Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் இரு கைகளிலும் தடுப்பூசி குத்திய தாதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவருக்கு இன்று (29) இரு கையிலும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

யாழ், மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று (29) முன்னெடுக்கப்பட்டது. 

இந்த செயற்றிட்டத்தில் யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரியில்  அமைந்துள்ள கொரோனா தடுப்பூசி வழங்கும் மையத்தில், கொழும்புத்துறை, J/61 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. 

இதே பிரிவைச் சேர்ந்த  66 வயது வயோதிப பெண்ணுக்கு இரு கையிலும் தடுப்பூசி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பெண்ணின் ஒரு கையில் தாதி ஒருவர் ஊசி போட்டு விட்டு உடனடியாக அங்கிருந்து சென்றுவிட  இது தெரியாமல் இன்னொரு தாதி அங்கு வந்து மற்ற கையை காட்டுமாறு கூறி ஊசி போட்டுள்ளார்.

தவறுதலாக இடம்பெற்றுவிட்டதாகவும் உடலில் உபாதை ஏற்பட்டால் அறிவிக்குமாறும் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

Tamilmirror Online || இரு கைகளிலும் தடுப்பூசி குத்திய தாதிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு டோஸ் ஒரே தடவை!!!

தாதி தான் தவறு செய்தார் என்றால் பாதிக்கப்பட்ட பெண்மணி ஏன் இரண்டாம் தடவை குத்தும் போது மெளனமாக இருந்தார்?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

தாதி தான் தவறு செய்தார் என்றால் பாதிக்கப்பட்ட பெண்மணி ஏன் இரண்டாம் தடவை குத்தும் போது மெளனமாக இருந்தார்?

போய் இருந்தால் ஊசி போடுவதே தெரியவில்லை என்று ஊசி போட்ட நண்பர்கள் கூறினார்கள். வயதும் 66, முதுமையோ அல்லது போதிய விளக்கம் இல்லாமலும் இருந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

தாதி தான் தவறு செய்தார் என்றால் பாதிக்கப்பட்ட பெண்மணி ஏன் இரண்டாம் தடவை குத்தும் போது மெளனமாக இருந்தார்?

எங்கடை குணம் தெரியும்தானே, free யா இன்னொரு ஊசி கிடைக்குது ஏன் விடுவான் என யோச்சிருப்பா அன்ரி🤣

சும்மா பகிடிக்கு. சில வேளை அப்படி அடிப்பதுதான் வழமுறை என நினைத்திருக்ககூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

எங்கடை குணம் தெரியும்தானே, free யா இன்னொரு ஊசி கிடைக்குது ஏன் விடுவான் என யோச்சிருப்பா அன்ரி🤣

சும்மா பகிடிக்கு. சில வேளை அப்படி அடிப்பதுதான் வழமுறை என நினைத்திருக்ககூடும்.

இரண்டு தரம் போடவேண்டும் இரண்டு தரம் போடவேண்டும் என்று சொல்லிக் கொண்டே வந்திருப்பார். ஒரேநாளில் போட்டதால் சந்தோஷமாக அனுமதித்திருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இரண்டு தரம் போடவேண்டும் இரண்டு தரம் போடவேண்டும் என்று சொல்லிக் கொண்டே வந்திருப்பார். ஒரேநாளில் போட்டதால் சந்தோஷமாக அனுமதித்திருக்கலாம்

கொரோனா பதட்டம், சம்பந்தப்பட்ட இருவரின் யோசிக்கும் தன்மையை பாதித்து விட்டது. சரியான திட்டமிடல் இல்லாமல் செய்யும் வேலை எதுவும் இப்படித்தான் முடியும். வேலை ஆரம்பிப்பதற்கு முன் ஒவ்வொருவரின் வேலை பொறுப்பு பற்றி கலந்துரையாடி, ஒவ்வொருவரும் தமக்குரிய வழிநடத்தல் முறையை பின்பற்றியிருந்தால் இப்படியான அனாவசிய தவறுகளை தடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

    அண்மையில் வாசித்த செய்தி(இடம் காலம் நினைவில் இல்லை.
    கொரோனா ஊசி போட்ட தாதி வெறும் ஊசியை குத்தி குத்தி அனுப்பி சேமிக்கும் மருந்தை தனியாருக்கு விற்றுள்ளார்.
     ஆனபடியால் எந்தக் கையில் குத்தினாலும் மருந்து போகுதா என்பதை அவதானிக் வேண்டும்.
      பொதுவாக ஊசி குத்தும் போது மற்றப் பக்கம் திரும்பிவிடுவார்கள்.
       இதுவே கையாடலுக்கு வசதியாக போய்விடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

எங்கடை குணம் தெரியும்தானே, free யா இன்னொரு ஊசி கிடைக்குது ஏன் விடுவான் என யோச்சிருப்பா அன்ரி🤣

சும்மா பகிடிக்கு. சில வேளை அப்படி அடிப்பதுதான் வழமுறை என நினைத்திருக்ககூடும்.

