Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

குடும்பத்திற்குள் நடக்கும் பாலுறவான incest ஐ சட்டம் தடுக்கப் பல நியாயமான காரணங்கள் உண்டு. குறைபாடுள்ள பிள்ளை பிறப்பதைத் தடுப்பது அதிலொன்றாக இருக்கலாம்! ஆனால், சிறுவர்களை/சிறுமியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்யாமல் தடுப்பதே மிகப் பெரிய காரணமாக இருக்கக் கூடும் என நினைக்கிறேன். Incest ஐ சட்டம் போட்டுத் தடுக்கா விட்டால், தங்கள் மகளையே புணர முயலும் மிருகத் தனமான தந்தையர் எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள்!

ஒரு பாலுறவு என்பது இரு வளர்ந்தோர் பரஸ்பர சம்மதத்தோடு உருவாக்கும் உறவு. இங்கெ சம்மதம் (consent) என்பது முக்கியமான சொல்! ஒருவர் குழந்தையைப் பாலியல் ரீதியில் தொட்டால், அங்கே சம்மதம் கிடையாது! ஒரு மிருகத்தைப் புணர்ந்தால் அங்கே சம்மதம் கிடையாது! எனவே consent இல்லாத உறவு வல்லுறவு - சட்ட விரோதம்!

அண்ணா,

மேலே எழுதிய உறவு சட்டத்தை விட்டு விடுவோம் என்றார். அதனால்தான் consent போன்ற விடயங்களை விட்டு விட்டு law making ஐ பற்றி எழுதினேன். 

எல்லா சட்டமுமே சமூகம் தகாதது என கருதுபவற்றினயே குற்றம் ஆக்கிறது. அதன் பின்னால் இருக்கும் காரணங்களை ஆராயாமால் விட்டாலும்.

ஒரு காலத்தில் ஒரு ஆண் 12 வயது பெண்ணை கல்யாணம் முடிப்பது சட்டபூர்வம் ஆனால் அவர் இன்னொரு ஆணை மணம் முடிக்கவியலாது. இப்போ தலைகீழ். 

என்ன காரணம் ? சமூகத்தின் பார்வைமாற்றம். 

அதேபோல் இந்த உலகில் சகோதரியை மணம் முடிப்பது ஏற்கப்பட்டும் உள்ளது (கிரேக்கர், ரோமர்). மேலே நெடுக்ஸ் polygamy பற்றி எழுதுகிறார்…பாஞ்சாலி செய்தது polyandry ஒரு பெண் பலதாரம் முடிப்பது. ஆங்கிலேயர் காலத்தில் கூட சில தமிழ்நாட்டு குடிகளிடம் இந்த வழக்கம் இருந்துள்ளது.

ஆகவே சட்டத்தின் அடிப்படை சமூக தார்மீக உணர்வுதான்.

இங்கே என்ன பிரச்சினை என்றால் இந்த கல்யாணத்தை எதிர்க்கும் ஆட்கள் அவர்கள் வாழும் சமுதாயத்தின் தார்மீக உணர்வுக்கு மாறுபட்டு இருக்கிறார்கள். 

அவர்கள் வாழ்வது ஜேர்மன், பிரான்ஸ், லண்டன், கனடா சமுகத்தில். ஆனால் அவர்களின் தார்மீக உணர்வு காபூலில்🤣

ஆகவே தாம் வாழும் நாட்டின் சமூதாய தார்மீக உணர்வையும், சட்டத்தையும் ஏற்கமுடியாமல் அல்லாடுகிறார்கள்.

 

  • Replies 386
  • Views 27.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

ஓரின சேர்க்கை எல்லா உயினங்களிலும் உள்ளது என வாதிட்டு சமாதானம் சொன்ன விண்ணர்களே!
ஜஸ்ரின் சொன்ன இந்த கருத்தைப்பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

அண்ணா,

விளக்கம் மேலே. சட்டம் உருவாவது சமூகத்தின் கண்ணோட்டத்தில் இருந்துதான். 

மிருகங்கள் செய்வதால் மனிதரும் ஓரினசேர்க்கை செய்யுங்கள் என எங்கேயும் யாரும் எழுதவில்லை. இது இயற்கையானது என்றே சொல்லப்பட்டது. அதே போல் இன்செஸ்டும் இயற்கையானதே. 

சிங்கம் மானை வேட்டை ஆடுவதும் இயற்கையானதே. அதுக்காக விருப்படி கொலை செய்யுங்கள் என்பதல்ல அர்த்தம்.

இயற்கையானது எல்லாவற்றையும் செய்ய வேண்டியதில்லை:

மனித சமூகம் நாகரீகம் அடைய, அடைய சில சட்டங்களை, தனது தார்மீக விழுமியங்களுக்கு ஏற்ப சட்டமியற்றி, இன்செஸ்ட் போன்றவற்றை தடுக்கிறது. 

ஒரு காலத்தில் தன்னின சேர்க்கையை தடுத்தது, இப்போ இரு சம்மதிக்கும் இரு வயது வந்தவர்களுக்குரிய உறவில் சமூக பாதகம் ஏதும் இல்லை என்று கருதி தடுக்காமல் விடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

 

இங்கே என்ன பிரச்சினை என்றால் இந்த கல்யாணத்தை எதிர்க்கும் ஆட்கள் அவர்கள் வாழும் சமுதாயத்தின் தார்மீக உணர்வுக்கு மாறுபட்டு இருக்கிறார்கள். 

