Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்! – மாணவர்கள் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்! – மாணவர்கள் காயம்

 
Capture-1.jpg
 103 Views

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினுள் அடாத்தாக புகுந்த அமெரிக்கன் மிசனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தும் இடம் தமக்கு சொந்தமானது எனவும், அதில் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்த வேண்டாம் எனக்கூறியுமே மாணவர்கள் தாக்கப்பட்டனர்.

Capture-2.jpg

கடந்த சில மாதங்களாக இந்தக் காணிப் பிரச்சினை நடைபெற்று, தற்போது அந்த நிலம் கல்லூரிக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில், இன்று (09) காலை பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் அங்கு சென்ற அமெரிக்கன் மிசனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் வாகனங்களை நிறுத்தும் இடத்திற்கு செல்ல முடியாதவாறு தடிகள், சீற்றுகளை போட்டு பாதையை மறித்திருந்தனர்.

எனினும், அங்கு ஆசிரியர்கள் வருகை தந்த பின்னர் மாணவர்கள் வாகனங்களை உள்ளே நிறுத்தியபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஐந்து வரையான மாணவர்கள் காயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தெல்லிப்பழை பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தகவல் – யாழ்.தர்மினி

 

https://www.ilakku.org/?p=46916

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக விபரங்களுக்கு

https://m.facebook.com/JUCMediaClub/

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2021 at 18:46, MEERA said:

மேலதிக விபரங்களுக்கு

https://m.facebook.com/JUCMediaClub/

சண்டைகள் பயங்கரமாத்தான் நடந்திருக்கு போல முகநூலில் அதிகம் உலாவுகிறது 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

பாவம் பிரபாகரனும் அவன் பிள்ளைகளும்.

இந்த நன்றியில்லாத  தமிழனைவிட சிங்களவன் எவ்வளவோ மேல். 

😡

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது பெரியவர்கள்/ அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை.
இந்த பிரச்சனையை மாணவர்கள் மத்தியில் விரோதமாக வளர்த்தெடுப்பது முற்றிலும் தவறு.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

இது பெரியவர்கள்/ அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை.
இந்த பிரச்சனையை மாணவர்கள் மத்தியில் விரோதமாக வளர்த்தெடுப்பது முற்றிலும் தவறு.

பாடாசாலை நிர்வாகம் மாணவர்களை தூண்டி விட்டிருந்தால் அதை பேசி தீர்க்க முயன்றிருக்க வேண்டும் அல்லது சட்ட ரீதியாக அணுகியிருக்க வேண்டும்.

இப்படி போதகர் முன்னிலையில் நின்று பெண்களை ஏவி தடி கொண்டு அடித்தது கலைப்பதல்ல.

 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, MEERA said:

இதற்கும் சச்சியருக்கும் என்ற தொடர்பு?

வெற்றி செல்வனின் தொடரை  படித்து இருந்தால் நல்லது சச்சியார்  யார் என்பது புரியும் நேரிடையாக  குற்றம் சாட்ட முடியாத  வகையில் அவர்கள் ஓடுவார்கள் என்பது உங்களுக்கு நான் இங்கு சொல்லி புரியாவிடின் இந்த திரியில் இருந்து ஒதுங்கி கொள்கிறேன் சிலவேளை எனக்கு புரியவில்லை போல் உள்ளது நன்பரே .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, MEERA said:

பாடாசாலை நிர்வாகம் மாணவர்களை தூண்டி விட்டிருந்தால் அதை பேசி தீர்க்க முயன்றிருக்க வேண்டும் அல்லது சட்ட ரீதியாக அணுகியிருக்க வேண்டும்.

இப்படி போதகர் முன்னிலையில் நின்று பெண்களை ஏவி தடி கொண்டு அடித்தது கலைப்பதல்ல.

 

சரி பிழைகளுக்கப்பால் நமக்குள் பிரச்சனைகள் வரக்கூடாது மீரா.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

சரி பிழைகளுக்கப்பால் நமக்குள் பிரச்சனைகள் வரக்கூடாது மீரா.

புரியவில்லை குசா,

அந்த பாடாசாலையில் கல்வி கற்றவர்கள் சிலரும் தற்போது அமெரிக்க மிசனின். பின்னணியில்.  தாம் படித்த பாடசாலையை விட அவர்களுக்கு மதம் பெரியதாகி விட்டது.

25 minutes ago, பெருமாள் said:

வெற்றி செல்வனின் தொடரை  படித்து இருந்தால் நல்லது சச்சியார்  யார் என்பது புரியும் நேரிடையாக  குற்றம் சாட்ட முடியாத  வகையில் அவர்கள் ஓடுவார்கள் என்பது உங்களுக்கு நான் இங்கு சொல்லி புரியாவிடின் இந்த திரியில் இருந்து ஒதுங்கி கொள்கிறேன் சிலவேளை எனக்கு புரியவில்லை போல் உள்ளது நன்பரே .

ஒதிங்கிக் கொள்ள தேவையில்லை...

