Jump to content

நாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க கூட்டணியில் இந்தமுறை எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டிருக்கின்றன... எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்., பிரேமலதா, அன்புமணி ஆகியோர் எந்தத் தொகுதியில் போட்டியிடுகின்றனர் என்கிற விவரங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

பதினைந்தாவது தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் வரும் மே மாதத்தோடு நிறைவடையவிருக்கிறது. ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாத முதல் வாரத்திலோ தமிழகத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தி.மு.க, அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டன. பிரதான கட்சிகள், தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகத்தையும் தொடங்கிவிட்டன. ஆனால், தேர்தல் காலத்தில் மிக நெருக்கடியான காலக்கட்டம் என்பது தொகுதிப் பங்கீடுதான். ஓர் இடம், இரண்டு இடங்களுக்காகக் கடைசி நேரத்தில் எதிர்க் கூட்டணிக்குத் தாவும் காட்சிகள் பலமுறை அரங்கேறியிருக்கின்றன. மாலையில் ஒரு கட்சியோடு கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி, காலை விடிந்ததும் கையில் பூங்கோத்தோடு, எதிரணித் தலைவரைச் சந்திக்கும் காட்சிகளைக் காண தமிழக மக்கள் தயாராக இருக்கவேண்டும்.

தி.மு.க கூட்டணிக் கட்சிகள்
 
தி.மு.க கூட்டணிக் கட்சிகள்

தற்போதைய நிலவரப்படி, தி.மு.க கூட்டணியில், காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க.,கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், அ.தி.மு.க கூட்டணியில், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி ஆகியவையும் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், இடங்கள் ஒதுக்கீடு நடக்கும்போது, இதில் பல மாற்றங்கள் நிகழவும் வாய்ப்பிருக்கிறது.

தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிகளுமே தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை இடங்களை ஒதுக்க வேண்டும் என்பதை இந்நேரம் நிச்சயமாக முடிவு செய்திருக்கும். ஆனால், இன்னும் சில நாள்களில், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை அழைத்துப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவார்கள். இந்தநிலையில், அ.தி.மு.க கூட்டணியில் இந்த முறை எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்களை ஒதுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறித்து, அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகள்
 
அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகள்

``எங்கள் கட்சியின் சார்பில் இந்த முறை 170-172 இடங்களில் நிச்சயமாகப் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம். கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரை, பா.ஜ.க-வுக்கு 20 இடங்கள், பா.ம.க-வுக்கு 22, தே.மு.தி.க-வுக்கு 10, த.மா.கா-வுக்கு 5, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு இடம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இரண்டு இடங்கள், தவிர பேராசியர் ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சியும் எங்கள் கூட்டணிக்கு வரவிருக்கிறது. அவர்கள் வரும்பட்சத்தில் அவர்களுக்கு 3 இடங்களும் ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகிய மூவரும் தொடர்ச்சியாக சசிகலாவை முன்னிறுத்திப் பேசிவருகின்றனர். அதனால், அவர்களுக்கு இந்த முறை நிச்சயம் சீட் கிடையாது.

 

பா.ஜ.க முதலில் 40 இடங்கள் கேட்டு பிறகு முப்பது இடங்களுக்கு வந்து நின்றார்கள். ஆனால், `அதிக இடங்களை வாங்கி தேவையில்லாமல் தி.மு.க ஜெயிப்பதற்கு வழிவகுத்துவிடாதீர்கள். பா.ஜ.க வேட்பாளரைவிட, அ.தி.மு.க நிற்கும்போது தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்க முடியும்'' என முதல்வர் சொன்னதும் பா.ஜ.க-வினர் ஓரளவுக்கு இசைந்துவந்திருக்கின்றனர். அதிலும் நாங்கள் கேட்கும் தொகுதிகளைத்தான் ஒதுக்க வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்தனர். ஆனால், 10 தொகுதிகள் அவர்கள் கேட்கும் இடங்களும், மீதமுள்ள 10 தொகுதிகள் நாங்கள் சொல்லும் இடங்களிலும் நிற்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

 