அவர்கள் வாழ்வது ஜேர்மன், பிரான்ஸ், லண்டன், கனடா சமுகத்தில். ஆனால் அவர்களின் தார்மீக உணர்வு காபூலில்🤣

ஆகவே தாம் வாழும் நாட்டின் சமூதாய தார்மீக உணர்வையும், சட்டத்தையும் ஏற்கமுடியாமல் அல்லாடுகிறார்கள்.

 

எங்களை விடுங்கள் சகோ

இந்த  நாடுகளில் உள்ள எத்தனை வீதம் மக்கள் இதை  ஊக்குவிக்கின்றனர்???

பாராட்டுகின்றனர்??

தங்களது  பிள்ளைகளுக்கும் சிபாரிசு செய்து உற்சாகப்படுத்துகின்றனர்???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

இங்கே என்ன பிரச்சினை என்றால் இந்த கல்யாணத்தை எதிர்க்கும் ஆட்கள் அவர்கள் வாழும் சமுதாயத்தின் தார்மீக உணர்வுக்கு மாறுபட்டு இருக்கிறார்கள். 

அவர்கள் வாழ்வது ஜேர்மன், பிரான்ஸ், லண்டன், கனடா சமுகத்தில். ஆனால் அவர்களின் தார்மீக உணர்வு காபூலில்🤣

ஆகவே தாம் வாழும் நாட்டின் சமூதாய தார்மீக உணர்வையும், சட்டத்தையும் ஏற்கமுடியாமல் அல்லாடுகிறார்கள்.

கோசான்….  எங்களுடைய  உணர்வு எல்லாம்… காபூலில் 😲  என்று சொல்லி, எங்களை அவமானப் படுத்தி விட்டார். 🧐 😥

இதற்கு… ஜேர்மன், பிரான்ஸ், லண்டன், கனடா வாழ்… புலம் பெயர் தமிழர்களின் சார்பில்…. மிக மிக,  வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். 🥸 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

நீங்கள் சொன்ன மாதிரி அவர்களுக்கு வரும் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது தான் ...நான் சொல்ல வந்தது இப்படி வெளிப்படையாய் எல்லோரும் வாழ்த்துக்களையும், ஆதரவுனை தெரிவித்தால் இவர்கள் போல் இருப்பவர் தைரியமாய் திருமணம் செய்ய வெளிவிக்கிடுவார்கள் ...நாங்கள் காணாத மாதிரி இருந்தால் அவர்களுக்கு தயக்கம் வரும்.
இங்கு வெளிப்படையாய் இத் திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்த நிழலி,கிருபன் , நீங்கள் உட்பட மனதிற்குள் உங்கள் பிள்ளைகள் இப்படி செய்ய கூடாது என்ற பயத்திலேயே வாழ்கிறீர்கள்.சொல்லிக் கொடுத்து தான் வளர்ப்பீர்கள் .தற்செயலாய் அவர்கள் செய்திட்டாலும் என்ற பயத்தில் முன்னெச்செரிக்கையாய் ஆதரவு கொடுக்கிறீர்கள் . அவ்வளவு தான் மனப்பூர்வமாய் எத்தனை பேர் இந்த திருமணத்திற்கு ஆதரவு?...இந்த திருமணத்திற்கு போனவர்களே இவர்களை மனப் பூர்வமாய் வாழ்த்தி இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?
நான் படித்தவன் ,முற்போக்கான சிந்தனைவாதி என்று தம்மை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் இதற்கு ஆதரவு கொடுக்கிறார்கள் 

இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேண்டும் அக்கா,

நீங்கள் எழுதியது நகைபுக்குரிய கருத்து.

1. நான் முன்பே விசுகு அண்ணாவுக்கு பதிலாக எழுதி விட்டேன். நான் சார்ந்தோருக்கு தன்பாலின ஈர்ப்பு இருக்கிறது என தெரியவந்தால் அதில் ஒரு பிழையும் இருப்பதாக நான் கருதமாட்டேன்.  “சரி என்ன செய்வது, நீ என்னை போல இல்லை. நீ ஒரு பாலியல் சிறுபான்மை. கடவுளோ/ இயற்கையோ உன்னை அப்படி படைத்துவிட்டது”. “இதில் தப்பேதும் இல்லை”. இதுவே என் நிலைப்பாடாக இருக்க்கும்.

2. ஆனால் நீங்கள் சொல்வது போல பயம் இருக்கும். “வாறான் பார் க**%காரன்” “மகன் க+**%யாம்” என்று இந்த சமூகம் எம்மை நித்திய சித்திரவதை செய்யும் என்பதும் எனக்கு தெரியும். ஆகவே ஒன்றில் இதை மறைத்து வாழு (be discreet) அல்லது நீ வெளிபடையாகத்தான் வாழ வேண்டும் என்றால் வா ஏதாவதொரு எம் சமூகம் இல்லாத நகரத்தில் போய் வாழுவோம் என்றே நான் கூறுவேன். அதற்கும் முடியாது லண்டனில்தான் வாழ்வேன், ஆனால் வெளிப்படையாக வாழ்வேன் என்றால் - வேறு வழியில்லாமல் ஏற்று கொள்ளவேண்டியதுதான்.

