டு கோடி தமிழர்களிடம் மட்டுமே, கூட்டணி வைத்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், தமிழகம் வெற்றி நடைபோடவில்லை. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே, தமிழகம் வெற்றி நடைபோடும் என்று கூறினார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

 

 

https://news.lankasri.com/india/03/239900

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமஸ்கிருத மந்திரம் ஓதி நடந்த சீமான் மகன் மாவீரன் காதணி விழா!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் ஒரு விழாவில் தனது மகன் பற்றிய செய்தி ஒன்றை பகிர்ந்து கொண்டார் அதில் வடபழனி முருகன் கோவிலுக்குச் சென்ற போது சமஸ்கிருத மந்திரம் ஓதிய போது தன் மகன் மாவீரன் பிரபாகரன் அழத்துவங்கி விட்டதாகவும், பின்னர் தமிழ் ஓதுவார் வந்து தமிழில் ஓதத்துவங்கிய பின்னர் அழுகையை நிறுத்தியதாகவும், தமிழ் மொழிக்கு அப்படி ஒரு வல்லமை உண்டு என்றும் பேசினார்.

இந்நிலையில், காளையார் கோவில் அருகில் உள்ள முடிக்கரை வீரமாகாளியம்மன் கோவிலில் குல  தெய்வ வழிபாடும், அதனையொட்டி மகன் மாவீரன் பிரபாகரனுக்கு காதணி விழாவும் நடந்தது. இந்த விழாவை நாம் தமிழர் கட்சியினர் ஆடம்பரமாக ஏற்பாடு செய்திருந்தனர்.

108 ஆடுகளை பலி கொடுத்து விருந்திற்கும் ஏற்பாடு செய்திருந்ததால் சுற்றியுள்ள கிராம மக்களும் திரண்டு வந்திருந்தனர். ஆனால், காதணி விழாவின் போது சமஸ்கிருத மந்திரங்கள் முழங்க மகனுக்கு காதணி விழாவை நடத்தி முடித்துள்ளார் சீமான்.

சமஸ்கிருத மந்திரங்கள் ஒலிக்க காதணி விழா நடந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

https://inioru.com/சமஸ்கிருத-மந்திரம்-ஓதி-ந/

  • கருத்துக்கள உறவுகள்

மகன் பிரபாகரன் காதணி விழாவில் கண் கலங்கிய சீமான்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

காதணி விழா நடத்த வேண்டிய அவசியம், சமஸ்கிருத மந்திரம் ஓதுவது, கருணை அடிப்படையில் 108 ஆடுகளை கோவில் பலி கொடுத்த எளிமை தனது தம்பிகளுக்கு முன்மாதிரியாக விளங்கியுள்ளார். இவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் எழுச்சி தான் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

காதணி விழா நடத்த வேண்டிய அவசியம், சமஸ்கிருத மந்திரம் ஓதுவது, கருணை அடிப்படையில் 108 ஆடுகளை கோவில் பலி கொடுத்த எளிமை தனது தம்பிகளுக்கு முன்மாதிரியாக விளங்கியுள்ளார். இவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் எழுச்சி தான் 🤣

"ஆட்சிக்கு வந்தால்".... ம்ம்ம்ம்ம்ம்..ம்

ஆட்சிக்கு வந்துவிட்டாலும் என்று பயம் வந்துவிட்டதோ...😂

பயம் வேண்டாம் விநினைப்பவரே... அப்படி ஆட்சிக்கு வந்தாலும் அது தமிழகத்திற்குத்தானே. நமக்கில்லையே. 😂

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது எழுதிப்பதிந்தால், திரியை மூடு எண்டு பெட்டிசம் போடுறது. அது நடக்கவில்லை எண்டால், இல்லாத தெலுங்கர் பாசம் எல்லாம் வரும்.

இப்ப போரடிச்சுப் போய், தாங்களே மாஞ்சு, மாஞ்சு பதியினம்..... ஒருத்தரும் கண்டுகொள்ளவதில்லை....