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை, 2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபோது, 72 தொகுதிகளில் 30,000-க்கும் அதிகமான வாக்குகளை வாங்கியிருக்கின்றனர். 22 தொகுதிகளில் 40,000-க்கும் அதிகமாகவும் 10 தொகுதிகளில் 50,000-க்கும் அதிகமாகவும் வாங்கியிருக்கின்றனர். 80 தொகுதிகளில் 15-20 ஆயிரம் வாக்குகளையும் 50 தொகுதிகளில் 5-10 ஆயிரம் வாக்குகளையும் வாங்கியிருக்கின்றனர். ஆகமொத்தம், 100 தொகுதிகளில், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக பா.ம.க-வின் வாக்குகளே இருக்கின்றன. அவர்கள், எங்கள் கூட்டணியில் இருப்பது எங்களுக்குக் கூடுதல் பலம்தான்.

ஆனால், தே.மு.தி.க எங்கள் கூட்டணியில் நீடிப்பதை துணை முதல்வர் விரும்பவில்லை. பெரியகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில், தி.மு.க-வுக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்கவைக்கும் அவர்கள் நம்முடன் எதற்கு என ஏகக் கடுப்பில் இருக்கிறார். ஆனால், முதல்வர்தான் பரவாயில்லை இருந்துவிட்டுப் போகட்டும் எனச் சொல்லியிருக்கிறார். அதேவேளையில், நாம் தமிழர் கட்சியுடனும் பேசிவருகிறோம். அவர்களுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் மூவாயிரத்திலிருந்து ஐயாயிரம் வரை வாக்குகள் இருக்கின்றன. இழுபறியாக இருக்கும் இடங்களில் அந்த வாக்குகள் எங்கள் வெற்றிக்குக் கைகொடுக்கும் என நினைக்கிறோம். தே.மு.தி.க-வைக் காட்டிலும் நாம் தமிழர் கட்சிக்கு அதிக வாக்குவங்கி இருக்கிறது. அதனால், நாம் தமிழர் கட்சி கூட்டணிக்கு ஒப்புக்கொண்டால், அவர்களுக்கு 10 இடங்களை ஒதுக்கிவிட்டு, தே.மு.தி.க வேண்டாம் என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

நாம் தமிழர் கட்சி
 
நாம் தமிழர் கட்சி

அதேபோல, தமிமுன் அன்சாரி, தி.மு.க கூட்டணியின் பக்கம் போவதால், மனிதநேய மக்கள் கட்சி எங்கள் கூட்டணிக்கு வரும் நிலையில் இருக்கிறது. அதுபோக, தி.மு.க கூட்டணியில் ஐந்து இஸ்லாமியக் கட்சிகள் இருப்பதால், எங்களுடன் வருவதையே ஜவாஹிருல்லாவும் விரும்புகிறார். பா.ஜ.க எங்கள் கூட்டணியில் இருந்தாலும், எங்கள் தலைமையில்தான் கூட்டணி இருப்பதால் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவர்கள் வருவது எங்கள் கூட்டணிக்குக் கூடுதல் பலம்'' என்கிறார்கள்.

நாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு?| Is ADMK alliance finalized seat sharing (vikatan.com)

Link to comment
Share on other sites

  • Replies 93
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நா த க எந்தக்காலத்திலும் கூட்டு போடுவதாயில்லை என்று சொன்ன பின்பும், இந்த திமுக, பின்னணி விகடன், சும்மா அள்ளி விடுதே.

Link to comment
Share on other sites

4 minutes ago, Nathamuni said:

நா த க எந்தக்காலத்திலும் கூட்டு போடுவதாயில்லை என்று சொன்ன பின்பும், இந்த திமுக, பின்னணி விகடன், சும்மா அள்ளி விடுதே.

கண்டிப்பாக ஒரு காலத்தில் அது நடக்கும். நீங்கள் அப்படி நடக்காது எனும் நம்பிக்கையிலும், நான் அப்படி நடக்கும் எனும் நம்பிக்கையிலும் இருப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/2/2021 at 19:17, நிழலி said:

கண்டிப்பாக ஒரு காலத்தில் அது நடக்கும். நீங்கள் அப்படி நடக்காது எனும் நம்பிக்கையிலும், நான் அப்படி நடக்கும் எனும் நம்பிக்கையிலும் இருப்போம்.