3. அப்போ ஏன் வாழ்த்து? ஏனென்றால் அவர்கள் என்னை விட தைரியசாலிகளாக இருக்கிறர்கள். இப்படி நடக்கும் போது அது சமுகத்தில் ஏற்று கொள்ளபடும் போது. இப்படி விவாதிக்கப்படும் போது - இது புலம் பெயர் தமிழ் சமுகத்யில் ஒரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக அந்த ஐயரின் செயல். ஆகவே அடுத்து வரும் தலைமுறையில் வரும் தன்பாலின ஈர்ப்பு உள்ள பிள்ளைகளாவது, தமது வெள்ளைகார பிள்ளைகள் போல சுதந்திரம்மாக இருக்க, பெற்றோர் பயந்து, நொந்து நூடில்ஸ் ஆகாமல் இருக்க, வாழும் பிணங்களாக மாறாமல் இருக்க இவ்வாறான செயல்கள் வழிகோலக்கூடும். இதில் இவர்களிருவரின் பெற்றோரின் நிலைப்பாடு என்ன என தெரியவில்லை. 

என் போல இங்கே எழுதியோரின் கருத்துகள் அவர்களுக்கும் (வாசித்த்தால்) நம்பிக்கையூட்டும் என நம்புகிறேன்.

இப்படியாக கருத்து எழுது ஒரு தமிழ் பெற்றார்தன்னும் தமது தன்பாலினைஈர்ப்பு பிள்ளையை முழுமையாக புரிந்துகொண்டால், அல்லது ஒரு பிள்ளையாவது தற்கொலை முடிவுக்கு போகாமல் விட்டால் - அது வெற்றிதானே.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

கோசான்….  எங்களுடைய  உணர்வு எல்லாம்… காபூலில் என்று சொல்லி, எங்களை அவமானப் படுத்தி விட்டார். 🧐

இதற்கு ஜேர்மன், பிரான்ஸ், லண்டன், கனடா வாழ் புலம் பெயர் தமிழர்களின் சார்பில்…. மிக மிக,  வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். 🥸

😂 கு சா அண்ணை கஸ்டபட்டு திறந்த திரியை அணையவிடல் தகுமோ😂.

யாரையும் அவமானப்படுத்தும் நோக்கம் இல்லை - அப்படி இருந்தால் மன்னிகவும்.

ஆனால் உண்மை இதுதானே? தன்பாலின கவர்ச்சி உள்ளவர்களை ஒதுக்கும் சட்டங்கள் இருந்தால் ஐரோப்பிய யூனியனில் சேர முடியாது என நினைக்கிறேன் (ஆராயவில்லை). ஜேர்மன் நாடு பற்றியும் அதன் அருமையான அரசாட்சி பற்றியும் அங்கே வாழும் எல்லாரும் எழுதுகிறீர்கள்.

பிரான்சை பற்றியும் அப்படித்தான். இங்கிலாந்துகாரருக்கு ஒரு தனி கர்வம், கனடா, யு எஸ் காரரும் அப்படிதான்.

பிழையில்லை ஆனால் இந்த சமூகங்களை எல்லாம் உயரத்தில் வைத்திருப்பதில் ஒரு பெரும் காரணி சகிப்புத்தன்மை. 

ஒரு வெளிநாட்டவராக, ethnic minorities ஆக இந்த சகிப்புதன்மையின் முழு பலனையும் அனுபவித்தபடி, sexual minorities மீது மட்டும் கடுப்பை காட்டுவது,

ஐரோப்பாவில் வசிக்கவும் வேண்டும், ஷரியா சட்டமும் வேண்டும் என்று கேட்போரின் மனநிலையே.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

😂 கு சா அண்ணை கஸ்டபட்டு திறந்த திரியை அணையவிடல் தகுமோ😂.

யாரையும் அவமானப்படுத்தும் நோக்கம் இல்லை - அப்படி இருந்தால் மன்னிகவும்.

ஆனால் உண்மை இதுதானே? தன்பாலின கவர்ச்சி உள்ளவர்களை ஒதுக்கும் சட்டங்கள் இருந்தால் ஐரோப்பிய யூனியனில் சேர முடியாது என நினைக்கிறேன் (ஆராயவில்லை). ஜேர்மன் நாடு பற்றியும் அதன் அருமையான அரசாட்சி பற்றியும் அங்கே வாழும் எல்லாரும் எழுதுகிறீர்கள்.

பிரான்சை பற்றியும் அப்படித்தான். இங்கிலாந்துகாரருக்கு ஒரு தனி கர்வம், கனடா, யு எஸ் காரரும் அப்படிதான்.

பிழையில்லை ஆனால் இந்த சமூகங்களை எல்லாம் உயரத்தில் வைத்திருப்பதில் ஒரு பெரும் காரணி சகிப்புத்தன்மை. 

ஒரு வெளிநாட்டவராக, ethnic minorities ஆக இந்த சகிப்புதன்மையின் முழு பலனையும் அனுபவித்தபடி, sexual minorities மீது மட்டும் கடுப்பை காட்டுவது,

ஐரோப்பாவில் வசிக்கவும் வேண்டும், ஷரியா சட்டமும் வேண்டும் என்று கேட்போரின் மனநிலையே.

கோசான்…. நீங்கள், குமாரசாமி அண்ணையின் திரிக்கு, பெற்றோல் ஊத்துகிறீர்கள் போலுள்ளது. 😂 🤣

லண்டனில்…. பெற்றோல் தட்டுப்பாடு என்று சொன்னார்கள்.

