Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓகஸ்ட் மாதம்... முதலாம் திகதி முதல், சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறப்பு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விமான நிலையங்கள் மீளத் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை நாட்டுக்கு 10 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை

ஓகஸ்ட் மாதம்... முதலாம் திகதி முதல், சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறப்பு!!

ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டினைத் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

நாடு முழுமையாக திறக்கப்பட்டதும் ஒரு நாளைக்கு 500 முதல் 1,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து, 18,200 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதன் காரணமாக நாட்டிற்கு கிட்டத்தட்ட 40 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட வழிவகுத்தது என அமைச்சினால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இதேவேளை சுற்றுலாத் துறை அபிவிருத்தி குறித்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மேலும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறையில் பணியாற்றுவோரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரே வழி, நாட்டைத் திறந்து சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பதே என்றும் அவர் கூறினார்.

ஆகவே இலங்கையின் மீது பயணத் தடைகளை விதித்துள்ள அந்த நாடுகளின் தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்துரையாட சுற்றுலாத்துறை அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

https://athavannews.com/2021/1229605

  • Replies 89
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காசே தான் கடவுளடா....

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, putthan said:

காசே தான் கடவுளடா....

சிறீலங்காவுக்கு சுற்றுலா பயணிகள் போகும் நாடுகளில் ஒன்றான பிரான்சில் ஆகஸ்ட் மாதம் மீண்டும் உள்ளிருப்பு வரப்போகுது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, putthan said:

காசே தான் கடவுளடா....

1 hour ago, விசுகு said:

சிறீலங்காவுக்கு சுற்றுலா பயணிகள் போகும் நாடுகளில் ஒன்றான பிரான்சில் ஆகஸ்ட் மாதம் மீண்டும் உள்ளிருப்பு வரப்போகுது?

நடக்கிறது நடக்கட்டும் போறது போகட்டும் எண்டுதானே பெரிய பிரித்தானியாவிலை எல்லா கொரோனா சட்டங்களையும் தூக்கீட்டினமாம். மாஸ்க் தேவையில்லையாம்.கொண்டாட்டங்களிலை சனக்கட்டுப்பாடு இல்லையாம்...:grin:

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நடக்கிறது நடக்கட்டும் போறது போகட்டும் எண்டுதானே பெரிய பிரித்தானியாவிலை எல்லா கொரோனா சட்டங்களையும் தூக்கீட்டினமாம். மாஸ்க் தேவையில்லையாம்.கொண்டாட்டங்களிலை சனக்கட்டுப்பாடு இல்லையாம்...:grin:

 

.பிரித்தானியாவில் 60 வீதம் தடுப்பூசி போட்டாச்சாம்...அந்த துணிவுதான்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நடக்கிறது நடக்கட்டும் போறது போகட்டும் எண்டுதானே பெரிய பிரித்தானியாவிலை எல்லா கொரோனா சட்டங்களையும் தூக்கீட்டினமாம். மாஸ்க் தேவையில்லையாம்.கொண்டாட்டங்களிலை சனக்கட்டுப்பாடு இல்லையாம்...:grin:

 

 

 

அரசனை  நம்பி(அமெரிக்கா)   புருசனை (ஐரோப்பா)  கைவிட்டா இப்படித்தான்...???

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

.பிரித்தானியாவில் 60 வீதம் தடுப்பூசி போட்டாச்சாம்...அந்த துணிவுதான்

இறப்பு எண்ணிக்கை குறைவும்  கொரனோ வின் வழமையான அகோரத்தாண்டவமும் இல்லாமல் இரண்டு ஊசி போட்டவர்களுக்கு  சாதாரண காய்செல் போல் வந்து போவதாலும் இன்னும் பலருக்கு பொசிட்டிவ்  என்று சோதனைகள் காட்டியும் எந்த அறிகுறியும் இல்லாமல் வந்து போகுது இதெல்லாம் ஊசி போட்டவர்களுக்கே இருப்பதால் திறந்து விட்டுள்ளார்கள் ஆனால் சுகாதார அதிகாரிகள் மூன்றாவது  அலையை தவிர்க்க முடியாது என்று அலாரம் அடித்தபடி இருகிறார்கள் . போன வெள்ளி 52 ஆயிரம் பேருக்கு பரவியது என்று அதிகாரபூர்வ தளம் அறிவித்தது பின்பு ஏனோ 39 ஆயிரம் பேர் என்று குறைத்து காட்டுகிறார்கள் .