நிழலி,

உங்கள் நம்பிக்கைக்கையினை பாராட்டும் அதே வேளை.... என்ன நடக்கிறது என்பதையும் கவனிப்போமா?

பிஜேபி யுடன் கூட்டு வைத்து, காங்கிரஸ் ஆட்ச்சியினை பாண்டிசேரியில் கவுத்து விட்டது, ஸ்டாலினின் திமுக. காரணம், 2ஜி ஊழல் கேஸ். இந்த மாதம் வர இருந்த வழக்கினை, தள்ளுவதா, இல்லை எடுத்து, சில பேரை உள்ள போடுவதா என்ற கேள்வியிலேயே மடக்கி விட்டார்கள்.

இவ்வளவு நாளும் கூடவே வந்த, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் அவுட். ராமதாசு, கமல் இன்.

இப்ப சொல்லுங்க, பிஜேபியின் A டீம் யாரு? நீங்கள் நாதக மீது நம்பிக்கை கொள்ளவேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக, நம்பிக்கை வைக்கும் நிலையில் திமுகவோ, ஸ்டாலினோ இல்லை. 

இலங்கையில் பல பில்லியன் முதலீடு செய்ய முயன்று, மத்தியில் சிக்கிக்கொண்ட ஜெகதரட்ஷகனே இந்த, பிஜேபி - திமுக லிங்குக்கு முக்கிய புள்ளி. இவரே, திமுகவின் பாண்டிச்சேரி முதல்வர் வேட்ப்பாளர். 

இந்த கூத்துக்கள் எல்லாம், தெரிந்தும் பப்பி ராகுல், வெங்காயம், தயிறு என்று, யூடியூபில் சமையல் பண்ணுறாரு. 

 

Link to comment
Share on other sites

சீமான் ஒரு வெத்து வேட்டு, அவருடைய வேடம் கலைந்து கன நாள் ஆகிவிட்டது. அவருடைய பருப்பு ஒன்றும் தமிழ் நாட்டில் வேகாது. இம்முறையும் NOTA  க்கு குறைவான வாக்குகளையே பெறுவார்.

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

நிழலி,

இவ்வளவு நாளும் கூடவே வந்த, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் அவுட். ராமதாசு, கமல் இன்.

இப்ப சொல்லுங்க, பிஜேபியின் A டீம் யாரு? நீங்கள் நாதக மீது நம்பிக்கை கொள்ளவேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக, நம்பிக்கை வைக்கும் நிலையில் திமுகவோ, ஸ்டாலினோ இல்லை. 

 

பதிலுக்கு நன்றி நாதம்.

காங்கிரசையும், விடுதலைச் சிறுத்தைகளையும் தி.மு.க தன் கூட்டணியில் இருந்து கழட்டி விட்டுட்டுதா? நான் வாசிக்கும் தமிழகம் பற்றிய செய்திகளில் இது தொடர்பாக எதையும் காணவில்லை. அத்துடன் திமுக கூட்டணியில் கமல் கட்சி இணைகின்றது என்றும் அறியவில்லை.  நான் ஈழத்துச் செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழகம் தொடர்பாக கொடுப்பதில்லை என்பதால் தவற விட்டு இருப்பேன்.இவை தொடர்பான செய்திகள் (ஒரு கட்சியின், கட்சி சார்பானவர்களின் காணொளிகள் அல்ல) இருந்தால் பகிருங்கள்.

41 minutes ago, zuma said:

சீமான் ஒரு வெத்து வேட்டு, அவருடைய வேடம் கலைந்து கன நாள் ஆகிவிட்டது. 

சுமா, இப்படி வெறுமனே தட்டையாக எழுதுவதால் ஆரோக்கியமான உரையாடலை தோற்றுவிக்க முடியாது என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

14 minutes ago, நிழலி said:

சுமா, இப்படி வெறுமனே தட்டையாக எழுதுவதால் ஆரோக்கியமான உரையாடலை தோற்றுவிக்க முடியாது என நம்புகின்றேன்.