நீங்கள்… இங்கு, பெற்றோலை… தண்ணி மாதிரி இறைக்கிறீர்கள். 😃

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

 

எங்களை விடுங்கள் சகோ

இந்த  நாடுகளில் உள்ள எத்தனை வீதம் மக்கள் இதை  ஊக்குவிக்கின்றனர்???

பாராட்டுகின்றனர்??

தங்களது  பிள்ளைகளுக்கும் சிபாரிசு செய்து உற்சாகப்படுத்துகின்றனர்???

இதை பற்றிய புள்ளிவிபரம் என்னிடம் இல்லை. ஆனால் இங்கே யூகேயில் இப்படி ஒரு ஜோடி திருமணம் முடித்தால் - அது இவ்வளவு பேசு பொருளாகாகாது, இதற்கு தமிழ் சமூகம் காட்டிய எதிர்ப்பில் 1% கூட இராது. 

அவர்களை பொறுத்தவரை இரெண்டு தன்பாலினத்வர் கல்யாணம் முடிப்பது பெரிய மேட்டர் இல்லை. 

எல்லா கல்யாணத்துக்கும் வாழ்த்து சொல்வோம் அல்லவா? அப்படி இதுக்கும் சொல்வார்கள். இங்கேயும் நான் உட்பட பலர் ஆரம்பத்தில் வெறும் வாழ்த்து மட்டுமே சொன்னோம். 

 

27 minutes ago, விசுகு said:

தங்களது  பிள்ளைகளுக்கும் சிபாரிசு செய்து உற்சாகப்படுத்துகின்றனர்???

என்ன கேள்வியண்ணை இது. இங்கே யார் பிள்ளைகளுக்கு சிபாரிசு செய்ய சொன்னார்கள். 

இது சிபாரிசு செய்ய கூடிய விடயமல்ல. அவர்கள் தாமாகவே இதுதான் நாம் என்று கண்டு பிடிப்பார்கள்.

எம்மை போல என்றால் - நோ பிராப்ளம்.

தன்னினசேர்க்கையாளர் என்றால் - நோ பிராப்ளம் - but we need a plan on how to deal with our people.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

அதை பெரியார் வேறு விதமாக சொன்னார்.

உனக்கு காமம் அதிகரித்து விட்டால் அதை தாயிடமோ அல்லது சகோதரியிடமோ தீர்த்துக்கொள் என்கிறார்.

அண்ணை,

இதுக்கு ஒரு ஆதாரத்தை தாங்கோ. இப்படி சொன்னாரா? என்ன context இல் இதை சொன்னார் என அறியவேண்டும். 

மேலே நான் “இன்செஸ்ட் இயற்கையானது” என எழுதியுள்ளேன். இதை மட்டும் தனியாக எடுத்து கோஷான் இன்செஸ்டை ஆதரிக்கிறார் எண்டு அடிச்சும் விடலாம்.

ஏற்கனவே சங்கிகளும், தம்பிகளும் பெரியார் எழுத்து சீர்திருத்தத்தை வலியுறுத்தி சொன்னதை - தமிழை இழிவுபடுதினார் என கையிறு திரித்துகொண்டிருக்கிறார்கள்.

ஆதாரம் காட்ட முடியாவிட்டால் தயவு செய்து அந்த கருத்தை நீக்கிவிடுங்கள் 🙏🏾

11 hours ago, தமிழ் சிறி said:

திராவிட பெரியாரா… இப்படி சொன்னவர்?

அவரையா… தமிழ் நாட்டில், சில கட்சிகள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

கேட்கவே… அருவருப்பாக உள்ளது. 

 

12 minutes ago, தமிழ் சிறி said:

கோசான்…. நீங்கள், குமாரசாமி அண்ணையின் திரிக்கு, பெற்றோல் ஊத்துகிறீர்கள் போலுள்ளது. 😂🤣

லண்டனில்…. பெற்றோல் தட்டுப்பாடு என்று சொன்னார்கள்.

நீங்கள்… இங்கு, பெற்றோலை… தண்ணி மாதிரி இறைக்கிறீர்கள். 😃

🤣 தம்பியுள்ளான் சண்டைக்கு அஞ்சான்🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

நான் படித்தவன் ,முற்போக்கான சிந்தனைவாதி என்று தம்மை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் இதற்கு ஆதரவு கொடுக்கிறார்கள் 

இங்கே படித்தவன் முற்போக்குவாதி என்பதை காட்டிக்கொள்வதை விட சக மனிதர்களாக அவர்களையும் பார்க்கும் பக்குவம் உள்ளது..காலம் மாற மாற அவர்களை பார்க்கும் சமூகத்தின் கண்ணோட்டமும் மாறுகிறது.. அவர்களும் எங்களைப்போன்ற மனிதர்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது.. நாங்கள் குடும்பம், உறவுகள், காதல், நட்பு இத்யாதிகள் என்பவற்றை எவ்வளவு தூரம் அனுபவிக்க உரிமை உள்ளதோ அதேயளவு உரிமை அவர்களுக்கும் உண்டு.. அவர்கள் என்ன வேற்றுகிரகவாசிகளா? இல்லையே அவர்களும் மனிதர்கள் தான்.. 

இரண்டாவது- நாங்கள் இதை காணாத மாதிரி இருந்தால் அவர்கள் இல்லாமல் போய்விடுவார்களா? ஏன் அவர்களுக்கான வாழ்க்கையை சட்டரீதியாகவும் தங்களுக்கு பிடித்த சமயரீதியாகவும் வாழமுடியாதா? இது என்ன வகையான நியாயம்? 