எல்லாம் இந்த வேர்க் பிரம்  ஹாம் கூட்டத்தின்  அட்டுழியம் தாங்க  முடியலை வீட்டில் இருந்து மது பாவித்து வேலை போனில் கதைக்க முடியாத அளவுக்கு நாக்கு தடித்து அலறி குளறுதுகள் .ஒரு வங்கி  அலுவல் செய்ய முன்பெல்லாம் 20 நிமிடம் காணும் இப்ப நான்கு மணிநேரத்துக்கும் அதிகம் அவ்வளவுக்கு உதாசீன தன்மை .

ஒரு மேலதிகாரியின் கட்டுப்பாட்டில் இயங்கியவர்களை தன்னிஷ்டத்துக்கு விட்டதால் வந்த வினை இனி பாக்  டு நோர்மல் என்றால் வீட்டுக்குள் இருந்தவர்கள் ஒபிஸில் போய் இருக்க கை  கால் நடுங்க போகுது தண்ணியில்லாமல் .🤣

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பெருமாள் said:

இறப்பு எண்ணிக்கை குறைவும்  கொரனோ வின் வழமையான அகோரத்தாண்டவமும் இல்லாமல் இரண்டு ஊசி போட்டவர்களுக்கு  சாதாரண காய்செல் போல் வந்து போவதாலும் இன்னும் பலருக்கு பொசிட்டிவ்  என்று சோதனைகள் காட்டியும் எந்த அறிகுறியும் இல்லாமல் வந்து போகுது இதெல்லாம் ஊசி போட்டவர்களுக்கே இருப்பதால் திறந்து விட்டுள்ளார்கள் ஆனால் சுகாதார அதிகாரிகள் மூன்றாவது  அலையை தவிர்க்க முடியாது என்று அலாரம் அடித்தபடி இருகிறார்கள் . போன வெள்ளி 52 ஆயிரம் பேருக்கு பரவியது என்று அதிகாரபூர்வ தளம் அறிவித்தது பின்பு ஏனோ 39 ஆயிரம் பேர் என்று குறைத்து காட்டுகிறார்கள் .

எல்லாம் இந்த வேர்க் பிரம்  ஹாம் கூட்டத்தின்  அட்டுழியம் தாங்க  முடியலை வீட்டில் இருந்து மது பாவித்து வேலை போனில் கதைக்க முடியாத அளவுக்கு நாக்கு தடித்து அலறி குளறுதுகள் .ஒரு வங்கி  அலுவல் செய்ய முன்பெல்லாம் 20 நிமிடம் காணும் இப்ப நான்கு மணிநேரத்துக்கும் அதிகம் அவ்வளவுக்கு உதாசீன தன்மை .

ஒரு மேலதிகாரியின் கட்டுப்பாட்டில் இயங்கியவர்களை தன்னிஷ்டத்துக்கு விட்டதால் வந்த வினை இனி பாக்  டு நோர்மல் என்றால் வீட்டுக்குள் இருந்தவர்கள் ஒபிஸில் போய் இருக்க கை  கால் நடுங்க போகுது தண்ணியில்லாமல் .🤣

🤣 வீட்டில் வேலை செய்பவர் வேலைத்தளத்துக்கு போனால் மன உளைச்சல் என்று 6 மாத சிக் லீவில் போகவும் கூடும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

🤣 வீட்டில் வேலை செய்பவர் வேலைத்தளத்துக்கு போனால் மன உளைச்சல் என்று 6 மாத சிக் லீவில் போகவும் கூடும்🤣