நிழலி,
மன்னிக்கவேண்டும் எதும்  அசோகரியம் ஏற்பட்டால். எனது எதிர்வினை ஆனது,  Nathamuni இணைத்த மூன்றாம் தர பிரச்சார காணொளிக்கே.

Link to comment
Share on other sites

எது எப்படியோ இந்த தேர்தல்  தமிழக மக்களுக்கானது. சொந்த அரசியலையே சரியாக செய்ய தெரியாமல் தோற்றுப் போன ஈழத்தமிழர்களான எம்மை விட தமிழக மக்கள் புத்திசாலிகள். ஆகவே, அவர்கள் சிறந்த வகையில் வாக்களித்து தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வர். நிச்சயமாக இனவெறியை அவர்கள் ஆதரிக்கப்போவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாள் தோறும்  ரோஜா செடியில் முள்ளு இருப்பதை மட்டுமே பேசாமல், 
ஒரு முள்ளுச்செடியில் ரோஜா பூப்பதையும்  பார்த்து பரவசமடையுங்கள்.
நீங்கள் ஒரு ஈழத்தமிழாராய் இருப்பதன் பெருமைக்கான காரணங்களை பட்டியல் இடுங்கள்.
ஒரு தவறை கண்டு மனம் வேதும்பினால், அதனை சரி செய்யும் வழிகளை கண்டறியுங்கள். இல்லையேல்; இப்போதைக்கு இதனை சரி செய்ய முடியாது என்பதை உணர்ந்து; அனாவசியமாய் வாய் கிழிய பேசுவதை தவிர்த்து; உங்களால் செய்ய முடிந்த சரியான காரியங்களை சரியாக செய்யுங்கள். 
எல்லோரும் உங்கள் வழியில் தான் வரவேணும் என்னும் என்ற கற்பனை உலகத்தை விட்டு நகருங்கள்.
நல்ல விடயங்களில் மனதை திரட்டுங்கள்,   நம் சந்தோசம், ஒற்றுமை பற்றி யோசியுங்கள். 
இந்த தேறிவுகள் எல்லாம் உங்களுடையவை அன்றி வேறு யாருடையதும் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

நிழலி,
மன்னிக்கவேண்டும் எதும்  அசோகரியம் ஏற்பட்டால். எனது எதிர்வினை ஆனது,  Nathamuni இணைத்த மூன்றாம் தர பிரச்சார காணொளிக்கே.

எனது கணிப்பு சரியாக இருந்தால், யாழில் உங்களது முன்னைய அவதாரம், வயிரவன்... சரிதானே?

வயிரவன் இங்கே பதிய வருவதே சீமான் வாந்தி எடுக்க மட்டுமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

பதிலுக்கு நன்றி நாதம்.

காங்கிரசையும், விடுதலைச் சிறுத்தைகளையும் தி.மு.க தன் கூட்டணியில் இருந்து கழட்டி விட்டுட்டுதா? நான் வாசிக்கும் தமிழகம் பற்றிய செய்திகளில் இது தொடர்பாக எதையும் காணவில்லை. அத்துடன் திமுக கூட்டணியில் கமல் கட்சி இணைகின்றது என்றும் அறியவில்லை.  நான் ஈழத்துச் செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழகம் தொடர்பாக கொடுப்பதில்லை என்பதால் தவற விட்டு இருப்பேன்.இவை தொடர்பான செய்திகள் (ஒரு கட்சியின், கட்சி சார்பானவர்களின் காணொளிகள் அல்ல) இருந்தால் பகிருங்கள்.

நாதக யினை ஒரு பக்கமாக வைத்து விட்டு, தமிழக அரசியலை பார்ப்போமா?

வலுவில்லாத, பிரயோசனம் இல்லாத கட்சிகளை கழட்டி விடப்போகிறது திமுக. விடுதலை சிறுத்தைகள் அனுப்பப்படுவார்கள், பதிலாக, பாமக உள்ளே வரும். கமலுக்கு இருக்கும் வாக்கு சதவீதம் கூட, திருமாவளவனுக்கு இல்லை என்று கணித்துள்ளனர். ஆகவே கமல் உள்ளே வருவார். அது தொடர்பில் பேசிக்கொண்டிருப்பதாக கமல் தெரிவித்துள்ளார்.