மூன்றாவது- இங்கே வாழ்த்து தெரிவித்தவர்களோ சரி, திருமணத்திற்கு போனவர்களும் சரி அவர்களும் எங்களைப்போன்ற சக மனிதர்களுக்கு உதவும் மனப்பான்மையுடனும் போயிருக்க கூடும் அல்லது உண்மையிலே வாழ்த்திகூட இருக்கலாம்..அங்கே போனவர்கள் எந்த மனநிலையில் போனார்கள் என்பதை விட போயிருக்கிறார்கள்.. 

என்னைப்பொறுத்தவரை, அவர்கள் தங்கள் வாழ்க்கையை திருப்தியுடன் வாழ்வார்கள்.. பெற்றோரின் திருப்திக்காக, சமூகம் ஏதாவது சொல்லும் என்று பயத்தில், கோழையாக, பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்து நான்கு பேரின் வாழ்க்கையை பாழாக்குவதைவிட, இவர்கள் தங்கள் வாழ்க்கையை திருப்தியுடன்தான் வாழ்வார்கள்.. 

 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

 

🤣 தம்பியுள்ளான் சண்டைக்கு அஞ்சான்🤣

லண்டன்… பெற்றோல்  நிரப்பு நிலையத்தில், சினேகிதர்கள் இருக்கிறார்கள் போலுள்ளது. 🤣😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

இதை பற்றிய புள்ளிவிபரம் என்னிடம் இல்லை. ஆனால் இங்கே யூகேயில் இப்படி ஒரு ஜோடி திருமணம் முடித்தால் - அது இவ்வளவு பேசு பொருளாகாகாது, இதற்கு தமிழ் சமூகம் காட்டிய எதிர்ப்பில் 1% கூட இராது. 

அவர்களை பொறுத்தவரை இரெண்டு தன்பாலினத்வர் கல்யாணம் முடிப்பது பெரிய மேட்டர் இல்லை. 

எல்லா கல்யாணத்துக்கும் வாழ்த்து சொல்வோம் அல்லவா? அப்படி இதுக்கும் சொல்வார்கள். இங்கேயும் நான் உட்பட பலர் ஆரம்பத்தில் வெறும் வாழ்த்து மட்டுமே சொன்னோம். 

 

என்ன கேள்வியண்ணை இது. இங்கே யார் பிள்ளைகளுக்கு சிபாரிசு செய்ய சொன்னார்கள். 

இது சிபாரிசு செய்ய கூடிய விடயமல்ல. அவர்கள் தாமாகவே இதுதான் நாம் என்று கண்டு பிடிப்பார்கள்.

எம்மை போல என்றால் - நோ பிராப்ளம்.

தன்னினசேர்க்கையாளர் என்றால் - நோ பிராப்ளம் - but we need a plan on how to deal with our people.

அவர்கள் அப்படி  இருக்கக்கூடாது என்ற ஏக்கமும்  பயமும் ஒவ்வொரு  பெற்றோருக்கும் இருக்கும்

இதுக்கு  இனம் நாடு மொழி  என்று ஒன்றும்  இல்லை

அதைத்தான் சொல்ல வந்தேன்

நன்றி சகோ  நேரத்திற்கும் பொறுமையான  விளக்கங்கள் மற்றும் தரவகளுக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

அவர்கள் அப்படி  இருக்கக்கூடாது என்ற ஏக்கமும்  பயமும் ஒவ்வொரு  பெற்றோருக்கும் இருக்கும்

இதுக்கு  இனம் நாடு மொழி  என்று ஒன்றும்  இல்லை

அதைத்தான் சொல்ல வந்தேன்

நன்றி சகோ  நேரத்திற்கும் பொறுமையான  விளக்கங்கள் மற்றும் தரவகளுக்கும்

உங்கள் நேரத்துக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அண்ணா. 

என்னை சுற்றியும் உங்கள் கருத்தை ஒத்தவர்களே இருக்கிறார்கள். ஏன்…சில வருடங்களுக்கு முன் எனது நிலைப்பாடும் இதுவே. ஆகவே இங்கே எழுதிய அனைவரின் நிலைப்பாடும் எனக்கு புரிகிறது🙏🏾.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

லண்டன்… பெற்றோல்  நிரப்பு நிலையத்தில், சினேகிதர்கள் இருக்கிறார்கள் போலுள்ளது. 🤣😂

இல்லை பெற்றோல் நிலையமே அவருடையது  தான் வேலை வெற்றிடமுணடு.  சம்பளம் அப்படி இப்படி தான் 🤣😂

  • கருத்துக்கள உறவுகள்

ரதியின் கருத்தைப் பார்த்து ..வெடிச்சிரிப்பைத் தவிர வேறெதுவும் வரவில்லை!-மன்னிக்கவும். 😂

"நாம் பேசாமல் இருந்தால், அவர்களும் பேசாமல் இருந்து விடுவர் , எனவே இது இருப்பதே தெரியாமல் போய் விடும்!".. 

இந்த அணுகுமுறை , சாதி விடயத்தில், சீதன விடயத்தில், திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக் கொள்ளும் ஊர்ப் பெரியவாள் விடயத்தில் என்று பல தமிழ் சமூகம் சார்ந்த விடயங்களில் கடைப் பிடிக்கப் படும் ஒன்று தான் - sweeping under the carpet! அவையெல்லாம் வெளியே தெரியாமல், எங்கள் சமூகத்தை மறைத்தன்மையான விதத்தில் பாதிக்காமல் போய் விட்டனவா? இல்லையல்லவா? 