வாழ்க்கை வெறுக்கப் போகுது. 

முக்கிய குறிப்பு: தன்னை கிறிஸ்தவன், செபாஸ்டியன் சைமன் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கு, (இங்கும் கூட), குல தெய்வ கோவிலில், பரம்பரை பரம்பரையாக செய்யும் பூசை வழக்கம், மூலம், அது உண்மை இல்லை என முகத்தில் அடித்து சொல்லி இருக்கிறார்.

அடுத்து, இந்த பூசையினை நடத்தியவர், இறைநெறி இமையவன். அவர் தமிழ் மட்டுமே நடத்துபவர் என்பது உலகுக்கே தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kapithan said:

"ஆட்சிக்கு வந்தால்".... ம்ம்ம்ம்ம்ம்..ம்

ஆட்சிக்கு வந்துவிட்டாலும் என்று பயம் வந்துவிட்டதோ...😂

பயம் வேண்டாம் விநினைப்பவரே... அப்படி ஆட்சிக்கு வந்தாலும் அது தமிழகத்திற்குத்தானே. நமக்கில்லையே. 😂

NOTA வை விட தேறாது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, zuma said:

NOTA வை விட தேறாது 🤣

அது, தேறுது, தேறாமல் போகுது..... உங்கட தீவுகள் மூன்றை, சிங்களவன் இலவசமா கொடுக்க, சீனாக்காரனுக்கு தேத்திக்கொண்டு ஆற அமர உக்கார போகிறான்.

அத பத்தி கவலை இல்லை.

பக்கத்து வீட்டுக்காரன், ஆடு வெட்டி சாப்பாடு போடுறது தான் உங்கட பெரும் கவலை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் எழுச்சி தான்

ஆடுகள் தாராளமாக  வளர்க்க ஊக்கிவிக்கப்பட, சீமான் தான் 108 ஆடு வெட்டி விருந்து படைத்த நிலை அகன்று,  அநேகமாக 4-5 குடுத்துங்கள் ஒன்று சேர்ந்து வருடத்தில் ஒவொரு மாதமும் 108 மேற்றப்பட்ட ஆடுகளை வெட்டி விருந்து போடும் நிலை வரும். மேலாக, ஒவொரு குடும்பமும் தான் விரும்பிய வேளை ஆட்டிறைச்சியை வாங்க கூடிய பொருளாதார நிலை வரும்.

இப்படி ஆடு வெட்டி பிறங்க விருந்து படைத்தல்  செய்வது கூட சுகாதார முறைகளை கடைபிடித்த நடைபெறும்.

சிலவேளைகளில் ஆட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யக்கூடிய அளவு வளர்ச்சி இருக்கலாம்.
சீமானுக்கு அதிகாரம் கையில் வரும் போது, சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதுவது சட்ட மூலமாக தடுக்கப்படுவதுடன், அவர்கள் தமிழ் ஓத பயிற்சியும்  அளிக்கப்பட்டு, சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும், அதனால் வரும் வருமான இழப்பிற்கு ஈடான நிவாரணமும் வழங்கப்பட்டு.

நிச்சயமாகா ஆகா, ஓகோ தான். எழுச்சிதான். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அது, தெறித்து, தேறாமல் போகுது..... உங்கட தீவுகள் மூன்றை, சிங்களவன் இலவசமா கொடுக்க, சீனாக்காரனுக்கு தேத்திக்கொண்டு ஆற அமர உக்கார போகிறான்.

அத பத்தி கவலை இல்லை.

பக்கத்து வீட்டுக்காரன், ஆடு வெட்டி சாப்பாடு போடுறது தான் உங்கட பெரும் கவலை.

தலைவரையும், போராளிகளையும் விற்று அல்லவா,  அண்ணன் தன் வயிறு வளக்கின்றார்.

