Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்­னார் எரி­வாயு வளத்­தால் நாட்­டின் கட­னைப் போன்று மூன்று மடங்கு வரு­மா­னம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்­னார் எரி­வாயு வளத்­தால் நாட்­டின் கட­னைப் போன்று மூன்று மடங்கு வரு­மா­னம்!

மன்­னார் எரி­வாயு வளத்­தால் நாட்­டின் கட­னைப்­போன்று மூன்று மடங்கு வரு­மா­னம்!

மன்­னார் கடற்­ப­ரப்­பி­லுள்ள 267 பில்­லி­யன் டொலர் பெறு­ம­தி­யான எண்­ணெய் மற்­றும் எரி­வாயு வளத்­தி­னால் நாட்­டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வரு­மா­னம் ஈட்ட முடி­யும் என வலு­சக்தி அமைச்­சர் உதய கம்­மன்­பில நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் இடம்­பெற்ற வலு­சக்தி அலு­வல்­கள் பற்­றிய அமைச்­சு­சார் ஆலோ­ச­னைக் குழுக் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

இந்த எண்­ணெய் மற்­றும் எரி­வாயு அகழ்வை மேற்­கொள்­ளும் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு 50 வீதத்தை வழங்­கி­னா­லும் 133.5 பில்­லி­யன் டொலர் அர­சுக்கு கிடைக்­கும் என­வும், அது நாட்­டின் மொத்த கடன் தொகை­யான 47 பில்­லி­யன் டொலரை விட மூன்று மடங்­கா­கும் என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.
நாடா­ளு­மன்­றத்­தில் இரண்­டாம் மதிப்­பீட்­டுக்­காக முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள கனி­ய­வ­ளங்­கள் சட்­ட­மூ­லம் தொடர்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­தும் வகை­யில் அமைச்­சர் இதனைக் குறிப்­பிட்­ட­து­டன் குறித்த சட்ட மூலத்­துக்கு இந்த அமைச்­சு­சார் ஆலோ­ச­னைக் குழுக் கூட்­டத்­தில் அனு­ம­தி­யும் வழங்­கப்­பட்­டது.
அமைச்­சர் மேலும் தெரி­விக்­கை­யில்

மன்­னார் கடற்­ப­ரப்­பி­லுள்ள எரி­வா­யு­வி­னால் மாத்­தி­ரம் நுரைச்­சோலை மின்­சக்தி நிலை­யத்தை 120 வரு­டங்­க­ளுக்கு செயற்­ப­டுத்த முடி­யும். அங்கு காணப்­ப­டும் எண்­ணெ­யின் மூலம் சப்­பு­கஸ்­கந்த எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தை 143 வரு­டங்­க­ளுக்கு செயற்­ப­டுத்த முடி­யும்.
எமது அண்­டை நாடான இந்­தியா 1940ஆம் ஆண்டு முதல் இலங்­கைக்கு அண்­மித்த கட­லி­லி­ருந்து எண்­ணெய் மற்­றும் எரி­வாயு அகழ்­வில் ஈடு­பட்­ட­து­டன், பல்­வேறு விட­யங்­கள் கார­ண­மாக இலங்­கை­யால் அதனை மேற்­கொள்ள முடி­யா­மல் போயுள்­ளது. இது தொடர்­பில் நிபு­ணர்­கள் மத்­தி­யில் இடம்­பெற்ற நீண்ட கலந்­து­ரை­யா­டலை அடுத்து இதற்­கான பல கர­ணங்­கள் அடை­யா­ளங் காணப்­பட்­டுள்­ளன.

கடந்த காலங்­க­ளில் இலங்­கை­யில் எண்­ணெய் ஆய்­வுக்­காக உல­கி­லுள்ள பல நிறு­வ­னங்­கள் முன்­வ­ர­வில்லை. இதற்கு முன்­னர் இது தொடர்­பில் தீர்­மா­னங்­கள் எடுக்­கும் போது, இந்­தத் துறை­யில் அதி­கா­ரி­க­ளுக்கு காணப்­பட்ட நிபு­ணத்­து­வம் குறைவு என்­ப­தால், கனிய வளங்­கள் அதி­கார சபையை ஸ்தாபிப்­ப­தன் மூலம் நிபு­ணர்­க­ளுக்கு இந்த பணியை வழங்­கு­வ­தற்கு நாம் நட­வ­டிக்கை எடுத்­தோம்.
அதே­போன்று, கடந்த காலங்­க­ளில் அனு­ம­திப்­பத்­தி­ரங்­கள் வழங்­கு­வது உள்­ளிட்ட ஒழுங்­கு­ப­டுத்­தும் அதி­கா­ரம் அமைச்­ச­ரை மையப்­ப­டுத்தி காணப்­பட்­ட­தால் அமைச்­சர்­கள் மாறும் போது அனைத்து நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் தடை ஏற்­பட்­டது. இத­னால் அமைச்­ச­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த அனைத்து அதி­கா­ரங்­க­ளை­யும் இந்த அதி­காரசபை­யின் பணிப்­பா­ளர் சபைக்கு வழங்க நாம் நட­வ­டிக்கை எடுத்­தோம்.