எனவே, பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருட்டென்ற அணுகுமுறை தான் இது!

மறுபக்கம், என் குழந்தை இதைச் செய்தால் என்ன ரியாக்ஷன் எனும் கேள்வி! இந்தக் கேள்விக்கு பதிலே அவசியமில்லை.பெற்றோர்  தன் குழந்தை மேல் உண்மையான அன்பு கொண்டிருந்தால், பெற்றோர் விரும்பும் இணையையா கட்டி வைப்பர்? 

அனேகமான எங்கள் சமூகத்தின் வயசாளிகள், பெரியோர், தங்கள் வாழ்க்கையை ஊருக்காக வாழ்வர்! தங்களுக்காக தங்கள் பிள்ளைகளை வாழச் சொல்லி எதிர்பார்ப்பர்! வாழக் கிடைக்கிற அதிக பட்ச 75 ஆண்டுகளில் தனக்கென்று வாழ நினைக்காத "வாழா வெட்டிகள்" தான் எங்கட ஆட்கள்!   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நன்றி வணக்கம்.😄

@குமாரசாமி இஞ்ச இவர் உங்கட திரியை நூக்கப்பாக்கிறார்🤣

40 minutes ago, Kandiah57 said:

இல்லை பெற்றோல் நிலையமே அவருடையது  தான் வேலை வெற்றிடமுணடு.  சம்பளம் அப்படி இப்படி தான் 🤣😂

🤣 சொல்லுறதுதான் சொல்லுறியள்….பிறகேன் கஞ்சதனமா பெற்றோல் ஸ்டேசன் எண்டுறியள்… எசெக்ஸசில ஒரு சுத்தீகரிப்பு ஆலை, சவுதியில பத்து கிணறு எண்டு சொன்னால் நானும் சந்தோசப்படுவன் எல்லே🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

நன்றி வணக்கம்.😄

கலோ... சுவைப்பிரியன்,  ஏன்... அவசரப் பட்டு, நன்றி சொல்கிறீர்கள்.
எனக்கு... இன்னும், சில விளக்கங்கள், தேவைப் படுகின்றது ராசா. :grin:

இந்தத் திரி, இன்னும்... "பத்துப் பக்கம்"  போனால்தான்,
எனக்கு, சரியான விளக்கம் கிடைக்கும் என நினைக்கின்றேன். :)

ஏற்கெனவே... இந்தத் தலைப்பு, பல சாதனைகளை படைத்துள்ளது.
அதன் பட்டியல் கீழே...

மூன்று  நாளில்.... 

1)  "செய்தி திரட்டியில்"... பதியப் பட்ட தலைப்பை,  167  கருத்துக்களுடன்... 
5400 வாசகர்கள், ஆர்வத்துடன் பார்த்துள்ளார்கள். 👍 👏

2)  யாழ்.களத்தின்... பல் வேறு துறைகளை சேர்ந்த, பல அருமையான கருத்தாளர்கள்,
(லண்டன் பெற்றோல் நிலைய முதலாளி உட்பட) தமது கருத்துக்களை பதிந்து உள்ளார்கள்.  🤠

3)  அத்துடன் இன்று... ரதி, பதிந்த கருத்தை...
ஜஸ்ரினும், கோசானும்...  ஏற்கவில்லைப்  போலுள்ளது.  😂

4)  அவர்களுக்கு... சரியான, விளக்கம் கொடுக்க... ரதிக்கு, சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். 🤣

5)  மிக முக்கியமாக... திண்ணையில் நேற்று, நிழலி பதிந்த  வானொலி நேரடி நிகழ்ச்சியை,
நான் வேலையில்  நின்றதால் கேட்க முடியவில்லை. (East FM (102.7) எப் எம் Good morning Canada program) 😢

6)  அதனை கேட்ட... கோசான், அதன் இணைப்பையும் வழங்கி...
// அன்ரி ஒராள் ஐயரப் போட்டு வறுக்கிறா....//  🤩
என்ற கருத்தை பார்த்த பின், எனக்கு அந்த  வானொலி ஒலிபரப்பின்... 
மீள் பதிவை, பார்க்க வேண்டும் போல்... ஆவலாக உள்ளது.  🤣

7)  அதனை மீண்டும் கேட்க... வசதி உள்ளதா? இருந்தால்... இணைத்து விடுங்களேன். 
அந்த... அன்ரியின், வறுத்தலை... கேட்காமல், எனக்கு நித்திரை வராது போலுள்ளது.   🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

அந்த... அன்ரியின், வறுத்தலை... கேட்காமல், எனக்கு நித்திரை வராது போலுள்ளது.   🤣

அன்ரி ஐயரை வறுத்த படியால் இன்று வெள்ளிக்கிழமை நீங்கள் எதிர்பார்க்கும் 🤣மச்சம் இருக்குமா ராசா?😜

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

இந்தத் திரி, இன்னும்... "பத்துப் பக்கம்"  போனால்தான்,
எனக்கு, சரியான விளக்கம் கிடைக்கும் என நினைக்கின்றேன். :)

இன்னும் பத்து பக்கமா?அல்லது  பத்து பக்கம் மட்டுமா? இன்னும் பத்து என்றால் 

7+10=17வந்து. விடும்  நன்றி வணக்கம் 😂🤣🙏

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

அன்ரி ஐயரை வறுத்த படியால் இன்று வெள்ளிக்கிழமை நீங்கள் எதிர்பார்க்கும் 🤣மச்சம் இருக்குமா ராசா?😜

விசுகர்... எப்படியும், அந்த... மச்சத்தை, கோசான்... எடுத்து தருவார் என்று நம்புகின்றேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேண்டும் அக்கா,

நீங்கள் எழுதியது நகைபுக்குரிய கருத்து.