யூனியன் கல்லூரியில் நடந்த சம்பவத்திற்கும் சச்சியருக்கும் என்ன தொடர்பு?  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, MEERA said:

புரியவில்லை குசா,

அந்த பாடாசாலையில் கல்வி கற்றவர்கள் சிலரும் தற்போது அமெரிக்க மிசனின். பின்னணியில்.  தாம் படித்த பாடசாலையை விட அவர்களுக்கு மதம் பெரியதாகி விட்டது.

மீரா! மன்னிக்கவும் தவறான புரிதலுக்கு. 
எனக்கு உண்மையான தகவல்கள் தெரியவில்லை. ஊடகங்களை நம்புவதற்கும் இல்லை. உங்களுக்கு  உண்மையான தகவல்கள் தெரிந்தால் முழுமையாக இங்கே பகிருங்கள்.
ஆனால் எமக்குள் மத வேறுபாடுகள் வரக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, MEERA said:

ஒதிங்கிக் கொள்ள தேவையில்லை...

யூனியன் கல்லூரியில் நடந்த சம்பவத்திற்கும் சச்சியருக்கும் என்ன தொடர்பு?  

பிழையாக சொல்லிவிட்டேன்  மன்னித்துக்கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

மீரா! மன்னிக்கவும் தவறான புரிதலுக்கு. 
எனக்கு உண்மையான தகவல்கள் தெரியவில்லை. ஊடகங்களை நம்புவதற்கும் இல்லை. உங்களுக்கு  உண்மையான தகவல்கள் தெரிந்தால் முழுமையாக இங்கே பகிருங்கள்.
ஆனால் எமக்குள் மத வேறுபாடுகள் வரக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இல்லை குசா,

ஊடகங்களை கூட்டி வைத்து தமது மதம் சார்ந்தவர்களால் வன்முறை ஏற்படவில்லை என்று பொய் கூறுகிறார்கள்.

மாணவர்களால் கதவு உடைக்கப்பட்டிருந்தால் , அத்து மீறி உள் நுழைந்திருந்தால் இவர்கள் ஏன் பொலிசை நாடவில்லை...?

9 minutes ago, பெருமாள் said:

பிழையாக சொல்லிவிட்டேன்  மன்னித்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு என்ன நடந்தது 

  • கருத்துக்கள உறவுகள்

 அமெரிக்கன் மிசனுக்கும் தென்னிந்திய திருச்சபைக்குமான உள்வீட்டு பிரச்சினை.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

 அமெரிக்கன் மிசனுக்கும் தென்னிந்திய திருச்சபைக்குமான உள்வீட்டு பிரச்சினை.

எதன் அடிப்படையில் இப்படி கூறுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, MEERA said:

எதன் அடிப்படையில் இப்படி கூறுகிறீர்கள்?

தென்னிந்தய திருச்சபை பேராயர் டானியேல் தியாகராஜா கொடுத்த பேட்டியை பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2021 at 04:47, Kapithan said:

இந்த நன்றியில்லாத  தமிழனைவிட சிங்களவன் எவ்வளவோ மேல். 

 

இந்த மாயைதான் இப்போது சிங்களவனுக்கு அவசரம் வேண்டியது. இந்த ஒன்றை வைத்துக்கொண்டே உள்நுழைந்து எல்லாவற்றையும் சுருட்டிவிடுவான். நாங்கள் ஆளையாள் முறைச்சுக்கொண்டிருப்போம். அடுத்த தொல்பொருள் ஆராய்ச்சி இங்குதான் ஆரம்பமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இந்த மாயைதான் இப்போது சிங்களவனுக்கு அவசரம் வேண்டியது. இந்த ஒன்றை வைத்துக்கொண்டே உள்நுழைந்து எல்லாவற்றையும் சுருட்டிவிடுவான். நாங்கள் ஆளையாள் முறைச்சுக்கொண்டிருப்போம். அடுத்த தொல்பொருள் ஆராய்ச்சி இங்குதான் ஆரம்பமாம்.

இது மாயை அல்ல சாத்தான். அனுபவம் !!!

இத்தனை அழிவுகள், தியாகங்களின் பின்னரும் சாதியாலும், சமயத்தாலும் பிரிந்து நிற்போமானால், தனது இனத்திற்கு எப்போதுமே விசுவாசமாக இருக்கும் சிங்களவன் மேலானவன் என்பது உண்மைதானே...

☹️

  • கருத்துக்கள உறவுகள்

 நாங்கள் நினைப்பது; சிங்களவன் நமது நிலங்களை பறிக்கிறான், நமது பெலத்தைபாவித்து பலமிழந்தவர்களின், ஏமாளிகளின் உடமைகளை நாம்  பறிப்பதில் தப்பில்லை என நினைக்கிறோம். மீண்டும் நிஞாயம் தேடி அவனிடமே போகிறோம். முதல்வர் விக்கினேஸ்வரன் கூறியதுபோல் குரங்கு அப்பம் பிட்ட கதை,. எல்லாம் அவன் விழுங்கின பிற்பாடு அடாது செய்தவனுக்கு ஒன்றும்  இழப்பில்லை அடுத்தவனின் சொத்தை பறித்து  இல்லாமற் செய்துவிட்ட மகிழ்ச்சி. இங்கு  யாரை நோவது? எதிரியின் திட்டத்தை நாமே செய்து முடிக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2021 at 07:57, கற்பகதரு said:

தென்னிந்தய திருச்சபை பேராயர் டானியேல் தியாகராஜா கொடுத்த பேட்டியை பாருங்கள்.

