Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.png

covid-5.jpg?w=800&ssl=1

 

கொரோனா விதிமுறைகளைக் கடைபிடிக்காமல், மதுரை – தூத்துக்குடி விமானத்தில் நடந்த திருமணம் தற்போது பல்வேறு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

மலை உச்சியில், கடலுக்கு அடியில், பாராசூட்டில் பறந்தபடி என விதவிதமான திருமணங்களை செய்திகளில் பார்த்திருப்போம். அண்மையில் மதுரையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் நடந்த திருமணம் தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரிதும் பேசப்பட்டது.

மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த மரக்கடை அதிபரின் மகன் ராகேஷ் – மதுரை தொழிலதிபரின் மகள் தீக்சனா திருமணம் தான் இப்படி விமரிசையாக விமானத்தில் நடந்தேறியது. விமானத்தில் பறந்தபடி திருமணத்தை கண்டுகளித்த உறவினர்களும் மகிழ்ச்சியில் துள்ளினர்.

ஆனால் இந்த திருமணம் பல்வேறு சர்ச்சைகளுக்கும் வித்திட்டிருக்கிறது. கொரோனா 2வது அலை கொடூரமாக வீசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தனி மனித இடைவெளியின்றி, முககவசம் இன்றி இந்த திருமணம் நடந்திருப்பதுதான் அதற்கு காரணம். இதுபற்றி சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. அத்துடன் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக திருமணம் நடந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்த பணியாளர்கள் அனைவருக்கும் தற்காலிக பணி வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளது.

 

mar.jpg?resize=800%2C450&ssl=1


மதுரை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திடம் சிவில் விமான போக்குவரத்துத் துறை முழு அறிக்கை கோரியுள்ளது. விமானத்தில் திருமணம் நடக்க இருப்பது பற்றி தங்களுக்கு தெரியாது என விமான நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த விளக்கம் ஏற்கப்படுமா என்று தெரியவில்லை. அதே நேரத்தில் விமானத்தில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் பயணித்த மணமக்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய சிவில் விமான போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா 2வது அலையில் கொத்து கொத்தாக மக்கள் செத்துக் கொண்டிருக்கும் வேளையில் சமூக பொறுப்பின்றி, தனி மனித இடைவெளியின்றி நடந்த இந்த திருமணம் பற்றி சமூக ஆர்வலர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

 

நியூஸ்7

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவம், இவ்வளவு பெரிய கோடீஸ்வரைன் மகனுக்கு, திருமணத்தன்று முகத்தை சவரம் செய்யக்கூட நேரமில்லை.. நாவிதனும் கிட்டவில்லை. 🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ராசவன்னியன் said:

பாவம், இவ்வளவு பெரிய கோடீஸ்வரைன் மகனுக்கு, திருமணத்தன்று முகத்தை சவரம் செய்யக்கூட நேரமில்லை.. நாவிதனும் கிட்டவில்லை. 🤔

முகச்சவரம் செய்யாமல் இருப்பதுதான் இக்கால நாகரீகம் என்பது மதுரை சிங்கத்திற்கு தெரியாமல் இருப்பதன் மர்மம் என்னவோ? 😎

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா நோய்க்கு எதிரான ஒத்துழைப்பு கொடுக் வேண்டும் என்ற நோக்கம்,தங்கள் பாதுகாப்பு  இவர்களிடம் சிறிதும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கொரோனா நோய்க்கு எதிரான ஒத்துழைப்பு கொடுக் வேண்டும் என்ற நோக்கம்,தங்கள் பாதுகாப்பு  இவர்களிடம் சிறிதும் இல்லை.

ஐரோப்பிய நாடுகள் பல கொரோனா முதல் அலையிலும் இனியில்லை என்ற கட்டுப்பாடுகளுடைனையே இருந்தன. அப்படியிருந்தும் மூன்றாவது கொரோனா அலையும் வீசி விட்டது.

அது சரி தாங்கள் ஊசி போட்டாச்சோ? 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அது சரி தாங்கள் ஊசி போட்டாச்சோ? 😁

இல்லை.தயக்கம் எதுவும் இல்லை மருத்துவரிடம் சொல்லி இருக்கு அழைப்பார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

முகச்சவரம் செய்யாமல் இருப்பதுதான் இக்கால நாகரீகம் என்பது மதுரை சிங்கத்திற்கு தெரியாமல் இருப்பதன் மர்மம் என்னவோ? 😎

சீக்காளி, பிச்சைக்காரன் மாதிரி இருப்பதுதான் இக்கால ஃபேசன் என புரிந்துகொண்டேன்.
ஏனெனில் ஒரு காலத்தில் (45 வருசத்துக்கு முன்) கல்லூரியில் படிக்கும்போது நான் ஸ்டெப் கட் வைத்திருந்தேன்.  😎

அதுபோல முகத்தை சவரம் செய்யாமல் இருப்பது இப்பொழுது ஃபேசன் ஆகிவிட்டது போலும்.

தகவலுக்கு நன்றி..

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ராசவன்னியன் said:

சீக்காளி, பிச்சைக்காரன் மாதிரி இருப்பதுதான் இக்கால ஃபேசன் என புரிந்துகொண்டேன்.
ஏனெனில் ஒரு காலத்தில் (45 வருசத்துக்கு முன்) கல்லூரியில் படிக்கும்போது நான் ஸ்டெப் கட் வைத்திருந்தேன்.  😎

அதுபோல முகத்தை சவரம் செய்யாமல் இருப்பது இப்பொழுது ஃபேசன் ஆகிவிட்டது போலும்.