1. நான் முன்பே விசுகு அண்ணாவுக்கு பதிலாக எழுதி விட்டேன். நான் சார்ந்தோருக்கு தன்பாலின ஈர்ப்பு இருக்கிறது என தெரியவந்தால் அதில் ஒரு பிழையும் இருப்பதாக நான் கருதமாட்டேன்.  “சரி என்ன செய்வது, நீ என்னை போல இல்லை. நீ ஒரு பாலியல் சிறுபான்மை. கடவுளோ/ இயற்கையோ உன்னை அப்படி படைத்துவிட்டது”. “இதில் தப்பேதும் இல்லை”. இதுவே என் நிலைப்பாடாக இருக்க்கும்.

2. ஆனால் நீங்கள் சொல்வது போல பயம் இருக்கும். “வாறான் பார் க**%காரன்” “மகன் க+**%யாம்” என்று இந்த சமூகம் எம்மை நித்திய சித்திரவதை செய்யும் என்பதும் எனக்கு தெரியும். ஆகவே ஒன்றில் இதை மறைத்து வாழு (be discreet) அல்லது நீ வெளிபடையாகத்தான் வாழ வேண்டும் என்றால் வா ஏதாவதொரு எம் சமூகம் இல்லாத நகரத்தில் போய் வாழுவோம் என்றே நான் கூறுவேன். அதற்கும் முடியாது லண்டனில்தான் வாழ்வேன், ஆனால் வெளிப்படையாக வாழ்வேன் என்றால் - வேறு வழியில்லாமல் ஏற்று கொள்ளவேண்டியதுதான்.

3. அப்போ ஏன் வாழ்த்து? ஏனென்றால் அவர்கள் என்னை விட தைரியசாலிகளாக இருக்கிறர்கள். இப்படி நடக்கும் போது அது சமுகத்தில் ஏற்று கொள்ளபடும் போது. இப்படி விவாதிக்கப்படும் போது - இது புலம் பெயர் தமிழ் சமுகத்யில் ஒரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக அந்த ஐயரின் செயல். ஆகவே அடுத்து வரும் தலைமுறையில் வரும் தன்பாலின ஈர்ப்பு உள்ள பிள்ளைகளாவது, தமது வெள்ளைகார பிள்ளைகள் போல சுதந்திரம்மாக இருக்க, பெற்றோர் பயந்து, நொந்து நூடில்ஸ் ஆகாமல் இருக்க, வாழும் பிணங்களாக மாறாமல் இருக்க இவ்வாறான செயல்கள் வழிகோலக்கூடும். இதில் இவர்களிருவரின் பெற்றோரின் நிலைப்பாடு என்ன என தெரியவில்லை. 

என் போல இங்கே எழுதியோரின் கருத்துகள் அவர்களுக்கும் (வாசித்த்தால்) நம்பிக்கையூட்டும் என நம்புகிறேன்.

இப்படியாக கருத்து எழுது ஒரு தமிழ் பெற்றார்தன்னும் தமது தன்பாலினைஈர்ப்பு பிள்ளையை முழுமையாக புரிந்துகொண்டால், அல்லது ஒரு பிள்ளையாவது தற்கொலை முடிவுக்கு போகாமல் விட்டால் - அது வெற்றிதானே.

கோஷன் நீங்க பெரிய மனுஷன்யா... 
இவ்வளவு பொறுமையா எல்லா விதண்டாவாதத்துக்கும் அழகாக கருத்து வைத்ததுக்கு.
நீங்கள் யாரும் ஏன் வாழ்த்தவில்லை  என்று நாங்கள் கேள்வி கேட்க இல்லை, மாறாக  கொஞ்ச பேர்  எதுக்கு வாழ்த்துகிறீர்கள்? ஏன் ஊக்கப்படுத்துகிறீர்கள்? உங்கள் பிள்ளைகள் இப்படி செய்தால் என்ன செய்வீர்கள் என்ற எக்ஸ்ட்ரா பிட்டிங் கேள்விகளோடு எழுதுவது தான் சிக்கலே.
எனக்கு மூன்று ஆண் குழந்தைகள் மூவரும் 17 வயதுக்குள்ளே தான்,  அவர்களுக்கு பள்ளிக்கூடத்திலே இது பற்றி ஓரளவு சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது. (கத்தோலிக்க பாடசாலை). பிள்ளைகள்  எங்கள் சமூக எல்லா சாத்திர சம்பிரதாய நிகழ்ச்சிகளோடு கலந்து கொண்டுதான் இருக்கிறார்கள். திருமணம், காது குத்து, கருமாதி, பூப்புனித நீராட்டு. ஓரளவுக்கு எங்கள் வாழ்க்கை வட்டம் புரிகிறது. 
விதிவசத்தில் பிள்ளைகள் இப்படியான உணர்வை வெளிப்படுத்தினால், அதை உணர்ந்து கொள்ள முயல்வேன், பிரத்யோகமாக எமக்குள் இருக்கும் சமூக சிக்கல்களை சொல்லித்தருவேன்.
 உதாரணம் --> விசுகு மாமா, தமிழ்சிறி மாமா, குசா தாத்தா உன்னை ஆசீர்வதிக்க மாட்டார்கள், சிலநேரம் எங்களோடு கூட இனிமேல்  பேச மாட்டார்கள். 
அவர்களின் இந்த உணர்வை அவர்களாகவே மீழ்ஆய்வு செய்ய நேரம் கொடுத்தது, ஈற்றில் இதுதான் அவர்களின் வாழ்க்கை துணை தேடல், மார்க்கம் என்றால் அவர்களுக்கு நிச்சயம் பக்கபலமாக இருப்பேன். இதில் நானும் எனது மனைவியும்  உறுதியாக இருப்போம். 
இதனால் வரும் சமூக அவதூறுகளை ஏற்று ஒதுங்கி வாழ வேண்டிய நிர்பந்தம் வந்தால் அதையும் செய்வோம்.
என்பிள்ளைகள் ஏதாவது தவறான பாதையில் சென்று 2 பேரை சுட்டுக்கொண்டான், லாரியில் அடித்துக்கொண்டான், குத்திக்கொண்டான்  போன்ற அவப்பெயரை விட இதை சந்தோசமாக ஏற்று அவர்களோடு நாமும் சந்தோசமாக வாழ்வோம்.
மற்றும்படி இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நான் மெத்தப் படித்தவனும் இல்லை, பாமரனும் இல்லை.
இன்னும் ஒரு உயிரின் உணர்வுக்கும், இந்த நாட்டின் சட்டத்திட்கும் மதிப்பளிக்கிறேன் அவ்வளவே.