இனி அந்த விளையாட்டு இருக்காது பெர்லோ  அரசு உதவி முதலாவதா நிறுத்தி விடுவார்கள் நீண்ட விடுமுறை எடுத்தால் வீட்டிலேயே  இருங்க ராசா என்று விடுவார்கள் கவனம் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இறப்பு எண்ணிக்கை குறைவும்  கொரனோ வின் வழமையான அகோரத்தாண்டவமும் இல்லாமல் இரண்டு ஊசி போட்டவர்களுக்கு  சாதாரண காய்செல் போல் வந்து போவதாலும் இன்னும் பலருக்கு பொசிட்டிவ்  என்று சோதனைகள் காட்டியும் எந்த அறிகுறியும் இல்லாமல் வந்து போகுது இதெல்லாம் ஊசி போட்டவர்களுக்கே இருப்பதால் திறந்து விட்டுள்ளார்கள் ஆனால் சுகாதார அதிகாரிகள் மூன்றாவது  அலையை தவிர்க்க முடியாது என்று அலாரம் அடித்தபடி இருகிறார்கள் . போன வெள்ளி 52 ஆயிரம் பேருக்கு பரவியது என்று அதிகாரபூர்வ தளம் அறிவித்தது பின்பு ஏனோ 39 ஆயிரம் பேர் என்று குறைத்து காட்டுகிறார்கள் .

எல்லாம் இந்த வேர்க் பிரம்  ஹாம் கூட்டத்தின்  அட்டுழியம் தாங்க  முடியலை வீட்டில் இருந்து மது பாவித்து வேலை போனில் கதைக்க முடியாத அளவுக்கு நாக்கு தடித்து அலறி குளறுதுகள் .ஒரு வங்கி  அலுவல் செய்ய முன்பெல்லாம் 20 நிமிடம் காணும் இப்ப நான்கு மணிநேரத்துக்கும் அதிகம் அவ்வளவுக்கு உதாசீன தன்மை .

ஒரு மேலதிகாரியின் கட்டுப்பாட்டில் இயங்கியவர்களை தன்னிஷ்டத்துக்கு விட்டதால் வந்த வினை இனி பாக்  டு நோர்மல் என்றால் வீட்டுக்குள் இருந்தவர்கள் ஒபிஸில் போய் இருக்க கை  கால் நடுங்க போகுது தண்ணியில்லாமல் .🤣

வீட்டில் இருந்து வேலை செய்ப்பவர்கள் விடியக் காலமையே சாராயம் வாங்க கடைகளில் நிற்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இனி அந்த விளையாட்டு இருக்காது பெர்லோ  அரசு உதவி முதலாவதா நிறுத்தி விடுவார்கள் நீண்ட விடுமுறை எடுத்தால் வீட்டிலேயே  இருங்க ராசா என்று விடுவார்கள் கவனம் .

🤣 எங்கட வேலையிடத்தில நாங்கள் கேட்டாலும் வர வேண்டாமாம். அவங்கள் காசு மிச்சம் பிடிக்க நல்லா கற்று கொண்டாங்கள்🤣

51 minutes ago, ரதி said:

வீட்டில் இருந்து வேலை செய்ப்பவர்கள் விடியக் காலமையே சாராயம் வாங்க கடைகளில் நிற்பார்கள்

ஐடியா இல்லாத பசங்க. ஒன்லைன் டிலிவரி எடுக்கலாம் தானே🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, putthan said:

.பிரித்தானியாவில் 60 வீதம் தடுப்பூசி போட்டாச்சாம்...அந்த துணிவுதான்

இரண்டு ஊசி போட்டும் இவருக்கு கொரோனா வந்துட்டுது எண்டு என்ரை லண்டன் மச்சாள் ஒரே அலறல்😎

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

இரண்டு ஊசி போட்டும் இவருக்கு கொரோனா வந்துட்டுது எண்டு என்ரை லண்டன் மச்சாள் ஒரே அலறல்😎

குசா இரண்டு அல்ல எத்தனை ஊசி போட்டாலும் வரும். ஆனால் இறப்பு வீதம் குறைவு அவ்வளவே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, MEERA said:

குசா இரண்டு அல்ல எத்தனை ஊசி போட்டாலும் வரும். ஆனால் இறப்பு வீதம் குறைவு அவ்வளவே..