அதே­போன்று, பழை­மை­யான வரை­ப­டங்­க­ளுக்கு பதி­லாக எண்­ணெய் மற்­றும் எரி­வாயு அகழ்­வுக்கு நவீன வரை­ப­டங்­கள் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன.
பல பில்­லி­யன் டொலர்­ இதற்கு முத­லிட வேண்­டும் என­வும் இந்­தப் பெரிய முத­லீ­டு­களை பாது­காக்க தேவை­யான பலம் வாய்ந்த நிதிக் கட்­ட­மைபை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தும், அமைச்­ச­ருக்கு ஆலோ­சனை வழங்­கும் நோக்­கில் விசேடகுழு­வொன்று நிய­மிக்­கப்­ப­டு­வ­தும் இந்த சட்­ட­மூ­லத்­தின் ஊடாக இடம்­பெ­று­கின்­றது.
பொது­வாக உல­கில் எண்­ணெய் மற்­றும் எரி­வாயு அகழ்­வின் போது ஒரு நாட்­டில் ஏழு கிண­று­கள் அகழ்வு செய்­யும்­போது ஒன்­று­தான் வெற்­றி­ய­டை­கின்­றது.

நோர்வே நாட்­டில் 31 அகழ்­வுகளின் பின்­னர்­தான் முத­லா­வது வெற்றி கிட்­டி­யது. ஆனால் இலங்­கை­யில் 4 கிண­று­கள் அகழ்­வு­செய்­யப்­பட்ட போதி­லும் அதில் 3 வெற்­றி­ய­டைந்­துள்­ளன என்­றார்.
 

 

https://newuthayan.com/மன்னார்-எரிவாயு-வளத்தா/

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் மண்டைதீவ விட்டுட்டு, மன்னாருக்கு ஓடுவம், வாங்கோ🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா எனது நாட்டிற்கு கடனிலிருந்து விடுதலை.🙃

  • கருத்துக்கள உறவுகள்

கடன் கழுத்தை இறுக்கும் நேரமெல்லாம் இப்படி புலம்புவது சிங்கள அரசின் வழமை .

வெள்ளைக்காரன் தொடக்கி வைத்த தேயிலை ஆலைகள் இந்த சிங்கள அரசு பொறுப்பேற்ற பின் ஏதாவது முன்னேற்றம் செய்தார்களா என்று முகநூலில் திட்டிக்கொண்டு இருக்கிறார்கள் உண்மையா பொய்யா தெரியலை அங்கு .

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

கடன் கழுத்தை இறுக்கும் நேரமெல்லாம் இப்படி புலம்புவது சிங்கள அரசின் வழமை .

வெள்ளைக்காரன் தொடக்கி வைத்த தேயிலை ஆலைகள் இந்த சிங்கள அரசு பொறுப்பேற்ற பின் ஏதாவது முன்னேற்றம் செய்தார்களா என்று முகநூலில் திட்டிக்கொண்டு இருக்கிறார்கள் உண்மையா பொய்யா தெரியலை அங்கு .

நாங்க சந்தோசப்பட்டால் பொறுக்காதே!😋

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஏராளன் said:

ஆஹா எனது நாட்டிற்கு கடனிலிருந்து விடுதலை.🙃

அதில்லை அப்பு! கொஞ்சம், கொஞ்சமாய் அபகரிக்காமல் ஒரேயடியாய் மன்னாரை விழுங்கப்போகினம். தொல்பொருளாராச்சி, வனவள பரிபாலனம் அதோட இது ஒன்று புதுசாய். சீனனும் சேர்ந்து இறங்கப்போறான்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

எல்லாரும் மண்டைதீவ விட்டுட்டு, மன்னாருக்கு ஓடுவம், வாங்கோ🤣

முதலில் இலங்கைக்கு ஓடுவம்.😆

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, சுவைப்பிரியன் said:

முதலில் இலங்கைக்கு ஓடுவம்.😆

ஆவோ ஆவோ....

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

மன்­னார் எரி­வாயு வளத்­தால் நாட்­டின் கட­னைப்­போன்று மூன்று மடங்கு வரு­மா­னம்!

மூன்று மடங்கு வருமானம் யாருக்கென்று தெளிவா சொல்லலியே,

அதை அகழபோற இந்தியாவுக்கா,சீனாவுக்கா,ரஷ்யாவுக்கா இல்ல ராஜபக்ச குடும்பத்துக்கா?