  • கருத்துக்கள உறவுகள்

திருமண பெணகள் ஏன சிவப்பு பெட்டு வைக்கிறார்கள்?

பூப்புனித நீராட்டு விழா ஏன் செயகிறார்கள்?

பெட்டு வைப்பது திருமணம் முடிந்ததையும....பூப்புனித நீராட்டு விழா பெண் பெரியவள் ஆகி விட்டாள் எனபதையும். குறிக்கும் ஆயின்

இந்த தமிழ் பெண்ணும் தனக்கு ஒரு இணை உண்டு என்பதை இந்த நிகழ்வின்  மூலம் உறிதிப்பட தெரியப்படுததியுள்ளார் எனவே இவாவை கனடா வாழ் தமிழ் இளைஞர்கள் நினைத்து கொண்டிருக்க வேண்டியதில்லை 😂

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kandiah57 said:

இன்னும் பத்து பக்கமா?அல்லது  பத்து பக்கம் மட்டுமா? இன்னும் பத்து என்றால் 

7+10=17வந்து. விடும்  நன்றி வணக்கம் 😂🤣🙏

Political Science Blog

கந்தையா அண்ணை... அது, வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கருத்துப் பிழை. :grin:
அதற்காக... மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். 🙏

பத்துப் பக்கம் தான்... target.  மேலை.. போனால், பிரீமியம்  கிடைக்கும். 😂

ஆனால்... 17 பக்கம் மட்டும், பெற்றோல்  ஊத்தினால்,
கம்பனிக்கு... கட்டுப் படியாகாது. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

ரதியின் கருத்தைப் பார்த்து ..வெடிச்சிரிப்பைத் தவிர வேறெதுவும் வரவில்லை!-மன்னிக்கவும். 😂

"நாம் பேசாமல் இருந்தால், அவர்களும் பேசாமல் இருந்து விடுவர் , எனவே இது இருப்பதே தெரியாமல் போய் விடும்!".. 

இந்த அணுகுமுறை , சாதி விடயத்தில், சீதன விடயத்தில், திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக் கொள்ளும் ஊர்ப் பெரியவாள் விடயத்தில் என்று பல தமிழ் சமூகம் சார்ந்த விடயங்களில் கடைப் பிடிக்கப் படும் ஒன்று தான் - sweeping under the carpet! அவையெல்லாம் வெளியே தெரியாமல், எங்கள் சமூகத்தை மறைத்தன்மையான விதத்தில் பாதிக்காமல் போய் விட்டனவா? இல்லையல்லவா? 

எனவே, பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருட்டென்ற அணுகுமுறை தான் இது!

மறுபக்கம், என் குழந்தை இதைச் செய்தால் என்ன ரியாக்ஷன் எனும் கேள்வி! இந்தக் கேள்விக்கு பதிலே அவசியமில்லை.பெற்றோர்  தன் குழந்தை மேல் உண்மையான அன்பு கொண்டிருந்தால், பெற்றோர் விரும்பும் இணையையா கட்டி வைப்பர்? 

அனேகமான எங்கள் சமூகத்தின் வயசாளிகள், பெரியோர், தங்கள் வாழ்க்கையை ஊருக்காக வாழ்வர்! தங்களுக்காக தங்கள் பிள்ளைகளை வாழச் சொல்லி எதிர்பார்ப்பர்! வாழக் கிடைக்கிற அதிக பட்ச 75 ஆண்டுகளில் தனக்கென்று வாழ நினைக்காத "வாழா வெட்டிகள்" தான் எங்கட ஆட்கள்!   

ஜஸ்டின் அட்வைஸ் சொல்வது மிக சுலபமான வேலை. அது தனக்கென்று வரும்போதுதான் தெரியும் அதன் வலி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.