தகவலுக்கு நன்றி மீரா

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

இரண்டு ஊசி போட்டும் இவருக்கு கொரோனா வந்துட்டுது எண்டு என்ரை லண்டன் மச்சாள் ஒரே அலறல்😎

🤣 பயப்புடாமல் இருக்க சொல்லுங்கோ. இப்ப பொசிடிவ் காட்டுற ஆக்களில் 40% க்கு மேல டபுள் டோஸ் காரர்தான். மீரா சொன்னது போல கடும் நோய், இறப்பு வரும் வீதம் குறைவு. 

ஆனால் முழுசா எல்லா தடைகளையும் நீக்குவது முட்டாள்தனம். எப்படியும் செப்டம்பரில் மீளவும் மூட வேண்டி வரலாம். 

 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

நடக்கிறது நடக்கட்டும் போறது போகட்டும் எண்டுதானே பெரிய பிரித்தானியாவிலை எல்லா கொரோனா சட்டங்களையும் தூக்கீட்டினமாம். மாஸ்க் தேவையில்லையாம்.கொண்டாட்டங்களிலை சனக்கட்டுப்பாடு இல்லையாம்...:grin:

நீங்கள் சொன்ன மாதிரி தான் கோவிட்டால் இறப்பவர்கள் இறக்கட்டும் பொருளாதாரத்தை காப்பாற்றுவோம் என்று நினைக்கிறார்கள்.
உங்கள் நாடு கோவிட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள் பெரிய பிரித்தானியாவில் இருந்து வருபவர்களை கண்டால் 5 மீற்றர் தள்ளி போங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, MEERA said:

குசா இரண்டு அல்ல எத்தனை ஊசி போட்டாலும் வரும். ஆனால் இறப்பு வீதம் குறைவு அவ்வளவே..

கண்டது சந்தோசம்.

Just now, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சொன்ன மாதிரி தான் கோவிட்டால் இறப்பவர்கள் இறக்கட்டும் பொருளாதாரத்தை காப்பாற்றுவோம் என்று நினைக்கிறார்கள்.
உங்கள் நாடு கோவிட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள் பெரிய பிரித்தானியாவில் இருந்து வருபவர்களை கண்டால் 5 மீற்றர் தள்ளி போங்கோ.

இவர்களின் வேலையால மேலும் விகாரிகள் உருவாகலாம். முழு உலகத்துக்கும் ஆபத்தை உருவாக்கிறார்கள்.  அண்மையில் உலக விஞ்ஞானிகள் 100 பேர் இப்படி ஒரு கூட்டறிக்கை விட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

🤣 பயப்புடாமல் இருக்க சொல்லுங்கோ. இப்ப பொசிடிவ் காட்டுற ஆக்களில் 40% க்கு மேல டபுள் டோஸ் காரர்தான். மீரா சொன்னது போல கடும் நோய், இறப்பு வரும் வீதம் குறைவு. 

ஆனால் முழுசா எல்லா தடைகளையும் நீக்குவது முட்டாள்தனம். எப்படியும் செப்டம்பரில் மீளவும் மூட வேண்டி வரலாம். 

