Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொய் சொல்லாதவன் என பெயர் எடுத்தவன் நான்-எம்.ஏ.சுமந்திரன் எம்.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொய் சொல்லாதவன் என பெயர் எடுத்தவன் நான்-எம்.ஏ.சுமந்திரன் எம்.பி

எந்த இடத்திலும் எந்த பொய்யையும் ஒரு தடவை நான் சொன்னது கிடையாது.மக்களுக்கு உண்மையான நிலைமையை கூறுவது என்பது பலருக்கு பலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

சட்டத்தரணி தொழிலிலேயே பொய் சொல்லாதவன் என்ற பெயர் எடுத்தவன் நான் ஆகவே அரசியலில் பொய் சொல்ல வேண்டிய எந்தத் தேவையும் எனக்கு கிடையாது குறிப்பாக எதிரணியினர் இவ்வாறு கூறி திரிகின்றார்கள்.ஜெனிவா தொடர்பாக பல இடங்களில் பல விளக்கங்களை கொடுத்திருக்கின்றேன். அதில் கேட்ட கேள்வி அனைத்திற்கும் பதில் கூறியுள்ளேன். ஆகவே எந்த இடத்திலும் எந்த பொய்யையும் ஒரு தடவை நான் சொன்னது கிடையாது.

மக்களுக்கு உண்மையான நிலைமையை கூறுவது என்பது பலருக்கு பலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கின்றது. ஏனென்றால் சந்திரனை கொண்டு வருவோம் . சூரியனை கொண்டு வருவோம் என மக்களுக்கு அவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் நான் அவ்வாறு இல்லை.இப்படி தான் என தெளிவு படுத்துகின்றேன்.இவ்விடயம் தான் அவர்களுக்கு கசக்கின்றது என குறிப்பிட்டார்.

 

https://www.meenagam.com/பொய்-சொல்லாதவன்-என-பெயர்/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் இவரின் முதல் பொய்யாய் இருக்குமோ.....?

  • கருத்துக்கள உறவுகள்

பட்டப்படிப்பை தெரிவு செய்யாதிருந்தால் இதை நம்பமுடியும் 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பொய் உண்மை பற்றி கேட்காமல் !...

லண்டனில் டூட்டிங் போன்ற தமிழ் சனம் கடைகள்   உள்ள இடத்தில் எந்த பாதுகாப்பும் இல்லாமல் தனியே நடந்து வரமுடியுமா ? என்று அந்த செய்தியாளர் கேட்டிருக்கனும் இந்த அரிச்சந்திரனை அதன் பின் அரசியலையே துறந்து நிரந்தர ஓய்வுக்கு சிங்கன் போயிருப்பார் .

அல்லது கனடாவில் இருந்து தமிழரசு கட்சி தலைவரே ஏன் இவரை நம்பிக்கையற்றவர் பொய்யர் என்கிறார் என்று கேள்வி கேட்கணும்  அப்ப  தெரியும் அவரின் நாக்கு உளறுவதை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, கிருபன் said:

சட்டத்தரணி தொழிலிலேயே பொய் சொல்லாதவன் என்ற பெயர் எடுத்தவன் நான் ஆகவே அரசியலில் பொய் சொல்ல வேண்டிய எந்தத் தேவையும் எனக்கு கிடையாது

உலகத்திலை எந்த அப்புக்காத்து பொய்ச்சத்தியமும்,பொய்யும் சொல்லாமல் இருக்கிறார்கள்???????

ஒரு வேளை இருக்கும் இருக்கும். இவர் அதிசய பிறவி எல்லோ. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் பொய் சொல்லி பெரும்பான்மை இனத்தவரை நம்ப வைக்க வேண்டும் என்று 
டிவிக்கு முன்னால் இருந்து கொண்டு சொன்னது 

போன மாசம் 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயகோ.

  • கருத்துக்கள உறவுகள்


தமிழரசு பிலிம்ஸ்..

தினசரி 4 காட்சிகள்..👍

IMG-20210506-003640.jpg

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

லண்டனில் டூட்டிங் போன்ற தமிழ் சனம் கடைகள்   உள்ள இடத்தில் எந்த பாதுகாப்பும் இல்லாமல் தனியே நடந்து வரமுடியுமா ?

ஏனப்பா லண்டன், டூட்டிங் என்று போகிறீர்கள். இவருடைய சொந்த மண்ணிலே ஆகட்டும், எந்தப்  பாதுகாப்பின்றித் தனியே நடந்து வரமுடியுமா.? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

சட்டத்தரணி தொழிலிலேயே பொய் சொல்லாதவன் என்ற பெயர் எடுத்தவன் நான்

சட்டத்தின் படி வார்த்தை பிரயோகம் உண்மையாக இருக்கலாம்.

 

13 hours ago, கிருபன் said:

அரசியலில் பொய் சொல்ல வேண்டிய எந்தத் தேவையும் எனக்கு கிடையாது

இதுவும் சட்டத்தின் படி உண்மையே. அரசியலில் தானே அவசியம் இல்லை. அவசியம் இருப்பது வேறு இடத்தில்?

 

சட்டத்தின் படி பொய் சொல்வது, உண்மையை மறைப்பது, சொல்லாமல் விடுவது என்பது போன்றவைகள் வேறு வேறானவை. 

அதனால், சுமா உண்மையைத் தான் சொல்கிறார் என்று அவர் நம்புவதாகவும் இருக்கலாம். 

கேட்போருக்கு சுமா சொல்வது வேறாக தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kadancha said:

சட்டத்தின் படி வார்த்தை பிரயோகம் உண்மையாக இருக்கலாம்.

 

இதுவும் சட்டத்தின் படி உண்மையே. அரசியலில் தானே அவசியம் இல்லை. அவசியம் இருப்பது வேறு இடத்தில்?

 

சட்டத்தின் படி பொய் சொல்வது, உண்மையை மறைப்பது, சொல்லாமல் விடுவது என்பது போன்றவைகள் வேறு வேறானவை. 

அதனால், சுமா உண்மையைத் தான் சொல்கிறார் என்று அவர் நம்புவதாகவும் இருக்கலாம். 

கேட்போருக்கு சுமா சொல்வது வேறாக தெரிகிறது. 

பொய் சொல்லாதவன் என பெயர் எடுத்தவன் நான்-எம்.ஏ.சுமந்திரன்

யார் அந்த பெயரை சூடினார் என்பதுதான் அவர் சொல்லாதது.
எஜமானர்களிடம் அவ்வாறு ஒரு பெயர் இவருக்கு நிர்ச்சயம் கிடைத்திருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

ஏனப்பா லண்டன், டூட்டிங் என்று போகிறீர்கள். இவருடைய சொந்த மண்ணிலே ஆகட்டும், எந்தப்  பாதுகாப்பின்றித் தனியே நடந்து வரமுடியுமா.? 🤔

உண்மை பேசுபவருக்கு பொய்யரசின் பாதுகாப்பு அப்போ. இவருக்கு அது தேவையில்லை என்று 
அதே அரசின் பாதுகாப்பு குறைப்பு இப்போ.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Maruthankerny said:

இப்படித்தான் பொய் சொல்லி பெரும்பான்மை இனத்தவரை நம்ப வைக்க வேண்டும் என்று 
டிவிக்கு முன்னால் இருந்து கொண்டு சொன்னது 

போன மாசம் 

அது மறந்து போச்சு. இது இந்த மாத அறிக்கை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.