இதில் வைக்கோ நிலைமை தெரியவில்லை. அவரும் தூக்கி எறியப்படுவாரோ அல்லது, ஒரு சீட்டு மட்டுமே என்று சொல்லி, தானாக வெளியே போக வைப்பார்களா என்பது அடுத்த இரு வாரங்களில் தெரிய வரும்.

தமிழகத்தில் காங்கிரஸ் சுமையென்று திமுக கருதுகிறது. காங்கிரசினை கழட்டி விடுவதன் முதல் படி, பாண்டிசேரியில் போடப்பட்டுள்ளது. திமுக MLA ராஜினாமா செய்ய, காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது.

ராஜினாமா செய்த நமசிவாயம் போன தேர்தலில், உண்மையான காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர். வென்றவுடன், காங்கிரஸ் ஆந்திராவில் என்ன கூத்து செய்ததோ, அதையே இங்கேயும் செய்து, மத்தியில் அமைச்சராக இருந்த நாசாவை (நாராயணசாமி) முதல்வர் ஆக்கி விட்டனர்.

கடுப்பான நமசிவாயம், திமுகவுக்கு மாறினாலும், திமுக கொள்கைக்கு அமைய, காங்கிரசுக்கு ஆதரவளித்து, மந்திரியானார்.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதம் இருக்கையில், ராஜினாமா செய்து, அரசு கவுண்டு போக காரணமாக இருந்துள்ளார். முக்கியமாக, தனது ராஜினாமா, ஸ்டாலினுக்கு தெரிந்தே நடந்தது என்கிறார்.

வரும் தேர்தலில், பெரும் பசைப்பாட்டி, ஜெகதரடசகன் தான் திமுக முதல்வர் வேட்ப்பாளர். 

இவர் இலங்கையில் பெரும் முதலீடு செய்ய போன இடத்தில், அவரது, மனைவியினது, மகளது பெயர்கள், Board of investment பத்திரங்களில் இருந்து கசிந்து, டெல்லிக்கு போய், இவரை மடக்கி பிடித்து, வழக்கு சிக்கல்களால் பிஜேபி சொல்வதை கேட்க்கும், பிஜேபி - திமுக லிங்க் ஆக வேலை செய்கிறார். 

ஆக, பிஜேபிக்கு சார்பாக, ஒரு கூத்தினை நடாத்தி முடித்து விட்டனர்.

2+1 = 4

நீங்கள் கேட்படி.... சவுக்கு சங்கர், ஊடகவியலாளர். சீமான் எதிர்ப்பாளர். திமுகவை ஆதரிப்பவர்.... ஆனாலும் உதயநிதியை வெறுக்கிறார்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, zuma said:

சீமான் ஒரு வெத்து வேட்டு, அவருடைய வேடம் கலைந்து கன நாள் ஆகிவிட்டது. அவருடைய பருப்பு ஒன்றும் தமிழ் நாட்டில் வேகாது. இம்முறையும் NOTA  க்கு குறைவான வாக்குகளையே பெறுவார்.

உங்கள் நம்பிக்கை வீண்போகாதிருக்க (வெத்து வேட்டு, வேகாத பருப்பு , குறைந்த வாக்குகள் பெற்றுத் தோல்வி) எனது வாழ்த்துக்கள்.. 

😂😂

4 hours ago, tulpen said:

எது எப்படியோ இந்த தேர்தல்  தமிழக மக்களுக்கானது. சொந்த அரசியலையே சரியாக செய்ய தெரியாமல் தோற்றுப் போன ஈழத்தமிழர்களான எம்மை விட தமிழக மக்கள் புத்திசாலிகள். ஆகவே, அவர்கள் சிறந்த வகையில் வாக்களித்து தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வர். நிச்சயமாக இனவெறியை அவர்கள் ஆதரிக்கப்போவதில்லை. 

ஆகவே தமிழ்நாட்டார் தயவுசெய்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்காது, அதிமுக , திமுக, மதிமுக, கதிமுக, கிதிமுக, திக, அஅதிமுக, திதிக, ககதிக, வெகதிக போன்ற கட்சிகளுக்கு வாக்களித்து தமிழ்நாட்டைக் காப்பாற்றவும்.

😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kapithan said:

ஆகவே தமிழ்நாட்டார் தயவுசெய்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்காது, அதிமுக , திமுக, மதிமுக, கதிமுக, கிதிமுக, திக, அஅதிமுக, திதிக, ககதிக, வெகதிக போன்ற கட்சிகளுக்கு வாக்களித்து தமிழ்நாட்டைக் காப்பாற்றவும்.

😀

அவர் சொல்ல வருவதன் மறுபக்கம்..... உங்கள் போராட்டம் தோற்றுவிட்டதால்,இனிமேல் விடுதலை என்ற விசர் கதையினை விட்டுப்போட்டு, இனவெறியை காட்டாது, டக்லஸ், அங்கயன், கருணா, பிள்ளையான் போல, சிங்களவர் ஆட்சியின் கீழ் சிங்களவர்களுடன் பாசமாக சேர்ந்து வாழுங்கோ, மாக்கள்....

Link to comment
Share on other sites

11 minutes ago, Kapithan said:

 

ஆகவே தமிழ்நாட்டார் தயவுசெய்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்காது, அதிமுக , திமுக, மதிமுக, கதிமுக, கிதிமுக, திக, அஅதிமுக, திதிக, ககதிக, வெகதிக போன்ற கட்சிகளுக்கு வாக்களித்து தமிழ்நாட்டைக் காப்பாற்றவும்.

😀

அது தமிழ் நாட்டு மக்களின் குடியுரிமை. அவர்களது நாட்டு அரசியல். யாருக்கு வாக்களிப்பது என்பதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுடையது. பக்கத்து  வீட்டுக்காரனுடையது அல்ல. அவர்கள் யாருக்கு வாக்களித்தாலும் ஈழதமிழருக்கு ஒன்று தான்.  புலிகளின் பாராட்டத்தக்க அம்சங்ககளில்  ஒன்று அங்கிருந்த எல்லா கட்சி பிரமுகர்களினதும் உதவிகளையும் தேவைப்படும் போது   பெற்ற அவர்கள் அவர்களது உள்ளூர் அரசியலில் எப்போதுமே  தலையிடவேயில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

அது தமிழ் நாட்டு மக்களின் குடியுரிமை. அவர்களது நாட்டு அரசியல். யாருக்கு வாக்களிப்பது என்பதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுடையது. பக்கத்து  வீட்டுக்காரனுடையது அல்ல. அவர்கள் யாருக்கு வாக்களித்தாலும் ஈழதமிழருக்கு ஒன்று தான்.  புலிகளின் பாராட்டத்தக்க அம்சங்ககளில்  ஒன்று அங்கிருந்த எல்லா கட்சி பிரமுகர்களினதும் உதவிகளையும் தேவைப்படும் போது   பெற்ற அவர்கள் அவர்களது உள்ளூர் அரசியலில் எப்போதுமே  தலையிடவேயில்லை. 

இதைத்தானே மாஞ்சு, மாஞ்சு சொன்னோம்.... இவ்வளவு தூரம் சுத்தி, கடைசில நீங்களும் அந்த நிலைக்கு வந்தமை குறித்து மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:
3 minutes ago, tulpen said:

யாருக்கு வாக்களிப்பது என்பதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுடையது.

தமிழக மக்கள் புத்திசாலிகள். ஆகவே, அவர்கள் சிறந்த வகையில் வாக்களித்து தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வர். நிச்சயமாக இனவெறியை அவர்கள் ஆதரிக்கப்போவதில்லை.

 

இந்த  2 கருத்தும் உங்களிடம் இருந்து தான் துல்பென் வந்தது . 
1 இல் அவர்கள் அரசியல் அவர்கள் உரிமை என்று கூறிக்கொண்டே

2ஆவது கருத்தில் அவர்கள் எப்படி செயல்பட வேண்டும், அல்லது செயல் படுவார்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

41 minutes ago, Sasi_varnam said:

இந்த  2 கருத்தும் உங்களிடம் இருந்து தான் துல்பென் வந்தது . 
1 இல் அவர்கள் அரசியல் அவர்கள் உரிமை என்று கூறிக்கொண்டே

2ஆவது கருத்தில் அவர்கள் எப்படி செயல்பட வேண்டும், அல்லது செயல் படுவார்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்.