ஊரில் பென்சிலின் க்கு முன் ஒவ்வாமை ஊசி போடுவது வழமை தானே அப்பத்தா அப்படி நினைத்து இருக்கும் .

நாங்கல்லாம் ஒவ்வாமை ஊசிக்கே ஜன்னலால் பாய்ந்து வேப்ப மரத்தில் ஏறுகிற  கூட்டம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

நாங்கல்லாம் ஒவ்வாமை ஊசிக்கே ஜன்னலால் பாய்ந்து வேப்ப மரத்தில் ஏறுகிற  கூட்டம்

வாலை மட்டும் ஆண்டவன் தங்களுக்கு வைக்கேலை என்று சொல்ல வாறியள்!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

ஊரில் பென்சிலின் க்கு முன் ஒவ்வாமை ஊசி போடுவது வழமை தானே அப்பத்தா அப்படி நினைத்து இருக்கும் .

நாங்கல்லாம் ஒவ்வாமை ஊசிக்கே ஜன்னலால் பாய்ந்து வேப்ப மரத்தில் ஏறுகிற  கூட்டம் 🤣

பத்து வயதிற்குள் பாடசாலையில் வைத்து போடும் ஊசிக்கு பயத்தில ஒளிச்சிருக்க சக மாணவர்கள் தேடிப்பிடிச்சு இழுத்து வந்து ஊசி போட வைச்சவங்கள். இப்ப பயமில்ல.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஏராளன் said:

ஊசிக்கு பயத்தில ஒளிச்சிருக்க சக மாணவர்கள் தேடிப்பிடிச்சு இழுத்து வந்து ஊசி போட வைச்சவங்கள். இப்ப பயமில்ல.

இப்ப பயம் தெளிஞ்சிட்டுது நல்ல விடயம். அப்போ அவர்கள் மேல் எவ்வளவு கோபமாய் இருந்திருப்பீர்கள்?  அந்த பயத்தைபோக்கிய  சக மாணவர்களுக்குத்தான் நன்றி சொல்லோணும் நீங்கள். இல்லாவிடில் ரதியக்கா மாதிரி இப்பவும் கூச்சல் போட்டிருப்பீங்களோ இல்லையோ? இருந்தாலும் இங்குள்ள சக உறவுகள் தைரியம், ஆலோசனை தந்திருப்பார்கள் பாருங்கோ. நம்ம புலவர் நல்ல மருந்து வைத்திருக்கிறார். பயந்த ஆக்கள் யாரவது இருந்தால் அவரை தொடர்பு கொள்ளச் சொல்லுங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

 
நாளைந்து நாளுக்கு முதல் நான் வேலை முடித்து சுப்பர் மாக்கெட்டில் சாமான் வேண்டிக் கொண்டு வெளியால் வரும் போது நாளைந்து  பேர் கடைக்கு வெளியால ஏதோ கொடுத்து கொண்டு இருந்தவை...சனம் எல்லாம் அள்ளுப்பட்டு 5, 6 என்டு வேண்டிக்  கொண்டு போய்ச்சு ...நானும் ஏதோ ஓசியில்😂 கிடைக்குது நோட் புக் போல என்று கையை நீட்டினால் 3😉 கிடைச்சுது ....பார்த்தால் கொரோனா கிட்🤣🤣🤣 
 

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2021 at 03:15, satan said:

வாலை மட்டும் ஆண்டவன் தங்களுக்கு வைக்கேலை என்று சொல்ல வாறியள்!

மழைக்காலம் வந்தால் ஒரு குளம் குட்டை விடுவதில்லை காய்ச்சல் வரும் அங்கு காய்ச்சல் என்று போனால் பென்சிலின் தான் இப்போதுள்ளது போல் ஒருமுறை பாவித்து எறியும் ஊசிகள் கிடையாது ஊசியை பாவித்த பின் சுடுதண்ணி கேத்திலில் போட்டு அவிப்பார்கள் மீண்டும் அதையே பாவிப்பார்கள் சிலரின் உடலில் புகுந்து மொட்டையான ஊசியால் குத்துவதால் நோ வந்தால் மாறாது எனும் நம்பிக்கையை வகுப்பு தோழன் எங்கள்  அனைவருக்கும் விதைத்தன் பயன் அந்த மரம் ஏறும்  விளையாட்டு .🤣

பிற்பாடு இந்தியன் ஆமி போட்டு கும்மியதில் ஊசி என்ற பயமே மறந்து போனது அதிசயம் .🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

 
நாளைந்து நாளுக்கு முதல் நான் வேலை முடித்து சுப்பர் மாக்கெட்டில் சாமான் வேண்டிக் கொண்டு வெளியால் வரும் போது நாளைந்து  பேர் கடைக்கு வெளியால ஏதோ கொடுத்து கொண்டு இருந்தவை...சனம் எல்லாம் அள்ளுப்பட்டு 5, 6 என்டு வேண்டிக்  கொண்டு போய்ச்சு ...நானும் ஏதோ ஓசியில்😂 கிடைக்குது நோட் புக் போல என்று கையை நீட்டினால் 3😉 கிடைச்சுது ....பார்த்தால் கொரோனா கிட்🤣🤣🤣 
 

கொரனோ  வந்த புதிதில் இதன் விலை £100க்கு மேல் இப்ப இலவசமாக தருகிறார்கள் நல்ல விடயம்தானே . மொபைலில் கொரனோ ட்ரக்கர்  அப்ஸ் நிறுவியிருந்தேன் சூப்பர்மார்க்கெட்டுக்குள் அருகால் யாரும் பாதிக்கப்படடவர்கள்  போனாலும் SMS வருது சுய தனிமைப்படுத்த சொல்லி வந்த கடுப்புக்கு அழித்து  விட்டேன் .