10 minutes ago, Nathamuni said:

ஏதாவது எழுதிப்பதிந்தால், திரியை மூடு எண்டு பெட்டிசம் போடுறது. அது நடக்கவில்லை எண்டால், இல்லாத தெலுங்கர் பாசம் எல்லாம் வரும்.

 

இன்னும் அந்த புறப்பாட்டு  முடியவில்லையோ 

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, zuma said:

தலைவரையும், போராளிகளையும் விற்று அல்லவா,  அண்ணன் தன் வயிறு வளக்கின்றார்.

இன்னும் அந்த புறப்பாட்டு  முடியவில்லையோ 

நீங்க யாரு கவலைப்படுவதுக்கு ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, valavan said:

 

 அண்ணன் திரும்பியும் சினிமா போய் காமடியனாய் நடிக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, zuma said:

தலைவரையும், போராளிகளையும் விற்று அல்லவா,  அண்ணன் தன் வயிறு வளக்கின்றார்.

உங்க அண்ண, உங்க போராளிங்க.... அட போங்கப்பா தமாசு பண்ணாம.... 

உங்க டக்ளஸில இருந்து, போராளிங்க யாவருமே, இந்திய மக்களையும், தலைவர்களையும் கொலை செய்ததாக சொல்வதை ஏற்றுக் கொள்வீர்களாயின், அதனை மாற்றி, இன்றய தேதிக்கு, 17 லட்சம் பேராவது, தலைவரை, தமிழர் தலைவராக ஏற்றுக் கொள்ளும்  நிலைமைக்கு கொண்டுவந்ததையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

நீங்க யாரு கவலைப்படுவதுக்கு ?

இவர், ரொம்ப தடுமாறுறாரு..... 

இவர் இணைத்த திரியை வேறு பூட்டியாச்சு....

எங்காவது எதாவது சொல்ல துடிக்கிறாரு. விடுங்க... அப்படியே புலம்பட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

உங்க அண்ண, உங்க போராளிங்க.... அட போங்கப்பா தமாசு பண்ணாம.... 

உங்க டக்ளஸில இருந்து, போராளிங்க யாவருமே, இந்திய மக்களையும், தலைவர்களையும் கொலை செய்ததாக சொல்வதை ஏற்றுக் கொள்வீர்களாயின், அதனை மாற்றி, இன்றய தேதிக்கு, 17 லட்சம் பேராவது, தலைவரை, தமிழர் தலைவராக ஏற்றுக் கொள்ளும்  நிலைமைக்கு கொண்டுவந்ததையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். 

அத்தியடி குத்தியனின் அரசியல் மாதிரி தான் சீமானின் அரசியல் தமிழ் நாட்டில் 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, zuma said:

தலைவரையும், போராளிகளையும் விற்று அல்லவா,

நீங்கள் சீமான் விற்றுகிறார் என்று உணர்ந்தால், அவரை விட கூட விற்கமுடியும் என்று தானே அர்த்தம்.

ஒன்று விற்கப்படுகிறது என்றால், அது பலரை சென்றடைகிறது. 

அப்படி தலைவர், போராளிகள் சந்ததி நினைவுகளில் நிலைக்கட்டும், தேசத்துக்கான ஒன்றும் எதிர்பார்க்காத அவர்களின் உழைப்பையும், தியாகங்களையும் சந்ததி வ்வரலாற்று நினைவு பதிவுகளில் ஏறட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

அத்தியடி குத்தியனின் அரசியல் மாதிரி தான் சீமானின் அரசியல் தமிழ் நாட்டில் 

என்ன இப்படி சொல்லிட்டீங்க.... நீங்க, அவர் தம்பியர் என்று இங்கினை கதைக்கினம்...

நீங்கள், மரியாதை இல்லாமல், அத்தியடி, குத்தியன் எண்டு சொல்லலாமா.... கவலைப்படுவார் ... 🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, zuma said:

தலைவரையும், போராளிகளையும் விற்று அல்லவா,  அண்ணன் தன் வயிறு வளக்கின்றார்.