1-BF3-F155-1577-47-AD-9-F98-D9840-F22-B7

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க மிஷன் உரிமை கோரிய ஆதனம் யூனியன் கல்லூரிக்கே சொந்தம்

April 21, 2021

mallakam.jpg

அமெரிக்கன் மிஷன் உரிமை கோரும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பராமரிப்பில் உள்ள ஆதனத்தை கல்லூரியிடம் பொறுப்பளித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது.

அத்துடன், அமைதிக்கு பங்கம் விளைவித்தனர் என குற்றஞ்சாட்டப்பட்ட அமெரிக்க மிஷனின் அருட்தந்தையர்கள் இருவரை தலா 5 லட்சம் பெறுமதியான பிணை முறியில் விடுவித்த நீதிமன்று, அவர்கள் இருவரும் 6 மாதகாலத்துக்குள் அமைதிக்கு பங்கம் விளைவித்தால் பிணை முறிக்கான பணத்தைச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

கல்லூரியின் மாணவர்களுக்கான உணவுத் திட்ட சமையல் பகுதி மற்றும் துவிச்சக்கர வண்டித் தரிப்பிடம் அமைந்துள்ள காணி யாருக்கு சொந்தம் என கல்லூரி நிர்வாகத்திற்கும் அமெரிக்க மிஷனுக்கும் இடையில் பிரச்சினை எழுந்தது.

தமக்கே சொந்தம் என சட்ட ரீதியான ஆவணங்களை கல்லூரி நிர்வாகம் வைத்துள்ளனர். அத்துடன் அமெரிக்க மிஷனின் அத்துமீறல்கள் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 9ஆம் திகதி கல்லூரி மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தும் இடம் தமது சபைக்கு சொந்தமான காணி எனவும் அங்கு துவிச்சக்கர வண்டிகளை நிறுத்த வேண்டாம் என கூறி மாணவர்களுடன் முரண்பட்டு மாணவர்கள் மீது அமெரிக்க மிஷனைச் சேர்ந்த சிலர் தாக்குதல்களையும் மேற்கொண்டனர்.

அதனையடுத்து அமைதிக்கு பங்கம் விளைவித்தனர் என அமெரிக்க மிஷன் அருட்தந்தையர்கள் இருவருக்கு எதிராக தெல்லிப்பழை பொலிஸாரால், மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கு இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டது. தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சார்பில் மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

குற்றஞ்சாட்டப்பட்ட அருட்தந்தையர்கள் இருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

“பாடசாலையின் மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் சமையல் பகுதி அமைந்துள்ள காணியில் மாணவர்களின் துவிச்சக்கர வண்டி தரிப்பிடமும் உள்ளது. அந்த ஆதனம் கல்லூரியின் பயன்பாட்டில் உள்ளமைக்கு அரச வர்த்தமானி அறிவிப்பும் உள்ளது” என்று சமர்ப்பணம் செய்த மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன், ஆவணங்களை மன்றில் சமர்ப்பித்தார்.

அருட்தந்தையர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியும் தமது ஆட்சேபனையை முன்வைத்து சமர்ப்பணம் செய்தார்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், அமெரிக்கன் மிஷன் உரிமை கோரும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பராமரிப்பில் உள்ள ஆதனத்தை கல்லூரியிடம் பொறுப்பளித்து கட்டளையிட்டு வழக்கை முடிவுறுத்தியது.

அத்துடன், அமைதிக்கு பங்கம் விளைவித்தனர் என குற்றஞ்சாட்டப்பட்ட அமெரிக்க மிஷனின் அருட்தந்தையர்கள் இருவரை தலா 5 லட்சம் பெறுமதியான பிணை முறியில் விடுவித்த நீதிமன்று, கட்டளை 6 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என சுட்டிக்காட்டியது.

அதனால் அவர்கள் இருவரும் 6 மாதகாலத்துக்குள் அமைதிக்கு பங்கம் விளைவித்தால் பிணை முறிக்கான பணத்தைச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

 

https://globaltamilnews.net/2021/159759/

  • கருத்துக்கள உறவுகள்

யூனியன் கல்லூரி மாணவர்களை பொல்லாங்கட்டையால் அடிக்கும் அக்கா நீதிமன்றம் வரவில்லையோ.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2021 at 21:26, நியாயத்தை கதைப்போம் said:

யூனியன் கல்லூரி மாணவர்களை பொல்லாங்கட்டையால் அடிக்கும் அக்கா நீதிமன்றம் வரவில்லையோ.

அக்காவிற்கு எதிராக கல்லூரியினர் வழக்கு தாக்கல் செய்யவில்லை போல் தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.