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவில் நோயாளிகள் தான் மருத்துவ அறிவோடு மருத்துவரை சந்திக்கப் போக வேண்டிய நிலை இப்போ. தாதியர் அதை விட மோசம்.

எல்லா மக்களும் தற்போதைய நடைமுறைகளை அறிஞ்சு வைச்சிருக்கினம் என்றில்லை. ஒரு மருத்துவ உத்தியோகத்தர் தான் மக்களை சரியாக வழிநடத்தனும்.. வழிகாட்டனும். அதைவிட்டிட்டு.. இப்படி தவறுகளை சர்வசாதாரணமாக விடுவதும்.. அதன் பின் நோயாளிகளை.. அல்லது பயனாளிகளை கேள்வி கேட்பதும் அல்ல.. மருத்துவ நடைமுறை. 

இப்படி தவறு விடுபவர்கள் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மேலும் தவறு நடக்காமல் இருக்க தகுந்த பயிற்சியும் கண்காணிப்பும் அவசியம். 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

 
நாளைந்து நாளுக்கு முதல் நான் வேலை முடித்து சுப்பர் மாக்கெட்டில் சாமான் வேண்டிக் கொண்டு வெளியால் வரும் போது நாளைந்து  பேர் கடைக்கு வெளியால ஏதோ கொடுத்து கொண்டு இருந்தவை...சனம் எல்லாம் அள்ளுப்பட்டு 5, 6 என்டு வேண்டிக்  கொண்டு போய்ச்சு ...நானும் ஏதோ ஓசியில்😂 கிடைக்குது நோட் புக் போல என்று கையை நீட்டினால் 3😉 கிடைச்சுது ....பார்த்தால் கொரோனா கிட்🤣🤣🤣 
 

ஹா.... ஹா.... அக்கா மாட்டுபட்டாடோய்! 

  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2021 at 18:23, நிழலி said:

தாதி தான் தவறு செய்தார் என்றால் பாதிக்கப்பட்ட பெண்மணி ஏன் இரண்டாம் தடவை குத்தும் போது மெளனமாக இருந்தார்?

 

13 hours ago, nedukkalapoovan said:

இப்படி தவறு விடுபவர்கள் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மேலும் தவறு நடக்காமல் இருக்க தகுந்த பயிற்சியும் கண்காணிப்பும் அவசியம். 

 

ஆனால், விடயம் தெரிந்து, அதை பிழையான விளக்கம் இருந்து இருக்கலாம். பொதுவாக 2 ஊசிகள் என்றே வெளியில் பேசிக் கொள்ளப்படுகிறது. கால இடைவெளி பற்றி சொல்லப்படுவது மிக குறைவு.

ஆனால், இது அந்த பெண்மணியின் தவறு அல்ல.

இரண்டாம் தடவை ஊசி ஏற்றிய தாதியின் தவறும் அல்ல.

அந்த ஊசி போட்ட இடத்தின் ஒழுங்கு முறை மிகவும் தவறாக இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில்,  குறிப்பிட்ட cabin (மறைப்பிற்குள்) ஒரு பொறுப்பானவர், அவரின் பிரசன்னம் மட்டுமே   இருக்க வேண்டும். 

வேறு ஒருவர் பொறுப்பு எடுத்து வருவது என்றால், cabin (மறைப்பு) வெறுமையானதாக இருக்க வேண்டும். 

ஒழுங்கு படுத்தியவர்களின் தவறு இது, ஒன்றுக்கு மேற்ட்த பொறுப்பானவர்களை, ஒரு  cabin    (மறைப்பு) பொறுப்பாக நியமித்தது.

நான் அவதானித்ததில் இருந்து, இங்கு UK இல் இது (குறிப்பிட்ட நேரத்தில்  - குறிப்பிட்ட cabin - ஒருவர் பொறுப்பு- அவரின் பிரசன்னம் மட்டுமே இருக்கும்) மிகவும் கட்டுப்பாடாகவும், ஒழுங்கவும் கையாளப்படுகிறது. 

இதை சொன்னால், இலங்கையில் உள்ளவர்களை ஒன்றும் தெரியாதவர்கள் என்று குட்டுவதாக  சிலர் இங்கு துள்ளி குதித்து வரக்  கூடும். 

இது சாதாரண common சென்ஸ்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.