விற்கின்றாரா...???? எப்படியென்று சொல்லுங்கள் பார்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kadancha said:

நீங்கள் சீமான் விற்றுகிறார் என்று உணர்ந்தால், அவரை விட கூட விற்கமுடியும் என்று தானே அர்த்தம்.

ஒன்று விற்கப்படுகிறது என்றால், அது பலரை சென்றடைகிறது. 

அப்படி தலைவர், போராளிகள் சந்ததி நினைவுகளில் நிலைக்கட்டும், தேசத்துக்கான ஒன்றும் எதிர்பார்க்காத அவர்களின் உழைப்பையும், தியாகங்களையும் சந்ததி வ்வரலாற்று நினைவு பதிவுகளில் ஏறட்டும். 

நீங்கள் மேற்கோள் காட்டியதின் மிகுதியையும்  வாசிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, zuma said:

அத்தியடி குத்தியனின் அரசியல் மாதிரி தான் சீமானின் அரசியல் தமிழ் நாட்டில் 

அத்தியடி குத்தி🤔

அட உங்கட சுமே 1000 பேருக்கு கறி தண்ணி விருந்து வைத்த தை மறந்துவிட்டீர்களா? 🤣

 

முதலில் உங்கட வங்குரோத்து அரசியல் வாதிகளை திருந்த சொல்லுங்கள் மற்றவனின் முதுகை சொறிய முதல்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

NOTA வை விட தேறாது 🤣

அதற்கு தமிழகத்தவர்களுக்குத்தானே உதற வேண்டும். ஆனால் உங்களுக்கு எல்லோ  உதறுது.. அது ஏன்.... 😂😂

1 hour ago, zuma said:

1) தலைவரையும், போராளிகளையும் விற்று அல்லவா,  அண்ணன் தன் வயிறு வளக்கின்றார்.

1) தலைவரும் போராளிகளும் எங்களுக்கானவர்கள். நாங்களே பதறாதபோது உங்களுக்கு ஏன் பதறுது.. 😂

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

அதற்கு தமிழகத்தவர்களுக்குத்தானே உதற வேண்டும். ஆனால் உங்களுக்கு எல்லோ  உதறுது.. அது ஏன்.... 😂😂

"உலகின் எங்கோ நடக்கும் அநீதி கண்டு உன் மனம் கொதித்தால், நீயும் எனக்குத் தோழனே" என்பதனை நான் விசுவாசிக்கின்றேன்.  🤣😂

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

அத்தியடி குத்தியனின் அரசியல் மாதிரி தான் சீமானின் அரசியல் தமிழ் நாட்டில் 

அதற்கு தமிழ்நாட்டவன்தானே கவலைப்பட வேண்டும். 

உங்களுக்கேன் அந்தக் கவலை... 🤥

3 minutes ago, zuma said:

"உலகின் எங்கோ நடக்கும் அநீதி கண்டு உன் மனம் கொதித்தால், நீயும் எனக்குத் தோழனே" என்பதனை நான் விசுவாசிக்கின்றேன்.  🤣😂

ஆனால் ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுதால் அதை எப்படி நம்புவதாம்... 😂

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, zuma said:

உலகின் எங்கோ நடக்கும் அநீதி கண்டு உன் மனம் கொதித்தால், நீயும் எனக்குத் தோழனே" என்பதனை நான் விசுவாசிக்கின்றேன். 

👍

பாஜக இலங்கையில் கட்சி அமைக்க உள்ளது. இதற்காக தான் சீமானை பாஜக திட்டமிட்டு தமிழகத்தில் கொண்டுவந்து இருக்கலாம் சீமான் வெளிநாடுகளில் ஈழத்து தம்பிகளை வைத்திருக்கிறார். பிடித்துவிட்டார் 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.