அது சரி. இந்த கருத்தில் உங்கள் பிரச்சனை என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

அது சரி. இந்த கருத்தில் உங்கள் பிரச்சனை என்ன? 

முரணான கருத்தாய் இருக்கிறதே.  அவர்கள் உரிமை ...நீங்கள் தீர்மானிக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

1 minute ago, Sasi_varnam said:

முரணான கருத்தாய் இருக்கிறதே.  அவர்கள் உரிமை ...நீங்கள் தீர்மானிக்கிறீர்களா?

இல்லை நான் தீர்மானிக்கவில்லை. அந்த உரிமை எனக்கில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவர் நாம் தமிழர் கட்சியை எதிர்க்கின்றார்களோ அவர்கள் ஊழல்கட்சிகளுக்கு சார்பானவர்கள். ஊழல்களாலும்,லஞ்சம்களினாலும்  திளைப்பவர்களை  இன்னும் இனியும் ஆதரித்தால்  எமது நாடும் அதே சாக்கடையில் விழும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

1) அது தமிழ் நாட்டு மக்களின் குடியுரிமை. அவர்களது நாட்டு அரசியல். யாருக்கு வாக்களிப்பது என்பதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுடையது.

2) பக்கத்து  வீட்டுக்காரனுடையது அல்ல. 

3) அவர்கள் யாருக்கு வாக்களித்தாலும் ஈழதமிழருக்கு ஒன்று தான்.  

4) புலிகளின் பாராட்டத்தக்க அம்சங்ககளில்  ஒன்று அங்கிருந்த எல்லா கட்சி பிரமுகர்களினதும் உதவிகளையும் தேவைப்படும் போது   பெற்ற அவர்கள் அவர்களது உள்ளூர் அரசியலில் எப்போதுமே  தலையிடவேயில்லை. 

1) 100%

2)1️⃣0️⃣0️⃣ அதைத்தான் நாம் தமிழர் கட்சி சொல்கிறது, தமிழரின்/தமிழ்நாட்டின் தலைவிதியை தமிழன்தான் தீர்மானிக்க வேண்டும். எனவே ஆட்சி அதிகாரத்தில் தமிழன் இருந்தால் மட்டுமே அது சாத்தியமென்று.

3) ⁉️ Maybe 5️⃣0️⃣/5️⃣0️⃣

4) 1️⃣0️⃣0️⃣

 

Link to comment
Share on other sites

5 minutes ago, Kapithan said:

1) 100%

2)1️⃣0️⃣0️⃣ அதைத்தான் நாம் தமிழர் கட்சி சொல்கிறது, தமிழரின்/தமிழ்நாட்டின் தலைவிதியை தமிழன்தான் தீர்மானிக்க வேண்டும். எனவே ஆட்சி அதிகாரத்தில் தமிழன் இருந்தால் மட்டுமே அது சாத்தியமென்று.

3) ⁉️ Maybe 5️⃣0️⃣/5️⃣0️⃣

4) 1️⃣0️⃣0️⃣

 

அடுத்த நாடான தமிழகத்தில் பல கட்சிகள் உள்ளன. ஒவ்வொருவரும் ஒன்றை கூறலாம். தவறில்லை. அதில் தமக்கு பிடித்த கட்சியை தமிழ் நாட்டில் வாக்குரிமை உள்ள மக்கள் தீர்மானிப்பார்கள். துல்பலனும் கபிதனும் ஜாலியா இப்படி பொழுதை போக்கிற்று போய் படுப்போம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

சொந்த அரசியலையே சரியாக செய்ய தெரியாமல் தோற்றுப் போன ஈழத்தமிழர்களான எம்மை விட தமிழக மக்கள் புத்திசாலிகள்.