தகவலுக்கு நன்றி..

வன்னியர், தலையை மொட்டையடிப்பதும் இப்போதைய ஃபேசன் என்பதையும் கவனத்தில் எடுக்கவும்...!😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புங்கையூரன் said:

வன்னியர், தலையை மொட்டையடிப்பதும் இப்போதைய ஃபேசன் என்பதையும் கவனத்தில் எடுக்கவும்...!😀

ரொம்ப வசதியா போச்சு.. எனக்கும் தலையில் முடி கொட்டி வருகிறது..

ஃபேசன் என ஆறுதல் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

பாவம், இவ்வளவு பெரிய கோடீஸ்வரைன் மகனுக்கு, திருமணத்தன்று முகத்தை சவரம் செய்யக்கூட நேரமில்லை.. நாவிதனும் கிட்டவில்லை. 🤔

இப்போது இதுதான் நாகரீகம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/5/2021 at 00:57, குமாரசாமி said:

அது சரி தாங்கள் ஊசி போட்டாச்சோ? 😁

தடுப்பூசி நேற்று போட்டவர்கள் பைசர். நான் கேட்டதால் 3 நாளைக்கு sport செய்ய வேண்டாம் என்றவர்.இது வரை ஒன்றும் மாற்றம் இல்லை ✌️
ஊசி போட்டதும் கடையில் கோப்பி குடித்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தடுப்பூசி நேற்று போட்டவர்கள் பைசர். நான் கேட்டதால் 3 நாளைக்கு sport செய்ய வேண்டாம் என்றவர்.இது வரை ஒன்றும் மாற்றம் இல்லை ✌️
ஊசி போட்டதும் கடையில் கோப்பி குடித்தேன்.

ஊசி போட்டவுடன் பக்க விளைவுகள் தெரிவதில்லை என்பது என் அபிப்பிராயம். 14 நாட்களின் பின்  எனக்கு சிறு மாற்றங்கள் தெரிகின்றது. எனது உடல் நிலை அன்று போல் இல்லை. வேறு மருந்து மாத்திரைகள் எடுப்பதாலும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

ஊசி போட்டவுடன் பக்க விளைவுகள் தெரிவதில்லை என்பது என் அபிப்பிராயம். 14 நாட்களின் பின்  எனக்கு சிறு மாற்றங்கள் தெரிகின்றது. எனது உடல் நிலை அன்று போல் இல்லை. வேறு மருந்து மாத்திரைகள் எடுப்பதாலும் இருக்கலாம்.

அண்ணை நாலாந்தேதி எனக்கு ஊசி... பயப்பிடுத்தாம சொல்லுங்கோப்பா என்ன வித்தியாசம் இருக்கு? போடலாமா ஊசி?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஊசி போட்டவுடன் பக்க விளைவுகள் தெரிவதில்லை என்பது என் அபிப்பிராயம். 14 நாட்களின் பின்  எனக்கு சிறு மாற்றங்கள் தெரிகின்றது. எனது உடல் நிலை அன்று போல் இல்லை. வேறு மருந்து மாத்திரைகள் எடுப்பதாலும் இருக்கலாம்.

சாமிகளே, என்ன மாதிரி பக்க விளைவுகளை, மாற்றங்களை உணர்கிறீர்கள்..? விவரிக்க இயலுமா..?

நான் தடுப்பூசி போட்டு மூன்று வாரங்கள் ஆகின்றன.

இதுவரை எந்த மாற்றத்தையும் உணரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அண்ணை நாலாந்தேதி எனக்கு ஊசி... பயப்பிடுத்தாம சொல்லுங்கோப்பா என்ன வித்தியாசம் இருக்கு? போடலாமா ஊசி?

நான் அஸ்ராஸெனிக்கா இரண்டும் போட்டுவிட்டேன். முதலாவதற்கு அடுத்த நாள் சில மணிநேரம் குளிர் காய்ச்சல் மாதிரி இருந்தது. தோள்மூட்டில் இரண்டு மூன்றுநாள் நோ இருந்தது.

இரண்டாவதற்கு நோவைத் தவிர வேறு எதுவும் இல்லை. 

ஊசி போடாவிட்டால் சிலவேளை இந்திய கொரோனா அம்மன் ஆட்கொண்டு சுத்தியாட்டினாலும் ஆட்டுவார்!

நான் மூன்று வாரங்களுக்கு முன்னர் பைசர் தடுப்பூசியின் முதலாவது தடுப்பை போட்டேன். கையை தூக்கும் போது மட்டும் லேசான வலி ஒன்று இருப்பது போல் இருந்ததை தவிர வேறு எந்த பின் விளைவுகளும் இருக்கவில்லை. மனைவிக்கு இரண்டு நாட்கள் கை வலி இருந்து மூன்றாம் நாள் படிப்படியாக குறைந்து இல்லாமல் போய்விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் கையில் போட்ட இடத்தில் லேசான நோ நேற்று இருந்தது. இப்போ லேசாக கூடியது போல் இருக்கிறது
பாலபத்ர ஓணாண்டி, திகதி உங்களுக்கு கிடைத்ததே அதிஷ்டம் பயப்பிடாம போடுங்கோ. எனக்கு 22 திகதி இரண்டாவதுவது தடுப்பூசி.

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.