 

அவன் கல்நெஞ்சுக்காரன் கொரோனா வந்தும் தினாவெட்டாய் திரியுறான். மச்சாள் இவள் பாவிதான் குய்யோ முய்யோ எண்டு பீல் பண்ணிக்கொண்டு திரியுறாள் 😂

பொறிஸ் ஜோன்சன் ஒரு மண்டை கிறுக்கன் எண்டு எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்தளவுக்கு பெரிய கிறுக்கன் எண்டு நான் நினைக்கேல்லை.நல்ல காலம் டொனால்ட் ரம்ப் இப்ப இல்லை. அந்த கிறுக்கனும் இப்ப ஆட்சியிலை இருந்தால் ஹொலிவூட் படம் பாக்க தேவையே இல்லை.🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

அவன் கல்நெஞ்சுக்காரன் கொரோனா வந்தும் தினாவெட்டாய் திரியுறான். மச்சாள் இவள் பாவிதான் குய்யோ முய்யோ எண்டு பீல் பண்ணிக்கொண்டு திரியுறாள் 😂

பொறிஸ் ஜோன்சன் ஒரு மண்டை கிறுக்கன் எண்டு எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்தளவுக்கு பெரிய கிறுக்கன் எண்டு நான் நினைக்கேல்லை.நல்ல காலம் டொனால்ட் ரம்ப் இப்ப இல்லை. அந்த கிறுக்கனும் இப்ப ஆட்சியிலை இருந்தால் ஹொலிவூட் படம் பாக்க தேவையே இல்லை.🤣

இந்த கொரோனாவில் யாரும் சாக கூடாது என்றுதான் எப்போதும் நினைப்பேன், ஆனால் பொறிஸ் அப்ப செத்திருந்தால், பின்னால யூகேயில் அநியாயமா நடந்த சாவுகள் பல நடந்திராது என்பதும் உண்மைதான். 

எங்கட கஸ்டகாலம் இந்த நேரம் எண்டு பார்த்து இந்தாளை தேர்ந்து வச்சிருக்கிறம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சொன்ன மாதிரி தான் கோவிட்டால் இறப்பவர்கள் இறக்கட்டும் பொருளாதாரத்தை காப்பாற்றுவோம் என்று நினைக்கிறார்கள்.
உங்கள் நாடு கோவிட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள் பெரிய பிரித்தானியாவில் இருந்து வருபவர்களை கண்டால் 5 மீற்றர் தள்ளி போங்கோ.

ஜேர்மனியில் வெளிப்பார்வைக்கு கட்டுப்பாடுகள் இல்லாத மாதிரித்தான் தெரியும்.ஆனால் ஒரு கடைக்கோ அல்லது அலுவலக விடயங்களாக போவதென்றாலும் கோரோனா ஆரம்பகால கட்டுப்பாடுகள்  இருப்பதை உணர முடியும்.
நான் இருக்கும் இடத்தில் கார் பார்க் பண்ணும் இடத்தில் கூட முககவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

கோதாரிவிழுவார் இரண்டு பியர் ரின் வாங்குறதெண்டாலும் வண்டிலை தள்ளிக்கொண்டு வா எண்டுறாங்கள்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

இரண்டு ஊசி போட்டும் இவருக்கு கொரோனா வந்துட்டுது எண்டு என்ரை லண்டன் மச்சாள் ஒரே அலறல்😎

இரண்டு ஊசி போட்டு குறிப்பிட்ட காலம் தாண்டியபின் கொரனோ  ஒரு லேசான காய்ச்சலுடன் வந்து கல்யாணம் கட்டிய புது மாப்பிள்ளை முதல்வருடம் தாண்டிய ஆள் போல் அடங்கி  காணாமல் போகின்றது என்கிறார்கள் .🤣

இங்கு கொரனோ டெஸ்ட் கிட்  இலவசமாய் தந்து தள்ளுகிறார்கள் அதைவிட போன் அப்ஸ் உங்களை கண்காணித்துக்கொண்டு இருக்கும் வீட்டிலே இருந்து தொண்டைக்குள் குச்சியை விட்டு துழாவி மூக்கினுள் குடைந்து நெகட்டிவா பொசிட்டிவா என்று நாங்க கண்டு பிடிக்க முன்னம் போன் அப்ஸ் ஸ்கெனிங் மூலம் அறிந்து கொண்டு குறிப்பிட்ட நபருக்கு அருகில் இருந்தவர்களுக்கு எச்சரிக்கையை அனுப்பி விடும்  அமைதியா நாரதர் வேலையை பார்த்துவிட்டு இருக்கும் .🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, பெருமாள் said:

அதைவிட போன் அப்ஸ் உங்களை கண்காணித்துக்கொண்டு இருக்கும் வீட்டிலே இருந்து தொண்டைக்குள் குச்சியை விட்டு துழாவி மூக்கினுள் குடைந்து நெகட்டிவா பொசிட்டிவா என்று நாங்க கண்டு பிடிக்க முன்னம் போன் அப்ஸ் ஸ்கெனிங் மூலம் அறிந்து கொண்டு குறிப்பிட்ட நபருக்கு அருகில் இருந்தவர்களுக்கு எச்சரிக்கையை அனுப்பி விடும்  அமைதியா நாரதர் வேலையை பார்த்துவிட்டு இருக்கும் .🤣

நீங்கள் குச்சியை ஒழுங்காய் தொண்டை அடி மட்டும் விட்டு துளாவினியளோ......
இல்லாட்டி குச்சியை மூக்கு அடித்தொங்கல் மட்டும் விட்டு சுழட்டி எடுத்தியளோ எண்டு சிப்சு அப்சு கண்டுபிடிக்குமோ? சரியாய் இருக்குமோ? 😂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

நீங்கள் குச்சியை ஒழுங்காய் தொண்டை அடி மட்டும் விட்டு துளாவினியளோ......
இல்லாட்டி குச்சியை மூக்கு அடித்தொங்கல் மட்டும் விட்டு சுழட்டி எடுத்தியளோ எண்டு சிப்சு அப்சு கண்டுபிடிக்குமோ? சரியாய் இருக்குமோ? 😂

டிமிக்கி விடுவது என்றால் விடலாம் ஆனால் இதுவரை ஊசி போடாத குடும்ப அங்கத்தவர் உயிருடன் விளையாடுவதுக்கு  சமம் .இங்கு இன்னும் சிறுவர்கள் ஊசி பெரிதாக தொடங்க வில்லை கனடா வில் தொடங்கி விட்டார்கள் என்று கேள்வி .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, பெருமாள் said:

டிமிக்கி விடுவது என்றால் விடலாம் ஆனால் இதுவரை ஊசி போடாத குடும்ப அங்கத்தவர் உயிருடன் விளையாடுவதுக்கு  சமம் .இங்கு இன்னும் சிறுவர்கள் ஊசி பெரிதாக தொடங்க வில்லை கனடா வில் தொடங்கி விட்டார்கள் என்று கேள்வி .

இங்கு ஜேர்மனியில் சிறுவர்களுக்கு கோடைகால விடுமுறை முடிய தடுப்பூசி போட தொடங்குவார்கள் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

டிமிக்கி விடுவது என்றால் விடலாம் ஆனால் இதுவரை ஊசி போடாத குடும்ப அங்கத்தவர் உயிருடன் விளையாடுவதுக்கு  சமம் .இங்கு இன்னும் சிறுவர்கள் ஊசி பெரிதாக தொடங்க வில்லை கனடா வில் தொடங்கி விட்டார்கள் என்று கேள்வி .

ஐந்து பேரில் ஒருவர் போன் அப் ஐ டிலீட் செய்வதாக கேள்வி. 

சிறுவர்களுக்கு தேவையா? சிறுவர்கள் மத்தியில் இறப்பு வீதம் 0.05% சோ என்னமோ என்று நினைக்கிறேன். 

ஆனால் அவர்கள் காவிகளாக இருப்பதுதான் தலையிடி.

பெரியவர்கள் எல்லாம் போட்டபின் சிறுவர்களுக்கு இயற்கை நோயெதிர்ப்பை வரவிடுதல் நல்லமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.