இதுதான் இந்த செய்தி சேவைகளில் உள்ள பெரும் குறைபாடு எதையும் நேரடியா சொல்லி பழகுறதில்ல.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஏராளன் said:

ஆவோ ஆவோ....

உதெல்லாம் முந்தி….இப்ப நீ ஹாவ்ஓ 🤣

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

உதெல்லாம் முந்தி….இப்ப நீ ஹாவ்ஓ 🤣

என்னது மன்னாரை இந்தியா விட்டுக்குடுத்துவிட்டதா?!

  • கருத்துக்கள உறவுகள்

2007ல இருந்து இதே கதைய விட்டுக் கொண்டு இருக்கிறாங்கள்.... உதச் சொல்லி கடன் வாங்கிற பிளான் போல கிடக்குது.

எண்ணைய் இருக்கும் எண்டால், இந்தியா வெள்ளி பார்ததுக் கொண்டு சும்மாவா இருக்கும்?

கீழால, குழாயைப்போட்டு எப்பவோ உறிஞ்ச தொடங்கி இருப்பினம்.

ஆகக்குறைந்தது, நான் கிண்டிறன்..... பவ்பாதியா பிரிச்செடுப்பமே எண்டாவது சொல்லியிருப்பினம்.

அது நடக்காத படியால..... அங்க ஒரு கோதாரியும் இல்லை....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இதை  செய்து  முடியும்போது

உலகம்  எண்ணையிலிருந்து  விடுபட்டிருக்கும்???

பிறகு யாருக்கு விற்பதாம்???

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

என்னது மன்னாரை இந்தியா விட்டுக்குடுத்துவிட்டதா?!

க்ஹும்….வச்சிருந்து வாழ்ந்துட்டார்…இனி விட்டு கொடுக்க🤣

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

முதலில் இதை  செய்து  முடியும்போது

உலகம்  எண்ணையிலிருந்து  விடுபட்டிருக்கும்???

பிறகு யாருக்கு விற்பதாம்???

 

சரியாக சொன்னீர்கள்.

மன்னார் வளைகுடாவில் எண்ணை இல்லாமல் இல்லை ஆனால் அதை ஆராய்ந்து எடுப்பது, இருக்கும் அளவு, அதற்கான செலவுடன் ஒப்பிடும் போது மசகு எண்ணையின் சந்தை விலைக்கு ஏற்ப லாபம் பார்க்குமாறு இருக்க வேண்டும். அப்படி இல்லை. 

இந்தியா இப்போதே வெளிநாட்டு, இந்திய அரச, ரிலையன்ஸ் என பல வழிகளில் எண்ணை கிணறுகளை வேறு இடங்களில் தோண்டவே செய்கிறது, ஆனால் இதில் பல dry wells ஆக போகிறது. Dry wells இன் அளவு கூட கூட, லாபத்துக்கான வாய்ப்பு குறைகிறது.

எண்ணையின் சந்தை விலையும் 2020 மார்ச்சில் விழுந்த அளவில் இல்லை என்றாலும் வரலாறு காண உயரத்தில் இல்லை. 

அடுத்து நீங்கள் சொல்வது போல இப்போ எண்ணையை விட்டு மீளாகும் எரிபொருட்கள் நோக்கி உலகம் நகரும் போது - மன்னார் படுக்கை போன்ற இடங்களில் எண்ணை எடுத்து இலாபம் பார்க்கும் அளவுக்கு எண்ணை விலை (நிரந்தரமாக) உயருமா என்பது சந்தேகமே.

ஆனால் இலங்கை மக்கள் கவனத்தை திசை திருப்ப இது உதவும். அக்னி இணைத்த கட்டுரைபடி சிறிமா காலத்தில் இருந்து இந்த எண்ணை காப்பு கட்டுறார்களாம்🤣.

ஆனால் ஷேல் காஸ் எனப்படும் நிலபடுக்கைகள் இடையான எரிவாயு  தென் இந்தியா, வட இலங்கையில் இருக்க கூடும் என்கிறார்கள்.

வட இங்கிலாந்தில் பெரும் அளவு இருப்பதாக சொல்லப்படுகிறது. பரீட்சார்த்த தேடல்களும் நடக்கிறன. ஆனால் எடுக்கும் சூழலை நாசம் பண்ணும், நில அதிர்வு வரும் என பலத்த எதிர்ப்பும் உண்டு. தமிழகத்திலும் அப்படியே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, கிருபன் said:

மன்­னார் எரி­வாயு வளத்­தால் நாட்­டின் கட­னைப் போன்று மூன்று மடங்கு வரு­மா­னம்!

வணக்கம் முதலாளி! நான் வாற வருசம் 10000 மிளகாய் கண்டு நடுறன்.அதிலை வாற செத்தல் மிளகாயை உங்களுக்கு விக்கிறன்.

இப்ப எனக்கு ஆயிரம் ரூபாய் கடன் தாருங்கோ.:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.