💯

தமிழக அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர்களை தான் தங்களது அரசியலுக்காக உசுப்பேத்த முடிகிறது தமிழக மக்கள் தங்கள் நலனில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

எம் மதமும் சம்மதம் என்று சும்மா சொல்வது போல் தமிழகத்தில் எந்த கட்சியும் சம்மதம் என்று சொன்னால் வெளிநாட்டில் உள்ள ஈழத்தமிழர்கள் திருப்த்தி அடையமாட்டார்கள் நாம் தமிழர் மட்டும் என்று சொல்ல வேண்டும் 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

அடுத்த நாடான தமிழகத்தில் பல கட்சிகள் உள்ளன. ஒவ்வொருவரும் ஒன்றை கூறலாம். தவறில்லை. அதில் தமக்கு பிடித்த கட்சியை தமிழ் நாட்டில் வாக்குரிமை உள்ள மக்கள் தீர்மானிப்பார்கள். துல்பலனும் கபிதனும் ஜாலியா இப்படி பொழுதை போக்கிற்று போய் படுப்போம். 

தமிழருக்கு நன்மை நடந்தால் மகிழ்ச்சியே. அது ஈழத் தமிழனாயிருந்தாலென்ன தமிழ்நாட்டாராக இருந்தால் என்ன அல்லது உலகட் தமிழராயிருந்தால் என்ன.. 

எல்லாம் சுபமே.. 🙏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 07:19 PM   கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கென சகல வசதிகளும் கொண்ட புதிய கட்டடத் தொகுதி இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திருகோணமலையில் திறந்துவைக்கப்பட்டு, அரச உத்தியோகத்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.  இந்த கட்டடம் செந்தில் தொண்டமானின் 241 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லை எனவும், தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடியதொரு கட்டடத்தொகுதியை கட்டமைக்கும் பணிகள் பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால்  அக்கட்டடத்தை நிர்மாணித்துத் தருமாறு  ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர். அக்கோரிக்கையின் பிரகாரம், ஆளுநர் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/182051
    • 26 APR, 2024 | 05:13 PM     சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவாக அரசாங்க தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை சிதைவடைந்திருப்பது குறித்து தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது.  இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமாக ஆட்சி முறைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியடையவும் மேலும் அநீதிகளுக்கும்  வழிவகுத்திருக்கிறது.  உத்தியோகபூர்வமான பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பிலான கேள்விகள் தொடரவே செய்கின்றன. பொறுப்பற்ற முறையில் தங்களது கடமையை செய்யத் தவறியவர்களில் சிலர் அதற்கான விளைவுகளைச் சந்தித்தபோதிலும், மூடிமறைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உணர்வு மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது. தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவருகின்ற கதைகள் உண்மையைக் கண்டறிவதற்கு புதிய உறுதிப்பாட்டுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகின்றன.  அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சான்றுகளைச் சேகரிக்கும் அதன் பிரிவை தொடர்ந்து செயற்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாக அல்லது தியாகிகளாக திருநிலைப்படுத்துவதற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை மேற்கொள்கின்ற முயற்சியின் நோக்கம் படுகொலைகள் பற்றிய நினைவை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதேயாகும். இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது இலங்கையின் வரலாற்றை கறைபடுத்திய வன்செயல் மற்றும் அநீதியின் பரந்த பின்புலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 1989ஆம் ஆண்டில் உச்சநிலைக்குச் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடக்கம் 2009 மே மாதம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப்போர் வரை மோதல்களினதும் வன்முறைகளினதும் காயங்கள் ஆழமானவையாக இருக்கின்றன. நல்லிணக்கத்துக்கான எமது தேடலில் எமது கடந்த காலத்தின் வேதனைமிகு உண்மைகளுக்கு முகங்கொடுத்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும்  குணப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், நீதிக்கான தேடுதல் பக்கச்சார்பான நலன்களையும் தேர்தல் ஆணைகளையும் கடந்தவையாக இருக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் பொறுப்புக்கூறல் மற்றும்  நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளுக்கு புதுச்சக்தியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவமும் எதிர்கால அரசாங்கத்தின் தலைமைத்துவமும் சுயநலன்களின் நெருக்குதல்களில் இருந்து விடுபட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான தேடலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/182046
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.